மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெய்தாபூர் அணு உலை வர இருக்கிறது. அது ஆசியாவிலேயே பெரியது என்கிறார்கள். அப்படியானால் பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா என்று கேட்டு விடாதீர்கள். அதை பெரும்பான்மையான அந்த வட்டார மக்கள் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமே ஆதரிக்கிறது. அதற்காக நமது பிரதமர் பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு மூலதன நிறுவனமான அரவே என்ற மைப்பில் "ஆறு உலைகளுக்கு" ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவனம் பிரான்ஸ் நாடு அணு உலை மூலம் எழுபத்தைந்து விழுக்காடு மின் தேவையை நிரப்பினாளும்கூட, எப்படி "பாதுகாப்படர் முறையில்" நடந்து கொண்டுள்ளது என்பது சமீபத்தில் அம்பலமாகி விட்டது.
அதாவது பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் "அணு கழிவான உரேனியம் கழிவை" நிலத்தடி நீருக்குள் திரவமாக்கி இறக்கி விட்டதை கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அபராதமாக நாற்பதாயிரம் டாலர்கள் தண்டனை கொடுத்துள்ளது. இது எதை காட்டுகிறது? எழுபது விழுக்காடு தங்கள் மின் தேவையை அணு உலைகள் மூலம் நிரப்பி கொள்ளும் ஒரு நாடு, .எந்த அளவுக்கு அந்த அணு உலைகள் விசயத்திலும், அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் "கவனமாக " இருக்கும் என்று நாம் பெருமை பட்டுகொள்கிறோம். ஆனால் அப்படி கவனம் அங்கே உள்ள அரசாங்கத்திற்கும், அங்கே உள்ள அணு உலைகளை தயாரிக்கும் பெரிய நிறுவனத்திற்கும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் நமது பிரதமர் ஜெய்தாபூர் அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டார் என்றால் இவை எவ்வளவு பாதுகாப்பானவை? இதனால்தான் சிபிஎம் அப்படி ஒரு பதினைத்து பேர் கொண்ட குழுவை மைத்து அந்த அணு உலைகள பற்றி ஆய்வு செய்ய போகிறது. ஆகவே அது வரவேற்க வேண்டிய செய்திதான்.
ஆனால் அதே சீ.பி.எம். கட்சிக்கு "கூடங்குளம், கல்பாக்கம்" பற்றியும் அதே அளவில் கவலை இருக்க வேண்டும் அல்லவா? ஏன் இல்லை? இது தமிழ்நாட்டில் தமிழர்களை கொள்ள வரும் ஆலை என்பதாலா? அப்படி இருக்காது. இது ரஷ்யா விற்கின்ற அணு உலைகள என்பதால் அவர்கள் இந்த அணு உலைகள எதிர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று இன்னமும் முடிவு செய்யவில்லையா? அல்லது பிரிந்த காரட் மதுரை வந்தபோது, புகுஷிமாவிற்கு பிறகு தங்கள் கட்சியும் அணு உலைகள பற்றி மறுபரிசீலனைக்கு வந்துவிட்டோம் என்று கூறியதும், உடனேயே சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ஆர். நாங்கள் கூடங்குளம் அணு உலையை எத்ரிக்க வில்லை என்று கூறினாரே அதில் நாம் குழம்பி கொண்டிருப்பதை கண்டு அவர்கள் சிரித்து கொண்டு இருக்கிறார்களா?
Sunday, October 23, 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு, ஆரோக்கியமான சர்ச்சையை சென்னையில் கிளப்பியது.
"சேவ் டமில்ஸ்"சென்னையில் லயோலா கல்லூரி பி.எட.அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது" பரமக்குடி அரசு வன்முறையும், மௌன வன்முறையும்" பற்றியதாக இருந்தது. பலரின் மௌனம் சிலரை அதிகமாக கோபம் ஊட்டி அதுவே " தடுமாறிய" பேச்சுக்கும் இட்டுசெல்லும் என்பதுபோல, நமது வழக்கறிஞர் விஜயேந்திரன் " நஞ்சு கலந்து கொல்ல வேண்டும், மரபணு மாற்ற வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்டார். அதனால் யாருமே அதை பெரிதாக நினைக்கவில்லை. இது "விரக்தியின் உச்சம்" என இருந்துவிட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும் கூட்ட ஏற்பாட்டாளர் செந்தில் தனது கடமை என்று பதில் சொல்ல வந்தார். விஜயேந்திரன் சந்தேகப்படுவதுபோல, தாங்கள் ஒரு "பணம் வாங்கும் தொண்டு நிறுவனம் அல்ல" என்றார். அதேசமயம் " பெண்களை இழிவுபடுத்தல்" போன்ற சர்ச்சைகளும் இருக்கிறது என்றார்.
அதற்குபிறகு, இளம்பரிதி பேசவந்தார். அவர் தெளிவாக கூட்ட "தலைப்பை" பிடித்து கொண்டார். அதில் உள்ள மௌன வன்முறையை விளக்கினார். "முக நூல்" பக்கங்களில் பல "ஆதிக்க சாதிவெறி சொற்கள்" நடனமாடுவதை எடுத்து ஆதாரம் காட்டினார். உயர்தொழில்நுட்பம் படித்த பிறகும், கேவலமான சாதிவெறி தொடர்வதை அம்பலப்படுத்தினார். தேவர் சமூக படித்த இளைஞர்களில் இப்படியுமா? என எண்ண வைத்தது. அதேபோல "ஒரு பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரை" பற்றி கூறியது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த பிரபலம் எப்படி பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேச அழைத்த இடத்தில் வந்து அது பற்றி தனது "ஒன்றரை மணிநேர" உரையில் பேசாமல், மரண தண்டனை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் என்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். பிரபலம் பற்றி தெரிந்தது இவ்வளவுதானா?
அடுத்து "முத்துராமலிங்க தேவரின் உறவுக்காரரான" தினகரன் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி, இம்மானுவேல் சேகரன் சாதி வெறியில் தான் தேவரால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனபதை சுட்டி காட்டினார். அதில் தேவர்களை "ஆந்திராவில் இருந்து வந்தவர்களாக" சொல்லி இருப்பதையும், "தேவேந்திரகுல வேளாளரை" தமிழ் பழங்குடி என்று விளித்திருப்பதையும் மேற்கோள் காட்டினார்.அந்த புத்தகத்தை வெளியிட்ட பிறகு ஒரே மாதத்தில் எப்படி "தினகரனும்" கொலை செய்யப்பட்டார் என்பதையும் கூறினார். "ம.க.இ.க." பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் கூறியது அந்த அமைப்பினருக்கு கோபத்தை கொடுத்து, அவர்கள் கடைசியில் வீரசாமி மூலம் தாங்கள் தெரிவித்த கருத்துக்களை காட்டி பேசினர். எப்படியோ இளம்பரிதி பல விசயங்களை புதிதாகவும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விட்டார்.
அதன்பிறகு வ.கீதா பேசினார். அவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான சாதி ஒடுக்குமுறை வரலாற்றை எடுத்து சொன்னார்.வ.கீதா கீழ தஞ்சையில் திராவிடர் கழகம் உருவாக்கிய சாதி எதிர்ப்பு தளத்தில்தான் பொதுவுடைமைவாதிகள் பயணம் செய்தார்கள் என்றார். அது ஒருபுறம் உண்மை என்றாலும், பொதுவுடைமைவாதிகளும் அன்று "சாணிப்பால், சவுக்கடி" என்பதற்கு எதிராக சீனிவாசராவ் தலைமையில் சாதி எதிர்ப்பையும் சேர்த்து போராட்டம் எடுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாம். அதேபோல திராவிடர் கழகமும், கீழ தஞ்சையில் " விவசாய கூலிகள்" சங்கம் நடத்தியது என்பதையும் சொல்லியிருக்கலாம். விடுதலை ராஜேந்திரன் அடுத்து பேசினார். அவர் 1883 இலிருந்தே தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி மோதல்கள் பற்றி கூறினார். அதில் நாடாருக்கும், தேவர்களுக்கும் நடந்த சாதி மோதல்களை கூறினார். அதில் தேவர்கள் நாடார்களை இழிவாக நடத்தியது, அடக்குமுறை செய்தது எல்லாமே விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த முதுகளத்தூர் சாதி அடக்குமுறைகளும் பேசினார். மள்ளர் அல்லது குடும்பர் அல்லது பள்ளர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை " தலித்" என்றே அவர் குறிப்பிட்டார். சமீப வன்முறைகளும் "தலித்" மீது என்றே வாதிட்டார். அதுவே சில இளைஞர்களுக்கு "கோபத்தை" ஏற்படுத்தியது.
அங்கே நடந்தது "தேவர்-பள்ளர்" மோதல் என்றும், அதை அப்படியே விவரிக்க வேண்டும் என்றும், "தலித்" என்ற சொல் பரந்த வேறு பொருளுக்கு இட்டு சென்றுவிடும் என்றும், அதனால் அங்கே இருக்கும் முரண்பாட்டை சரியாக எடுத்து சொன்னதாக் ஆகாது என்றும் அவர்கள் கூறினர். எப்படி சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல கூடாது என்றும் பதில் வ்ந்தது. அந்த சமூகத்தில் இவர்கள் சிலர்தான் என்றும் க்ருத்து வந்தது. அது அனைத்து தேவேந்திரகுல வேளாளர்களிடமும் இருக்கிறது என்று கூறியதற்கும் எதிர்ப்பு வந்தது. குட்ம்பமாரை மற்றவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறர்கள் என்பதும் தலைநகரில் உள்ள அறிவுஜீவிகளிடம் எப்படி கருத்து இருக்கிறது என்பதும் அங்கே வெளிப்பட்டது. அந்த சமூகம் எப்படி தங்களை அழைத்து கொள்ள விரும்புகிறார்களோ அப்படி அவர்களை அழைக்க நமது அறிவுஜீவிகள் தயார் இல்லையா? என்று தெரியவில்லை. அதில் ஒரு மள்ளர் "தலித் என்றால் பெண்களும்" உண்டல்லவா? என்றார். அபப்டியானால் அங்கே நடந்த "தேவர்-பள்ளர்" மோதலை "மறவர் பெண்களையும் சேர்த்து உச்சரிக்கும் தலித் " என்ற் வார்த்தை மூலம் எப்படி சரியாக வெளிப்படுத்த முடியும்? என்று வினவினார். அது என்னமோ அறிவுபூர்வமாக பட்டது.
பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு கேள்வி வந்தது. பெயரில் "வரலாறு, பண்பாடு, போர், போர்க்களம், வீரசாவு" இத்தனையும் இருக்கிறது என்று நாம் பதில் சொல்ல வேண்டி வந்தது. "உழவர் பெருங்குடியின் போர்ப்படைபிரிவுதான் "தேவேந்திரகுல வேளாளர்கள்" என்று நான் சொன்னதை பலரும் ரசிக்க வில்லை என்று தெரிந்தது. வரலாறுகளை புத்தகங்களில் படித்து தொகுக்கலாம்.நிகழ்வுகளை உண்மை அறியும் குழுக்கள் மூலம் சில நாள் அங்கே சென்றுவ்ந்ததால் தெரிந்து கொண்டு திருப்தி அடையலாம். ஆனால் ஒடுக்கப்பட்டமக்களது வரலாற்று நிலை பற்றியும், போர் தொடுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தை பற்றியும், அந்த சமூகத்துடன் ஆழமாக வாழ்ந்துதானே கற்று கொள்ள முடியும்? இப்படி நமக்கு புரிவது எல்லாமே தவறு என்று அறிவுஜீவிகள் கருதலாம். அறிவுஜீவிகளின் கருத்துதான் எழுதப்படும். பேசப்படும். பதிவு செய்யப்படும். இதுதான் ஐன்றைய நிலைமை.
போர்களத்தை சந்திக்கும் உழவர் கூட்டம் தனக்கு ஆதரவாக வந்திருக்கும் சக்திகளுடனும், நகர்ப்புற அறிவுஜீவிகளுடனும், அமர்ந்து தங்கள் மதிப்பீட்டை அவர்களும் புரியும் வண்ணம் கூறுவதற்கான "உத்திகளை" இன்னமும் உருவாக்க வில்லை என்றும், எந்த மொழியில் அவர்களையும் தங்கள் உணர்வுகளை ஏற்று கொள்ள செய்யவேண்டும் என்று இன்னமும் அறிந்திருக்க வில்லை என்றும் பேசி கொண்டு வெளியே வந்தோம். ஆனாலும், ஏற்பாடு செய்திருந்த அமைப்பும், பேசிய பேச்சாளர்களும், கலந்து கொண்டோரும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஆதரவு சக்திகள் என்பதையும், அது வரவேற்கதக்கது எனபதையும் வந்திருந்து கோபப்பட்ட இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர்.எபப்டியோ அது ஒரு நல்ல ஆரோக்கியமான் சர்ச்சை என்றே புரிந்தது.
அதற்குபிறகு, இளம்பரிதி பேசவந்தார். அவர் தெளிவாக கூட்ட "தலைப்பை" பிடித்து கொண்டார். அதில் உள்ள மௌன வன்முறையை விளக்கினார். "முக நூல்" பக்கங்களில் பல "ஆதிக்க சாதிவெறி சொற்கள்" நடனமாடுவதை எடுத்து ஆதாரம் காட்டினார். உயர்தொழில்நுட்பம் படித்த பிறகும், கேவலமான சாதிவெறி தொடர்வதை அம்பலப்படுத்தினார். தேவர் சமூக படித்த இளைஞர்களில் இப்படியுமா? என எண்ண வைத்தது. அதேபோல "ஒரு பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரை" பற்றி கூறியது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த பிரபலம் எப்படி பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேச அழைத்த இடத்தில் வந்து அது பற்றி தனது "ஒன்றரை மணிநேர" உரையில் பேசாமல், மரண தண்டனை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் என்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். பிரபலம் பற்றி தெரிந்தது இவ்வளவுதானா?
அடுத்து "முத்துராமலிங்க தேவரின் உறவுக்காரரான" தினகரன் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி, இம்மானுவேல் சேகரன் சாதி வெறியில் தான் தேவரால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனபதை சுட்டி காட்டினார். அதில் தேவர்களை "ஆந்திராவில் இருந்து வந்தவர்களாக" சொல்லி இருப்பதையும், "தேவேந்திரகுல வேளாளரை" தமிழ் பழங்குடி என்று விளித்திருப்பதையும் மேற்கோள் காட்டினார்.அந்த புத்தகத்தை வெளியிட்ட பிறகு ஒரே மாதத்தில் எப்படி "தினகரனும்" கொலை செய்யப்பட்டார் என்பதையும் கூறினார். "ம.க.இ.க." பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் கூறியது அந்த அமைப்பினருக்கு கோபத்தை கொடுத்து, அவர்கள் கடைசியில் வீரசாமி மூலம் தாங்கள் தெரிவித்த கருத்துக்களை காட்டி பேசினர். எப்படியோ இளம்பரிதி பல விசயங்களை புதிதாகவும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விட்டார்.
அதன்பிறகு வ.கீதா பேசினார். அவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான சாதி ஒடுக்குமுறை வரலாற்றை எடுத்து சொன்னார்.வ.கீதா கீழ தஞ்சையில் திராவிடர் கழகம் உருவாக்கிய சாதி எதிர்ப்பு தளத்தில்தான் பொதுவுடைமைவாதிகள் பயணம் செய்தார்கள் என்றார். அது ஒருபுறம் உண்மை என்றாலும், பொதுவுடைமைவாதிகளும் அன்று "சாணிப்பால், சவுக்கடி" என்பதற்கு எதிராக சீனிவாசராவ் தலைமையில் சாதி எதிர்ப்பையும் சேர்த்து போராட்டம் எடுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாம். அதேபோல திராவிடர் கழகமும், கீழ தஞ்சையில் " விவசாய கூலிகள்" சங்கம் நடத்தியது என்பதையும் சொல்லியிருக்கலாம். விடுதலை ராஜேந்திரன் அடுத்து பேசினார். அவர் 1883 இலிருந்தே தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி மோதல்கள் பற்றி கூறினார். அதில் நாடாருக்கும், தேவர்களுக்கும் நடந்த சாதி மோதல்களை கூறினார். அதில் தேவர்கள் நாடார்களை இழிவாக நடத்தியது, அடக்குமுறை செய்தது எல்லாமே விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த முதுகளத்தூர் சாதி அடக்குமுறைகளும் பேசினார். மள்ளர் அல்லது குடும்பர் அல்லது பள்ளர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை " தலித்" என்றே அவர் குறிப்பிட்டார். சமீப வன்முறைகளும் "தலித்" மீது என்றே வாதிட்டார். அதுவே சில இளைஞர்களுக்கு "கோபத்தை" ஏற்படுத்தியது.
அங்கே நடந்தது "தேவர்-பள்ளர்" மோதல் என்றும், அதை அப்படியே விவரிக்க வேண்டும் என்றும், "தலித்" என்ற சொல் பரந்த வேறு பொருளுக்கு இட்டு சென்றுவிடும் என்றும், அதனால் அங்கே இருக்கும் முரண்பாட்டை சரியாக எடுத்து சொன்னதாக் ஆகாது என்றும் அவர்கள் கூறினர். எப்படி சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல கூடாது என்றும் பதில் வ்ந்தது. அந்த சமூகத்தில் இவர்கள் சிலர்தான் என்றும் க்ருத்து வந்தது. அது அனைத்து தேவேந்திரகுல வேளாளர்களிடமும் இருக்கிறது என்று கூறியதற்கும் எதிர்ப்பு வந்தது. குட்ம்பமாரை மற்றவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறர்கள் என்பதும் தலைநகரில் உள்ள அறிவுஜீவிகளிடம் எப்படி கருத்து இருக்கிறது என்பதும் அங்கே வெளிப்பட்டது. அந்த சமூகம் எப்படி தங்களை அழைத்து கொள்ள விரும்புகிறார்களோ அப்படி அவர்களை அழைக்க நமது அறிவுஜீவிகள் தயார் இல்லையா? என்று தெரியவில்லை. அதில் ஒரு மள்ளர் "தலித் என்றால் பெண்களும்" உண்டல்லவா? என்றார். அபப்டியானால் அங்கே நடந்த "தேவர்-பள்ளர்" மோதலை "மறவர் பெண்களையும் சேர்த்து உச்சரிக்கும் தலித் " என்ற் வார்த்தை மூலம் எப்படி சரியாக வெளிப்படுத்த முடியும்? என்று வினவினார். அது என்னமோ அறிவுபூர்வமாக பட்டது.
பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு கேள்வி வந்தது. பெயரில் "வரலாறு, பண்பாடு, போர், போர்க்களம், வீரசாவு" இத்தனையும் இருக்கிறது என்று நாம் பதில் சொல்ல வேண்டி வந்தது. "உழவர் பெருங்குடியின் போர்ப்படைபிரிவுதான் "தேவேந்திரகுல வேளாளர்கள்" என்று நான் சொன்னதை பலரும் ரசிக்க வில்லை என்று தெரிந்தது. வரலாறுகளை புத்தகங்களில் படித்து தொகுக்கலாம்.நிகழ்வுகளை உண்மை அறியும் குழுக்கள் மூலம் சில நாள் அங்கே சென்றுவ்ந்ததால் தெரிந்து கொண்டு திருப்தி அடையலாம். ஆனால் ஒடுக்கப்பட்டமக்களது வரலாற்று நிலை பற்றியும், போர் தொடுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தை பற்றியும், அந்த சமூகத்துடன் ஆழமாக வாழ்ந்துதானே கற்று கொள்ள முடியும்? இப்படி நமக்கு புரிவது எல்லாமே தவறு என்று அறிவுஜீவிகள் கருதலாம். அறிவுஜீவிகளின் கருத்துதான் எழுதப்படும். பேசப்படும். பதிவு செய்யப்படும். இதுதான் ஐன்றைய நிலைமை.
போர்களத்தை சந்திக்கும் உழவர் கூட்டம் தனக்கு ஆதரவாக வந்திருக்கும் சக்திகளுடனும், நகர்ப்புற அறிவுஜீவிகளுடனும், அமர்ந்து தங்கள் மதிப்பீட்டை அவர்களும் புரியும் வண்ணம் கூறுவதற்கான "உத்திகளை" இன்னமும் உருவாக்க வில்லை என்றும், எந்த மொழியில் அவர்களையும் தங்கள் உணர்வுகளை ஏற்று கொள்ள செய்யவேண்டும் என்று இன்னமும் அறிந்திருக்க வில்லை என்றும் பேசி கொண்டு வெளியே வந்தோம். ஆனாலும், ஏற்பாடு செய்திருந்த அமைப்பும், பேசிய பேச்சாளர்களும், கலந்து கொண்டோரும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஆதரவு சக்திகள் என்பதையும், அது வரவேற்கதக்கது எனபதையும் வந்திருந்து கோபப்பட்ட இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர்.எபப்டியோ அது ஒரு நல்ல ஆரோக்கியமான் சர்ச்சை என்றே புரிந்தது.
டில்லி ஊடகத்தார் "கதை" விடுவார்களா?
இன்று காலை டெக்கான் கிரோனிகள் ஆங்கில ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தது பற்றிய செய்தி எல்லா ஏடுகளும் போல வெளிவந்துள்ளது. ஆனால் மடர்வர்கள் எழுதாத "சில விடயங்களை" இந்த ஏடு எழுதியுள்ளது. அதாவது சோனியாவை சந்திக்கும்போது, கருணாநிதி அதிகம் பேசவில்லை என்றும், ராஜாத்தி அம்மாள்தான் அதிகமாக தன் ஆதங்கங்களை பற்றி பேசினார் என்றும் அதை தம்மிழிளிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டி.ஆர்.பாலு கூறினார் என்றும் எழுதியுள்ளனர். இது மிகச் சிறந்த "கற்பனை" என்று சம்பந்தப்பட்ட வட்டரங்கள கூறுகின்றன.
எப்படி இருக்கீங்க என்று வழமைபோல அன்னை சோனியா கேட்டதற்கு, மகளை சிறைக்கு அனுப்பி விட்டு எப்படித்தான் இருப்பேன் என்று கூறியதாக மாட்டுமே அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றபடி கலைஞத்தான் பல செய்திகளை பேசிக் கொண்டிருந்தார் என்கின்றனர்.
முதலில் கருணாநிதி அதிகம் பேசவில்லை எனபது அந்த தலைவருக்கு தரப்படும் "இழுக்கு". அடுத்து சோனியாவிடம் தனது "ஆதங்கங்களை" நிறைய கூறினார் என்று ராசாத்தியை கூறுவதும், அதை சோனியா செவிமடுத்தார் என்று கூறுவதும், திட்டமிட்டு "இட்டுக் கட்டி" அவர்களது பேச்சுவார்த்தையை "கொச்சைப்படுத்தும்" முயற்சி. அடுத்து உடன் சென்ற "தயாநிதி மாறன்" சோனியாவை காண உள்ளே செல்லவில்லை என்ற உண்மையை எடுத்து சொல்லும்போது, "ராஜாத்தி" தடுத்து விட்டார் என்று அந்த ஏடு கூறியுள்ளது. இது நிலைமை பற்றிய புரிதல் இல்லாதவர் எழுதியுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.
தயாநிதி மாறன் மீது விசாரணை நடைபெறும் வேளையில், சீ.பி.அய். சோதனைகளையும் விசாரணையையும் தொடங்கி உள்ள நேரத்தில், அடுத்து "கைது" அவருமா? என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திக்க தயாநிதி முயற்சி செய்வாரா? சோனியாவின் ஆலோசகர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, அதை வரவேற்பார்களா? அதனால் கலைஞருடன் தயாநிதி சமீப வழக்கம் போல், வாகன வரிசையில்சென்றது உண்மையாக இருந்தாலும், மன்மோகனை சந்திக்கும் போதும், சோனியாவை சந்திக்கும் போதும் உள்ளே செல்லவில்லை என்பதுதான் உண்மை. அதைவைத்து கதை எழுதுவது டில்லி ஊடகத்தாருக்கும் வழமையாகி விட்டதே?
இதேபோல டில்லி ஊடகத்தார்கள் பல நேரங்களில் தாங்கள் உருவாக்கிய கதைகளில் மாட்டி கொண்டுள்ளார்கள். இந்த கதை தமிழ்நாட்டை பற்றியது என்பதாலும், தமிழ்நாட்டு மூத்த அரசியல்வாதியின் குடும்பம் பற்றியது என்பதாலும், காங்கிரஸ்-திமுக உறவு பற்றியது என்பதாலும், நடக்காததை நடந்ததாக வெளியிட் யாருக்கும் உரிமையில்லை எனப்துய் மட்டுமல்ல, திரித்து எழுதத் யாற்றுக்கும், எப்போதுமே உரிமையில்லை என்பதால், ஆங்கில ஏடுகள் வெளியிடுவதால் எல்லாமே உண்மையாகிவிடாது என்று கூறத்தான் நாம் குறுக்கே விழுந்து சொல்ல வேண்டி இருக்கிறது.
எப்படி இருக்கீங்க என்று வழமைபோல அன்னை சோனியா கேட்டதற்கு, மகளை சிறைக்கு அனுப்பி விட்டு எப்படித்தான் இருப்பேன் என்று கூறியதாக மாட்டுமே அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றபடி கலைஞத்தான் பல செய்திகளை பேசிக் கொண்டிருந்தார் என்கின்றனர்.
முதலில் கருணாநிதி அதிகம் பேசவில்லை எனபது அந்த தலைவருக்கு தரப்படும் "இழுக்கு". அடுத்து சோனியாவிடம் தனது "ஆதங்கங்களை" நிறைய கூறினார் என்று ராசாத்தியை கூறுவதும், அதை சோனியா செவிமடுத்தார் என்று கூறுவதும், திட்டமிட்டு "இட்டுக் கட்டி" அவர்களது பேச்சுவார்த்தையை "கொச்சைப்படுத்தும்" முயற்சி. அடுத்து உடன் சென்ற "தயாநிதி மாறன்" சோனியாவை காண உள்ளே செல்லவில்லை என்ற உண்மையை எடுத்து சொல்லும்போது, "ராஜாத்தி" தடுத்து விட்டார் என்று அந்த ஏடு கூறியுள்ளது. இது நிலைமை பற்றிய புரிதல் இல்லாதவர் எழுதியுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.
தயாநிதி மாறன் மீது விசாரணை நடைபெறும் வேளையில், சீ.பி.அய். சோதனைகளையும் விசாரணையையும் தொடங்கி உள்ள நேரத்தில், அடுத்து "கைது" அவருமா? என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திக்க தயாநிதி முயற்சி செய்வாரா? சோனியாவின் ஆலோசகர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, அதை வரவேற்பார்களா? அதனால் கலைஞருடன் தயாநிதி சமீப வழக்கம் போல், வாகன வரிசையில்சென்றது உண்மையாக இருந்தாலும், மன்மோகனை சந்திக்கும் போதும், சோனியாவை சந்திக்கும் போதும் உள்ளே செல்லவில்லை என்பதுதான் உண்மை. அதைவைத்து கதை எழுதுவது டில்லி ஊடகத்தாருக்கும் வழமையாகி விட்டதே?
இதேபோல டில்லி ஊடகத்தார்கள் பல நேரங்களில் தாங்கள் உருவாக்கிய கதைகளில் மாட்டி கொண்டுள்ளார்கள். இந்த கதை தமிழ்நாட்டை பற்றியது என்பதாலும், தமிழ்நாட்டு மூத்த அரசியல்வாதியின் குடும்பம் பற்றியது என்பதாலும், காங்கிரஸ்-திமுக உறவு பற்றியது என்பதாலும், நடக்காததை நடந்ததாக வெளியிட் யாருக்கும் உரிமையில்லை எனப்துய் மட்டுமல்ல, திரித்து எழுதத் யாற்றுக்கும், எப்போதுமே உரிமையில்லை என்பதால், ஆங்கில ஏடுகள் வெளியிடுவதால் எல்லாமே உண்மையாகிவிடாது என்று கூறத்தான் நாம் குறுக்கே விழுந்து சொல்ல வேண்டி இருக்கிறது.
Thursday, October 20, 2011
மாற்றத்திற்கான செய்தியாளர்கள் பட்டினி போரில் சுவையானவை...
நடந்து வரும் கோயம்பேடு மூவர் உயிர் காக்கும் தொடர் பட்டினி போரில் 28 ஆம் நாள் அதை நடத்திய மாற்றத்திற்கான செய்தியாளர்கள், அழைத்ததன் பேரில் வந்தவர்கள் பல சுவையான செய்திகளை விட்டு சென்றனர்.காலையில் 11 மணிக்கு தோழர் ஆர்.நல்லகான்னு, பேராசிரியர் சரஸ்வதி போன்றோர் வந்துவிட,ஒரு ஆர்ப்பாட்டத்தை முன் வாசலில் சாலையை ஒட்டி நடத்த ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் ஏற்பாடு செய்தார். ஆர்ப்பாட்டத்தை தோழர் நல்லகண்ணு தலைமை ஏற்று நடத்தினார்.அதை அடுத்து செங்கொடி படத்திற்கு மாலை அனுவித்து, பேரா.சரஸ்வதி அந்த படம் அருகே "குத்துவிளக்கு" ஏற்றிவைத்தார். அப்போது மக்கள் மன்றம் மஹேஷ், ஜெசி ஆகியோர் உடன் இறந்தனர் அவர்களுடன் மக்கள் மன்றத்தை சேர்ந்த பாலு, நாத்திகன், மகேந்திரவர்மா ஆகியோரும் வந்திருந்தனர்.
தொடர் பட்டினி போர் ஏற்பாட்டாளர்களான செல்வராஜ், ராஜ்குமார் பழனிசாமி ஆகியோரும் வந்துவிட்டனர். ஊடகவியலாளர்களான எழில், உமா, ரெஜி, சீ தமிழ் செய்தி ஆசிரியர் ஜெயக்குமார், மார்க்சிய பெரியாரிய கட்சியின் தமிழேந்தி, உழைக்கும் பத்திர்கையாளர் சங்க தலைவர் சகாயராஜ், டாக்டர் ரவீந்திரநாத், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் நல்லகண்ணு தலைமை உரை நிகழ்த்தினார். அதில் சிறைக்குள் அவர் இருந்த காலத்திய நிலையையும், மரண தண்டனை கைதிகள் நிலையையும்,பாலன் போன்றோர் மீது பொய்வழக்கு போடப்பட்ட நிலையையும், எடுத்து சொன்னார். 1999 ஆம் ஆண்டே சோனியா காந்தி அன்றைய தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சுட்டி காட்டினார்.
அதில் தன் கணவன் இறந்ததால் தாங்கள் படும் துயரை இப்போது ராஜீவ் கொலையில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் "நால்வரும்" மரணம் அடைவதன் மூலம் அவர்களது குடும்பங்களும் அடையக்கூடாது என்று எழுதியுள்ளதை நல்லகண்ணு சுட்டி பேசினார். தானும் தனது குழந்தைகளும் அதை விரும்பவில்லை என்று சோனியா எழுதியிருந்தார். நளினியின் பெண் குழந்தை ஒன்று இருப்பதால் நளினிக்கு மரண தண்டனை என்பதை தாங்கள் விரும்பவேயில்லை என்று சோனியா எழுதியிருந்ததையும் படித்து காண்பித்தார்.தோழர் நல்லகண்ணுவின் முழு உரையை மறுநாள் "ஜனசக்தி" ஏடு அப்படியே பதிப்பித்துள்ளது. அடுத்து பேரா.சரஸ்வதி பட்டினி போரை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே தடா வழக்குக்கு அது பொருந்தாது என்றும், தனி நபர் மீதான பழிவாங்கும் கொலைதான் அது என்றும், கூறியுள்ளதை சுட்டி காட்டி, தடாவில் எடுக்கப்பட்ட சித்திரவதை மூலமான வாக்குமூலங்களை வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு எப்படி பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் சகாயம் பேசினார். அவரும் தங்கள் சங்கத்தின் முழு ஆதரவையும் மூன்று தமிழர் உயிர் காக்க தருகிறோம் என்றார். அவர் பணியாற்றும் தமிழன் தொலைக்காட்சியினரும் வ்ந்திருந்து படப்பிடிப்பு நடத்தினர்.அதேபோல மக்கள் டி.வி., இமயம் டி.வி. ஆகியோரும் வந்திருந்து படம் எடுத்து வெளியிட்டனர். அடுத்து பேசிய டி.எஸ்.எஸ்.மணி, செப்டம்பர் கடைசியில் வெளிவந்த "ஓபன்" என்ற் ஆங்கில வார ஏட்டில் வந்துள்ள கட்டுரைகளை சுட்டி காட்டி பேசினார். அதில் ராஜீவ் கொலையை விசாரிக்க ஜெயின் ஆணையத்தால் கூறப்பட்ட சீ.பி.அய். ஏற்படுத்திய எம்.டி.எம்.சீ. என்ற பல்முனை கட்டுப்பாடு கண்காணிப்பு ஆணையம் இன்னமும் தனது விசாரணையை நடத்தி கொண்டு இருக்கிறது என்ற உண்மையை போட்டு உடைத்தார். ராஜீவ் கொலை விசாரணையே இன்னமும் முடிவடையாத நிலையில் எப்படி மூவருக்கு தூக்கு போடலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.
தமிழ் ஊடகங்களில் வராத அத்தகைய செய்திகளை அந்த ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டி, விசாரணையில் சித்திரவதை செய்ததை விசாரணை அதிகாரி மோகன்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும், அதை மறுத்து,புத்தகத்தில் பொய் எழுதிய கார்திகேயனையும் மோகன்ராஜ் அமபலப்படுத்தியுள்ளதையும் அந்த ஏடு வெளியிட்டிருந்தது. ராஜீவ் கொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை என்று ஒரு "ரா" அதிகாரி சொன்னதையும், கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட "காணொளியை" எம்.கே.நாராயணன் மறைத்து விட்டதையும் விசாரணை தலைமை அதிகாரி ரகோத்தமன் சொன்னதை அந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தி இருந்தது. அதை அவர் சுட்டி காட்டினார்.
செய்தியாளர் நிகழ்ச்சிக்கு "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ" ஏட்டின் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயக்குமார் வந்திருந்தார். தமிழ்நியுஸ் நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் ராஜன் வந்து கலந்துகொண்டு பேசினார்.தேசியதலைவர் அய்யா பிரபாகரனுக்கு இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரியாதா?அபப்டி செய்வாரா? என்று பகுத்தறிவு கேள்வி ஒன்றை எடுத்து வைத்தார். மதியம் சிறிது நேரம் மின்வெட்டு அமைதியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நாத்திகன் தனது செங்கொடி பற்றிய பாடலை பாடினார்.வந்திருந்தவர்கள் உள்ளே வைத்திருக்கும் ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட "தூக்கு தண்டனை எதிர்ப்பு ஓவியங்களை" கண்டு உளம் நெகிழ்ந்தனர்.
மாலை வரும் முன்பே சீ.பி.அய்.யின் சீ.மகேந்திரன் வந்தார். அவருடன் திருமலை வந்தார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவன் வந்தார்.அவருடன் வன்னிய அரசு உட்பட பல சிறுத்தைகள் வந்தனர். இயக்குனர் கவுதமன், இதழியல் மற்றும் திரைப்பட இயக்குனர் ரேவதி, ஜென்னி, சதீஷ், உயிர்மை துணை ஆசிரியர் அமர், பெ.தி.க. அண்ணாமலை, டி.லட்சுமணன், கணேசன், ஆகியோரும் வந்திருந்தனர். மகேந்திரன் பேசும்போது "சீ.பி.அய். கட்சியும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்த முடிவு செய்துள்ளது" என்றார். அதேபோல திருமாவளவன் பேசும்போதும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்தும் என்றார். இடத்தை தந்து உதவும் முன்னாள் திருச்சி எம்.எல்.ஏ. கே.சொந்தரராஜன் பேசினார்.
அவரது பேச்சில் ஒரு செய்தியை கூறினார்.தனது உறவுக்காரர் ஒருவர் நீதியரசராக இருந்தவர் கூறிய செடிதியை கூறினார். அவர் "வழக்கு திட்டமிட்டு சதி செய்து மாற்றி அமைக்கப்பட்டது" என்று ஆதாரத்துடன் கூறியதை கூறினார். அதாவது ராஜீவ் கொலை வழக்கை நடத்திய நீதியரசர் சித்திக் சரிவர மாட்டார் என அவரை கார்த்திகேயன் மாற்றினார். நவநீதனை நீதியரசராக போட்டனர். அவரும் 26 பேருக்கு தூக்கு போடவேண்டுமா? என்று கேட்டபோது, நீங்கள் ஒரு பெண் தட்டச்சு உதவியாளரை மானபங்கம் செய்ததாக கூறி உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டி கார்த்திகேயன் தீர்ப்பு எழுத வைத்தார் என்று அமபலப்படுத்தினார். அதன்பிறகு பேசிய தியாகு பல வெளிநாட்டு விசயங்களை கூறி அதிகநேரம் பேசினார்.
தமிழா, தமிழா பாண்டியன் எப்படி தமிழ் ஊடகங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக செயலப்டுகின்றன என்று விளக்கினார். பெண்ணிய எழுத்தாளர் ஓவியா பேசினார். அவர் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய சிங்கள பெண்,தங்களுக்கு மட்டுமான நாடாக இலங்கையை விளக்கி பேசியதை சுட்டி காட்டினார். இன்னமும் சிங்களர்கள் அங்குள்ள தமிழர்களை தங்கள் குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை எனபதை சுட்டி காட்டினார். அதிலிருந்தே "தமிழீழம் மட்டுமே" தீர்வு எனபதை புரிய முடிந்தது. இடையில் மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்வாசலில் நின்று நடத்த ஜீவசாக்ப்தன் ஏற்பாடு செய்தார். அது திருமாவளவன் தலைமையில் சிறிது நேரம் முழக்கங்களாக நடத்தப்பட்டது.அதன்பிறகு பேசிய அ.மார்க்ஸ், வாய்ப்பை பயன்படுத்தி பல பழைய செய்திகளை கூறி ஜெயலலிதாவை நிறைய திட்டி பேசினார்.அவருக்கு அரசுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்திய திருப்தி கிடைத்திருக்கும். அதன்பிறகு விடுதலை ராஜேந்திரன் வழக்கம் போல முறையான சில வாதங்கள் மூலம் மரண தண்டனை யாருக்கும் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.நியாயமாகவே தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை பர்ராட்டினார். அதன்பிறகு நிறைவாக திருமாவளவன் பேசினார்.தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும், விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் இருக்கின்ற முரண்பாடுகளை எதற்காக வெளியே சொல்லி நம்மை நாமே பலவீனப்படுத்த வேண்டும் என வினவினார்.
அவர் கூறியதில் ஆளுநர் ரோசையாவை சந்தித்தபோது, சட்டமன்ற தீர்மானத்தை ஏன் நீங்கள் அமைச்சரவை தீர்மானம் போல எடுத்து கொண்டு மரண தண்டனையை ரத்து செய்ய கூடாது என கேட்டதையும், அதற்கு ஆளுநர் முதல்வர் அப்படி தனக்கு எழுதினால் தான் "கவனிப்பதாக" கூறியதையும் எடுத்து சொன்னார். அது புதிய தெம்பை ஏற்படுத்தியது.ஊடகங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றார் அவர்.மொத்தத்தில் இளம் செய்தியாளர்களின் ஏற்பாடு சிறப்பாக நிறைவுற்றது.
தொடர் பட்டினி போர் ஏற்பாட்டாளர்களான செல்வராஜ், ராஜ்குமார் பழனிசாமி ஆகியோரும் வந்துவிட்டனர். ஊடகவியலாளர்களான எழில், உமா, ரெஜி, சீ தமிழ் செய்தி ஆசிரியர் ஜெயக்குமார், மார்க்சிய பெரியாரிய கட்சியின் தமிழேந்தி, உழைக்கும் பத்திர்கையாளர் சங்க தலைவர் சகாயராஜ், டாக்டர் ரவீந்திரநாத், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் நல்லகண்ணு தலைமை உரை நிகழ்த்தினார். அதில் சிறைக்குள் அவர் இருந்த காலத்திய நிலையையும், மரண தண்டனை கைதிகள் நிலையையும்,பாலன் போன்றோர் மீது பொய்வழக்கு போடப்பட்ட நிலையையும், எடுத்து சொன்னார். 1999 ஆம் ஆண்டே சோனியா காந்தி அன்றைய தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சுட்டி காட்டினார்.
அதில் தன் கணவன் இறந்ததால் தாங்கள் படும் துயரை இப்போது ராஜீவ் கொலையில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் "நால்வரும்" மரணம் அடைவதன் மூலம் அவர்களது குடும்பங்களும் அடையக்கூடாது என்று எழுதியுள்ளதை நல்லகண்ணு சுட்டி பேசினார். தானும் தனது குழந்தைகளும் அதை விரும்பவில்லை என்று சோனியா எழுதியிருந்தார். நளினியின் பெண் குழந்தை ஒன்று இருப்பதால் நளினிக்கு மரண தண்டனை என்பதை தாங்கள் விரும்பவேயில்லை என்று சோனியா எழுதியிருந்ததையும் படித்து காண்பித்தார்.தோழர் நல்லகண்ணுவின் முழு உரையை மறுநாள் "ஜனசக்தி" ஏடு அப்படியே பதிப்பித்துள்ளது. அடுத்து பேரா.சரஸ்வதி பட்டினி போரை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே தடா வழக்குக்கு அது பொருந்தாது என்றும், தனி நபர் மீதான பழிவாங்கும் கொலைதான் அது என்றும், கூறியுள்ளதை சுட்டி காட்டி, தடாவில் எடுக்கப்பட்ட சித்திரவதை மூலமான வாக்குமூலங்களை வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு எப்படி பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் சகாயம் பேசினார். அவரும் தங்கள் சங்கத்தின் முழு ஆதரவையும் மூன்று தமிழர் உயிர் காக்க தருகிறோம் என்றார். அவர் பணியாற்றும் தமிழன் தொலைக்காட்சியினரும் வ்ந்திருந்து படப்பிடிப்பு நடத்தினர்.அதேபோல மக்கள் டி.வி., இமயம் டி.வி. ஆகியோரும் வந்திருந்து படம் எடுத்து வெளியிட்டனர். அடுத்து பேசிய டி.எஸ்.எஸ்.மணி, செப்டம்பர் கடைசியில் வெளிவந்த "ஓபன்" என்ற் ஆங்கில வார ஏட்டில் வந்துள்ள கட்டுரைகளை சுட்டி காட்டி பேசினார். அதில் ராஜீவ் கொலையை விசாரிக்க ஜெயின் ஆணையத்தால் கூறப்பட்ட சீ.பி.அய். ஏற்படுத்திய எம்.டி.எம்.சீ. என்ற பல்முனை கட்டுப்பாடு கண்காணிப்பு ஆணையம் இன்னமும் தனது விசாரணையை நடத்தி கொண்டு இருக்கிறது என்ற உண்மையை போட்டு உடைத்தார். ராஜீவ் கொலை விசாரணையே இன்னமும் முடிவடையாத நிலையில் எப்படி மூவருக்கு தூக்கு போடலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.
தமிழ் ஊடகங்களில் வராத அத்தகைய செய்திகளை அந்த ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டி, விசாரணையில் சித்திரவதை செய்ததை விசாரணை அதிகாரி மோகன்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும், அதை மறுத்து,புத்தகத்தில் பொய் எழுதிய கார்திகேயனையும் மோகன்ராஜ் அமபலப்படுத்தியுள்ளதையும் அந்த ஏடு வெளியிட்டிருந்தது. ராஜீவ் கொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை என்று ஒரு "ரா" அதிகாரி சொன்னதையும், கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட "காணொளியை" எம்.கே.நாராயணன் மறைத்து விட்டதையும் விசாரணை தலைமை அதிகாரி ரகோத்தமன் சொன்னதை அந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தி இருந்தது. அதை அவர் சுட்டி காட்டினார்.
செய்தியாளர் நிகழ்ச்சிக்கு "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ" ஏட்டின் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயக்குமார் வந்திருந்தார். தமிழ்நியுஸ் நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் ராஜன் வந்து கலந்துகொண்டு பேசினார்.தேசியதலைவர் அய்யா பிரபாகரனுக்கு இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரியாதா?அபப்டி செய்வாரா? என்று பகுத்தறிவு கேள்வி ஒன்றை எடுத்து வைத்தார். மதியம் சிறிது நேரம் மின்வெட்டு அமைதியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நாத்திகன் தனது செங்கொடி பற்றிய பாடலை பாடினார்.வந்திருந்தவர்கள் உள்ளே வைத்திருக்கும் ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட "தூக்கு தண்டனை எதிர்ப்பு ஓவியங்களை" கண்டு உளம் நெகிழ்ந்தனர்.
மாலை வரும் முன்பே சீ.பி.அய்.யின் சீ.மகேந்திரன் வந்தார். அவருடன் திருமலை வந்தார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவன் வந்தார்.அவருடன் வன்னிய அரசு உட்பட பல சிறுத்தைகள் வந்தனர். இயக்குனர் கவுதமன், இதழியல் மற்றும் திரைப்பட இயக்குனர் ரேவதி, ஜென்னி, சதீஷ், உயிர்மை துணை ஆசிரியர் அமர், பெ.தி.க. அண்ணாமலை, டி.லட்சுமணன், கணேசன், ஆகியோரும் வந்திருந்தனர். மகேந்திரன் பேசும்போது "சீ.பி.அய். கட்சியும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்த முடிவு செய்துள்ளது" என்றார். அதேபோல திருமாவளவன் பேசும்போதும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்தும் என்றார். இடத்தை தந்து உதவும் முன்னாள் திருச்சி எம்.எல்.ஏ. கே.சொந்தரராஜன் பேசினார்.
அவரது பேச்சில் ஒரு செய்தியை கூறினார்.தனது உறவுக்காரர் ஒருவர் நீதியரசராக இருந்தவர் கூறிய செடிதியை கூறினார். அவர் "வழக்கு திட்டமிட்டு சதி செய்து மாற்றி அமைக்கப்பட்டது" என்று ஆதாரத்துடன் கூறியதை கூறினார். அதாவது ராஜீவ் கொலை வழக்கை நடத்திய நீதியரசர் சித்திக் சரிவர மாட்டார் என அவரை கார்த்திகேயன் மாற்றினார். நவநீதனை நீதியரசராக போட்டனர். அவரும் 26 பேருக்கு தூக்கு போடவேண்டுமா? என்று கேட்டபோது, நீங்கள் ஒரு பெண் தட்டச்சு உதவியாளரை மானபங்கம் செய்ததாக கூறி உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டி கார்த்திகேயன் தீர்ப்பு எழுத வைத்தார் என்று அமபலப்படுத்தினார். அதன்பிறகு பேசிய தியாகு பல வெளிநாட்டு விசயங்களை கூறி அதிகநேரம் பேசினார்.
தமிழா, தமிழா பாண்டியன் எப்படி தமிழ் ஊடகங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக செயலப்டுகின்றன என்று விளக்கினார். பெண்ணிய எழுத்தாளர் ஓவியா பேசினார். அவர் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய சிங்கள பெண்,தங்களுக்கு மட்டுமான நாடாக இலங்கையை விளக்கி பேசியதை சுட்டி காட்டினார். இன்னமும் சிங்களர்கள் அங்குள்ள தமிழர்களை தங்கள் குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை எனபதை சுட்டி காட்டினார். அதிலிருந்தே "தமிழீழம் மட்டுமே" தீர்வு எனபதை புரிய முடிந்தது. இடையில் மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்வாசலில் நின்று நடத்த ஜீவசாக்ப்தன் ஏற்பாடு செய்தார். அது திருமாவளவன் தலைமையில் சிறிது நேரம் முழக்கங்களாக நடத்தப்பட்டது.அதன்பிறகு பேசிய அ.மார்க்ஸ், வாய்ப்பை பயன்படுத்தி பல பழைய செய்திகளை கூறி ஜெயலலிதாவை நிறைய திட்டி பேசினார்.அவருக்கு அரசுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்திய திருப்தி கிடைத்திருக்கும். அதன்பிறகு விடுதலை ராஜேந்திரன் வழக்கம் போல முறையான சில வாதங்கள் மூலம் மரண தண்டனை யாருக்கும் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.நியாயமாகவே தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை பர்ராட்டினார். அதன்பிறகு நிறைவாக திருமாவளவன் பேசினார்.தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும், விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் இருக்கின்ற முரண்பாடுகளை எதற்காக வெளியே சொல்லி நம்மை நாமே பலவீனப்படுத்த வேண்டும் என வினவினார்.
அவர் கூறியதில் ஆளுநர் ரோசையாவை சந்தித்தபோது, சட்டமன்ற தீர்மானத்தை ஏன் நீங்கள் அமைச்சரவை தீர்மானம் போல எடுத்து கொண்டு மரண தண்டனையை ரத்து செய்ய கூடாது என கேட்டதையும், அதற்கு ஆளுநர் முதல்வர் அப்படி தனக்கு எழுதினால் தான் "கவனிப்பதாக" கூறியதையும் எடுத்து சொன்னார். அது புதிய தெம்பை ஏற்படுத்தியது.ஊடகங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றார் அவர்.மொத்தத்தில் இளம் செய்தியாளர்களின் ஏற்பாடு சிறப்பாக நிறைவுற்றது.
கடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசிவரை போராடினார்.
லிபியாவில் மக்கள் புரட்சி நடத்தினர். தெருவுக்கு வந்தனர். ஆயுதம் தூக்கினர்.எட்டு மாத காலமாக பெரும் திரளுடன் போராடி வருகின்றனர். இரண்டு மாதம் முன்பு தலைநகர் "திருபோலி" யை புரட்சி படை கைப்பற்றியது. அதற்கு பிறகும் கடாபி யின் சொந்த பகுதியான "சிர்டி" உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் "முழு வெற்றி" யை அறிவிக்க முடியவில்லை. ஜனநாயகம் கடாபி ஆட்சியில் இல்லை என்பதே அந்த புரட்சி படையின் முழக்கம். ஆயுதம் தாங்கிய புரட்சி படை, கடாபி யின் ஆயுதம் தாங்கிய படையுடன் மோதி வந்தது. இரண்டு படைகளும், லிபியா நாட்டு மக்களை போராளிகளாக் கொண்ட படைகள்தான்.
அப்படியானால் அவர்களுக்குள் என்ன வேறுபாடு? லிபியா நாட்டில் அதிகமாக "எண்ணெய் வளம்" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை "வியர்த்து" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் "புரட்சிபடைக்கு" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , "ஒரு தற்காலிக அரசாங்கத்தை" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிடிபட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர்? கடாபியா? அமெரிக்காவா? இது போர் பற்றிய கேள்வி.
அடுத்து எதற்காக மக்கள் போராடுகிறார்கள்? எதற்காக அமெரிக்கா நுழைகிறது? இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும். மக்கள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக கடாபியின் சர்வாதிகாரத்தை எத்ரித்து போராடினார்கள். அவர்களும் இஸ்லாம் மீது நம்பிக்கை அவித்தே போராடினார்கள். அவர்கள் கடாபியின் ஆயுதம் தாங்கிய படையை எதிர்க்க வேண்டி இருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளின் சக்திகளை பயன்படுத்தினார்கள். இது ஒரு பார்வை. எதற்காக அமெரிக்காவும், நேடோ நாடுகளும் இந்த போரில் குதிக்கின்றன? அவர்களுக்கு லிபியாவின் "எண்ணெய் வளத்தை" கைப்பற்ற வேண்டும். அவர்கள் இராக்கை கடும் போர் புரிந்து கைப்பற்றியும் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானை குறிவைத்து போர் நடத்தியும் இன்னமும் "தலிபான்களின்" கையிலிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இன்னமும் ஆப்கான் தலியான்கள் கைகளில்தான் "எண்ணெய் வளத்துடன்" இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியான பழங்குடி மக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்த புதிய தந்திரங்களை போட்டு வருகிறார்கள்.
அதேபோலத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை பார்கிறார்கள். அதனால் கடாபியை எத்ரிக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, போர் நடத்தி, நாட்டை கைப்பற்றி "எண்ணெய் வளம்" உள்ள லிபியாவை கையில் எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்கு "ஜனநாயகம்" கொண்டு வரும் முயற்சி என்று வேறு கூறுகிறார்கள் அப்படியானால் அந்த "ஜனநாயகம்" என்பது என்ன? அமெரிக்கா கூறும் ஜனநாயகம் "அமெரிக்கா ஆதரவு சக்திகளை" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும்? ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா? பொருந்தும். எப்படி பொருந்தும்?
ஒரு நாட்டிற்குள் ஒரே குடும்பத்தின் அல்லது ஒரே குடையின் கீழ் ஆட்சி ஒன்று பல பத்து ஆண்டுகளாக நடந்துவந்தால், அது எந்த பெயரில் நடந்தாலும் யார் அதன் கதாநாயகனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ."அதிகாரத்தை சுவைத்தவர்கள்" இறுக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மக்கள் காலப்போக்கில் வெறுத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஆட்சியாளர்களை "மேற்கத்திய நாடுகள்" தங்கள் நலனுக்காக நெருக்குமானால், அவர்கள் அந்த மேற்கத்திய நெருக்களுக்கு "அடிபணியாமல்" இருப்பார்களானால், அமெரிக்கா உட்பட நேடோ படை நாடுகளுக்கு அந்த ஆட்சியாளர்கள் மீது ஒரு "கண்" விழுந்தி விடுகிறது. அதை ஒட்டி, குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அந்த நாட்டிற்குள் ஒரு 'எதிர்ப்பு" வராதா என்று அதிர்பார்த்திருந் அமெர்கத்திய நாடுகளுக்கு திடீரென கிளம்பும் எந்த எதிர்ப்பையும் கைப்பற்றி செயல்பட போதுமான "உலகளாவிய" வசதிகள், ஊடகங்கள் உள்ளன.
கேட்கவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் உடனடியாக அந்த குறிப்பிட்ட நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், சர்வாதிகாரம் நடக்கிறது என்றும் பேச அதிக வாய்ப்பு உள்ளது. அது போராடும் புரட்ச்சியாலர்களுக்கு "இனிப்பு" செய்தியாக இருக்கிறது. இந்த இடத்தில் கடாபியையோ, இராக்கில் சதாம் ஹுசைனையோ, நாம் சர்வாதிகாரம் இல்லை என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அது அந்த நாட்டிற்குள் உள்ள பிரச்சனை. அந்த "ஒப்புமை ரீதியான சர்வாதிகாரத்தை" ஒழிக்க மக்கள் போராடும்போது, அமெரிக்கா நுழைகிறது. தான் முழு ஜனநாயக காவலன் என்று வேடம் போடுகிறது. உடனே மக்களும் நம்பி அதன் உற்ற்ஹவியை வாங்குகிறார்கள். அமெரிக்காவின் நோக்கம் அங்கே தனது "அடிவருடிகளை" ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனபதுதான்.
அதனால் அமெரிக்காவும் ஜனநாயகத்தை உண்மையில் கொண்டுவர இறங்க வில்லை. "ஒப்பீட்டளவு ஜனநாயகத்தை" காட்டி தனகது "சர்வாதிகாரத்தை" கொட்னுவர அமெரிக்கா முயல்கிறது. இதுதான் இராக்கிலும், ஆப்கானிலும், இப்போது லிபியாவிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். அபப்டியானால் கடாப்பி செய்தது எல்லாம் சரியா? சரியில்லைதான். ஆனால் அமெரிக்கா செய்வதும் சரியில்லை எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பீட்டளவு ஜனநாயகம், ஒப்பீட்டளவு சர்வாதிகாரம் ஆகிய இரண்டுமே மக்களை ஆட்சியாளர்களாக மாற்றாது. ஒன்று அமட்டும் தெரிகிறது. சதாம் ஹுசைனோ, கடாபியோ, கடைசிவரை போர் செய்து, பிடிபட்டு, கொள்ளப்படுவதால், "வராலாற்றில்" மா வீரர்களாக நிற்கிறார்கள். சர்வாதிகாரமும், ஜனநாயகமும் "ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள்" எனபது இதுதான். .
அப்படியானால் அவர்களுக்குள் என்ன வேறுபாடு? லிபியா நாட்டில் அதிகமாக "எண்ணெய் வளம்" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை "வியர்த்து" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் "புரட்சிபடைக்கு" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , "ஒரு தற்காலிக அரசாங்கத்தை" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிடிபட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர்? கடாபியா? அமெரிக்காவா? இது போர் பற்றிய கேள்வி.
அடுத்து எதற்காக மக்கள் போராடுகிறார்கள்? எதற்காக அமெரிக்கா நுழைகிறது? இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும். மக்கள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக கடாபியின் சர்வாதிகாரத்தை எத்ரித்து போராடினார்கள். அவர்களும் இஸ்லாம் மீது நம்பிக்கை அவித்தே போராடினார்கள். அவர்கள் கடாபியின் ஆயுதம் தாங்கிய படையை எதிர்க்க வேண்டி இருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளின் சக்திகளை பயன்படுத்தினார்கள். இது ஒரு பார்வை. எதற்காக அமெரிக்காவும், நேடோ நாடுகளும் இந்த போரில் குதிக்கின்றன? அவர்களுக்கு லிபியாவின் "எண்ணெய் வளத்தை" கைப்பற்ற வேண்டும். அவர்கள் இராக்கை கடும் போர் புரிந்து கைப்பற்றியும் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானை குறிவைத்து போர் நடத்தியும் இன்னமும் "தலிபான்களின்" கையிலிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இன்னமும் ஆப்கான் தலியான்கள் கைகளில்தான் "எண்ணெய் வளத்துடன்" இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியான பழங்குடி மக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்த புதிய தந்திரங்களை போட்டு வருகிறார்கள்.
அதேபோலத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை பார்கிறார்கள். அதனால் கடாபியை எத்ரிக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, போர் நடத்தி, நாட்டை கைப்பற்றி "எண்ணெய் வளம்" உள்ள லிபியாவை கையில் எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்கு "ஜனநாயகம்" கொண்டு வரும் முயற்சி என்று வேறு கூறுகிறார்கள் அப்படியானால் அந்த "ஜனநாயகம்" என்பது என்ன? அமெரிக்கா கூறும் ஜனநாயகம் "அமெரிக்கா ஆதரவு சக்திகளை" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும்? ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா? பொருந்தும். எப்படி பொருந்தும்?
ஒரு நாட்டிற்குள் ஒரே குடும்பத்தின் அல்லது ஒரே குடையின் கீழ் ஆட்சி ஒன்று பல பத்து ஆண்டுகளாக நடந்துவந்தால், அது எந்த பெயரில் நடந்தாலும் யார் அதன் கதாநாயகனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ."அதிகாரத்தை சுவைத்தவர்கள்" இறுக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மக்கள் காலப்போக்கில் வெறுத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஆட்சியாளர்களை "மேற்கத்திய நாடுகள்" தங்கள் நலனுக்காக நெருக்குமானால், அவர்கள் அந்த மேற்கத்திய நெருக்களுக்கு "அடிபணியாமல்" இருப்பார்களானால், அமெரிக்கா உட்பட நேடோ படை நாடுகளுக்கு அந்த ஆட்சியாளர்கள் மீது ஒரு "கண்" விழுந்தி விடுகிறது. அதை ஒட்டி, குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அந்த நாட்டிற்குள் ஒரு 'எதிர்ப்பு" வராதா என்று அதிர்பார்த்திருந் அமெர்கத்திய நாடுகளுக்கு திடீரென கிளம்பும் எந்த எதிர்ப்பையும் கைப்பற்றி செயல்பட போதுமான "உலகளாவிய" வசதிகள், ஊடகங்கள் உள்ளன.
கேட்கவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் உடனடியாக அந்த குறிப்பிட்ட நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், சர்வாதிகாரம் நடக்கிறது என்றும் பேச அதிக வாய்ப்பு உள்ளது. அது போராடும் புரட்ச்சியாலர்களுக்கு "இனிப்பு" செய்தியாக இருக்கிறது. இந்த இடத்தில் கடாபியையோ, இராக்கில் சதாம் ஹுசைனையோ, நாம் சர்வாதிகாரம் இல்லை என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அது அந்த நாட்டிற்குள் உள்ள பிரச்சனை. அந்த "ஒப்புமை ரீதியான சர்வாதிகாரத்தை" ஒழிக்க மக்கள் போராடும்போது, அமெரிக்கா நுழைகிறது. தான் முழு ஜனநாயக காவலன் என்று வேடம் போடுகிறது. உடனே மக்களும் நம்பி அதன் உற்ற்ஹவியை வாங்குகிறார்கள். அமெரிக்காவின் நோக்கம் அங்கே தனது "அடிவருடிகளை" ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனபதுதான்.
அதனால் அமெரிக்காவும் ஜனநாயகத்தை உண்மையில் கொண்டுவர இறங்க வில்லை. "ஒப்பீட்டளவு ஜனநாயகத்தை" காட்டி தனகது "சர்வாதிகாரத்தை" கொட்னுவர அமெரிக்கா முயல்கிறது. இதுதான் இராக்கிலும், ஆப்கானிலும், இப்போது லிபியாவிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். அபப்டியானால் கடாப்பி செய்தது எல்லாம் சரியா? சரியில்லைதான். ஆனால் அமெரிக்கா செய்வதும் சரியில்லை எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பீட்டளவு ஜனநாயகம், ஒப்பீட்டளவு சர்வாதிகாரம் ஆகிய இரண்டுமே மக்களை ஆட்சியாளர்களாக மாற்றாது. ஒன்று அமட்டும் தெரிகிறது. சதாம் ஹுசைனோ, கடாபியோ, கடைசிவரை போர் செய்து, பிடிபட்டு, கொள்ளப்படுவதால், "வராலாற்றில்" மா வீரர்களாக நிற்கிறார்கள். சர்வாதிகாரமும், ஜனநாயகமும் "ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள்" எனபது இதுதான். .
Tuesday, October 18, 2011
சோ.அய்யர் எடுத்த முடிவு மதுரை வாக்களர்களது உரிமையை பாதிக்க வில்லையா?
எல்லா இட்ங்களிலும் உள்ளாட்சி தேர்தல நடத்தப்படுகிறது. ஒரு இடத்தில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படும். இது வழமைதான். ஆனால் மதுரை மாநகராட்சிக்கும் தேர்தல் மேயருக்கும், ஒவ்வொரு வட்ட உறுப்பினருக்கும் நடந்தது. அதில் 15 ஆவது அவ்ட்டத்தில் நின்ற ஒரு வேட்பாளர் மரணமடைந்து விடுகிறார்.அதற்காக அந்த குறிப்ப்பிட்ட வட்ட தேர்தலை "தள்ளி" போடுவது நியாயம்தான். ஆனால் கெடுவாய்ப்பாக அதே நேரத்தில் அதே வாக்குசாவடியில், அதே வாக்காளர்களை வைத்து "மேயர்" டேஹ்ர்தலும் நடத்தப்படும் சூழலில், ஒரு தேர்தல் ஆணையம் "விவேகமாக" என்ன செய்திருக்க வேண்டும்?
எல்லா வாக்கு சாவடிகளிலும் மேயர் டேஹ்ர்தல் நடப்பது போல அந்த "குறிப்பிட்ட" வாக்கு சாவடியிலும் மேயர் டேஹ்ர்தல் நடத்த எந்த "தஹ்டையும்" இல்லை. அந்த குறிப்ப்பிட்ட "வட்ட மாநகர உறுப்பினர்" டேஹ்ர்தல் மட்டுமே தள்ளிப் போடப்படவேண்டும். ஆனால் சோ.அய்யரின் "அறிவார்ந்த" மூளை,அந்த குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள மேயர் டேஹ்ர்தளையும் சேர்த்து "தள்ளிப்"போட்டுள்ளது. ஒரே வாக்கு சாவடிக்குள் இரண்டு டேஹ்ர்தளையும் "தனி, தனியாக" நடத்த புத்திசாலித்தனமாக முடிவெடுத்த திரு.சோ.அய்யர் அவர்கள், ஏன் அதே புரிதலில், அந்த குறிப்பிட்ட வட்டத்தின் வாக்கு சாவடிகளில், இரண்டில் ஒரு டேஹ்ர்தலை நடத்த "அனைத்து ஏற்பாடுகளும்" தயாராக இருந்த போது, அதை செய்யாமல் "வாட் ஆருப்பினர்" டேஹ்ர்தலை தள்ளி போடும் போது, மேயர் டேஹ்ர்தளையும் அந்த குறிப்பிட்ட வட்டத்திற்கு தள்ளி போட்டார்?
இது அந்த குறிப்பிட்ட வட்டத்தின் "வாக்கலர்களது" உரிமையை பறித்த செயலாக அல்லது "தள்ளி" போட்ட செயலாக அல்லது மற்ற மதுரை வாக்களர்களுடன் சேர்ந்து தாங்களும் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்ட நிலையாக ஆகிவிடாதா? இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு சோ.அய்யர் இருக்கிறாரா? ஏன் என்றால் ஒரு புதிய ஊடகத்திற்காக சோ.அய்யரை நேர்காணல் எடுத்தார்கள். அப்போது சென்னை மாநகராட்சிக்கான டேஹ்ர்தல் அன்டந்து கொண்டிருந்தது. திமுக தலைமை "வேப்காமரா" வைக்கவில்லை என்று புகார் கொடுக்கிறார்களே? என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சோ.அய்யர் " பொதுமக்கள் யாரும் புகார் கூறவில்லை" என்று பதில் சொல்கிறார். அபப்டியானால் திமுக என்ற எதிர்கட்சி கொடுக்கும் புகாரை அவர் "புறம் தள்ளுகிறாரா ?".அல்லது அரசியல் கட்சிகளுக்கு "புகார்" தர உரிமையில்லை என்று உள்ளாட்சி தேர்தல் பற்றி புதிய விளக்கத்தை மறைமுகமாக கொடுக்கிறாரா? அப்படியானால் ஏன் அரசியல் அக்ட்சிகளை அவர்களது சின்னங்களுடன் நிற்க அவர் சம்மதித்தார்? "பொதுமக்கள்" என்று ஒரு "அருவமான" விஷயத்தை கூறி தப்பித்து கொள்ள முயல்கிறாரா? பெரிய தலைவலிதான் இந்த தேர்தல் ஆணையர் போல?
எல்லா வாக்கு சாவடிகளிலும் மேயர் டேஹ்ர்தல் நடப்பது போல அந்த "குறிப்பிட்ட" வாக்கு சாவடியிலும் மேயர் டேஹ்ர்தல் நடத்த எந்த "தஹ்டையும்" இல்லை. அந்த குறிப்ப்பிட்ட "வட்ட மாநகர உறுப்பினர்" டேஹ்ர்தல் மட்டுமே தள்ளிப் போடப்படவேண்டும். ஆனால் சோ.அய்யரின் "அறிவார்ந்த" மூளை,அந்த குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள மேயர் டேஹ்ர்தளையும் சேர்த்து "தள்ளிப்"போட்டுள்ளது. ஒரே வாக்கு சாவடிக்குள் இரண்டு டேஹ்ர்தளையும் "தனி, தனியாக" நடத்த புத்திசாலித்தனமாக முடிவெடுத்த திரு.சோ.அய்யர் அவர்கள், ஏன் அதே புரிதலில், அந்த குறிப்பிட்ட வட்டத்தின் வாக்கு சாவடிகளில், இரண்டில் ஒரு டேஹ்ர்தலை நடத்த "அனைத்து ஏற்பாடுகளும்" தயாராக இருந்த போது, அதை செய்யாமல் "வாட் ஆருப்பினர்" டேஹ்ர்தலை தள்ளி போடும் போது, மேயர் டேஹ்ர்தளையும் அந்த குறிப்பிட்ட வட்டத்திற்கு தள்ளி போட்டார்?
இது அந்த குறிப்பிட்ட வட்டத்தின் "வாக்கலர்களது" உரிமையை பறித்த செயலாக அல்லது "தள்ளி" போட்ட செயலாக அல்லது மற்ற மதுரை வாக்களர்களுடன் சேர்ந்து தாங்களும் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்ட நிலையாக ஆகிவிடாதா? இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு சோ.அய்யர் இருக்கிறாரா? ஏன் என்றால் ஒரு புதிய ஊடகத்திற்காக சோ.அய்யரை நேர்காணல் எடுத்தார்கள். அப்போது சென்னை மாநகராட்சிக்கான டேஹ்ர்தல் அன்டந்து கொண்டிருந்தது. திமுக தலைமை "வேப்காமரா" வைக்கவில்லை என்று புகார் கொடுக்கிறார்களே? என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சோ.அய்யர் " பொதுமக்கள் யாரும் புகார் கூறவில்லை" என்று பதில் சொல்கிறார். அபப்டியானால் திமுக என்ற எதிர்கட்சி கொடுக்கும் புகாரை அவர் "புறம் தள்ளுகிறாரா ?".அல்லது அரசியல் கட்சிகளுக்கு "புகார்" தர உரிமையில்லை என்று உள்ளாட்சி தேர்தல் பற்றி புதிய விளக்கத்தை மறைமுகமாக கொடுக்கிறாரா? அப்படியானால் ஏன் அரசியல் அக்ட்சிகளை அவர்களது சின்னங்களுடன் நிற்க அவர் சம்மதித்தார்? "பொதுமக்கள்" என்று ஒரு "அருவமான" விஷயத்தை கூறி தப்பித்து கொள்ள முயல்கிறாரா? பெரிய தலைவலிதான் இந்த தேர்தல் ஆணையர் போல?
மரணதண்டனை ஒழிக்க ஊடகவியலாளர் பட்டினி போர்.
மரண தண்டனையை சட்டத்திலிருந்து அறவே நீக்குவதற்கும், மூன்று தமிழர் உயிர் காப்பதற்கும், "மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள "இரண்டாவது சிக்னலில்" தொடர் ப்ட்டினிப் போரை ஒரு மாத காலம்மாக நடத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் பங்கு கொண்டு வருகிறார்கள். நாளை அக்டோபர் 19 ஆம் நாள் ஊடகவியலாளர்கள், கல்லூரி மாணவர்களையும், கலைஞர்களையும இணைத்துக் கொண்டு, பட்டினிப போரை நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு பட்டினிப் போரை "அன்னையர் முன்னணியின்" தலைவரும், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி, தொடங்கி வைத்து துவக்க உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றம் மரணதண்டனையை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு குறைக்க வேண்டி, இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானம் இந்திய அரசியல் வானில் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத்தில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை "அப்சல் குருவின்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி போடவேண்டும் என்ற முயற்சி நடைபெறுகிறது.பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் போராளி "தேவேன்றபல்சிங் புல்லார்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், நீதியரசரால் "தமிழக சட்டமன்றத்தின் ஏகமனதான தீர்மானம்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அத்தகைய தாக்கத்தை இந்தியா முழுவதும் அரசியல் வானில் ஏற்படுத்தியுள்ள அந்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வலுப்படுத்தவும், மரண தண்டனையை சட்டத்திளிருந்தே நீக்கவேண்டும் என்ற 2007 ஆம் ஆண்டு,மற்றும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்நாள் "அய்.நா. பொதுசபையின்" தீர்மானத்தை செயல்படுத்தவும், ஊடகவியலாளர்கள் தங்கள் சிறிய பங்களிப்பாக இந்த பட்டினி போரை நடத்துகிறோம். அதில் கலந்துகொண்டு பணகளிப்பு செலுத்துங்கள் என்று ஊடகவியலாளர் ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் மரணதண்டனையை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு குறைக்க வேண்டி, இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானம் இந்திய அரசியல் வானில் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத்தில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை "அப்சல் குருவின்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி போடவேண்டும் என்ற முயற்சி நடைபெறுகிறது.பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் போராளி "தேவேன்றபல்சிங் புல்லார்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், நீதியரசரால் "தமிழக சட்டமன்றத்தின் ஏகமனதான தீர்மானம்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அத்தகைய தாக்கத்தை இந்தியா முழுவதும் அரசியல் வானில் ஏற்படுத்தியுள்ள அந்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வலுப்படுத்தவும், மரண தண்டனையை சட்டத்திளிருந்தே நீக்கவேண்டும் என்ற 2007 ஆம் ஆண்டு,மற்றும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்நாள் "அய்.நா. பொதுசபையின்" தீர்மானத்தை செயல்படுத்தவும், ஊடகவியலாளர்கள் தங்கள் சிறிய பங்களிப்பாக இந்த பட்டினி போரை நடத்துகிறோம். அதில் கலந்துகொண்டு பணகளிப்பு செலுத்துங்கள் என்று ஊடகவியலாளர் ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
