பிப்ரவரி எட்டாம் நாள் அதாவது மா.பொ.சீ.யின் பிறந்தநாளுக்கு முந்திய நாள் வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய " தமிழ்நாடு தமிழருக்கே" என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் பழ.நெடுமாறன், புகழேந்தி தங்கராஜ், இலக்குவனார் திருவள்ளுவன், பெ.மணியரசன், தியாகு, திரைக்கலைஞர் ராஜேஷ், இயக்குனர் வீ.சேகர், சந்திரேசன், ஆகியோர் உரை நிகழ்த்தினர். மறுநாள் மா.பொ.சீ.க்கு கலைஞர் சிலை திறக்கிறார்.என்னே கரிசணை? மா.பொ.சீ.கூறிய கருத்துக்கள் சரிதானா? இன்னமும் மறையாமல் இருக்கிறதா? அவர் மெட்ராஸ் ராஜதானியில் 1920 முதல் 1952 வரை தமிழகத்தை ஆண்ட பத்து முதல்வர்களில் எட்டு பேர் தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுன்குகாரர்கள் என்று எழுதியுள்ளார். அந்த நேரம் ஆங்கிலேயன் ஆட்சியில் உள்ள மெட்ராஸ் ராஜதானி. அதாவது மொழிவாரி மாநிலங்கள் ஏற்படாத காலம். இப்போது மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு ஆன பிற்பாடு என்ன நிலைமை?
அதேநிலைதான் உள்ளது என்பதே அந்த புதிய சக்திவேலின் நூல் கூறுகிறது. அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் மேடையில் பேசினார்கள். அவர்கள் உண்மையில் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறார்களா? நமக்கு தெரிந்த வரையில் அந்த கூட்டத்திலேயே மணியரசன் குறிப்பிட்டதைப்போல பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மக்களாகத்தான் கருதப்படவேண்டும் என்பது ஒருபுறம் வாதம். அதேபோலத்தான் கன்னடம் பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பண்பாட்டுடன் இரண்டற கலந்துவிட்ட அல்லது அதிகபட்சம் கலந்துவிட்ட இந்த திராவிடர்களை முதல் எதிரிற் போல சித்தரிப்பது சரியா? கலப்பு திருமணத்திலும், தமிழ் மொழிக்கான போராட்டத்திலும், தமிழர்களுக்கான போராட்டத்திலும் மேற்கண்ட மொழிவழி வந்தவர்கள் பலர் பங்குகொண்டு சிறப்பாக கூட பணியாற்றுகிறார்கள். ஆனாலும் ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை கணக்கு பார்க்கிறோம் என்று நம்மவர்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த தமிழ் சிந்தனையாளர்கள் இன்னொரு இனம் எந்த ஒரு கலப்பையும் தமிழ்மக்களுடன் வைத்துக்கொள்ளாமல், பண்பாட்டு, சமூக காரோயங்களில் கலக்காமல், தனது தனித்தன்மையை தக்கவைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும், அதாவது பொருளாதார மட்டத்தில் எல்லா துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே அந்த வட இந்திய வணிக சமூகம் பற்றி இவர்கள் ஏன் பேசவில்லை? அந்த மார்வாடி சமூகம் பற்றி பேச பயமா? மறந்துவிட்டதா? அல்லது கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் வாங்கி போட்ட இலங்கள் இவர்களது இல்லையா? ஒவ்வொரு தமிழ்நாட்டு பொருளாதார துறையிலும் இந்த மார்வாடிகள் நுழைந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது நமது தமிழ் அறிஞர்களுக்கு தெரியாதா? அல்லது மார்வாடியை தொட்டால் டில்லி ஆட்சியாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் என்று பயமா?
மார்வாடியை தொட்டுவிட்டால் டில்லிக்காரர்கல்தானே வருவார்கள்? தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் தொட்டால் டில்லிகாரனுக்கு மகிழ்ச்சிதானே?
வாணி போருக்கு பின் விபத்து போல உலக தமிழினமும், உள்ளூர் தமிழர்களும், டில்லியை எதிரியாக பார்க்காவிட்டாலும், கடும் கோபத்தை டில்லி மீது வைத்துக்கொண்டுள்ளார்கள். அதை திசை திருப்பும் பணியை தெலுங்கர், கன்னடர், மலையாளி எதிர்ப்பு செய்துவிடாதா என்று தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும். இப்போதுதான் டில்லியை தமிழன் சரியாக புரிந்து கொண்டுள்ளான் என்று மகிழ்ச்சியடைந்தால் அதில் மண் விழா வைத்துவிடாதீர்கள் ஐயா.
Wednesday, February 9, 2011
Sunday, February 6, 2011
அம்பலமான புதிய ஊழலில் சிக்குவது?
இந்து ஆங்கில நாளிதழும்,அதன் வணிக இதழான பிசினஸ் லைனும், வெளியிட்டுள்ள புதிய சீ.ஏ.ஜி. அறிக்கை என்ற, கணக்கு கண்காணிப்பு குழுவின் புதிய அறிக்கை பர,பரப்பை ஏற்படுத்தியுள்ளது.அது அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒன்றை பற்றி கூறுகிறது.அப்படி ஒரு ஒப்பந்தத்தை நமது நாட்டின் விண்வெளி துறையின் வணிகபிரிவு போட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. அப்படியானால் அந்த அம்பலமாகியுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி ரூபாய் கொள்ளையைவிடட இன்ரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பது பெரிய கொள்ளை இல்லையா? இதை கமுக்கமாக செய்தவர்கள் யார்? இந்த ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு 2005 . அந்த நேரத்தில் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் தான். இது என்ன ராஜா செய்த ஒப்பந்தத்தைவிட அதிக நட்டத்தை ஏற்படுத்தியது? இவர்கள் மாறி,மாறி இந்திய் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்களா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?
.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?
.
Saturday, February 5, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்
நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சென்னையில் பிப்-4 இல் தனது முதல் அறிமுக கூட்டத்தை தியாகராய நகர் தேவர் திருமண மண்டபத்தில் நடத்தியது. அதன் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.இடையில் திடீரென நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தனது உரையை இணையதள திரை மூலம் நியூ யார்க் நகரிலிருந்து ஆற்றினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து அந்த கூட்டத்தின் ஒரு உரையாளராக கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
முதலில் ஈழப்போரில் உயிர் துறந்த போராளிகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கூட்டம் அஞ்சலி செலுத்தியது. தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற அந்த கூட்ட தலைப்பிற்கு அழகான விளக்கத்தை தந்தார். ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் பின்னடைவுக்கு பின் தமிழர்கள் சோர்ந்துவிடாமல், அரசியல் அரங்கில் ஒரு அனைத்துநாட்டு வடிவம் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி இருப்பதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார். புதிதாக விடுதலை பெற்றுள்ள தெற்கு சூடான் அரசு நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருப்பதை சுட்டி காட்டினார். தாங்கள் தொடங்கி இருக்கும் தோழமை மையம் இந்தியளவில் அந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக அதன் அங்கீகாரத்தை உலகம் தழுவிய அளவில் பெறுவதற்காக பாடுபடும் என்றார். அதன்பிறகு தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளின் தேவையை விளக்கினார்.
அடுத்து உரையாற்ற தமிழக இளைஞர் இயக்க தலைவர் மருத்துவர் எழிலன் தொடங்கினார். அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆணைய துணை தலைவர் பேரா.நாகநாதனின் மைந்தன் என்பதால் கூட்டம் அதிக ஆர்வத்துடன் அவர் எடுத்துவைத்த சஐதிகளை கவனித்தது. எழிலன் சூடான் நாடு எப்படிப்பட்ட சூழலில் சிக்கி இருந்தது என்று விளக்கினார். வட சூடானில் உள்ள அரபிகள் பணம் படைத்தவர்களாக என்னை வளம் மிக்க நிலங்களை ஆள்பவர்களாக
இருஹ்தார்கள் என்றார். அவர்கள் தெற்கு சூடானில் இருந்த பழங்குடி மக்களை குதிரையில் சென்று சாட்டை கொண்டு அடித்து வேலை வாங்கினர் என்றார். அதனால் கொந்தளித்த அந்த மக்கள் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்தவர்களாக இருந்த அந்த தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலைக்காக சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை நடத்தி முப்பத்தைந்து ஆண்டுகள் போராடினர் என்றார்.அவர்களது போராட்டம் எழ தமிழர்களின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் என்றார். அந்த நாடு இப்போது கருத்துகேட்பு வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக ஆகியுள்ளது என்றார். அத்தகைய நாட்டின் அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரும் அங்கீகாரத்தை அனைத்து நாட்டு தளத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், இங்கும் தோழமை மையம் பல்வேறு கொள்கைகள் கொண்ட பல அமைப்புகை சேர்ந்தவர்களால் இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குறைந்த பட்ச போது வேலை திட்டத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றார். அடுத்து பேசிய ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, தெ.சீ.சு.மணி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பி.யு.சீ.எல். என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அகில இந்திய மனித உரிமை அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. அவர் மாவோ கூறிய மேற்கோளான," போர் என்பது ஆயுதம் தொக்கும் அரசியல், அரசியல் என்பது ஆயுதம் தோக்காத போர்" என்று கூறி தொடங்கினார். வன்னியில் நடந்த நான்காவது போர் ஒரு தற்காப்பு போராக இருந்ததை, புலிகள் கிழக்கிலிருந்து திருநப அழைக்கப்பட்டதையும், மன்னர் தாக்குதல்களினால் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் புலிகள் இருந்த வன்னி பகுதிக்குள் புகலிடம் தேடி வந்ததையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கடைச்யாக முள்ளிவாய்க்கால் என்று அவர்கள் இடம் பெர்ந்ததையும் குறிப்பிட்டு தற்காப்பு போரை புலிகளின் தலைமை தெரிந்தே நடத்தியது என்றும் அதனால் ஏற்படும் அனைத்து நாட்டு அரசியல் போராட்டத்தை போராளிகளின் தலைமை புரிந்தே இருந்தது என்றும் வாதிட்டார். அதன் விளைவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். ஆயுதப்போராடத்தையும், அரசியல் போராட்டத்தையும் எதிர் எதிராக காணக்கூடாது என்றார்.
அடுத்து பேசிய வேப்தமிழ்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், ஈழப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்த காலம் தொட்டு இன்று உலக அளவில் புலம் பெயர்ந்த தமிழர் இடையே என்பது நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். அதற்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் இன்று தெற்கு சூடான் கொடுத்திருப்பது போல பெற்றுத்தர நாம் போராடவேண்டும் என்று நாடு கடந்த தனிழீழ அரசு தோழமை மையத்தை தாங்கள் தொடங்கி இருக்கும் காரணம் பற்றி விளக்கினார்.
அடுத்து அந்த தேவர் மண்டபம் ஆச்சர்யத்தில் மூழ்க இணையதளம் மூலம் அங்கிருந்த திரையில் தோன்றி நாடு கடந்த தமிழீழத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் ருத்திரகுமார், ருத்ரா என்ற பெயர் அறிவுப்புடன் பேசினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் பேரா.சரஸ்வதி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதர்க்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது உரையில் தேசிய தலவரின் விருப்பத்திற்கினங்க இந்த அரசியல் களத்தில் தாங்கள் நிற்பதை கூறினார்.தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கம் எப்படி தங்களது அரசு தொடக்க நிகழ்விலேயே கலந்து கொண்டது என்பதை தெரிவித்தார். தமிழக கடற்கரை ஓரம் மீனவர்கள் சிகல கடற்படையால் கொலை செய்யப்படுவதையும், சமீபத்தில் புபவனம் ஜெயகுமார் கழுத்து நேரிக்கப்பட்டநிலையில் சிங்கள கடல் படையால் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டு தங்கள் அரசு சார்பாக கண்டனம் தெரிவித்தார். சிங்கள பௌத்த பேரினவாத அரசு எவ்வாறு தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் மூலம் இந்திய அரசின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று கூறினார். இந்திய நடுவன் அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து அதன்மூலம் தமிழர்களை அழிப்பதற்கு ஒத்த்டுழைப்பு கொடுத்து ஒரு மாய நம்பிக்கையில் இருக்கிறது என்று விளக்கினார். ஆனால் சிங்களம் இந்தியாவை நம்பவில்லை என்றார்.
அடுத்து பேசவந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம்களான தாங்களும் தமிழர்கள்தான் என்றார். இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழர்கள்தான் என்று விளக்கினார். ஈழத்தமிழர் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும், இப்போது வாழ்வதற்கே வழி இன்றி துன்பப்படுவதையும் விளக்கும் போது அழுது விட்டார்.அது கேட்ட மேடையில் அமர்ந்திருந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் அழுதுவிட்டார். மலையாக தனிழர்கலான இந்திய வம்சாவழி தமிழரும், இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும், எழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுடன் இணைந்தே போராடினர் என்றும், சிங்கள சதியால் அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
அடுத்து உரையாற்றிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன் தாங்கள் பெங்களூருவில் மற்றும் கர்நாடக தமிழ்நாடு எல்லையில் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை தெரிவித்தார். ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை அடைவதை விட்டுவிடக்கூடாது என்றும், இந்திய இசை நம்பக்கூடாது என்றும், அரசியல் போராட்டமும் தேவைதான் என்றும், தமிழ்நாடு பிரிந்து செல்லும் போராட்டம் நடத்தபடவேண்டும் என்றும் கூறினார். பேரா.சரஸ்வதி ராசனது அந்த சொந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த தோழமை மையம் ஈழத்தமிழரது அரசு அமைவதற்கான ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறது என்று விளக்கினார். அதை அடுத்து பேசிய பெரியார் தி.க.தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக ராஜன் எழுப்பிய கேவிகளுக்கு விடை பகன்றார். அதாவது அவரவர்களது தனி கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள டத்தை கணக்கில் கொண்டு அதற்குள் நின்று அத்தகைய ஒரு அரசின் அங்கீகாரத்தை உலக ளவில் பெற போராடும் என்றார். ஏற்கனவே இந்திய அரசு கண்ட பாரதம்தான் புலிகளின் கொள்கை என்று பொய் சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். புலிகளின் மீதான தடையாய் ஆய்வு செய்ய போடப்பட்ட தீர்ப்பாயம் முன்பு இந்திய அரசு புலிகளின் தொடர்ச்சியே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்று திசை திருப்பும் வேலையை சேதத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிறைவு உரை நிகழ்த்திய திரைப்பட இயக்குனர் மணிவன்னான், நாடு கடந்த தமிழீழ அரசு அப்ற்றி சந்தேகங்களை கிளப்பியவர்களை நாம் கோபப்படவேண்டாம் என்றும், அத்தகைய சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு கேள்விகளை அனைத்து நாட்டு தளத்தில் கிளப்பிவருவதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரே என்று விளித்து, நீங்கள் அங்கீகாரத்திற்காக பல அரசுகளிடம் பேசுங்கள், அதேசமயம் எங்களுக்கு வழிகாட்டுங்கள் அதே கோரிக்கைகளுக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆயத்தமாக உள்ளோம் என்று முத்தைப்பாக கூறியது பெரும் அளவில் வரவேற்கப்பட்டது.
சென்னை எங்கும் இந்த அறிமுக கூட்டத்திர்க்கான சுவரொட்டிகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கில் துனடரிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. கூட்ட அரங்கு அருகே அகில இந்திய பார்வார்டு பிளாக் அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்தது. அதில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் படமும், முத்துராமலிங்க தேவர் படமும், மூக்கையா தேவர் படமும் போட்டு, நேதாஜி வழியில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முதல் அங்கீகாரம் அளித்த சுதந்திர தெற்கு சூடன் அரசுக்கு ன்றி என்று அறிவித்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
---------- Forwarded message ----------
முதலில் ஈழப்போரில் உயிர் துறந்த போராளிகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கூட்டம் அஞ்சலி செலுத்தியது. தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற அந்த கூட்ட தலைப்பிற்கு அழகான விளக்கத்தை தந்தார். ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் பின்னடைவுக்கு பின் தமிழர்கள் சோர்ந்துவிடாமல், அரசியல் அரங்கில் ஒரு அனைத்துநாட்டு வடிவம் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி இருப்பதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார். புதிதாக விடுதலை பெற்றுள்ள தெற்கு சூடான் அரசு நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருப்பதை சுட்டி காட்டினார். தாங்கள் தொடங்கி இருக்கும் தோழமை மையம் இந்தியளவில் அந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக அதன் அங்கீகாரத்தை உலகம் தழுவிய அளவில் பெறுவதற்காக பாடுபடும் என்றார். அதன்பிறகு தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளின் தேவையை விளக்கினார்.
அடுத்து உரையாற்ற தமிழக இளைஞர் இயக்க தலைவர் மருத்துவர் எழிலன் தொடங்கினார். அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆணைய துணை தலைவர் பேரா.நாகநாதனின் மைந்தன் என்பதால் கூட்டம் அதிக ஆர்வத்துடன் அவர் எடுத்துவைத்த சஐதிகளை கவனித்தது. எழிலன் சூடான் நாடு எப்படிப்பட்ட சூழலில் சிக்கி இருந்தது என்று விளக்கினார். வட சூடானில் உள்ள அரபிகள் பணம் படைத்தவர்களாக என்னை வளம் மிக்க நிலங்களை ஆள்பவர்களாக
இருஹ்தார்கள் என்றார். அவர்கள் தெற்கு சூடானில் இருந்த பழங்குடி மக்களை குதிரையில் சென்று சாட்டை கொண்டு அடித்து வேலை வாங்கினர் என்றார். அதனால் கொந்தளித்த அந்த மக்கள் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்தவர்களாக இருந்த அந்த தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலைக்காக சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை நடத்தி முப்பத்தைந்து ஆண்டுகள் போராடினர் என்றார்.அவர்களது போராட்டம் எழ தமிழர்களின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் என்றார். அந்த நாடு இப்போது கருத்துகேட்பு வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக ஆகியுள்ளது என்றார். அத்தகைய நாட்டின் அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரும் அங்கீகாரத்தை அனைத்து நாட்டு தளத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், இங்கும் தோழமை மையம் பல்வேறு கொள்கைகள் கொண்ட பல அமைப்புகை சேர்ந்தவர்களால் இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குறைந்த பட்ச போது வேலை திட்டத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றார். அடுத்து பேசிய ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, தெ.சீ.சு.மணி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பி.யு.சீ.எல். என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அகில இந்திய மனித உரிமை அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. அவர் மாவோ கூறிய மேற்கோளான," போர் என்பது ஆயுதம் தொக்கும் அரசியல், அரசியல் என்பது ஆயுதம் தோக்காத போர்" என்று கூறி தொடங்கினார். வன்னியில் நடந்த நான்காவது போர் ஒரு தற்காப்பு போராக இருந்ததை, புலிகள் கிழக்கிலிருந்து திருநப அழைக்கப்பட்டதையும், மன்னர் தாக்குதல்களினால் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் புலிகள் இருந்த வன்னி பகுதிக்குள் புகலிடம் தேடி வந்ததையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கடைச்யாக முள்ளிவாய்க்கால் என்று அவர்கள் இடம் பெர்ந்ததையும் குறிப்பிட்டு தற்காப்பு போரை புலிகளின் தலைமை தெரிந்தே நடத்தியது என்றும் அதனால் ஏற்படும் அனைத்து நாட்டு அரசியல் போராட்டத்தை போராளிகளின் தலைமை புரிந்தே இருந்தது என்றும் வாதிட்டார். அதன் விளைவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். ஆயுதப்போராடத்தையும், அரசியல் போராட்டத்தையும் எதிர் எதிராக காணக்கூடாது என்றார்.
அடுத்து பேசிய வேப்தமிழ்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், ஈழப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்த காலம் தொட்டு இன்று உலக அளவில் புலம் பெயர்ந்த தமிழர் இடையே என்பது நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். அதற்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் இன்று தெற்கு சூடான் கொடுத்திருப்பது போல பெற்றுத்தர நாம் போராடவேண்டும் என்று நாடு கடந்த தனிழீழ அரசு தோழமை மையத்தை தாங்கள் தொடங்கி இருக்கும் காரணம் பற்றி விளக்கினார்.
அடுத்து அந்த தேவர் மண்டபம் ஆச்சர்யத்தில் மூழ்க இணையதளம் மூலம் அங்கிருந்த திரையில் தோன்றி நாடு கடந்த தமிழீழத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் ருத்திரகுமார், ருத்ரா என்ற பெயர் அறிவுப்புடன் பேசினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் பேரா.சரஸ்வதி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதர்க்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது உரையில் தேசிய தலவரின் விருப்பத்திற்கினங்க இந்த அரசியல் களத்தில் தாங்கள் நிற்பதை கூறினார்.தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கம் எப்படி தங்களது அரசு தொடக்க நிகழ்விலேயே கலந்து கொண்டது என்பதை தெரிவித்தார். தமிழக கடற்கரை ஓரம் மீனவர்கள் சிகல கடற்படையால் கொலை செய்யப்படுவதையும், சமீபத்தில் புபவனம் ஜெயகுமார் கழுத்து நேரிக்கப்பட்டநிலையில் சிங்கள கடல் படையால் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டு தங்கள் அரசு சார்பாக கண்டனம் தெரிவித்தார். சிங்கள பௌத்த பேரினவாத அரசு எவ்வாறு தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் மூலம் இந்திய அரசின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று கூறினார். இந்திய நடுவன் அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து அதன்மூலம் தமிழர்களை அழிப்பதற்கு ஒத்த்டுழைப்பு கொடுத்து ஒரு மாய நம்பிக்கையில் இருக்கிறது என்று விளக்கினார். ஆனால் சிங்களம் இந்தியாவை நம்பவில்லை என்றார்.
அடுத்து பேசவந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம்களான தாங்களும் தமிழர்கள்தான் என்றார். இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழர்கள்தான் என்று விளக்கினார். ஈழத்தமிழர் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும், இப்போது வாழ்வதற்கே வழி இன்றி துன்பப்படுவதையும் விளக்கும் போது அழுது விட்டார்.அது கேட்ட மேடையில் அமர்ந்திருந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் அழுதுவிட்டார். மலையாக தனிழர்கலான இந்திய வம்சாவழி தமிழரும், இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும், எழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுடன் இணைந்தே போராடினர் என்றும், சிங்கள சதியால் அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
அடுத்து உரையாற்றிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன் தாங்கள் பெங்களூருவில் மற்றும் கர்நாடக தமிழ்நாடு எல்லையில் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை தெரிவித்தார். ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை அடைவதை விட்டுவிடக்கூடாது என்றும், இந்திய இசை நம்பக்கூடாது என்றும், அரசியல் போராட்டமும் தேவைதான் என்றும், தமிழ்நாடு பிரிந்து செல்லும் போராட்டம் நடத்தபடவேண்டும் என்றும் கூறினார். பேரா.சரஸ்வதி ராசனது அந்த சொந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த தோழமை மையம் ஈழத்தமிழரது அரசு அமைவதற்கான ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறது என்று விளக்கினார். அதை அடுத்து பேசிய பெரியார் தி.க.தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக ராஜன் எழுப்பிய கேவிகளுக்கு விடை பகன்றார். அதாவது அவரவர்களது தனி கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள டத்தை கணக்கில் கொண்டு அதற்குள் நின்று அத்தகைய ஒரு அரசின் அங்கீகாரத்தை உலக ளவில் பெற போராடும் என்றார். ஏற்கனவே இந்திய அரசு கண்ட பாரதம்தான் புலிகளின் கொள்கை என்று பொய் சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். புலிகளின் மீதான தடையாய் ஆய்வு செய்ய போடப்பட்ட தீர்ப்பாயம் முன்பு இந்திய அரசு புலிகளின் தொடர்ச்சியே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்று திசை திருப்பும் வேலையை சேதத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிறைவு உரை நிகழ்த்திய திரைப்பட இயக்குனர் மணிவன்னான், நாடு கடந்த தமிழீழ அரசு அப்ற்றி சந்தேகங்களை கிளப்பியவர்களை நாம் கோபப்படவேண்டாம் என்றும், அத்தகைய சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு கேள்விகளை அனைத்து நாட்டு தளத்தில் கிளப்பிவருவதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரே என்று விளித்து, நீங்கள் அங்கீகாரத்திற்காக பல அரசுகளிடம் பேசுங்கள், அதேசமயம் எங்களுக்கு வழிகாட்டுங்கள் அதே கோரிக்கைகளுக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆயத்தமாக உள்ளோம் என்று முத்தைப்பாக கூறியது பெரும் அளவில் வரவேற்கப்பட்டது.
சென்னை எங்கும் இந்த அறிமுக கூட்டத்திர்க்கான சுவரொட்டிகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கில் துனடரிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. கூட்ட அரங்கு அருகே அகில இந்திய பார்வார்டு பிளாக் அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்தது. அதில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் படமும், முத்துராமலிங்க தேவர் படமும், மூக்கையா தேவர் படமும் போட்டு, நேதாஜி வழியில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முதல் அங்கீகாரம் அளித்த சுதந்திர தெற்கு சூடன் அரசுக்கு ன்றி என்று அறிவித்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
---------- Forwarded message ----------
Thursday, February 3, 2011
ராஜா சிக்கினாரா? தலைவர் சிக்கினாரா? கட்சியே சிக்கியதா?
ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் தி.மு.க. தலைவர் திணறினார். பிறகு ராஜாவை கழட்டிவிட எண்ணினார். அதற்கு குடும்பத்திற்குள் ஆதரவு அதிகம் இருந்தது. தயாநிதி தூண்டிவிட, செல்வி, ஸ்டாலின், அழகிரி என்று அணி திரண்டனர். தி.மு.க.வின் நால்வர் அணி என்று அது பெயர் பெற்றது. குடும்பத்தலைவன் யோசித்தார். அதற்குள் ராஜா வீடு சோதனை என்று சீ.பி.ஐ. பாய்ந்தது. ராஜா உண்மையை சொல்லத்தொடங்கினால், குடும்பத்தில் எல்லோரும் சிக்க வேண்டும். சிக்கலை உருவாக்கியது 2007 ஆம் ஆண்டிலேயே கே.டி.பிறதேர்ஸ் என்பது குடும்பத்தலைவரின் கணிப்பு. ராஜாவை காப்பாற்ற படைகளை இறக்கிவிட்டார். அதுவே முதலில் தமிழ் ஊடகங்கள் பேரவை என்ற பெயரில் போடப்பட்ட கூட்டம். அதில் கட்சி சார்பற்ற கட்சி விசுவாச அறிவுஜீவிகள் பேசினர்.தி.மு.க.வில் இரண்டு வகை உறுப்பினர் அட்டை இருப்பது தெரிந்தது. ஒன்று திராவிட முன்னேற்ற கழக கட்சியின் உறுப்பினர் அட்டை. அதில் அண்ணா முதல் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் கையெழுத்து போட்டிருப்பார்கள். இன்னொன்று கையெழுத்து போடாத உறுப்பினர் அட்டை. அது திருக்குவளையூர் முத்துவேலர் கருணாநிதி குடும்ப அட்டை. நீங்கள் நேரடியாக அந்த குடும்பத்தின் உறுப்பினர் என்றால் அப்படி அட்டை தேவை இல்லை. இல்லாவிட்டால் உங்களுக்கு கொடுக்கப்படும்.
அப்படி குடும்ப அட்டையை பெற்றவர்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ராஜா சார்பாக பேச வெளியே வந்தார்கள். அதன் பிறகு குடும்ப தலைவரே கட்சி தலைவர் என்பதால் கட்சியின் முடிவு என்ற பெயரில் ராஜாவை பாதுகாக்க தொடங்கினார் தலைவர்.இது மாறன் சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தங்களது அணியை சேர்ந்த மற்ற மூவரையும் எச்சரித்தனர். அவர்களது அணியின் முக்கிய குதிரையாக இருந்த ஸ்டாலின் திடீரென பல்டி அடித்தார். தயா கேலி செய்தார். அப்பா வழி சென்றால்தான் தனயனுக்கு சிம்மாசனம் என்பது இளையவரின் கருத்து. ராஜாவை ஸ்டாலின் தற்காத்து அறிக்கைகளை வெளியிட்டார். அழகிரி முதலில் மசியவில்லை. முரண்டு பிடித்தார். தந்தை கவலைப்படைல்லை. ராஜாவிடம் வான்க்காமல் ஸ்டாலினும், அழகிரியும் இல்லை என்பது துணை கதை. தயாதான் பிரச்சனை என்று தலைவர் எண்ணினார். காங்கிரஸ் கட்சி தலைமையை தயா நெருங்கி சென்று திட்டமுடிகிறார் என்று தலைவர் சந்தேகப்பட்டார். கணிராஸ்-தி.மு.க. தேர்தல் உடன்பாட்டை தயா முறிக்க பார்க்கிறார் என்ற அளவு சந்தேகம். அதேபோல தயாவின் காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும் குடும்பத்தலைவரின் ஆட்சிக்கு எதிரான கருத்துகளுக்கு அதிக விளம்பரம் செய்துவந்தன. இப்போதும் செய்து வருகின்றன.ராஜாவை விட்டால் எல்லோரையும் அம்பலப்படுத்துவார் என்ற பயம் தலைமைக்கு உண்டு. இத்தனை கோடி ரூபாயை ஒரே மனிதர் கொள்ளை அடிக்கமுடியுமா என்று கான்கிஈஸ் தலைமையையும் வலைக்குள் சிக்க வைக்க முயற்ச்சித்தார். அதற்குள் டில்லிக்காரர்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கு சிக்கலை அதிகப்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற வேண்டும்.கபில்சிபல் அதற்காக பொய்களை கண்டபடி பேசத்தொடங்கினார். சீ.பி.ஐ. வசமாக சிக்கிக்கொண்டது. பெயர் அசிங்கப்படாமல் இருக்க சில சோதனைகளையும், இப்போது கைதுகளையும் செய்து வருகிறது.மீண்டும் தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி ராஜாவை பாதுகாத்து விட்டது. இதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளும், அமைச்சரவை பங்கும் கேட்கலாம் என்பது அதன் யுத்தி. வருகிற பத்தாம் நாளில் சீ.பி.ஐ. முன்வைக்கும் அறிககையை உச்சநீதிமன்றம் எப்படி பார்க்கப்போகிறது என்று பொறுத்திருந்து தேர்தல் கூட்டு பற்றி முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் எண்ணுகிறது. எப்படியோ மாட்டிக்கொண்டது ஆளும் மன்னர் குடும்பம்.ஆமாம். சோனியா மிரட்டினாங்கன்னு ஒரு செய்தி நடமாடுதே. நூறு தொகுதி கேட்டு, என்பதாவது வாங்கனும்னு காங்கிரஸ் உறுதியா இருக்காங்களாமே. எல்லாம் உண்மையா? பா.ம.க. பற்றி சோனியா சந்தர்ப்பவாதின்னு கருனாநிதிட்ட சொன்னதா தி.மு.க. பொதுக்குழுவிலேயே தலைவர் சொல்லியிருக்காரே, அதுக்கு என்ன அர்த்தம்?
அப்படி குடும்ப அட்டையை பெற்றவர்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ராஜா சார்பாக பேச வெளியே வந்தார்கள். அதன் பிறகு குடும்ப தலைவரே கட்சி தலைவர் என்பதால் கட்சியின் முடிவு என்ற பெயரில் ராஜாவை பாதுகாக்க தொடங்கினார் தலைவர்.இது மாறன் சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தங்களது அணியை சேர்ந்த மற்ற மூவரையும் எச்சரித்தனர். அவர்களது அணியின் முக்கிய குதிரையாக இருந்த ஸ்டாலின் திடீரென பல்டி அடித்தார். தயா கேலி செய்தார். அப்பா வழி சென்றால்தான் தனயனுக்கு சிம்மாசனம் என்பது இளையவரின் கருத்து. ராஜாவை ஸ்டாலின் தற்காத்து அறிக்கைகளை வெளியிட்டார். அழகிரி முதலில் மசியவில்லை. முரண்டு பிடித்தார். தந்தை கவலைப்படைல்லை. ராஜாவிடம் வான்க்காமல் ஸ்டாலினும், அழகிரியும் இல்லை என்பது துணை கதை. தயாதான் பிரச்சனை என்று தலைவர் எண்ணினார். காங்கிரஸ் கட்சி தலைமையை தயா நெருங்கி சென்று திட்டமுடிகிறார் என்று தலைவர் சந்தேகப்பட்டார். கணிராஸ்-தி.மு.க. தேர்தல் உடன்பாட்டை தயா முறிக்க பார்க்கிறார் என்ற அளவு சந்தேகம். அதேபோல தயாவின் காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும் குடும்பத்தலைவரின் ஆட்சிக்கு எதிரான கருத்துகளுக்கு அதிக விளம்பரம் செய்துவந்தன. இப்போதும் செய்து வருகின்றன.ராஜாவை விட்டால் எல்லோரையும் அம்பலப்படுத்துவார் என்ற பயம் தலைமைக்கு உண்டு. இத்தனை கோடி ரூபாயை ஒரே மனிதர் கொள்ளை அடிக்கமுடியுமா என்று கான்கிஈஸ் தலைமையையும் வலைக்குள் சிக்க வைக்க முயற்ச்சித்தார். அதற்குள் டில்லிக்காரர்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கு சிக்கலை அதிகப்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற வேண்டும்.கபில்சிபல் அதற்காக பொய்களை கண்டபடி பேசத்தொடங்கினார். சீ.பி.ஐ. வசமாக சிக்கிக்கொண்டது. பெயர் அசிங்கப்படாமல் இருக்க சில சோதனைகளையும், இப்போது கைதுகளையும் செய்து வருகிறது.மீண்டும் தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி ராஜாவை பாதுகாத்து விட்டது. இதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளும், அமைச்சரவை பங்கும் கேட்கலாம் என்பது அதன் யுத்தி. வருகிற பத்தாம் நாளில் சீ.பி.ஐ. முன்வைக்கும் அறிககையை உச்சநீதிமன்றம் எப்படி பார்க்கப்போகிறது என்று பொறுத்திருந்து தேர்தல் கூட்டு பற்றி முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் எண்ணுகிறது. எப்படியோ மாட்டிக்கொண்டது ஆளும் மன்னர் குடும்பம்.ஆமாம். சோனியா மிரட்டினாங்கன்னு ஒரு செய்தி நடமாடுதே. நூறு தொகுதி கேட்டு, என்பதாவது வாங்கனும்னு காங்கிரஸ் உறுதியா இருக்காங்களாமே. எல்லாம் உண்மையா? பா.ம.க. பற்றி சோனியா சந்தர்ப்பவாதின்னு கருனாநிதிட்ட சொன்னதா தி.மு.க. பொதுக்குழுவிலேயே தலைவர் சொல்லியிருக்காரே, அதுக்கு என்ன அர்த்தம்?
Monday, January 31, 2011
கருணாநிதி ஆட்சி காவல்துறை ஆட்சியாக மாறுவ்து ஏன்?
கருணாநிதி ஆட்சி என்றாலே காவல்துறை தனது அத்துமீறல்களை அதிகமாக செய்துவரும் எனபது வழமையான ஒன்றாக ஏன் ஆனது? கருணாநிதி அந்த ளவுக்கு மக்கள் மீது கோபம் கொண்டவரா? இல்லையே? காவல்துறை மீது நம்பிக்கை கொண்டவரா? அதுவும் இல்லையே? அப்படியானால் இது ஒரு பொய்யான புனைவா? அப்படியும் சொல்லிவிடமுடியவில்லையே? கருணாநிதி ஆட்சியில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாக காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி மோதல் சாவுகள் என்று அழைக்கப்படும் போலி மோதல் சாவுகள் நடந்துள்ளன. அப்படியானால் கருணாநிதி ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்பது உண்மைதான். ஆனால் காவல்துறையின் இதயம் கீடுவிட்டது என்று துறவை மொழிந்ததும் கருணாநிதிதான். ஏன் இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது?
தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். அவர்கள்தான் காவல்துறையை தலைமை தாங்கவேண்டி உள்ளது. அல்லது வழிகாட்டவேண்டி உள்ளது. தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வந்த உடன் வெவேறு மாதிரி நடந்துகொள்வது ஏன்? அதாவது சிலர் காவல்துறையை சார்ந்து ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறை கையில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இப்படி வேறுபட்ட நிலைகளை அணுகுமுறைகளாக வெவேறு ஆட்சியாளர்கள் வைத்திருப்பது எதனால்? இதில் கருணாநிதி எத்தகைய முறையை கையாள்கிறார்? எம்.ஜி.ஆர். எந்த முறையை கையாண்டார்? ஜெயலலிதா எந்த முறையை கையாண்டார்? கையாளும் முறைகள் சம்பந்தப்பட்ட மனிதர்களால் தேர்ந்தேடுக்கப்படுகிறதா? அல்லது அவர்களது நிலைமைக்கு ஏற்ப அவர்கள்மீது திணிக்கப்படுகிறதா?
நிர்வாகத்தை நடத்துவதற்கு அவர்கள் அதாவது ஆட்சியில் முதல்வர்களாக வீற்றிருக்கும் நபர் தனது தகுதிக்கு அல்லது தனது சிந்தனைக்கு ஒப்ப தேர்ந்தெடுக்கும் அணுகுமுறைகளில் இந்த காவல்துறையை கையாள்வது என்பதும் வருகிறது. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களது ஏகோபித்த ஆதரவுடன் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர் தனது வேருப்பத்திர்க்கு ஒப்ப அல்லது புரிதலுக்கு ஒப்ப காவல்துறையை கையாண்டார். அதாவது இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றிக்கூட கவலையின்றி எழப்போராளிகளுக்கு தான் நினைத்த மாததிரத்தில் காவல்துறையில் உள்ள துப்பாக்கி ம்ற்றும் தோட்டாக்களை எடுத்து கொடுக்க அவரால் உத்திரவிட முடிந்தது. ஜெயலலிதா காவல்துறையின் அதிகாரிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது உத்திரவுகளை அமுல்படுத்த முடிந்தது.ஆனால் கருணாநிதியோ காவல்துறை அதிகாரிகள் சொல்வதை கேட்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார். இது ஏன் என்பதே இப்போதுள்ள கேள்வி.
எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்தே கருணாநிதி தனது வாக்கு வங்கியை வெகுவாக இழந்து விட்டார். அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தனது கட்சியை பல கட்சிகளுடன் கூட்டணியாக இனத்து மாட்டுமே அவரால் தேர்தல்களில் போட்டிபோட முடிகிறது. காலப்போக்கில் இந்த தந்திரத்தையும் எம்.ஜி.ஆர ,ஜெயலலிதா இருவரும் பின்படர் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.விற்கும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.விற்கும் வாக்கு வங்கியில் ஒரு பெரும் வேறுபாடு இருந்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் சுருங்கிவரும் வாக்கு வங்கியை கொண்ட கருணாநிதி அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கூட்டனஈ மூலமோ, எதிர் தரப்பு வாக்குகள் பிரிந்ததை பயன்படுத்தியோ ஆட்சிக்கு வந்துவிடுகிறார். ஜானகியும், ஜெயலலிதாவும் வாக்குகளை பிரித்துக்கொண்டபோது ஒருமுறை இது நடந்தது. பிறகு விஜயகாந்த், கிருஷ்ணசாமி, கார்த்திக் என்று சிலராலும் அவ்வப்போது இது நடந்தது. எப்படி இருந்தாலும் குறைவான வாக்கு வங்கிகளையே கொண்ட கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடன் ப்ரோவித பயத்திலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார். அந்த இடத்தில்தான் அவரது காவல்துறை பற்றிய அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது.
பலவீனமான வாக்கு வங்கி கொண்ட கருணாநிதி காவல்துறையை முழுமையாக சார்ந்து நிற்க வேண்டி இருக்கிறது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அதனால் ஒவ்வொரு செயல்களை பற்றியும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, அதை நம்பாமல் மேலும் நான்கு பேரிடம் கேட்கிறார் என்று ஒரு முறை ஒரு உளவுத்துறை உயர் அதிகாரி சொன்னது நினைவுக்கு வருகிறது.இந்த பலவீனத்தை பயன்படுத்தி அவருக்கு ஏற்றார்போல பொய்கூறும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏக தடபுடல்தான். இத்தகைய சூழலில்தான் கருணாநிதி காவல்துறை அதிகாரிகளை முழுமையாக சார்ந்து இருக்கிறார். இது தவிர தன்னுடைய வாக்கு வங்கி பலவீனத்தால் அவர் எப்போதுமே தனது கட்சிக்காரகளை சார்ந்து நிற்கிறார். கட்சிக்காரர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தங்களது தர்பாரை நடத்த தவறுவது இல்லை. இதனால் கட்சிக்காரகளின் ஊதுகுழல்களாக காவல் நிலையங்கள் ஆகிவிடுகின்றன.
அதனாலேயே அப்பாவி மக்களுக்கு எதிராக காவல் நிலையங்கள் நடக்கின்றன. காவல் அத்துமீறல்கள் அதிகமாகின்றன. காவல் சித்திரவதைகள் கூடுகின்றன. காவல் நிலைய சாவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. உச்சநீதிமன்ற வழிகாட்டல்களையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைகளையும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒட்டி வைத்ததாலும் அதை எந்த காவல் அதிகாரியும் பின்பற்றுவது இல்லை. கட்சிக்காரர்கள் கூறுவதை ஒட்டியே புகார்களும், கைதுகளும் செய்யப்படுகின்றன. அப்பாவிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
கட்சிக்காரகளின் ஆதிக்கம் போதாது என்று மூன்று ஆண்டுகளாக முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் ஆதிக்கமும் அதிகமாகி வருகிறது.ஒரு முதலமைச்சருக்கு பதில் பத்து முதலமைச்சர்கள் இங்கே தலையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறார்கள். முதல்வர் குடும்ப ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகத்தொடங்கியது. ஆட்சியில் உள்ளவர்களிடம் நற்பெயர் பெற்றால்தான் தான் விரும்பிய இடத்தில் பணி செய்ய முடியும் என்று காவல் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். அதனால் முதல்வர் குடும்பமே அனைத்து காவல் நிலையங்களிலும் கோலோச்சுகிறது. சட்டமும், ஒழுங்கும் அதனால்தான் முழுமையாக கெடுகிறது. அதன்விளைவாக காவல்துறை அதிகாரிகள் தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலைக்குய் சென்று விடுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஒரே மொழியான வன்முறையையே கைதிகளிடம் காட்டுகிறார்கள் அதுவே காவல்நிலைய மரணங்களை அதிகரிக்கவைக்கிறது.
இது போதாதென்று சமீப காலமாக அதிகரித்துவருவது போலி மோதல் சாவுகள்.
துப்பாக்கி சண்டை நடந்ததாக படம் காட்டி காவல்துறை அதிகாரிகள் தாங்கள் விரும்புகிரவர்களைஎல்லாம் தீர்த்து கட்டிவிடுகிறார்கள். அதிலும் முதல்வர் குடும்பத்திலிருந்து சில நேரங்களில் பட்டியல் கொடுக்கப்படுகிறது. மோதல் சாவுகள் எப்ப்தேல்லாம் போலி மோதல் சாவுகள் என்று சந்தேகிக்கப்படுகிறதோ, அல்லது நிரூபனமாகிறதோ, அல்லது நம்பப்படுகிறதோ அப்பதேல்லாம் அவை சட்டவிரோத காவல் சாவுகளாக ஆகிவிடுகின்றன. அதாவது காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதை சட்டப்படி பதிவு செய்யாமலேயே போலி ம ஓதல் சாவுகளில் அவர்களை கொன்றுவிடுகிறார்கள். அதனால் அவையும் காவலில் கொள்ளப்பட்டதாகவே எடுக்கப்படவேண்டும். அவை சட்டப்படி காவலை பதிவு செய்யாத நபர்களை காவலில் கொள்ளும் முறை. அதிவும் தமிழ்நாட்டில் அதிகப்பட்டுவிட்டது.
ஆகவே நிர்வாகத்தில் அமர்ந்திருப்பவரின் அரசியல் உறுதி சம்பந்தப்பட்டதாக இந்த காவல்துறையின் அத்துமீறல்கள் புரியப்படவேண்டும். அதானால் பலவீனமான வாக்கு வங்கிகளை கொண்ட ஒரு நபர் ஏதோ ஒரு முறையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரது போக்கு காவல்துறையை சார்ந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதனாலேயே கருணாநிதியின் ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்று வர்ணிக்கப்படுகிறது. சென்ற முறைக்கு முன்முறை கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது இதையே தேசிய மனித உரிமை ஆணையத்தின் அன்றைய தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கருணாநிதி ஆட்சி பாற்றி குறிப்பிட்டார்.
தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். அவர்கள்தான் காவல்துறையை தலைமை தாங்கவேண்டி உள்ளது. அல்லது வழிகாட்டவேண்டி உள்ளது. தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வந்த உடன் வெவேறு மாதிரி நடந்துகொள்வது ஏன்? அதாவது சிலர் காவல்துறையை சார்ந்து ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறை கையில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இப்படி வேறுபட்ட நிலைகளை அணுகுமுறைகளாக வெவேறு ஆட்சியாளர்கள் வைத்திருப்பது எதனால்? இதில் கருணாநிதி எத்தகைய முறையை கையாள்கிறார்? எம்.ஜி.ஆர். எந்த முறையை கையாண்டார்? ஜெயலலிதா எந்த முறையை கையாண்டார்? கையாளும் முறைகள் சம்பந்தப்பட்ட மனிதர்களால் தேர்ந்தேடுக்கப்படுகிறதா? அல்லது அவர்களது நிலைமைக்கு ஏற்ப அவர்கள்மீது திணிக்கப்படுகிறதா?
நிர்வாகத்தை நடத்துவதற்கு அவர்கள் அதாவது ஆட்சியில் முதல்வர்களாக வீற்றிருக்கும் நபர் தனது தகுதிக்கு அல்லது தனது சிந்தனைக்கு ஒப்ப தேர்ந்தெடுக்கும் அணுகுமுறைகளில் இந்த காவல்துறையை கையாள்வது என்பதும் வருகிறது. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களது ஏகோபித்த ஆதரவுடன் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர் தனது வேருப்பத்திர்க்கு ஒப்ப அல்லது புரிதலுக்கு ஒப்ப காவல்துறையை கையாண்டார். அதாவது இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றிக்கூட கவலையின்றி எழப்போராளிகளுக்கு தான் நினைத்த மாததிரத்தில் காவல்துறையில் உள்ள துப்பாக்கி ம்ற்றும் தோட்டாக்களை எடுத்து கொடுக்க அவரால் உத்திரவிட முடிந்தது. ஜெயலலிதா காவல்துறையின் அதிகாரிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது உத்திரவுகளை அமுல்படுத்த முடிந்தது.ஆனால் கருணாநிதியோ காவல்துறை அதிகாரிகள் சொல்வதை கேட்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார். இது ஏன் என்பதே இப்போதுள்ள கேள்வி.
எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்தே கருணாநிதி தனது வாக்கு வங்கியை வெகுவாக இழந்து விட்டார். அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தனது கட்சியை பல கட்சிகளுடன் கூட்டணியாக இனத்து மாட்டுமே அவரால் தேர்தல்களில் போட்டிபோட முடிகிறது. காலப்போக்கில் இந்த தந்திரத்தையும் எம்.ஜி.ஆர ,ஜெயலலிதா இருவரும் பின்படர் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.விற்கும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.விற்கும் வாக்கு வங்கியில் ஒரு பெரும் வேறுபாடு இருந்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் சுருங்கிவரும் வாக்கு வங்கியை கொண்ட கருணாநிதி அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கூட்டனஈ மூலமோ, எதிர் தரப்பு வாக்குகள் பிரிந்ததை பயன்படுத்தியோ ஆட்சிக்கு வந்துவிடுகிறார். ஜானகியும், ஜெயலலிதாவும் வாக்குகளை பிரித்துக்கொண்டபோது ஒருமுறை இது நடந்தது. பிறகு விஜயகாந்த், கிருஷ்ணசாமி, கார்த்திக் என்று சிலராலும் அவ்வப்போது இது நடந்தது. எப்படி இருந்தாலும் குறைவான வாக்கு வங்கிகளையே கொண்ட கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடன் ப்ரோவித பயத்திலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார். அந்த இடத்தில்தான் அவரது காவல்துறை பற்றிய அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது.
பலவீனமான வாக்கு வங்கி கொண்ட கருணாநிதி காவல்துறையை முழுமையாக சார்ந்து நிற்க வேண்டி இருக்கிறது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அதனால் ஒவ்வொரு செயல்களை பற்றியும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, அதை நம்பாமல் மேலும் நான்கு பேரிடம் கேட்கிறார் என்று ஒரு முறை ஒரு உளவுத்துறை உயர் அதிகாரி சொன்னது நினைவுக்கு வருகிறது.இந்த பலவீனத்தை பயன்படுத்தி அவருக்கு ஏற்றார்போல பொய்கூறும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏக தடபுடல்தான். இத்தகைய சூழலில்தான் கருணாநிதி காவல்துறை அதிகாரிகளை முழுமையாக சார்ந்து இருக்கிறார். இது தவிர தன்னுடைய வாக்கு வங்கி பலவீனத்தால் அவர் எப்போதுமே தனது கட்சிக்காரகளை சார்ந்து நிற்கிறார். கட்சிக்காரர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தங்களது தர்பாரை நடத்த தவறுவது இல்லை. இதனால் கட்சிக்காரகளின் ஊதுகுழல்களாக காவல் நிலையங்கள் ஆகிவிடுகின்றன.
அதனாலேயே அப்பாவி மக்களுக்கு எதிராக காவல் நிலையங்கள் நடக்கின்றன. காவல் அத்துமீறல்கள் அதிகமாகின்றன. காவல் சித்திரவதைகள் கூடுகின்றன. காவல் நிலைய சாவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. உச்சநீதிமன்ற வழிகாட்டல்களையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைகளையும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒட்டி வைத்ததாலும் அதை எந்த காவல் அதிகாரியும் பின்பற்றுவது இல்லை. கட்சிக்காரர்கள் கூறுவதை ஒட்டியே புகார்களும், கைதுகளும் செய்யப்படுகின்றன. அப்பாவிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
கட்சிக்காரகளின் ஆதிக்கம் போதாது என்று மூன்று ஆண்டுகளாக முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் ஆதிக்கமும் அதிகமாகி வருகிறது.ஒரு முதலமைச்சருக்கு பதில் பத்து முதலமைச்சர்கள் இங்கே தலையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறார்கள். முதல்வர் குடும்ப ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகத்தொடங்கியது. ஆட்சியில் உள்ளவர்களிடம் நற்பெயர் பெற்றால்தான் தான் விரும்பிய இடத்தில் பணி செய்ய முடியும் என்று காவல் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். அதனால் முதல்வர் குடும்பமே அனைத்து காவல் நிலையங்களிலும் கோலோச்சுகிறது. சட்டமும், ஒழுங்கும் அதனால்தான் முழுமையாக கெடுகிறது. அதன்விளைவாக காவல்துறை அதிகாரிகள் தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலைக்குய் சென்று விடுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஒரே மொழியான வன்முறையையே கைதிகளிடம் காட்டுகிறார்கள் அதுவே காவல்நிலைய மரணங்களை அதிகரிக்கவைக்கிறது.
இது போதாதென்று சமீப காலமாக அதிகரித்துவருவது போலி மோதல் சாவுகள்.
துப்பாக்கி சண்டை நடந்ததாக படம் காட்டி காவல்துறை அதிகாரிகள் தாங்கள் விரும்புகிரவர்களைஎல்லாம் தீர்த்து கட்டிவிடுகிறார்கள். அதிலும் முதல்வர் குடும்பத்திலிருந்து சில நேரங்களில் பட்டியல் கொடுக்கப்படுகிறது. மோதல் சாவுகள் எப்ப்தேல்லாம் போலி மோதல் சாவுகள் என்று சந்தேகிக்கப்படுகிறதோ, அல்லது நிரூபனமாகிறதோ, அல்லது நம்பப்படுகிறதோ அப்பதேல்லாம் அவை சட்டவிரோத காவல் சாவுகளாக ஆகிவிடுகின்றன. அதாவது காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதை சட்டப்படி பதிவு செய்யாமலேயே போலி ம ஓதல் சாவுகளில் அவர்களை கொன்றுவிடுகிறார்கள். அதனால் அவையும் காவலில் கொள்ளப்பட்டதாகவே எடுக்கப்படவேண்டும். அவை சட்டப்படி காவலை பதிவு செய்யாத நபர்களை காவலில் கொள்ளும் முறை. அதிவும் தமிழ்நாட்டில் அதிகப்பட்டுவிட்டது.
ஆகவே நிர்வாகத்தில் அமர்ந்திருப்பவரின் அரசியல் உறுதி சம்பந்தப்பட்டதாக இந்த காவல்துறையின் அத்துமீறல்கள் புரியப்படவேண்டும். அதானால் பலவீனமான வாக்கு வங்கிகளை கொண்ட ஒரு நபர் ஏதோ ஒரு முறையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரது போக்கு காவல்துறையை சார்ந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதனாலேயே கருணாநிதியின் ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்று வர்ணிக்கப்படுகிறது. சென்ற முறைக்கு முன்முறை கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது இதையே தேசிய மனித உரிமை ஆணையத்தின் அன்றைய தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கருணாநிதி ஆட்சி பாற்றி குறிப்பிட்டார்.
Friday, January 28, 2011
கார்பரேட் நலனை கழட்டிவிடமுடியுமா ராகுலால்?
மகாராஷ்டிரா சென்று இன்று புரட்சிகரமாக பேசுகிறாரே ராகுல், அவரால் அனைத்து ஊழலுக்கும் காரணமான கார்பொரேட் நலனை கழட்டிவிட முடியுமா? என்னை கலப்பட கும்பலை விடக்கூடாது என்று அவுரங்கபாத்தில் இப்போது கூறிவரும் ராகுலுக்கு, அதன்பின்னே நிற்கும் காங்கிரசு சக்தி தெரியாதா? கருப்பு பணம் பற்றி கவலைப்படும் ராகுல், இந்திய அரசு அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் ராகுல், மன்மோகனையும், பிரணாப் முகர்ஜியையும் குறை கூறுகிறாரா? அல்லது தனது தாயார் சோனியாவையே குறைகூறுகிரரா? அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் யில்லை என்று கூறும் ராகுல் நூறாண்டு காங்கிரசை தானே முதலில் குற்றம் சொல்லவேண்டும்? காங்கிரஸ் கட்சி தலைமை தங்கள் குடும்பத்திலே தங்கி இருப்பது ஜனநாயகம் என்கிறாரா?
நாட்டில் உற்பத்தியாகும் செல்வம் எல்லாம் ஏழைகளுக்கானது என்று கூறும் ராகுல், அதை அந்த ஏழைகள்தான் கல்வி மூலம், வேலை மூலம், உணவு மூலமனுபவிக்க வேண்டும் என்று கூறும் ராகுல், தனியார் கைகளில் கல்வியும், வேலையும், உணவும் போய்விட்டதை உணர்ந்துள்ளாரா? அதற்கு தங்கள் கட்சியின் கொள்கைகள்தான் காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ளாரா? எதற்க்காக இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கிறார்? அவர்களையும் ஊழல் படுத்தவா? அல்லது தனியார், கார்பரேட் கொள்ளைகளை நடத்தும் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கவா? தெளிவா வெளிய வாங்க ராகுல் அவர்களே. ஆறு மாதத்திற்குள் ஒவ்வொரு ஊழலுக்கும் நாவடிக்கை கோரும் ராகுல் அவர்களே, முதலில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலுக்கும், ஆதர்ஷா ஊழலுக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், காரணமான காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு பேசுங்கள் ஐயா.
நாட்டில் உற்பத்தியாகும் செல்வம் எல்லாம் ஏழைகளுக்கானது என்று கூறும் ராகுல், அதை அந்த ஏழைகள்தான் கல்வி மூலம், வேலை மூலம், உணவு மூலமனுபவிக்க வேண்டும் என்று கூறும் ராகுல், தனியார் கைகளில் கல்வியும், வேலையும், உணவும் போய்விட்டதை உணர்ந்துள்ளாரா? அதற்கு தங்கள் கட்சியின் கொள்கைகள்தான் காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ளாரா? எதற்க்காக இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கிறார்? அவர்களையும் ஊழல் படுத்தவா? அல்லது தனியார், கார்பரேட் கொள்ளைகளை நடத்தும் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கவா? தெளிவா வெளிய வாங்க ராகுல் அவர்களே. ஆறு மாதத்திற்குள் ஒவ்வொரு ஊழலுக்கும் நாவடிக்கை கோரும் ராகுல் அவர்களே, முதலில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலுக்கும், ஆதர்ஷா ஊழலுக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், காரணமான காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு பேசுங்கள் ஐயா.
Friday, January 21, 2011
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும், ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும்.
ஆ.ராஜாவிற்கு ஆதரவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒன்றுமே இல்லை என்று சொல்வதற்காக சென்ற வருடம் கடைசியில் ஒரு கூட்டத்தை சென்னை தியாகராயநகரில் போட்டிருந்தார்கள். அதில் தமிழ் ஊடக பேரவை என்று பெயர் போட்டு அந்த அமைப்பின் தலைவர் அனுமதி பெறாமலேயே போட்டிருந்தார்கள். அது வேறு விஷயம். அதில் ஊடகத்தில் இல்லாத சிலர், அதாவது ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் கடினங்களை உணராத சிலர்கூட, ஊடகம் பற்றி பேசினார்கள். அதுவும் வேறு விஷயம். ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தை தவிர, ஒரு காலத்தில் வெரிதாஸ் வானொலியில் இருந்ததாலும் கஸ்பரும் ஊடகவியலாலராக பேசினார். அதுவும் பரவாயில்லை. ஆனால் இன்று கலைஞர் டி.வீ.யிலும், அன்று சன் டி.வீ.யிலும் ஒரு நிகழ்ச்சியில் தொடர்ந்து உட்கார்ந்த காரணத்தாலேயே ஊடகம் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டு ரமேஷ் பிரபாவும் பேசினார். பேசிவிட்டு போகட்டும். பெற்ற லாபத்திற்கு ஒரு பெரம்பலூர்காரர்,இன்னொரு பெரம்பலுர்காறரை ஆதரித்து பேசுவது வியப்பில்லை.
அதற்காக ஊடகவியலாளர்களின் பணியை பற்றி புரியாமல் குறை சொல்ல அவருக்கு உரிமையில்லை என்பது அவருக்கு புரியவில்லை. அதுவும் ஒரு பெண் பத்திரிகையாளரை பற்றி இழிவாக பேச ரமேஷ் பிரபாவிற்கு மட்டுமல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. டேய், இது பெரியார் பிறந்த மண்டா, வாயை மூடு என்று யாரும் கேட்கவில்லை என்பதால் அப்படி அந்த உருவம் அன்று பேசியது. ராஜா விமானநிலையம் வரும்போது, ஒரு பெண் ஊடகவியலாளர் மேலே விழுந்து கேள்வி கேட்டார் என்று திரித்து, அந்த மறித்து கேட்ட நிகழ்வை, எல்லோரும் காட்சி ஊடகத்தில் கண்ட நிகழ்வை, கொச்சைபடுத்தி அந்த உருவம் அன்று பேசியது. அதற்குப்பின் அந்த ஆளை ஊடவியலாளர்கள் கண்டித்துள்ளனர். நானும் காட்சி ஊடகத்தில் எனது நிகழ்ச்சியில் கண்டித்து பேசினேன். நான் பணி செய்த வாரஇதழில் இந்த ரமேஷ் பிரபாவின் கண்ணியக்குறைவான பேச்சை கண்டித்து எழுதினேன்.அதற்குபிறகு அதேபாணியில் பெரியார்திடல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
இப்போது அண்ணாசாலையில் உள்ள தேவநேயபாவாணர் இல்லத்தில் இன்று[21st jan] நடந்த ராஜா அதரவு கூட்டத்தில் மீண்டும் இந்த ஆளு அதேபோல இன்னும் மோசமாக பேசியிருக்கிறான். அதாவது விமானநிலையத்தில் கூச்சமில்லாமல் ஒரு பெண் ஊடகவியலாளர் வந்து ராஜா மீது விழ்குந்தார் என்று இந்த ஆளு பேசியிருக்கிறான். இவன் பெர்டம்பளுரில் ராஜா மூலமாக தனது சொந்த நலனுக்கு பல நன்மைகள் பெற்றவன் என்பதனால், அதற்காக சீ.பி.ஐ. விசாரணை இன்னும் இவனுக்கு வரவில்லை என்பதனால், இப்படி கண்ட இடத்தில் கண்டபடி காநியக்குரைவாக பெண்களை பற்றியும், ஊடகவியலாளர்களின் பொறுப்பு மற்றும் தொழில் பற்றியும் பெசுகிராப்ன் என்றால் தமிழ்நாட்டில் நிலவம் கேவலமான ஜனநாயகமற்ற சூழலும், ஆள்வோரும் அடாவடித்தனமும் இவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இவன் ஒரு ஆளே இல்லை என்தால் இவன் பாற்றி பேசி பெரிய ஆளாக ஆக்கக்கொடாது என்பது உண்மைதான். அன்று விமானநிலையத்தில் நடந்தது பற்றிய உண்மை பலரும் காட்சி ஊடகத்தில் கண்டதுதான். ராஜாவை கேள்வி கேட்க முற்பட்ட பெண் நிருபரை ராஜாவின் அடியாட்களாக நினைத்துக்கொண்டு செயல்பட்ட செயலாளர்கள் தள்ளிவிடவும், மிரட்டவும் செய்தார்கள் என்பது இந்த முட்டாளுக்கு தெரியுமா அல்லது புரியுமா?
இப்படிப்பட்ட இழிவான பேச்சாளர்களை ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல?
அதற்காக ஊடகவியலாளர்களின் பணியை பற்றி புரியாமல் குறை சொல்ல அவருக்கு உரிமையில்லை என்பது அவருக்கு புரியவில்லை. அதுவும் ஒரு பெண் பத்திரிகையாளரை பற்றி இழிவாக பேச ரமேஷ் பிரபாவிற்கு மட்டுமல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. டேய், இது பெரியார் பிறந்த மண்டா, வாயை மூடு என்று யாரும் கேட்கவில்லை என்பதால் அப்படி அந்த உருவம் அன்று பேசியது. ராஜா விமானநிலையம் வரும்போது, ஒரு பெண் ஊடகவியலாளர் மேலே விழுந்து கேள்வி கேட்டார் என்று திரித்து, அந்த மறித்து கேட்ட நிகழ்வை, எல்லோரும் காட்சி ஊடகத்தில் கண்ட நிகழ்வை, கொச்சைபடுத்தி அந்த உருவம் அன்று பேசியது. அதற்குப்பின் அந்த ஆளை ஊடவியலாளர்கள் கண்டித்துள்ளனர். நானும் காட்சி ஊடகத்தில் எனது நிகழ்ச்சியில் கண்டித்து பேசினேன். நான் பணி செய்த வாரஇதழில் இந்த ரமேஷ் பிரபாவின் கண்ணியக்குறைவான பேச்சை கண்டித்து எழுதினேன்.அதற்குபிறகு அதேபாணியில் பெரியார்திடல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
இப்போது அண்ணாசாலையில் உள்ள தேவநேயபாவாணர் இல்லத்தில் இன்று[21st jan] நடந்த ராஜா அதரவு கூட்டத்தில் மீண்டும் இந்த ஆளு அதேபோல இன்னும் மோசமாக பேசியிருக்கிறான். அதாவது விமானநிலையத்தில் கூச்சமில்லாமல் ஒரு பெண் ஊடகவியலாளர் வந்து ராஜா மீது விழ்குந்தார் என்று இந்த ஆளு பேசியிருக்கிறான். இவன் பெர்டம்பளுரில் ராஜா மூலமாக தனது சொந்த நலனுக்கு பல நன்மைகள் பெற்றவன் என்பதனால், அதற்காக சீ.பி.ஐ. விசாரணை இன்னும் இவனுக்கு வரவில்லை என்பதனால், இப்படி கண்ட இடத்தில் கண்டபடி காநியக்குரைவாக பெண்களை பற்றியும், ஊடகவியலாளர்களின் பொறுப்பு மற்றும் தொழில் பற்றியும் பெசுகிராப்ன் என்றால் தமிழ்நாட்டில் நிலவம் கேவலமான ஜனநாயகமற்ற சூழலும், ஆள்வோரும் அடாவடித்தனமும் இவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இவன் ஒரு ஆளே இல்லை என்தால் இவன் பாற்றி பேசி பெரிய ஆளாக ஆக்கக்கொடாது என்பது உண்மைதான். அன்று விமானநிலையத்தில் நடந்தது பற்றிய உண்மை பலரும் காட்சி ஊடகத்தில் கண்டதுதான். ராஜாவை கேள்வி கேட்க முற்பட்ட பெண் நிருபரை ராஜாவின் அடியாட்களாக நினைத்துக்கொண்டு செயல்பட்ட செயலாளர்கள் தள்ளிவிடவும், மிரட்டவும் செய்தார்கள் என்பது இந்த முட்டாளுக்கு தெரியுமா அல்லது புரியுமா?
இப்படிப்பட்ட இழிவான பேச்சாளர்களை ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல?
Subscribe to:
Posts (Atom)
