Thursday, May 26, 2011

அருந்ததி ராய், இந்தியாவின் கருத்துரிமை அடையாளம்.

மீண்டும் எதிர்க்கப்பட்டார் அருந்ததி ராய். ஒருவாரம் முன்னாள் டில்லியில். மே-20 ஆம் நாள்." இந்தியா ஹபிடட் மையம்" - புது டில்லியில் ஒரு புத்தக வெளியீடு. " உடைந்த குடியரசு" என்பது அந்த புத்தகத்தின் பெயர். ஏற்கனவே உடைந்த ஒரு குடியரசை எப்படி வெளியே சொல்லலாம் என்று அந்த கிளர்சிகாறாக்கள் கொபபட்டிருகலாம். அதைவிட எழுதியவர் " அருந்ததி ராய் " என்பதாலேயே அவர்கள் கோபப்பட்டிருக்கலாம் " அருந்ததி ராய்" பெயர் அந்த அளவுக்கு, கருத்துரிமை மறுப்போருக்கு, பிற்போக்காளர்களுக்கு, இந்துத்துவா சக்திகளுக்கு, .மக்கள் விரோதிகளுக்கு, " அச்சத்தை" சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது.


ஏற்கனவே " காஷ்மீர்" பற்றி அவர் பேசியதற்கே அந்த " சுதந்திரத்தின் எதிரிகளுக்கு" தாங்க முடியவில்லை. கலாட்ட செய்தார்கள். இப்போதெல்லாம் இந்தியாவில் " கருத்துகளுக்கே" போப்படுகின்ர ஒரு ஆளும் கும்பலை சந்திக்கிறோம.அதனால் தான் அவர்களது " முதல் எதிரியாக" அருந்ததி ராய் தோன்றுகிறார். " எழுத்தும், பேச்சும் " ஒரு நாட்டில் ஆள்வோரால் தாங்க முடியவில்லை என்றால், அந்த நாட்டின் இழி நிலை அங்கே படம் பிடித்து காட்டப்படுகிறது. ஆயுதம் தாங்கிய போரை அல்லது போராட்டத்தை ஆள்வோர்கள் எப்போதுமே அதைவிட பெரிய, பெரிய ஆயுதங்களை வைத்து அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் அதாவது பிற்போக்காளர்கள் பயப்படுவது, " மக்கள் சக்திக்கு" தான். அந்த மக்கள் சக்தியை புரிய வைப்பது, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது, அந்த மக்களை தட்டி எழுப்புவது, அந்த மக்களை அணிதிரட்டுவது, அனைத்துமே அந்த மக்களை எட்டக்கூடிய " செறிவான கருத்துக்களால்தான்" என்பது ஆள்வோருக்கு எப்போதுமே புரிகிறது. அதனால்ற்ற்ஹான் அவர்களது குறி" அருந்ததி ராய்" எழுத்துக்கள் மீதும், பேச்ச்சுக்கள் மீதும் போய் விழுகிறது.


அப்படி என்ன இந்த புதிய புத்தகமான, " உடைக்கப்பட்ட குடியரசு" என்பதில் எழுதியுள்ளார்? இது இந்தியாவின் இதயப் பகுதியில் " மாவோவாதிகள் செயல்பாடும், அரசின் நிலைமையும்" பற்றியது. அதில் அருந்ததி உண்மையை சொல்கிறார். எப்படி பிற்போக்குவாதிகள் உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்? " முதலில் அவர்கள் காவல்துறையை பயன்படுத்தினார்கள். தோல்வியை தழுவினார்கள்.அடுத்து அவர்கள் சல்வா சுடும் என்ற கூலிப் படையை பயன்படுத்தினார்கள். அதிலும் வெற்றி பெற வில்லை. அதையும் அடுத்து அவர்கள் துணை ராணுவத்தை பயன்படுத்தினார்கள். அதிலும் மாவோவாதிகளை அவர்களால் வெள்ள முடிய வில்லை. அடுத்து இப்போது ராணுவத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ராணுவம் அதற்கு யோசிக்கிறது. " சிறப்பு ஆயுத படை அதிகாரம்" என்ற கண்டால் சுட, கண்டவரை சுட அதிகாரம் வேண்டும் என்று அது கேட்கிறது".


ஏற்கனவே வட கிழக்கு மாநிலங்களில் பயன்படுத்துமந்த கொடூர சட்டத்தை பயன்படுத்த அவர்கள் இதயப் பகுதியிலும் தயாராகிறார்கள். முதலில் நாம் சொல்லிவந்த ," சுரங்கங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாதுகாக்க, அரசாங்கம் "பச்சை வேட்டையை" நடத்துகிறது" எண்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அருந்ததி ராய் எழுதியிருப்பதால் அவர்கள் அந்த புத்தக வெளியீட்டிலேயே கலாட்ட செய்தார்கள். அவர்கள் " பரத மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டார்கள். இப்போதுதான் நமக்கு புரிய வேண்டும். அந்த பாரத மாதா அவர்களது நலன் காக்கும் தாய் என்பது. அதாவது இந்திய " பழங்குடி மக்களுக்கு" எதிரான ஒரு தாய்தான் பாரத மாதா என்பது இப்போது தெளிவாக புரிகிறது.

நீரா ராடியா, பர்காதத் ஆகியோர் கைதாக மாட்டார்களா?

கனிமொழி கைதிற்கு பிறகு அரங்கேறும் காட்சிகள், வேடிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. கனிமொழி கண்ணீரை துடைக்க, திடீரென அவர்கள் வீட்டில் உள்ள பல பெண்களும் டில்லி செல்ல, அவர்கள் கனிமொழியை நீதிமன்றத்தில் சந்தித்து "குசலம்" விசாரிக்க, " இது என்னடா புதிய சோதனை" என்று கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மையார் அதிர்ச்சியடைந்து விலகி நிற்க, அந்த காட்சிகள் " ஆறுதல்" தேர்வைப்படும் கனிமொழிக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம். ஆனால் என்ன " சதியை" மனதில் வைத்துக் கொண்டு இந்த " வில்லிகள்" வந்தார்கள் என்று ராஜாத்தி எண்ணுவது தவிர்க்க முடியாதது.


கனிமொழிக்கு " ஜென்ம விரோதிகள்" என்று அறியப்படும் அந்த " சன் டிவி. குழுமம்" தனது தொடர் நாடகங்களில், ஒவ்வொரு வீட்டிலும் " பெண் வில்லிகள்" இருப்பதாக பல ஆண்டுகளாக கதைகளில் சொல்லி வருகிறது. அந்த " குழுமமே" இப்போது அப்படி புதிய "வில்லி" பாத்திரத்தில் நடிக்க தொடங்கி உள்ளதா என்று ராஜாத்தி சந்த்தேகிக்கலாம். என் என்றால் இந்த " தாவும், கலாவும்" தங்கள் "வணிக போட்டிக்காக" கலிஞர் டி.வி.யை முடக்கிப் போட, "சரத்குமார் ரெட்டி" யை வீட்டில் போய் அடிப்பதும், இப்போது சிறையில் தள்ளுவதும் செய்தார்கள என்பது யாருக்கு தெரியாது? இப்போது அவர்களது " தாயார் மல்லிகா" டில்லி சேறு கனிமொழியை பார்ப்பது நம்பக் கூடியதா? " செல்வி" தான் தனது தனத்தை களிஞரிடம் இந்த இரண்டாவது மகளுக்கு எதிராக இதுவரை வாதாடி வருபவர். இப்போது அவர் சென்று பார்ப்பது நம்பக் கூடியதா?


" அந்த சின்னப்பொன்னு இந்த குடும்ப மானத்திற்காக கம்பி என்னுது. அது வாயை திறந்தாள் நீங்க எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும். நீங்க எல்லா பெண்களும் இங்க நிம்மதியா இருக்கீங்க" என்று தாத்தா கொடுத்த அடியில் இப்படி போய் பார்கிறார்களா? எது எப்படி இருந்தாலும், உண்மையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான அமைச்சர் பதிவியை ஆ.ராஜாவிற்கு வாங்கித்தர வாக்குறுதி கொடுத்த, " நீரா ராடியாவும்,, பர்கா தத்தும்" குற்றப் பத்திரிகையிலும் வரவில்லை. கைது செய்யவும் படவில்லை.

ஒருவர் "டாட்டா" வின் பிரதிநிதி. இன்னொருவர் "சோனியாவின்" பிரதிநிதி. ஓஹோ. சீ.பி.ஐ. என்றால் இதுதானா? இப்படித்தான் உலகம் கேட்கிறது.

Wednesday, May 25, 2011

கே.பி. ஐ வைத்து அரசியல் செய்த இந்திய பிழைப்புவாதிகள்.

கே/பி. என்னமோ ராஜபக்சே கையில் சிக்கிதிலிருந்து , சிங்கள இனவெறி அரசியலுக்காக பயன்படுத்தப் படுகிறார் என்றால், எங்கேடா எழவு விழும் என்று காத்திருக்கும் " கழுகுகளாய்" இங்கே சில " அநாமதேயங்கள்" அலைகின்றன. ஏற்கனவே கே.பி. மலேசியாவில் கைது செய்யப்பட்டதற்கே இந்திய வெளிவிவகாரத் துறையின் உளவுத் துறையான " ரா" தான் காரணம் என்ற உண்மைகள் இருக்கின்றன. "ராஜீவ் கலையில்" கே.பி. தான் முக்கிய குற்றவாளி என்று இதே சக்திகள் ஏற்கனவே சொல்லி, சொல்லி வந்தன. அதற்கு " கே.பி.தான் புலிகளின் அனைத்து நாட்டு வேலைகளை கவனித்தார்" என்றும், " புலிகளின் அணித்துநாட்டு உறவில் ஆயுதங்களை வாங்கி வந்தவர்" என்றும் விளக்கமும் கொடுத்து வந்தனர். அதை அவ்வப்போது, " ரா" அமைப்பு கசிய விட்டு வந்தது.இப்போது அந்த " வழக்கை" திசை திருப்பி விடலாம் என்று ஆலோசனை கூறி இப்படி பேச வைக்கிறார்களா என்று தெரியவில்லை.


டில்லிக்காரர்களுக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம் " எப்படி ராஜபக்சே அரசை காப்பற்ற்ய்வது? " என்பதுதான். அதனால் அவர்கள் " தமிழ்நாட்டிலிருந்து" அழுத்தம் வரக்கொடாது என்று எண்ணுகிரரகள். அதற்கு தமிழக முதல்வர் " ஜெ" ஐ எப்படியாவது " ஈழத் தமிழர் எதிர் நிலைக்கு" கொண்டு போக திட்டமிடுகிறார்கள். அதற்காக கே.பி.ஐ பேச வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த கதை பற்றி, அந்த சீ.என்.என்--ஐ.பி.என். சிலரை பேட்டி காண்கிறது. அதில் இரண்டு " பிழைப்புவாதிகள்" தன்கள் கருத்தை கூறியிருக்கிறார்கள். ஒருவர் " ராஜபக்சே வின் ஆலோசகர் என்றும், " ரா" விற்காக ராஜபக்சேவிடம் கலந்து ஆலோசிப்பவர்" என்றும் பெயர் பெற்ற ஊடகவியலாளர் போர்வை பொத்திய "என். ராம்" . இவர் புலி எதிர்ப்பாளர் எனபது நாடறிந்த செய்தி.


அந்த என்.ராம், " புலிகள் தலைவர் திமுகவின் திராவிட கருத்தியலால் செல்வாக்கு செலுத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்பாளர் என்றும், ஜெயலலிதாவை கொள்ள புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் " ரா" பாடத்தை ஒப்புவித்து விட்டார். இந்த மனிதர் முழுமையாக தேர்தலுக்கு முன்பு கருணாநிதி ஆதரவாளராக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். அதை மாற்றி எழுதி, அம்மாவிடம் நற்பெயர் பெற இந்த சந்தர்ப்பத்தை கூட அவர் பயன்படுத்துவார். அதனால்தான் மறுநாளே முதல்வர் அம்மாவை சென்று பார்த்து, பூச்செண்டு கொடுத்து விட்டார்.


அடுத்த நபர், உலக மகா யோக்கியர் என்ற பட்டம் பற்ற " சுப்பிரமணிய சாமி" இவர் தேர்தல் நேரம் அம்மாவிடம் ஓட்ட, " ஜெயா டி.வி." நேர்காணல் மூலம் கருணாநிதி எதிர்ப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல் எத்ரிப்பு என்று பேசி, " பதினைந்து சீட்" கொடுப்பார்களா என்று வினவி, கிடைக்காது என்று டேஹ்ரிந்த பின், திமுக தான் வெற்றி பெரும் என்று வெட்கமில்லாமல் சொல்லி வந்தவர். இவரைப் பொறுத்தவரை அவரது " அமெரிக்க எஜமானர்களுக்கு" சேவை செய்வதே வேலை. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உண்மையான குற்றவாளியான அமெரிக்காவை காப்பாற்ற புலிகள் மீது பழி சுமத்த பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இன்னொரு நபரான " மணி சங்கர் அய்யர்" தனது நேர்காணலில், திமுக " பார்ப்பன எதிர்ப்பு " கிடையாது என்றும், " பார்ப்பன பெரிய அதிகாரிகளது" ஆலோசனைகளை பெற்று செயல்படும் கட்சி என்றும் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.


ஆகவே கே.பி. நேர்காணல் என்பது எந்த வகையிலும் " தமிழின எதிரிகைன் சதித் திட்டங்களுக்கு" உதவி புரிய வில்லை. அதை மீண்டும் எடுத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் கீட ஊடகத்தாருக்கு அவர் கொடுத்த பதிலில், " இது ஒன்றும் புதிய செய்தியல்ல" என்று கூறியிருக்கிறார்.அதாவது "புலிகள் தன்னை குறி வைத்தார்கள்" என்ற செய்தி ஒன்றும் புதிய செய்தி அல்ல என்கிறார். அதாவது அதற்காக எந்த ஒரு புதிய முடிவும் சாத்தியமல்ல என்று பொருள்படும். நமக்கு கலைஞர் போல பல பழைய விசயங்கள் நினைவுக்கு வருகிறது. அதாவது எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்து வந்த காலத்தில், செல்வி. ஜெயலலிதா எம்.ஜி.ஆரால், ராமநாதபுரம் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்குபோய், " புலிகள் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலையை பெற்றுத் தர முடியும்" என்று ஜெயலலிதா பேசினார்.

அதற்கு பிறகு, ராஜீவ் கொலைக்கு பிறகு, " பிரபாகரனை பிடித்துவரவேண்டும்" என்றும் சட்டமன்றத்தில் பேசினார். பிறகு தனக்கு புலிகள் குறி வைத்துள்ளார்கள் என்றும் பேசினார். பிறகு, தந்து சென்ற ஆட்சியில், உள்துறை மைச்சர் சிவராஜ் பட்டீல் அனுப்பிய கடிதத்திற்கு, " புலி என்று இல்லாத கிளையை கிளப்பாதீர்" என்றும் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இவை எல்லாமே இப்போதுள்ள சூழலுக்கு சம்பந்தமில்லாதவை. இப்போது ஐ.நா. நிபுணர் குழு " ராஜபக்சேவை" போர் குற்றவாளி என்று அறிக்கை அவித்துள்ள நிலையில், அவரே " ராஜபக்சேவிற்கு பன்னாட்டு நீதிமன்ற விசாரனையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்" என்று பேசிவருகிறார். அதை எந்த டில்லி கொம்பனும் அசைக்க முடியுமா என்பதே இப்போதைய கேள்வி.

Tuesday, May 24, 2011

கே.பி. யார் கையில்? ராஜபக்சே கையிலா? "ரா"கையிலா?

கே.பி. என்ற நபர் மலேசியாவில் பிடிபட்ட நேரத்திலிருந்து, உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டவர். இப்போது அப்படிப்பட்ட ஒரு நபர் சொன்னார் என்று, சீ.என்.என்.-ஐ.பி.என். என்ற தனியார் காட்சி ஊடகம் ஒரு நேர்காணலை நேற்று வெளியிடுகிறது. அதை எடுத்து இந்திய ஏடுகள் இன்று வெளியிடுகின்றன. அதில் அங்கு சுற்றி, இங்கு சுற்றி, கடைசியாக, ஜெயலலிதாவிற்கு எதிராக "புலிகளை" நிறுத்துவது எனபதில் போய் முடிக்கிறார்கள். இப்போது இது யார் கை என்பது சொல்லாமலேயே புரியும். எந்த நேரத்தில் எந்த செய்தியைஎப்படி வேல்யிடுகிரரகள் எனபதை வைத்துதான் நாம் இந்த " காய் நகர்த்தும் கதாநாயகர்களை " புரிந்து கொள்ள முடியும்.


திடீரென கே.பி. அதாவது, " குமரன் பத்மநாப" பிரபாகரன் பற்றி ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? கே.பி. இப்போது " ராஜீவ் கொலைக்கு" ஒரு புதிய அர்த்தம் கண்டுபிடிப்பது யாருடைய " கதை வசனம்"? திமுக வின் " திராவிட கருத்தியலில்" பிரபாகரன் செல்வாக்கு செலுத்தப்பட்டார் என்ற இன்றைய கே.பி. வாதம் ஒரு பச்சையான திசை திருப்பல். ஏன் என்றால் பிரபாகரன் என்றைக்கும் 'திராவிடக் கருத்தியலை' ஏற்றதில்லை.இந்தியாவையே நம்பிவந்தார். உதாரணமாக பிரபாகரன் ஒரு 'சிறந்த ஆன்மீகவாதி'. அதுமட்டுமின்றி, 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' வழியை பின்பற்றும் கருத்துக் கொண்டவர். அப்படிப்பட்டவர் எப்படி ' பிராமண எதிர்ப்பாளராக' கே.பி. சொல்வது போல இருந்திருக்க முடியும்?.


கே.பி. சொல்வதுபோல, பெரோஸ் காந்தி என்ற பார்சி சாதியை சேர்ந்தவரின் மகனான ராஜீவ் காந்தி எப்படி பார்ப்பனராக இருப்பார்?. அவரை பார்ப்பனர் என்பதற்காக புலிகள் கொலை செய்தார்கள் என்று கே.பி. கூறுவது, ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் பாணி. இந்த கருத்தியல் எப்போதுமே இந்தியாவில் திமுக விற்கு எதிராக வழக்கமாக, குற்றம் கூறும் சக்திகள் சொல்லிவரும் குற்றச்சாட்டு. அதை எந்த விதத்திலும் 'புலிகளுக்கு' எதிராக பயன்படுத்த முடியாது. ஏன் என்றால் தொடக்கம்முதல், இறுதி வரை பிரபாகரனும், புலிகளும், எம்.ஜி.ஆரின் விசுவாசிகள். ஆதரவாளர்கள். இது கே.பி.க்கும் தெரியு. ஆனாலும், மேலிருந்து உளவுத் துறையினர் எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் ஐன்றைய கே.பி.யின் நிலைமை?


பிரபாகரன் தனது வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையான தனது திருமணத்தை, ஒரு கோவிலில் வைத்து நடத்தினார். அதை " அய்யர்" வைத்துதான் நடத்தினார் என்பதும், அங்கு இதே கே.பி. இருந்தார் எனதும் நாடர்ந்த கதை. அப்படி இருக்கையில் பிரபாகரனையும், புலிகளையும், "பார்ப்பன எதிர்ப்பாளர்கள்" என்று முத்திரை குத்துவது எப்படி சரி?
இவ்வாறு " கிழிந்துபோன கந்தல் துணி" போல ஒரு அறிககையை இந்த உளவு நிறுவனங்கள் தயார் செய்து கே.பி. பெயரில் வெளியிட்டால் யார் நம்ப முடியும்? அதேபோல " ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்று அவரையும் புலிகள் கொலை செய்ய முனைந்ததாக" அடுத்த கதையையும் கே.பி.யை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள்.



இதேபோல, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, 2005 ஆம் ஆண்டில், மத்திய அரசில் அப்போது ஆட்சியில் இருந்த இதே ஐ.மு.கூ. வின் முதல் தவணை ஆட்சியில், உள்துறை அமைச்சர்கா இருந்த சிவராஜ் பட்டீல், " தனது ஆண்டறிக்கையில் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் இருப்பதாக " அறிவித்தார். அதற்கு முதல்வர் "ஜெ" அப்போதே பதிலடி அறிக்கை வெளியிட்டார். அதற்குபிறகு இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு, உள்துறை அமைச்சர் எழுதினர். அதில் " இரண்டு புலிகளின் பெண் தற்கொலைப் படையினர்" பனப்பாக்கம் வந்து இறங்கியிருப்பதாகவும், முதல்வர் "ஜெ" கொலை செய்ய வந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதற்கும் அன்றைக்கே " புலி கிளியை கிளப்பாதீர்" என்று உள்துறையின் பொய்யுரையை அம்பலப்படுத்தி, இரண்டு அரை அமனி நேர நிகழ்ச்சிகளில், நானே பதில் கொடுத்திருந்தேன். அதுவும் அந்த நேரத்தில், முதல்வராக செல்வி.ஜெயலலிதா இருக்கும்போதே, " ஜெயா டி.வி." யில் ஒளிபரப்பப்பட்டது. இப்போது அதே சக்திகள் அதேபோல ஒரு போய் கூற்றை உண்மையாக்க தங்கள் கைகளில் கைதியாக உள்ள ஒரு கே.பி.யை பயன்படுத்துகிறார்கள்


இன்று டில்லிக்கும், அதன்மூலம் கொழும்புக்கும் பிரச்சனையே ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்ததுதான். ஏன் என்றால் அவர்கள் இருவரும் கருணாநிதி ஆட்சி இருக்கும்வரை கவலை இல்லாமல் இருந்தனர். பெரும் அளவில் ஜெயலலிதா அணி வந்தபின், அதுவும் முதல்வர் ஜெயலலிதா வேற்றுபெற்ற பின்பும்கூட, ஈழப்பிரச்சனையில் " தமிழர்களுக்கு " சாதகமாக " ராஜபல்செவை" அனைத்து நாட்டு விசாரணைக் கூண்டில் என்ற்றவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருப்பது கண்டு இந்த இரண்டு நாடுகளின் தலைமையும் நடுங்கிக் கொண்டு இருகின்றன. அதனால் அவரை அதாவது "ஜெ".வை ஈழப் பிரச்சனையில் கலைத்து விட முயல்கின்றனர். அதுதான் " கே.பி." பெயரில் அவர்கள் எடுக்கும் முயற்சி. அதற்காக " கோத்தபாயே ராஜபக்செடும், பசில் ராஜபக்சேயும்", கடந்த வெள்ளிக்கிழமை இரவு டில்லி வந்து கலந்து பேசியதும், தாங்கள் கொழும்பில் இருந்த முன்னாள் இந்திய தூதர் அலோக் பிரஷாந்தின் மகன் நிதின் பிரஷாந்தின் திருமணத்திற்கு வந்ததுபோல காட்டிக்கொண்டதும், அதன்மூலம் "டில்லி ஆலோசனையின்" பேரில், எப்படியாவது "ஜெ"வை சமாதனப்படுத்த முயல வேண்டும் என திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. அதன் அடுத்த " காய் நகர்த்தல்" தான் இந்த கே.பி. நேர்காணலும், அதற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும்.

மரியம் பிச்சை வெற்றிக்காக உயிரை பறித்த பெருமான் யார்?

அமைச்சர் மரியம் பிச்சை, தள்ளுவண்டியில், காய்கறி வணிகம் செய்து வந்த ஒரு நல்ல எம்.ஜி.ஆர். பக்தர்.அதை தொடர்ந்து ஜெ விசுவாசியாக மாறிய நல்ல மனிதர். அவரது மறைவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடகை கற் ஓட்டுனர் தவறா? முன்னாள் சென்ற கண்டைனர் வாகன தவறா? அல்லது ஓரண்டுபெரும் சேர்ந்து செய்த சதியா? இது புலனாய்வில் உள்ள விவகாரம். ஏன் அவர் " பதவி ஏற்பு" அன்று சரியாக மரணம் அடையவேண்டும்? இது "பதிவி ஏற்பு" நிகழ்வையும் உடைக்க உள்ள சதியா? இத்தனை சதி செய்ய " பெரிய இடம்" திட்டமிடாமல் முடியுமா?

ஏற்கனவே இது போன்ற " லார்ரி ஏற்றி" கொலை செய்வதற்கான முயற்சி, ஜெயலலிதா மீதே மதுராந்தரத்தில் நடந்ததே? அப்போதே ஒரு முக்கிய திமுக கையின் பினாமி, "அப்பு"டியே சந்தேகப்பட்டியலில் இருந்தாரே? அவர்தானே " சங்கரராம ஐயர்" கொளைவழக்கில்பிடிபட்டவர். அவர் முன்பு கலைஞர் வந்துபோன " ஆலிவர் சாலை" வீட்டில் தனி அரை கொடுக்கப்பட்டு இருந்தாரே? சங்கராச்சரியுடன் சிக்கிய பின் பிணையில் வந்து, அமைச்சர் ஆற்காட்டார் வீட்டில் இருந்தாரே? சென்ற ஆட்சியில் அனைத்தையும் மறுபடி அனுபவித்தாரே? " ஓலை நடந்த பாணி" என்றுபார்த்தால் இத்தனை சந்தேகமும் வருகிறதே?

கொலைக்கான கானம் எதுவாக இருக்கும்? அப்போதுதான் " வெல்லப்பட முடியாதவர்" என்று இருந்த ஒரு பெரும் பண்ணையாரை அவரது தொகுதியிலேயே வென்று இருக்கிறார். இது அந்த பெருமானுக்கு கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மைதான்? நடந்தது போக்குவரத்தில் நடந்துள்ளது. போக்குவரத்து துரையின் ஓட்டுனர்கள் சமயபுரம் வரை வந்துள்ளனர். அதற்கு பிறகு தனியார் வாடகை வாகனம், வாடகை ஒட்டி. அதுவு முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. தமிழ்நாடு உழுக்க " போக்குவரத்து துறை" யை கையில் வைத்திருந்தவருக்கு, ஒவ்வொரு வாடகை கார் நிறுவனமும், அதுவும் குறிப்பாக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனங்களை தெரியாமல் இருக்காது. அவரது தம்பிக்கு அதைவிட தாயகமாகவே தெரிந்திருக்கும். ஆகையால் விசாரணை, மரியம் பிச்சையால் தோற்கடிக்கப் பட்ட கே.என்.நேரு மீதும் திரும்பத்தானே செயும்? பெரோஸ் காந்தி மரணத்தில் , ஜவஹர்லால் நேருவையே சந்தேகப்பட்டார்களே? இந்த நேரு எம்மாத்திரம்?

தயா நடிப்பு கொஞ்சம் ஓவர்

தன் சம்பந்தி ஏட்டில், அதாவது " தி ஹிந்து" ஏட்டில் தனது ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட, விக்கிலீக்ஸ் கசிவான, கலைஞர் பற்றிய தனது கருத்தை, அமெரிக்க தூதர் ஹூபரிடம் கூறியதை எப்படி ஆராயாமல் வெளியிடலாம் என்று கோபபடுவது போல ஒரு நடிப்பு. அதற்கு ஒரு மறுப்பு வேண்டுதல். இல்லாவிட்டால் மான நட்ட வழக்கு ஐந்து கோடி கேட்டு என்று ஒரு வக்கீல் நோட்டிஸ். ஆஹா. இந்த நடிப்பை தமிழ்மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? என்ன?

ஒருபுறம் கலைஞரை மிரட்ட, அந்த உண்மையை வெளியிடுவதும், மறுபுறம் அதையே மறுத்து கலைஞருடன் ஓட்டிக்கொள்வதும், மின்னொரு புறம் " ஜெ" யை தான் கலைஞர் விரோதி என்று ஏமாற்றுவதும், எப்படி இந்த சகொதரர்கலாலா நடிக்க முடிகிறது?

Monday, May 23, 2011

தயாநிதி விஸ்வரூபம் இப்போது தெரிகிறதா?

கழகம் ஒரு குடும்பம் என்றார் தலைவர். குடும்பமே கழகம் என்றார் பின்னால். குடும்பத்திற்குள்ளும், கோடலிக்காம்பு இருக்கும் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு அத்ஜை அடையாளம் கண்டுகொண்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். முழுமையாக வனுக எண்ணம் கொண்டவர்கள், திமுக விற்கு பொருந்துமா? திமுக கொள்கை சார்ந்த கட்சியாக இருக்க விரும்பினால், வணிகர்கள் கைக்கு அதை போகவிடலாமா? இது போன்ற கேள்விகளை திமுக வின் நண்பர்கள் சிலர் எழுப்பிக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த நண்பர்கள் எல்லோரும் " தமிழ் மையம்" அமைப்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை அடையாளம் கண்டு கொண்டது வணிக கும்பல். அதற்கு பிறகும் அவர்களது பின்னணிகளை தோண்ட மாட்டார்களா?


தனக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய ஆளும் கும்பலின் தலைமைப் பீடமான " சோனியா" கும்பலை கையில் போட்டு செயல்படாதா வணிக கும்பல்? அதுதான் "ஸ்பெக்ட்ரம் ஊழல்" வெளியே வார, அதை வைத்து வணிகர்களின் எதிரிகள் உள்ளே செல்ல, வழி எளிதாகி விட்டதாக வணிகர்கள் நினைத்தால், அதையும் தடுக்க ஒரு " குடும்பத் தலைவர்" இருக்கிறாரே? சரி. நமக்கு இனி திமுக சரிப்பட்டு வராது என்று எண்ணிய வணிக கும்பல், தங்களுக்கும், திமுக தலைமைக்கும் உள்ள முரண்பாட்டை, சண்டையை, பகையை பகிரங்கப் படுத்த நேரம் வந்துவிட்டது என்று இப்போது எண்ணுகிறார்கள். அதனால்தான் ஒரு முக்கிய " ரகசிய செய்தியை" இந்த நேரத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இன்று காலையில் வெளியிட்டு விட்டார்கள்.


இன்று காலை வணிகர்களில் இளையவர் பெண் எடுத்த வீட்டிலிருந்து வெளிவரும் அந்த " ஆங்கில பிரபல நாளேட்டில்" தங்களுக்கும், " குடும்பத் தலைவருக்கும்" உள்ள முரண்பாட்டை வெளியிட்டுவிட்டார்கள். அதாவது இன்று காலை ஆங்கில ஏடான " தி ஹிந்து" வில் முதல் பக்கத்திலேயே அந்த " அதிர்ச்சி" செய்தி. அடுத்து உள் பக்கத்தில் அடுத்த " அதிர்ச்சி" செய்தி. இவை இரண்டும் ஏன் ஒரே நாளில் வெளியிடப்படவேண்டும்? முதல் பக்கச் செய்தி, " தயாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க் தூதராக இந்தியாவில் இருந்த " ஹூபர்" வசம் சொன்ன செய்தி என்று அது வெளியாகி உள்ளது. அதில் " திமுக தலைமை அதிகாரத்திற்கு வந்தவுடன் ஊழல் செய்யத் தொடங்கி விட்டார்கள்" என்று அந்த அமெரிக்க அதிகாரியிடம் தயாநிதி மாறன் கூறியது வெளியாகி உள்ளது.


விக்கி லீக்ஸ் இணைய தளத்திற்கு கசிந்துள்ள இந்த செய்தியை, "தி ஹிந்து" எடுத்து போட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த ஏடு விகிலீக்ஸ் கசிவுகளை பல நாட்களாக வெளியிட்டு வருகிறது. அதில் எல்லாமே அதிர்ச்சி செய்திகள்தான். பல செய்திகள் திட்டமிட்டு அமெரிக்கா தலைமை கசிய விடச் சொல்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த செய்தி, " தயாநிதிக்கு" எதிரான செய்திபோல தோன்றினாலும் எந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது எண்பதை அவித்தே யாருக்கு சாதகமான வெளியீடு என்று கணிக்க வேண்டும். இப்போது திமுக வில் தயாநிதி தனக்கு போட்டியாக டில்லி பிரதிநிதியாக வரும் கனிமொழியையும், ஆ.ராஜாவையும், ஊடகப் போட்டியாக வரும் சரத்குமார் ரெட்டியையும், திகார் சிறைக்குள் தள்ளுவதில் வெற்றி அடைந்துவிட்டார்.அடுத்த டில்லி திமுகஅதிகாரபூர்வமான பிரதிநிதி என்ற பதக்கத்தை பெறவேண்டிய சூழல்.


ஆனால் " தாத்தா" அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாறாக " டி.ஆர்.பாலு" வை அந்த இடத்திற்கு அனுப்பி, ஐ.மு.கூ.வின் இரன்டாவது ஆட்சியில் கூட்டணி கட்சி திமுக சார்பாக " தயாநிதி கிடையாது. பாலுதான்" என்று பதிவு செய்து விட்டார். டில்லியில் இதுவரை " தயா" கிளப்பி வந்த வதந்திகள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டன. திமுக என்றால் ஆங்கிலத்தில் "தயாநிதி மாறன் கழகம்" என்று பலரிடம் டில்லியில் சொல்லி, அதில் தானும், தன் மாமா ஸ்டாலினும்தான் தலைமையில் இருப்போம் என்று உறுதிபட சொல்லிவந்தார். அதற்கு இப்போது அடி விழுந்து விட்டது. அதுவும் நேற்று அதாவது இருபத்தொன்றாம் நாள் காலை கோபாலபுரம் வீட்டிடில் கூடிய உயர் மட்ட தலைவர்களுடன் " குடும்பத் தலைவரை" கலப்பதில் "தயாநிதி"யும் இருந்தார். கனிமொழி கைது விவகாரத்தில் காங்கிரஸ் மீது கலைஞர் எவ்வளவு தூரம் கோபம் கொண்டுள்ளார் எண்பதை தயா நேரடியாக அறிந்துவிட்டார். இனி தனக்கும் டில்லி திமுக தலைமை கிடைக்காது என்றும் அனுமானித்து விட்டார். பாலுவும் ராஜாத்தி குழுதான் என்பது தயாவின் பார்வை.


இனி தான் செள்ளவேர்ந்டிய இடன் சொநிஆவிடம்தான் எபதில் தெளிவாகி விட்டார். அதை தானே பகிரங்கமாக செய்தால், கழகத்தில் உள்ள தனது அணியை கலைக்க முடியாது என்று எண்ணுகிறார். ஆகவே அதை ஒரு வித்தியாசமான முறையில் செய்ய தலைப்பட்டார். தனது " சம்பந்தி" ஏட்டின் மூலம் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் அமெர்க்க அதிகாரியிடம் கூறியதை விகிலீக்ஸ் மூலம் எடுத்த் அந்த "தி ஹிந்து" ஏட்டில் இன்று வெளியிட வைத்தார். அதில் " ராகுல் தலைமைதான்" சரியானது என்று தயா கொர்ரியதும் வெளியாகி உள்ளது. உள்ளே அதை விட மோசமாக, கருணாநிதியை கிழித்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக கலைஞர் எடுக்கும் " அஸ்திரம்" " ஈழத் தமிழர்" பிரச்சனை எனபது காங்கிரசுக்கும், தயாவிற்கும் டேஹ்ரியும். ஆகவே அதுபற்றி தான் கூறிய மொன்ன்றாண்டு முன்னுள்ள கருத்துக்களையும் வெளியிட வகை செய்து ள்ளார்.


அதில் 2008 ஆம் ஆண்டில், அதாவது "வ்ன்னிப் போர்" நடக்கும் போது,கருணாநிதி இருந்த பட்டினிப் ஓர் உட்பட, " நாடாளுமன்ற உறுப்பினர்கள்" ராஜினாமா என்ற இலங்கை தமிழர் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டது அனைத்துமே ஒரு " திசை திருப்பும் நாடகம்" என்று பகிரங்கமாக அந்த அமெரிக்க தூதர் ஹூப்பர் வசம் " தயாநிதி " தெரிவித்தார் என்பது வெளியாகி விட்டது இப்போது கலைஞர் வசமாக மாட்டிக் கொண்டார். அம்பலப்பட்டு உலகத் தமிழர் மத்தியில் நிற்கிறார். " தயாநிதி" இனி அழியும் திமுக வில் தனக்கு வேலை இல்லை என்ற நிலை எடுத்து விட்டார்.