Friday, March 25, 2011

மிரட்டுகிறார் ஜாபர் சேட்..........

ஜாபர் சேட் பெயர் இப்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிட, அதிலும் ஊழல் புகாரில் சிக்கியவர்களைவிட, குடும்ப அரசியலால் முழ தமிழ்நாட்டையும் கட்டிப்போட்டவர்களைவிட, உருட்டியும், சீராடியும கூட்டணியை சாதித்தவர்களைவிட, பெரிதும் பேசப்படும் மர்மம் என்ன? ஒரு உளவுத்துறை பெரிய அதிகாரியைப்பற்பற்றி ஏன் இவ்வளவு தூரம் ஊடகங்கள் எழுதவேண்டும்? அவர் தேர்தலில் நடத்தப்படும், நடத்தப்பட இருக்கும் தில்லுமுல்லுகளுக்கேல்லாம் ஆசானாக செயல்படுகிறார் என்பது மட்டும்தானா? ஜாபரை பொறுத்தவரை அவர் கடமை ஆற்றுவது என்பதையும் தாண்டி எதையாவது செய்தால் அதற்கு சன்மானம் வாங்காமல் போகமாட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பல உதாரணங்களை அவரே செயல்படுத்தி காட்டியுள்ளார்.

திருச்சியில் பெரிய அதிகாரியாக இருக்கும் போதே, முட்டை ரவி, குற சிவா, என்று போளிம்தல் சாவுகளை நடத்தி காண்பித்த ஜாபர், பிறகு சென்னைக்கு உளவுத்துறைக்கு மாற்றலான பிறகு தனது சட்டவிரோத காரியங்களை, எளிதாக செய்துவந்தார். நெடும் அளவிலான வேண்டுகோள்களுக்கு பின்னும் மணல்மேடு சங்கர் கொலையை அரங்கேற்றினார். அவை எல்லாவற்றிற்கும் சிறந்த அளவில் சன்மானங்கள் பெருக்கொண்டதுதான் முக்கிய செய்தி. ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் அடுத்த சாதிக்காரனை தீர்த்துக்கட்ட என்று சன்மானம் கிடைக்கும். அது அந்த பணக்காரர்கள் தங்கள் உயிர் பாதுகாப்பிற்கு என்று எண்ணி ஜாபரின் வார்த்தைகளை நம்பி கொடுக்கும் சன்மானம். ஜாபர் இயல்பிலேயே பணக்காரர் அவர் ஏன் சன்மானம் வாங்க வேண்டும் என்றும் பரப்புரியை ஒருபுறம் கிளப்பிவிடுவார். இன்னொரு புறம் வாங்குவதை வான்க்கிக்கொள்ள அது எளிதாக இருக்கும். அந்த போலி மோதல் சாவுகள் வரிசையில் குற நடராஜையும் போட்டு விட்டார். இவையெல்லாம் ரவுடிகளை போடலாம் என்ற " காக்க, காக்க" படவரிசையில் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை

சரி. எழத்தமிழரை கொள்ளலாமா? அது எந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது? டில்லியில் உள்ள ஒற்றையாட்சி மனோபாவம் உள்ள அதிகாரவர்க்க கும்பலால், அதாவது எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் வகையராக்களால் அங்கீகரிக்கப்பட்டது. அது போதும் ஜாபருக்கு. அவர் எம்.கே.நாராயணன் மனோபாவத்தால் செயலபடுத்தப்பட்டார். எழத்தில் நடத்தப்பட்ட தமிழின அழிப்பை எம்.கே.நாராயணன் ஆதரித்தார். ஜாபர் அவர் வழி செயல்பட்டார். தமிழின அழிப்பை தடுக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் வல்லமை ஜாபருக்கு உண்டு என்று டில்லி நம்பியது. பல முறைகளை ஜாபர் தமிழ்நாட்டு மக்களது எழுச்சியை தடுத்து நிறுத்தினார். ஒருபுறம் ஈழ பிரச்சனைகளுக்கு போராடினால் அனுமதி மறுப்பு.இன்னொரு புறம் இன அழிப்பு ஆதரவு தலைவர்களுக்கு இன ஆதரவு முத்திரை பெருவதற்கான தயாரிப்பு. அதுவே ஜாபர் ஆலோசனையில் கருணாநிதி தலிமையில் அமைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை. அதற்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் அந்த இன அழிப்பு தலைவர்களின் முகங்கள் காப்பாற்றப்பட்டன.

முத்துகுமார் நிகழ்ச்சி ஜாபருக்கு விழுந்த பெரிய அடி. அதையும் சமாளித்தார் ஜாபர். மாணவர்கள் கைகளில் கொடுக்கவிடாமல், அரசியல்வியாதிகள் கைகளில் முத்துகுமாரின் உடலை பெற்றுத்தர ஏற்பாடு செய்தார். அதன்படி முத்துகுமாரின் விருப்பத்திற்கு எதிராக அவரது உடலை உடனடி அடக்கம் செய்ய துடித்தார். அடக்க ஊர்வலத்தின் திசையை மாற்ற பாடுபட்டு வெற்றிபெற்றார். அதன்மூலம் எழ இருந்த தமிழக மக்களின் எழுச்சியை அடக்குவதில் வெற்றிகண்டார். அதற்கெல்லாம் சன்மானமாக டில்லி மட்டுமல்ல, கொழும்பும் உவகையுடன் லண்டனுக்கு கூப்பிட்டு கொடுத்தது பல கோடி என்ற செய்தி விசாரிக்கப்படவேண்டும். பின்னல் இருந்த அம்சா வ்ஹேன்னையில் இருந்தாலும் லண்டனில் இருந்தாலும் ஜாபரின் ஆலோசகர். இத்தனை திறமை உள்ள அதாவது சூழ்ச்சிகள், சதிகள் செய்வதில் திறமை உள்ள ஜாபரை, எப்படி தேர்தல் ஆணையம் கூப்பிட்டு விசாரித்து மேற்கு வங்கத்திற்கு மாற்றமுடியும்? அதை இப்போது ஊடகங்கள் மூலம் கேட்கவைத்துள்ளார் ஜாபர்.

டில்லிக்காரர்களிடம் ஜாபர் எதில் மாட்டிக்கொண்டார்? அரசரைவிட அரசு செலுத்துவதில் விசவாசம் காட்டிய ஜாபர், தமிழ்நாட்டு மன்னர் குடும்பத்தின் தயவிற்காக, இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமானின் உதவியுடன், மன்னர் மகளுக்கு நுவரிலியாவில், நிலம் வாங்கி கொடுத்தார். தனது மனைவியின் பெயருக்கு, முதல்வர் கையெழுத்துடன் வீட்டு வசதி வாரிய வீட வாங்கி கொண்டார்.சுத்தமான கை என்றால் இந்த வீடு வாங்கியிருக்க கூடாதே? அப்படி மன்னர் குடும்ப விச்வாசத்திர்க்காக தமிழர் விரோத போக்குடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாநிப்போரின் ஒத்திகையை நடத்திக்காட்டினார். அதில் சில பெரிய அதிகாரிகளைக்கூட பகைத்துக்கொள்ள தயங்கவில்லை. கடைசீயில் ஆ,ராஜா சிக்கிய ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில், மன்னர் குடும்பத்தை காப்பாற்றுவதர்க்காக சாதிக் பாட்சா மரணம் என்று ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சாதிக்கின் சாவுக்கு முன்பு ஒருமணிநேரம் முன்பு ஜாபர் சாதிக்கை சந்தித்தார் என்ற செய்தி ஒன்று இருக்கிறது.அது கொலையா என்ற சீ.பி.ஐ.யின் கேள்விக்கு பதில் சொல்ல டில்லியழைக்கப்பட்டார். ஆனால் தான் அழைக்கப்பட்டது தேர்தல் விதி மீறல் பிரச்சனை என்று ஊடகங்களில் திசைதிருப்பும் வேலையை செய்துவருகிறார்.

இப்போது டில்லியையே மிரட்டும் வேளையில் இறங்கியுள்ளார். அதுதான் இப்போது சோனியா, ராகுல் போன்ற தலைவர்கள் வரும்போது பாதுகாப்புஆபத்து இருக்கிறது என்று புதுகரடி விடுகிறார். அதற்குதான் தான் ஐ.ஜி.ஆக இருக்கவேண்டும் என்று டில்லியை அல்லது தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார்.புகழேந்திரன் மாஸ்டர் என்று ஒரு நபரை டில்லி உளவு துறை தமிழ்நாட்டில் உலவவிட்டு, அதன்மூலம் தமிழ்நாட்டு சட்ட,ஒழுங்கை கேள்விக்குறியாக்க முயல்வதும் ஜாபருக்கு தெரியும். அதைத்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் அதன் பிரதமர் ஜெயரத்னே கூறியிருந்தா. அந்த கூட்டத்தில் சிலர் யாழ்ப்பணத்திற்கு இந்திய உளவுத்துறையான "ரா" மூலம் சென்று இருப்பதுள் ஜப்பாருக்கு தெரியும். ஏன் என்றால் ஜாபர்தான் " ராமு" என்ற சரணடைந்த போராளியை பயன்படுத்தி இந்திய உளவுத்துறை படம் காட்டிய போது அதை தனது ஆதரவில் உள்ளவர்கள் ஓலம் தமிழ்நாட்டு பிரபா ஏட்டில் கொண்டுவரவைத்தவர்.இப்போது தான் த்மியாஹ்னாட்டில் பதவியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்த படியே உயர் தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாட்டு தேர்தலில் தில்லு முள்ளு செய்யமுடியாதா என்று டில்லியில் மிரட்டினார் என்று அவரது நண்பர் மூலம் வார இருமுறை ஏட்டில் எழுதவைத்துள்ளார். இப்போது ஜாபருக்கு ஆதரவாக கலைஞர் அரசு கொடுத்துள்ள வினாக்கள் கடைசியில் பூனை பையை விட்டு வெளியே வந்து விட்டதை காட்டுகிறது.
எப்படியும தமிழ்நாட்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்ய தயாராக இருக்கும் ஜாபரை எப்படி அம்பலப்படுத்தவோ, தடுக்கவோ, அவர் செய்ய உள்ள வெடிவைக்கும் நிகழ்ச்சிகளை தடுக்கவோ முடியும் என்பது தேர்தல் ஆணையத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்குசவாளாக அமைந்துள்ளது.

Thursday, March 24, 2011

இலவசம், இலவசம், இலவசம்.

கருணாநிதி இலவசங்களை வைத்து, கிராமப்புற வாக்குகளை அள்ளிவிடுவார் என்ற கருத்து பொதுவாக இருந்தது. அதிலும் அவர் அறிவித்துள்ள கிரைண்டர் அல்லது மிக்சி, என்பது பெண்களுக்கு உர்ச்ச்காகத்தை உண்டுபண்ணும் என்றனர். அப்போதே அந்த கிரைண்டர், மிக்சி கண்டுபிடிப்பு அதிமுகவுடையது என்பதுபோல நக்கீர்டன் எழுதியிருந்தது. அதாவது பொள்ளாச்சி ஜெயராமனின் கையிலிருந்து பரந்த காகிதத்தில் உள்ளல இலவசங்கள் அவை என்று எழுதியிருந்தது. இப்போது அதுவும் உணமையாகிவிட்டது. ஜெயலலிதா ஒரு தேர்தல் கால வாக்குறுதி அறிககையை அறிவித்து விட்டார். அதில் அவர் க்ரின்டரும், மிக்சியும் மற்றும் பொருள்களும் என்று நீட்டி முழங்கிவிட்டார். இப்போது இலவசங்களுக்காக என்று கூறிய கருத்துக்கள் மூலையில் போய் படுத்துவிட வேண்டியதுதான்.

நகரில் ஐம்பத்தெட்டு வயது வந்தோருக்கு இலவச பேருந்து சீட்டு என்ற கலைஞரின் வசனத்தைவிட, கிராம, நகரங்களில் அம்பத்தெட்டு வயது வந்தோருக்கு இலவச பேருந்து சீட்டு என்ற ஜெயலலிதா வாக்குறுதி மேலே போய்விட்டது. அதேபோல மாணவர்களுக்கு அனைவருக்கும் மடிகணணி. பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக்கொடுப்போம். இது கலிஞர் குடும்பம் பறித்தத நிலங்கள் சம்பந்தப்பட்டது. பலரது வயோற்றில் புலியை கரைக்கும். எல்லாவற்றையும் விட, கேபிள்களை அரசுடமை ஆக்குதல் என்பது மக்களை கவரும் முழக்கம். அதிலும் குறைந்த காசில் அரசே கேபிள்களை கொடுக்கும் என்பதுதான் மக்களுக்கு பிடித்தமானது. என்லோயே கொண்டு சென்று விட்டது இந்த இலவசங்கள். ஆனாலும் சில வாக்குறுதிகள் கலைஞர் குடும்பத்தை குறி வைத்து ஒட்டாணி ஆக்கும் முயற்சியா என்பது தெரியவில்லை. மக்களும் அதைத்தானே விரும்புவார்கள் போலிருக்கிறது.

Wednesday, March 23, 2011

தேர்தல் ஆணையத்தை, சூதகமான கங்கை என்கிறார் கலைஞர்

பசுன்பொன் தேவரை மேற்கோள் காட்டி," மங்கை சூதகமானால், கங்கையிடம் முறையிடலாம், கங்கையே சூதகமானால், யாரிடம் முறையிட? "என்று இன்று முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதுகிறார் கலைஞர். தேர்தல் ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும், அதை கறாராக அமுல்படுத்த முற்படுவதையும் அப்படி சாடுகிறார. கலைஞர் கருணாநிதிக்கு, ஒரு இந்திய அரசியல்வாதி என்ற முறையில், ஒரு இந்திய அரசின் தேர்தல் முறைகளை ஏற்றுக்கொண்டவர் என்ற முறையில், இந்தியாவின் ஏக இந்தியா கோட்பாட்டை சமீபத்தில் அதிகமாக உச்சரிப்பவர் என்ற முறையில், இந்திய அரசின் ஒரு அங்கமாக திகழ்பவர் என்ற் முறையில், மத்திய அரசில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில், பழுத்த அரசியல்வாதி என்ற முறையில், ஐந்து முறை தமிழக முதல்வராக வீற்றிருப்பவர் என்ற முறையில், தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டணி ஆட்சியின் தளகர்த்தா என்ற முறையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் பற்றி குறை கூற உரிமை இருக்கலாம்.

ஆனால் " மங்கை சூதகமானால்" என்று பெண்களை இழிவு படுத்தும் பழமை பார்வைகளை பகிர்ந்துகொள்ள எந்தவிதத்தில் உரிமை இருக்கிறது? "ஆண்கள் சூதகமானால்" என்று புதிதாக கருணாநிதியால் எழுத முடியுமா? ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் பொம்பளை சிரிச்சா போச்ச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பதுபோல ஏன் மேற்கோள்கள் அவருக்கு தோன்ற வேண்டும்? இது ஆணாதிக்க மனப்பான்மை தவிர வேறென்ன? " சூதகம்" என்று எதை சொல்கிறார் இந்த கலைஞர்? " தவறு செய்தால்" என்றுதானே சொல்கிறார்? அரசியல்வாதியே தவறு செய்தால் என்றும், அரசரே ஊழல் செய்தால் என்றும், ஆட்சியாளரே சட்டத்தை மீறினால் என்றும், அமைச்சர்களே வாக்குக்கு பணம் கொடுத்தால் என்றும் பொதுமக்கள் பேசுவது இவருக்கும் சேர்த்து பொருத்தமானது இல்லையா? ஏன் இப்படி மங்கை சூதகமானால் என்று மட்டும் பெண்களை தாக்கி எழுதவும், அதற்கு பசும்பொன் தேவரை துணைக்கு அழைப்பதும் செய்யவேண்டும்? டேஹ்ர்தல் ஆணையத்தை எதிர்க்கவேண்டும் என்றால், தைரியமாக எத்ரிக்க வேண்டியதுதானே? அதற்கு தேவரை எதற்கு இழுக்கிறார்? பயந்து ஏன் தேவரை துணைக்கு அழைக்கிறார்?

தேர்தல் ஆணையம் இன்று சுவர்களில் தேர்தல் விளம்பரங்களை எழுத தடை விதித்து விட்டது என்று புலம்புகிறார். இன்று கட்சி தோரணங்களை சாலைகளில் கட்ட தடை வித்தித்துள்ளது என்று கவலைப்படுகிறார். தலைவர்களின் சிலைகளை துணி பொட்டு மூடிவிட ஏற்பாடு செய்துள்ளது என்று வருத்தப்படுகிறார். அதாவது தெருவெங்கும் கட்சி சின்னகளையும், விளம்பரங்களையும் வசதி உள்ள, அல்லது ஊழல் பணத்தை கையில் வைத்துள்ள கட்சிகளும், வேட்பாளர்களும், வரைந்து தள்ளுவார்கள். காசில்லாத சாதாரண வேட்பாளர்கள் இந்திய டேஹ்ர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டு போட்டியிட்டால், அவ்வாறு விளம்பரங்களை செய்யமுடியாமல் பார்வையாளர்களாக இந்த டேஹ்ர்தலில் இருக்கவேண்டும் என்றுதானே வர விரும்புகிறார்? அதாவது ஏழை, பாழைகள், தேர்தலில் நிற்க கூடாது: பணம் சேர்த்த அல்லது கொள்ளையடித்த கட்சிகள் மட்டுமே போட்டியிடவேண்டும் என்பதுதானே அதன் உட்பொருள்? இவர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பாராம்.

கட்சி கொடிகளை தோரணங்களாக கட்டி கட்சி சார்பற்ற பெரும்பான்மை மக்களுக்கு தொல்லை கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்கு இப்படித்தான் சொல்லத்தெரியும். தலிவர் கலைஞர் அவர்களே, உங்களுக்கு தெரியுமா? கட்சி சார்படர் பொதுமக்கள்தான் இந்த நாட்டில் அதிகம். அவர்களுக்கு உங்கள் கொடிகளும், தோரணங்களும், சின்னகளை விளம்பரம் செய்யும் முறைகளும், எங்கு பார்த்தாலும் தேர்தல் விளம்பரங்களை எழுதி வைப்பதும், எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இடையூறாக இருக்கின்றன. நீங்கள் கட்சிகளின் தேர்தல் பூத்துகள் என்று ஒவ்வொரு தெருவிலும் உருவாக்கி வைத்துக்கொண்டு, ஒலிபெருக்கிகளில் கத்திக்கொண்டு, கொடுக்கும் சித்திரவதையை தாங்க முடியவில்லை. அவர்களுக்கு அதாவது பெரும்பான்மை மக்களுக்கு இந்த டேஹ்ர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் மகிழ்ச்சியை தருகின்றன.கலைஞருக்கு வேண்டுமானால், அப்படி அடாவடி பரப்புரைகள் மூலம் மட்டுமே கிளர்ச்சி வரலாம், அவரது தொண்டர்களுக்கு அந்த முறையில் தான் எழுச்சி வரலாம்> அனால் அவை அனைத்தும் மக்களால் வெறுக்கப்படுபவை.


அடுத்து இந்த அரசியல்வாதிகள் டேஹ்ர்தல் நேரத்தில் தங்கள் கட்சி தலைவர்களின் சிலைகள் மட்டுமின்றி, ஊரில் உள்ள எல்லா சிலைகளுக்கும் அந்தந்த சமூகங்களின் வாக்குகளை பெறுவதற்காக போய் நின்று கொண்டு மாலை போடுகிறேன் என்ற பெயரில் போக்குவரத்தை இடையூறு செய்துகொண்டு செய்யும் கலாட்டாவை எப்படி நிறுத்துவது? அந்தந்த சமூக மக்களை ஏமாற்ற இப்படி செய்து வாக்குகள் பெற முயற்சிப்பதே சாதிகள் பெயரில் வாக்குகள் வாங்க கூடாது என்ற தேர்தல் விதிப்படி முறைகேடுதானே? அதை நிறுத்த சிலைகளுக்கு துணி பொட்டு மூடுவதை தவிர வேறு என்ன வழி? ஊதாரணமாக எப்போதும் ஜவஹர்லால் நேருவை திட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் பொன்முடி தனது முதல் ஊர்வலத்திலேயே விழுப்புரத்தில் நேரு சிலைக்கு மாலை அணிவிக்கவில்லையா? அதை நிறுத்த இதுதானே ஒரே வழி? கலைஞருக்கு இதுபோன்ற குறுக்கு வழிகளில்தான் தேர்தலை நடத்த முடியும் என்றால் யார் என்ன செய்முடியும்?

அடுத்து கலைஞர் கடிதத்தின் தாக்குதல் சாலைகளில் செல்லும் வாகனங்களில் பணம் டேஹ்டுகிறேன் என்று, ஆடு, கோழிகளை கொண்டு செல்வதை பிரியாணி போட என்று கற்பனை செய்து கொண்டு பிடிக்கிறார்கள் என்கிறார். இது தலைவரே உங்கள் உள்மனதை அல்லது உங்கள் உடன்பிறப்புகளின் திட்டத்தை படம் பொட்டு காட்டுவது போல இல்லையா? அடுத்து கொலுசுகளை, நகைகளை பிடிக்கிறார்கள் என்று வருந்துகிறார். கொலுசும், நகையும் எதற்காக மொத்தமாக கொண்டு செல்லப்படவேண்டும்? சென்ற ஆந்திரா தேர்தலில் சிரஞ்சீவி என்ற நடிகர் " மூக்குத்தி" கொடுக்க மொத்தமாக் ஆர்டர் போட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு மார்வாடி மூலம் குறைந்த வில்லிக்கு பல ஆதிரம் மூக்குத்திகளை வாங்கி சென்றது தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்து விட்டதோ என்னவோ? அதை தாங்கள் கடைப்பிடிக்க திட்டமிடுவதும் புரிந்து விட்டதோ என்னவோ?

ஆகையால் முறையாக வாக்கு கேட்டு அதில் வெற்றியோ, தோல்வியோ சந்தியுங்கள். தேர்தல் ஆணையத்தின் பக்கம்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். இப்போதே தொண்டர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் பற்றி ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களது தோல்வியை நியாயப்ப்டுத்த முயலாதீர்கள்.கடைசியாக கலைஞர் டி.ஜி.பி.ஐ மாற்றலாமா? ஜாபார் சேட்டை மாற்றலாமா? இது இதுவரை நடந்தது உண்டா? என்று கேள்வி கேட்கிறார். லத்திகா சரண் தங்களுக்கு பதில் அரசியல்வாதி போல பதில் அறிக்கை கொடுக்க சொல்லிக்கொண்டிருந்தீர்கள் என்றால் மாற்றமாட்டர்களா? ஜாபார் சேட்டு தமிழ்நாடெங்கும் "மோதல் சாவுகளை" திட்டமிட்டு போளித்தனமாக் செய்யச்ஹ்கோல்வார்: வீட்டு வசதி வாரியத்தில் முதல்வர் ஒப்புதலோடு தன் மனைவி பெயரில் வீடு வாங்குவார்.அதற்கு ஒரே நாளில் பல லட்சங்களை கட்டுவார். அதற்கு பிறகு அதை விற்க ஏற்பாடு செய்வார். கட்சி கூட்டணிக்கு வேலை செய்வார். எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்க சதி செய்வார்: ஆ.ராஜா நண்பர் சாதிக்கின் மரணத்திற்கு காரணமா என சீ.பி.ஐ. அவரை விசாரிக்கும். தேர்தல் ஆணையம் மாற்றக்கூடாதா?

எல்லாம் ஏன் இப்போது பெரிதாக கலைஞரால் எழுதப்படுகிறது. மதுரையில் மாவீரனாக வர்ணிக்கப்பட்ட மூத்த மகனின் மத்திய அமைச்சரவை வாகனத்தில் கடந்த சனிக்கிழமை பணம் கொண்டு சென்ற போது தேர்தல் பார்வையாளர்கள் பிடித்தபோது, உடனடியாக அடியாட்கள் இரு லாரிகளிலும், சுமோவிலும் வந்திறங்கி, ஊடகவியலாளர்களை பார்த்து டேஹ்ர்தல் பார்வையாளர்களை லார்ரி ஏற்றி கொன்றது என நாளை போடுங்கள் என்று சொன்னதனால், அந்த பார்வையாளர்கள் கதி கலங்கிபோய், பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தபின்பு எழுதப்படுகிறதா? அடஹ்ர்குபின் தேர்தல் பார்வையாளர்கள் அதே மதுரையில் ஐந்து நாட்களாக தடுப்பு ச்ச்வடிகளை நீக்கியுல்லார்களே? அது எதனால் தலைவரே என்று கேட்கத்தோன்றுகிறது.

Tuesday, March 22, 2011

கொளத்தூர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியா?

சிறிய தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் நிறுவிடலாம் என்று, ஆயிரம் விளக்கில் நிற்க முடியாத சூழலில் ஸ்டாலின் சிந்தித்தார்.ஆயிரம் விளக்கு தொகுதியில் பல ஏழை மக்களை அவர்களது குடிசைகளில் இருந்தும், அவர்களது அடுக்கு மாடி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் இருந்தும் விரட்டியடித்த ச.ம.உ ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிலைமை வந்துள்ளது. அதனால்தான் அவர் சிறிய தொகுதி ஒன்றை டேஹ்ர்வு செய்து அதில் எப்படியாவது செலவழித்து நின்று விடலாம் என்று எண்ணி நிற்கிறார். ஆனால் அவரது அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்த்தது அதிமுக அறிவித்த வேட்பாளரது பெயர்தான். அதாவது சைதை துரைசாமி என்ற பெயர் ஸ்டாலினை நிலை குலையச்செய்துள்ளது.

சைதையாரும் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கி விட்டார். அவர் சிறப்பாக தனது பக்கத்து வாதத்தை எடுத்து வைக்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே பகுசன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ் ஸ்ட்ரோன்க் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டு எல்லோர் வீடுகளுக்கும் போய் தனது யானை சின்னத்தை கொடுத்திவிட்டார். இந்த நிலையில் ஸ்டாலின் இறக்கிறார் என்பது அவருக்கும் அதிர்ச்சி.இப்போது சைதை துரைசாமி எவரு சேர்ந்துகொண்டார். எப்படியும் கொளத்தூர் தொகுதி பதட்டம் ஆகிவிடும். நமக்கு முத்துகுமாரின் சடலம் அவரது வீட்டருகே வைக்கப்பட்ட இடமும், அதற்கு மூன்று நாட்கள் தமிழின உணவாளர்கள் கூடியது அந்த இடம்தான் என்பதும், அதனால் அங்கு போர்குற்றம் புரிந்தவர்களின் வாரிசுகளுக்கு என்ன வரவேற்ப்பு கொடுப்பது சரி என்ற எண்ணமும் உருவாகாமல் இல்லை.

பார்வதியம்மாள் அஸ்தி, சென்னை கடற்கரையில்,கரைக்கப்பட்டது

.
இன்று தமிழினத்தின் தேசியத்தலைவரை பெற்றெடுத்த தாயார் பார்வதியம்மாளின் சாம்பல் முப்பத்தொன்றாவது நாளாக கடலில் கரைக்கப்பட வேண்டிய சடங்கு முறைப்படி, சென்னையில் மாலை ஆறு மணிக்கு மேல் நடந்தது. பார்வதியம்மாளின் சாம்பலை கலசத்தில் ஏந்தி வந்த பழ.நெடுமாறன், வைகோ கடல் நீரில் மலர் தூவ தாய் கடலில் கரையவிட்ட நிகழ்ச்சி நடந்தது. நாலு மணிக்கு கண்ணகி சிலைக்கு பின்னால் உள்ள கடலில் கரைக்கப்படும் என்று நெடுமாறன் முதலிலும், பிறகு வைகோவும் அறிவுப்பு செய்திருந்தனர். அதை ஏற்ற தமிழின உணர்வாளர்கள் அங்கே முதலில் நூற்றுக்கணக்கில் திரண்டனர். நேரம் ஆக, ஆக, அது பல நூறு மக்களாக ஆனது. காவலுக்கு நின்ற காவலர்கள் திகைத்து நிற்க, ஊடகங்கள் அனைத்தும் வந்து குவிய, காவல்துறையின் படம் பிடிக்கும் நபர் படம் பிடித்து தள்ள, அதையெல்லாம் சட்டை செய்யாமல் பிரபாகரன் படங்களுடனும், பார்வதியம்மாள் படங்களுடனும், புலிக்கொடிகளுடனும், தமிழின உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் திரளத் தொடங்கினர்.

இரண்டாயிரத்திற்கு மேல் கூட்டம் திரண்டிருந்தது. ம.தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் பல பத்து பேர் திரண்டிருந்தனர். பெரியார் திராவிட கழகத்தின் தம்பிகள் தங்கள் குடும்பம் சகிதம் திரண்டு வந்திருந்தனர். வைகோவும்,நெடுமாறனும் வந்தவுடன் திரண்டிருந்த கூட்டம் கடலை நோக்கி புறப்பட்டது. வீரவணக்கம் வீரவணக்கம், பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் என்ற முழக்கங்களுடன், மாபெரும் பேரணியாக தமிழர்கள் கடலை நோக்கி நடந்து வந்த காட்சி மகிழ்ச்சியை ஊட்டியது. புளித்தாயார் பார்வதியம்மளுக்கு வீரவணக்கம் என்றும் முழக்கம் இட்டனர். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய என்றும் அரசியல்முழக்கங்கள் முழங்கப்பட்டன. ஓவியர் வீர சந்தானம், கவிஞர் காசி அனந்தன், மன்ழூர் அலிகான், ஆகிய உணர்வாளர்களும் வந்திருந்தனர். மீனவர் சங்க தலைவர்களும் திரண்டிருந்தனர். கடலில் இறங்கிய தமிழர்களின் குரல் சிங்களர் ஆளும் தீவை நோக்கி திரும்பும், அங்கு தமிழர் மறுவாழ்வை பெற்றுத்தர எழும் என்பதில் ஐயமில்லை.

Monday, March 21, 2011

அவசர சிகிச்சையை அதற்குத்தானே பயன்படுத்தறாங்க?

ஐந்து கோடி ரூபாயை ஒவ்வொரு வேட்பாளருக்கும் கொடுக்கணும், அவங்க அதை சிந்தாமா, சிதறாம, வாக்காளர்களுக்கு கொடுக்கணும்னு தலைவர் திட்டமிட்டார். அதற்குள் தேர்தல் ஆணையம் வாகனங்களில் கொண்டு செல்லும் பணத்தை வாரிவிடுவோமென மறிக்கத்தொடங்கினர். இப்போது தொண்டர்கள் கண்டுபிடித்துள்ள புது வழி செயல்படுகிறது.108 வாகனம் அவசர சிக்கைச்சைகளுக்கு மக்களுக்கு உதவத்தானே உள்ளது? அதனால் அதில் வட்ட செயலாலட் போய் படுத்துக்கொண்டால், வட்ட செயலாளர் தனியே செல்ல முடியுமா? அதர்காக அவருடன் ஒரு சிறு கோஷ்டி செல்லும்.அந்த கோஷ்டி பல, பத்தாயிரம் லட்சத்தை அலட்சியமாக நோய் வாய்ப்பட்ட வட்டத்துடன் eடுத்து சென்று விடுகின்றனர்.பணம் வேண்டும் நிலையில் மக்களும், பணம் கொடுத்து வாக்கு பெரும் நிலையில் மக்களும் இருப்பது அவசர சிகைச்சைக்குத்தானே?

இப்படித்தான் கிராமங்களில் வாக்குக்கு பணம் பட்டுவாடா ஏக போக மாக நடக்கிறது.அதுதவிர கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்கள் சிலரை வரவழைத்து அவர்களிடம் பணம் கொடுத்து பேருந்தில்; அவர்களை ஏற்றி அனுப்பிவுடுகின்றனர். அவர்கள் தங்கள், தங்கள் கிராமங்களில் போய் விநியோகம் செய்துவிடுகிறார்கள்.இது தேர்தல் அனையத்திற்கு தெரிந்தால் ரிந் என்ன?, தெரியாவிட்டால் என்ன?

Friday, March 18, 2011

கெட்டிக்காரர் கருணாநிதிதானே?

அய்யா. அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் என்பதாக ஒன்று 160 பேருடன் வெளிவந்தது. அதில் தேமுதிக,சீ.பி.ஐ.,சீ.பி.எம்.,புதிய தமிழகம், போன்ற கட்சிகள் கேட்டிருந்த விருப்ப தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள்.அதனால் அவர்கள் கடும் கோபத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்தில் கூடினார்கள். அவர்களுக்குள் ஒரு மூன்றாவது தனி அணியை கட்டிக்கொள்ளலாமா என்று பேசத்தொடங்கினார்கள்.அவை அனைத்தும் ஊடகங்களில் வந்துகொண்டே இருந்தது. அம்மா அதுபற்றி தெரியாதவராக இருந்தார். திடீரென ஒரு ஆங்கில காட்சி ஊடகம் பார்த்தார். அதில் தனது உருவபொம்மையை மதிமுகவினர் எரிப்பதை பாரதத்தார். அதன் பிறகே கேள்விப்பட்டு அதிமுக தன்னிச்சையாக ஒரு வேட்பாளர் பட்டியலை அறிவித்ததை தெரிந்து கொண்டார் என்கிறது ஒரு கதை. இந்த கதை சோ தயார் செய்து வெளியிட்டது என்றும் கூறுகிறார்கள்.

அந்த கதையை விவரமாக தினமலர்,தினமணி ஆகியவை வெளியிட்டன. அதன்படி ஜெயலலிதா சிசிகலாவின் உறவினர் ராவணனிடம் ஒரு அதி முக முதல் பட்டியலை 70 பேருக்கு தயார் செய்து கொடுத்ததாகவும், அதை மறைத்துவைத்துவிட்டு ராவணன், இன்னொரு பட்டியலை அதாவது 160 பேர்கொண்ட முழு அதிமுக பட்டியலை வெளியிட்டுவிட்டார் எனவும் அந்த ஏடுகள் கூறின.அப்படி ஒரு சதிகார பட்டியலை தயாரித்தவர்கள் என்று புதிய பார்வை நடராசன், திவாகரன், டி.டி.வி.தினகரன்,டாக்டர் வெங்கடேஷ் என்ற சசிகலாவின் உறவினர்கள் அந்த ஏடுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதாவது நடராசன் தலைமையிலான ஒரு கும்பல் என்பதாக அது அம்பலமானது.அதனால் தான் சீ.பி.ஐ.,சீ.பீ.ம், ஆகிய கட்சிகளின் அகில இந்திய தலைமையுடன் நல்லுறவு கொந்த அல்லது நல்லுறவு வேண்டி நின்ற ஜெயலலிதா இப்படி அவர்கள வென்று வந்த தொகுதிகளையும் அவர்களிடமிருந்து பிரிப்பாரா என்ற சந்தேகம் எழுந்த ஒரு நாளுக்குள் சதிதான் என அம்பலப்பட்டுவிட்டது.

எதற்காக நடராசன் இப்படி செய்யவேண்டும்? சசிகலா குழுவினரின் "மிடாஸ்" என்ற சாராய தொழிற்ச்சாலையில் இருந்து, பல்லாயிரம் கோடிகளுக்கு கருணாநிதி அரசு டாச்க்மாக் என்ற அரசு சாராய கடைகளுக்கு மது வாங்கிவருகிறது. அதன்மூலம் போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சசிகலா கும்பலுக்கு அதிகமான அளவில் வணிகம் கொடுத்துவருகிறது. இவாறு கருணாநிதி அரசு கொடுத்துவருவது சசிகலா கும்பலை கருணாநிதியின் விசுவாசத்திற்கு கொண்டுசென்றுள்ளது. இதுதவிர புதிய பார்வை நடராசன் வைத்திருக்கும் வங்கி கணக்கை கருணாநிதியின் காவல்துறை ஓராண்டிற்கு முன்பே கணக்கு பார்த்து பல்லாயிரம் கோடி எப்படி வந்தது என்றும் அதன் வட்டியாக பல, பல லட்சங்களை நடராசன் பெற்றுவருவதையும் கண்காணித்து கொடுக்கி போட்டது. அதன்விளைவாக நடராசன் கருணாநிதியின் காவல்துறைக்கு விசவாசம் செய்பவராக ஆகிவிட்டார். அப்போதிலிருந்தே அவர் அதிமுக கட்சிக்கு உள்ளிருந்து வரும் முரண்பாடுகளை கேட்டறிந்து அவற்றை கருணாநிதி கட்சி தலைமைக்கு கூறி அதன்மூலமே பல பிரமுகர்களை கட்சி மாறி தி.முக விற்கு தாவ வழி செய்தார்.

இவாறு ஓராண்டாக செய்துவரும் ஒரு நிழல் மனிதர் தன்னைப்பற்றி எப்போதும் அதிமுக தலைக்கு வழிகாட்டிக்கொண்டிருப்பதாக போய் கூறிவருவார். அதை நம்பிய மதிமுக தலைவர் வைகோ, நடராஜனது வீட்டு முன்பே பத்து நாட்களாக தவம் கடந்ததால், அவருக்கு தோட்டம் அழைப்பு இடிக்கவில்லை. நடராஜனை எதிரி என்று தெரிந்திருந்த ஜெயலலிதா அவரது கும்பல் செய்யும் வேலைகளை அறிந்திருக்கவில்லை. உதாரணமாக் நடராசன் தம்பி ராமச்சந்திரன் தோட்டத்தில் நல்ல பெயர் வாங்கி நம்பிக்கைக்குரியவர் என்று அங்கீகரிக்கப்பட்டவர். அவர் அண்ணன் நடராஜனுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்துவருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் விசுவாசம் கேட்டவர் என்று அடையாளம் காணப்பட்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட திவாகரன், டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ஆகியோர் சேர்ந்து தயார் செய்த பட்டியலில் தங்கள் குழுவிடம் காசு கொடுத்த தங்கள் சமூக தாவது முக்குலத்தோர் பட்டியலை ராவணன் என்ற தங்கள் சொந்தம் மூலம் தயார் செய்தனர்.84 அதிமுக வேட்பாளர்கள் அந்த சமூகத்தவர் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு எதிர்கட்சிக்குள் கலக்கம் ஏற்பாடு செய்த கருணாநிதி கெட்டிக்காரர் தானே? இப்போது தோட்டத்திற்குள் சண்டை என்றும், சசிகலாவிடம் ஜெயலலிதா கோபம் என்றும் வருகின்ற செய்திகள் யாருக்கு என்ன லாபம்? கருணாநிதி எப்போதும் தான் தோற்றுப்போவோம் என்று முடிவுக்கு வந்தால் இப்படித்தான் சதி செய்து அடுத்த கட்சியின் சோலியை முடிப்பார். அடுத்த கட்சியாக சாதிக் பாட்சசாவும் இருக்கலாம், ஜெயலலிதா கட்சியும் இருக்கலாம்.