Friday, December 23, 2011

இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?

சசிகலாவின் அண்ணி என்று ஊர் அறிந்த இளவரசி எப்போதுமே சசிகலாவிடமிருந்து விளகிநிற்பவர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி வந்தார் அல்லது சிலரால் அப்படி காட்டப்பட்டது. எல்லாவற்றிற்குமே காரணம் இல்லாமலா இருக்கும்?. இராமாயண காவியத்தில் ஜவகர்லால்நேரு எழுதியது போல,வட இந்திய மன்னர், தென்னிந்திய மன்னரை போர் தொடுத்த கதை என்பதில் தோன்றும் தென்னிந்திய மன்னன் தமிழ்மன்னன். அவனது பெயரை தாங்கினால் சரியாகிவிடுமா என்று இப்போது காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். உள்ளே இருக்கும்போது செய்த அட்டூழியங்கள், இப்போது வெளியே வந்த பிறகு வணடவாளம் ஏறும் அல்லவா? அதில் மாட்டி ஒருவர் அறுபது கோடி என்று கூற, ஒருவர் நூற்று ஐம்பது என்று கூற உள்ளே இருப்பதாக்க கூறுபவர் நானூறு கோடி எடுக்கப்பட்டது என்கிறார், எப்படியோ அந்த பெண்களை ஒடுக்கியதும் வெளிவருகிறது இப்போது. ஆனால் நெஞ்சு வலி என்று பொய்கூறி அந்த மயிலாப்பூர் கிறித்துவ மருத்துவமனையில் படுத்து விட்டாரே?

சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம் இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?

சீ.பி.அய். விசாரனைக்கு பரமகுடி துப்பாக்கிசூடு

இன்று காலை மதுரை உயர்நீதிமன்றம் பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையை சீ.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. இது துப்பாக்கி சூடு நடந்த செப்டம்பர் ௧௪ ஆம் நாள் கழிந்த இரண்டே நாட்களில் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட வழக்குடன், புதிய தமிழகம் வழக்கறிஞர் பாஸ்கர் சேர்ந்துகொண்ட பிறகு, பலரும்செர்ந்து, கடைச்யாக இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி.யும சேர்ந்து போட்ட வழக்கின் தீர்பாகைன்று வெளிவந்துள்ளது. அதனால் தமிழக அரசு அறிவித்த செயல்படாமல்திரும்பி வந்த சம்பத் ஐயர் விசாரணை இனி அந்த மக்களைகொடுமை படுத்த முயலாது என்று நம்பலாம். ஆனால் சீ.பி.அய். இந்த துப்பாக்கி சூட்டின் பின்புற உண்மைகளைவெளியே கொண்டு வருமா?

நாம் கொண்டுவரூவோமா? கொடியங்குளம் கொடூரத்தை அரங்கேற்றிய ஜெ ஆட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். செய்த திட்டமிட்ட வேலை இப்போது நினைவில் கொள்ளதக்கது.1995 ஆம் அண்டு ஜெ முழுமையாக சசிகலாவசமாட்சியின் பெரும்பொறுப்பை கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்து ரசித்து வந்த காலம். சிகளா வீட்டுகாரர் ம.நடராசன் தனது ஆட்களை எங்கணும் மாநிலமெங்கும் அமர்த்தி,ஆட்சியை ஊடகவியலாலர்களிடமிருந்து காப்பாற்ற பிரயாசை செய்து வந்த நேரம். ஐந்து ஆண்டுகளும் அடிக்க வேண்டிய கொள்ளைகளை அடித்து குவித்த அந்த கும்பல் ஆட்சியின் இறுதி நேரத்திலும் தங்களது "சாதி வெறியை" தணிக்காமல் அராஜகம் செய்துவந்தனர். அதை கிழித்த நக்கீரன் எட்டை, அதன் ஆயரியரை வழக்கு மேல் வழக்கு போட்டது மட்டுமின்றி, ஒல்லேர்பாடு செய்தனர் என்பது ஒரு சிறிய கதை. நக்கீரன் அச்சகத்தார் கணேசன் அந்த தாக்குதலில் பலியானது பழைய கதை. எல்லாவற்றிலும் நடராஜனின் ஆதிக்கம்.


நடராஜனுடன் அண்ணாமலை பலகலை கழகத்தில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்பு தியாகி ராஜேந்திரனுக்கு சிலை வைக்க அவர்கள் இருவரும் சேர்த்த வசூல்கணக்கு இன்னமும் மாணவர்களுக்கு தெரியவில்லை. அந்த பண்நீர்செல்வம்தான் தூததுகுடி மாவட்ட ஆட்சி தலைவராக வந்து கொடியன்குலம் கிராமததிற்கு சென்றார். ஆடுய்தப்படையுடன் சென்ற பன்னீர்செல்வம், என்கல்தஞ்சையில் குடிசையில் வாழும் பள்ளர், பறையரின்கேகான்கிரீத் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள் எனு கேட்டு அந்த வீடுகளை தகர்க்கசொன்னார் எனபதே பழங்கதை. அதே பன்னேர்செல்வம் இப்போது ஆட்சிக்கு ஜெ வந்த உடனே "சிற்ப்பு பணி அதிகாரி" ஆக நியமிக்கப்பட்டார். அதுவும் அவரது ஒய்வு காலத்தில் விடுவாரா அந்த சாதி வெறியர்?


ஏற்கனவே புதிய தமழகத்துடன் அதிமுக கூட்டணி வைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்ததை கண்டு கொதித்துபோனவர் இந்த பன்னீர்செல்வம். அதுமட்டுமின்றி தேவர் குரு பூசைக்கு சமமாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஆக்குகிரார்களே என்று அவ்ருத்தப்பட்டு பாவம் சுமந்தவர்தான் இந்த பன்னீர்செல்வம். கூட்டம்கூடும் அந்த நாளை ஒரு சாவு ஓல நாளாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டார். வசமாக் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் வெவேறு முகம் வைத்து கொண்டு தேவேந்திரர மத்தியில் உள்ள வழமையான விவாசாய குணத்துடன் ஒத்து போகவில்லை என்ற செய்தி. அதை பயன்படுத்தலாம் என்று எண்ணி அவர்களிருவர் குழுவினருக்கும்மோதல் அவரும் என்று கிளப்பி விட்டவர் இந்த பன்னீர்செல்வம்.


தலைமை செயலாளருக்கு சமமாக அல்லது கூடுதலாக அதிகாரம் அப்டித்த இந்த போருப்பைவாங்கி வைத்திருப்பதால், அதை அவித்து ஏற்கனவே அந்த சாதி மீது கோபம் உள்ள ராஜெச்தாஸ், சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் என்ற அதிகாரிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் குறைவான கூட்டத்தை தடியடி மூலம் கலைக்காமல் துப்பாக்கி இவைகளை பயன்படுத்தி நன்கு உயிர்களையுமடித்து கொன்று இரண்டு உயிர்களையும் கொள்ள முடிந்தது. அதைபாடிர்யா சட்டமன்ற பெச்சில்முதலவ்ருக்கு அது ஒரு இன மோதல் என்று இல்லாத ஒரு செய்தியை உருவாக்கி எழுதி கொடுத்ததுமிதே மனிதர்தான் என்கிறார்கள்.

அந்த மனிதர் பன்னீர்செல்வம் இருபது நாட்களுக்கு முன்னாலக்ற்றப்படும் சூழல் வந்தது. அதே சிறப்பு பணி அதிகாரியாக வருவதற்கு அமெரிக்காவில் இருந்து எம்ஜிஆர் விசுவாசி பிச்சாண்டி அய்.ஏ.எஸ். வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த ஆலோசனையில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஆறு பெற்குட்ம்பத்திற்கும், கூடுதலாக் நான்கு லட்சமும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும்முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இது பதினைந்து நாட்கள் முன்னாள் நடந்தது. அதுதான் பண்நீர்செலவ்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறினார்கள்.ஆனால் இந்த அரசியல் சதி கதையை எந்த விசாரணையாவது வெளியே கொண்டு வருமா?.

Thursday, December 22, 2011

கிஷன்ஜி கொல்லப்பட்டது பற்றிய உண்மைகள்

மாவோவாத புரட்சிகர இயக்கத்தின் அரசியல்பிரிவு தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி என்ற மல்லேசுலு கோடீஸ்வர ராவ் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தானே தருமபுரி மாவட்ட பார்த்திபன் தோழர் கொல்லப்பட்டார் என்று தமிழ்நாட்டு தோழர்கள் வினவினார்கள். பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னாள் கொல்லப்பட்டது, அடஹ்ர்கும் முன்பு தோழர் ரவீந்திரனை தர்மபுரியில் "மோதல் சாவு" என்ற பெயரில் காவலர்கள் கொன்றதை எதிர்த்து வழக்கு போட்டு காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்ட்படுத்தியதால் என்று அறியப்பட்டது. அவ்வாறு தமிழ்நாட்டில் "மோதல் துப்பாக்கி சண்டை" என்ற பெயரில் பல புரட்சியாளர்களையும், ரவுடிகளையும் காவல்துறை சென்ற ஐந்து ஆண்டுகளில் மட்டுமே இருப்பந்தைந்து பேரை கொன்றுள்ளது என்று கோவை ஈஸ்வரன் அந்த அறைகூட்டத்தில் கூறினார். அங்கே வந்திருந்த ஆந்திரபிரதேச சிவில் உரிமை கவுன்சில் பொது செயலாளரான சந்திரசேகர் பல உண்மைகளை கிஷன்ஜி கொலை பற்றி எடுத்து வைத்தார்.


மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் பரிசொலே மற்றும் கோசை பந்த் என்ற கிராமங்களில் உள்ள குக்கிராமமான சோரகட்டாவுக்கு உண்மையறியும் குழு சென்றது. அந்த இரு கிராமங்களின் மக்களிடமும், உண்மையறியும் குழு பேசினார்கள். அதேபோல ஐம்போனி காவல்நிலைய துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் ஆகியோரிடமும் பேசினர். நவம்பர் இருபத்தினாலாம் நாள், கிஷன்ஜி மோதல் சாவில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தையும்நேரிலாய்வு செய்தார்கள்.சொரகட்டாவிளிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கிசூடு நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடல்கடந்த இடத்திற்கு மிக அருகே ஒரு "பெரிய கரயான் புத்து" அப்படியே எந்த பாதிப்புமில்லாமளிருன்தது. அதாவது உண்மையில்மொதல்துப்பாக்கி சூடு நடந்திருந்தால் அந்த புற்று உடைந்திருக்கும்.தொட்டாக்களந்த புற்றை துளைத்திருக்கும். அருகேயுள்ள மரங்களில் தோட்டாக்களின் துவாரங்கள் காணப்பட்டாலும்,அவற்றிலேரிந்துபோன அடையாளங்களில்லை. அதாவது வேகமான துப்பாக்கி சூடுஒன்று நடந்து முடிந்த இடத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.

அந்த கிராமமக்களிடம்களையில்வந்து,காவல்துறையினர் வீடுகளைவிட்டு வெளியே வராதீர்கலேன்று கூறியதை அவர்கள் கூறினார்கள். அதாவது அது ஒரு நாடகபாணியில் செய்யப்ப்பட்ட செயலேனப்து தெரிந்தது. இதுபோலொரு நாடகத்தை விஜயகுமார் ஏற்கனவே தமிழ்நாட்டில் வீரப்பன் மரணத்தை ஏற்படுத்தியதில் செய்திருக்கிறார் என்பது நமக்குதான் தெரியும். வெங்கடேச பண்ணையார் மரணத்தை ஏற்படுத்தியதில் அவர் செய்த தவறும் அவருக்கு தெரியும்.ஆகவே இந்த முறை கிஷஞ்சிக்கு வரும்போது திட்டம் போட்டு "போலி துப்பாக்கி சண்டையை" நாடகம் போல நடத்துவதில் எத்தனை ஏற்பாடுகளும் செய்தும்,பல விசயங்களில் "கோட்டை" விட்டு விட்டார். .அதனால்தான் நாமிப்போது அதை அக்ண்டுபிடித்து விட்டோம்.

அடுத்து கிஷஞ்சியின் உடலைபார்த்தால்யாருமே அது ஒரு சித்திரவதை செய்து கொள்ளை செய்யப்ப்பட்ட உடல் எனபதை மறைக்கமுடியாது. தலைபகுதியில் காயங்களிருக்கின்றன. விழி குழியிலிருந்து வலது கண் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரை பிடித்து கண் விழிகளை பிடிங்கியுள்ளனர் எனபதை காட்டுகிறது.முகத்தில் கீழ் தாடை பகுதி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி பட என்ற பின்புறத்தால் தாடையில் ஓங்கி இடத்தால்தான் ஏற்படும். அதை ஒரு புரட்சியாளரை பிடித்து கட்டிப்போட்டுதான் செய்யமுடியும். அதேசமயம் தாடையில் எரிந்த அடையாளம் காணப்படுகிறது.. அதாவது எதையோவைத்து அவரது தாடை பகுதி எரிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மனிதரை கட்டி போட்டபின்புதான் செய்யமுடியும். இத்தனை கொடூரங்களை செய்பவர் ஏற்கனவே இதுபோன்ற சித்திரவதைகளை செய்வதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அபப்டி கைதேர்ந்தவர் விஜயகுமார்.


தலையின் பின்பகுதியில் மண்டை ஓடு காணப்படவில்லை. அதாவது அவரது மூளையை கண்டு பயந்த ஆளும்வர்க்கம் அவரது மூளையை வெட்டி எடுத்து "பரிசோதனைக்காக " அனுப்பி உள்ளனர் எனபது தெரிகிறது. இது மேலிட முடிவாக இருந்தால்தான் அபப்டி நடக்க முடியும். அதாவது உள்துறை இப்போது இதில் தப்பிக்க முடியாது. முகத்தில் நான்கு இடங்களில், அதாவது மூக்கின் இருபோர்மும், மூக்கிற்கு கீழே கன்னத்தில் என்று "துப்பாக்கியின் பேண்ட் பகுதியின் கூர் ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரிகிறது. இது கட்டி போடப்பட்ட ஒரு நபரை அதிக பட்ச சித்திரவதை செய்வடஹியே காட்டுகிறது. அந்த காயங்கலத்தை நிரூபித்து நிற்கின்றன. தொண்டை பகுதியில் கூர் ஆயுதத்தால் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவரது வலது முன்கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் கையின் மேல் பகுதியில் எந்த வெளிக்காயங்களும் இல்லை. அதாவது உள்காயமடையுமளவில் அந்த சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.


வலது கையில் மூன்று துப்பாக்கி குண்டுகல்துளைத்த காயங்களுள்ளன. இஅரண்டு கனுக்கால்களுமுடைக்கப்பட்டுள்ளன. பாதத்தில்பாதி உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இடது கால்பகத்தில் தோள்கள் காணப்படவில்லை. இடது கையில் ஆள்காட்டி விரலில் மூன்றில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மோதல் சாவில் இறந்த ஒருவரது உடலில் ஏற்படும்? உடலின் முன்பக்தி முழுவதும் பெனட்களால் குத்தப்பட்டு முப்பது இடங்களில்காய்நகல் உள்ளன. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச சித்திரவதைக்கு கிஷன்ஜி உள்ளாகியுள்ளார். அவரி அந்த அளவுக்கு ஆளும்வர்க்கம் வேருத்துள்ளது. அவர் மீது அந்த அளவுக்கு பகைமை பர்ராட்டி உள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்?


கிஷன்ஜி சில மாதங்களுக்கு முன்பு பெச்ச்கிவார்த்தைக்கு தயார் என கூறும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூன்று மாதம் போர் நிறுத்தம் அறிவியுங்கள் என்றார். அதற்கு கிஷன்ஜி மூன்றே நாட்கல்போர் நிறுத்தம் போதுமேன்ருமடஹ்ர்குள் தங்கல்தரப்பை எடுத்து கூறி பெசமுடியுமேன்ரும் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் புரட்சி செய்யும் கிஷஞ்சியே "அரசியல் போராட்டத்தில்" இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருப்பது கண்டு ஆளும் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. கிஷன்ஜி பக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நேரத்தில் அம்பலமாகி விடும் என்று ஆள்வோர் பயந்து விட்டனர். ஜிண்டால் என்ற கார்பொரேட் நிறுவன நலன் காக்க எண்ணிய ஆளும் கூட்டம் இந்த மனிதரை உயிருடன் விட்டால் ஆபத்து என கணக்கு போட்டனர். ஜிண்டால் நிறுவனத்திற்கு எடுக்கும் நிலங்கள் ஆதிவாசிகளின் நிலங்கள். அதை எதிர்த்து பழங்குடி மக்கல்போராடி வ்ருகின்றனர். அந்த ஜிண்டால் நீருவனம் உட்பட கார்போறேட்களுகாக தான் நிதி மைச்சராக இருக்கும் போதே உரிமம் வழன்கியவர்தான் சிதம்பரம். ஆகவே இந்த கிஷஞ்சியை உயிருடன் விடுவது தன்கள் நலனுக்கு உகந்தது அல்லேன்று சிதம்பரம் எண்ணுகிறாரா?


அதேபோல அரசின் ஒவ்வொரு திட்டத்தஹியும் அந்த வட்டாரத்தில் அதாவது மிதுனாபூர் பகுதியிழ்மக்களை திரட்டி கிஷன்ஜி எதிர்த்து வந்தார். சிறு குழந்தைகளை விட்டு, "மாமா, சிதம்பரமே, எங்கள் பள்ளிகளை திறன்கள். அன்குள்ளுங்கள் ராணுவத்தை அகற்றுங்கள்" என்று கடிதங்களை எழுத வைத்தார். இதுபோன்ற நேர்மையான அரசியல்விளையாட்டுகளை சிதம்பரம் ரசிப்பதாய் இல்லை. அவரது வழிகாட்டலில்,விஜயகுமார் செயல்பட்டார் போல தெரிகிறது. கிஷன்ஜி கொல்லப்பட்டபின்பு, விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.. அதில் பதில் தாக்குதல் வரும் என்று கூறுகிறார். எத்தனை எதிர்பார்ப்பு அவருக்கு? ஆகவே இது ஒரு விடுதலை பகுதியில் " கார்பொரேட் அரசுக்கும், மக்கள் அரசுக்கும் நடந்த மோதலே" தஹ்விற வேறு எதுவும் இல்லை. கார்பொரேட் களுக்கு உதவும் நாடாளுமன்ற அரசியலுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் உண்மையான எதிர்க்கட்சி அதாவது மாவோவாதிகள் செயல்படுகிறார்கள் என்று நம்மை இந்த நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன.

Wednesday, December 21, 2011

மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?

கலைஞரை பிடிக்காதவர்கள் எம்ஜிஆரிடம் சென்றார்கள்.எம்ஜிஆரிடம் சென்றவர்கள் ஜெயலலிதாவிடம் வந்தார்கள். ஏதோ கலைஞர் மட்டுமே நாட்டில் கெட்ட அரசியல்வாதி என எண்ணியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என பற்று கொண்டார்கள். கலைஞர் மீது கோபம் கொண்ட தமிழின உணர்வாளர்களும் கடைசியாக ஜெயலலிதாவிடம் நல்லது நடக்காத என ஏங்கி வந்தார்கள். காங்கிரஸ் என்பது எதிரி என கணக்குபோட்ட தமழின உணர்வாளர்கள் ஏதாவதொரு திராவிட் அக்கட்சியிடம் தானே எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்கள். வன்னிப்போரால் புண்பட்ட தமிழ் இதயங்கள் கலைஞரை வெறுத்ததால், ஜெயலலிதா புண்ணுக்கு மருந்து என்று கூறினார்கள். அதை நிரூபிக்கும் முகத்தோடு அந்த அமமாவும் "போர்குற்றம் விசாரணை", "மீனவர் மீது துப்பாக்கி சூடு","காங்கிரஸ் எதிர்ப்பு" "ப.சிதம்பரம் எதிரி", " நூன்று பேர் தூக்குதண்டனை குறைப்பு", என தமிழ் இன உணர்வாளர்களுக்கு நிறைய "கடலை போட" சரக்கு கொடுத்தார்கள்.


சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்" மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி, ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும் பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள்.

இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?

Monday, December 19, 2011

சமரசம் ஆகிவிடும என்று யார் சொன்னது?

அதிமுக விலிருந்து சசிகலா விளக்கப்பட்டாரா? போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வகையறாக்கள் வெளியேற்றப் பட்டார்களா? எல்லாம்சும்மா. வெறும் நாடகம். இப்படி பல பேர் கூறி திரிகிறார்கள்.இதற்குமுன்பு இப்படி பலமுறை அந்த இருவருக்கும் "சண்டை" என்று சொல்வார்கள், பிறகு மீண்டும் கூடி குலாவுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.ஜெ-சசி கூட்டு உடையாது என்று இந்த வாய் பேசுபவர்கள் கூறி,கூறி, அலுத்துவிட்டது. இவை எல்லாம் உண்மையா? இப்படித்தானே கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், கலைஞருக்கும், அழகிரிக்கும், கலைஞருக்கும், தயாநிதிக்கும் "சண்டை" என்று சொல்வார்கள் பிறகு ஒன்றுகூடி விடுவார்களே? இவ்வாறு வியாக்ஞானம் வேறு செய்கிறார்கள்.

அப்படிப்பட்டதா இந்த முரண்பாடு? நாம் கேட்க விரும்புவது "இதுவரை எத்தனை முறை இந்த குடும்ப உறுப்பினர்களை"ஜெ வெளியேற்றி விட்டு திரும்ப சேர்த்துக் கொண்டுள்ளார்? இந்த கேள்விக்கு எல்லோருமே மேலோட்டமாக சிந்தித்து "பலமுறை" என்று பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும்.
அய்யா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ம.நடராஜனை கட்சியை விட்டும், தோட்டத்தை விட்டும் வெளிஎற்றினார்களா ? இல்லையா? அதற்குபிறகு இன்றுவரை ஜெ அவரை மீண்டும் அனுமதித்தாரா? அவர் எல்லோரிடமும் தான்தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் ஜெ அனுமதித்தாரா?


அடுத்து திவாகரனை வெளியேற்றிய பிறகு மீண்டும் சேர்த்த வரலாறு உண்டா? சரி. போகட்டும். சுதாகரனை வெளியேற்றி யாரும் தொடர்பு வைக்காதீர்கள் என்று கூறிய பிறகு மீண்டும் எடுத்துக் கொண்டாரா? அடுத்து டி.டி.வி.தினகரனை நம்பி எல்லாம் கொடுத்து, எம்.பி.ஆகி அவரும் நம்பிக்கை துரோகம் செய்தார் என்று நீக்கிய பிறகு, மீண்டும் சேர்த்து கொண்டாரா? அதுவும இல்லை. அடுத்து தினகரனுடன் உறன்பட்ட மகாதேவனை கொண்டுவந்து, பிறகு அவரும் சரியில்லை என்று வெளியேற்றி பிறகு மீண்டுமவரை சேர்த்தாரா? அதற்கு பிறகு வந்த டாக்டர் வெங்கடேசை நம்பி அவரிடம் அனைத்து பொறுப்பையு கொடுத்து பிறகு அவரையும் தவறு என வெளியேற்றிய பிறகு, மீண்டும் அவரை சேர்த்தாரா? அதுவும் இல்லை.

அதன்பிரகுதானே ராவணனையும், ம.ராமச்ச்னடிரனையும் நம்பி அவர்களும் அப்படித்தான் என்று தெரிந்த பிறகுதானே இப்போது வெளியேற்றி இருக்கிறார். ஒவ்வொரு ஆளையும் சரியில்லை என தெரியு போதும், அடுத்த ஆல் அவரும்போதும், ஜெ அன்ம்பியது சசிகலாவை மட்டும்தானே? அந்த சசிகலா, எம்.என். வெளியேற்ற படும்போது, "அக்கா, மாமா ரொம்ப மோசம். திவாகரனை நம்பலாம்".என்றும், அவரும் தவறு என ஆகும்போது, "அய்யய்யோ அக்கா, திவாகரன் மோசம். தினகரனை நம்பலாம்" என்றும், அவரும் அம்பலமாகும்போது, "அக்கா, தினகரன் மோசம், அவனுக்கு எதிராக இருக்கும் மகாதேவனை நாம் நம்பலாம்" என்றும். மகாதேவனும் அதேபோல நடக்கும்போது, "அக்கா, இவன் இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.டாக்டர் வெங்கடேசன், அறிவாளி, அவனை நம்பலாம்" என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் "பாவம், சசி, தவறாக கணித்துவிட்டார்" என மன்னிக்கப் பட்டது.

அதற்குபிறகு டாக்டர் வெங்கடேசன் தனது முனைப்பை மட்டும் காட்டி லாபம் தேட, அவரையும் வெளியேற்ற வேண்டி வந்தது.அப்போது சசிகலா அடையாளம் காட்டிய " ராவணன், ம.ராமச்சந்திரன்" இருவரையும் ஜெ நம்பும்படி செய்தார்கள். ம.ராமச்சந்திரன் தனது அண்ணனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நம்பும்படி பேசிவந்தார். அதுவும் இப்போது அம்பலமாகி விட்டது. தங்க உதட்டை போடும் வாத்தை அறுத்து பார்க்க அந்த குடும்பம் நினைத்தது. அதன் விளைவு "உள்ளதும் போச்சு, நோல்லைகன்னா" என்று ஆகிவிட்டது. இந்த குடும்பம் கட்ச்சியை அழிப்பதாக தொண்டர்கள் எண்ணினார்கள். இப்போது தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதை கொண்டாடுகிறார்கள். அதனால் இதுவரை வெளியே அனுப்பப்பட்ட யாரையும் மீண்டும் மன்னித்த வரலாறு கிடையாது. இதுவரை ஆயிரம் உறன்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சசிகலாவை கட்ச்சியை விட்டோ, தோட்டத்தை விட்டோ வெளியேற்றிய வரலாறு உண்டா? அதனால் மக்கள் சஞ்சலப்படவேண்டாம்.

மாளிகை புரட்சி சதி முறியடிப்பா?

சசிகலா வகையாறாக்கள் அந்த ஆளும்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பட்டியலில் சசிகலா,ம.நடராசன், மன்னார்குடி திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேசன், சுதாகரன், ராவணன்,குலோத்துங்கன், மோகன் போன்றோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா அதிமுக கட்சியின் உயர் செயற்குழு உறுப்பினர் என்பது முக்கிய செய்தி.ம.நடராஜன், சுதாகரன் போன்றவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது நபர்களை நீக்குவதற்காக வெளியிடப்பட்டஅறிவிப்பு அல்ல என்பதை அந்த அறிவிப்பின் அணுகுமுறையே வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் கட்சியில் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் வழக்கம் போல அறிவிப்பு உள்ளது.

மேற்கண்டோர் மட்டும்தான் விலக்கப்பட்டார்களா? அவர்கள் மட்டும்தான் இன்று காலையில் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறினார்களா? என்று கேட்டால் இல்லை. சமையல்காரர் உட்பட குறிப்பாக மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களும்,உறவுகளும், வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமாக அதிமுக பொதுசெயலாலருக்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்ப்பட்ட "தனியார் பாதுகாப்பு படை" வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது இப்படி ஒரு படையை "பழனி" தலைமையில் "தரணி" உடன் சேர்த்து, மூன்று தஞ்சைகாரர்களும், இரண்டு மேலூர் காரர்களும் ஒரே "சாதியை" சேர்ந்தவர்களாக இருந்தார்களே, அவர்கள் ஐந்துபேரும் "கள்ளத்தனாமாக" நடராஜனின் கட்டளைக்கு என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்று "உளவுத்துறை" கூறிவிட்டதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லோரும் "மூட்டை, முடிச்சை" தூக்கி கொண்டு "சூட்கேசுகளுடன்" மதியத்திற்குள் வெளியேறினர்.


அந்த இடங்களை "சிறப்பு காவலர்கள்" நிரப்பினர். சசிகலா வகையறா இரண்டு "ஸ்கார்பியோ" வாகனங்களில் வெளியேறினர். ஆனாலும் "தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை" மாவட்டங்களில் இருந்து நேற்றே நிலைமையை கேள்விப்பட்டு, "சசி குழு "அழைப்பின்" பெயரில் சென்னை வந்துள்ள கள்ளர் சமூக முன்னோடிகள் இன்று "தனியாக" சென்னையில் கூடி விவாதிக்கின்றனர். அவர்கள் மீண்டும் "சமரசம்" பேச வாய்ப்புள்ளதா என்று பேசிக்கொள்கிறார்கள். அதை எதிர்க்கட்சி டி.வி. மூலம் ஒளிபரப்புகிறார்கள். ஏன் இந்த குழப்பம்? பெங்களூரு நீதிமன்றத்தில் வைத்து முதல்வர் போகாத கடந்த வாரம் "சசிகலாவும், இளவரசியும், சுதாகரனுக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டு "ரகசியம்" பேசியதும், அங்கே நேரில்வராத நடராசன் விடுதி அறையில் இருந்து வழிகாட்டியதும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு தெரிந்தது. அதுமட்டுமின்றி தங்களுக்குள் "தொடர்பு இல்லை" என்று கூறி வந்தவர்கள் பெங்களூரில் ஒன்றாக கூடி குசலம் விசாரித்ததில் தன்னிடம் "சசி உட்பட" பொய் கூறியுள்ளார்கள் எனபதும் முதல்வருக்கு வெளிப்பட்டு விட்டது.


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுவிடுவார், அதனால் தன்னை முதல்வராய் ஆக்கு, அல்லது தான் காட்டும் நபரை ஆக்கு என நடராசன் உளவு துறையின் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் என்ற காரைக்குடிகாரர் வசம் பேசியதை கேள்விப்பட்டுதான் அந்த ராஜேந்திரனை மாற்றினார் முதல்வர். இது இரண்டு மாதமாக நடக்கும் பிரச்சனை.அதற்கு பிறகு போடப்பட்ட "பொன்மாநிக்கவேலும்" ஸ்டாலின் கைது விவகாரத்தில் செயல்படாததை அறிந்து அதற்கும் "நடராசன் விசுவாசம்"காரணமா என ஆராயப்பட்டது. அவரும் அதனால் மாற்றப்பட்டார். அதற்குள் பெங்களூரு நீதிமன்ற "சந்திப்புகள்" உண்மை சதியை அம்பலப்படுத்தின. "சதி" கேள்விப்பட்ட உடனேயே "உளவுத்துறையினர்" தனியார் பாதுகாப்பு படை முதல்வரை சுற்றி நிற்பது "ஆபத்து" என உணர்ந்தனர். அவர்களும் "அதே" கும்பல்தானே என்பதால் "எதையும் செய்வார்கள்" என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களும் "காலி". பூங்குன்றன் மாத்திரம் "காத்திருப்போர்" பட்டியலில் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தனை விவாகரமும் "நமது எம்.ஜி.ஆர்" இதழிலும், "முரசொலியிலும்" மறைமுகமாக வந்து கொண்டுதான் இருந்தன. அதை யாரும் "துருவி" பார்க்கவில்லை. டிசம்பர் முதல்வாரம் நமது எம்ஜிஆரில் "ஐந்து மாவட்ட செயலாளர்கள்" மாற்றப்பட்டனர். இன்றைய இதழில் அத்தனை மாற்றமும் "தவறு" என்றும் பழைய மாவட்ட செயலாளர்களே தொடர்வர் எனவும் வந்துள்ளது. இன்று "முரசொலியில்" ஒரு கட்ட செய்தி வந்துள்ளது. அதில் " முதல்வரை காப்பாற்றிய சிறுமிக்கு பரிசு" எனும்போது அந்த சிறுமி "உங்களை காப்பாற்றியதற்கு" எனக்கு அவர்கள் "தூக்கு தண்டனை" கொடுக்கலாம் என கூறியது வெளியாகியுள்ளது. அதை ஆளும் கட்சியின் ஏடு "முந்தா நாள்" வெளியிட்டுள்ளதாக முரசொலி கூறியுள்ளது. அதாவது முதல்வரின் உயிருக்கு "ஆபத்து வார" உள்ள வாய்ப்பை அப்படி முரசொலி எழுதியதும் இப்போது தெரிகிறது.


அப்படியானால் முரசொலியை நடத்தும் திமுக தலைமைக்கு ஏற்கனவே "எல்லாம் " தெரியுமா? ஆமாம். தெரியும். எப்படி? மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிழல் மனிதரின் நடவடிக்கைகளை உளவு துறை மூலம் கணக்கெடுத்த அன்றைய முதல்வர் "அந்த கலாட்சேத்ரா காலனி" வாசியை பிடிக்குள் கொண்டுவந்து விட்டார். அவரது "வங்கி கணக்குகளை" எடுத்து வைத்து கொண்டு, அவரை "கிடிக்கி பிடி" போட்டு "ஜாபர் செட்" மூலமே அதிமுக உடைக்கும் படலத்தை தொடங்கி விட்டார். அப்படி வெளியே வந்தவர்கள்தான் "செல்வகணபதி, முத்துசாமி" போன்றோர். அந்த "உள்ளே-வெளியே" விளையாட்டை அப்போதிலிருந்தே இந்த கூட்டம் செய்து வந்துள்ளது. உள்ளேயிருந்து விளையாடியவர்களின் "நடிப்பு" அந்த அதிமுக பொது செயலாளரை நம்ப வைத்து விட்டது.


இந்த சதியை அதனால்தான் "கருணாநிதியின் சதியை முறியடித்ததாக" ஆள்வோர் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே காவல்துறைக்குள் இருக்கும் "குழுவாதம்" இந்த சதிகளுக்கு உதவி விட்டது. அதாவது "ஜாங்கிட் குழு". இது திமுக விசுவாச குழு. ஜாங்கிட் ராஜாத்தி அம்மையாருக்கும், ஸ்டாலினுக்கும் "முறைவாசல்" செய்தவர். அவருக்கு எதிர்குழு "ராஜெச்தாஸ், பொன்மாணிக்கவேல்,குழு".இவர்கள் ஜான்கிட்டால் "பழி வாங்கப்பட்டவர்கள்". இந்த குழு விளையாட்டில் "சிவனாண்டி" சிக்கி கொண்டார். சென்ற அதிமுக ஆட்சியில் சசிகலா விசுவாசி, பிறகு திமுக ஆட்சியில் அழகிரி மூலம் உள்நுழைவு, பிறகு மீண்டும் சசிகலா மூலம் முயற்சி, ஆனால் இப்போது ஜெயாவால் "வாங்கிய குட்டு". இதேபோல ம.நடராஜனின் நண்பர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். அவர் நல்லவர் போல நடந்து எல்லா "சேட்டைகளையும்" அரங்கேற்றியவர்.அம்பலம் ஆனதும் அவரது உயர்ந்த பதவியான " சிறப்பு கடமை அதிகாரி" என்ற ஒ.எஸ்.டி. பறிபோனது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர்.கால விசுவாசி "பிச்சாண்டி அய்.ஏ.எஸ்." வந்துவிட்டார்.

இத மாற்றங்கள் "அதிகாரிகளின் ஆலோசனைப்படி" நடக்கின்றன. அதை புரியாமல் எது "கள்ளரை எதிர்த்து" என்று எண்ணிக்கொண்டு, சில "பார்ப்பன விற்ப்பன்னர்கள்" தோட்டத்தில் நுழைய முயற்ச்சித்தார்கலாம். ஆனால் ""மூக்குடைபட்டு" திரும்பினார்களாம். அதனால் பார்ப்பனர்களுக்கு இந்த "மாற்றம்" பயன்படாது. தமிழர்களுக்கே பயன்படும் எனபது "கூடங்குளம், முல்லைபெரியார்" விசயங்களிலும், "மூன்றுபேர் தூக்கு , ஈழத்தமிழர்" விசயங்களிலும நிரூபனமாகி வருகிறது. காஞ்சி "மடசங்கரங்கள்" செய்யும் "நீதியரசருக்கு லஞ்சம் கொடுக்கும்" செயல்களும் தண்டிக்கப்படும். மத்திய அரசின் "தமிழ்நாடு மீதான போர் நடவடிக்கையும்" ப.சிதம்பரத்தின் சதிகளும் முறியடிக்கப்படும்.

Saturday, December 17, 2011

ஏண்டா, முல்லபெரியாரா?

வேண்டும் என்றே "முல்லைபெரியாரை" முல்லா பெரியார் என்று எழுதி அப்படியே உச்சரித்து மலையாள உச்சர்தஈபு என்பதாக காட்டி, இந்தியா முழுவதும் ஊடகங்களில் உள்ள "கூமுட்டைகளுக்கு" புரியாமல் இருக்கும்போதே ஒரு "சித்து விளையாட்டை" செய்துவரும் கெட்டிகாரர்கலே,நீங்கள் அந்த அணையின் பெயரை மலையாளத்தில் போட எண்ணினால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

மலையாளத்தில் "முல்லை நதி" என்பதுதான் அப்படி அழைக்கப்படுகிறது. அந்த முல்லை நதியை நீ, முல்லா" என்கிறாய். சரி. சொல்லிவிட்டு போ. மீதம் உள்ள "பெரியாரை" ஏன் அப்படியே அழைக்கிறாய்? "பெரிய ஆறு" என்பதுதான் அங்கே பெரியாறு" என்று அழைக்கப்படுகிறது. நீ அதையும் மலையாளத்தில் கூறு. அதாவது "வல்லிய புழா" என்று கூறு. மொத்தத்தில் "முல்ல வல்லிய புழா" என்றுதான் நீ அழைக்க வேண்டும். உனக்கு சம்மதமா? சென்னை பதிப்பான டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவை திருந்துவார்களா?

முல்லைபெரிராஉ அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், 1879 இல் பஞ்சா என்ற தமிழ்மன்னன் வசம் இருந்ததும், 1885 இல் . கண்ணன் தேவன் எஸ்டேட் உடன் ஒப்பந்தம் போட்டதும் வரலாற்றில் ஆவணமாக உள்ளது. அதற்குப்பின்தான் "திருவிதாங்கூர்" சமஸ்தானம் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஆங்கிலேயன் முட்டாள்தனமாக தமழ்நாட்டு பகுதிக்கு "திருவிதாங்கூர்" மன்னனுடன் ஒப்பந்தம் போட்டு விட்டான். இந்த உணமைகளை நாகர்கோவில் எம்.பி. நேசமணி, ௧௯௫௫ ஆம் ஆண்டு டிசம்பர் பதினாலாம் நாள் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அப்போது அவர் "திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சி தலைவர் ".