Tuesday, December 21, 2010
சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்பவர்கள்
தி.மு.க. அரசு எல்லா மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை கொடுத்தது. அதன்விளைவாக இப்போது சன் தொலைக்காட்சி மூலம் தினசரி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மக்கள் அளவுக்கு அதிகமாகவே தெரிந்து கொள்ளதொடங்கிவிட்டார்கள். அதை திரைப்பட தயாரிப்பாளர் புகழேந்தி தங்கராஜ் வர்ணிக்கும்போது, இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று நக்கலடித்தார்.
ராஜா ஓட, சீ.பி.ஐ. துரத்த....
பைசால் என்ற இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு அதிகார முன்னாள் தலைவர் சீ.பி.ஐ.யால் சம்மன் வழங்கப்பட்டு, டில்லி சீ.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணையை எதிர்கொண்டார். அதேபோல நிரா ராடிஆவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் விசாரணையை எதிர்கொண்டார். ஆ.ராஜாவிற்கு சீ.பி.ஐ. டிசம்பர் இருபதாம் நாள் வந்து விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜா டில்லி செல்லவில்லை. அதேசமோம் ராஜா அன்று காலை அப்போலோ மருத்துவமனியில் சேர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அப்போலோவிளிருந்து அரை மணி நேரத்தில் வெள்யே வந்துவிட்டார். சீ.பி.ஐயிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்து, இன்னொரு நாள் கொடுக்குமாறு கேட்டிருந்தார். அதாவது ஒரு வாரம் நேரம் கேட்டதாக தெரிகிறது. அதற்கும் சீ.பி.ஐ. சம்மதித்துவிட்டது. என்று சீ.பி.ஐ. நாள் கொடுக்கிறார்களோ அன்று தான் போய் விசாரணையை எதிர்கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகே அவர் மீதான நடவடிக்கையை சீ.பி.ஐ. முடிவு செய்யமுடியும். பதிலளி முன்அனுப்பு
தி.மு.க. எதிர்ப்பு கூட்டணியில் சீமான்.
. சீமான் கருணாநிதி எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்பு என்று எதிர்க்கட்சி தொலைகாட்சியில் விளாசி தள்ளிவிட்டார். இலங்கையில் என் தமிழ் சமுதாயம் அழிய ஆட்சியில் இருந்துகொண்டே காரணமாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. வரவும் விடமாட்டோம். என் தொழிலான சினிமாத்துறை அழியவும் காரணமாக இருக்கிறார். சிவாஜி குடும்பம், ராஜ்கபூர் குடும்பம், எல்லாம் சினிமாவில் இல்லையா என்று கருணாநிதி கேட்கிறார். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் சினிமா துறையில் இருந்தன. ஆனால் சினிமா துறையே கருணாநிதி குடும்பத்தில் இருக்கிறதே. ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்பதை நாங்கள் வருகிற தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாடெங்கும் போய் சொல்லுவோம். அ.தி.மு.க.கட்சிதான் இன்று இருப்பதில் பரவாயில்லை என்றும் ஒரு ஏட்டிற்கு நேர்காணல் கொடுத்துள்ளார். ஏற்கனவே காங்கிரசு எதிர்ப்பில் இருந்தவர் இப்போது தி.மு.க. எதிர்ப்பு, என்று வந்துவிட்டார்
ராஜா ---------தயா மோதல்.
ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.
Friday, December 3, 2010
போர்குற்றவாளி மகிந்தாவின் வழியில் கருணாநிதியா?
லண்டன் சென்றார் இலங்கை அதிபர். அதற்கு ஹம்சா என்ற ஒரு மனிதர் காரணமானார். ஹம்சா இப்போது லண்டனில் இலங்கை தூதரக உயர் அதிகாரியாக இருப்பவர். இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று நீங்கள் எண்ணலாம்.சென்னையில் இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரியாக அதாவது ஹை கமிஷனராக இருந்தவர். அதாவது இலங்கையில் தமிழர் மீதான இன அழிப்பு நடந்துவந்த நேரத்தில், சென்னையில் இந்த ஹம்சா ஹை கமிஷனராக இருந்தவர். அப்போது இலங்கை அரசு யாரைகண்டு பயந்தது தெரியுமா? தமிழ்நாட்டு மக்களைகண்டு பயந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கண்டு அந்த சிங்கள அரசு பயந்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று கூறியவர் பொன்சேகா. அவர் கூற்றை மறுக்காமல் அனுமதித்தவர் ராஜபக்ஷே.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1983 காலகட்டம் போல கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்று இலங்கை அரசு எப்போதும் அச்சப்பட்டுவந்தது. அந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒட்டுமொத்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு எதிராக தமிழர்களாக இருப்பதாகவோ, தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவோ எண்ணிக்கொண்டிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்திய அரசு தங்களுக்கு ஆதரவானதுதான் என்ற உணர்வு பெற்ற சிங்கள ஆதிக்கவாதிகள், படிப்படியாக தமிழ்நாட்டு அரசை வழிநடத்தும் கும்பலும் தங்களுக்கு ஆதரவானவர்கள்தான் என்ற புரிதலுக்கு வந்திருந்தனர். ஆனால் அப்போதும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அத்தகைய சூழலில்தான் மகிந்தா தனக்கு நம்பகமான ஒரு நபரை அதாவது ஹம்சாவை சென்னை தூதரக அதிகாரியாக நியமிக்கிறார். அந்த ஹம்சா இப்போது லண்டன் பயணத்தில் மகிந்தாவை கவிழ்த்து விட்டார்.
ஹம்சா என்ற அந்த மனிதர் சென்னையில் இருக்கும்போது இங்குள்ள பல ஊடகவியலாளர்களுக்கு போதிய நிதி கொடுத்து தன்பக்கத்தில் வைத்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது முகத்தை மூடிக்கொள்ளலாம். ஆனால் காலம் அவர்களை சும்மா விடாது. ஏன் என்றால் ஹம்சா இங்கே இருந்து இயங்கிய நேரம் அங்கே வன்னி போர் நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் தமிழீழ தேசிய தலைவர் ஒரு தற்காப்பு போரைத்தான் நடத்திக்கொண்டிருந்தார் என்பது இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனாலும் அங்கே தாக்குதலில் புலிகள் இறங்கியிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய ஒரு தோற்றம் அவர்களுக்கு பல விதத்திலும் உதவிகரமாக இருந்தது.
அதாவது தற்காப்பு போரில் இருந்த புலிகள் அமைப்பை ஒரேயடியாக அழிப்பதை அவர்கள் தங்களது திட்டமாக வைத்திருந்தனர். இன அழிப்பு என்பதை கொள்கையாக கொண்ட மகிந்தா கும்பல் இந்த புலிகள் அழிப்பு சிந்தனையை இந்திய அரசு முன்வைக்கும்போது மனதார அதையும் ஏற்றுக்கொண்டது. அதற்க்கான ஒரு சூழலை அந்த இரு அரசுகளும் மற்ற அரசுகள் சிலவற்றின் உதவியோடு திட்டமிட்டன. அதற்காக விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி உலக அளவில் தனிமைப்படுத்துவதில் இரு அரசுகளும் செயல்பட்டுவந்தன.ஆனால் இன்று உண்மையான பயங்கரவாத அரசு இலங்கை அரசுதான் என்பது நிரூபணமாகி உள்ளது. உண்மையான பயங்கரவாதி மஹிந்த ராஜபக்ஷேதான் என்பது நிரூபணமாகி உள்ளது.
அப்படி நான்காவது ஈழப்போர் நடந்துவந்தபோது இங்கே சென்னையில் ஹம்சாவின் விளையாட்டு தலை தெறிக்க நடந்து வந்தது. அவர் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு சிங்கள எதிர்ப்பும் வந்துவிடக்கூடாதே என்றும், வளர்ந்துவிடக்கூடாதே என்றும் அக்கறையுடன் செயல்பட்டார். அதற்காக சில ஊடகவியலாளர்களுக்கு சம்பளப்பட்டியலில் இடம் ஒதுக்கி இருந்தார்.அதேபோல சில அரசியல்வாதிகளுக்கும் குழப்பம் விளைவிப்பதற்காக அதாவது தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் பிரச்னையை சரியாக புரியவிடாமல செய்து அதன்மூலம் எழுச்சியை தடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார். உதாரணமாக ராமதாஸ் நடத்திய ஒரு அறிவுஜீவிகள் கூட்டத்தில் முருகன் ஐ.ஏ.எஸ். எழுந்து பிழைக்க சென்ற தமிழன் எப்படி நாடு கேட்கலாம் என்று பேசினார். அவருக்கு எதிர்ப்பு வந்தது. அவர் வெளியேறினார். அவரை தயார் செய்து பேசவைத்த ஹம்சா அவருக்கு பின்னால் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போதுதான் இவருக்காக அவர் பேசினார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. இப்படிப்பட்ட ஹம்சாதான் இப்போது லண்டனில் அதிகாரியாக இருக்கிறார்.
அந்த ஹம்சா ராஜபக்சேயிடம் லண்டன் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றும் அவர்கள் நாற்பது குழுவினராக பிரிந்து உள்ளார்கள் என்றும் கூறி தைரியமாக லண்டன் வரசொல்லியதால் ராஜபக்ஷே லண்டன் வந்தார். ஆனால் சிங்கள முற்போக்குவாதிகளான, " ஹூரா" அமைப்பினர் இந்த லண்டன் எதிர்ப்பிர்க்கான ஏற்பாட்டை செய்துவந்தனர். இவர்கள்தான் டப்ளின் அனைத்து நாட்டு தீர்ப்பாயத்திர்க்கும் ஏற்பாடு செய்தவர்கள். இவர்களுக்கு இலங்கையிலிருந்து போர்குற்றங்களை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருந்த சிங்கள ராணுவ வீரர்கள் மூலம் அனுப்பிய அனைத்து விதமான போற்குற்றங்களும் நாலாவது அலைவரிசை என்ற அந்த தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுவே இந்த ராஜபக்சேயின் லண்டன் வருகையின் போது வெளியிடப்பட்ட காரணத்தினால் பெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆங்கிலேயர் மத்தியிலும் ஏற்படுத்தி அதன்மூலம் நூற்றுகணக்கில் வெள்ளைகாரர்களும் ராஜபக்சே தங்கியிருந்த விடுதி முன்பு கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக பொதுமன்னிப்பு சபையை சேர்ந்த வெள்ளைகாரர்களும், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சில எம்.பி.களும், முன்னாள் அமைச்சரான மில்லி பாண்டும் அங்கே அறுபதாயிரம் தமிழர்களுடன் கடும் குளிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பணி விழும்போதே ராஜபக்சேயை தண்டிக்கவேண்டிமுழக்கம் செய்து வந்தனர். புலிகளுக்கு 2009 ஆம் ஆண்டு மே பதினேழாம் தேதிக்கு பிறகு லண்டனிலும், நம் ஊரைபோலவே அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது யார் உணமையான பயங்கரவாதி என்று உலகம் தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறது. ஹம்சாவிடம் உதவி பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் இனியாவது வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்களா?
லண்டனில் போர் குற்றவாளி மாட்டிக்கொண்ட நேரத்தில், ஒரு ஊடகத்திலிருந்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டார்களாம். அவர் சொல்ல மறுத்து விட்டாராம். ஹம்சா இருந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டது தமிழக அரசின் உளவுத்துறை. அதற்கு அனுமதி கொடுத்தது தமிழக முதல்வர். அதன் பிரதிபலனாக ஹம்சா முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தித்ததும், அதற்குப்பின்தான் அவர்களுக்கு மலையகத்தில் நிலம் கிடைத்ததும் தனி கதை.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1983 காலகட்டம் போல கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்று இலங்கை அரசு எப்போதும் அச்சப்பட்டுவந்தது. அந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒட்டுமொத்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு எதிராக தமிழர்களாக இருப்பதாகவோ, தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவோ எண்ணிக்கொண்டிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்திய அரசு தங்களுக்கு ஆதரவானதுதான் என்ற உணர்வு பெற்ற சிங்கள ஆதிக்கவாதிகள், படிப்படியாக தமிழ்நாட்டு அரசை வழிநடத்தும் கும்பலும் தங்களுக்கு ஆதரவானவர்கள்தான் என்ற புரிதலுக்கு வந்திருந்தனர். ஆனால் அப்போதும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அத்தகைய சூழலில்தான் மகிந்தா தனக்கு நம்பகமான ஒரு நபரை அதாவது ஹம்சாவை சென்னை தூதரக அதிகாரியாக நியமிக்கிறார். அந்த ஹம்சா இப்போது லண்டன் பயணத்தில் மகிந்தாவை கவிழ்த்து விட்டார்.
ஹம்சா என்ற அந்த மனிதர் சென்னையில் இருக்கும்போது இங்குள்ள பல ஊடகவியலாளர்களுக்கு போதிய நிதி கொடுத்து தன்பக்கத்தில் வைத்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது முகத்தை மூடிக்கொள்ளலாம். ஆனால் காலம் அவர்களை சும்மா விடாது. ஏன் என்றால் ஹம்சா இங்கே இருந்து இயங்கிய நேரம் அங்கே வன்னி போர் நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் தமிழீழ தேசிய தலைவர் ஒரு தற்காப்பு போரைத்தான் நடத்திக்கொண்டிருந்தார் என்பது இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனாலும் அங்கே தாக்குதலில் புலிகள் இறங்கியிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய ஒரு தோற்றம் அவர்களுக்கு பல விதத்திலும் உதவிகரமாக இருந்தது.
அதாவது தற்காப்பு போரில் இருந்த புலிகள் அமைப்பை ஒரேயடியாக அழிப்பதை அவர்கள் தங்களது திட்டமாக வைத்திருந்தனர். இன அழிப்பு என்பதை கொள்கையாக கொண்ட மகிந்தா கும்பல் இந்த புலிகள் அழிப்பு சிந்தனையை இந்திய அரசு முன்வைக்கும்போது மனதார அதையும் ஏற்றுக்கொண்டது. அதற்க்கான ஒரு சூழலை அந்த இரு அரசுகளும் மற்ற அரசுகள் சிலவற்றின் உதவியோடு திட்டமிட்டன. அதற்காக விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி உலக அளவில் தனிமைப்படுத்துவதில் இரு அரசுகளும் செயல்பட்டுவந்தன.ஆனால் இன்று உண்மையான பயங்கரவாத அரசு இலங்கை அரசுதான் என்பது நிரூபணமாகி உள்ளது. உண்மையான பயங்கரவாதி மஹிந்த ராஜபக்ஷேதான் என்பது நிரூபணமாகி உள்ளது.
அப்படி நான்காவது ஈழப்போர் நடந்துவந்தபோது இங்கே சென்னையில் ஹம்சாவின் விளையாட்டு தலை தெறிக்க நடந்து வந்தது. அவர் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு சிங்கள எதிர்ப்பும் வந்துவிடக்கூடாதே என்றும், வளர்ந்துவிடக்கூடாதே என்றும் அக்கறையுடன் செயல்பட்டார். அதற்காக சில ஊடகவியலாளர்களுக்கு சம்பளப்பட்டியலில் இடம் ஒதுக்கி இருந்தார்.அதேபோல சில அரசியல்வாதிகளுக்கும் குழப்பம் விளைவிப்பதற்காக அதாவது தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் பிரச்னையை சரியாக புரியவிடாமல செய்து அதன்மூலம் எழுச்சியை தடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார். உதாரணமாக ராமதாஸ் நடத்திய ஒரு அறிவுஜீவிகள் கூட்டத்தில் முருகன் ஐ.ஏ.எஸ். எழுந்து பிழைக்க சென்ற தமிழன் எப்படி நாடு கேட்கலாம் என்று பேசினார். அவருக்கு எதிர்ப்பு வந்தது. அவர் வெளியேறினார். அவரை தயார் செய்து பேசவைத்த ஹம்சா அவருக்கு பின்னால் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போதுதான் இவருக்காக அவர் பேசினார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. இப்படிப்பட்ட ஹம்சாதான் இப்போது லண்டனில் அதிகாரியாக இருக்கிறார்.
அந்த ஹம்சா ராஜபக்சேயிடம் லண்டன் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றும் அவர்கள் நாற்பது குழுவினராக பிரிந்து உள்ளார்கள் என்றும் கூறி தைரியமாக லண்டன் வரசொல்லியதால் ராஜபக்ஷே லண்டன் வந்தார். ஆனால் சிங்கள முற்போக்குவாதிகளான, " ஹூரா" அமைப்பினர் இந்த லண்டன் எதிர்ப்பிர்க்கான ஏற்பாட்டை செய்துவந்தனர். இவர்கள்தான் டப்ளின் அனைத்து நாட்டு தீர்ப்பாயத்திர்க்கும் ஏற்பாடு செய்தவர்கள். இவர்களுக்கு இலங்கையிலிருந்து போர்குற்றங்களை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருந்த சிங்கள ராணுவ வீரர்கள் மூலம் அனுப்பிய அனைத்து விதமான போற்குற்றங்களும் நாலாவது அலைவரிசை என்ற அந்த தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுவே இந்த ராஜபக்சேயின் லண்டன் வருகையின் போது வெளியிடப்பட்ட காரணத்தினால் பெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆங்கிலேயர் மத்தியிலும் ஏற்படுத்தி அதன்மூலம் நூற்றுகணக்கில் வெள்ளைகாரர்களும் ராஜபக்சே தங்கியிருந்த விடுதி முன்பு கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக பொதுமன்னிப்பு சபையை சேர்ந்த வெள்ளைகாரர்களும், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சில எம்.பி.களும், முன்னாள் அமைச்சரான மில்லி பாண்டும் அங்கே அறுபதாயிரம் தமிழர்களுடன் கடும் குளிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பணி விழும்போதே ராஜபக்சேயை தண்டிக்கவேண்டிமுழக்கம் செய்து வந்தனர். புலிகளுக்கு 2009 ஆம் ஆண்டு மே பதினேழாம் தேதிக்கு பிறகு லண்டனிலும், நம் ஊரைபோலவே அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது யார் உணமையான பயங்கரவாதி என்று உலகம் தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறது. ஹம்சாவிடம் உதவி பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் இனியாவது வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்களா?
லண்டனில் போர் குற்றவாளி மாட்டிக்கொண்ட நேரத்தில், ஒரு ஊடகத்திலிருந்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டார்களாம். அவர் சொல்ல மறுத்து விட்டாராம். ஹம்சா இருந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டது தமிழக அரசின் உளவுத்துறை. அதற்கு அனுமதி கொடுத்தது தமிழக முதல்வர். அதன் பிரதிபலனாக ஹம்சா முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தித்ததும், அதற்குப்பின்தான் அவர்களுக்கு மலையகத்தில் நிலம் கிடைத்ததும் தனி கதை.
Tuesday, November 2, 2010
மொழிவாரி மாநில நாளில், இந்தியா ஒற்றையாட்சி என்பதா?
தமிழ்நாட்டிலும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் கழித்து, நவம்பர் தொடக்கத்தை, மொழிவாரி மாநில அறிவிப்பை கடைப்பிடிக்கவேண்டும். ஆந்திராவில் அதை கொண்டாட என்னும் போதுதான், தெலுங்கானாகாரர்கள், அதை எதிர்த்து தகராறு செய்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் தகராறு செய்ய ஆள் இல்லாவிட்டாலும், யாரும் இதை கவனமாக கொண்டாடவில்லை. ஆனால் சண்டே இந்தியன் என்ற அந்த இதழ் மட்டும், தனது தமிழ் பதிப்பு மூலம் அதை ஒரு கருத்தரங்காக ஆக்கி நிகழ்ச்சி நடத்தியது. அதில் அறிய பல கருத்துக்கள் வெளிவந்தன. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், வேல்முருகன், வெங்கடேஷ் ஆத்தரையா, தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவர் நாகநாதன், ஆகியோர் உரையாற்றினார்கள்.மொழிவாரி மாநிலங்கள் 1956 இல் அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு அதற்காக நடந்த போராட்டங்கள் அங்கு வரிசைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டை பொறுத்த மட்டில், கேரளாவுடன் இன்று போய்விட்ட முல்லைபெரியாரும், அதையொட்டிய தேவிகுளம், பீர்மேடும், திருவனந்தபுரமும், நெய்யாறும், நெய்யாற்றங்கரையும்,பாலக்காடும், நமமுடன் இணைக்கப்படாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டார் ராதாகிருஷ்ணன் . ஆந்திராவுடன் போய்விட்ட சித்தூரும், காளஹஸ்தியும், குப்பமும் நமக்கு வரவேண்டியவை என்றும் சொல்லிவைத்தார். கர்நாடகாவுடன் இன்று போய்விட்ட பெங்களூருவும், தங்கவயலும், மந்தியாவும், தமிழ்நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்றும் கருத்து சொன்னார். அதனால்தான் அந்த பகுதிகளுடன் இன்றும் தண்ணீர் பிரச்சனை தலைவலியாக இருப்பதாகவும் கூறினார்.
அடுத்து பேசவந்த ச.ம.உ. ரவிக்குமார், அமைதியா தொடங்கி இன்று மத்தியில் ஆள்வது கூட்டணி ஆட்சி என்று கூறுகிறோம், ஆனால் அதை பலரும் தவறாக கூட்டாட்சி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற குண்டை தூக்கி போட்டார்.
அதாவது இந்தியாவில் நடப்பது கூட்டாட்சி அல்ல என்பதை கூறினார். ஏன் என்றால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருப்பதால் அவற்றை ஆளும் மத்திய அரசு கூட்டாட்சி அரசு என்ற தவறான பார்வை நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில கட்சிகள் மத்தியில் ஆளும் கூட்டணி ஆர்சில் அங்கம் வகிக்கும் காரணத்தால், அந்த மத்திய அரசு கூட்டாட்சியாக மாறிவிடாது. அதைதான் அங்கே ரவிக்குமார் கூறினார். ரவி பேசத்தொடங்கும் போதே அன்று அண்ணா வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னார்; ஆனால் இன்று அப்படி சொல்லமுடியாது என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தினார். இன்று பல விசயங்களில் தமிழ்நாடு அல்லது தமிழர்கள் மேலாண்மை செலுத்துவதாக ரவி விளக்கமளித்தார்.அவர் கூறும் சில தமிழர்கள் ஒட்டுமொத்த வடவர் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அடிபணிந்து நடந்து கொண்டு இருப்பதனால், அவர்களது மேலாண்மை என்பது அந்த குறிப்பிட்ட துறையில் அதாவது ஊடகத்துறை போன்ற துறைகளில் மேலோங்கி இருக்கலாம். இது எந்த விதத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற அண்ணா கூற்றை இன்றைக்கு பொருத்தமில்லாமல் செய்யும் என்பதை ரவியிடம்தான் கேட்கவேண்டும்.
கூட்டாட்சியாக கூட்டணி ஆட்சி உருவாகவில்லை என்ற ரவியின் கூற்று, கூட்டாட்சியல்லாத ஒரு அரசு இயந்திரம் அவ்வாறு கூட்டாட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறது. கூட்டணி ஆட்சியிலேயே மாநில கட்சிகள் திருப்தி அடைந்து விடுகின்றன என்று அப்போது ரவி கூறினார். அதாவது தங்கள் சொந்த அல்லது கட்சியின் தேவைகளை பெற்றுக்கொண்டால் போதும் என்றும், மாநிலத்தின் உண்மையான தேவைக்கு கூட்டாட்சி கட்டாயம் தேவை என்றாலும், மாநில கட்சிகள் அது பற்றி கவலை கொள்வதில்லை என்பதையும் அங்கே சுட்டிக்காட்டுவதாக இருந்தது.நாம் உடனடியாக தங்கள் குடும்ப தேவையை நிறைவு செய்யதால் போதும் என்று கட்சி நலனை சுருக்கி புரிந்து கொள்ளகூடாது. மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரிகள், மாநிலங்களுக்கு செலவழிக்கப்படாமல் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுகின்றன என்பது அடுத்த குற்றச்சாட்டாக ரவியிடம் இருந்து கிளம்பியது. என்.டி.ராமாராவ்,லாலு, போன்ற தலைவர்கள் மாநில கட்சியை தொடங்கும்போது, மாநிலங்களின் உரிமைகளை முன்வைத்தே அந்த கட்சிகளை தொடங்கினார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு மத்திய ஆட்சியில் பங்கு கிடைத்தவுடன், மாநில உரிமைகளை விட்டுவிட்டார்கள் என்றும் ரவி குறிப்பிட்டார். சௌகரியமாக தமிழ்நாட்டில் அதுபோன்ற உதாரணங்களை சுட்டி காட்டுவதிலிருந்து தவிர்த்து விட்டார்.ஆனாலும் அனைவராலும் புரிந்துகொள்ளமுடிந்தது.
மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியில்,ஐம்பது விழுக்காட்டையாவது மாநிலங்களின் நலனுக்கு செலவழிக்க வேண்டும் அல்லது மாநிலங்களின் கைகளில் கொடுத்து விடவேண்டும் என்று ரவி தெரிவித்தார். ஆனால் இரண்டு விழுக்காடு கூட மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒன்று புள்ளி ஆறு விழுக்காடுதான் மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்றார். இந்த புள்ளி விவரம் அதிர்ச்சியானதுதான் நேர்முக வரியையும், மறைமுக வரியையும் மத்திய அரசே எடுத்து கொள்கிறது என்றார். கார்கில் போர் நேரத்தில் ஒரு செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு விழுக்காடு செஸ் வரி கார்கிலுக்காக என்று நியாயப்படுத்தப்பட்டது. பிறகு அதையே கல்விக்காக என்று வசூலிக்கப்பட்டது. இதை பா.சிதம்பரம்தான் அமுல்படுத்தினார். அதில் ஒரு பைசா கூட கல்விக்காக இதுவரை மாநிலங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதை எதிர்த்து எந்த மாநில கட்சியும் பேசவும் இல்லை. தமிழக முதல்வர் ஒருமுறை முதல்வர்கள் மாநாட்டில் பேசினார். அதற்குபிறகு அவரும் வலியுறுத்தவில்லை. அந்த செஸ் வரியிலிருந்து களிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்று நாடாளுமன்றத்தில் கேட்டால், சிதம்பரம் பதில் சொல்லவில்லை. மாறாக ல்கல்விக்கு என்று வசூலித்த நாதா பணத்தை வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.இது மத்திய அரசு செய்துவரும் பெரும் மோசடி என்றார் ரவி. இருபது ஆண்டுகளாக சர்வ சப்த அபியான் என்ற அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமுலாகி வருகிறது. மாநிலங்களின் பாட்டியலில் இருந்த கல்வியை இந்திராகாந்தி காலத்தில் போது பட்டியலில் மாற்றினார். இப்போது மெல்ல, மெல்ல, அதுவே மத்திய பட்டியலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது.
அடுத்து பாவம் ரவிக்குமாருக்கு அரசியல் செய்யவேண்டிய கட்டாயம் இருந்ததால், டி.ஜி.பி. யை மாநில முதல்வர் தீர்மானிக்கமுடியாமல், நீதிமன்றம் தலையிடுகிறது என்றார். வழமையை விட்டுவிட்டு எப்படி முதல்வர் வரிசைகிரமத்தை மாற்றலாம் என்ற கேள்வி கேட்க அவரால் முடியவில்லை. தேசிய உளவு நிறுவனம் நிறுவி அதன்மூலம், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை பின்பற்றி, இந்தியாவிலும் மாநிலங்களின் காவல்துறை மற்றும் உளவு துறையின் செயல்பாடுகளை கபளீகரம் செய்துவிட்டார்கள் என்று ரவி புலம்பிவிட்டார். இவ்வாறு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்கள் அதன்விளைவாக சோவியத் யூனியன் உடைந்து போனதை போல, இந்தியாவும் நாளை உடைந்துபோக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார். மொழிவாரி மாநிலங்களுக்கும் உரிமைகள் கொடுப்பதை அதாவது உரிமைகளை பிரித்து கொடுப்பதை செய்யப்போகிறார்களா? அல்லது ஒற்றை ஆட்சி முறைக்கு போவதா என்ற வாய்ப்புதான் உள்ளது என்றார். ஒற்றையாட்சியை கொண்டுவர முயற்ச்சிக்கிறார்கள் என்றார். அப்படியானால் இப்போது ஒற்றையாட்சி இல்லையா என்று நமக்கு அப்போது கேட்கத்தோன்றியது.
அடுத்து வேல்முருகன் ச.ம.உ. பேசினார். அவர் சங்கரலிங்கனார் பட்டினிப்போர் இருந்து கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைத்ததை நினைவு கூர்ந்தார். அவர் வைத்த பதினாறு கோரிக்கைகளில், கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்ப்பதும் போய்விட்டது, அதுபோல பூர்ண மதுவிலக்கும் அமுலுக்கு வரவில்லை என்றார்.1953 இல் நடந்த போட்டி ஸ்ரீராமுலு போராட்டத்தை நினைவுகூர்ந்தார். சும்மா வரவில்லை இந்த மொழிவாரி மாநிலங்களும் என்பதை எல்லோருமே உணர்த்தினார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மாநில றைசுக்கும் உரிமை இல்லை, மத்திய அரசும் உள்ளே போகமுடியாதவாறு பன்னாட்டு மூலாத குழுமங்களுக்குதான் அனுமதி உள்ளது என்று பொரிந்து தள்ளினார். இதுதானா மொழிவாரி மாநிலங்களின் இன்றைய நிலைமை என்ற கேள்வி எழும்பியது. தேசிய ஊரக வேலை வைப்பு திட்டம் சரிதான என்ற கேள்வியை வேல்முருகன் எழுப்பினார். இலவசங்களை சாடினார். மக்களுக்கு தொலைக்காட்சி வாங்க பணம் சம்பாதிக்கும் நிலையை வேலை வாய்ப்பின் மூலம் ஏற்படுத்தவேண்டும் என்றார். வட மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக ஆக்குவதற்கு உரிய காரணங்களாக அந்த வட மாவட்டங்களில் உள்ள வளர்ச்சி இன்மையை சுட்டிக்காட்டினார். சம சீரான வளர்ச்ச்சி இன்றி தமிழகம் கையேந்தி நிற்கிறது என்றார்.
பொருளாதார நிபுணர் அன்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ஆத்தரையா, அடுத்து பேசவந்தார். கடுமையாக பேசுவார் என்று எதிர்பார்த்தால் அவர் பூசிமெழுகி பேசினார். ஆனாலும் சில செய்திகளை நன்றாகவே கூறினார். ஆனால் ரவிகுமார் பேசியதுடன் உடன்பாடு என்று வேறு சொல்லிக்கொண்டார். இந்தியாவில் திட்ட குழுதான் முக்கிய அமைப்பு. அத்தகைய திட்டக்குழுவில் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றார். அதனால் அந்த திட்டகுழுவும், நிதிகுழுவும் அடிப்படையில் ஜனநாயக விரோதமானவை என்று அழுத்தம் திருத்தமாக ஆத்தரேயா கூறினார். மத்தியஅரசு பொதுப்பணி துறைகளில் உள்ள மூலதன பங்குகளை விற்க முற்படும்போது, எந்த மாநிலத்தையும் கேட்பது இல்லை என்றார். மனிதவள மேம்பாடு குறியீடு படி, சிசு மரண விகிதத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட முன்னேறியுள்ளது என்றார். ஆனாலும் கேரலாவைவிடவும், இலங்கையை விடவும் அதிகமான விகிதத்தை கொண்டுள்ளது என்றார். எழுத்தறிவில் முன்னேறியுள்ளது என்றார். போக்குவரத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. நூற்றெட்டு நகராட்சிகள் இங்கு இருக்கின்றன. போக்குவரத்துத்துறை முன்னேறியதற்கு, அது பொதுதுறையாக இருந்ததே காரணம் என்றார். முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைக்கு ஊக்குவிப்பு என்று பொருள்; ஆனால் மக்களுக்கு கொடுக்கும் சலுகைக்கு மானியம் என்று பொருள் என்றார். எதற்கு இந்த இரண்டு பெயர் என வினவினார்.தலித் மக்களுக்கு இன்னமும் தீண்டாமை சுவர்கள் டிக்கப்படவில்லை என்று வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்பினார். திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு ஏதாவது செய்யவிரும்பினால், அவற்றை உரிமைகள் என்ற பெயரிலேயே அன்க்கேகரிப்பது நல்லது என்றார்.
அடுத்து மாநில திட்டக்குழுவின் துணை தலைவர் நாகநாதன் பேசினார்.ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அறுபத்தாறு துறைகளில், முப்பத்துமூன்று துறையில், மற்ற மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் இருந்தார்கள். தமிழ்நாட்டை ஆள தமிழ் அதிகாரிகள் இல்லா நிலையும் இருந்தது உண்டு என்றார். நாகநாதன் அன்றைய மொழிவாரி மாநிலங்களுக்காக போராடிய வரலாற்றை சொல்லும்போது, காந்தி மொழிவாரி மாநிலங்களுக்கு ஆதரவாக இருந்தார் என்றும், ஆனால் நேரு அதற்கு எதிராக இருந்தார் என்றும் ஒரு வரலாற்று உண்மையை போட்டு உடைத்தார். அதுபற்றிய விவரங்களை தனது வெளிவர இருக்கும் புத்தகமான," இந்திய கூட்டாட்சியில் அதிகார குவிப்பா? அதிகார பகிர்வா?" என்பதில் குறிப்பிட்டிருப்பதாக கூறினார். காந்தியார் எவ்வளவு பேர் அஹிம்சையையும், ராட்டிணத்தையும், நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நொந்து பொய் கூறியதை நாகநாதன் குறிப்பிடுகிறார். அதேசமயம் இந்தியாவை ரானுவமயமாக ஆக்கவேண்டும் என விரும்புகிறார்கள் என்று காந்தி கூறியது நேருவின் சிந்தனையைத்தான் என்று கூறினார். உலகிலேயே ராணுவ தளவாடங்களை அதிகமாக வாங்கும் பதினாலு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஸ்டோக்ஹோம் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதையும் எடுத்து சொன்னார்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க யாருடைய போராட்டங்கள் எல்லாம் உதவின என்ற பட்டியலில், 1952 ஆம் ஆண்டிலேயே ஆந்திராவை சேர்ந்த சீதாராமன் இருந்த பட்டனி போரை குறிப்பிட்டார். மொழிவாரி மாநிலங்கள் பற்றி 1948 இல் டிசம்பர் பத்தில் சார் குழு போடப்பட்டது. நேரு அப்போது மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்ற கருத்தை வைத்திருந்தார். காந்தி மறைவுக்கு இரண்டு நாட்கள் முன்பு, மொழிவாரி மாநிலங்கள் பற்றி கூறியுள்ளார். ஆனால் சார் குழு காந்திக்கு துரோகம் இழைத்தது. நேரு,படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் இணைந்தே அப்போது செயல்பட்டனர். 1951 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில், ஆந்திராவின் கொல்லுபட்டி சீதாராமன் பட்டினி போரை தொடங்கினார். அதை முப்பத்தைந்து நாட்களில் முடிக்கவைத்தவர் நேரு. அதன் பிறகு, பலுசு உட்பட சென்னை வந்து, போட்டி ஸ்ரீராமுலு பட்டினி போரை தொடங்கினர். ஐம்பத்தெட்டு நாட்கள் பட்டினி போருக்கு பின், ஸ்ரீராமுலு அதிலேயே மரணமடைந்தார். அதுவே ஆந்திரா எங்கும் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அந்த நிர்பந்தமே மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு ஒன்றை போடும்படி அரசை வற்புறுத்தியது. முதலில் அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களை நிராகரித்தார். மாநிலங்களின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையை படித்தபின்பு அம்நேட்கர் அதில் உடன்பட்டார். அப்போது அவரது கருத்தை என் மாற்றிக்கொண்டார் என சிலர் வினவினர். அதற்கு, ஒரே கருத்தில் எப்போதும் இருப்பது கழுதையின் குணம் என்று அம்பேத்கர் கடுமையாக பதில் சொன்னார். இத்தனை விசயங்களை நாகநாதன் கூறி அன்றை இந்திய சூழலில் எப்படிப்பட்ட நிலையில் இந்த மொழிவாரி மாநிலங்கள் வந்தன என்பதை விளக்கியது அருமையாக இருந்தது.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மண்டலங்களை அமைக்கவேண்டும் என்ற கருத்தும் வந்தது இன்றோ எல்லா மாநிலங்களின் அதிகாரமும் மத்திய அரசில் உள்ள சில அதிகாரிகளின் கைகளில் அடங்கி கிடக்கிறது என்றார் நாகநாதன். இன்றைக்கு மாநிலங்களுக்குள் உள்ள கவுன்சில்கூட இன்று இயங்காத நிலை உள்ளதை சுட்டி காட்டினார். சில ஆலோசகர்களின் ஆட்சிதான் மத்தியில் நடந்து வருகிறதே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறவில்லை என்றார்.நேரு அப்போதே மத்திய அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதில்தான் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை, நாகனாதனது உரை நமக்கு உணர்த்தியது. இப்போது அரசியல்சட்ட விதிகள் நாட்டை ஆளவில்லை. மாறாக உயர் அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. இவ்வாறு நாகநாதன் கூறியது நமக்கு ஒரு சரியான தெளிவை கொடுத்தது. அத்தைகைய உயர் அதிகாரிகளும் பன்னாட்டு மூலதன நிறுவங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையையும் கூறினார்.
1930 ஆம் ஆண்டிலேயே ராஜாஜி முதல்வராக இருந்த போதே, அவரால் அகில இந்திய வானொலியில் உள்ள அதிகாரி மூலம்தான் ஒரு செய்தியை வெளிக்கொண்டுவர வேண்டுகோள் வைக்கவேண்டி இருந்தது. ஆனால் இன்று அப்படிப்பட்ட மத்திய தொலை தொடர்பு இலாக்காவில்கூட, எல்லா கார்பரேட்களும் உள்ளே நுழைந்து விட்டன என்றார். விமான நிலையத்திலும், துறைமுகங்களிலும் கூட மாநில அரசுகள் நுழைய முடியாது; ஆனால் பல பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் அவற்றில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. தொலை தொடர்புகளில், அந்நிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றார். இந்தியாவில் நடப்பது ஒற்றையாட்சி என்பதை அப்போது நாகநாதன் அறிவித்தார். மாநிலங்களின் உரிமைகளை மதிக்காமல் இருந்தால், அதுவே தேசிய இனங்களை அங்கீகரிக்காமல் இருப்பதுதான் எனபதை நாகநாதனின் உரையில் நாம் கண்டுகொண்டோம். அப்படி ஒரு நாடு இருக்குமானால் அது ஒரே நாடு என்ற கூற்றை கூறும் பாசிசம் என்றார் அவர். இந்தியாவில் இப்போது இருப்பது ஒரு ஒற்றையாட்சி என்பதை அவர் புரியவைத்தபோது, ரவி கூறிய ஒற்றையாட்சியை கொண்டுவர முயற்சி எடுக்கிறார்கள் என்ற கூற்று பொய்யாகிவிட்டது என்பது புரிந்தது. இங்கே நடப்பது, இங்கே இருப்பது ஒரு கூட்டாட்சி அரசு கட்டமைப்பு அல்ல என்றும், ஒரு ஒற்றையாட்சி அரசு இயந்திரம்தான் என்றும் வெகு நாட்களாக நாம் கூறிவருவது இன்று நாகநாதன் மூலம் வெளிப்பட்டுள்ளது ஒரு நல்ல பதிவு. .
Friday, October 29, 2010
விடுதலை புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பாயம் தொடர்கிறதே?
சென்னையில் அக்டோபர் கடைசி வார அமர்வு ஒன்று நடந்தது. வழக்கம் போல விக்ரம்ஜித் சென் என்ற நீதியரசரும், உதவி சொலிசிடர் ஜெனெரல் சிங்கும், அவருடன் டில்லியிலிருந்து வந்த பல வழக்கறிஞர்களும், அரசு தரப்பு காவல் அதிகாரிகளும், அதேபோல வழக்கறிஞர் உடையில் வைகோவும், அவரது கட்சியை சேர்ந்த பல வழக்கறிஞர்களும், பழ.நெடுமாறனும், அவரது வழக்கறிஞர் சந்திரசேகரனும், தமிழக மக்கள் உரிமை கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி, அவரது வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பகத்சிங் ,லிங்கன், அருள், கயல், ம..தி.மு.க.பெண் வழக்கறிஞர்கள், கட்சி முக்கியத்தர்கள், மீனவர் சங்கத்தின் மகேஷ், போன்ற பலரும் அணிதிரண்டிருந்தனர். திடீரென சுபிரமணிய சுவாமி, சந்திரலேகாவுடனும், சில வழக்கறிஞர்களுடனும், ஆறு பாதுகாப்பு காவலர்களுடனும், தீர்ப்பாய அறைக்குள் நுழைந்தார். பர, பரப்பை அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால் யாருமே சு.சாமியை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரது பாதுகாவலர்களான அதிரடிப்படை காவல் படையினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த துப்பாக்கிகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. நீதியரசர் வழக்கு விசாரணை செய்யும் அறையினுள் யாரும் ஆயுதங்களுடன் நுழைய கூடாது. ஆனால் இங்கே நுழைந்த அந்த பாதுகாப்பு காவலர்களை சு.சாமி தடுக்காமல் அனுமதித்திருந்தார்.. வந்து அமரும்போது தெளிவான முகத்துடன் இருந்த சு.சாமி சிறிது நேரத்தில், சுற்றி வளைத்து பார்த்துவிட்டு, எங்கு நோக்கினும் அந்த அறைக்குள் தமிழ் உணர்வாளர்கள் இருப்பதை கண்டுவிட்டு,முகமெல்லாம் கறுத்துவிட்டார் .
பத்தரை மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விசாரணைக்கு, நீதியரசர் பத்தே முக்காலுக்கு முன்னால்தான் வந்தார். வந்தவுடன் சு.சாமி பேசத்தொடங்கினார். சட்டவிரோத கூட்ட தடை சட்டம் நான்காவது பிரிவின்படி, யார், யாரை வாதாட அனுமதிக்கவேண்டும் என்ற விதிக்கு புறம்பாக அந்த எல்லையை தாண்டியும் தீர்ப்பாயம் அனுமதிக்க போகிறது என்று ஊடகங்களில் படித்ததாகவும், அது உணமைதான் என்றால் தானும் அதுபற்றி வாதிடப்போவதாகவும், நீதியரசர் வசம் கூறினார். தான் முதலில் ஐந்து சாட்சிகளை பார்க்க போவதாகும் அதற்கு பிறகு பேசலாம் என்றும் கூறிவிட்டார். அப்போது சு.சாமி தனக்கு வேறொரு வேலை இருப்பதாகவும், இப்போது அனுமதித்தால் பேசுவதாகவும் கூற, நீதியரசர் சாட்சிகளை விசாரித்த பிறகு என்று கூற, சு.சாமி வெளியேறி விட்டார். அதன்பிறகு, சாட்சிகளை விசாரிக்க தொடங்கினார் நீதியரசர்.
சாட்சிகள் என்று நீதியரசர் அறிவித்து விசாரித்தது எல்லாமே தமிழக காவல்துறையின் கியூ பிரிவை சேர்ந்த காவல் அதிகாரிகளைத்தான்.முதல் சாட்சி என்பதாக நீதியரசர் அறிவித்தார். சந்திரசேகர் என்ற ஒரு கியூ பிரிவு ஆய்வாளர் சாட்சியாக வந்து நின்றார். செல்வகுமார், பாலகுமார், கலியபெருமாள், ராஜா, மாரனாதன், நந்தகுமார், செல்வம், ஆகியோர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி கூறினார். அப்போது வழக்கறிஞர் வைகோ எழுந்து சட்டவிரோத கூட்ட சட்டத்தின் பத்தாவது பிரிவின் "அ" வின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளாரா என்று வினவினார். அதற்கே அந்த அதிகாரி திணறிப்போனார்.நீதியரசர் அதையே சாட்சியிடம் கேட்க, சாட்சியும் நிலைமை மாறுகிறதோ என்று அமைதியாக வழக்கு அவ்வாறு பதிவு செயப்பட்டது என்று கூறினார்.
அடுத்த சாட்சியாக டி.இளங்கோவன் என்ற முன்னாள் கியூ பிரிவு திருச்சி ஆய்வாளர் வந்து நின்றார். அவர் தான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர எதுவுமில்லை. பிரேம்ராஜ் என்ற ராஜ் என்ற துரை என்ற இலங்கை தமிழரை 2008 ஆம் மூன்றாம் மாதம் மூன்றாம் நாளில் வழக்கில் பதிவு செயது உள்ளே தள்ளியதாக கூறினார். எழுபது அடி நீளத்தில், பதினெட்டு அடி அகலத்தில் ஒரு படகை செய்து இலங்கைக்கு சாமான் எடுத்து செல்ல முயன்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார் என்பது அவரது கையெழுத்திட்ட அறிக்கையில் இருப்பதாக அந்த சாட்சி சாட்சியமளித்தார். அவர்கள் அனைவருக்குமே அந்த அளவு உள்ள படகுதான் தமிழ்நாட்டின் கடற்கரை ஓரங்களில் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. அதாவது அந்த நீளமும், அந்த அகலமும் உள்ள ஒரு படகை கடினப்பட்டு இலங்கையிலிருந்து வந்த விடுதலை புலிகள் இங்கே உர்வாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெரிய வில்லை. அது தெரிந்தாலே அந்த குறிப்பிட்ட வழக்கு இட்டு கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்போது வைகோ தனது வழக்கறிஞர் உடையுடன் எழுந்து, சீமா பஷீர் என்ற தங்கள் கட்சிகாரர் இதேபோல புலி ஆதரவு பேச்சிற்காக கைது செயப்பட்டது கியூ பிரிவில் அந்த நேரத்தில் இருந்த அந்த சாட்சிக்கு தெரியுமா என வினவினார். சட்டவிரோத கூட்ட தடுப்பு சட்டத்தில் அந்த சீமா பஷீர் கைது செயப்பட்ட போது, அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தெரியுமா என்று வைகோ கேட்க, அதையே நீதியரசர் சாட்சியிடம் கேட்க, சாட்சி முழிக்க ஒரு சுவையான காட்சி அங்கே காணமுடிந்தது.
நீதியரசர் வைகோவிடம் எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்று வினவ, அவரும் வெறும் பேச்சிற்காக சட்டவிரோத கூட்ட தடை சட்டம் பயன்படுத்த முடியாது என்றும், அந்த பேச்சிற்கு பின்னால் அதை ஒட்டிய செயல் இருந்தால்தான் அந்த சட்டம் பயன்படுத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியதை வைகோ சுட்டிக்காட்ட, அதை நீதியரசரும் குறித்துக்கொண்டார். அதை ச்ட்டும்போது சீமா பஷீர் 2007 ஆம் ஆண்டு " தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டத்தையும் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அங்கே விவரித்தனர்.
அடுத்ததாக மூன்றாவது சாட்சியாக ராமநாதபுரத்தில் அப்போது கியூ பிரிவு ஆய்வாளராக இருந்த பாஸ்கரன் என்ற நாற்பது வயது காரரை கொண்டுவந்து நிறுத்தினார்கள். 2008 ஆம் ஆண்டு சீமான் ராமேஸ்வரத்தில் பேசிய பேச்சை ஆதாரமாக வைத்து போடப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டினார் அந்த சாட்சி. அப்போது கைது செயப்பட்ட சீமானை, அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது என்பது அந்த சாட்சிக்கு தெரியுமா என்று வைகோ வழக்கறிஞராக நின்று கேட்க, தெரியும் என்றார் அந்த சாட்சி. அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் எப்படி பேச்சிற்கு பிறகு, நடத்தப்பட்ட செயல்தான் வழக்காக போடப்பட முடியும் என்று கூறப்பட்டதை வைகோ எடுத்து சொன்னார். அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட கூட்டத்தில், சீமான் இலங்கையில் தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்ததை பேசினார் என்பதும், அப்போது ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டதும் தெரியுமா என்று சாட்சியிடம் கேட்க வைகோ கூறினார். அதையே நீதியரசரும் கேட்க, அந்த சாட்சி ஒப்புக்கொண்டார். அதை நீதியரசரும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். அதே சீமான் இப்போது அதேபோல இன்னொரு பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில்றையில் இருப்பது சாட்சிக்கு தெரியுமா என்ற கேள்வியை அங்கே கேட்டு அதன்மூலம் தமிழ்நாட்டில் நிலவும் நிலையை நீதியரசருக்கு வைகோ மறைமுகமாக புரிய வைத்தார்.
அடுத்து மொகமது அஸ்லாம் என்ற அடுத்த சாட்சி கூண்டில் ஏறினார். அவர் 2008 முதல் சென்னையில் கியூ பிரிவில் ஆய்வாளராக இருந்தவர். அமீர் அந்தோணி பரந்தாமன் என்ற இலங்கை தமிழரை கைது செய்தது பற்றி அவர் சாட்சி அளித்தார். குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டதையும் கூறினார். அப்போது அது நெடுமாறன் இயக்கத்தை சேர்ந்த பரந்தாமன் என்று எண்ணிக்கொண்டு, நெடுமாரனது வழக்கறிஞர் சந்திரசேகரன், கைது செயப்பட்ட பரந்தாமன் உயர்நீதிமன்றத்தல் விடுதலை செயப்பட்டார் என தெரியுமா என வினவ , சாட்சி முழிக்க பிறகுதான் அந்த சாட்சி குறிப்பிடுவது இலங்கை தமிழர் பரந்தாமனை என்று புரிய முடிந்தது. அதையும் நீதியரசர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாக வைகோ எழுந்து ௨௦௦௯ ஆம் ஆம்டு ஜூலை பதினைதாம் நாள் தன் மீது ஒரு வழக்கு தான் வெளியிட்ட ப்த்தகமான " நான் குற்றம் சாட்டுகிறேன்" என்ற வெளியீட்டு அரங்கில் பேசியதற்காக போடப்பட்டது தெரியுமா என கேட்க அதையும் ஏதோ ஒரு வழக்கு போடப்பட்டது தெரியும் என்பதாக அந்த சாட்சி கூறினார். அந்த வழக்கில் 124 -ஏ பிரிவும் 153 -ஏ பிரிவும் போடப்பட்டதை வைகோ கூற அதையும் நீதியரசர் கவனித்துக்கொண்டார்.
அதன் பிறகு ஐந்தாவது சாட்சியாக அதாவது ஆரசு சாட்சியாக தங்கவேல் என்ற திண்டுக்கல் மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார் அதன் பின் வழக்கறிஞர் ப்கழேந்தி கொடுத்த மனுவின் மீது வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன் பேச தொடங்கினார். அவர் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் தங்களை பவர் ஆப் அட்டோர்நியாக நியமித்திருப்பதை ஆவணங்களுடன் கொடுத்தி பேசினார். சுவிஸ் நாட்டில் இருக்கும் அந்த நபர் பிரஞ்சு மொழியில் கொடுத்து விட்டுள்ள ஆவணங்களையும் நீதியரசரிடம் ஒப்படைத்தார். அதேநேரம் இந்திய அரசு புலிகள் இயக்கம் கலைந்துவிட்டது என கூறியுள்ளதாக கூற, நீங்கள் என்ன சொல்கிறீகள் என நீதியரசர் கேட்க நாங்கள் அரசு சொல்வதை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன், அப்படி சூழலில் எதற்க்காக புலிகள் இயக்கத்தை அரசு தடை செய்யவேண்டும் என மத்திய அரசுதான் விளக்கம் சொல்லவேண்டும் என பொடி வைத்தார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நெடுமாறன் வழக்கறிஞர் சந்திரசேகரனும், வைகோவும் புலிகள் இயக்கம் இன்னமும் இருக்கிறது என கூற, சந்திரசேகரன் இந்தியாவில்தான் இல்லை என கூற, உதவி சாளிசிடர் ஜெனரல் கலந்துவிட்டது என்பதற்கு அர்த்தம் காண அகராதி வேண்டும் என வினவ, நீதியரசர் குறிக்கிட்டு , கலைந்துபோனது என்றால் அழிந்துபோனது என்று பொருள் அல்ல என்று கூற , பிறகுதான் அந்த விவாதம் நிறைவுற்றது. அதற்குள் வழக்கறிஞர் சந்திரசேகரன் எழுந்து இது ஆங்கில வார்த்தையை புரிந்து கொள்வதில் எழுந்துவிட்ட பிரச்சனை என்றார். ஆனாலும் அங்கே தொழில்ரீதியாக வழக்கறிஞர்க நடந்துகொள்ளவேண்டியது முக்கியம் என்றும், அரசியல் கருத்துக்களை அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை எனவும் சிலர் பேசிக்கொண்டார்கள். எப்படியோ அந்த மறவு முடிவுற்றது. நீதியரசர் நவம்பர் முதல் நாள் டில்லியில் மதியம் இரண்டு மணிக்கு இது பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார். அப்படியோ இந்திய அரசு தந்தி இலங்கை சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட அரசியல் தந்திரத்திர்க்காக, புலிகள் மீதான தடை விசயத்தில் எந்த முடிவையும் எடுக்கும் என்றும், அது வரப்போகிற அமெர்க்க அதிபர் ஒபமாவின் உடன்பாட்டிற்கு ஒப்ப செய்யப்படும் என்றும் பலரும் எதிர்பார்கின்றனர். அதற்கு என்ன அர்த்தம்? ஓஹோ. சீனா இலங்கையில் காலூன்ற கூடாது என ஒபமா இந்தியாவை பயன்படுத்தி ஒரு புதிய முடிவை எடுக்க சொல்வாரோ? அதன்படி தீர்ப்பாயம் முடிவி இருக்குமோ?
Subscribe to:
Posts (Atom)
