1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில், மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபால் நகரில், அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான, யூனியன் கார்பைடு என்ற பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையில், நச்சு வாயு வெளிப்பட்டது. ஒரே நேரத்தில் நகரத்திலிருந்த 8,000 பேர் மரணமடைந்தனர். 25 ஆண்டுகளில் 20,000 பேர் அதன் பாதிப்பால் உயிர்பலி ஆனார்கள். இன்று வரை 1,00,000த்திற்கும் மேற்பட்டோர் குற்றுயிரும், குலையுயிருமாக தவித்து வருகிறார்கள். அது உலகத்திலேயே பெரியதொரு தொழிற்சாலை விபத்து என்பதாக வருணிக்கப்படுகிறது.
மேற்கண்ட விபத்தை காரணம் காட்டி, சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், உலகம் முழுவதிலும் ஆபத்தான தொழிற்சாலைகள் பற்றியும், ரசயான ஆலைகளின் சுற்றுச்சூழல் தாக்கங்களைப் பற்றியும், காற்றை மாசுபடுத்தல், நீரை கெடுத்தல், நிலத்தை பழுதாக்கல் போன்ற மாசுபடுத்தல்களை பட்டியலிட்டு, பரப்புரை செய்து வருகிறார்கள். இவ்வாறாக போபால் நச்சு வாயு விபத்து என்பது ஒரு பாதகமான முன்னுதாரணமாக, மானுடத்திற்கே திகழ்ந்து வருகிறது. அதை போபால் நீதிக்கான அனைத்து நாட்டு பிரச்சாரக் குழு, எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகிறது.
அப்படி எடுத்துச் செல்லும்போது, போபாலுக்கான மாணவர்கள் என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு பெரும் இயக்கமாக, கல்விச் சாலைகளிலிருந்தே நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள், அரசாங்கங்கள் தங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வு கொண்டவர்களாக, மாற்றியமைத்துக் கொண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாம் அதிகமான விழிப்புணர்வை பெறுகிறோம். ஐ.நா. சபையிலிருந்து சுற்றுச்சூழல் மாசுபடுத்தல் சம்மந்தமாக, ஒரு அக்கறையான பார்வை பரப்பப்பட்டு, அதையொட்டி ஒரு கோபன் ஹெகன் மாநாடே நடத்தப்பட்டிருக்கும் போது, நாம் மேலும் அதிகமான கவனத்திற்குள்ளாகிறோம். அத்தகைய சூழலில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நேரடியான வழிகாட்டலுக்குள் அமைந்துள்ள, அண்ணா பல்கலைகழகத்தில் இதுபோன்ற அக்கறை இல்லாமலிருப்பது அதிர்ச்சியை தருகிறது.
போபாலில் பேரழிவை ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளியான, குற்றஞ்சாட்டப்பட்ட வாரன் ஆண்டர்சன், இன்று வரை இந்திய நீதிமன்றத்தின் பிடிவாரண்டை மதித்து, இந்தியா வந்து ஆஜராகவில்லை. அப்படிப்பட்ட இந்திய எதிர்ப்பு செயல்பாட்டை கடைபிடிக்கும் ஒரு அமெரிக்க பெரு முதலாளியின் நிறுவனம், தனது போபால் நச்சு கம்பெனியை, இன்னொரு அமெரிக்க பெரு முதலாளி நிறுவனமான டௌ கம்பெனி வசம் ஒப்படைத்து விட்டது. அதை வாங்கிய டௌ கம்பெனி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதமான நட்ட ஈடும் கொடுக்க தயாராயில்லை. போபால் நச்சு கம்பெனி வளாகத்தை சுத்தம் செய்யவும் தயாராகயில்லை. இப்படிப்பட்ட டௌ கெமிக்கல்ஸ் என்ற அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியை, இந்தியாவில் கருப்பு பட்டியலில் சேருங்கள் என்ற கோரிக்கையை, நச்சு வாயு பாதிப்புக்குள்ளான போபால் மக்கள் எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவின் மத்திய அரசோ அதுபற்றி செவி மடுக்க தயாராயில்லை என்பதாக தெரிகிறது. அதேசமயம் போராடும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் நிர்பந்தத்திற்காகவும், ஊடகங்கள் கிளப்பி வரும் விழிப்புணர்வுக்காகவும் அச்சப்பட்டு, தேர்தல் அரசியல் நடத்தும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் மூலமும், சில நேரங்களில் பிரதமரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார்கள்.
அரசியல் வாதிகளுடைய அணுகு முறை இதுபோன்று இருப்பது ஆச்சரியமான செய்தியல்ல. ஆனால் கல்வியாளர்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான் இப்போது எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி. கல்விச் சாலைகளில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பது ஒரு முக்கியமான கல்வியாக உணரப்படுகிறது. நாடுதழுவிய அளவில், மக்கள் இயக்கங்களும் கூட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கோரிக்கைகளை தங்கள் இயக்கங்கள் சார்பாக முன்வைத்து வரும் காலம் இது. அப்படியிருக்கையில் சுற்றுச்சூழல் பிரிவை பொதுவாகவே கல்விச் சாலைகளும், குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களும் ஒரு முக்கியப் பாடமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப கல்வியை கற்றுக் கொடுக்கின்ற, கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு முக்கியத் தேவையாக இருக்கிறது. தொழிற்சாலை விபத்துக்கள் பற்றி படித்துக் கொள்ளாமல், தொழிற்சாலை உற்பத்திக்கான கல்வியை எப்படி கற்க முடியும் என்பது சாதாரண கேள்வி. உலகிலேயே பெரியதொரு தொழிற்சாலை விபத்தை பற்றி அறிந்திருக்க வேண்டியதும், அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு முக்கியமான தேவை. அதுவும் இந்தியாவில் அப்படியொரு விபத்து போபாலில் நடந்திருக்கிறது என்றால், அதுபற்றி ஆழமான புரிதல், பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த புரிதலே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அத்தகைய புரிதலையும், கவலையையும், தடுப்பு நடவடிக்கைகளையும் தங்களது பாடத்திட்டத்தில் இணைத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இத்தகைய விவரங்கள், நமது அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டிலிருக்கிறதா என்ற வினா எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு மேற்கண்ட போதனைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படுவதில்லை. பாடத்திட்டத்திலும் அத்தகைய பேரழிவு விபத்து பற்றி விளக்கப்படவில்லை. அதுபற்றிய கேள்விகளை சம்மந்தப்பட்ட துணை வேந்தரிடம் கேட்டால் அக்கறையற்ற பதில்தான் வெளிப் படுகிறது. தொழிற் சாலைகளை உருவாக்கவும், உற்பத்தியை செய்யவும், கற்றுக் கொடுக்கப்படும் பொறியியல் கல்வியில், விபத்துகள் பற்றியும், தடுப்புகள் பற்றியும் அக்கறையற்ற போக்கு இருக்கலாமா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 நாட்களாக குருசேத்ரா தொழில்நுட்ப விழா 2010 என்பதாக நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது பல்கலைக்கழக நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. அதில் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை சம்மந்தமான நிகழ்வுகள், விழா போல நடத்தப்படுகின்றன. வாகனங்களை விரைவாக ஓட்டுதல் போன்ற 4சக்கர, 2சக்கர வாகனங்கள் சம்மந்தப்பட்ட போட்டிகளும் உண்டு. இவையெல்லாம் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் செய்யும். ஆனால் இவற்றை நடத்துவதற்கான நிதியை, பல்கலைக்கழக நிர்வாகம் சில பெரு முதலாளி நிறுவனங்களிடம் வாங்குகிறது. அதில் கருப்புப் பட்டியலில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திடம் ரூ.5,00,000 வாங்கியிருக்கிறது. அந்த கம்பெனிக்கு இந்த பல்கலைக்கழகத்தில் ஆளெடுத்துக் கொள்ளுங்கள் என்பதாக அறிவிப்பு வேறு.
மேற்கண்ட செயல்பாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகயிருக்கும், பல்வேறு கல்லூரி மாணவர்கள் எதிர்க்கிறார்கள். டௌ கெமிக்கல்ஸை, அண்ணா பல்கலைக்கழகத்தை விட்டு துரத்தச்சொல்லி கேட்கிறார்கள். அதற்காக பரப்புரை செய்கிறார்கள். ரூ.5,00,000 த்தை தங்கள் பக்கத்திலிருந்து திரட்டித் தருகிறோம். அப்போதாவது டௌ கெமிக்கல்ஸை வெளியேற்றுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக பாதிக்கப்பட்ட போபால் மக்களிடமும், அண்ணா பல்கலைக்கலையின் முன்னாள் மாணவர்களிடமும் நிதி திரட்டுகிறார்கள். அந்த நிதியை டௌ கம்பெனிக்கு திருப்பி கொடுத்தாவது, பல்கலையை விட்டு டௌவை விரட்டுங்கள் என்று கூறுகிறார்கள்.
இதற்காக அவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசினார்கள். துணைவேந்தர் இதுபோன்ற கவலைகளை ஏற்பவராக தெரியவில்லை. போபால் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அறிவு ஜீவித்தனமாக பேசியிருக்கிறார். இதுபோன்ற அக்கறையற்ற மனிதர்களின் கைகளில், அரசு சார்பான பல்கலைக் கழங்களை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறோமா? இதுதான் தமிழ்நாட்டில் மக்களைப் பார்த்து நாம் கேட்கவிரும்புகிறோம்.
Friday, January 22, 2010
Thursday, January 21, 2010
ஜோதிபாசு மே.வங்க எம்.ஜி.ஆர்.
1914ம் ஆண்டு ஜுலை 8ம் நாள் பிறந்த ஜோதிபாசு, இந்த ஆண்டு ஜனவரி 17ம் நாள் மறைவை எய்தினார். இவர் மே.வங்க மாநிலத்தின் முதலமைச்சராக 1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பொறுப்பிலிருந்தார். அதன்மூலம் இந்தியாவிலேயே நீண்டகாலம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் என்று பெயர் பெற்றார். இந்தியாவில் நாடாளுமன்ற இடதுசாரிகள், இருபெரும் கட்சிகளாக இருக்கின்றனர். அவர்களில் சி.பி.ஐ.(எம்) என்று அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரிய கட்சியாக மதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுகைக்கு வருகின்ற இடங்களாக கேரளாவும், மே.வங்கமும், திரிபுராவும் அடையாளம் காட்டப்படுகின்றன. இது தவிர மார்க்சிஸ்ட் கட்சி அதிக செல்வாக்கை பெற்ற மாநிலமாக ஆந்திரா இருந்தது. 3 மாநிலங்களில் மட்டும் அதிகமான அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்திருக்கின்ற ஒரு கட்சியை எப்படி, தேசிய கட்சி என்று அங்கீகாரம் செய்வது என்பதான கேள்வி, தேர்தல் ஆணையத்திற்கு எழுந்தது. அப்படிப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி இருந்தாலும், மே.வங்கத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக முதலமைச்சராக, அந்த கட்சி சார்பாக ஒருவர் பொறுப்பில் இருக்க முடிந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்தளவுக்கு ஜோதிபாசுவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. மீண்டும், மீண்டும் ஆட்சிக் கட்டிலிலே அமருவதற்கான அந்த செல்வாக்கு தான் அவரை மே.வங்க மாநிலத்தின் எம்.ஜி.ஆர். என்று எளிமையாக அழைக்கும் நிலைக்கு கொண்டுசென்றது.
1977ம் ஆண்டு முதலமைச்சராக வருவதற்கு முன்னால், 1967ம் ஆண்டே ஜோதிபாசு, மே.வங்கத்தின் துணைமுதல்வராக பொறுப்பெடுத்தார். அப்போது பங்களா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட மாநில கட்சியின் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அவர்களது கூட்டணி வெற்றி பெற்றதையொட்டி, அஜாய்குமார் கோஷ் என்ற பங்களா காங்கிரஸ் தலைவர் முதல்வராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிபாசு துணை முதல்வராகவும், ஆட்சியில் அமர்ந்தார்கள்.
1967ம் ஆண்டு இவர்களது நாடாளுமன்ற இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்ததையொட்டி, மார்க்சிய புரட்சியாளர்கள் ஆயுதப்போராட்டத்தை தொடங்கினார்கள். மே.வங்க மாநிலத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல் பாரி கிராமத்தில் அப்படிப்பட்ட ஆயுத எழுச்சி, விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட பொறுப்பாளராக இருந்த சாருமஜும்தார் அந்த புரட்சியை வழிகாட்டி நடத்தினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த இருவழிப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது.
அதாவது 1921ம் ஆண்டு தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1940க்கு பிறகு ஆயுதப்போராட்டத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1950ம் ஆண்டையொட்டி அந்த கட்சி தடைசெய்யப்பட்டது. 1952ம் ஆண்டிற்கு பிறகு, தேர்தலில் நிற்கத் தொடங்கியது. அதை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய புரட்சியாளர்கள், கட்சிக்குள்ளேயிருந்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லை மோதல் நடந்தது. அது சீன ஆக்ரமிப்பு என்பதாக இந்திய அரசால் பெயர் கொடுக்கப்பட்டது. அதேசமயம் பின்னாளில் நீவில் மாக்ஸ்வெல் என்ற வெளிநாட்டு எழுத்தாளர், இந்தியாவின் சீன யுத்தம் என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இப்படியாக முரண்பாடுகளின் மூலம் வெளிப்பட்ட அந்த யுத்தம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பிளவை ஏற்படுத்தியது. டாங்கே தலைமையிலான ஒரு சாரார், காங்கிரஸ் அரசுக்கு சாதகமானவர்களாக ஆனார்கள். அதேசமயம் நம்பூத்ரிபாடு, பி.டி.ரணதிவே, சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்தார்கள். அதனால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டார்கள். ஜோதிபாசு அந்த 2வது வகையினரை ஆதரித்தார். இவ்வாறு சிறைக்குச் சென்று திரும்பிய அணியினர், 1964ம் ஆண்டு கட்சியை விட்டுப் பிரிந்து வெளியே வந்தார்கள். தங்களை மார்சிய புரட்சியாளர்களாக கூறிக்கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி என்று பெயர்வைத்துக் கொண்டார்கள். 1965ம் ஆண்டு பர்துவான் பிளீனம் என்ற சிறிய மாநாட்டை நடத்தினார்கள். அதில் இந்திய சமுதாயத்தைப் பற்றியும், இந்திய அரசைப் பற்றியும் மறுமதிப்பீடு செய்வதும், புரட்சிக்கான பாதையை தேர்வு செய்வதும் என்ற திட்டத்தை விவாதித்தார்கள். அப்போது இந்த பெரும்தலைவர்களின் முன்வைப்புகளை எதிர்த்து, டார்ஜிலிங் மாவட்ட சாருமஜும்தார் மாற்று முன்வைப்புகளை வைத்தார்.
அதில் இந்திய அரசு சுதந்திரமானது அல்ல என்றார். தரகு முதலாளிகள் நாட்டை ஆள்கிறார்கள் என்றார். விவசாய புரட்சியே வழிமுறை என்றார். சாருமஜும்தாரின் அத்தகைய முன்வைப்புகளுக்கு எதிராக, ஜோதிபாசு உள்ளிட்ட அணி தேர்தல் பாதையை தேர்வு செய்தது. ஐக்கிய முன்னணி தந்திரம் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதை முன்வைத்தது. அதை எதிர்த்து ரகசியமாக தங்கள் செயல்பாட்டை, மஜும்தார் மேற்கொள்ளத் தொடங்கினார். அதுதான் ஜோதிபாசு அணியினர், கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியவுடன், மஜும்தார் தலைமையிலான நக்சல் பாரி புரட்சியாக வெடித்தது.
வெடித்த புரட்சி நக்சல் பாரி கிராமம் உட்பட்ட பகுதிகளை, பண்ணையார்களை விரட்டி விட்டு கைப்பற்றியது. விவசாயிகளை ஆயுதபாணியாக்கியது. அதை விடுதலைப் பகுதி என்று சீன வானொலி அறிவித்தது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற பெயரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு கட்டுரை எழுதியது. மே.வங்க மாநில உள்துறையை கையில் வைத்திருந்த ஜோதிபாசு, நக்சல் பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக, வடகிழக்கு எல்லை துப்பாக்கிப் படையினர் என்ற துணைராணுவத்தை வரவழைத்தார். நக்சல்பாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், முதல் பலியாக பாபுலால் பிஸ்வகர்மா என்ற புரட்சியாளர் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் சாருமஜும்தார், கனுசன்யால் உட்பட ஜோதிபாசு அரசால் கைதுசெய்யப்பட்டனர். இப்படியாக ஒரு துணை முதல்வர் பாத்திரத்தையும், பாசு வகித்துள்ளார்.
1977ல் முதல்வரான ஜோதிபாசு, நிலச்சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்பதுதான் முக்கியமாக பேசப்படுகிறது. அவரது அந்த முயற்சி மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்ந்து கிராமங்களில் வாக்கு வங்கியை ஏற்படுத்தித் தந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய ஆட்சியை, ராஜிவ் காந்திக்குப் பிறகு வலுப்படுத்துவதில், சர்ச்சைகள் எழுந்த காலம். அப்போது ஜோதிபாசுவை காங்கிரஸ் கட்சித் தலைமை, இந்தியாவின் தலைமையøøச்சராக பொறுப்பெடுக்க அழைத்தது. ஆனால் அத்தகைய பொறுப்பை ஏற்கக்கூடாது என மார்க்சிஸ்ட் தலைமை முடிவு செய்துவிட்டது. உள்ளபடியே பிரதமர் பொறுப்பை ஜோதிபாசு ஏற்பதற்கு, அன்றைய கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணசிங் சுர்ஜித் உட்பட, ஜோதிபாசுவிற்கும் உடன்பாடு இருந்தது. அரசியல் தலைமைக் குழுவில் பெரும்பான்மையராகயிருந்த பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சுரி, வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோர் அதை எதிர்த்து வாதிட்டு, ஜோதிபாசு பிரதமர் ஆகும் வாய்ப்பை தடுத்து விட்டனர். அதைபற்றி பிறகு கருத்துச் சொல்லும்போது, அது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியுள்ளார். ஆனால் முடிவெடுத்த நேரத்தில், கட்சிக்கு கட்டுப்பட்டு இருந்து விட்டார்.
இப்போது அவரது மறைவுக்குப் பிறகு, சோம்நாத் சாட்டர்ஜி இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். தான் சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை என்று ஆலோசனை கூறியதே ஜோதிபாசு தான் என்றும், அதனால் தான் கட்சி கட்டுப்பாடு தன்னை நீக்கியது என்றும் கூறியுள்ளார். தனி மனித கருத்துக்களை முன்வைத்து போராடினாலும், கட்சிக்குக் கட்டுப்பட்ட ஜோதிபாசுவின் செயல், வரலாற்றில் நிற்கிறது. அதேபோல லட்சக்கணக்கான மக்கள் அணிதிரள, இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், எஸ்.எஸ்.கே.எம் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர்கள் படிப்புக்காக தானமாக வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள், ஜோதிபாசு தனது கண்களையும், உடலையும், ஒரு விழாவில் வைத்து தானமாக அறிவித்திருந்தார். 7 ஆண்டுகள் கழித்து, அந்த மாமனிதனின் உடல், அவரது மறைவுக்குப் பிறகும் வருங்கால தலைமுறைக்கு பயன்படுகிறது. இதுவும் அவரது இன்னொரு சாதனை.
1977ம் ஆண்டு முதலமைச்சராக வருவதற்கு முன்னால், 1967ம் ஆண்டே ஜோதிபாசு, மே.வங்கத்தின் துணைமுதல்வராக பொறுப்பெடுத்தார். அப்போது பங்களா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட மாநில கட்சியின் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அவர்களது கூட்டணி வெற்றி பெற்றதையொட்டி, அஜாய்குமார் கோஷ் என்ற பங்களா காங்கிரஸ் தலைவர் முதல்வராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிபாசு துணை முதல்வராகவும், ஆட்சியில் அமர்ந்தார்கள்.
1967ம் ஆண்டு இவர்களது நாடாளுமன்ற இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்ததையொட்டி, மார்க்சிய புரட்சியாளர்கள் ஆயுதப்போராட்டத்தை தொடங்கினார்கள். மே.வங்க மாநிலத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல் பாரி கிராமத்தில் அப்படிப்பட்ட ஆயுத எழுச்சி, விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட பொறுப்பாளராக இருந்த சாருமஜும்தார் அந்த புரட்சியை வழிகாட்டி நடத்தினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த இருவழிப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது.
அதாவது 1921ம் ஆண்டு தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1940க்கு பிறகு ஆயுதப்போராட்டத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1950ம் ஆண்டையொட்டி அந்த கட்சி தடைசெய்யப்பட்டது. 1952ம் ஆண்டிற்கு பிறகு, தேர்தலில் நிற்கத் தொடங்கியது. அதை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய புரட்சியாளர்கள், கட்சிக்குள்ளேயிருந்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லை மோதல் நடந்தது. அது சீன ஆக்ரமிப்பு என்பதாக இந்திய அரசால் பெயர் கொடுக்கப்பட்டது. அதேசமயம் பின்னாளில் நீவில் மாக்ஸ்வெல் என்ற வெளிநாட்டு எழுத்தாளர், இந்தியாவின் சீன யுத்தம் என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இப்படியாக முரண்பாடுகளின் மூலம் வெளிப்பட்ட அந்த யுத்தம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பிளவை ஏற்படுத்தியது. டாங்கே தலைமையிலான ஒரு சாரார், காங்கிரஸ் அரசுக்கு சாதகமானவர்களாக ஆனார்கள். அதேசமயம் நம்பூத்ரிபாடு, பி.டி.ரணதிவே, சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்தார்கள். அதனால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டார்கள். ஜோதிபாசு அந்த 2வது வகையினரை ஆதரித்தார். இவ்வாறு சிறைக்குச் சென்று திரும்பிய அணியினர், 1964ம் ஆண்டு கட்சியை விட்டுப் பிரிந்து வெளியே வந்தார்கள். தங்களை மார்சிய புரட்சியாளர்களாக கூறிக்கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி என்று பெயர்வைத்துக் கொண்டார்கள். 1965ம் ஆண்டு பர்துவான் பிளீனம் என்ற சிறிய மாநாட்டை நடத்தினார்கள். அதில் இந்திய சமுதாயத்தைப் பற்றியும், இந்திய அரசைப் பற்றியும் மறுமதிப்பீடு செய்வதும், புரட்சிக்கான பாதையை தேர்வு செய்வதும் என்ற திட்டத்தை விவாதித்தார்கள். அப்போது இந்த பெரும்தலைவர்களின் முன்வைப்புகளை எதிர்த்து, டார்ஜிலிங் மாவட்ட சாருமஜும்தார் மாற்று முன்வைப்புகளை வைத்தார்.
அதில் இந்திய அரசு சுதந்திரமானது அல்ல என்றார். தரகு முதலாளிகள் நாட்டை ஆள்கிறார்கள் என்றார். விவசாய புரட்சியே வழிமுறை என்றார். சாருமஜும்தாரின் அத்தகைய முன்வைப்புகளுக்கு எதிராக, ஜோதிபாசு உள்ளிட்ட அணி தேர்தல் பாதையை தேர்வு செய்தது. ஐக்கிய முன்னணி தந்திரம் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதை முன்வைத்தது. அதை எதிர்த்து ரகசியமாக தங்கள் செயல்பாட்டை, மஜும்தார் மேற்கொள்ளத் தொடங்கினார். அதுதான் ஜோதிபாசு அணியினர், கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியவுடன், மஜும்தார் தலைமையிலான நக்சல் பாரி புரட்சியாக வெடித்தது.
வெடித்த புரட்சி நக்சல் பாரி கிராமம் உட்பட்ட பகுதிகளை, பண்ணையார்களை விரட்டி விட்டு கைப்பற்றியது. விவசாயிகளை ஆயுதபாணியாக்கியது. அதை விடுதலைப் பகுதி என்று சீன வானொலி அறிவித்தது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற பெயரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு கட்டுரை எழுதியது. மே.வங்க மாநில உள்துறையை கையில் வைத்திருந்த ஜோதிபாசு, நக்சல் பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக, வடகிழக்கு எல்லை துப்பாக்கிப் படையினர் என்ற துணைராணுவத்தை வரவழைத்தார். நக்சல்பாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், முதல் பலியாக பாபுலால் பிஸ்வகர்மா என்ற புரட்சியாளர் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் சாருமஜும்தார், கனுசன்யால் உட்பட ஜோதிபாசு அரசால் கைதுசெய்யப்பட்டனர். இப்படியாக ஒரு துணை முதல்வர் பாத்திரத்தையும், பாசு வகித்துள்ளார்.
1977ல் முதல்வரான ஜோதிபாசு, நிலச்சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்பதுதான் முக்கியமாக பேசப்படுகிறது. அவரது அந்த முயற்சி மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்ந்து கிராமங்களில் வாக்கு வங்கியை ஏற்படுத்தித் தந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய ஆட்சியை, ராஜிவ் காந்திக்குப் பிறகு வலுப்படுத்துவதில், சர்ச்சைகள் எழுந்த காலம். அப்போது ஜோதிபாசுவை காங்கிரஸ் கட்சித் தலைமை, இந்தியாவின் தலைமையøøச்சராக பொறுப்பெடுக்க அழைத்தது. ஆனால் அத்தகைய பொறுப்பை ஏற்கக்கூடாது என மார்க்சிஸ்ட் தலைமை முடிவு செய்துவிட்டது. உள்ளபடியே பிரதமர் பொறுப்பை ஜோதிபாசு ஏற்பதற்கு, அன்றைய கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணசிங் சுர்ஜித் உட்பட, ஜோதிபாசுவிற்கும் உடன்பாடு இருந்தது. அரசியல் தலைமைக் குழுவில் பெரும்பான்மையராகயிருந்த பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சுரி, வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோர் அதை எதிர்த்து வாதிட்டு, ஜோதிபாசு பிரதமர் ஆகும் வாய்ப்பை தடுத்து விட்டனர். அதைபற்றி பிறகு கருத்துச் சொல்லும்போது, அது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியுள்ளார். ஆனால் முடிவெடுத்த நேரத்தில், கட்சிக்கு கட்டுப்பட்டு இருந்து விட்டார்.
இப்போது அவரது மறைவுக்குப் பிறகு, சோம்நாத் சாட்டர்ஜி இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். தான் சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை என்று ஆலோசனை கூறியதே ஜோதிபாசு தான் என்றும், அதனால் தான் கட்சி கட்டுப்பாடு தன்னை நீக்கியது என்றும் கூறியுள்ளார். தனி மனித கருத்துக்களை முன்வைத்து போராடினாலும், கட்சிக்குக் கட்டுப்பட்ட ஜோதிபாசுவின் செயல், வரலாற்றில் நிற்கிறது. அதேபோல லட்சக்கணக்கான மக்கள் அணிதிரள, இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், எஸ்.எஸ்.கே.எம் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர்கள் படிப்புக்காக தானமாக வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள், ஜோதிபாசு தனது கண்களையும், உடலையும், ஒரு விழாவில் வைத்து தானமாக அறிவித்திருந்தார். 7 ஆண்டுகள் கழித்து, அந்த மாமனிதனின் உடல், அவரது மறைவுக்குப் பிறகும் வருங்கால தலைமுறைக்கு பயன்படுகிறது. இதுவும் அவரது இன்னொரு சாதனை.
Wednesday, January 20, 2010
அரசியல் போரும், உளவியல் போரும்!
இலங்கைத்தீவில் அரசத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. அதாவது ஜனவரி 26ம் நாள் அதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முக்கியமாக ஆளும் கட்சி கூட்டணியின் மகிந்த ராஜபக்சே நிற்கிறார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிற்கிறார். தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. இருபுறமும் நடக்கும் பரப்புரையில் நடந்து முடிந்த இனவாத போர்பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வன்னிப்போரில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன. வேட்பாளர் மகிந்தாவின் சகோதரர் ஆணைப்படி களத்தில் நின்ற ராணுவ தளபதி, செய்த கொடுமைகள் தெரியவந்துள்ளன. சரண் அடைந்த விடுதலைப்புலியின் சில தலைவர்கள் உட்பட ஆயிரம் போராளிகளை கண்டபடி சுட்டுக் கொன்ற நிகழ்வு விவாதிக்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேயின் கட்டளைக்கு பணிந்து, படுகொலை செய்த ராணுவ தளபதியைப் பற்றி எழுதக்கூடாது என ஊடகங்களுக்கு தடை வந்துள்ளது. ஆளுங்கட்சியை ஆதரிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வெளிப்படையாக தெரிகிறது.
சமரசத்தை ஏற்காததால் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, அகதிகள் முகாமிலேயே அடைந்திருந்து மரணம் அடைந்த நிகழ்வும் கூட நடந்துள்ளது. வன்னிப்போரில் ஈடுபடுத்தப்பட்ட சிங்கள வீரர்கள், இளம்வயதிலேயே பலியாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. 30,000 சிங்கள வீரர்கள் வன்னிப்போரில் பலியாகியுள்ளனர். 36,000 சிங்கள ராணுவ வீரர்கள், கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த செய்திகளை வேட்பாளர் பொன்சேகா இப்போது கூறுகிறார். இதுவும் கூட சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே சிக்கலை உருவாக்கும். சர்ச்சையை எழுப்பிவிடும்.
தமிழர் பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளனர். வேட்பாளர் மகிந்தா, அமைச்சராக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தத்தைச் சார்ந்து, வடக்கு மாகாணத்தின் தமிழர் வாக்குகளை அடைய துடிக்கிறார். கிழக்கு மாகாணத்தில், மாகாண சபை முதல்வர் பிள்ளையானைச் சார்ந்து, தனது தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொள்கிறார்.
வேட்பாளர் பொன்சேகாவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தனது வாக்கு சேகரித்தலை முக்கியத்துவப்படுத்துகிறார். தமிழர்களின் உடனடித் தேவைகளாக இருக்கின்ற மீள்குடியேற்றம், முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு வளையங்களை நீக்கி சிங்கள ராணுவத்தை பின்வாங்க செய்தல், போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள முன்னால் போராளிகளை விடுதலை செய்தல், அதிபர் ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருதல், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி விவாதித்தல், கடத்தப்பட்ட தமிழர்களை விடுவித்தல், அதில் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு உதவி அளித்தல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற கணிசமான தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம் கட்சி, பொன்சேகாவிற்கு ஆதரவாக இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மேயராக இருக்கும் தமிழ் பெண் கூட, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் பொன்சேகாவிற்கு ஆதரவாக பரப்புரையில் இறங்கியுள்ளார். இது போல கொழும்பு நகரில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற, ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் மனோகணேசன் மூலமாக, தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை வாக்குகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இதே போல மலையக தமிழ் மக்கள் மத்தியிலும், இருபக்கமும் உள்ள போட்டி வேகமடைந்துள்ளது. மகிந்தாவிற்கு ஆதரவாக ஆறுமுக தொண்டைமான் தலைமையிலான சிலோன் தொழிலாளர் காங்கிரசும், மறைந்த சந்திரசேகரனின் கட்சியான மலையக மக்களின் முன்னணியும் இறங்கி பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எதிராக பொன்சேகாவிற்கு ஆதரவாக, மனோகணேசனின் கட்சியினர் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில், கிராமப்புறங்களில் பயங்கரவாதத்தை ஒழித்த வீரராக மகிந்தா தன்னை காட்டிக் கொண்டு, வாக்குகளை சேகரிக்கிறார். அதில் அவருக்கு ஆதரவாக நிலைமை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி விழக்கூடிய வாக்குகளையும் கூட, சமீபத்திய பொன்சேகாவின் அறிவிப்புகள் நிலைகுலைய செய்து விட்டன. அதாவது வன்னிப்போரில் தேவையில்லாமல் சிங்கள இளைஞர்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதை பொன்சேகா கூறிவிட்டார். அதற்கும் மேலாக கை, கால்களை இழந்த இளம் சிங்கள வீரர்கள் பற்றியும் எடுத்துரைத்து விட்டார். இதுவே சிங்கள கிராமங்களை புதிதாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சிங்கள கிராமத்திலும், போருக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் இறந்து விட்டால், அவர்களது வீட்டை சுற்றி பௌத்த மத சடங்குகள் படி, வெள்ளைத் துணியைக் கட்டுவார்கள். அப்படி வெள்ளைத்துணி கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆகவே போரின் பாதிப்பை உணர்ந்திருந்த சிங்கள கிராமப்புற விவசாய குடிமக்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
மேற்கண்ட இரண்டு பெரும் வேட்பாளர் களுக்கிடையில், போர்க்குற்றங் களுக்கு காரணமான இந்த இரண்டு பேரும் வேண்டாம் என்று கூறிக்கொண்டு, சிங்கள இடது முன்னணி தலைவர் டாக்டர் விக்கிரமபாகு கருணா ரத்னேயும், சிவாஜி லிங்கம் எம்.பி.யும் வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில், வட இலங்கையில் செய்தது போல, இரண்டு பேரும் சேர்ந்து வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் போராட்டம், ஆதிக்க வாதிகளுக்குள் நடந்து வரும் போது, அந்நிய சக்திகளும் இதில் புதிய வகையில் பங்களிப்பு செலுத்துகின்றன.
இலங்கை அரசியலில் தொடர்ந்து தலையீடு செய்வதன் மூலம், தங்கள் நலன்களை விரிவுபடுத்திக்கொள்ளும், அல்லது வலுப்படுத்திக் கொள்ளும் அந்நிய சக்திகள், இந்த இரு பெரும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தரலாம் என அலைந்து திரிகிறார்கள். இவர்கள் தங்களது ஆதரவை நேரடியாக செலுத்துவதில்லை. மாறாக உளவியல் ரீதியாக பரப்புரை செய்து, உலக அரங்கில் தமிழர் மத்தியில் கருத்துப் போக்கை உருவாக்கி, தங்களது விருப்பத்தை சாதித்துக் கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை இந்த அந்நிய சக்திகள் பரப்பி வருகிறார்கள். உதாரணமாக திரிகோணமலை என்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தைப்பற்றி ஒரு செய்தியை அச்சு ஊடகங்களில் பரப்பி இருக்கிறார்கள். அதாவது தமிழ்மக்கள் இருபெரும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்து, தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று திரிகோணமலை மாவட்ட மக்கள் பற்றி ஒரு தவறான அல்லது பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களது வாக்குகளை சிதறடித்தால், மகிந்தாவை வெற்றிபெற வைக்கலாம் என்ற மனப்பாலை சிலர் குடிக்கிறார்கள். ஆனால் திரிகோணமலை மக்கள் எப்போதுமே ரனில்விக்கிரமசிங்கே மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். விலைவாசி உயர்வை அவரது கூட்டணி கட்டுப்படுத்தும் என்று எண்ணுபவர்கள். கூடுதலாக தமிழர் தேசிய கூட்டமைப்பு பரப்புரையை ஏற்பவர்கள். இதனால் அவர்களது வாக்குகளும், சிந்தாமல், சிதறாமல், மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே இருக்கிறது என்பது தெளிவு.
அரசியல் போரை இலங்கை தீவுக்குள் கட்சிகள் நடத்தினால், அனைத்துலக சமூகத்தில் உளவியல் போரை நடத்தி திசைதிருப்பும் வேலையையும், தமிழர் வாக்குகளை பிளவு படுத்தும் வேலையையும் செய்கின்ற அந்நிய சக்திகளை, உலகத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
வன்னிப்போரில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன. வேட்பாளர் மகிந்தாவின் சகோதரர் ஆணைப்படி களத்தில் நின்ற ராணுவ தளபதி, செய்த கொடுமைகள் தெரியவந்துள்ளன. சரண் அடைந்த விடுதலைப்புலியின் சில தலைவர்கள் உட்பட ஆயிரம் போராளிகளை கண்டபடி சுட்டுக் கொன்ற நிகழ்வு விவாதிக்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேயின் கட்டளைக்கு பணிந்து, படுகொலை செய்த ராணுவ தளபதியைப் பற்றி எழுதக்கூடாது என ஊடகங்களுக்கு தடை வந்துள்ளது. ஆளுங்கட்சியை ஆதரிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வெளிப்படையாக தெரிகிறது.
சமரசத்தை ஏற்காததால் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, அகதிகள் முகாமிலேயே அடைந்திருந்து மரணம் அடைந்த நிகழ்வும் கூட நடந்துள்ளது. வன்னிப்போரில் ஈடுபடுத்தப்பட்ட சிங்கள வீரர்கள், இளம்வயதிலேயே பலியாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. 30,000 சிங்கள வீரர்கள் வன்னிப்போரில் பலியாகியுள்ளனர். 36,000 சிங்கள ராணுவ வீரர்கள், கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த செய்திகளை வேட்பாளர் பொன்சேகா இப்போது கூறுகிறார். இதுவும் கூட சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே சிக்கலை உருவாக்கும். சர்ச்சையை எழுப்பிவிடும்.
தமிழர் பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளனர். வேட்பாளர் மகிந்தா, அமைச்சராக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தத்தைச் சார்ந்து, வடக்கு மாகாணத்தின் தமிழர் வாக்குகளை அடைய துடிக்கிறார். கிழக்கு மாகாணத்தில், மாகாண சபை முதல்வர் பிள்ளையானைச் சார்ந்து, தனது தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொள்கிறார்.
வேட்பாளர் பொன்சேகாவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தனது வாக்கு சேகரித்தலை முக்கியத்துவப்படுத்துகிறார். தமிழர்களின் உடனடித் தேவைகளாக இருக்கின்ற மீள்குடியேற்றம், முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு வளையங்களை நீக்கி சிங்கள ராணுவத்தை பின்வாங்க செய்தல், போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள முன்னால் போராளிகளை விடுதலை செய்தல், அதிபர் ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருதல், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி விவாதித்தல், கடத்தப்பட்ட தமிழர்களை விடுவித்தல், அதில் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு உதவி அளித்தல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற கணிசமான தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம் கட்சி, பொன்சேகாவிற்கு ஆதரவாக இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மேயராக இருக்கும் தமிழ் பெண் கூட, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் பொன்சேகாவிற்கு ஆதரவாக பரப்புரையில் இறங்கியுள்ளார். இது போல கொழும்பு நகரில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற, ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் மனோகணேசன் மூலமாக, தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை வாக்குகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இதே போல மலையக தமிழ் மக்கள் மத்தியிலும், இருபக்கமும் உள்ள போட்டி வேகமடைந்துள்ளது. மகிந்தாவிற்கு ஆதரவாக ஆறுமுக தொண்டைமான் தலைமையிலான சிலோன் தொழிலாளர் காங்கிரசும், மறைந்த சந்திரசேகரனின் கட்சியான மலையக மக்களின் முன்னணியும் இறங்கி பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எதிராக பொன்சேகாவிற்கு ஆதரவாக, மனோகணேசனின் கட்சியினர் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில், கிராமப்புறங்களில் பயங்கரவாதத்தை ஒழித்த வீரராக மகிந்தா தன்னை காட்டிக் கொண்டு, வாக்குகளை சேகரிக்கிறார். அதில் அவருக்கு ஆதரவாக நிலைமை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி விழக்கூடிய வாக்குகளையும் கூட, சமீபத்திய பொன்சேகாவின் அறிவிப்புகள் நிலைகுலைய செய்து விட்டன. அதாவது வன்னிப்போரில் தேவையில்லாமல் சிங்கள இளைஞர்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதை பொன்சேகா கூறிவிட்டார். அதற்கும் மேலாக கை, கால்களை இழந்த இளம் சிங்கள வீரர்கள் பற்றியும் எடுத்துரைத்து விட்டார். இதுவே சிங்கள கிராமங்களை புதிதாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சிங்கள கிராமத்திலும், போருக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் இறந்து விட்டால், அவர்களது வீட்டை சுற்றி பௌத்த மத சடங்குகள் படி, வெள்ளைத் துணியைக் கட்டுவார்கள். அப்படி வெள்ளைத்துணி கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆகவே போரின் பாதிப்பை உணர்ந்திருந்த சிங்கள கிராமப்புற விவசாய குடிமக்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
மேற்கண்ட இரண்டு பெரும் வேட்பாளர் களுக்கிடையில், போர்க்குற்றங் களுக்கு காரணமான இந்த இரண்டு பேரும் வேண்டாம் என்று கூறிக்கொண்டு, சிங்கள இடது முன்னணி தலைவர் டாக்டர் விக்கிரமபாகு கருணா ரத்னேயும், சிவாஜி லிங்கம் எம்.பி.யும் வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில், வட இலங்கையில் செய்தது போல, இரண்டு பேரும் சேர்ந்து வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் போராட்டம், ஆதிக்க வாதிகளுக்குள் நடந்து வரும் போது, அந்நிய சக்திகளும் இதில் புதிய வகையில் பங்களிப்பு செலுத்துகின்றன.
இலங்கை அரசியலில் தொடர்ந்து தலையீடு செய்வதன் மூலம், தங்கள் நலன்களை விரிவுபடுத்திக்கொள்ளும், அல்லது வலுப்படுத்திக் கொள்ளும் அந்நிய சக்திகள், இந்த இரு பெரும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தரலாம் என அலைந்து திரிகிறார்கள். இவர்கள் தங்களது ஆதரவை நேரடியாக செலுத்துவதில்லை. மாறாக உளவியல் ரீதியாக பரப்புரை செய்து, உலக அரங்கில் தமிழர் மத்தியில் கருத்துப் போக்கை உருவாக்கி, தங்களது விருப்பத்தை சாதித்துக் கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை இந்த அந்நிய சக்திகள் பரப்பி வருகிறார்கள். உதாரணமாக திரிகோணமலை என்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தைப்பற்றி ஒரு செய்தியை அச்சு ஊடகங்களில் பரப்பி இருக்கிறார்கள். அதாவது தமிழ்மக்கள் இருபெரும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்து, தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று திரிகோணமலை மாவட்ட மக்கள் பற்றி ஒரு தவறான அல்லது பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களது வாக்குகளை சிதறடித்தால், மகிந்தாவை வெற்றிபெற வைக்கலாம் என்ற மனப்பாலை சிலர் குடிக்கிறார்கள். ஆனால் திரிகோணமலை மக்கள் எப்போதுமே ரனில்விக்கிரமசிங்கே மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். விலைவாசி உயர்வை அவரது கூட்டணி கட்டுப்படுத்தும் என்று எண்ணுபவர்கள். கூடுதலாக தமிழர் தேசிய கூட்டமைப்பு பரப்புரையை ஏற்பவர்கள். இதனால் அவர்களது வாக்குகளும், சிந்தாமல், சிதறாமல், மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே இருக்கிறது என்பது தெளிவு.
அரசியல் போரை இலங்கை தீவுக்குள் கட்சிகள் நடத்தினால், அனைத்துலக சமூகத்தில் உளவியல் போரை நடத்தி திசைதிருப்பும் வேலையையும், தமிழர் வாக்குகளை பிளவு படுத்தும் வேலையையும் செய்கின்ற அந்நிய சக்திகளை, உலகத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
Tuesday, January 19, 2010
விசாரணைக் கைதிகளை சிறையிலடைக்க சட்டம் சொல்கிறதா?
இந்தியாவின் மத்திய சட்டஅமைச்சர் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு தழுவிய 1500 சிறைகளில் இருக்கின்ற, விசாரணைக் கைதிகளான 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை விரைவில் விடுதலை செய்வோம் என்பதுதான் அந்த அறிவிப்பு. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் விசாரணைக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெற்றார் எனும் போது, தண்டணைக் காலத்தை கழிக்க சிறையில் அடைக்கப்படுவார் என்பதுதான் நீதித்துறை யைப்பற்றியும், சிறைச்சாலையைப்பற்றியும் இருக்கின்ற அடிப்படை புரிதல். இந்த புரிதல் சரிதான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்ற விசாரணைக்கு முன்னமேயே சிறையில் அடைக்கப்பட்டால் என்ன அர்த்தம்? இதற்கு பதில் சொல்ல எந்த ஒரு சட்டப் புத்தகமும் இடம் கொடுக்கவில்லை. இதற்கான பதிலை எந்த நீதியரசரும் விளக்கவில்லை. இதை நியாயப்படுத்த எந்த வழக்கறிஞரும் தயாராயில்லை. ஆனால் இதை காவல் துறை அதிகாரிகள் அமுலாக்கி வருகிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து, மாஜிஸ்திரேட்டுகள் என்ற நீதித்துறையின் குற்றியியல் நீதியரசர்கள் சம்பந்தப்பட்டவர் களை சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். மேற்கண்ட நடைமுறை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. ஒருவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டவுடன், அவரை கைது செய்வதும், மாஜிஸ்திரேட் முன்கொண்டு நிறுத்தி சிறைக்கு அனுப்புவதும் தங்களுடைய வேலை என்பதாக காவல்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்து தன்முன்னே கொண்டு நிறுத்தினால், உடனடியாக அவரை சிறைக்கு அனுப்ப வேண்டியது தனது கடமை என்று மாஜிதிரேட்டுகள் நம்புகிறார்கள்.
மேற்கண்ட இவர்களது நம்பிக்கை எல்லாம் சரியானது என்றால், இப்போது 2 லட்சம் வரை இருக்கின்ற விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்ட அமைச்சர் கூறக்கூடாது. சட்ட அமைச்சர் இப்படி கூறுவது மட்டும்தான் சட்டத்தைப்பற்றிய சரியான விளக்கம் என்றால், இன்று வரை விசாரணைக் கைதிகளை சிறையில் அடைத்து வைத்திருந்தது தவறு என்பதாக ஆகிறது.
மேற்கண்ட 2 செயல்களில் ஒன்றுதான் சரியாக இருக்கும். மற்றது தவறாக இருக்கும். 16ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு வழக்கு உலுக்கியது. வழக்கம் போன்ற வழக்காக அது வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அமர்ந்திருந்த வெங்கடச்செல்லையா இந்த வழக்கில் மற்ற 2 நீதியரசர்களுடன் சேர்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த வழக்கு ஜோகிந்தர்குமார் என்பவருக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்திற்கும் மத்தியிலானது என்பதான ஒன்று. 1994ம் ஆண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு.
விசாரணைக்காக 28 வயது கொண்ட ஜோகிந்தர்குமார் என்ற சட்டம் படித்து, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட ஒருவர் ஜனவரி 7ம் நாள் காசியாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அதை அவரது சகோதரர் முதலமைச்சருக்கு தந்தியாக அனுப்புகிறார். பிறகு அந்த இளைஞர் சட்ட விரோத காவலில் வைக்கப்படுகின்றார். அவரது விடுதலைக்காக மனு போடப்படுகிறது. ஜனவரி 11ம் நாள் உத்தரபிரதேசத்திலுள்ள காசியாபாத் காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. 14ம் நாள் நேரில் சம்பந்தப்பட்டவரை ஆஜர்படுத்த கோருகிறது. சட்ட விரோத காவலில் வைக்கவில்லை என்றும், விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. எதற்காக 5 நாட்கள் அப்படி வைத்திருக்க வேண்டும் என்று விசாரித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த பிரச்சனையையொட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மனித உரிமைகள் பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டது. தனிமனித உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் மத்தியில் சீரான பார்வை தேவை என அதில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் குற்றங்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது சமூக தேவையாக இருக்கிறது. இன்னொரு புறம் சட்டம் அதிகாரத்தால் பறக்கவிடப்படக்கூடாது என்பதும் சமூக தேவையாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்வது ஆபத்தாக முடியும். சுதந்திரமான ஒரு சமூகத்தின் நலன் என்பது அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் நடத்தும் இழிவு படுத்தல், ஒடுக்குமுறை களிலிருந்து தனிநபரை பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.
ஒரு நாட்டின் நாகரீகம் என்பது, குற்றயியல் சட்டங்களை அமுல்படுத்து வதற்கு பெருவாரியாக எத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன என்பதை பொருத்தே அமைந்துள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. நந்தினி சத்பதிக்கும், பி.எல்.டானிக்குமான வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அந்த பெஞ்ச் கீழ்கண்டவாறு கூறியது. சட்ட அமுலாக்கத்தின் தேவையை ஒரு புறமும், அமுலாக்க அமைப்பின் கைகளில் அநீதியாகவும், ஒடுக்கப்படும் நிலையிலும் இருக்கும் குடிமக்களை பாதுகாப்பது இன்னொரு புறமுமாக, சமன்படுத்தி பார்க்க வேண்டும். இதற்கான தராசு ஒரு புறமே இதுவரை சாய்ந்து இருக்கிறது. ஒரு புறம் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சமூக நலனும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகளும் என்பதாக உள்ள மோதலை காணவேண்டும்.
தேசிய காவல் ஆணையம் தனது 3வது அறிக்கையை காவல்துறையில் ஊழல் நடப்பதற்கான தலையாய காரணமே, கைது செய்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்தான் என்று கூறுகிறது. இதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறது. 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்பதும் அந்த அறிக்கையிலிருந்து காட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நியாயமற்ற காவல்துறையின் நடவடிக்கை களால், சிறைச்சாலையின் செலவு 43.2% அதிகமாகியுள்ளது. பெருவாரியான கைதுகள் சிறிய வழக்குகளுக்காக செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஒருவரை சிறையில் வைத்திருப் பது பாரமரிப்பு செலவுகளை விரைய மாக்குகிறது. கடைசியாக கைதே தேவையில்லை என்று முடிவாகக் கூடிய வழக்குகள் இதில் அதிகமாக உள்ளன.
மேற்கண்ட உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல்கள் 16 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் புரியப்படுகிறதா? ஆங்கிலே யன் ஆட்சியில் அடிமட்டம் வரை வெளி நாட்டு அதிகாரிகள் இருந்த போது, அவர் களுக்கு அடையாளம் தெரியாத இந்தியர் களை விசாரணைக்காக கூட, சிறையில் வைத்து வழக்கு நடத்தவேண்டிய பழக்கம் இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகும், ஒவ்வொரு குடிமகனுக்கும் முகவரியும், அடையாள அட்டையும் இருக்கும் போது, எதற்காக அவர்களை விசாரணைக் காலத்திலும் சிறையில் வைத்திருக்க வேண்டும்? இது பச்சையான காலனி ஆதிக்க நடைமுறையின்றி, வேறென்ன?
நீதியரசர்கள் வெங்கடாசெல்லையா, மோகன், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோருடைய அந்த பெஞ்ச், மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில் சில வழிகாட்டல்கள் கொடுத்துள்ளனர்.
காவலில் ஒருவரை தொடர்ந்து வைத்திருக்க சில காரணங்கள் இருக்க வேண்டும். அவர் தன்னை அடையாளம் காட்ட மறுத்தாலோ, குறிப்பிட்ட குற்றத்தை மீண்டும் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்றோ, கைதானவரை பாதுகாப்பதற்கோ, விசாரணையில் அவரிடம் சாட்சியம் எடுப்பதற்கோ, நீதிமன்றத்திற்கு அவர் ஆஜராகாமல் இருந்தாலோ, சமன் வழங்கப் படலாம் என்ற ஆங்கிலேய நீதிமன்றத்தின் பரிந்துரையை அதில் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள்.
காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கு வரக்கோரி சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றிருந்தால், மத்திய அரசு சிறைசாலையில் கும்பல், கும்பலாக விசாரணைக் கைதிகள் குவிந்து கிடக்கும் நிலைமையை தவிர்த்திருக்கலாம். இத்தகை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது மத்திய அரசுக்கு, மனித உரிமை பார்வை வந்ததே என்று நாம் மகிழ்ச்சியடையலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டிய அவசியமோ, காவலில் வைக்கப்பட வேண்டிய தேவையோ இல்லை என்பதை இனிமேலாவது அதிகாரிகள் மட்டத்தில் உணர்ந்து கொள்வார்களா என்று உரத்த குரலில் நாம் கேட்க விரும்புகிறோம்.
மேற்கண்ட இவர்களது நம்பிக்கை எல்லாம் சரியானது என்றால், இப்போது 2 லட்சம் வரை இருக்கின்ற விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்ட அமைச்சர் கூறக்கூடாது. சட்ட அமைச்சர் இப்படி கூறுவது மட்டும்தான் சட்டத்தைப்பற்றிய சரியான விளக்கம் என்றால், இன்று வரை விசாரணைக் கைதிகளை சிறையில் அடைத்து வைத்திருந்தது தவறு என்பதாக ஆகிறது.
மேற்கண்ட 2 செயல்களில் ஒன்றுதான் சரியாக இருக்கும். மற்றது தவறாக இருக்கும். 16ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு வழக்கு உலுக்கியது. வழக்கம் போன்ற வழக்காக அது வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அமர்ந்திருந்த வெங்கடச்செல்லையா இந்த வழக்கில் மற்ற 2 நீதியரசர்களுடன் சேர்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த வழக்கு ஜோகிந்தர்குமார் என்பவருக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்திற்கும் மத்தியிலானது என்பதான ஒன்று. 1994ம் ஆண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு.
விசாரணைக்காக 28 வயது கொண்ட ஜோகிந்தர்குமார் என்ற சட்டம் படித்து, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட ஒருவர் ஜனவரி 7ம் நாள் காசியாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அதை அவரது சகோதரர் முதலமைச்சருக்கு தந்தியாக அனுப்புகிறார். பிறகு அந்த இளைஞர் சட்ட விரோத காவலில் வைக்கப்படுகின்றார். அவரது விடுதலைக்காக மனு போடப்படுகிறது. ஜனவரி 11ம் நாள் உத்தரபிரதேசத்திலுள்ள காசியாபாத் காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. 14ம் நாள் நேரில் சம்பந்தப்பட்டவரை ஆஜர்படுத்த கோருகிறது. சட்ட விரோத காவலில் வைக்கவில்லை என்றும், விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. எதற்காக 5 நாட்கள் அப்படி வைத்திருக்க வேண்டும் என்று விசாரித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த பிரச்சனையையொட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மனித உரிமைகள் பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டது. தனிமனித உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் மத்தியில் சீரான பார்வை தேவை என அதில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் குற்றங்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது சமூக தேவையாக இருக்கிறது. இன்னொரு புறம் சட்டம் அதிகாரத்தால் பறக்கவிடப்படக்கூடாது என்பதும் சமூக தேவையாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்வது ஆபத்தாக முடியும். சுதந்திரமான ஒரு சமூகத்தின் நலன் என்பது அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் நடத்தும் இழிவு படுத்தல், ஒடுக்குமுறை களிலிருந்து தனிநபரை பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.
ஒரு நாட்டின் நாகரீகம் என்பது, குற்றயியல் சட்டங்களை அமுல்படுத்து வதற்கு பெருவாரியாக எத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன என்பதை பொருத்தே அமைந்துள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. நந்தினி சத்பதிக்கும், பி.எல்.டானிக்குமான வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அந்த பெஞ்ச் கீழ்கண்டவாறு கூறியது. சட்ட அமுலாக்கத்தின் தேவையை ஒரு புறமும், அமுலாக்க அமைப்பின் கைகளில் அநீதியாகவும், ஒடுக்கப்படும் நிலையிலும் இருக்கும் குடிமக்களை பாதுகாப்பது இன்னொரு புறமுமாக, சமன்படுத்தி பார்க்க வேண்டும். இதற்கான தராசு ஒரு புறமே இதுவரை சாய்ந்து இருக்கிறது. ஒரு புறம் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சமூக நலனும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகளும் என்பதாக உள்ள மோதலை காணவேண்டும்.
தேசிய காவல் ஆணையம் தனது 3வது அறிக்கையை காவல்துறையில் ஊழல் நடப்பதற்கான தலையாய காரணமே, கைது செய்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்தான் என்று கூறுகிறது. இதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறது. 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்பதும் அந்த அறிக்கையிலிருந்து காட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நியாயமற்ற காவல்துறையின் நடவடிக்கை களால், சிறைச்சாலையின் செலவு 43.2% அதிகமாகியுள்ளது. பெருவாரியான கைதுகள் சிறிய வழக்குகளுக்காக செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஒருவரை சிறையில் வைத்திருப் பது பாரமரிப்பு செலவுகளை விரைய மாக்குகிறது. கடைசியாக கைதே தேவையில்லை என்று முடிவாகக் கூடிய வழக்குகள் இதில் அதிகமாக உள்ளன.
மேற்கண்ட உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல்கள் 16 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் புரியப்படுகிறதா? ஆங்கிலே யன் ஆட்சியில் அடிமட்டம் வரை வெளி நாட்டு அதிகாரிகள் இருந்த போது, அவர் களுக்கு அடையாளம் தெரியாத இந்தியர் களை விசாரணைக்காக கூட, சிறையில் வைத்து வழக்கு நடத்தவேண்டிய பழக்கம் இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகும், ஒவ்வொரு குடிமகனுக்கும் முகவரியும், அடையாள அட்டையும் இருக்கும் போது, எதற்காக அவர்களை விசாரணைக் காலத்திலும் சிறையில் வைத்திருக்க வேண்டும்? இது பச்சையான காலனி ஆதிக்க நடைமுறையின்றி, வேறென்ன?
நீதியரசர்கள் வெங்கடாசெல்லையா, மோகன், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோருடைய அந்த பெஞ்ச், மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில் சில வழிகாட்டல்கள் கொடுத்துள்ளனர்.
காவலில் ஒருவரை தொடர்ந்து வைத்திருக்க சில காரணங்கள் இருக்க வேண்டும். அவர் தன்னை அடையாளம் காட்ட மறுத்தாலோ, குறிப்பிட்ட குற்றத்தை மீண்டும் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்றோ, கைதானவரை பாதுகாப்பதற்கோ, விசாரணையில் அவரிடம் சாட்சியம் எடுப்பதற்கோ, நீதிமன்றத்திற்கு அவர் ஆஜராகாமல் இருந்தாலோ, சமன் வழங்கப் படலாம் என்ற ஆங்கிலேய நீதிமன்றத்தின் பரிந்துரையை அதில் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள்.
காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கு வரக்கோரி சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றிருந்தால், மத்திய அரசு சிறைசாலையில் கும்பல், கும்பலாக விசாரணைக் கைதிகள் குவிந்து கிடக்கும் நிலைமையை தவிர்த்திருக்கலாம். இத்தகை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது மத்திய அரசுக்கு, மனித உரிமை பார்வை வந்ததே என்று நாம் மகிழ்ச்சியடையலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டிய அவசியமோ, காவலில் வைக்கப்பட வேண்டிய தேவையோ இல்லை என்பதை இனிமேலாவது அதிகாரிகள் மட்டத்தில் உணர்ந்து கொள்வார்களா என்று உரத்த குரலில் நாம் கேட்க விரும்புகிறோம்.
Monday, January 18, 2010
மம்தா கெடு பலன் தருமா?
மாவோயிஸ்டுகளுக்கு மம்தா பேனர்ஜி ஒருவாரம் கெடுவிதித்தார். அதே நேரத்தில் காவல்துறையினர் அவரது கெடுவிற்கு கேடு விளைவிக்கின்றனர்.மேற்கு வங்கத்தில் ஜர்க்ராம் பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் மம்தா பேனர்ஜி, கூப்பிய கரங்களுடன், வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்டுகளிடம் அறைகூவல் விடுத்தாராம். மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் லால்கர், பேல்பகாரி, பின்பூர், சல்போனி மற்றும் பகுதிகளில் நடந்து வரும் வன்முறைகளை நிறுத்தி அமைதி கொண்டு வரவேண்டும் என மம்தா கேட்டுக் கொண்டார். ஒரு பேரணியில் இத்தகைய அறைகூவலை விடுத்திருக்கிறார். லால்கரிலிருந்து 40 கி.மீ. தூரத்திலுள்ள ஜார்க்ரம் நகராட்சி மைதானத்தில் 50 நிமிடம் உரையாற்றிய மம்தா இப்படி பேசியிருக்கிறார். கண்ணி வெடிகள் வைக்காமல், முக்கிய நீரோட்டத்திற்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் தான் எடுத்துச் சொல்லி, அந்த வட்டார மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பேன் என்று கூறியிருக்கிறார். லால்கர் பகுதியிலிருந்து கூட்டுப் படைகளைக் கூட திரும்ப பெறவைப்பேன் என்பது அவரது வாக்கு.
மாவோயிஸ்டுகள் விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு தான் பாலமாக இருப்பேன் என்கிறார் மம்தா. தன்னை தீண்டத்தகாதவராக பார்த்தார்களானால் வேறு ஒரு சமரசப் பேச்சாளரை தேர்வு செய்யுங்கள் என்றும் இறங்கி பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை என்பதுதான் முக்கியம் என்பதாக விளக்குகிறார். தான் காவல்துறை அராஜ கத்தை எதிர்க்கும் மக்கள் கமிட்டியை தொடங்கும் நேரத்தில் அதனுடன் ஒத்துழைத்ததாக மம்தா ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் பொழுது, அவர்களிடமிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் எடுத்துச் சொன்னார். அந்த கமிட்டியை இப்போது தலைமை தாங்கும் அசிட்மகதோ கூறும்போது, கூட்டுப்படைகள் திரும்பப் பெறப்பட்டால் பேச்சு வார்த்தை தொடங்கலாம் என்றும், தங்கள் தலைவர் சத்ரதார் மகதோவை இழிவுபடுத்திய மம்தாவை தாங்கள் நம்பத்தயாராயில்லை என்றும் கூறினார்.
மேற்கண்ட கூற்றுக்களில் உண்மை என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால், மேற்கு வங்கத்துடன் நிற்காமல், அருகாமையிலுள்ள ஒரிசாவையும் நாம் உற்று நோக்கவேண்டும். ஒரிசாவின் கிழக்கு பகுதியில், கோராபட் மாவட்டத்தில் நாராயணபட்னா என்ற இடத்தில் 2 ஆதிவாசிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலர் காயமடைந் தார்கள். நூற்றுக்குமேற்பட்ட ஆதிவாசிகள் கண்டபடி கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 குழந்தைகளும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மீது சதி, கலவரம், ராஜதுரோகம், அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய வழக்குகளை காவல்துறையும், துணை ராணுவமும் பதிவு செய்திருக்கின்றன. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் என்ற ஆதிவாசிகளுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திறள் அமைப்பின் செயல்பாட்டாளர்களை விரட்டி, விரட்டி தேடுவது என்றும், கைது செய்வது என்றும் அடக்குமுறையை காவல்துறை கட்டவிழ்த்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக ஜனநாயக உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திரள் அமைப்புகளில் உள்ள ஆதிவாசிகள், சுற்றிவரை இருக்கும் காடுகளில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். அந்த காடுகள் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் தங்குமிடங்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு கோரப்பட் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளே கருதுகிறார்கள். காவல்துறை தங்களது நடவடிக்கைகளின் மூலம், சாதாரண ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் புரியப்படும் நீதியாகும்.
மேற்கண்ட நிகழ்வுகள் நாராயண பாட்னாவில் மட்டுமல்லாமல் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் ஆதிவாசிகள் பகுதிகளில் அடங்கிய கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுவேதான் நடந்து வருகிறது. ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தரும் எரிபொருளாக பயன்படுகிறது. இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகள் தான் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்கள். ஆதிவாசிகளில் 49.5%, அரசாங்க மதிப்பீட்டின் படி வறுமையின் எல்லைக் கோட்டுக் கீழே இருக்கிறார்கள். 76.2% எழுத்தறிவில்லா நிலையில் இருக்கிறார்கள். 30% மருத்துவர்கள் அல்லது மருத்துவ மனைகள் தொடர்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தொழிற்சாலைகளில் கூட, வேலைக்கு சேர்க்கப்படாத நிலமையில், அந்த ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய நிலங்களை மட்டுமே நம்பி வாழ்வதால், அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அமைதியான கிளர்ச்சிகள் மற்றும் ஜனநாயக முறையீடுகள் ஆகியவை தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த இயலாமல் தோற்றுவிட்டன என்று உணர்கிறார்கள். அதன் விளைவாக இந்திய ஜனநாயகத்தில் ஆதிவாசிகள் அந்நியப்படுத்தப்பட்டு கிடக்கிறார்கள். இத்தகைய கோபத்திலும், அந்நியமாதலிலும் உள்ள ஆதிவாசிகள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாளர்களாகவும், புதிய வரவுகளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இந்திய மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அரசை தூக்கி ஏறிந்து, சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள். வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆதிவாசிகள் கூட வேறுவழியில்லாமல் காவல்துறையின் நிர்ப்பந்தத்தினால் மாவோயிஸ்டுகளுடன் சென்று நிற்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலும் ஆதிவாசிகள், வெகுமக்கள் அரசியலில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். ஒருபுறம் காவல்துறையின் தள்ளிவிடுதலும், மறுபுறம் மாவோயிஸ்டுகளின் அரவணைப்பும், ஆதிவாசிகளை திக்குமுக்காட செய்கிறது. ஆதிவாசிகளை கடுமையாக சுரண்டிவரும் மற்றும் சித்ரவதை செய்து வரும் பண்ணையார்கள், காவலர்கள் , கந்துவெட்டிக்காரர்கள் ஆகியோரைத்தான் மாவோயிஸ்டுகள் இலக்காக்கி தாக்கி வருகிறார்கள். ஆதிவாசிகளின் இதுபோன்ற சமூக பொருளாதார பாதிப்புகளுக்கு, அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறிய நேரத்தில், மாவோயிஸ்டுகளின் இந்த செயல்பாடு செல்வாக்கை ஏற்படுத்துகிறது.
ராணுவ ரீதியாக மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 80,000 ராணுவத்தை ஏற்கனவே இறக்கிவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களின் காடுகளில் மேலும் 20,000 ராணுவத்தை இப்போது இறக்கப்போகிறது. இந்த வட்டாரத்தில் 20 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். அவர்களில் பாதிபேர் ஆதிவாசிகள். வெளியே இருக்கும் அதிகாரிகள் ராணுவ வெற்றியை எதிர்பார்த்தாலும், களத்திலிருக்கும் அதிகாரிகள் எந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கவில்லை. அரசிடம் இருந்து ஆதிவாசிகள் அந்நியமாகி நிற்பது ஏற்கெனவே ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டது. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் நாராயணபாட்னா பகுதியை கைப்பற்றி விடும் என்று கூறிவருகிறார்கள்.
நாராயணபாட்னா பகுதியல் ஆதிவாசி சங்கத்தினர் 800 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதில், வெற்றி பெற்றிருக்கிறார்கள். தனியார் சுரங்க கம்பெனிகள், சாராய முதலாளிகள், நிலத்திருடர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் இணைந்து ஆதிவாசி சங்கங்களை எதிர்த்து கொரப்பட், மல்கங்கிரி மாவட்டங்களில் தங்கள் ஆதரவு குழுக்களை உருவாக்குகிறார்கள். ஒரிசா மாநிலத்தில் இந்தியாவில் கிடைக்கும் பாக்ஸைட் தாதுப்பொருள் 70% கிடைக்கிறது. உலகிலேயே இந்தியாதான் 6 வது பெரிய பாக்ஸைட் கையிருப்பு கொண்ட நாடு. இந்தியாவில் கிடைக்கும் குரோம் தாதுவும், நிக்கலும் 90%, நிலக்கரியில் 24%ம் இங்கே கிடைக்கிறது. பன்னாட்டு மூலதன கம்பெனிகள் அவற்றை கொள்ளையடிக்க இறங்கிக் கொண்டிருக்கின்றன. அமைதிக்குழு என்ற பெயரில் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை கொள்ளையடிக்க மேற்கண்ட சக்திகள் முயற்சிக்கின்றன.
ஆதிவாசிகளையும், மாவோயிஸ்டுகளையும் சமமாகவே பாவிக்கக்கூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் இத்தகைய அணுகுமுறைகள் ஆபத்தில் கொண்டு போய் முடிக்கப்போகிறது. அதாவது இந்தியாவின் ஆதிவாசிகள் வாழும் இதயப்பகுதியில் ஒரு பெரும் ரத்த வெள்ளத்தை பார்க்கும் நிலை உருவாகும். மேற்கண்டவாறு ஒரிசா சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர் சுதா கூறியிருக்கிறார். ஒரு புறம் மம்தாவின் கெடுவும், மறுபுறம் காவல்துறையின் சுடுதலும் எங்கே அவர்களை நிறுத்தப்போகிறது என்பதுதான் இப்போது கேள்வி.
மாவோயிஸ்டுகள் விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு தான் பாலமாக இருப்பேன் என்கிறார் மம்தா. தன்னை தீண்டத்தகாதவராக பார்த்தார்களானால் வேறு ஒரு சமரசப் பேச்சாளரை தேர்வு செய்யுங்கள் என்றும் இறங்கி பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை என்பதுதான் முக்கியம் என்பதாக விளக்குகிறார். தான் காவல்துறை அராஜ கத்தை எதிர்க்கும் மக்கள் கமிட்டியை தொடங்கும் நேரத்தில் அதனுடன் ஒத்துழைத்ததாக மம்தா ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் பொழுது, அவர்களிடமிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் எடுத்துச் சொன்னார். அந்த கமிட்டியை இப்போது தலைமை தாங்கும் அசிட்மகதோ கூறும்போது, கூட்டுப்படைகள் திரும்பப் பெறப்பட்டால் பேச்சு வார்த்தை தொடங்கலாம் என்றும், தங்கள் தலைவர் சத்ரதார் மகதோவை இழிவுபடுத்திய மம்தாவை தாங்கள் நம்பத்தயாராயில்லை என்றும் கூறினார்.
மேற்கண்ட கூற்றுக்களில் உண்மை என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால், மேற்கு வங்கத்துடன் நிற்காமல், அருகாமையிலுள்ள ஒரிசாவையும் நாம் உற்று நோக்கவேண்டும். ஒரிசாவின் கிழக்கு பகுதியில், கோராபட் மாவட்டத்தில் நாராயணபட்னா என்ற இடத்தில் 2 ஆதிவாசிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலர் காயமடைந் தார்கள். நூற்றுக்குமேற்பட்ட ஆதிவாசிகள் கண்டபடி கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 குழந்தைகளும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மீது சதி, கலவரம், ராஜதுரோகம், அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய வழக்குகளை காவல்துறையும், துணை ராணுவமும் பதிவு செய்திருக்கின்றன. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் என்ற ஆதிவாசிகளுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திறள் அமைப்பின் செயல்பாட்டாளர்களை விரட்டி, விரட்டி தேடுவது என்றும், கைது செய்வது என்றும் அடக்குமுறையை காவல்துறை கட்டவிழ்த்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக ஜனநாயக உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திரள் அமைப்புகளில் உள்ள ஆதிவாசிகள், சுற்றிவரை இருக்கும் காடுகளில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். அந்த காடுகள் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் தங்குமிடங்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு கோரப்பட் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளே கருதுகிறார்கள். காவல்துறை தங்களது நடவடிக்கைகளின் மூலம், சாதாரண ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் புரியப்படும் நீதியாகும்.
மேற்கண்ட நிகழ்வுகள் நாராயண பாட்னாவில் மட்டுமல்லாமல் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் ஆதிவாசிகள் பகுதிகளில் அடங்கிய கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுவேதான் நடந்து வருகிறது. ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தரும் எரிபொருளாக பயன்படுகிறது. இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகள் தான் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்கள். ஆதிவாசிகளில் 49.5%, அரசாங்க மதிப்பீட்டின் படி வறுமையின் எல்லைக் கோட்டுக் கீழே இருக்கிறார்கள். 76.2% எழுத்தறிவில்லா நிலையில் இருக்கிறார்கள். 30% மருத்துவர்கள் அல்லது மருத்துவ மனைகள் தொடர்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தொழிற்சாலைகளில் கூட, வேலைக்கு சேர்க்கப்படாத நிலமையில், அந்த ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய நிலங்களை மட்டுமே நம்பி வாழ்வதால், அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அமைதியான கிளர்ச்சிகள் மற்றும் ஜனநாயக முறையீடுகள் ஆகியவை தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த இயலாமல் தோற்றுவிட்டன என்று உணர்கிறார்கள். அதன் விளைவாக இந்திய ஜனநாயகத்தில் ஆதிவாசிகள் அந்நியப்படுத்தப்பட்டு கிடக்கிறார்கள். இத்தகைய கோபத்திலும், அந்நியமாதலிலும் உள்ள ஆதிவாசிகள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாளர்களாகவும், புதிய வரவுகளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இந்திய மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அரசை தூக்கி ஏறிந்து, சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள். வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆதிவாசிகள் கூட வேறுவழியில்லாமல் காவல்துறையின் நிர்ப்பந்தத்தினால் மாவோயிஸ்டுகளுடன் சென்று நிற்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலும் ஆதிவாசிகள், வெகுமக்கள் அரசியலில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். ஒருபுறம் காவல்துறையின் தள்ளிவிடுதலும், மறுபுறம் மாவோயிஸ்டுகளின் அரவணைப்பும், ஆதிவாசிகளை திக்குமுக்காட செய்கிறது. ஆதிவாசிகளை கடுமையாக சுரண்டிவரும் மற்றும் சித்ரவதை செய்து வரும் பண்ணையார்கள், காவலர்கள் , கந்துவெட்டிக்காரர்கள் ஆகியோரைத்தான் மாவோயிஸ்டுகள் இலக்காக்கி தாக்கி வருகிறார்கள். ஆதிவாசிகளின் இதுபோன்ற சமூக பொருளாதார பாதிப்புகளுக்கு, அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறிய நேரத்தில், மாவோயிஸ்டுகளின் இந்த செயல்பாடு செல்வாக்கை ஏற்படுத்துகிறது.
ராணுவ ரீதியாக மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 80,000 ராணுவத்தை ஏற்கனவே இறக்கிவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களின் காடுகளில் மேலும் 20,000 ராணுவத்தை இப்போது இறக்கப்போகிறது. இந்த வட்டாரத்தில் 20 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். அவர்களில் பாதிபேர் ஆதிவாசிகள். வெளியே இருக்கும் அதிகாரிகள் ராணுவ வெற்றியை எதிர்பார்த்தாலும், களத்திலிருக்கும் அதிகாரிகள் எந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கவில்லை. அரசிடம் இருந்து ஆதிவாசிகள் அந்நியமாகி நிற்பது ஏற்கெனவே ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டது. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் நாராயணபாட்னா பகுதியை கைப்பற்றி விடும் என்று கூறிவருகிறார்கள்.
நாராயணபாட்னா பகுதியல் ஆதிவாசி சங்கத்தினர் 800 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதில், வெற்றி பெற்றிருக்கிறார்கள். தனியார் சுரங்க கம்பெனிகள், சாராய முதலாளிகள், நிலத்திருடர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் இணைந்து ஆதிவாசி சங்கங்களை எதிர்த்து கொரப்பட், மல்கங்கிரி மாவட்டங்களில் தங்கள் ஆதரவு குழுக்களை உருவாக்குகிறார்கள். ஒரிசா மாநிலத்தில் இந்தியாவில் கிடைக்கும் பாக்ஸைட் தாதுப்பொருள் 70% கிடைக்கிறது. உலகிலேயே இந்தியாதான் 6 வது பெரிய பாக்ஸைட் கையிருப்பு கொண்ட நாடு. இந்தியாவில் கிடைக்கும் குரோம் தாதுவும், நிக்கலும் 90%, நிலக்கரியில் 24%ம் இங்கே கிடைக்கிறது. பன்னாட்டு மூலதன கம்பெனிகள் அவற்றை கொள்ளையடிக்க இறங்கிக் கொண்டிருக்கின்றன. அமைதிக்குழு என்ற பெயரில் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை கொள்ளையடிக்க மேற்கண்ட சக்திகள் முயற்சிக்கின்றன.
ஆதிவாசிகளையும், மாவோயிஸ்டுகளையும் சமமாகவே பாவிக்கக்கூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் இத்தகைய அணுகுமுறைகள் ஆபத்தில் கொண்டு போய் முடிக்கப்போகிறது. அதாவது இந்தியாவின் ஆதிவாசிகள் வாழும் இதயப்பகுதியில் ஒரு பெரும் ரத்த வெள்ளத்தை பார்க்கும் நிலை உருவாகும். மேற்கண்டவாறு ஒரிசா சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர் சுதா கூறியிருக்கிறார். ஒரு புறம் மம்தாவின் கெடுவும், மறுபுறம் காவல்துறையின் சுடுதலும் எங்கே அவர்களை நிறுத்தப்போகிறது என்பதுதான் இப்போது கேள்வி.
Sunday, January 17, 2010
நீதியரசர் தினகரன் மீது பாய்வது நீதியா?
நீதியரசர் பி.டி. தினகரன் கர்நாடகா மாநிலத்தின் தலைமை நீதியசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மீது நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு என்பதாக ஒரு பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் சில வழக்கறிஞர்கள் கிளப்பினார்கள். சம்பந்தப்பட்ட நிலம் என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற தலித் மக்கள் வாழுகின்ற குடியிருப்பின் அருகே இருக்கும் நிலம். இந்த நிலம் குற்றம் சாட்டப்பட்டவர் சொத்தாக இருக்கிறது என்ற செய்தியை, பிரச்சனை எழும்பியவுடன், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார். அதன்பிறகு இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் மூலமாக தீவிரமாக கையிலெடுத்தார்கள். அவர்கள் அதற்கான போராட்டத்திலும் இறங்கினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் இதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தலித் மக்களுக்கு நீதியரசர் பொறுப்பிலிருக்கும் நிலங்களை பறித்து விநியோகம் செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தார்கள்.
சம்பந்தப்பட்ட நீதியரசர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்களிடமிருந்து, நீதியரசருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசின் அணுகு முறை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் கணிப்புக்கு எதிராக வெளிப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவரும் தனது கருத்தை அல்லது மதிப்பீட்டை மாற்றிக் கொண்டது போல் செய்தி வெளியானது.
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நிலம் என்பது தான் நீதியசராக பொறுப்பெடுப்பதற்கு, முன்னமேயே வாங்கிய சொத்து என்பதாக நீதியரசரிடமிருந்து பதில் வந்தது. தமிழக அரசும் அதே அணுகுமுறையை மேற் கொண்டது. ஆனாலும் பிரச்சனையை கையில் எடுத்தவர்கள், அதை விடுவதாக இல்லை.
இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட நேரம் இப்போது முக்கிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. நீதியரசர் தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு ஒரு நீதியரசராக எடுப்பதற்கான ஆலோசனைப் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. நீதியரசர் தினகரன் மீது 12 குற்றங்கள் செய்ததாக, எதிர்தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மாநிலங்களவையை சேர்ந்த 75 உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் பெற்று, அதன் மூலம் மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம், நீதியரசர் தினகரன் மீது உரிமைப்பிரச்சனை எழுப்பவேண்டும் என்பதாக புகார் கொடுத்திருந்தார்கள். அதற்கு எதிராக 100 தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு, தினகரன் மீதான குற்றச்சாட்டு என்பது சாதி ஆதிக்க உணர்வுடன் எழுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், தெரிந்த வருமான எல்லைகளைத்தாண்டி, சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் வீட்டு வசதி வாரியத்தில் 5 வீடுகளை சட்ட விரோதமாக பெற்றதாக இன்னொரு குற்றச்சாட்டு. பினாமி பெயர்களில் சொத்துக்களை மாற்றிக் கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு. விவசாய நிலங்களை சட்டப்பூர்வமான உச்ச வரம்பு எல்லையை மீறி வைத்திருப்பதாக இன்னொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழை மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்தையும், அரசாங்க சொத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக மற்றொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழைகளின் மனித உரிமைகளை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரபூர்வமான விசாரணை நடந்து வரும் போது, சாட்சியங்களை உடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது நீதி பரிபாலன அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நேர்மையற்ற உத்தரவுகளை தனக்கு வேண்டிய மற்றும் நேரடியான நலன்களில் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு இப்படியாக பட்டியல் போடப்பட்ட குற்றச்சாட்டுகள் 55 பக்கம் கொண்ட நோட்டீசாக, தற்போது உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் அன்சாரியிடம் குற்றச்சாட்டுக்களை கையெழுத்திட்டு கொடுத்தவர்களில் பல்வேறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால், இடதுசாரிகளும், மற்றும் பா.ஜ.க.வினரும் அந்த கையெழுத்திட்ட உறுப்பினர் பட்டியலில், தினகரன் மீது பாய்ந்துள்ளார்கள். இந்த 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை வாங்கிய அன்சாரி, இப்போது அதை உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்.
இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள், நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மட்டுமே பொறுப்பிலிருந்து நீக்கப்படமுடியும். இந்த பிரச்சனையில் அவைத்தலைவர் அன்சாரி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்படவேண்டிய நேரடி விசாரணையின் மூலம் தான், உண்மைகளை கொண்டு வரமுடியும் என்ற நோக்கத்தில், மேற்படி பிரச்சனையை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் இப்போது நீதியரசர் பி.எஸ்.சிற்புகார் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு பெஞ்சிடம் இந்த வழக்கை கொடுத்துள்ளது. அந்தப்பட்டியலில் நீதியரசர் ஏ.ஆர்.தவே, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரும் பிரபல சட்ட வல்லுநருமான பி.பி.ராவ் ஆகிய மூவர் கொண்ட கமிட்டியை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்து அதன் கையில் நேற்று இந்த வழக்கை கொடுத்துள்ளார். இது இப்போது நீதியரசர்களுக்கு மத்தியிலும் புதியதொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.டி.தினகரனை நியாயப்படுத்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயரும் நேரத்தில் மட்டும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது ஏன் என்பதுதான் அவரது ஆழமான கேள்வி.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசராக தினகரன் எடுக்கப்பட்டபோது, ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட, அவருக்கு எதிராக எழவில்லை. அதே போல 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலத்தில் உயர்நீதிமன்றத்திற்கான, தலைமை நீதியரசராக அவர் அறிவிக்கப்படும் போது, எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்கள் குழுவால், உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக எடுக்கப்பட முன்வைக்கப்படும் நீதியரசர்கள் பட்டியலில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட பிறகுதான், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மேற்கண்ட கருத்துக்களை கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது உள்ளபடியே கவனிக்கவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள், ஏதாவதொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதியரசராக உயர்த்தப்படவேண்டுமானால், அந்த நேரத்தில் ஏற்கனவே அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதியரசராக எங்காவது இருந்தால், பின்னவருக்கு வாய்ப்பில்லை என்ற பழக்கம் இருக்கிறது. அதனால் தினகரன் உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயர்த்தப்படும் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும் போது, அதிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இப்போது தினகரன் உச்சநீதிமன்றம் செல்லும் பரிந்துரை தடுக்கப்பட்ட நிலையில், அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக தக்கவைக்கப்படுகிறார். அதனால் இப்ராஹிம் கலிபுல்லாவின் உயர்வுக்கான பரிந்துரையும் கூட, அப்படியே நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் தலித் சமூகம் மட்டுமல்ல, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நீதியரசரும், தனது நியாயமான உயர்வு கிடைக்காமல் தடுக்கப்படுகிறார். இத்தகைய செயல்களுக்குப் பின்னால், இந்தியாவின் புற்றுநோயான சாதி ஆதிக்க சதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கும் கேள்விக்கு விடைகாணவேண்டியது அனைவரின் கடமையாகும். ஏன் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படும் நேரத்தில் மட்டும் குற்றம் சாட்டப்படுகிறார் என்பதே அந்தக் கேள்வி. நிலவும் சாதி, சனாதன சமூதாய அமைப்பில், சம்பந்தப்பட்டவர் எந்த சமூகத்திலிருந்து வருகிறார் என்பதும், அவருக்கு எதிராக கிளப்பப்படும் குற்றச்சாட்டுகள் எந்த சமூகத்தவரிடமிருந்து வருகிறது என்பதும் ஒரு முக்கியமான சமுதாயக் கேள்வி. இத்தகைய கேள்வியை கேட்காமலும், விடை காணாமலும் நாம் சரித்திரத்தின் இந்தப்பகுதியிலிருந்து தப்பித்துச் செல்லமுடியாது.
சம்பந்தப்பட்ட நீதியரசர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்களிடமிருந்து, நீதியரசருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசின் அணுகு முறை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் கணிப்புக்கு எதிராக வெளிப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவரும் தனது கருத்தை அல்லது மதிப்பீட்டை மாற்றிக் கொண்டது போல் செய்தி வெளியானது.
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நிலம் என்பது தான் நீதியசராக பொறுப்பெடுப்பதற்கு, முன்னமேயே வாங்கிய சொத்து என்பதாக நீதியரசரிடமிருந்து பதில் வந்தது. தமிழக அரசும் அதே அணுகுமுறையை மேற் கொண்டது. ஆனாலும் பிரச்சனையை கையில் எடுத்தவர்கள், அதை விடுவதாக இல்லை.
இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட நேரம் இப்போது முக்கிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. நீதியரசர் தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு ஒரு நீதியரசராக எடுப்பதற்கான ஆலோசனைப் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. நீதியரசர் தினகரன் மீது 12 குற்றங்கள் செய்ததாக, எதிர்தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மாநிலங்களவையை சேர்ந்த 75 உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் பெற்று, அதன் மூலம் மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம், நீதியரசர் தினகரன் மீது உரிமைப்பிரச்சனை எழுப்பவேண்டும் என்பதாக புகார் கொடுத்திருந்தார்கள். அதற்கு எதிராக 100 தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு, தினகரன் மீதான குற்றச்சாட்டு என்பது சாதி ஆதிக்க உணர்வுடன் எழுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், தெரிந்த வருமான எல்லைகளைத்தாண்டி, சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் வீட்டு வசதி வாரியத்தில் 5 வீடுகளை சட்ட விரோதமாக பெற்றதாக இன்னொரு குற்றச்சாட்டு. பினாமி பெயர்களில் சொத்துக்களை மாற்றிக் கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு. விவசாய நிலங்களை சட்டப்பூர்வமான உச்ச வரம்பு எல்லையை மீறி வைத்திருப்பதாக இன்னொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழை மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்தையும், அரசாங்க சொத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக மற்றொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழைகளின் மனித உரிமைகளை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரபூர்வமான விசாரணை நடந்து வரும் போது, சாட்சியங்களை உடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது நீதி பரிபாலன அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நேர்மையற்ற உத்தரவுகளை தனக்கு வேண்டிய மற்றும் நேரடியான நலன்களில் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு இப்படியாக பட்டியல் போடப்பட்ட குற்றச்சாட்டுகள் 55 பக்கம் கொண்ட நோட்டீசாக, தற்போது உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் அன்சாரியிடம் குற்றச்சாட்டுக்களை கையெழுத்திட்டு கொடுத்தவர்களில் பல்வேறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால், இடதுசாரிகளும், மற்றும் பா.ஜ.க.வினரும் அந்த கையெழுத்திட்ட உறுப்பினர் பட்டியலில், தினகரன் மீது பாய்ந்துள்ளார்கள். இந்த 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை வாங்கிய அன்சாரி, இப்போது அதை உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்.
இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள், நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மட்டுமே பொறுப்பிலிருந்து நீக்கப்படமுடியும். இந்த பிரச்சனையில் அவைத்தலைவர் அன்சாரி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்படவேண்டிய நேரடி விசாரணையின் மூலம் தான், உண்மைகளை கொண்டு வரமுடியும் என்ற நோக்கத்தில், மேற்படி பிரச்சனையை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் இப்போது நீதியரசர் பி.எஸ்.சிற்புகார் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு பெஞ்சிடம் இந்த வழக்கை கொடுத்துள்ளது. அந்தப்பட்டியலில் நீதியரசர் ஏ.ஆர்.தவே, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரும் பிரபல சட்ட வல்லுநருமான பி.பி.ராவ் ஆகிய மூவர் கொண்ட கமிட்டியை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்து அதன் கையில் நேற்று இந்த வழக்கை கொடுத்துள்ளார். இது இப்போது நீதியரசர்களுக்கு மத்தியிலும் புதியதொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.டி.தினகரனை நியாயப்படுத்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயரும் நேரத்தில் மட்டும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது ஏன் என்பதுதான் அவரது ஆழமான கேள்வி.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசராக தினகரன் எடுக்கப்பட்டபோது, ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட, அவருக்கு எதிராக எழவில்லை. அதே போல 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலத்தில் உயர்நீதிமன்றத்திற்கான, தலைமை நீதியரசராக அவர் அறிவிக்கப்படும் போது, எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்கள் குழுவால், உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக எடுக்கப்பட முன்வைக்கப்படும் நீதியரசர்கள் பட்டியலில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட பிறகுதான், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மேற்கண்ட கருத்துக்களை கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது உள்ளபடியே கவனிக்கவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள், ஏதாவதொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதியரசராக உயர்த்தப்படவேண்டுமானால், அந்த நேரத்தில் ஏற்கனவே அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதியரசராக எங்காவது இருந்தால், பின்னவருக்கு வாய்ப்பில்லை என்ற பழக்கம் இருக்கிறது. அதனால் தினகரன் உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயர்த்தப்படும் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும் போது, அதிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இப்போது தினகரன் உச்சநீதிமன்றம் செல்லும் பரிந்துரை தடுக்கப்பட்ட நிலையில், அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக தக்கவைக்கப்படுகிறார். அதனால் இப்ராஹிம் கலிபுல்லாவின் உயர்வுக்கான பரிந்துரையும் கூட, அப்படியே நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் தலித் சமூகம் மட்டுமல்ல, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நீதியரசரும், தனது நியாயமான உயர்வு கிடைக்காமல் தடுக்கப்படுகிறார். இத்தகைய செயல்களுக்குப் பின்னால், இந்தியாவின் புற்றுநோயான சாதி ஆதிக்க சதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கும் கேள்விக்கு விடைகாணவேண்டியது அனைவரின் கடமையாகும். ஏன் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படும் நேரத்தில் மட்டும் குற்றம் சாட்டப்படுகிறார் என்பதே அந்தக் கேள்வி. நிலவும் சாதி, சனாதன சமூதாய அமைப்பில், சம்பந்தப்பட்டவர் எந்த சமூகத்திலிருந்து வருகிறார் என்பதும், அவருக்கு எதிராக கிளப்பப்படும் குற்றச்சாட்டுகள் எந்த சமூகத்தவரிடமிருந்து வருகிறது என்பதும் ஒரு முக்கியமான சமுதாயக் கேள்வி. இத்தகைய கேள்வியை கேட்காமலும், விடை காணாமலும் நாம் சரித்திரத்தின் இந்தப்பகுதியிலிருந்து தப்பித்துச் செல்லமுடியாது.
Saturday, January 16, 2010
கிரகணங்கள் எனும் அற்புதங்களும் அறியாமைகளும்
சூரிய, சந்திர கிரகணங்கள் எனும் வானியல் அரிய நிகழ்வுகள் ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்திற்கு வியப்பையும் வினாக்களையும் ஏற்படுத்தி வருவனவாகும். பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவ்வாறு சூரியன் என்றும் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்ற பூமி எனும் கோளினை சுற்றி வருவது சந்திரன் என்னும் துணைக்கோள். இவ்வாறு பூமியை சுற்றி வரும் சந்திரன், ஒரு கட்டத்தில் சூரியன் இருக்கும் பக்கத்திலும் இன்னொரு கட்டத்தில் சூர்யனுக்கு நேர் எதிர்பக்கத்திலும் வருகிறது. இந்த இயக்கப்போக்கில், சந்திரன், பூமியிலிருந்து பார்க்கையில் சூரியன் இருக்கும் பக்கத்தில் வரும்போது, அதாவது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்போது அமாவாசை என்கிறோம். சந்திரன், சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் வரும்போது அதாவது பூமி, சூர்யனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருப்பதாக அமையும் போது பௌர்ணமி என்கிறோம்.
சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசையில் தான் வரும். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியனை நோக்கியுள்ள சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளிபடுகிறது. அந்தப் பகுதிக்கு எதிர்ப்பக்கமுள்ள பகுதி தான் பூமியை நோக்கி இருக்கிறது. அது சூரிய ஒளியின்றி இருட்டாக இருப்பதால், பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சந்திரன் தெரிவதில்லை. இதுதான் அமாவாசை. இத்தகைய அமாவாசைகளுள் சிலவற்றில், பூமியிலிருந்து பார்க்கையில், சூரியனும் சந்திரனும் ஒரே பக்கத்தில் வருவதோடு சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இவ்வாறு நேர்கோட்டில் வருவதால் சூரியனின் தோற்றம் சந்திரனால் முழுக்கவும் மறைக்கப்படுகிறது. இது தான் சூரிய கிரகணம். இவ்வாறு நேர்கோட்டில் வருவது எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு கிரகணம் முழுமையானதாக இருக்கும். துல்லியத்தன்மை குறைவால் கிரகணம் பகுதியளவு கிரகணமாக அமைந்து விடுகிறது.
சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமியில் தான் வரும். அதாவது பூமியைச் சுற்றிவரும் சந்திரன், சூரியன் இருக்கும் பக்கத்திற்கு நேர் எதிர்பக்கத்திற்கு வரும் போது முழு சந்திரனும் பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். இதுதான் பௌர்ணமி. இத்தகைய பௌர்ணமிகளுள் சிலவற்றில் பூமிக்கு ஒரு பக்கம் சூரியனும் அதற்கு நேர் எதிர்பக்கத்தில் சந்திரனும், வருவதோடு, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இது தான் சந்திர கிரகணம். இதிலும் நேர்கோட்டில் வருவதன் துல்லியத்தன்மையைப் பொருத்தே கிரகணம் முழுமையானதாகவோ, பகுதியளவானதாகவோ அமைகிறது. பகுதியளவான சந்திர கிரகணம் ஆண்டுக்கு 2 நிகழும்.
பார்த்து ரசிப்பதற்கு அழகானது என்றால் ஒவ்வொரு சூரியோதயமும், சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் சந்திர அஸ்தமனமும் அழகானவை தான், ரசிக்கத்தக்கவை தான். ஆனால் அவை தினமும் நிகழ்வதால், பழகப் பழக பாலும் புளிக்கும் எனும் சொல்லடை சுட்டுவது போல் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் துல்லியமான கிரகணங்களின் நிகழ்வுகள் அரியவை என்பதாலும், அதாவது பகுதியளவான கிரகணங்களைப் போல ஆண்டுக்கு 2 முறை நிகழ்ந்திடாமல், பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையோ ஏற்படுகின்றன என்பதாலும் அவற்றின் துல்லியத்தன்மை அவற்றுக்கு அளிக்கும் அழகினாலும் கிரகணங்களைப் பார்ப்பதற்கான மனிதர்களின் ஆர்வம் பெரிதாக இருக்கிறது.
இதே காரணங்கள் தான், அதாவது அரிய தன்மையும் அழகும் தான், சிலர் அல்லது பலரின் அச்சத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பூமிப்பந்தில் செயல்படுகின்ற அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம் சூரியன் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்றாலும் அபாயத்தை விளைக்கின்ற, அச்சமூட்டும் இரவின் இருட்டைப் போக்கி ஒளி கொடுத்து பகலை உருவாக்கி மனிதர்களின் அனைத்து இயக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உதவுவதால் சூரியன் மீது ஒருவித நன்றியுணர்வு ஆதிகாலத்து மனிதர்களிடமே தோன்றி விட்டது. இந்த நன்றியுணர்வு தான், வழக்கத்திற்கு மாறான முறையில் திடீரென சூரியன் மறைக்கப்படும் நிகழ்வானது சூரியனுக்கு நேரிடும் ஏதோ கெடுதல் என்றும் இதனால் மனிதர்களுக்கும் ஏதாவது கெடுதல் நேரிடும் என்றும் தோன்றிய அச்ச உணர்வுக்கு அடிப்படையாய் அமைந்தள்ளது. எப்பொழுதுமே, தர்க்கபூர்வமான அல்லது தர்க்கபூர்வமற்ற அச்சங்கள் மீதே தங்கள் கோட்டையை கட்டி வரும் மதங்கள் இந்த அச்சத்தையும் பயன்படுத்தி கட்டுக்கதைகள் இட்டுக்கட்டி சடங்குகளையெல்லாம் உருவாக்கி விட்டனர். உண்மையில் கிரகணங்களால் மனிதர்களுக்கு தனித்தன்மை கொண்ட நன்மையுமில்லை, தீமையுமில்லை. அமாவாசை, பௌர்ணமியால் எவ்வளவு நன்மை தீமையோ அதைப்போன்ற, நன்மை தீமைகள் தான் கிரகணங்களினாலும் ஏற்படக்கூடும்.
கிரகணங்களின் போது பூமியைப் பொருத்து சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இருப்பிட நிலைகளால், பூமியின் மீது இவற்றினால் ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவு சிறு அளவுக்கு மாறுபாடு அடையலாம். இந்த மாறுபாடு காற்று மண்டலத்தின் இயக்கத்திலும் கடல் அலைகளின் இயக்கத்திலும் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் திரளுக்கு வியப்பையளிக்கும் கிரகணங்கள், விஞ்ஞானிகளுக்கு விடைகளைத் தேடி நிற்கும் வினாக்களைக் கொண்டதாக இருக்கின்றன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பௌர்ணமி, அமாவாசை, கிரகணங்கள் வரும் காலத்தை கணிசமான அளவு துல்லியமாக கணிக்கும் திறன் உடையோர் இருந்திருக்கின்றனர். இது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய கணித, விஞ்ஞான வளர்ச்சி. ஆனால் அதே நேரத்தில் கிரகணம் என்பது சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று கூறிய வேடிக்கையும் இங்கே நிகழ்ந்தது என்பது மிக அரிய முரண்நகையே. இப்போது 10 வயது குழந்தைகள் கூட இந்த பாம்புக்கதையை நம்ப மாட்டார்கள். இப்போதும் பாம்புக் கதையை நம்பவில்லையென்றாலும் அதை ஒட்டி இருக்கும் வேறு தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்போரும் சிலர் இருக்கின்றனர்.
இந்தியாவில் பலர், கிரகணத்தையொட்டி சமைத்தல், சாப்பிடுதல், திறந்தவெளியில் திரிதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகின்றனர். இவற்றுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. திறந்தவெளியைத் தவிர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எவ்விதத்திலும் பயனற்றது. ஏனெனில், பலவீனமானது என்று சொல்லப்பட்டாலும் ஈர்ப்புவிசை அனைத்தும் தழுவியது, நீக்கமற நிறைந்திருப்பது. பாதிப்பை ஏற்படுத்துமெனில் பாதாளத்திற்குள் பதுங்கியிருப்பினும் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியே தீரும். ஆக, வீட்டிற்குள் முடங்கிவிடுவது என்பது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயலைப் போன்றதேயாகும். இப்போதைய காலம் விஞ்ஞான காலம். தொழில்நுட்பக் காலம் என்றெல்லாம் சொல்லுகிறோம். 21ம் நூற்றாண்டு என்று சொல்லுகிறோம். இப்பொழுதும் இத்தகைய விஞ்ஞானத்திற்கு முரணான கருத்துக்கள் சமூகத்தைப் பீடித்திருப்பது அனுமதிக்கக்கூடியதா? மதக்கருத்துகள் பலவும் கடந்த நூற்றாண்டில் மக்கள் மனங்களிலிருந்து வெளியேறிவிட்டதைப் பார்த்தோம். அப்படி மதக்கருத்துக்களை வெளியேற்றியது விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தான். மிச்சமிருக்கிற தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான உணர்ச்சிகளையும் விட்டு விடுதலையாகும் போது மானுடத்தின் வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாகுமல்லவா? விஞ்ஞானத்திற்கு முரணான இந்த கருத்துகளை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் சிலர் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்ணும் விரதம், நடத்தியுள்ளனர். அப்படிப்பட்ட நிலை ஏற்படச் செய்வதற்காக, விஞ்ஞானக் கருத்துகளை சக மனிதர்களிடம் கொண்டு செல்லும் பணியை விரைவுபடுத்துவோம். அப்படியாயின், இந்த சூரிய கிரகணம் மானுடத்திற்கு நன்மை செய்திருக்கிறது என்று ஆகிவிடும்.
சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசையில் தான் வரும். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியனை நோக்கியுள்ள சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளிபடுகிறது. அந்தப் பகுதிக்கு எதிர்ப்பக்கமுள்ள பகுதி தான் பூமியை நோக்கி இருக்கிறது. அது சூரிய ஒளியின்றி இருட்டாக இருப்பதால், பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சந்திரன் தெரிவதில்லை. இதுதான் அமாவாசை. இத்தகைய அமாவாசைகளுள் சிலவற்றில், பூமியிலிருந்து பார்க்கையில், சூரியனும் சந்திரனும் ஒரே பக்கத்தில் வருவதோடு சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இவ்வாறு நேர்கோட்டில் வருவதால் சூரியனின் தோற்றம் சந்திரனால் முழுக்கவும் மறைக்கப்படுகிறது. இது தான் சூரிய கிரகணம். இவ்வாறு நேர்கோட்டில் வருவது எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு கிரகணம் முழுமையானதாக இருக்கும். துல்லியத்தன்மை குறைவால் கிரகணம் பகுதியளவு கிரகணமாக அமைந்து விடுகிறது.
சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமியில் தான் வரும். அதாவது பூமியைச் சுற்றிவரும் சந்திரன், சூரியன் இருக்கும் பக்கத்திற்கு நேர் எதிர்பக்கத்திற்கு வரும் போது முழு சந்திரனும் பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். இதுதான் பௌர்ணமி. இத்தகைய பௌர்ணமிகளுள் சிலவற்றில் பூமிக்கு ஒரு பக்கம் சூரியனும் அதற்கு நேர் எதிர்பக்கத்தில் சந்திரனும், வருவதோடு, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இது தான் சந்திர கிரகணம். இதிலும் நேர்கோட்டில் வருவதன் துல்லியத்தன்மையைப் பொருத்தே கிரகணம் முழுமையானதாகவோ, பகுதியளவானதாகவோ அமைகிறது. பகுதியளவான சந்திர கிரகணம் ஆண்டுக்கு 2 நிகழும்.
பார்த்து ரசிப்பதற்கு அழகானது என்றால் ஒவ்வொரு சூரியோதயமும், சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் சந்திர அஸ்தமனமும் அழகானவை தான், ரசிக்கத்தக்கவை தான். ஆனால் அவை தினமும் நிகழ்வதால், பழகப் பழக பாலும் புளிக்கும் எனும் சொல்லடை சுட்டுவது போல் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் துல்லியமான கிரகணங்களின் நிகழ்வுகள் அரியவை என்பதாலும், அதாவது பகுதியளவான கிரகணங்களைப் போல ஆண்டுக்கு 2 முறை நிகழ்ந்திடாமல், பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையோ ஏற்படுகின்றன என்பதாலும் அவற்றின் துல்லியத்தன்மை அவற்றுக்கு அளிக்கும் அழகினாலும் கிரகணங்களைப் பார்ப்பதற்கான மனிதர்களின் ஆர்வம் பெரிதாக இருக்கிறது.
இதே காரணங்கள் தான், அதாவது அரிய தன்மையும் அழகும் தான், சிலர் அல்லது பலரின் அச்சத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பூமிப்பந்தில் செயல்படுகின்ற அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம் சூரியன் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்றாலும் அபாயத்தை விளைக்கின்ற, அச்சமூட்டும் இரவின் இருட்டைப் போக்கி ஒளி கொடுத்து பகலை உருவாக்கி மனிதர்களின் அனைத்து இயக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உதவுவதால் சூரியன் மீது ஒருவித நன்றியுணர்வு ஆதிகாலத்து மனிதர்களிடமே தோன்றி விட்டது. இந்த நன்றியுணர்வு தான், வழக்கத்திற்கு மாறான முறையில் திடீரென சூரியன் மறைக்கப்படும் நிகழ்வானது சூரியனுக்கு நேரிடும் ஏதோ கெடுதல் என்றும் இதனால் மனிதர்களுக்கும் ஏதாவது கெடுதல் நேரிடும் என்றும் தோன்றிய அச்ச உணர்வுக்கு அடிப்படையாய் அமைந்தள்ளது. எப்பொழுதுமே, தர்க்கபூர்வமான அல்லது தர்க்கபூர்வமற்ற அச்சங்கள் மீதே தங்கள் கோட்டையை கட்டி வரும் மதங்கள் இந்த அச்சத்தையும் பயன்படுத்தி கட்டுக்கதைகள் இட்டுக்கட்டி சடங்குகளையெல்லாம் உருவாக்கி விட்டனர். உண்மையில் கிரகணங்களால் மனிதர்களுக்கு தனித்தன்மை கொண்ட நன்மையுமில்லை, தீமையுமில்லை. அமாவாசை, பௌர்ணமியால் எவ்வளவு நன்மை தீமையோ அதைப்போன்ற, நன்மை தீமைகள் தான் கிரகணங்களினாலும் ஏற்படக்கூடும்.
கிரகணங்களின் போது பூமியைப் பொருத்து சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இருப்பிட நிலைகளால், பூமியின் மீது இவற்றினால் ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவு சிறு அளவுக்கு மாறுபாடு அடையலாம். இந்த மாறுபாடு காற்று மண்டலத்தின் இயக்கத்திலும் கடல் அலைகளின் இயக்கத்திலும் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் திரளுக்கு வியப்பையளிக்கும் கிரகணங்கள், விஞ்ஞானிகளுக்கு விடைகளைத் தேடி நிற்கும் வினாக்களைக் கொண்டதாக இருக்கின்றன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பௌர்ணமி, அமாவாசை, கிரகணங்கள் வரும் காலத்தை கணிசமான அளவு துல்லியமாக கணிக்கும் திறன் உடையோர் இருந்திருக்கின்றனர். இது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய கணித, விஞ்ஞான வளர்ச்சி. ஆனால் அதே நேரத்தில் கிரகணம் என்பது சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று கூறிய வேடிக்கையும் இங்கே நிகழ்ந்தது என்பது மிக அரிய முரண்நகையே. இப்போது 10 வயது குழந்தைகள் கூட இந்த பாம்புக்கதையை நம்ப மாட்டார்கள். இப்போதும் பாம்புக் கதையை நம்பவில்லையென்றாலும் அதை ஒட்டி இருக்கும் வேறு தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்போரும் சிலர் இருக்கின்றனர்.
இந்தியாவில் பலர், கிரகணத்தையொட்டி சமைத்தல், சாப்பிடுதல், திறந்தவெளியில் திரிதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகின்றனர். இவற்றுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. திறந்தவெளியைத் தவிர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எவ்விதத்திலும் பயனற்றது. ஏனெனில், பலவீனமானது என்று சொல்லப்பட்டாலும் ஈர்ப்புவிசை அனைத்தும் தழுவியது, நீக்கமற நிறைந்திருப்பது. பாதிப்பை ஏற்படுத்துமெனில் பாதாளத்திற்குள் பதுங்கியிருப்பினும் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியே தீரும். ஆக, வீட்டிற்குள் முடங்கிவிடுவது என்பது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயலைப் போன்றதேயாகும். இப்போதைய காலம் விஞ்ஞான காலம். தொழில்நுட்பக் காலம் என்றெல்லாம் சொல்லுகிறோம். 21ம் நூற்றாண்டு என்று சொல்லுகிறோம். இப்பொழுதும் இத்தகைய விஞ்ஞானத்திற்கு முரணான கருத்துக்கள் சமூகத்தைப் பீடித்திருப்பது அனுமதிக்கக்கூடியதா? மதக்கருத்துகள் பலவும் கடந்த நூற்றாண்டில் மக்கள் மனங்களிலிருந்து வெளியேறிவிட்டதைப் பார்த்தோம். அப்படி மதக்கருத்துக்களை வெளியேற்றியது விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தான். மிச்சமிருக்கிற தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான உணர்ச்சிகளையும் விட்டு விடுதலையாகும் போது மானுடத்தின் வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாகுமல்லவா? விஞ்ஞானத்திற்கு முரணான இந்த கருத்துகளை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் சிலர் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்ணும் விரதம், நடத்தியுள்ளனர். அப்படிப்பட்ட நிலை ஏற்படச் செய்வதற்காக, விஞ்ஞானக் கருத்துகளை சக மனிதர்களிடம் கொண்டு செல்லும் பணியை விரைவுபடுத்துவோம். அப்படியாயின், இந்த சூரிய கிரகணம் மானுடத்திற்கு நன்மை செய்திருக்கிறது என்று ஆகிவிடும்.
Subscribe to:
Posts (Atom)
