இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு மூன்று நாட்கள் பயணமாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பதி சமையதராய் வருகை புரிந்துள்ளார். அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் முக்கியமான ராணுவத் தளபதிகள் தலைமையிலான அரசப்படை, ராஜபக்சேக்கு உயர்ந்தபட்ச வணக்கத்துடன் கூடிய மரியாதையை செலுத்தினார்கள். அண்டை நாடாக இருந்தாலும், நட்பு நாடாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டில் ஒரு பெரிய இனஅழிப்புப் போரை நடத்தினார் என்ற பிரபலமான பெயருடன், கையில்பட்ட ரத்தக்கறைகள் உலர்வதற்குள் அவர் இந்தியா வருகை புரிகிறார் என்பது தான் முக்கியமானச் செய்தி.
உலக அரங்கில் இங்கிலாந்தில் உள்ள பி.பி.சி என்ற பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் காப்பரேஷன், அமெரிக்க ஏடான தி டைம்ஸ், அனைத்து நாட்டு நெருக்கடிக் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பு, அனைத்து நாட்டு பொது மன்னிப்புச் சபை, எக்னாமிக்ஸ் ஏடு ஆகியவை ராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளியாக சித்தரித்துள்ளது. அதேபோல அனைத்து நாட்டு குற்றயியல் நீதிமன்றத்தில் ராஜபக்சே சகோதரர்கள், போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துள்ளனர் என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழ்நாடு புதுச்சேரி கிளையான மக்கள் சிவில் உரிமைக்கழகம், தனது விரிவான குற்றச்சாட்டுகளையும், இணைத்துள்ளது. ஜுன் 8ம் நாள் தமிழ்நாடெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும், ராஜபக்சேயின் இந்திய வருகையை கண்டித்து, தெருவில் இறங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும், நூற்றுக்கணக்கில் போராட்டம் நடத்தியதற்காக கைதானார்கள். அதேசமயம் இதுபோன்ற ராஜபச்சே வருகையை கண்டித்து போராட்டம் நடத்திய அரசியல்வாதிகள், டெல்லி சென்று ராஜபக்சேயை சந்தித்து மனுக் கொடுக்கவும் செய்திருக்கின்றனர். இப்படி சில கேலிக் கூத்துக்கள் நடந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு என்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அமைப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்டது என்பது தான் வரலாறு.
உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும், ஒரு அரசத்தலைவரை உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்ற இந்திய நாடு சிவப்புக்கம்பளம் கொடுத்து வரவேற்கிறது என்ற செய்தி ஆரோக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தாவைச் சந்தித்து ஈழத்தமிழர்களின் மீள் குடியேற்றத்திற்காக கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், இதே மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அதுபற்றி ராஜபக்சே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அழுத்தமான செய்தியிருந்தது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முள்வேலி முகாம்களில் இருக்கின்ற ஈழத்தமிழர்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்வோம் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைச் சென்ற போது, அவர்களிடம் ராஜபக்சே வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ஆழமான குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை தமிழக முதல்வரின் கடிதத்தில் பிரதிபலித்தது. ஆனால் இப்போது டெல்லியில் ராஜபக்சேயை சந்தித்த தமிழக எம்.பி.க்கள் இப்படிப்பட்ட அழுத்தமான விவரத்தை எடுத்துச்சொன்னதாக அல்லது கேள்வி கேட்டதாக எதுவுமே தெரியவில்லை.
ஏற்கனவே உலக அரங்கில் மனிதஉரிமை மீறல்களுக்காக, ராஜபக்சே அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட போது, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு, ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பாதுகாத்தது என்ற அவப்பெயர் பதிவாகியுள்ளது. இப்போது டெல்லியில் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்ததன் மூலம், மேலும் அத்தகைய அவப்பெயர் வலுப்பபெறத்தான் செய்யும். இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசராக இருந்த ராஜேந்திர சஜ்ஜார் கலந்து கொண்ட, அயர்லாந்து நாட்டில் நடந்த டப்ளின் நிரந்தர மனிதஉரிமை தீர்ப்பாயத்தில், ராஜபக்சே சகோதரர்கள் போர்க்குற்றங்கள் இழைத்ததாக தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியிலுள்ள மற்றும் வடஇந்தியாவிலுள்ள பொதுமக்கள் மத்தியில், புதியதொரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈழவிடுதலைப் போர் ஆயுதப்போராட்டமாக நடந்து வந்த காலத்திலும், 4வது வன்னிப்போர் உக்கிரமமாக நடந்து வந்த நேரத்திலும், பிரபலமாக குற்றம்சாட்டப்படாத ராஜபக்சே அரசு, போர் முடிந்த நேரத்தில் கடுமையான போர்க் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய புதிய உணர்தல்கள் இந்தியா எங்கும் உருவாகியிருக்கும் நேரத்தில், டெல்லி ராஜபக்சே தம்பதியினருக்கு வரவேற்பு கொடுக்க வேண்டிய தேவை என்ன?
இந்திய அரசு இலங்கை அரசுக்கு தமிழர்களின் மறுவாழ்வுக்காக கொடுத்தனுப்பிய ரூ.500 கோடியை எப்படி செலவழித்தார் என்பதை அல்லது செலவழித்தாரா என்பதை அல்லது ஏன் செலவழிக்கவில்லை என்பதை விளக்கம் சொல்வதற்காக, ராஜபக்சே டெல்லி வந்தாரா? அப்படியானால் அதற்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுப்பார்களா? தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லையே என்பதற்காக, குற்ற உணர்வுடன் இந்த முறை காப்பாற்றுகிறேன் என்று சொல்வதற்காக அதன் மூலம் நட்புறவை பேணுவதற்காக டெல்லி வந்தாரா? அப்படியானால் அதற்காக இப்படியொரு பிரம்மாண்டமான வரவேற்பு தேவையில்லையே? டெல்லி சென்ற தமிழகத்து எம்.பி.க்கள் வீரமுடனோ, கோபமுடனோ, கோரிக்கையை வலியுறுத்தும் தன்மையுடனோ ராஜபக்சேயை சந்தித்ததாக தெரியவில்லை. மாறாக மரத்தடியில் நிற்கும் தமிழக எம்.பி.க்களை, காட்டுகின்ற காட்சி ஊடகம் அவர்களது எதிர்பார்ப்பை படம் பிடித்து காட்டியுள்ளது.
மேற்கண்ட எந்தக் காரணத்திற்கும் டெல்லியில் நுழையாத ராஜபக்சே, சி.ஈ.பி.ஏ. என்று அழைக்கப்படும் தொகுப்பான பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்குத் தான், டெல்லி வந்தார் என்பது வெளியாகியுள்ளது. அதை வெளியிடுகின்ற அரசு செய்திகள் 5 விதமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன என்று கூறியுள்ளன. 1. கூட்டாக பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒப்பந்தம். 2. தண்டிக்கப்பட் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம். 3. குற்ற நடவடிக்கைகளில் பரஸ்பரம் சட்ட உதவிகளை செய்து கொள்வதற்கான ஒப்பந்தம். 4.பரஸ்பர பண்பாட்டு ஒத்துழைப்பு சம்மந்தப்பட்ட ஒப்பந்தம். 5. சிறிய மற்றும் நடுத்தர வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவின் உதவியை பெறுகின்ற ஒப்பந்தம்.
மேற்கண்ட 5 ஒப்பந்தங்களில் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில், ராஜபக்சே அரசின் அமைச்சரான டக்ளஸ் தேவனந்தா மீது உள்ள சென்னை மாநகர காவல்துறையின் 2 குற்றவழக்குகள் விசாரணைக்காக, அவர் அனுப்பப்படுவாரா என்ற கேள்வியை தமிழக எம்.பி.க்கள் யாரும் கேட்டிருக்க நியாயமில்லை. 1998ம் ஆண்டு இந்தியாவும், இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அப்போது தொடங்கி இன்றுவரை பல்வேறு முனைகளில் இருநாடுகளுக்கும் வர்த்தகம் விரிவடைந்து வருகிறது. அதனடிப்படையில் தான் 2003ம் ஆண்டிலிருந்து சி.ஈ.பி.ஏ. என்ற ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. கடந்த சார்க் மாநாட்டு நேரம் மன்மோகன் கொழும்பு சென்றபோது கையெழுத்திடுவதாக இருந்த அந்த ஒப்பந்தம் தள்ளிப்போடப்பட்டது. இப்போது மீண்டும் ராஜபக்சே வருகையையொட்டி அதே ஒப்பந்தம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கையிலுள்ள சிங்கள அறிவுஜிவிகளை தூண்டிவிட்டு, ராஜபக்சே இந்தியாவுடனான அத்தகைய ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவதை எதிர்த்த குரலை எழுப்பி விட்டுத் தான், இங்கே வருகை புரிந்திருக்கிறார். ஆகவே இந்த முறையும் இந்திய அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் வர்த்தக மட்டத்திலும் வெற்றி கிட்டவில்லை என்று தெரிகிறது.
ஜனநாயக அரங்கிலும் இலங்கைக்கு எந்தவொரு நெருக்கடியையும் இந்திய அரசால் கொடுக்க முடியவில்லை. மனிதாபிமான மட்டத்திலும் தமிழர்களுக்கு மறுவாழ்வோ, அரசியல் தீர்வோ பெற்றுத் தர இந்திய அரசால் இயலவில்லை. வணிக அரங்கிலும் இந்திய அரசும், இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்ற கொள்ளையை விரும்பும் அளவிற்கு அடிக்க முடியவில்லை. பின் எதற்காக இந்த போர்க்குற்றவாளியின் வருகைக்கு இப்படி சிவப்புக்கம்பள வரவேற்பு என்பதை உலகச்சமூகம் கேட்கத்தொடங்கியுள்ளது.
Thursday, June 10, 2010
Wednesday, June 9, 2010
பெரும் ஆலை விபத்தும், வெறும் குறைவான தீர்ப்பும்
‘கார்பரேட் கொலைக்காரர்கள்’, ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ ‘உண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்து’, ‘முக்கிய குற்றவாளி தலைமறைவானார்’, ‘குற்றம் செய்த முதலாளி பிணையில் விடுதலை’, ‘26 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட தீர்ப்பு’, 20 ஆயிரம் பேர் உயிர் பலியானதற்கு, 7 பேருக்கு 2 ஆண்டு வரை தண்டனை’, 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதற்கு இழப்புத் தொகை இல்லை’, ‘வருங்கால தலைமுறை பாதிக்கப்படுவதற்கு தடுப்பு இல்லை’, மேற்கண்ட தலைப்புகள் நேற்றைய ஊடகங்களை ஆக்கிரமித்தன.
இவையெல்லாமே 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவில், இந்தியாவில் இருக்கும் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் நடந்த நச்சுவாயு கசிவால் ஏற்பட்ட படுகொலைகளின் தொடர்ச்சியில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், நமது ஊரில் எவரெடி பேட்டரி தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் நிறுவனம். அந்த நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்தை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளையும் அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை தான், போபால் நகரில் இயங்கி வந்தது. சம்பவத்தன்று அந்த ஆலையிலிருந்து நள்ளிரவில் வெளியான நச்சுவாயு, போபால் நகரில் அதே இரவில் 8,000 உயிர்களை பலிவாங்கியது. அப்போது வெளியேறிய நச்சுவாயு பல மனிதர்களின் உடல்களில் புகுந்துக் கொண்டது. சூழ்நிலையை நச்சாக்கியது. காற்றில் நஞ்சை கலக்கியது. ஆலை வளாகத்திற்குள் நச்சுக்கழிவுகளை திடமான வடிவத்தில் உருவாக்கியது. மறுநாள் காலையிலேயே யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது, காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ன் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பிரிவு கல்பபிள் ஹோமிசைடு என்ற கொலைக்கு ஒப்பாகாத, மரண ஆபத்து இருப்பதை அறிந்தும் இழைக்கப்பட்ட குற்றத்தால் நிகழ்ந்த மரணம் என்பதாக விளக்குகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான யூனியன் கார்பைடு அமைப்பின் தலைவரான வாரன் ஆன்டர்சன், விபத்து நடந்தவுடன் போபால் வந்தார். அவர் மீதும் டிசம்பர் 7ம் நாள் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்ப்பந்தம், இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்டது. அதையொட்டி இந்திய அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்ட ஏற்பாட்டில், முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் 6 மணி நேரத்தில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார். மாநில அரசாங்கத்தின் விமானத்தில், அரசு ஏற்பாட்டில் வாரன் ஆன்டர்சன் புதுடெல்லிக்கு பறந்து சென்றார். அங்கிருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட வாரன் ஆன்டர்சன், அதன்பிறகு இந்தியா திரும்பவில்லை.
குறிப்பிட்ட யூனியன் கார்பைடு ஆலையில் அன்றைய நாளில் வெளியான நச்சுவாயு மித்தில் ஐசோ சையநேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த மைக் என்ற நச்சு வேதியல் பொருள், அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இத்தகைய நச்சுவேதியலை பயன்படுத்துகின்ற ஆலைகளில், அதற்கே உரித்தான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விலையுயர்ந்த நவீன கருவிகளை பயன்படுத்தி, அப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் இருக்கும் கார்பைடின் பூச்சிக்கொல்லை மருந்து ஆலையில் செய்யப்பட்டது. அதேசமயம் வளராத 3ம் உலக நாடாக இருக்கின்ற இந்தியாவில் உள்ள போபாலில், அத்தகைய விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லை என்றும், காலாவதியான விலை குறைந்த கருவிகளே போதும் என்றும், அமெரிக்காவில் கூடிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முடிவெடுத்து அதில் அதன் தலைவர் வாரன் ஆன்டர்சன் கையெழுத்திட்டிருக்கிறார். அது 1973ம் ஆண்டின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் உள்சுற்றுக்கான அறிக்கையில் இருக்கிறது. அதில் ‘சோதிக்கப்படாத கருவிகளை போபாலுக்கு அனுப்பலாம். அவற்றால் ஏற்படும் ஆபத்தை விட, கிடைக்கின்ற நிதி லாபம் அதிகமாக இருக்கிறது’ என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை நடந்த 20,000 பேர் படுகொலைகளுக்கும், இனி நடக்கும் விபத்துகளுக்கும் காரணமானவராக வாரன் ஆன்டர்சன் இருப்பது பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது. இந்த மனிதர் தான் அமெரிக்காவில் இருந்துக் கொண்டு, இந்திய அரசுக்கு அல்லது மத்திய புலனாய்வுத் துறைக்கு கிடைக்காமல் இருப்பவராக, போபால் நீதிமன்றத்தில் சித்தரிக்கப்படுபவர்.
மேற்கண்ட பெரும் குற்றவாளி வாரன் ஆன்டர்சனை, போபால் நீதிமன்றமும் தலைமறைவாக சென்று விட்டார் என்று அறிவித்துள்ளது. அதையொட்டி தீர்ப்பு வழங்கப்படும் போது, விசாரிக்கப்படாத ஆண்டர்சன் மீது தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதை தற்போது விளக்குகின்ற மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி, தலைமறைவாக ஓடிவிட்ட காரணத்தால் தண்டனை அறிவிக்கப்படவில்லையே தவிர, அவரை பிடித்து வந்து விசாரித்து தண்டனை வழங்கப்படும் என்று இப்போது விளக்குகிறார். அறிவிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் மீது பல்வேறு வகையான கருத்துக்கள் காற்றிலே பறக்கத் தொடங்கிவிட்டன. பொதுமக்களும், ஊடகங்களும் கடுமையான எதிர்ப்பை மற்றும் கண்டனத்தை தெரிவித்ததையொட்டி, சட்ட அமைச்சரும் தன் பங்குக்கு உண்மை புதைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். இத்தகைய கூற்று மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த போதுமானதாக இருக்கிறதா?
அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்தில் வாரன் ஆன்டர்சனை தப்பிக்க வைத்த இந்திய அரசு, தொடர்ந்து பல குற்றங்களை இந்த வழக்கில் செய்துள்ளது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ. மூலம், இ.பி.கோ. 304 பிரிவிலிருந்து, 304ஏ பிரிவிற்கு குற்றப்பத்திரிகையை நீர்த்துப்போக செய்வதற்கான முன்வைப்பை, உச்சநீதிமன்றத்தில் வைத்தது. அதையொட்டி 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் வழக்குப் பிரிவை மாற்றி அறிவித்தது. அதாவது இ.பி.கோ. பிரிவு 304ன் படி, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அதேசமயம் பிரிவு 304ஏ யின் படி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கலாம். அதாவது கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து நடந்ததாக அந்த பிரிவு, கொலைக் குற்றத்தின் தன்மையை குறைத்து விடுகிறது. அதையொட்டியே இப்போது நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் வெறும் ரூ.25,000 தொகை கட்டிவிட்டு, குற்றம் செய்த முதலாளிகள் நீதிமன்றத்தை விட்டு பிணையில் வெளியே வர முடிந்திருக்கிறது. இது சாதாரண சாலை விபத்தில் நடந்த உயிர்பலிப் போல ஆக்கப்பட்டு விட்டது.
உலகிலேயே மிகப்பெரிய ஆலை விபத்தாக அறிவிக்கப்பட்ட போபால் நச்சுவாயு விபத்தால், நடந்த உயிர்ப்பலிகளும், நடந்துக் கொண்டிருக்கும் நடைப்பிணப் பலிகளும், இப்போது வெளிவந்த தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் நீதித்துறை பற்றிய மரியாதை, உலக அரங்கில் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீதி கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தண்டனைப் பிரிவை குறைத்து தீர்ப்புக் கொடுத்த நீதியரசர் அகமதி, 1998ல் போபாலில் யூனியன் கார்பைடு ஏற்பாடு செய்த, போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளை தலைவராக பதவியேற்றார். ஏற்கனவே போபால் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட யூனியன் கார்பைடு சொத்துக்களை, விற்க இதே நீதியரசர் அகமதி, உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக இருக்கும் போதே அனுமதிக் கொடுத்தார். இவ்வாறு ஓய்வு பெறும் நீதியரசர்களைக் கூட, முன்கூட்டியே விலைக்கு வாங்கும் கார்ப்பரேட்டுகளின் தில்லுமுல்லுகள், இந்த நிகழ்ச்சியிலும் அம்பலமாகியுள்ளது.
போபால் நிறுவனத்தை யூனியன் கார்பைடு, இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்சுக்கு விற்று விட்டது. அந்த டௌ நிறுவனமும் தான் எந்தவொரு இழப்பீடும் கொடுக்கமாட்டோம் என நிராகரித்து விட்டது. அதுமட்டுமின்றி விபத்து நடந்த ஆலைக்குள் இன்னமும் இருக்கின்ற 10,000 டன் திடக்கழிவுகளான நச்சுக்கழிவை, சுத்தம் செய்ய முடியாது என அறிவித்திருக்கிறது. இதுபற்றி நீதிமன்றமோ, அரசோ கவலைப்படவில்லை. மாறாக டௌ கெமிக்கல்சுக்கு நாடு முழுவதும், அரசாங்கம் சிவப்புக்கம்பளம் விரித்துள்ளது. சென்ற அமெரிக்க அதிபர் இந்தியா வந்த போது, பிரதமர் மன்மோகன் கொடுத்த விருந்தில் டௌ கெமிக்கல்ஸ் கௌரவிக்கப்பட்டது. சென்னையில் கூட, டௌ கெமிக்கல்ஸ் தனது விரிவாக்கத்தை செய்து வருகிறது. இப்படிப்பட்ட கொலைக்கார கார்ப்பரேட்டுகளை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க நாட்டு மக்கள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
போபால் படுகொலைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆபத்தான தொழிற்சாலைகளிலும், போபால் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் கையில் இருக்கிறது. அரசு தரப்பு தனது அமெரிக்க சார்பு, கார்ப்பரேட் நலன் ஆகியவற்றைத் தாண்டி, மக்கள் நலனையும், நாட்டு நலனையும் முதன்மைப்படுத்தும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது.
இவையெல்லாமே 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவில், இந்தியாவில் இருக்கும் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் நடந்த நச்சுவாயு கசிவால் ஏற்பட்ட படுகொலைகளின் தொடர்ச்சியில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், நமது ஊரில் எவரெடி பேட்டரி தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் நிறுவனம். அந்த நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்தை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளையும் அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை தான், போபால் நகரில் இயங்கி வந்தது. சம்பவத்தன்று அந்த ஆலையிலிருந்து நள்ளிரவில் வெளியான நச்சுவாயு, போபால் நகரில் அதே இரவில் 8,000 உயிர்களை பலிவாங்கியது. அப்போது வெளியேறிய நச்சுவாயு பல மனிதர்களின் உடல்களில் புகுந்துக் கொண்டது. சூழ்நிலையை நச்சாக்கியது. காற்றில் நஞ்சை கலக்கியது. ஆலை வளாகத்திற்குள் நச்சுக்கழிவுகளை திடமான வடிவத்தில் உருவாக்கியது. மறுநாள் காலையிலேயே யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது, காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ன் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பிரிவு கல்பபிள் ஹோமிசைடு என்ற கொலைக்கு ஒப்பாகாத, மரண ஆபத்து இருப்பதை அறிந்தும் இழைக்கப்பட்ட குற்றத்தால் நிகழ்ந்த மரணம் என்பதாக விளக்குகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான யூனியன் கார்பைடு அமைப்பின் தலைவரான வாரன் ஆன்டர்சன், விபத்து நடந்தவுடன் போபால் வந்தார். அவர் மீதும் டிசம்பர் 7ம் நாள் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்ப்பந்தம், இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்டது. அதையொட்டி இந்திய அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்ட ஏற்பாட்டில், முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் 6 மணி நேரத்தில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார். மாநில அரசாங்கத்தின் விமானத்தில், அரசு ஏற்பாட்டில் வாரன் ஆன்டர்சன் புதுடெல்லிக்கு பறந்து சென்றார். அங்கிருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட வாரன் ஆன்டர்சன், அதன்பிறகு இந்தியா திரும்பவில்லை.
குறிப்பிட்ட யூனியன் கார்பைடு ஆலையில் அன்றைய நாளில் வெளியான நச்சுவாயு மித்தில் ஐசோ சையநேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த மைக் என்ற நச்சு வேதியல் பொருள், அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இத்தகைய நச்சுவேதியலை பயன்படுத்துகின்ற ஆலைகளில், அதற்கே உரித்தான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விலையுயர்ந்த நவீன கருவிகளை பயன்படுத்தி, அப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் இருக்கும் கார்பைடின் பூச்சிக்கொல்லை மருந்து ஆலையில் செய்யப்பட்டது. அதேசமயம் வளராத 3ம் உலக நாடாக இருக்கின்ற இந்தியாவில் உள்ள போபாலில், அத்தகைய விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லை என்றும், காலாவதியான விலை குறைந்த கருவிகளே போதும் என்றும், அமெரிக்காவில் கூடிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முடிவெடுத்து அதில் அதன் தலைவர் வாரன் ஆன்டர்சன் கையெழுத்திட்டிருக்கிறார். அது 1973ம் ஆண்டின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் உள்சுற்றுக்கான அறிக்கையில் இருக்கிறது. அதில் ‘சோதிக்கப்படாத கருவிகளை போபாலுக்கு அனுப்பலாம். அவற்றால் ஏற்படும் ஆபத்தை விட, கிடைக்கின்ற நிதி லாபம் அதிகமாக இருக்கிறது’ என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை நடந்த 20,000 பேர் படுகொலைகளுக்கும், இனி நடக்கும் விபத்துகளுக்கும் காரணமானவராக வாரன் ஆன்டர்சன் இருப்பது பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது. இந்த மனிதர் தான் அமெரிக்காவில் இருந்துக் கொண்டு, இந்திய அரசுக்கு அல்லது மத்திய புலனாய்வுத் துறைக்கு கிடைக்காமல் இருப்பவராக, போபால் நீதிமன்றத்தில் சித்தரிக்கப்படுபவர்.
மேற்கண்ட பெரும் குற்றவாளி வாரன் ஆன்டர்சனை, போபால் நீதிமன்றமும் தலைமறைவாக சென்று விட்டார் என்று அறிவித்துள்ளது. அதையொட்டி தீர்ப்பு வழங்கப்படும் போது, விசாரிக்கப்படாத ஆண்டர்சன் மீது தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதை தற்போது விளக்குகின்ற மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி, தலைமறைவாக ஓடிவிட்ட காரணத்தால் தண்டனை அறிவிக்கப்படவில்லையே தவிர, அவரை பிடித்து வந்து விசாரித்து தண்டனை வழங்கப்படும் என்று இப்போது விளக்குகிறார். அறிவிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் மீது பல்வேறு வகையான கருத்துக்கள் காற்றிலே பறக்கத் தொடங்கிவிட்டன. பொதுமக்களும், ஊடகங்களும் கடுமையான எதிர்ப்பை மற்றும் கண்டனத்தை தெரிவித்ததையொட்டி, சட்ட அமைச்சரும் தன் பங்குக்கு உண்மை புதைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். இத்தகைய கூற்று மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த போதுமானதாக இருக்கிறதா?
அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்தில் வாரன் ஆன்டர்சனை தப்பிக்க வைத்த இந்திய அரசு, தொடர்ந்து பல குற்றங்களை இந்த வழக்கில் செய்துள்ளது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ. மூலம், இ.பி.கோ. 304 பிரிவிலிருந்து, 304ஏ பிரிவிற்கு குற்றப்பத்திரிகையை நீர்த்துப்போக செய்வதற்கான முன்வைப்பை, உச்சநீதிமன்றத்தில் வைத்தது. அதையொட்டி 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் வழக்குப் பிரிவை மாற்றி அறிவித்தது. அதாவது இ.பி.கோ. பிரிவு 304ன் படி, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அதேசமயம் பிரிவு 304ஏ யின் படி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கலாம். அதாவது கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து நடந்ததாக அந்த பிரிவு, கொலைக் குற்றத்தின் தன்மையை குறைத்து விடுகிறது. அதையொட்டியே இப்போது நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் வெறும் ரூ.25,000 தொகை கட்டிவிட்டு, குற்றம் செய்த முதலாளிகள் நீதிமன்றத்தை விட்டு பிணையில் வெளியே வர முடிந்திருக்கிறது. இது சாதாரண சாலை விபத்தில் நடந்த உயிர்பலிப் போல ஆக்கப்பட்டு விட்டது.
உலகிலேயே மிகப்பெரிய ஆலை விபத்தாக அறிவிக்கப்பட்ட போபால் நச்சுவாயு விபத்தால், நடந்த உயிர்ப்பலிகளும், நடந்துக் கொண்டிருக்கும் நடைப்பிணப் பலிகளும், இப்போது வெளிவந்த தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் நீதித்துறை பற்றிய மரியாதை, உலக அரங்கில் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீதி கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தண்டனைப் பிரிவை குறைத்து தீர்ப்புக் கொடுத்த நீதியரசர் அகமதி, 1998ல் போபாலில் யூனியன் கார்பைடு ஏற்பாடு செய்த, போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளை தலைவராக பதவியேற்றார். ஏற்கனவே போபால் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட யூனியன் கார்பைடு சொத்துக்களை, விற்க இதே நீதியரசர் அகமதி, உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக இருக்கும் போதே அனுமதிக் கொடுத்தார். இவ்வாறு ஓய்வு பெறும் நீதியரசர்களைக் கூட, முன்கூட்டியே விலைக்கு வாங்கும் கார்ப்பரேட்டுகளின் தில்லுமுல்லுகள், இந்த நிகழ்ச்சியிலும் அம்பலமாகியுள்ளது.
போபால் நிறுவனத்தை யூனியன் கார்பைடு, இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்சுக்கு விற்று விட்டது. அந்த டௌ நிறுவனமும் தான் எந்தவொரு இழப்பீடும் கொடுக்கமாட்டோம் என நிராகரித்து விட்டது. அதுமட்டுமின்றி விபத்து நடந்த ஆலைக்குள் இன்னமும் இருக்கின்ற 10,000 டன் திடக்கழிவுகளான நச்சுக்கழிவை, சுத்தம் செய்ய முடியாது என அறிவித்திருக்கிறது. இதுபற்றி நீதிமன்றமோ, அரசோ கவலைப்படவில்லை. மாறாக டௌ கெமிக்கல்சுக்கு நாடு முழுவதும், அரசாங்கம் சிவப்புக்கம்பளம் விரித்துள்ளது. சென்ற அமெரிக்க அதிபர் இந்தியா வந்த போது, பிரதமர் மன்மோகன் கொடுத்த விருந்தில் டௌ கெமிக்கல்ஸ் கௌரவிக்கப்பட்டது. சென்னையில் கூட, டௌ கெமிக்கல்ஸ் தனது விரிவாக்கத்தை செய்து வருகிறது. இப்படிப்பட்ட கொலைக்கார கார்ப்பரேட்டுகளை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க நாட்டு மக்கள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
போபால் படுகொலைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆபத்தான தொழிற்சாலைகளிலும், போபால் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் கையில் இருக்கிறது. அரசு தரப்பு தனது அமெரிக்க சார்பு, கார்ப்பரேட் நலன் ஆகியவற்றைத் தாண்டி, மக்கள் நலனையும், நாட்டு நலனையும் முதன்மைப்படுத்தும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது.
Tuesday, June 8, 2010
கலைஞர் கடிதத்தால் மன்மோகன் உணர்வு பெறுவாரா?
நேற்று கலைஞர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வருவதை ஒட்டி எழுதப்பட்ட கடிதம் அது. கலைஞர் தனிப்பட்ட முறையில் அதை எழுதவில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கலைஞர், இந்தியாவின் தலைமை அமைச்சராக இருக்கும் மன்மோகனுக்கு எழுதிய கடிதம் அது. ஆகவே இந்தியாவை தலைமை தாங்கும் மன்மோகன் அந்த கடிதத்தை பொறுப்போடு படிக்க வேண்டும். அதை ஒட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நம்பிக்கை தி.மு.க. தலைமைக்கு உண்டா என்பது நமக்கு தெரியாது. ஆனால் கலைஞர் அத்தோடு நிறுத்தவில்லை. தங்கள் கட்சியின் நாடாளுமன்ற கட்சித்தலைவரான டி.ஆர்.பாலுவை கூப்பிட்டு, அவரிடம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சென்று பார்த்து, அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என கேட்கச்சொல்லியிருக்கிறார். அதையும் கழகத்தின் மூலம் ஊடகங்களுக்கு வெளியிட அனுப்பி வைத்துள்ளார். இந்த அளவுக்கு கலைஞர் செய்யவேண்டிய அவசியம் ஏன் எழுந்தது? இதற்கு முன்பு ஏற்கனவே இதுபோல ஈழத்தமிழர் பிரச்னைக்கு பல கடிதங்களை, கலைஞர் பிரதமர் மன்மோகனை நம்பி எழுதியுள்ளார். அவை எல்லாமே கவனமாக எடுத்து படிக்கப்பட்டதென்றோ, கவனிக்கப்பட்டது என்றோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. அதனால் இந்தமுறை கலைஞர் தான் எழுதிய கடிதத்தை ஒட்டி, தனது கட்சி உறுப்பினர்களையே நேரில் சென்று, சம்பந்தப்பட்டவரை பார்த்து பேசச்சொல்லிவிட்டார் என்று தெரிகிறது.
கலைஞர் அப்படி அந்த கடிதத்தில் என்ன எழுதினர்? இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியேற்றம் செய்யவும், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டு பிரதமருக்கு எழுதியுள்ளார். அதை விளக்கும் போது, கலைஞர் தனது வார்த்தைகளிலேயே,இலங்கையில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும், 2009 டிசம்பர் மாதத்திற்குள், மறுவாழ்வு அளித்து அவர்களது இடங்களில் மீள்குடியமர்த்த இலங்கை அரசு வாக்களித்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று மன்மோஹனுக்கு நினைவுபடுத்தியுள்ளார். மன்மோஹனுக்கு இருக்கின்ற ஆயிரம் பிரச்சனைகளில், இந்த இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதி நினைவு இருக்குமா, இருக்காதா என்பது நமக்கு தெரிந்த செய்திதான். ஏன் என்றால் மன்மோகன் இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளாரா? அல்லது நிறைவேற்றகூடியவரா? என்றெல்லாம் நமக்கு சிந்தனை வந்துவிடும். அதனால் எந்த விதத்திலும், இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதிகளை அதுவும் தமிழருக்கான மறுவாழ்வு பற்றிய வாக்குறுதிகளை இந்திய பிரதமர் நினைவு வைத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பது நமக்கு விளங்குகிறது. அதனால்தான் கலைஞர் தனது கடிதத்தில், நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று அறிவித்து உள்ளார். இப்போது மன்மோகன் தனக்கு அது தெரியாது எனக்கூற முடியாமல் போய்விடும். தவிர கலைஞர் தனது கடிதத்தில் மேலும் ஒரு செய்தியை சொல்லியுள்ளார். அதாவது தற்காலிக முகாம்களில் 80 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள் என்று தனது கவனத்திற்கு வந்துள்ளது என்று கலைஞர் எழுதுகிறார். அதாவது தான் கூறிய வாக்குறுதியையும், மகிந்த ராஜபக்சே நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல இன்னமும் 80 ஆயிரம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார் என்பதையும் இதன் மூலம் கலைஞர் விளக்கியுள்ளார்.
இந்த அளவுக்கு ஒரு நாட்டின், அதுவும் காங்கிரசுகாரர்களின் வார்த்தைகளில் ஒரு நட்பு நாட்டின் அதிபரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற உண்மையை சொல்லுமளவுக்கு தள்ளியது எது? ஈழத்தமிழர்களை ஒரு இனவாத போரின் மூலம், இன அழிப்பு செய்த ஒரு அதிபரை அதுவும் சிங்கள பேரினவாத உணர்வுடன் தனது தேர்தல் நேரத்திலேயே, ஒற்றை ஆட்சி பற்றி பிரகடனம் செய்த ஒரு அதிபரை எந்த அளவில் இந்திய அரசியல் வாதிகளால் நம்ப முடிந்தது என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஒவ்வொரு கொடுமை நடக்கும் போதும், இந்திய அரசுக்கு தெரிவித்துக்கொண்டிருந்த கலைஞரை, இந்திய அரசு ஒவ்வொரு முறையும், பிரணாப் முகர்ஜியை அனுப்பியோ, எம்.கே.நாராயணனை அனுப்பியோ விளக்கம் கூறி, மீண்டும், மீண்டும் ராஜபக்சேவையும், அவரது வார்த்தைகளையும் நம்பச்சொன்னார்களே, அதுதான் இப்போது கேள்வி கேட்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர், மத்திய அரசு சொல்லக்கூடிய செய்திகளை நம்பாமல் ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. அதனால் விளைந்த விளைவுகள் ஒரு இனத்தின் அழிவிற்கு இழுத்துச்சென்று விட்டது என்பது வரலாறு. இப்போது அதே ராஜபக்சே இந்தியா வருகிறார். அவருக்கு மீண்டும் மத்திய அரசு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் இப்படி ஒரு கடிதம் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. தவிர தனது கடிதத்தில் கலைஞர் வேறொன்றையும் குறிப்பிடுகிறார். சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் அந்த மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதை நோக்கி பாடுபடும் வகையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமாதான அடிப்படையிலான நீதி ஆகியவை கிடைக்கவேண்டும் என எழுதுகிறார். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தனி விவாதப்பொருளாக எடுத்துக்கொண்டு பேசவேண்டும் என மன்மோஹனை கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மன்மோஹனுக்கு இது உறைக்குமா என்ற கேள்வி எழுகிறது. கலைஞருக்கு ராஜபக்சே எழுதிய கடிதத்தை வைத்து முதலில், போருக்கு பிறகு கலைஞர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு அப்போது இதே டி.ஆர். பாலு தலைமை தாங்கினார். அந்நேரம் அதிபர் ராஜப்ச்கே இந்திய எம்.பி.க்களிடம் 2009 டிசம்பருக்குள் அனைத்து தமிழர்களையும், வவுனியாவில் உள்ள மாணிக் பண்ணையிலிருந்து, அதாவது முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை செய்து, அவரவர் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதைத்தான் இப்போது கலைஞர் கேட்கிறார். அதுமட்டுமல்ல நடந்து முடிந்த நாலாவது வன்னிப்போரால், இந்திய அரசும்,தமிழக அரசும், உலகத்தமிழர் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்று உள்ளன. இந்த நேரத்தில் தமிழக அரசு உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த இருக்கிறது. அத்தகைய சூழலில், ராஜபக்சே தான் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், அடுத்த கட்ட பணிகளுக்கு இந்திய உதவியை நாடி வருகிறார் எனும் போது அவரிடம் வலியுறுத்த வேண்டிய செய்திகளை, தமிழக முதல்வர் டில்லி காரர்களுக்கு வலியுறுத்துவது என்பது நிகழவே செய்யும் எனத்தெரிகிறது. ராஜபக்சே வாக்குறுதி கொடுக்கும் போது, இலங்கையில் அதிபர் தேர்தலும், அடுத்து நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறும் சூழல் இருந்தது. அந்த சூழ்நிலையை சமாளிக்கவும், உலக அரங்கில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களிடம் நல்லுறவு இருப்பதுபோல் காட்டவும் அதை ஒட்டி தன்மீது உலக அரங்கில் வந்த போர்குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல்களும், எடு படாமல் போக அது உதவும் என்று ராஜபக்சே எதிர்பார்த்து அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்து இருக்கலாம். ஆனால் எப்படியாவது நல்லது நடந்தால் சரிதான் என்று எண்ணிய இந்திய அல்லது தமிழக அரசியல்வாதிகள் இதனால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தமிழக அரசியல்வாதிகளை ஏமாற்றிய ராஜபக்சே இந்தியா வந்து, இங்கே உள்ள பெருவணிகக்குழுமங்களிடம், ஒப்பந்தம் செய்யப்போகிறார் என்பதும், அதன் மூலம் தமிழர் தாயகத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கப்போகிறார் என்பதும், நம்மால் புரிந்துகொள்ள முடியுமா அல்லது அதற்கும் காலம் ஆகுமா என்பது தெரியவில்லை.
கலைஞர் அப்படி அந்த கடிதத்தில் என்ன எழுதினர்? இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியேற்றம் செய்யவும், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டு பிரதமருக்கு எழுதியுள்ளார். அதை விளக்கும் போது, கலைஞர் தனது வார்த்தைகளிலேயே,இலங்கையில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும், 2009 டிசம்பர் மாதத்திற்குள், மறுவாழ்வு அளித்து அவர்களது இடங்களில் மீள்குடியமர்த்த இலங்கை அரசு வாக்களித்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று மன்மோஹனுக்கு நினைவுபடுத்தியுள்ளார். மன்மோஹனுக்கு இருக்கின்ற ஆயிரம் பிரச்சனைகளில், இந்த இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதி நினைவு இருக்குமா, இருக்காதா என்பது நமக்கு தெரிந்த செய்திதான். ஏன் என்றால் மன்மோகன் இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளாரா? அல்லது நிறைவேற்றகூடியவரா? என்றெல்லாம் நமக்கு சிந்தனை வந்துவிடும். அதனால் எந்த விதத்திலும், இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதிகளை அதுவும் தமிழருக்கான மறுவாழ்வு பற்றிய வாக்குறுதிகளை இந்திய பிரதமர் நினைவு வைத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பது நமக்கு விளங்குகிறது. அதனால்தான் கலைஞர் தனது கடிதத்தில், நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று அறிவித்து உள்ளார். இப்போது மன்மோகன் தனக்கு அது தெரியாது எனக்கூற முடியாமல் போய்விடும். தவிர கலைஞர் தனது கடிதத்தில் மேலும் ஒரு செய்தியை சொல்லியுள்ளார். அதாவது தற்காலிக முகாம்களில் 80 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள் என்று தனது கவனத்திற்கு வந்துள்ளது என்று கலைஞர் எழுதுகிறார். அதாவது தான் கூறிய வாக்குறுதியையும், மகிந்த ராஜபக்சே நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல இன்னமும் 80 ஆயிரம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார் என்பதையும் இதன் மூலம் கலைஞர் விளக்கியுள்ளார்.
இந்த அளவுக்கு ஒரு நாட்டின், அதுவும் காங்கிரசுகாரர்களின் வார்த்தைகளில் ஒரு நட்பு நாட்டின் அதிபரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற உண்மையை சொல்லுமளவுக்கு தள்ளியது எது? ஈழத்தமிழர்களை ஒரு இனவாத போரின் மூலம், இன அழிப்பு செய்த ஒரு அதிபரை அதுவும் சிங்கள பேரினவாத உணர்வுடன் தனது தேர்தல் நேரத்திலேயே, ஒற்றை ஆட்சி பற்றி பிரகடனம் செய்த ஒரு அதிபரை எந்த அளவில் இந்திய அரசியல் வாதிகளால் நம்ப முடிந்தது என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஒவ்வொரு கொடுமை நடக்கும் போதும், இந்திய அரசுக்கு தெரிவித்துக்கொண்டிருந்த கலைஞரை, இந்திய அரசு ஒவ்வொரு முறையும், பிரணாப் முகர்ஜியை அனுப்பியோ, எம்.கே.நாராயணனை அனுப்பியோ விளக்கம் கூறி, மீண்டும், மீண்டும் ராஜபக்சேவையும், அவரது வார்த்தைகளையும் நம்பச்சொன்னார்களே, அதுதான் இப்போது கேள்வி கேட்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர், மத்திய அரசு சொல்லக்கூடிய செய்திகளை நம்பாமல் ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. அதனால் விளைந்த விளைவுகள் ஒரு இனத்தின் அழிவிற்கு இழுத்துச்சென்று விட்டது என்பது வரலாறு. இப்போது அதே ராஜபக்சே இந்தியா வருகிறார். அவருக்கு மீண்டும் மத்திய அரசு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் இப்படி ஒரு கடிதம் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. தவிர தனது கடிதத்தில் கலைஞர் வேறொன்றையும் குறிப்பிடுகிறார். சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் அந்த மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதை நோக்கி பாடுபடும் வகையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமாதான அடிப்படையிலான நீதி ஆகியவை கிடைக்கவேண்டும் என எழுதுகிறார். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தனி விவாதப்பொருளாக எடுத்துக்கொண்டு பேசவேண்டும் என மன்மோஹனை கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மன்மோஹனுக்கு இது உறைக்குமா என்ற கேள்வி எழுகிறது. கலைஞருக்கு ராஜபக்சே எழுதிய கடிதத்தை வைத்து முதலில், போருக்கு பிறகு கலைஞர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு அப்போது இதே டி.ஆர். பாலு தலைமை தாங்கினார். அந்நேரம் அதிபர் ராஜப்ச்கே இந்திய எம்.பி.க்களிடம் 2009 டிசம்பருக்குள் அனைத்து தமிழர்களையும், வவுனியாவில் உள்ள மாணிக் பண்ணையிலிருந்து, அதாவது முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை செய்து, அவரவர் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதைத்தான் இப்போது கலைஞர் கேட்கிறார். அதுமட்டுமல்ல நடந்து முடிந்த நாலாவது வன்னிப்போரால், இந்திய அரசும்,தமிழக அரசும், உலகத்தமிழர் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்று உள்ளன. இந்த நேரத்தில் தமிழக அரசு உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த இருக்கிறது. அத்தகைய சூழலில், ராஜபக்சே தான் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், அடுத்த கட்ட பணிகளுக்கு இந்திய உதவியை நாடி வருகிறார் எனும் போது அவரிடம் வலியுறுத்த வேண்டிய செய்திகளை, தமிழக முதல்வர் டில்லி காரர்களுக்கு வலியுறுத்துவது என்பது நிகழவே செய்யும் எனத்தெரிகிறது. ராஜபக்சே வாக்குறுதி கொடுக்கும் போது, இலங்கையில் அதிபர் தேர்தலும், அடுத்து நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறும் சூழல் இருந்தது. அந்த சூழ்நிலையை சமாளிக்கவும், உலக அரங்கில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களிடம் நல்லுறவு இருப்பதுபோல் காட்டவும் அதை ஒட்டி தன்மீது உலக அரங்கில் வந்த போர்குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல்களும், எடு படாமல் போக அது உதவும் என்று ராஜபக்சே எதிர்பார்த்து அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்து இருக்கலாம். ஆனால் எப்படியாவது நல்லது நடந்தால் சரிதான் என்று எண்ணிய இந்திய அல்லது தமிழக அரசியல்வாதிகள் இதனால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தமிழக அரசியல்வாதிகளை ஏமாற்றிய ராஜபக்சே இந்தியா வந்து, இங்கே உள்ள பெருவணிகக்குழுமங்களிடம், ஒப்பந்தம் செய்யப்போகிறார் என்பதும், அதன் மூலம் தமிழர் தாயகத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கப்போகிறார் என்பதும், நம்மால் புரிந்துகொள்ள முடியுமா அல்லது அதற்கும் காலம் ஆகுமா என்பது தெரியவில்லை.
Monday, June 7, 2010
சுற்றுச்சூழல் நாளில், சூழலையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சேது சமுத்திரத்திட்டத்தின் குரல்.
நேற்று உலக சுற்று சூழல் நாள். உலகம் முழுவதும் சுற்று சூழலின் பாதுகாப்பிற்காக பல்வேறு விதமான கருத்துக்களும், கட்டுரைகளும் வெளிவந்தன. ஒரு குறிப்பிட்ட ஆங்கில நாளேடு தனது நேற்றைய இதழை, மருசுழற்சசியில் தயாரித்திருந்தது. அதற்கு அதிகமான செலவு ஆகிறது என்றாலும் அவ்வாறு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுதவிர எத்தனையோ கட்டுரைகள் சுற்றுச்சூழலை அழிக்கும் வளர்ச்சித்திட்டங்கள் பற்றியும், அவை எப்படி மக்களை பாதிக்கிறது என்பதையும், அதை எதிர்த்து மக்கள் எப்படி போராடுகிறார்கள் என்பது பற்றியும் வெளியாகி உள்ளன. சுற்று சூழலை அழிக்கும் முயற்சியைத்தான் இயற்கையில் ஒன்றிப்போன ஆதிவாசி மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற செய்திதான், ஒரிசாவிலி
ருந்தும், சட்டிச்கரிலிருந்தும், ஜார்கண்டிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் வருகின்றன என்று சென்னை வந்த எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். இயற்கையை அழிக்கும் முயற்சிதான் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டையை ஏற்படுத்தி, அதன்மூலம் உலகம் முழுவதும் பூமி வெப்பமடைதலை ஏற்படுத்தி விடுகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுகூடி திட்டமிடுகின்றன. அந்த அளவுக்கு பெரிய ஒரு செய்தியாக இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருக்கிறது. அதேநேரம் சுற்று சூழல் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், அது பற்றிய அறிவும் பெறாமல், அதன் பாதிப்பு பற்றி யாராவது பேசினால் அல்லது போராடினால் அதையும் கண்டுகொள்ளாமல் தங்களது அரசியலுக்காகவோ அல்லது தங்களது அடையாளத்துக்காகவோ சிலர் சுற்றுச்சூழல் பாதிப்பைத்தரும் திட்டங்களை ஆதரித்து, உலக சுற்று சூழல் நாளில், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால், இவர்களது சிந்தனையை என்னவென்று சொல்வது?
நேற்றைய சுற்றுச்சூழல் நாளில் மகாபலிபுரத்தில் கூடிய அனைத்து மீனவர் குப்பங்களின் தலைவர்கள், சுற்று சூழல் நாளன்று ஒரு நல்ல காரியத்துக்காக கூடி பேசினார்கள். அதாவது அரசு கொண்டுவரும் கடல் நீரை குடி நீராக ஆக்கும் திட்டத்தை எதிர்த்து அவர்கள் கூடினார்கள். மீனவர்கள் தான் இங்கே உள்ள பழங்குடிகள். அதாவது மலையில் உள்ள பழங்குடிகளை நாம் ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். அதேபோல, கடலில் வாழ்கையை நடத்தி, கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்கள், கடல் சார்ந்த பழங்குடிகள் என்பதாக அழைக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட மீனவர்களுக்குத்தான் கடல் நீரை குடிநீராக மற்றும் திட்டம் எப்படி சுற்று சூழலுக்கு எதிரானது என்பது தெரியும். அவர்களது வாதப்படி, கடலிலே உள்ள உப்பு நீரை எடுக்கும் நிறுவனம், அதை இயந்திரத்தில் இட்டு அதில் உள்ள நல்ல நீரை வெளியே எடுத்த பிறகு, கழிவாக வெளியேறும் உப்பை என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டதற்கு, கடலில் மீண்டும் தள்ளி கொண்டு போய் கொட்டுவோமென கூறுகிறார்கள் என்பதே. இப்படிப்பட்ட திட்டத்தை இயற்கையுடன் இயைந்து வாழும் மீனவர்கள், அதாவது கடல் நீர், கடல் நீரோட்டம் எனும் இயற்கையுடன் இயைந்து வாழும் மீனவர்கள், சரியாக அடையாளம் கண்டு கொண்டார்கள். அதன்மூலம் அவர்கள் , கொட்டப்டும் உப்பு கழிவு என்பதால் அதிக அடர்த்தி கொண்டது என்பதை உணர்ந்து உள்ளார்கள். அதிக அடத்தி கொண்ட உப்பு தங்களுக்கு சொந்தமான கடலில் கொட்டப்படும்போது, அது இருக்கும் மீன்களையும், மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும், அழித்துவிடும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதனால் அதுவே தங்களது வாழ்க்கையை அழித்துவிடும் எனவும் புரிந்து கொண்டுவிட்டார்கள். இதன்காரணமாகவே அவர்கள் ஒன்று கூடி, இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை அதிகாரிகள் சரியான முறையில் அரசுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. அல்லது அரசியலும், அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு அடம்பிடித்து தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லையா எனவும் தெரியவில்லை. அரசு கடல் நீரை குடி நீராக மாற்றும் திட்டத்திற்கு ஆதரவான நிலையிலேயே உள்ளது. அதன்விளைவுதான் மீனவர்கள் இதற்காகவே ஒரு அனைத்து குப்பம் சார்ந்த கூட்டத்தை கூட்டி போராட்ட திட்டத்தை சுற்று சூழல் உலக நாளன்று முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறு இந்த நாள் பிரபலமாக கருதப்படும்போது, சேது சமுத்திர திட்டத்தை ஏன் மத்திய அரசு நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வில்லை என்று கேட்டு, திராவி டக்கழகத்தலைவர் கீ.வீரமணி தலைமையில் நேற்று ஒரு பெரிய போராட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அதில் பாபுலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற வளர்ந்து வரும் முஸ்லிம் அமைப்பும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். எதற்காக பாபுலர் பிரண்டு இதில் கலந்து கொண்டது என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே பாபுலர் பிரண்டு தோன்றுவதற்கு முன்பே இருந்த மனித நீதி பாசறை மீது, காவல்துறையின் கண்காணிப்பும், நெருக்கடியும் அதிகம் இருந்தன. அந்த பழைய பதிவுகளை நீக்க, ஆட்சியாளர்கள் விரும்பக்கூடிய கோரிக்கைகளுக்காக இறங்கி போராடினால் நல்ல பெயரை ஆட்சியாளர்களிடம் பெறலாம் என்ற கருத்து காவல்துரையிளிருந்தே கூறப்பட்டதாக தெரிகிறது. இப்போது எதற்காக சேது திட்டத்தை ஆதரித்து திடீர் போராட்டம் என கேட்கலாம். இப்போது காங்கிரசு கட்சிக்கும், தி.மு.க.கட்சிக்கும் சிறிய அளவில் நெருடல் வந்துகொண்டு இருக்கிறது. சுற்று சூழல் காரணமாகவும், பொருளாதார ரீதியிலும் சேது திட்டம் நட்டமடையும் என்ற செய்தியின் அடிப்படையில், மத்திய காங்கிரசு ஆட்சி அந்த திட்டத்தை அநேகமாக கை விட்டுவிட்டது. இந்த செய்தி தெரிந்திருந்தும்கூட, தி.மு.க.- காங்கிரசு உறவு நன்றாக இருக்கும்போது இதைகிளப்பாமல், உறவு கெட்டுக்கொண்டிருக்கும் பொது அதைகிளப்ப இந்த போராட்டம் என்று கூறுகிறார்கள்.
எப்படி இருந்தாலும் இந்த சேது திட்டம், மீனவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் திட்டம் என்ற புரிதல் மீனவர்களுக்கு இருக்கிறது. சுற்று சூழலையும் கெடுத்து, பவளப்பாறைகளையும் அழித்து இந்த சேது திட்டம் நிறைவேறினால், அரிதான உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதை சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி
மீனவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுமென ஆதாரபூர்வமாக கூறுகிறார்கள். ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்க்கை இந்த சேது திட்டத்தால் அழிந்து போகுமென, ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் அலறுகிறார்கள். இதையே முன்னாள் மானுடவியல்துறைத்தலைவராக இருந்த, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மறைந்த சுதர்சனம் எழுதி வைத்தார். இவ்வாறு அறிஞர்கள் அனைவராலும் மறுக்கப்பட்ட சேது திட்டத்தை இப்போது மீண்டும் நினைவு படுத்துவது அரசியல் எனத்தெரிகிறது. சுற்று சூழல் உலக நாளில் இப்படி சுற்று சூழலுக்கு எதிரான குரலை எழுப்புவதில் தமிழ் நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான்.
ருந்தும், சட்டிச்கரிலிருந்தும், ஜார்கண்டிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் வருகின்றன என்று சென்னை வந்த எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். இயற்கையை அழிக்கும் முயற்சிதான் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டையை ஏற்படுத்தி, அதன்மூலம் உலகம் முழுவதும் பூமி வெப்பமடைதலை ஏற்படுத்தி விடுகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுகூடி திட்டமிடுகின்றன. அந்த அளவுக்கு பெரிய ஒரு செய்தியாக இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருக்கிறது. அதேநேரம் சுற்று சூழல் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், அது பற்றிய அறிவும் பெறாமல், அதன் பாதிப்பு பற்றி யாராவது பேசினால் அல்லது போராடினால் அதையும் கண்டுகொள்ளாமல் தங்களது அரசியலுக்காகவோ அல்லது தங்களது அடையாளத்துக்காகவோ சிலர் சுற்றுச்சூழல் பாதிப்பைத்தரும் திட்டங்களை ஆதரித்து, உலக சுற்று சூழல் நாளில், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால், இவர்களது சிந்தனையை என்னவென்று சொல்வது?
நேற்றைய சுற்றுச்சூழல் நாளில் மகாபலிபுரத்தில் கூடிய அனைத்து மீனவர் குப்பங்களின் தலைவர்கள், சுற்று சூழல் நாளன்று ஒரு நல்ல காரியத்துக்காக கூடி பேசினார்கள். அதாவது அரசு கொண்டுவரும் கடல் நீரை குடி நீராக ஆக்கும் திட்டத்தை எதிர்த்து அவர்கள் கூடினார்கள். மீனவர்கள் தான் இங்கே உள்ள பழங்குடிகள். அதாவது மலையில் உள்ள பழங்குடிகளை நாம் ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். அதேபோல, கடலில் வாழ்கையை நடத்தி, கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்கள், கடல் சார்ந்த பழங்குடிகள் என்பதாக அழைக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட மீனவர்களுக்குத்தான் கடல் நீரை குடிநீராக மற்றும் திட்டம் எப்படி சுற்று சூழலுக்கு எதிரானது என்பது தெரியும். அவர்களது வாதப்படி, கடலிலே உள்ள உப்பு நீரை எடுக்கும் நிறுவனம், அதை இயந்திரத்தில் இட்டு அதில் உள்ள நல்ல நீரை வெளியே எடுத்த பிறகு, கழிவாக வெளியேறும் உப்பை என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டதற்கு, கடலில் மீண்டும் தள்ளி கொண்டு போய் கொட்டுவோமென கூறுகிறார்கள் என்பதே. இப்படிப்பட்ட திட்டத்தை இயற்கையுடன் இயைந்து வாழும் மீனவர்கள், அதாவது கடல் நீர், கடல் நீரோட்டம் எனும் இயற்கையுடன் இயைந்து வாழும் மீனவர்கள், சரியாக அடையாளம் கண்டு கொண்டார்கள். அதன்மூலம் அவர்கள் , கொட்டப்டும் உப்பு கழிவு என்பதால் அதிக அடர்த்தி கொண்டது என்பதை உணர்ந்து உள்ளார்கள். அதிக அடத்தி கொண்ட உப்பு தங்களுக்கு சொந்தமான கடலில் கொட்டப்படும்போது, அது இருக்கும் மீன்களையும், மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும், அழித்துவிடும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதனால் அதுவே தங்களது வாழ்க்கையை அழித்துவிடும் எனவும் புரிந்து கொண்டுவிட்டார்கள். இதன்காரணமாகவே அவர்கள் ஒன்று கூடி, இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை அதிகாரிகள் சரியான முறையில் அரசுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. அல்லது அரசியலும், அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு அடம்பிடித்து தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லையா எனவும் தெரியவில்லை. அரசு கடல் நீரை குடி நீராக மாற்றும் திட்டத்திற்கு ஆதரவான நிலையிலேயே உள்ளது. அதன்விளைவுதான் மீனவர்கள் இதற்காகவே ஒரு அனைத்து குப்பம் சார்ந்த கூட்டத்தை கூட்டி போராட்ட திட்டத்தை சுற்று சூழல் உலக நாளன்று முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறு இந்த நாள் பிரபலமாக கருதப்படும்போது, சேது சமுத்திர திட்டத்தை ஏன் மத்திய அரசு நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வில்லை என்று கேட்டு, திராவி டக்கழகத்தலைவர் கீ.வீரமணி தலைமையில் நேற்று ஒரு பெரிய போராட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அதில் பாபுலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற வளர்ந்து வரும் முஸ்லிம் அமைப்பும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். எதற்காக பாபுலர் பிரண்டு இதில் கலந்து கொண்டது என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே பாபுலர் பிரண்டு தோன்றுவதற்கு முன்பே இருந்த மனித நீதி பாசறை மீது, காவல்துறையின் கண்காணிப்பும், நெருக்கடியும் அதிகம் இருந்தன. அந்த பழைய பதிவுகளை நீக்க, ஆட்சியாளர்கள் விரும்பக்கூடிய கோரிக்கைகளுக்காக இறங்கி போராடினால் நல்ல பெயரை ஆட்சியாளர்களிடம் பெறலாம் என்ற கருத்து காவல்துரையிளிருந்தே கூறப்பட்டதாக தெரிகிறது. இப்போது எதற்காக சேது திட்டத்தை ஆதரித்து திடீர் போராட்டம் என கேட்கலாம். இப்போது காங்கிரசு கட்சிக்கும், தி.மு.க.கட்சிக்கும் சிறிய அளவில் நெருடல் வந்துகொண்டு இருக்கிறது. சுற்று சூழல் காரணமாகவும், பொருளாதார ரீதியிலும் சேது திட்டம் நட்டமடையும் என்ற செய்தியின் அடிப்படையில், மத்திய காங்கிரசு ஆட்சி அந்த திட்டத்தை அநேகமாக கை விட்டுவிட்டது. இந்த செய்தி தெரிந்திருந்தும்கூட, தி.மு.க.- காங்கிரசு உறவு நன்றாக இருக்கும்போது இதைகிளப்பாமல், உறவு கெட்டுக்கொண்டிருக்கும் பொது அதைகிளப்ப இந்த போராட்டம் என்று கூறுகிறார்கள்.
எப்படி இருந்தாலும் இந்த சேது திட்டம், மீனவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் திட்டம் என்ற புரிதல் மீனவர்களுக்கு இருக்கிறது. சுற்று சூழலையும் கெடுத்து, பவளப்பாறைகளையும் அழித்து இந்த சேது திட்டம் நிறைவேறினால், அரிதான உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதை சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி
மீனவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுமென ஆதாரபூர்வமாக கூறுகிறார்கள். ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்க்கை இந்த சேது திட்டத்தால் அழிந்து போகுமென, ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் அலறுகிறார்கள். இதையே முன்னாள் மானுடவியல்துறைத்தலைவராக இருந்த, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மறைந்த சுதர்சனம் எழுதி வைத்தார். இவ்வாறு அறிஞர்கள் அனைவராலும் மறுக்கப்பட்ட சேது திட்டத்தை இப்போது மீண்டும் நினைவு படுத்துவது அரசியல் எனத்தெரிகிறது. சுற்று சூழல் உலக நாளில் இப்படி சுற்று சூழலுக்கு எதிரான குரலை எழுப்புவதில் தமிழ் நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான்.
Sunday, June 6, 2010
இயற்கை மூலாதாரங்களை அரசு பாதுகாக்குமா?
இன்று நாடெங்கிலும் நடந்து வருகின்ற விவாதம், கனிம வளங்கள் உள்பட இயற்கை மூலாதாரங்களை பாதுகாக்க வேண்டுமா அல்லது பயன்படுத்த வேண்டுமா அல்லது கொள்ளைபோக அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வி தான். அதுதான் இன்றைக்கு இந்தியாவின் இதயப்பகுதியாக இருக்கின்ற மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மூலாதாரங்கள் கொட்டிக் கிடக்கும் இடங்கள் எல்லாமே, காடுகளாகவும், மலைகளாகவும், மலைசார்ந்த பகுதிகளாகவும் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளில் பெரும்பாலும் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாமே, எளிமையாக எட்டக்கூடிய சமவெளிப்பகுதிகளில் பங்குப் போடப்படுகின்றன. அதிலும் கூட ஏழை, எளிய, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு போய்ச் சேர வேண்டிய சலுகைகளும், நல்வாழ்வுத் திட்டங்களும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் சென்றடைந்து விடுகிறது. அதனால் மலைகள் மற்றும் மலை வாழ் மக்கள் கவனிக்கப்படுவதேயில்லை. இந்திய நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் கடந்து விட்டன என்று கூறுகிறார்கள். ஆனாலும் கூட நமது நாட்டின் மலைவாழ் மக்கள், எந்தவொரு புதிய வளர்ச்சிகளையும், நல்வாழ்வுத் திட்டங்களையும் சந்திக்காமலேயே இருக்கிறார்கள். இதைத் தான் உள்கட்டுமான வசதிகள் அந்தப் பகுதிகளில் இல்லாமலேயே இருக்கின்றன என்ற செய்தியை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தன் யாதவ் கூறியிருந்தார். அந்த இளைஞர் தலைவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் படித்தவர். அதனால் தான் அவருக்கு அத்தகைய விவரம் எட்டியதா என்பது நமக்கு தெரியவில்லை.
அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் படித்து வருகின்ற இளம் மாணவர்களும், மாணவிகளும் பல்வேறு கேள்விகளை இந்திய சமுதாயம் பற்றி கேட்கத் தொடங்கியுள்ளார்கள். அப்படி கேள்வி கேட்பவர்கள், மக்களுக்கெதிரான போர் என்ற பெயரில் ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். அதையும் கூட, காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் விட்டு வைக்கவில்லை. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர், அதேப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்று இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிராக பச்சை வேட்டை என்ற பெயரில், ராணுவத்தை ஏவிவிட்டு வேட்டையாடக் கூடிய போரை நடத்தும் கதாநாயகனாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காட்சி ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். அதே சிதம்பரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கு, உரையாற்றச் சென்ற போது இளம் மாணவியால் கேள்வி கேட்கப்படுகிறார். இத்தகைய நிகழ்ச்சிகளை மையமாக நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, வழிகாட்டல் கொடுத்து வரும் சீரிய சிந்தனையாளர்களான பேராசிரியர்கள் மத்தியிலிருந்து, முக்கியமான மூத்த பேராசிரியர் அமித் பாதுரி சென்னை வந்திருந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்று தெரிகிறது.
இந்திய இதயப்பகுதியில் நடந்து வருகின்ற மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டம் என்பது, அதற்கு அடிப்படையான உண்மையான காரணங்களை மறைத்து மேலே எழுந்து வந்துள்ளது என்று அந்த பேராசிரியர் கூறுகிறார். அதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவியான அன்னை சோனியா காந்தியை துணைக்கு அழைத்து பேசினார். ஏனென்றால் விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட் பிரச்சனை பற்றி கருத்துக் கூறும் போது, சோனியாக காந்தி அந்த பிரச்சனையின் வேர்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதாக கூறியிருந்தார். அத்தகைய மேற்கோளை கையிலெடுத்துக் கொண்ட பேராசிரியர் அமித் பாதுரி, அடிப்படை உண்மையான நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகியவை யாருடைய நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவையெல்லாமே இந்திய அரசால், பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், பெருவணிகக் குழுமங்களுக்கும் இலவசமாக தாரை வார்க்கப்படுகின்றன என்ற செய்தியை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறு கொடுக்கப்படுவதனால் தான் அம்பானிகளும், மற்ற பெருவணிகக் குழுமங்களும் இன்று உலகமட்டத்தில் தங்களுக்குள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் இதயப்பகுதியில் அல்லது போர் நடக்கும் பகுதியில் இல்லாத தான், தென்திசையிலுள்ள சென்னையை நோக்கி வந்திருக்கும் காரணமே, இத்தகைய உண்மைகளுக்கு அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டையும், தோழமையையும் காட்டத்தான் என்று நமக்கு விளக்குகிறார்.
டாடா குழுமத்திற்கு இலவசமான நிலம், தண்ணீர், உள்கட்டுமான வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படுகின்றன என்றார் அவர்.
மாவோயிஸ்ட்கள் இந்த பிரச்சனையை பார்க்கின்ற கண்ணோட்டத்தில் இல்லாமல் நாம் வித்தியாசமான எதார்த்த சூழ்நிலைகளை காணவேண்டாமா என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். இந்த விவாதம் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை பற்றியதோ, அல்லது ஆயுதப் போராட்டத்தை பற்றியதோ அல்ல என்று அவர் தெளிவாக வரையறுக்கிறார். 3 வித்தியாசமான மட்டங்களில், அந்த வட்டாரத்தில் சண்டை நடக்கிறது என்று விவரிக்கிறார். நிலத்திற்கான சண்டை, நீருக்கான சண்டை, கனிமவளங்களை காப்பாற்றுவதற்கான சண்டை என்று அதை வருணிக்கிறார்.
மேற்கண்ட சண்டைகள் மாவோயிஸ்ட் இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் மாத்திரம் நடக்கவில்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராமிலும், ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தை எதிர்த்தும், ரைகரிலும் நடக்கின்றன என்றும் கூறினார். ஒவ்வொரு இடத்திலும் தனிப்பட்ட உழவர்களோ அல்லது விவசாய கூட்டமோ, தங்களது நலனுக்காக பெருவணிக குழுமங்களின் பறித்தெடுத்தலை எதிர்த்து போராடுகிறார்கள். நிலமற்ற விவசாயிகளும், சிறு நிலவுடைமையாளர்களும் அத்தகைய தற்காப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். நிலங்கள் மீதும், காடுகள் மீதும் தங்களது சமூக கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் போராடுகிறார்கள். அந்த மக்களின் சமூக உரிமைகளை அரசு உடைக்க விரும்புகிறது. உடைத்து அவற்றை சில தனியார் பெருவணிக குழுமங்களுக்கு தாரைவார்க்க அரசு முயற்சிக்கிறது. அத்தகைய முயற்சியில் இத்தனை ஆண்டுகளாக தங்களது சமூகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த பாரம்பரிய நிலங்களையும், காடுகளையும் எடுத்துக்கொடுப்பதற்கு, மேற்படி சமூகங்களின் ஒப்புதலை பெறுவதற்கான எந்த முயற்சியையும் அரசு செய்யவில்லை.
இயற்கை மூலாதாரங்களை கையாளும் போது, அவற்றை இன்று வரை பாதுகாத்து வரும் சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல், பறித்து எடுத்தல் சாத்தியமானதா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் நிலத்துடனும், நீருடனும், வனங்களுடனும், மீன்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை பச்சை வேட்டை என்ற பெயரில், அந்த இயற்கை மூலாதாரங்களை விடுத்து பிரிக்க முடியுமா?
நியாங்கிரியில் இருக்கும் ஆதிவாசிகள் இயக்கமும், காந்திய வழியில் அணைகட்டுவதை எதிர்த்துப் போராடும் நர்மதா பச்சாவோ அண்டலன் அமைப்பும், போஸ்கோ எதிர்ப்பு மக்கள் போராட்டமும், வன்முறையற்ற வழிகளில் தானே ஆண்டுபலவாக நடந்து வருகின்றன என்ற கேள்வியை பாதுரி முன்வைக்கிறார். அப்படிப்பட்ட போராட்டங்களை அரசு ஆதரித்ததா என்று கேட்கிறார். அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் செயல்படவில்லையே என்றும் கேள்வி எழுப்புகிறார். கலிங்கா நகரில் இன்று அமைதி வழி மக்கள் போராட்டங்களை அரசு ஒடுக்குவது ஏன் என்ற கேள்வியை கூடுதாலாகக் கேட்கிறார். மாவோயிஸ்ட்களும், வன்முறைப்போராட்டமும், இல்லாத பகுதிகளிலும் அரசு, இயற்கை மூலாதாரங்களை பறித்தெடுக்க மக்கள் போராட்டங்கள் மீது தாக்குதல்களை தொடுக்கிறது. இது மக்கள் மீதான போர். மேற்கண்ட பேராசிரியரின் வாதங்களுக்கு எந்தவொரு அரசுத்தரப்பும் பதில் கொடுக்க முடியாது என்பது மட்டும் புரிகிறது.
இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாமே, எளிமையாக எட்டக்கூடிய சமவெளிப்பகுதிகளில் பங்குப் போடப்படுகின்றன. அதிலும் கூட ஏழை, எளிய, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு போய்ச் சேர வேண்டிய சலுகைகளும், நல்வாழ்வுத் திட்டங்களும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் சென்றடைந்து விடுகிறது. அதனால் மலைகள் மற்றும் மலை வாழ் மக்கள் கவனிக்கப்படுவதேயில்லை. இந்திய நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் கடந்து விட்டன என்று கூறுகிறார்கள். ஆனாலும் கூட நமது நாட்டின் மலைவாழ் மக்கள், எந்தவொரு புதிய வளர்ச்சிகளையும், நல்வாழ்வுத் திட்டங்களையும் சந்திக்காமலேயே இருக்கிறார்கள். இதைத் தான் உள்கட்டுமான வசதிகள் அந்தப் பகுதிகளில் இல்லாமலேயே இருக்கின்றன என்ற செய்தியை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தன் யாதவ் கூறியிருந்தார். அந்த இளைஞர் தலைவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் படித்தவர். அதனால் தான் அவருக்கு அத்தகைய விவரம் எட்டியதா என்பது நமக்கு தெரியவில்லை.
அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் படித்து வருகின்ற இளம் மாணவர்களும், மாணவிகளும் பல்வேறு கேள்விகளை இந்திய சமுதாயம் பற்றி கேட்கத் தொடங்கியுள்ளார்கள். அப்படி கேள்வி கேட்பவர்கள், மக்களுக்கெதிரான போர் என்ற பெயரில் ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். அதையும் கூட, காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் விட்டு வைக்கவில்லை. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர், அதேப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்று இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிராக பச்சை வேட்டை என்ற பெயரில், ராணுவத்தை ஏவிவிட்டு வேட்டையாடக் கூடிய போரை நடத்தும் கதாநாயகனாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காட்சி ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். அதே சிதம்பரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கு, உரையாற்றச் சென்ற போது இளம் மாணவியால் கேள்வி கேட்கப்படுகிறார். இத்தகைய நிகழ்ச்சிகளை மையமாக நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, வழிகாட்டல் கொடுத்து வரும் சீரிய சிந்தனையாளர்களான பேராசிரியர்கள் மத்தியிலிருந்து, முக்கியமான மூத்த பேராசிரியர் அமித் பாதுரி சென்னை வந்திருந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்று தெரிகிறது.
இந்திய இதயப்பகுதியில் நடந்து வருகின்ற மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டம் என்பது, அதற்கு அடிப்படையான உண்மையான காரணங்களை மறைத்து மேலே எழுந்து வந்துள்ளது என்று அந்த பேராசிரியர் கூறுகிறார். அதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவியான அன்னை சோனியா காந்தியை துணைக்கு அழைத்து பேசினார். ஏனென்றால் விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட் பிரச்சனை பற்றி கருத்துக் கூறும் போது, சோனியாக காந்தி அந்த பிரச்சனையின் வேர்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதாக கூறியிருந்தார். அத்தகைய மேற்கோளை கையிலெடுத்துக் கொண்ட பேராசிரியர் அமித் பாதுரி, அடிப்படை உண்மையான நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகியவை யாருடைய நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவையெல்லாமே இந்திய அரசால், பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், பெருவணிகக் குழுமங்களுக்கும் இலவசமாக தாரை வார்க்கப்படுகின்றன என்ற செய்தியை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறு கொடுக்கப்படுவதனால் தான் அம்பானிகளும், மற்ற பெருவணிகக் குழுமங்களும் இன்று உலகமட்டத்தில் தங்களுக்குள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் இதயப்பகுதியில் அல்லது போர் நடக்கும் பகுதியில் இல்லாத தான், தென்திசையிலுள்ள சென்னையை நோக்கி வந்திருக்கும் காரணமே, இத்தகைய உண்மைகளுக்கு அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டையும், தோழமையையும் காட்டத்தான் என்று நமக்கு விளக்குகிறார்.
டாடா குழுமத்திற்கு இலவசமான நிலம், தண்ணீர், உள்கட்டுமான வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படுகின்றன என்றார் அவர்.
மாவோயிஸ்ட்கள் இந்த பிரச்சனையை பார்க்கின்ற கண்ணோட்டத்தில் இல்லாமல் நாம் வித்தியாசமான எதார்த்த சூழ்நிலைகளை காணவேண்டாமா என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். இந்த விவாதம் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை பற்றியதோ, அல்லது ஆயுதப் போராட்டத்தை பற்றியதோ அல்ல என்று அவர் தெளிவாக வரையறுக்கிறார். 3 வித்தியாசமான மட்டங்களில், அந்த வட்டாரத்தில் சண்டை நடக்கிறது என்று விவரிக்கிறார். நிலத்திற்கான சண்டை, நீருக்கான சண்டை, கனிமவளங்களை காப்பாற்றுவதற்கான சண்டை என்று அதை வருணிக்கிறார்.
மேற்கண்ட சண்டைகள் மாவோயிஸ்ட் இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் மாத்திரம் நடக்கவில்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராமிலும், ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தை எதிர்த்தும், ரைகரிலும் நடக்கின்றன என்றும் கூறினார். ஒவ்வொரு இடத்திலும் தனிப்பட்ட உழவர்களோ அல்லது விவசாய கூட்டமோ, தங்களது நலனுக்காக பெருவணிக குழுமங்களின் பறித்தெடுத்தலை எதிர்த்து போராடுகிறார்கள். நிலமற்ற விவசாயிகளும், சிறு நிலவுடைமையாளர்களும் அத்தகைய தற்காப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். நிலங்கள் மீதும், காடுகள் மீதும் தங்களது சமூக கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் போராடுகிறார்கள். அந்த மக்களின் சமூக உரிமைகளை அரசு உடைக்க விரும்புகிறது. உடைத்து அவற்றை சில தனியார் பெருவணிக குழுமங்களுக்கு தாரைவார்க்க அரசு முயற்சிக்கிறது. அத்தகைய முயற்சியில் இத்தனை ஆண்டுகளாக தங்களது சமூகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த பாரம்பரிய நிலங்களையும், காடுகளையும் எடுத்துக்கொடுப்பதற்கு, மேற்படி சமூகங்களின் ஒப்புதலை பெறுவதற்கான எந்த முயற்சியையும் அரசு செய்யவில்லை.
இயற்கை மூலாதாரங்களை கையாளும் போது, அவற்றை இன்று வரை பாதுகாத்து வரும் சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல், பறித்து எடுத்தல் சாத்தியமானதா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் நிலத்துடனும், நீருடனும், வனங்களுடனும், மீன்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை பச்சை வேட்டை என்ற பெயரில், அந்த இயற்கை மூலாதாரங்களை விடுத்து பிரிக்க முடியுமா?
நியாங்கிரியில் இருக்கும் ஆதிவாசிகள் இயக்கமும், காந்திய வழியில் அணைகட்டுவதை எதிர்த்துப் போராடும் நர்மதா பச்சாவோ அண்டலன் அமைப்பும், போஸ்கோ எதிர்ப்பு மக்கள் போராட்டமும், வன்முறையற்ற வழிகளில் தானே ஆண்டுபலவாக நடந்து வருகின்றன என்ற கேள்வியை பாதுரி முன்வைக்கிறார். அப்படிப்பட்ட போராட்டங்களை அரசு ஆதரித்ததா என்று கேட்கிறார். அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் செயல்படவில்லையே என்றும் கேள்வி எழுப்புகிறார். கலிங்கா நகரில் இன்று அமைதி வழி மக்கள் போராட்டங்களை அரசு ஒடுக்குவது ஏன் என்ற கேள்வியை கூடுதாலாகக் கேட்கிறார். மாவோயிஸ்ட்களும், வன்முறைப்போராட்டமும், இல்லாத பகுதிகளிலும் அரசு, இயற்கை மூலாதாரங்களை பறித்தெடுக்க மக்கள் போராட்டங்கள் மீது தாக்குதல்களை தொடுக்கிறது. இது மக்கள் மீதான போர். மேற்கண்ட பேராசிரியரின் வாதங்களுக்கு எந்தவொரு அரசுத்தரப்பும் பதில் கொடுக்க முடியாது என்பது மட்டும் புரிகிறது.
Monday, May 31, 2010
ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும்
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகளாக அறியப்பட்டவை. தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டவை. 1987ம் ஆண்டு இலங்கையை ஆண்டு வந்த அதிபர் ஜெயவர்தனாவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கையும், கிழக்கையும் இணைத்த தமிழர் தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதாக கையெழுத்திடப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இறங்கிய பிற்பாடு, விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் முரண்பாடு ஏற்பட்ட பிறகு, இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கிய வரதராஜபெருமாள் தலைமையிலான தமிழர் ஆட்சி என்பது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இருந்தது.
தென்னிலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் என்ற எதார்த்த நிலை அங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி இலங்கையின் ரூபாய் நோட்டிலும், பல்வேறு அரசு பதிவுகளிலும், சிங்களத்துடன் தமிழும் இணைந்தே காணப்படும் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. வடக்கு மாகாணங்களில் தமிழரான டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கு மாகாணங்களில் தமிழர்களான கருணா, பிள்ளையான் மூலமும் தனது ஆட்சி முறையை மகிந்த ராஜபக்சே நடத்தி வந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. ஆனால் தற்போது அத்தகைய குறைந்தபட்ச அங்கீகாரத்திற்கு கூட தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்திற்கும், தமிழர் குடியேற்றத்திற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவத்தில் முழுமையாக சிங்களர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள மாணிக் பண்ணையில் இன்னமும் அவதியுற்றுக் கொண்டிருக்கும் பல பத்தாயிரம் தமிழ் மக்கள், தங்களது சொந்தப் பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களை கண்காணித்து, காவல் நிற்பவர்கள் சிங்கள ராணுவத்தினர். இதுவரை முள்வேலி முகாம்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள், இப்போது குடியேறியிருக்கும் திரிகோணமலை மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் ராணுவத்தாரின் முழுமையான மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் மட்டுமே வாழ முடிகிறது. இதுவே ராணுவ ஆக்ரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் பகுதிகளாகத் தான் இருக்கின்றன.
யாழ்பாண நகரம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. அதனால் அதை ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் பகுதி என்பதாகத் தான் விவரிக்க முடியும். வன்னிப்பகுதிக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக, அரசு செய்திகளை கூறுகிறது. ஆனால் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முழுமையாக ராணுவ முகாம்கள் தான் இருக்கின்றன. இடிந்து போன தங்கள் வீடுகளுக்கு சென்ற தமிழர்களும், பெரிய அளவுக்கு இடிபடாத தங்கள் வீடுகளில் குடியேறியுள்ள தமிழர்களும், அன்றாடம் ராணுவ வீரர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதாவது அப்படி தங்கள் சொந்த பகுதிக்கு மீண்டு சென்றுள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்கு, தினசரி ராணுவ வீரர்கள் உள்ளே வந்து சோதனையிடுவதும் தொடர்கிறது. தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும், மற்ற சாமான்களையும் வாங்குவதற்கு தமிழர்கள், ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு மட்டும் தான் செல்லமுடியும். தமிழர்கள் யாராவது தனியாக ஒரு கடையை திறந்தால், ராணுவத்தினர் வந்து அதை மூடிவிடும் படி கேட்டுக்கொள்கிறார்கள். தமிழர்கள் வைத்திருக்கும் கடைகளில், தமிழர்கள் பொருள் வாங்க வருகை தந்து, தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள் என்றும், அதை தவிர்க்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர்.
4வது வன்னிப்போரின் விளைவாக நடந்த உள்நாட்டு இடம்பெயர்ந்த அகதிகள் பிரச்சனையை நாம் கவலையுடன் அணுகும்போது, அதைவிட முக்கிய பிரச்சனையை யாழ்பாண மக்கள் கூறுகிறார்கள். அதாவது 33 ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கட்டாய இடம்பெயர்தல் செய்து ராணுவம், அகதிகள் முகாம்களில் இன்னமும் வைத்திருக்கின்ற பிரச்சனையை கூறினார்கள். காங்கேசன் துறை, தெலிபல்லி ஆகிய யாழ்ப்பாணப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களைத் தான், 33 ஆண்டுகளுக்கு முன்னால் ராணுவம் கட்டாயமாக இடம்பெயரச் செய்தது. அவர்களது அகதிகள் முகாம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதில் 3,000 தமிழர்கள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் சார்ந்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளான காங்கேசன் துறையிலும், தெலிபல்லியிலும் ராணுவம் தனக்கான உயர் பாதுகாப்பு வளையமாக, வளைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு தான் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக கைட்ஸ் பகுதியில் முகாமில் இருக்கும் வரலாறு.
அவர்களுக்கு தங்கள் தொழில்களை செய்து வாழ்வாதாரம் பெற முடியாததால், ராணுவ ரேசன்களை சார்ந்தே வாழ்கிறார்கள். சிங்கள ராணுவமும் அந்த பகுதியை, உயர் பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்குவதாக தெரியவில்லை. ஏ9 சாலை ஓரங்களில் புத்தர் கோவில்களை ராணுவத்தினர் உருவாக்கியுள்ளார்கள். அரச மரங்களை அங்கங்கே நட்டிருக்கிறார்கள். ராணுவ முகாம்களிலிருந்து சிங்களர்கள் அதிகாலையில், புத்த பெருமானின் சுப்ரபாதத்தை பாட வைக்கிறார்கள். இதுவே அருகிலிருக்கும் தமிழர்களுக்கு தாங்க முடியவில்லை. சைவத் தமிழர்கள் தேவாரம் பாடுவதை எந்நேரமும் பழக்கமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்த பண்பாட்டு ஆக்ரமிப்பு விரக்தியை உருவாக்குகிறது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் சாலை சந்திப்புகளுக்கும், தெருக்களுக்கும் சிங்கள பெயர்களை சூட்டியுள்ளனர். தென்னிலங்கையின் சிங்கள பகுதிகள் போல அவற்றை உருவாக்கி வருகின்றனர். தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் அருகே ஒட்டிச்சூடான் சந்திப்பில் உள்ள, மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு செல்லக்கூடிய சாலை, நெடுங்கேணியிலிருந்து வருகின்ற சாலையில் சந்திக்கிறது. அந்த இடத்திற்கு பிலிமா ஹாண்டியா என்ற சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள். சிலை சந்திப்பு என்பது அதற்கான அர்த்தமாகும். அங்கே புத்தர் சிலையை நிறுவயிருக்கிறார்கள். ஒட்டிச்சூடானிலுள்ள சிவன் கோவில் குளமும், பள்ளிக்கூடமும் இடிக்கப்படாமல் உள்ளன. வன்னியில் இன்னொரு சந்திப்புக்கு கார்ஹாண்டியா என்ற சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. அதற்கு கார் சந்திப்பு என்று பொருள். வன்னிப்போரில் பல கார்களை, ராணுவம் இந்த இடத்தில் எரித்தது. இது புதுக்குடியிருப்பிலிருந்து வருகின்ற சாலை. நந்திக்கடலுக்கு அருகேயுள்ள பாலத்திற்கு அலிஹாண்டியா என்று சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. கிளிநொச்சியில் இருந்த வீரச்சாவடைந்த புலிகளின் கல்லறைகளை, ராணுவம் உடைத்துள்ளது. இது போர் விதிகளை மீறுகின்ற குற்றங்களுக்கு ஒப்பானது. செத்த பிறகும் தமிழர்களை ஓய்வெடுக்க விடாத ஆட்சி என்பதாக இதை மனிதஉரிமை ஆர்வலர்கள் வர்ணிக்கிறார்கள்.
புலிகள் ஆட்சி செய்யும் போது, யாழ்ப்பாணம் அருகேயுள்ள நாகதீபா என்ற பௌத்த கோவிலை, எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தனர். ஆனால் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் முருகன் கோவிலின் புனித தன்மையை, சிங்கள ராணுவமும், ஆட்சியாளர்களும் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். 3 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் சூழலில், 4 லட்சத்திற்கு மேல் சிங்கள பயணிகள் சுற்றுலாவிற்காக ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் வந்துப் போகிறார்கள். அவர்கள் சைவ சித்தாந்த பண்பாட்டுப்படி, நடைபெற்று வந்த நல்லூர் முருகன் கோவிலுக்கு தங்களது மேலாடைகளுடன் சென்று வேடிக்கை பார்க்கிறார்கள். பருத்திதுறை வடை என்ற தட்டை வடைகளை, சிங்கள சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பதில் சிங்கள இடைத்தரகர்கள் பணம் சேர்க்கிறார்கள். அருகேயுள்ள தமிழ் மன்னன் சங்கிலியின் அரண்மனை இடத்தை, நல்லூர் ஓட்டலாக மாற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்கிறது.
யாழ்ப்பாண விடுதிகளில் தமிழர்கள், அரை குறை சிங்களம் பேச பழக்கப்பட்டு விட்டனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அரசு பணிகளுக்காக சிங்களம் படிக்கத்தொடங்கி விட்டனர். இப்படியாக ஒரு சிங்கள ஆக்ரமிப்பு, நிலத்திலும், வாழ்விலும், பண்பாட்டிலும் அதிகரித்து வரும் நிலை தமிழர் பகுதிகளில் நிலவுகிறது. இந்த செய்தியை, டெல்லியிலுள்ள ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லி, புரிய வைத்து, தமிழர் அடையாளங்கள் அழிக்கப்படுவதை நிறுத்த வேண்டிய பொறுப்பு, தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறது.
தென்னிலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் என்ற எதார்த்த நிலை அங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி இலங்கையின் ரூபாய் நோட்டிலும், பல்வேறு அரசு பதிவுகளிலும், சிங்களத்துடன் தமிழும் இணைந்தே காணப்படும் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. வடக்கு மாகாணங்களில் தமிழரான டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கு மாகாணங்களில் தமிழர்களான கருணா, பிள்ளையான் மூலமும் தனது ஆட்சி முறையை மகிந்த ராஜபக்சே நடத்தி வந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. ஆனால் தற்போது அத்தகைய குறைந்தபட்ச அங்கீகாரத்திற்கு கூட தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்திற்கும், தமிழர் குடியேற்றத்திற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவத்தில் முழுமையாக சிங்களர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள மாணிக் பண்ணையில் இன்னமும் அவதியுற்றுக் கொண்டிருக்கும் பல பத்தாயிரம் தமிழ் மக்கள், தங்களது சொந்தப் பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களை கண்காணித்து, காவல் நிற்பவர்கள் சிங்கள ராணுவத்தினர். இதுவரை முள்வேலி முகாம்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள், இப்போது குடியேறியிருக்கும் திரிகோணமலை மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் ராணுவத்தாரின் முழுமையான மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் மட்டுமே வாழ முடிகிறது. இதுவே ராணுவ ஆக்ரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் பகுதிகளாகத் தான் இருக்கின்றன.
யாழ்பாண நகரம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. அதனால் அதை ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் பகுதி என்பதாகத் தான் விவரிக்க முடியும். வன்னிப்பகுதிக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக, அரசு செய்திகளை கூறுகிறது. ஆனால் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முழுமையாக ராணுவ முகாம்கள் தான் இருக்கின்றன. இடிந்து போன தங்கள் வீடுகளுக்கு சென்ற தமிழர்களும், பெரிய அளவுக்கு இடிபடாத தங்கள் வீடுகளில் குடியேறியுள்ள தமிழர்களும், அன்றாடம் ராணுவ வீரர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதாவது அப்படி தங்கள் சொந்த பகுதிக்கு மீண்டு சென்றுள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்கு, தினசரி ராணுவ வீரர்கள் உள்ளே வந்து சோதனையிடுவதும் தொடர்கிறது. தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும், மற்ற சாமான்களையும் வாங்குவதற்கு தமிழர்கள், ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு மட்டும் தான் செல்லமுடியும். தமிழர்கள் யாராவது தனியாக ஒரு கடையை திறந்தால், ராணுவத்தினர் வந்து அதை மூடிவிடும் படி கேட்டுக்கொள்கிறார்கள். தமிழர்கள் வைத்திருக்கும் கடைகளில், தமிழர்கள் பொருள் வாங்க வருகை தந்து, தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள் என்றும், அதை தவிர்க்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர்.
4வது வன்னிப்போரின் விளைவாக நடந்த உள்நாட்டு இடம்பெயர்ந்த அகதிகள் பிரச்சனையை நாம் கவலையுடன் அணுகும்போது, அதைவிட முக்கிய பிரச்சனையை யாழ்பாண மக்கள் கூறுகிறார்கள். அதாவது 33 ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கட்டாய இடம்பெயர்தல் செய்து ராணுவம், அகதிகள் முகாம்களில் இன்னமும் வைத்திருக்கின்ற பிரச்சனையை கூறினார்கள். காங்கேசன் துறை, தெலிபல்லி ஆகிய யாழ்ப்பாணப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களைத் தான், 33 ஆண்டுகளுக்கு முன்னால் ராணுவம் கட்டாயமாக இடம்பெயரச் செய்தது. அவர்களது அகதிகள் முகாம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதில் 3,000 தமிழர்கள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் சார்ந்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளான காங்கேசன் துறையிலும், தெலிபல்லியிலும் ராணுவம் தனக்கான உயர் பாதுகாப்பு வளையமாக, வளைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு தான் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக கைட்ஸ் பகுதியில் முகாமில் இருக்கும் வரலாறு.
அவர்களுக்கு தங்கள் தொழில்களை செய்து வாழ்வாதாரம் பெற முடியாததால், ராணுவ ரேசன்களை சார்ந்தே வாழ்கிறார்கள். சிங்கள ராணுவமும் அந்த பகுதியை, உயர் பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்குவதாக தெரியவில்லை. ஏ9 சாலை ஓரங்களில் புத்தர் கோவில்களை ராணுவத்தினர் உருவாக்கியுள்ளார்கள். அரச மரங்களை அங்கங்கே நட்டிருக்கிறார்கள். ராணுவ முகாம்களிலிருந்து சிங்களர்கள் அதிகாலையில், புத்த பெருமானின் சுப்ரபாதத்தை பாட வைக்கிறார்கள். இதுவே அருகிலிருக்கும் தமிழர்களுக்கு தாங்க முடியவில்லை. சைவத் தமிழர்கள் தேவாரம் பாடுவதை எந்நேரமும் பழக்கமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்த பண்பாட்டு ஆக்ரமிப்பு விரக்தியை உருவாக்குகிறது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் சாலை சந்திப்புகளுக்கும், தெருக்களுக்கும் சிங்கள பெயர்களை சூட்டியுள்ளனர். தென்னிலங்கையின் சிங்கள பகுதிகள் போல அவற்றை உருவாக்கி வருகின்றனர். தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் அருகே ஒட்டிச்சூடான் சந்திப்பில் உள்ள, மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு செல்லக்கூடிய சாலை, நெடுங்கேணியிலிருந்து வருகின்ற சாலையில் சந்திக்கிறது. அந்த இடத்திற்கு பிலிமா ஹாண்டியா என்ற சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள். சிலை சந்திப்பு என்பது அதற்கான அர்த்தமாகும். அங்கே புத்தர் சிலையை நிறுவயிருக்கிறார்கள். ஒட்டிச்சூடானிலுள்ள சிவன் கோவில் குளமும், பள்ளிக்கூடமும் இடிக்கப்படாமல் உள்ளன. வன்னியில் இன்னொரு சந்திப்புக்கு கார்ஹாண்டியா என்ற சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. அதற்கு கார் சந்திப்பு என்று பொருள். வன்னிப்போரில் பல கார்களை, ராணுவம் இந்த இடத்தில் எரித்தது. இது புதுக்குடியிருப்பிலிருந்து வருகின்ற சாலை. நந்திக்கடலுக்கு அருகேயுள்ள பாலத்திற்கு அலிஹாண்டியா என்று சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. கிளிநொச்சியில் இருந்த வீரச்சாவடைந்த புலிகளின் கல்லறைகளை, ராணுவம் உடைத்துள்ளது. இது போர் விதிகளை மீறுகின்ற குற்றங்களுக்கு ஒப்பானது. செத்த பிறகும் தமிழர்களை ஓய்வெடுக்க விடாத ஆட்சி என்பதாக இதை மனிதஉரிமை ஆர்வலர்கள் வர்ணிக்கிறார்கள்.
புலிகள் ஆட்சி செய்யும் போது, யாழ்ப்பாணம் அருகேயுள்ள நாகதீபா என்ற பௌத்த கோவிலை, எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தனர். ஆனால் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் முருகன் கோவிலின் புனித தன்மையை, சிங்கள ராணுவமும், ஆட்சியாளர்களும் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். 3 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் சூழலில், 4 லட்சத்திற்கு மேல் சிங்கள பயணிகள் சுற்றுலாவிற்காக ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் வந்துப் போகிறார்கள். அவர்கள் சைவ சித்தாந்த பண்பாட்டுப்படி, நடைபெற்று வந்த நல்லூர் முருகன் கோவிலுக்கு தங்களது மேலாடைகளுடன் சென்று வேடிக்கை பார்க்கிறார்கள். பருத்திதுறை வடை என்ற தட்டை வடைகளை, சிங்கள சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பதில் சிங்கள இடைத்தரகர்கள் பணம் சேர்க்கிறார்கள். அருகேயுள்ள தமிழ் மன்னன் சங்கிலியின் அரண்மனை இடத்தை, நல்லூர் ஓட்டலாக மாற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்கிறது.
யாழ்ப்பாண விடுதிகளில் தமிழர்கள், அரை குறை சிங்களம் பேச பழக்கப்பட்டு விட்டனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அரசு பணிகளுக்காக சிங்களம் படிக்கத்தொடங்கி விட்டனர். இப்படியாக ஒரு சிங்கள ஆக்ரமிப்பு, நிலத்திலும், வாழ்விலும், பண்பாட்டிலும் அதிகரித்து வரும் நிலை தமிழர் பகுதிகளில் நிலவுகிறது. இந்த செய்தியை, டெல்லியிலுள்ள ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லி, புரிய வைத்து, தமிழர் அடையாளங்கள் அழிக்கப்படுவதை நிறுத்த வேண்டிய பொறுப்பு, தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறது.
Sunday, May 30, 2010
மாவோயிஸ்டுகள் பற்றி கலைஞர் என்ன எழுதப் போகிறார்?
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வடமாநிலங்களில் நடக்கின்ற வன்முறைகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை அனைத்துமே மாவோயிஸ்டுகளால் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படுகின்றன. அநேகமாக அந்த வன்முறைகளில் பலியானவர்கள் அரசப்படைகளாக இருக்கிறார்கள். சிலவற்றில் அரசுக்கு உளவு சொன்ன மக்களும் பலியாகியிருக்கிறார்கள். அவர்களை அப்பாவி மக்கள் என்றும் கூட, சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. அந்த நேரங்களில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு போன்றோர், மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை கொலை செய்ய மாட்டார்கள் என்றும், காவல் துறைக்கு உளவு சொன்னவர்கள் தான் கொலையாகி இருப்பார்கள் என்றும் நியாயம் பேசினார்கள். இப்போது மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. மாவோயிஸ்டுகள் இதற்கு காரணமா? இல்லையா? என்று விவாதம் தொடர்கிறது. இது ஒரு அரசியல் சதி என்று ரயில்வே அமைச்சர் மம்தா கூறுகிறார். மாவோயிஸ்டுகளை மம்தா பாதுகாக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது, மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப் பற்றி பதில் கூறியிருக்கிறார். அதில் அவர்களது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம் என்றும், அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம் என்றும், ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த ரயில் விபத்தில் ஒரு காட்சியை முதல்வர் விளக்குகிறார். இறந்து போன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி அது. இதில் அந்த குழந்தைக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கருத்து வேறுபாடு என்று ஒன்று இல்லை என்பதை முதல்வர் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது இறப்பைப் பற்றி கவலைப்படாமல் தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுவது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார். அந்த இயக்கங்களின் அடிப்படையான பொது உடமைக் கொள்கைகளில் தனக்கு மாறுபாடு இல்லை என்கிறார் முதல்வர். அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில், இந்த முறை சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார். அது பற்றி இரண்டு நாட்களில் விரிவாக எழுதுவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நேற்றைய ஆங்கில நாளேட்டில், ஒரு காங்கிரஸ் தலைவரின் கட்டுரை வந்துள்ளது. சந்தன் யாதவ் என்ற இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். ஜே.என்.யு.வில் நக்சலைட்டுகளுடன் வேலை செய்ததாலும், பிறகு ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களில் இளைஞர் காங்கிரசின் பொறுப்பை ஏற்று, தேசிய பொதுச் செயலாளராக இருந்ததாலும் , பீகார் மாநிலத்தில் தனது சொந்த மாவட்டமான ககாரியாவில் நக்சலைட்டுகளுடன் பழகியதாலும், தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், சந்தன் யாதவ் அப்படி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.
அண்ணாசாலை ஆங்கில ஏட்டில் வெளியான அந்தக் கட்டுரை, மாவோயிஸ்டுகளுடன் கருத்தியல் போரும் கூட நடத்தப்பட வேண்டும் என்பதன் தேவையை வலியுறுத்துகிறது. தான் பயணம் செய்த மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ள பகுதிகள் எல்லாவற்றிலுமே, அடிப்படை உள்கட்டுமான வசதிகள் கூட இல்லாத நிலைமையையும், தேவைகள் கூட கிடைக்காத சூழலையும், சட்ட ஒழுங்கு இல்லா நிலையையும், அந்த மக்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் அக்கறை செலுத்தாததையும் காணமுடிந்தது என்கிறார் அவர். அந்தப் பகுதிகள் அனைத்தையும் ஒரே மாதிரியான சூழல் நிலவுவதை, காங்கிரஸ் தலைவர் சந்தன் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
அதன் விளைவாக அந்த வட்டார இளைஞர்கள் விரக்தியிலும், வாழ்வதற்கு வேறு வழியில்லா சூழ்நிலையிலும், நக்சல்பாரி கருத்தியலுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்கிறார் அவர். ஆயுதபாணியாகி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவும் அரசியல் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் மட்டுமே, தங்களுக்கு எதிரான சூழல் மாறும் என நம்புகிறார்கள். அதுவே தங்களுக்கான கனவுகளை நிறைவு செய்யும் என்று புரிந்து இருக்கிறார்கள். தாங்கள் மனம் மாறி ஆயுதங்களை விடுத்து, முக்கிய நீரோட்டத்திற்கு வந்தாலும், தண்டிக்கப்படுகிறோம் என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இவையெல்லாம் சந்தன் யாதவின் உணர்தல்கள்.
தமிழ் நாட்டில் கூட பண்ணையார்கள் அழித்தொழிப்பை நடத்திய கூலி விவசாயி ராயப்பன், ராஜபாளையம் பகுதியில் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த பிற்பாடு, பண்ணையார்கள் ஏற்பாட்டின் மூலம் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி, மேற்கண்ட பீகார் சூழ்நிலையை புரிய வைக்கிறது. மேலும் எழுதுகின்ற சந்தன்யாதவ், நக்சலைட்டுகள் ஒரு வலுவான ஊழியர்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்கிறார். அதன் உறுப்பினர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்துள்ளனர் என்றும், தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் பற்றி ஒவ்வொரு சாதாரண உறுப்பினரும் தெளிவாக தெரிந்திருக்கிறார்கள் என்றும், சிறப்பான பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சந்தன் எழுதுகிறார். ஆனால் மற்ற அரசியல் கட்சிகளில் லாப நோக்கத்துடன் மட்டுமே ஊழியர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
நக்சலைட்டுகள் மத்தியில் தோழமை இருக்கிறது என்றும் சந்தன் எழுதியுள்ளார். முடிவுகள் எடுக்கும் நிலையில் மட்டும்தான், தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றும் மற்றபடி அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் எழுதியுள்ளார். அவர்களில் பெருவாரியானவர்கள் உயர் படிப்பு படித்தவர்கள். பிரபல கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள். மேட்டுக்குடி குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் கருத்தியல் ரீதியாக மாவோயிஸ்ட்டு சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி எல்லாம் சந்தன் யாதவ் எழுதியுள்ளார்.
சமூக பொருளாதார காரணங்களையோ, சட்ட ஒழுங்கு காரணங்களையோ கூறி மட்டும், நக்சலைட்டுகளை பார்க்கக்கூடாது என்கிறார் கட்டுரையாளர். அவர்களது கருத்தியலை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.
வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், நக்சலைட்டுகள் வளர ஒரு காரணம் என்பது உண்மைதான். ஏற்றத்தாழ்வான சூழலை மாற்றினால் வளர்ச்சிக்கான அணுகுமுறை வெற்றியடையும். ஆனால் ஏற்றத்தாழ்வும் வளர்ச்சி பெற வேண்டிய பகுதிகளும் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக ஏழைகளும், தலித்களும் இன்று கிராமக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியலாம். ஆனால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது என்பது ஏற்றத்தாழ்வான நிலையில்தான் உள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு இந்த ஏற்றத்தாழ்வு தொடரும்.
கடந்த 62 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறியுள்ளன. ஏழைகளுக்கான திட்டங்கள் பலவற்றால், பல ஏழைகள் பயனடைந்துள்ளனர். ஆனாலும் ஏற்றத்தாழ்வுக்கான புதிய அளவு கோல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே அந்த இயக்கத்தை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வது மிகவும் தேவையாக இருக்கிறது. மேற்கண்ட கருத்துகளை எழுதியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுஜீவி சந்தன்யாதவ் முன் வைக்கும் புதிய கோணம், நமக்கு வித்தியாசமான விளக்கத்தை சொல்லிக் கொடுக்குமா?
வன்முறை என்பது இரு புறமும் கூர்மையான ஒரு வாள் என்பதை, அதை முதலில் பயன்படுத்தும் அரசு இயந்திரம் கற்றுக் கொள்ளுமா? நமது முதல்வரின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்களும், மேற்படி உண்மைகளை எதிரொலிக்குமா? இந்த விவாதம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது, மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப் பற்றி பதில் கூறியிருக்கிறார். அதில் அவர்களது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம் என்றும், அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம் என்றும், ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த ரயில் விபத்தில் ஒரு காட்சியை முதல்வர் விளக்குகிறார். இறந்து போன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி அது. இதில் அந்த குழந்தைக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கருத்து வேறுபாடு என்று ஒன்று இல்லை என்பதை முதல்வர் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது இறப்பைப் பற்றி கவலைப்படாமல் தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுவது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார். அந்த இயக்கங்களின் அடிப்படையான பொது உடமைக் கொள்கைகளில் தனக்கு மாறுபாடு இல்லை என்கிறார் முதல்வர். அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில், இந்த முறை சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார். அது பற்றி இரண்டு நாட்களில் விரிவாக எழுதுவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நேற்றைய ஆங்கில நாளேட்டில், ஒரு காங்கிரஸ் தலைவரின் கட்டுரை வந்துள்ளது. சந்தன் யாதவ் என்ற இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். ஜே.என்.யு.வில் நக்சலைட்டுகளுடன் வேலை செய்ததாலும், பிறகு ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களில் இளைஞர் காங்கிரசின் பொறுப்பை ஏற்று, தேசிய பொதுச் செயலாளராக இருந்ததாலும் , பீகார் மாநிலத்தில் தனது சொந்த மாவட்டமான ககாரியாவில் நக்சலைட்டுகளுடன் பழகியதாலும், தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், சந்தன் யாதவ் அப்படி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.
அண்ணாசாலை ஆங்கில ஏட்டில் வெளியான அந்தக் கட்டுரை, மாவோயிஸ்டுகளுடன் கருத்தியல் போரும் கூட நடத்தப்பட வேண்டும் என்பதன் தேவையை வலியுறுத்துகிறது. தான் பயணம் செய்த மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ள பகுதிகள் எல்லாவற்றிலுமே, அடிப்படை உள்கட்டுமான வசதிகள் கூட இல்லாத நிலைமையையும், தேவைகள் கூட கிடைக்காத சூழலையும், சட்ட ஒழுங்கு இல்லா நிலையையும், அந்த மக்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் அக்கறை செலுத்தாததையும் காணமுடிந்தது என்கிறார் அவர். அந்தப் பகுதிகள் அனைத்தையும் ஒரே மாதிரியான சூழல் நிலவுவதை, காங்கிரஸ் தலைவர் சந்தன் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
அதன் விளைவாக அந்த வட்டார இளைஞர்கள் விரக்தியிலும், வாழ்வதற்கு வேறு வழியில்லா சூழ்நிலையிலும், நக்சல்பாரி கருத்தியலுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்கிறார் அவர். ஆயுதபாணியாகி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவும் அரசியல் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் மட்டுமே, தங்களுக்கு எதிரான சூழல் மாறும் என நம்புகிறார்கள். அதுவே தங்களுக்கான கனவுகளை நிறைவு செய்யும் என்று புரிந்து இருக்கிறார்கள். தாங்கள் மனம் மாறி ஆயுதங்களை விடுத்து, முக்கிய நீரோட்டத்திற்கு வந்தாலும், தண்டிக்கப்படுகிறோம் என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இவையெல்லாம் சந்தன் யாதவின் உணர்தல்கள்.
தமிழ் நாட்டில் கூட பண்ணையார்கள் அழித்தொழிப்பை நடத்திய கூலி விவசாயி ராயப்பன், ராஜபாளையம் பகுதியில் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த பிற்பாடு, பண்ணையார்கள் ஏற்பாட்டின் மூலம் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி, மேற்கண்ட பீகார் சூழ்நிலையை புரிய வைக்கிறது. மேலும் எழுதுகின்ற சந்தன்யாதவ், நக்சலைட்டுகள் ஒரு வலுவான ஊழியர்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்கிறார். அதன் உறுப்பினர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்துள்ளனர் என்றும், தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் பற்றி ஒவ்வொரு சாதாரண உறுப்பினரும் தெளிவாக தெரிந்திருக்கிறார்கள் என்றும், சிறப்பான பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சந்தன் எழுதுகிறார். ஆனால் மற்ற அரசியல் கட்சிகளில் லாப நோக்கத்துடன் மட்டுமே ஊழியர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
நக்சலைட்டுகள் மத்தியில் தோழமை இருக்கிறது என்றும் சந்தன் எழுதியுள்ளார். முடிவுகள் எடுக்கும் நிலையில் மட்டும்தான், தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றும் மற்றபடி அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் எழுதியுள்ளார். அவர்களில் பெருவாரியானவர்கள் உயர் படிப்பு படித்தவர்கள். பிரபல கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள். மேட்டுக்குடி குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் கருத்தியல் ரீதியாக மாவோயிஸ்ட்டு சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி எல்லாம் சந்தன் யாதவ் எழுதியுள்ளார்.
சமூக பொருளாதார காரணங்களையோ, சட்ட ஒழுங்கு காரணங்களையோ கூறி மட்டும், நக்சலைட்டுகளை பார்க்கக்கூடாது என்கிறார் கட்டுரையாளர். அவர்களது கருத்தியலை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.
வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், நக்சலைட்டுகள் வளர ஒரு காரணம் என்பது உண்மைதான். ஏற்றத்தாழ்வான சூழலை மாற்றினால் வளர்ச்சிக்கான அணுகுமுறை வெற்றியடையும். ஆனால் ஏற்றத்தாழ்வும் வளர்ச்சி பெற வேண்டிய பகுதிகளும் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக ஏழைகளும், தலித்களும் இன்று கிராமக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியலாம். ஆனால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது என்பது ஏற்றத்தாழ்வான நிலையில்தான் உள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு இந்த ஏற்றத்தாழ்வு தொடரும்.
கடந்த 62 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறியுள்ளன. ஏழைகளுக்கான திட்டங்கள் பலவற்றால், பல ஏழைகள் பயனடைந்துள்ளனர். ஆனாலும் ஏற்றத்தாழ்வுக்கான புதிய அளவு கோல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே அந்த இயக்கத்தை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வது மிகவும் தேவையாக இருக்கிறது. மேற்கண்ட கருத்துகளை எழுதியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுஜீவி சந்தன்யாதவ் முன் வைக்கும் புதிய கோணம், நமக்கு வித்தியாசமான விளக்கத்தை சொல்லிக் கொடுக்குமா?
வன்முறை என்பது இரு புறமும் கூர்மையான ஒரு வாள் என்பதை, அதை முதலில் பயன்படுத்தும் அரசு இயந்திரம் கற்றுக் கொள்ளுமா? நமது முதல்வரின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்களும், மேற்படி உண்மைகளை எதிரொலிக்குமா? இந்த விவாதம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
