Thursday, January 12, 2012

பாரம்பரிய அடையாளங்களை கார்பொரேட் விரும்புவதில்லை.

இப்போது அவர்களது குறி "ஜல்லிக்கட்டு விளையாட்டு" மீது. அவர்கள் கூற்று, "எப்படி விலங்குகளை வதைப்பீர்கள்?". ஆகா. எங்கள் விலங்குகள் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை? இவர்கள் யார்? நகர்ப்புறங்களில், அறிவுஜீவிகளாகவும், படித்தவர்களாகவும், மனித உரிமையை நுனி நாக்கில் பேசுபவர்களாகவும், அனேகமாக சிவந்த வன்னத்திலுள்ளவர்கலகா இருக்கிறார்கள். விலங்குகளை வதைக்ககூடாதல்லவா? என்று வினவுகிறார்கள். உண்மைதான் விதைக்க கூடாது என்று நாமும் சொல்லிவிட்டால் பிறகு நம்மிடம் நிறைய பேசுகிறார்கள்.அப்போது இவர்களை பற்றி அதிகம் புரிய முடிகிறது. இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கே உள்ளவர்களுக்கு "பாரம்பரிய விளையாட்டுகள்" பற்றி என்ன தெரியும் என்பது நமக்கு தெரியாது.

காளையை அடக்க மனிதர்கள் பொங்கல் நேரம் பாய்ந்து வருவது "வீர விளையாட்டு" என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். அந்த "காளைகளை" விலங்கினத்தில் " அரிதான" ஒன்றாக சேர்த்து விட்டார் ஜெயராம் ரமேஷ் என்றுவேறு கூறுகிறார்கள்.யார் அந்த ரமேஷ்? பெங்களூரு பார்பனரான அவருக்கு நமூர் பாரம்பரிய விளாயாட்டு பற்றியோ, நம்மூரில் காளைகளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியோ தெரியுமா? ஒரு காளையை பலர் சேர்ந்து அடக்கலாமா? என்று இவர்கள் கேட்கிறார்கள். ஒருவர்தான் தொடர்ந்து அந்த ஆட்டத்தில் கலையுடன் சண்டை போட்டு அடக்க முடியும்.பலரும் அதை பிடிக்க முயற்சி செய்வார்கள்.அதற்காகவே அந்த கலையை வளர்ப்பவர்கள் அதை தங்கள் வீட்டு குழந்தையை விட அருமையாக வளர்ப்பார்கள்.அதனால்தான் அலங்காநல்லூர் போன்ற சிலகிராமங்களிழ்மட்டுமே அந்த ஆட்டம் நடைபெறுகிறது. மாட்டு போன்களில் கலையை அடக்குவது எங்கள் "தமிழர் பழம் பண்பாட்டில்" இருக்கிறது. இத்தனை விளக்கம் சொன்னாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள தயாரில்லை.

காளைகளுக்கு "சாராயம்" கொடுக்ககூடாது. ஊசி போட கூடாது. அதை வதைக்க கூடாது. இதையேதானே பாரம்போரிய கலைகளை, விளையாட்டுகளை போற்றுபவர்களும் கூறி வருகிறோம். உங்கள் " ஓட்டப்பந்தயம்" செல்பவர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும், "போதை மருந்து" பயன்படுத்தும் போது எப்படி உங்களின் விதிகள் அவர்களை தடை செய்கிறதோ அதே போல எங்கள் பாரம்பரிய விளையாட்டிலும் "விதி மீறல்" செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது "உலகமயமாக்கலின்" விளைவே. உங்கள் வணிகமயமாக்கலின் வித்துக்களே. அதனாலத்தில் உள்ள "ஒழுக்கமற்ற" போக்குகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. கிராமப்புற மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்ன செய்யும்? நீங்கள் " உழவு தொழிலுக்கும்" நாங்கள் காளைகளை பயன்படுத்தும்போது என்ன சொல்லபோகிறீர்கள்? வண்டிமாடு இழுக்கனான்கள் காளைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எப்படி அதை பார்கிறீர்கள்? இப்படி கேட்டால் அது வேறு. இது வேறு. இது தவிர்க்க கூடியது. அது தவிர்க்க முடியாதது. இப்படி கூறுகிறார்கள்.


விளையாட்டு ஆட கலைகளை பயன்படுத்துவது உங்களுக்கு பொறுக்கமுடியவில்லை என்றால் அது ஏன்? ஒன்று நீங்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்க, அல்லது முற்பட்ட சாதி மனிதராக இருந்து கொண்டு, இந்த ஆட்டத்தை கிராமப்புற "பிற்பட்ட" சமூகத்தின் ஆட்டம் என்று பார்கிறீர்கள். இப்படி கேட்கலாம். இந்த ஆட்டம் அடிப்படையில் தலித் சமூக மக்களையும் சேர்த்துக்கொண்டு ஆட வேண்டிய ஆட்டம். ஆனால் தமிழ்நாட்டில் எல்லாமே கடந்த முப்பது ஆண்டுகளாக "பிற்பட்டோர்" ஆளுகை என்று போய் விட்டதால், இந்த ஆட்டத்திலும் தலித் சகோதரர்களை ஈடுபடுத்த தயங்கும் பிற்பட்டோரை காண்கிறோம். அதற்கு ஏன் முற்பட்டோரின் பழக்கங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்? மாறாக "நாங்களும் தமிழர்கள்தான்". என்றும், "எங்களையும் காளைகளை அடக்க" விடுங்கள் என்றும்,தலித் மக்கள் சண்டை போட வேண்டும். வீரத்தை நிரூபிக்கும் தலித் சகோதரனை பிற்பட்டோர் சமூகம் ஏற்றுக்கொண்டு போற்ற வேண்டும். அதுதானே பெரியார் வழியில் உள்ள தமிழர் பண்பாடு?

சரி. உங்கள் வாதத்திற்கே வருவோம். மனிதர்களை நாம் முதன்மையாக நேசிக்கிறோம் என்று கூறும் இந்த மனிதர்கள் "மனித வதைகளையும்"எதிர்க்க வேண்டும் அல்லவா? அதனால் "நாலு சக்கரவாகன ஓட்டம்", "இரு சக்கர வாகன " ஓட்டம் ஆகியவற்றை "தடை" செய்து விட்டு பிறகு இந்த ஜல்லிக்கட்டு பக்கம் வாருங்கள் என்று கூறலாமா? அந்த நாலு சக்கரவாகன ஓட்டத்திலும்" இரு சக்கரவாகன ஓட்டத்திலும்" மனித உயிர்கள் அதிக ஆபத்தை சந்திக்கின்றன என்பதால் அவற்றை தடை செய்ய முதலில் ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் கார்போரேட்களின், பெரு முதலாளிகளின், நடுத்தர வர்க்கத்தின், "வீர விளையாட்டு" என்றால் இந்த " மஞ்சு விரட்டு" என்ற விளையாட்டுதான் எங்கள் தமிழர்களின் பாரம்பரிய வீர் விளையாட்டு.

Tuesday, January 10, 2012

உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்

பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே அவரது வீட்டில் அடையாலம்கட்டாத எதிரிகளால் நேற்று இரவு ஏழரை மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். தேவன்றகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் என்ற பெயருடன் அவர் செயல்பட்டு வந்தார். ஒன்பதாம் நாள் தேனியில் முல்லை பெரியார் பிரச்சனைகாக ஒரு பட்டிநிபோராட்டத்தை நடத்தி விட்டு வந்திருந்தார். அவருக்கும் மூலக்கடை பண்ணையார் குடும்பத்திற்கும் உள்ள மோதல் பற்றி எடுகள் வெளியிட்டுள்ளன. அவரது நடவடிக்கைகளினால் பண்ணையார் பக்கத்தில் பலர் மரணம் அடைந்ததையும், அவரது செயளால மேலும் பலர் கொலை செய்யப்பட்டதையும் கவனமாக கூறும் காவல்துறை, பசுபதி பக்கத்தில் "பண்ணையார் குடும்பத்தால்" கொல்லப்பட்டவர்கள் "பதிமூன்றுபேர்" என்பதை கூறுவதில்லை. ஏன் என்றாலவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்".

தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழ்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் போர்குணமிக்க முன்னணி படை. அந்த படையின் ஒரு முன்னோடி கொல்லப்பட்டதனால், டென்றா எழுச்சி திர்ஹேன் மாவட்டங்களில் இப்போது சாலையெங்கும் திரண்டு நிற்கிறது. பசுபதியின் உடலை ஏந்திய வாகனம் பெருமூர்வலமாக தூத்துக்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சாலையெங்கும் திரண்ட தேவேந்திர கூட்டம் ஆண்களும்,பெண்களும் தங்கள் தலைவனை காண கிராமங்களில் இருந்து வெளியே வந்து நிற்கின்றனர். திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி என்று அந்த மாபெரும் உழவர் எழுச்சி பேரணி சென்று கொண்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் காத்திருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, மலர் வலயம் வைத்து ஊர்வலத்தில் கலக்க, எட்டயபுரத்தில் பசுபதிக்கு மரியாதை செலுத்தி இணைய ஜான் பாண்டியன் தயாராய் நிற்க இந்த உழவர் பெரும் எழுச்சியை தேவேந்திரா சமூகம் இனி மறக்க முடியுமா? .

இனியாவது உழவு தமிழன் தனது போர்குணத்தை காட்ட தனக்குள்ளேயே எத்ரியை தேடாமல் பண்ணை திமிங்கிலங்களின் கைகளில் கலாவடப்பட்டிருக்கும் நிலங்களை எல்லாம் தனாதாக்கி நாட்டு மக்களுக்கு "உழுது, பயிருட்டு, சோறு போடும் பெரும் கூட்டமாக உருவாகுமா? என்ற ஏக்கம் நமக்கு.

நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?

நக்கீரன் சனிக்கிழமை இதழிலேயே அடுத்த இதழ் "பத்தாம் நாள் செவ்வாய் கிழமை" வெளிவரும் என்று பிரச்சனைக்குரிய கட்டுரை வெளியான பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். அதாவது பொங்கலை முன்னிட்டு, முன்கூட்டியே என்பது அதன் பொருள்..அதற்காக அவர்கள் அடுத்த இதழை தயார் செய்வதில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்தனர். ஞாயிற்று கிழமையும் அந்த இதழை முடிப்பதில் வேகம் காட்டி முடித்து விட்டனர். சனிக்கிழமை தாக்குதலால் அடுத்தட இதழ் "தயாரிப்பு ஒரு சவாலாக" நக்கீரன் இதழுக்கு ஆகிவிட்டது. இந்த லாவுக்கு காவல்துறைக்கு அந்த இதழின் விரைவான செயல்பாட்டு சூழல் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படியில், நக்கீரன் கொடுத்த புகாரையும், கணக்கில் எடுப்பதிலும், எண்ண செய்யவேண்டும் என்று அந்த புகார்கள் பற்றி முடிவு எடுப்பதிலுமே கவனமாக இருந்தனர்.

அதற்குள் நக்கீரன் குடும்பத்தினர் தங்களது அடுத்த் இதழ் தயாரிப்பில் வேகம் காட்டி , அதை அடித்து, பயிண்டு பண்ணி, பார்சல் கட்டி எல்லா ஊர்களுக்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி அடைந்து விட்டனர். அதேபோல செவ்வாய் கிழமை காலையில் கடைகளில் போடுவதிலும் வெற்றி பெற்று விட்டனர். அந்த வெற்றி சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லைதான்.அதாவது சென்னையில் உள்ள கடைகளில் அதிமுகவினர் முந்திய இதழை பிடுங்கி எரிக்கும்போதே வட சென்னை போன்ற இடங்களில் உள்ள கடைகளில் இனி நக்கீரன் விற்க கூடாது என்று மிரட்டியது இந்த இரண்டு நாட்களுக்குள் வேலை செய்யத்தானே செய்யும்? அதனால்தான் சென்னையில் போதுமான அளவில் கிடைக்க வில்லை. ஆனாலும் நாம் செவ்வாய் காலையில் கொடுத்த தொந்திரவின் பேரில், வின் தொலைக்காட்சி ஊழியர்கள் போய் கடைகளில் சண்டை போட்டு வாங்கி வந்து விட்டனர்.

அதனால்தான் நேற்று "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் எங்களால் நக்கீரனின் "நேற்றைய செவ்வாய் கிழமை இதழ்" பற்றி பேச முடிந்தது. அந்த இதழை பார்த்த போது, அதில் முழுமையாக எப்படி அதிமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்ற புகை படங்களும், விளக்கங்களும், மட்டுமே இருந்தன. ஏற்கனவே சென்ற இதழான "சிக்கலில்" மாட்டிய இதழில் எப்படி "அதிமுக செயற்குழு, பொதுகுழுவில் பொன்னையன் பேசியதை" ஜெயலலிதா பாராட்டினார் என்று ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தார்களோ,அதேபோல நடிகர் விஜயின் அம்மா போஎஸ் தோட்டத்தில் இருப்பதாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திகளை தருவதற்கு ஏற்ற மனிதர்கள் அந்த இதழுக்கு நெருக்கமாக இருப்பதும் தெரிந்தது. அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழுவின் படங்களை பார்த்து விட்டு, மேடையில் அமர்ந்திருக்கும் பொன்னையனும், வளர்மதியும் பேசி இருப்பார்கள் என்று எண்ணி "மேசை எழுத்தில்" அது அப்படி எழுதப்பட்டுள்ளது தெரியவருகிறது. பொன்னையன் மேடையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார் என்றாலும் பேசவில்லை என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது. வளர்மதி தீர்மானங்களை மட்டுமே வாசித்தார் என்றும் பேசவில்லை என்றும் கூறுகிறது.


அதாவது அந்த சிக்கலான் இதழில், உள்ள சிக்கல்னா கட்டுரையில், ஜானகி அணியின் பொன்னையனும் , வளர்மதியும், பழைய சேவல் அணியான ஜெயலலிதா அணியை சேர்ந்தவர்களை விட விசுவாசமாக இருப்பதாக "ஜெ" கூறியதாக இட்டு கட்டப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இதுபோன்ற தவறுகள் "அறை,குறையாக" சிலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பரப்பி, அதிக ரகசியம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள். அதை சோதித்து பார்க்க வேண்டியது ஏடுகளின் பணி.அத்தகைய தெரிந்தவர்கலேன்று நம்பப்படுபவர்கள் எம்.நடராசனும், திருச்சி வேலுசாமியும் என்பது அனைவருக்கும் தெரிகிறது.

அதாவது செவ்வாய் கிழமை வெளிவந்த இதழில், திருச்சி வேலுசாமி நேர்காணலும், நடராசன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. படங்களுடன் அந்த செய்தி வேலுசாமி-நடராசன் பெயர்களுடன் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நக்கீரனுக்கு மிகவும் வேண்டிய மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் தனது கருத்தை புதிய தலைமுரைடி.வி.யில் கூறும்போது, ஒரு ஆட்சி தனது செயல்களை பகிரங்கமாக வைக்காதபோது, ஒரு ஊடகம் அதை யூகம் செய்துதான் எழுத முடியும் என்றும், அதற்கு அந்த ஆட்சிக்கு நெருக்கமாக்கைருந்தவர்களிடம்கேட்டுதான் எழுத முடியும் என்றும் கூறி "பூனையை, பையை விட்டு வெளியே " எடுத்து போட்டு விட்டார். இப்படித்தான் அந்த தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் மீது "சந்தேகம்" எழுந்துள்ளது. எப்படியோ வெளியே ஓடிவந்தவர்களுக்கும், தேர்தலில் தோற்ற முன்னாள் முஹல்வரின் கட்சிகாரர்களுக்கும் மட்டுமே இதனால் பலன். நக்கீரனுக்கு பலனா? பலவீனமா?

நக்கீரனை கைவிட்ட திமுக?

நக்கீரனை கைவிட்ட திமுக?
நக்கீரன் "ஜெ"வை தாக்கி எழுதினால் அதற்கு ஆதரவாக திமுக தலைமை வரவேண்டும் அல்லவா? அதுதானே தமிழ்நாட்டு அரசியல்? இந்த முறையும் நக்கீரன் அலுவலகத்தை அதிமுக வினர் களை முதல் மாலைவரை தாக்கும்போது, திமுக தலைவர் மதியத்திலேயே ஒரு கண்டன அறிககையை கொடுத்தார் அல்லவா? ஆனால் கலிஞர் அறிக்கையே பல கேள்விகளை எழுப்பிவிட்டன. இந்த பழம் பெறும் அரசியல்வாதி ஏன் தனது மகன் மாத்திரை தினகரனை ஆள் வைத்து எரிக்கும்போது, சும்மா இருந்தார்? அப்போது ஏன் இவர் தனது மகனிடம் இதே அறிவுரையை, அதாவது " வழக்கு" போடலாம், தாக்குதல் கூடாது என்று கூறவில்லை? என்றும் கேள்விகளை பொதுமக்கள் கேட்டார்கள். ''ஊடகத்தை தாக்குவது ஜனநாயக நாட்டில் தவறான செயல் " என்று அப்போது ஏன் இவர் கூறவில்லை? என்றும் கேள்விகள் எழுந்தன.

கலைஞர் வழக்கமாக தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பற்றி ஒன்றை கூறுவார். ''சரக்கும் முறுக்கு, செட்டியாரும் முறுக்கு " என்பார். இந்த இடத்தில் நக்கீரன் என்ற சரக்கு முறுக்காக இருந்தாலும், அதை பற்றி கருத்தை விற்பனை செய்ய வந்த செட்டியார் கலைஞராக இருந்ததால், அது "திருப்பி" அடிக்கிறதோ? ஹைதர் அலி ஒன்றை கூறினார். அதாவது பா.ஜ.க. கட்சியின் அலுவலகத்தை திமுக முற்றுகையிட்டு, தாக்கும்போது, திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனும், பரிதி இளம்வழுதியும் முன்னே நின்று தலைமை தான்கினார்களே? அது சரியா? என்று நம்மிடம் கேட்டார். யார் செய்தாலும் தவறுதானே? மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்கள் உலகமெங்கும் பல கொடி இருக்கிறார்கள்: அவர்களை இழிவாக சித்தரிகிரார்களா? என்றும் வினவுயனார். அதேபோல முஸ்லிம், தலித் தோழர்கள் சிலரும் இதையே கேட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் உணவு பழக்கத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதே வரகளது வாதம்.

ஆனால் கலைஞர் எப்படி அறிக்கை விட்டார் தெரியுமா? நக்கீரனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்த பிற்பாடு, வலியுறுத்தல் வந்த பின்பே, வெளியிட்ட செய்தியை பற்றி கோபப்பட்டு விட்டு, பிறகே அவர் அறிக்கை தந்தார் என்கிறது ஒரு செய்தி. சரி. அதன்பிறகு, நக்கீரன் அலுவலகத்தார் "தளபதி ஸ்டாலினை" அணுகி அவர் வந்து உடைக்கப்பட்ட அலுவலகத்ஜ்தை பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அடஹ்ர்கு அவர் "மறுமொழியே" சொல்லவில்லை என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. அப்படியானால் நக்கீரனை திமுக கை விட்டு விட்டதா?

நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு

அன்று சனிக்கிழமை. சனவரி ஏழாம் நாள். புதுக்கோட்டையில் இருந்தேன். அப்போதுதான் சென்னையிலிருந்து வாடகை காற்றில் திருச்சி வழியாக வந்து இறங்கினோம். பண்ருட்டி வழியில் தானே புயலுக்கு பின்னால் இரவில்; செல்ல முடியாது என ஓட்டுனர் கூறிவிட்டதால், திருச்சி வழிதான் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதியில் தங்கினோம். அம்பேத்கர்-பெரியார் மக்கள் கழகம் தலைவர் செல்வன் அழைத்தாரே என்று "கரம்பக்குடி" கூட்டத்திற்கு வந்திருந்தோம். கடைகளில் தொங்கிய நக்கீரன் தலைப்பி கொஞ்சம் கண்ணை ஈர்த்தது. " மாட்டு மாமிசம் சாப்பிடும் மாமி நான்" என்று தலைப்பிட்டு "விவரிக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதி இருந்தது. அவரே சொல்கிறாரா? என்பது நமது கேள்வியாக எழுந்தது.ஆர்வம் இருந்தும் பிறகு வாங்கிகொள்ளலாம் என்று இருந்து விட்டேன். விடுதியில் படுத்து எழுந்த பின்னால் அனகில எட்டிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசினார். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுகிறது என்றார். ஊடகவியலாளராக வருத்தப்பட்டார்.நானும்தான்.

அடுத்து கலைஞர் டி.வி. பார்த்தேன். அதில் நக்கீரன் அலுவலகம் உள்ளே தாக்கப்பட்ட காட்சிகளை, வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளை காட்டினார்கள். அடஹ்ர்குள் த.ம.மு.க. போது செயலாளர் ஹைதர் அலி தொலை பேசினார். நக்கீரன் என்பதால் எனக்கு பேசினார். மாட்டு இறைச்சி ச்டப்பிட்டால் இழிவா? என்ற தோரனையில் இருந்தது அவரது குரல். கலைஞர் அறிக்கை கலிஞர் டி.வி.யில் கட்டப்பட்டது என்றேன். எண்ண சொன்னார்? என்றார். நீதிமன்றம் சென்று அவதூறு வழக்கு போடவேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் என்றேன். இதே கருத்தை தனது மகனுக்கு ஏன் அவர் "மதுரை தினகரன்" தாக்கப்பட்ட போது கூறவில்லை? என்று கேட்டார். அதுவும் சரியாகத்தானே இருக்கிறது என எண்ணினேன்.அடுத்து உடனேயே நக்கீரன் அலுவலகம் தொடர்பு கொண்டு காமராஜிடம் பேசினேன். உள்ளே "பாசிடிவாகத்தான்" எழுதியிருக்கிறோம் என்றார். எண்ண எழுதி இருக்கிறீர்கள்? என்றேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவது பற்றி எம்.ஜி.ஆர். கூறியதை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத்தான் போட்டிருக்கிறோம் என்றார்.


அ[ப்படியானால் ஏன் அட்டையில் "நெகடிவாக" போட்டீர்கள்? என்றேன்.மாவிற்கு, மா போடவேண்டும் என்று எண்ணியதால் "கெடுத்துக்கொண்டோம்" என்றார். அவர் நக்கீரனின் இணையாசிரியர். அவரது கூற்றை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அப்போது அவரது தொலைபேசி மூலம் வெளியே முழக்கம் போடும் சத்தம் கேட்டது. மதுசூதன் ஆட்கள் இப்போது வந்து முழக்கமிடுகிறார்கள் என்றார். "வெளியே காவலர்கள் காட்சி ஊடகத்தில் நிற்பது தெரிந்ததே? எப்படி உள்ளே வந்து உடைத்ததை களைஞர் டி.வி. காட்டினான் "என்றேன்.. முதலில் பத்து பேர் வந்து உள்ளே நுழைந்து எங்கள் வாகனங்களை உடைத்து அலுவலகம் உள்ளே வந்து பல பொருட்களையும் உடைத்து போட்டு விட்டனர். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி கதவை ப[ஊட்டி விட்டோம் என்றார். அதற்கு பிறகுதான் காவல் துறை வந்தது. வாசலில் நிற்கிறது.ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றார். ஒவ்வொரு கூட்டமாக அதிமுக வினர் வந்து முழக்கமிட்டு, கள் எரிந்து விட்டு போகிறார்கள் என்றார்.

அதிமுக வினர் மாநிலமெங்கும் நக்கீரன் புத்தகத்தை கடைகளில் பிடுங்கி எரித்து வருகிறார்கள் என்றார். அதேபோல பிற இடங்களிலிருந்தும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை தி ஹிந்து, தினத்தந்தி, போன்ற ஏடுகள்; உட்பட திமுக வினர் செய்த அராஜகத்தை படம் பிடித்து வெளியிட்டனர். அன்று காவல்துறை அதாவது ஞாயிற்று கிழமை சிறிது "அடக்கி" வாசித்தாங்க போலிருக்கிறது. உள்ளே போட்டதை படித்து பார்த்து வெளியே போட்டதை ஓரந்தள்ளி பார்க்க அரசியல் கட்சிகாரர்களுக்கு "பொறுமையில்லையோ?". அது அவர்கள் வேலையில்ல்யோ? சரி.இப்படித்தானே மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது, முதலில் மேயர் தேன்மொழி தனது படையுடன் சென்று வாசலில் முழக்கமிட்டு சென்றார். அடுத்து வந்த திமுக குழு வந்து கள் எறிந்துவிட்டு சென்றது. அடுத்து வந்த அட்டாக் பாண்டி குழு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, மூன்று பேர் சாகா காரணமாக ஆகிவிட்டது. இரு கட்சியிலும் தலைமைக்கு விசுவாசம் கட்ட ஒவ்வொரு குழுவாக இப்படித்தான் வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்லவேண்டுமோ?

Thursday, January 5, 2012

கருணை எனபது ஒரு ஆளின் பெயரா?-நூல் ஏற்படுத்திய சர்ச்சை.

நேற்று தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பேரா சுமதியின் கவிதை தொக்குப்பான "அருகன்" நூல் வெளியிடப்பட்டது. வழக்கம்போல தமிழச்சி, சந்திரசேகர், மற்றும் நண்பர்கள் வரவேற்க, வழக்கம்போல , சிற்றுண்டி,தேநீர் ஆகியவற்றுடன் அவர்கள் குடும்ப வழமை உபசரிப்பில் சிக்கியபின், மாடி ஏறி அரங்கிற்குள் நுழைந்தோம். கலாப்ரியா என்ற சோமசுந்தரம் முதல், ஓவியர் மருது,வி.மங்கை,அரசு,தங்கம் தென்னரசு, ஜெயராம், ஆயிரம்வில்லக்கு ஹுசைன்,அமீர் அப்பாஸ்,லல்லி, சரஸ்வதி, ராஜேந்திரன், பாமரன், அமுதன்,கார்திகைசெல்வன், கோசல்ராம், எஸ்.பி.லட்சுமணன்,இளையபாரதி, எல்லோரையும் ஒருசேர கண்ட மகிழ்ச்சியை விட, ஸ்ரீஜித் தான் டில்லி நாடக பள்ளியில் செர்கப்பட்டுள்ளேன் என்று கூறிய செய்தி அதிகம் இனித்தது.

உள்ளே பேரா.ராமானுஜம் நடத்திய அரங்கேறும் கவிதைகளின் "நிகழ்த்துகலை" வழக்கம் போல உள்ளம் கவர்ந்தது. பின்னால் பேசிக் கொண்டு இருந்தவர்கள், கைபேசியில் உரக்க பேசியவர்கள் ஆகியோரை வழக்கம்போல வி.அரசு கோபப்பட்டு திட்டியதும் ஒரு சுவைதான்.ரவி தனது கர்நாடக இசை வழியில்,ஒரு கவிதையை பாட கொஞ்சம் மெய்மறந்தோம். நடிகை ரோகினி கவிதையை வாசிக்க முயன்றார்.அதுவும் ஒரு அழகுதான். அதன்பின் ராமானுஜத்தின் மாணவ, மாணவிகள் அவர் வீட்டு குழந்தைகள் ஆடி, பாடி ஒவ்வொரு கவிதையையும் உயிர் கொடுத்து அவைக்கு காட்ட, அதை மங்கை எடுத்து சொல்ல, எனக்கு பக்கத்தில் அவர்கள் ராமானுஜத்தின் பயிற்சி பெற்ற எங்க ஊர் { தஞ்சாவூர்} குழந்தைகள் என்று அரசு கூறி கொண்டே இருந்தார். நால்லாதான் இருந்தது.

புத்தகம் வாங்கிய உடனே கலாப்ரியா என்னிடம் தான் முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று கூறியிருந்ததால் அதை முதலில் படித்தேன்."வார்த்தைகளால் கவரப்பட்ட மவுனம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.கவிதை நூலிற்குள் சென்றேன். "மியூசிகல் சேர்" என்ற கவிதை "காளியாய் இருக்கின்ற இருக்கைகள்" என்று தொடங்கி , எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் ஆங்கில பேராசிரியராய் இருந்தவர் தலைவர் கூறியதை நம்பி, கழகத்தில் சேர்ந்து, முதல் தொடக்கமே இளைஞர் மாநாட்டில் எங்கள் ஊரில் {நெல்லையில்} கொடி ஏற்றி பெருமை சேர்த்தாலும், அதன்பின் வந்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கைகளை தவற விட்டதை எண்ணி பார்த்ததால் அது இதற்கு பொருந்துமா என பார்ப்பது "அதிகப் பிரசங்கித்தனம்" என்பதால் எனக்கு அந்த பொருத்தி பார்க்கும் வேலை வேண்டாம் என இருந்து விட்டேன்.

அந்த மே 18 2010 கவிதை முந்தைய ஆண்டின் நிகழ்வை நினைக்காமல் அன்றாட வாழ்க்கையை இயந்திரம் போல கழிக்கும் நடுத்தர வர்க்கத்தை "தன் சாடல்" செய்வதை அமைந்திருந்தது. "அன்றும் எழுந்தோம், பல் துலக்கி, உடை உடுத்தி," என்று துவங்கும்போது, ஜூலியஸ் பூசிக் தனது "தூக்குமேடை குறிப்புகளில்" சிறைக்கு வெளியே நடக்கும் மனிதர்கள், சந்தை, ஆகிய அன்றாட வாழ்க்கை பற்றிய விவரிப்பு நினைவுக்கு வந்தது. "முள்ளிவாய்காலை மறந்து" என்று அவர் கூறியிருந்தாலும் அரசியல் நிகழ்வுகள் உலகில் அதை மறக்க விடவில்லை. "எள்ளுபூ நாசியும், அரேபிய தேசத்தின் வாசனை திரவியமும்" என்ற கவிதையில், அந்த ஆப்கான் "ஆயிஷா" பாலின உறவுக்காக "மூக்கறுபட்டதை" நிகழ்த்து கலையில் அப்படியே காட்டி கவிதை உரையில் இரத்தம் உறைய வைத்து விட்டார்."எங்கெல்லாம் ஒரு பெண் அநீதியாக வதைக்கப்படுகிறாளோ ", "அங்கெல்லாம் அறுபட்ட உனது மூக்கின் எச்சங்கள் நீதிக்கு முன்னால் சென்று முறையிடட்டும் " என்ற வரிகள் "கவித்துவம்" இருக்கிறதா என்ற கவலையை விட்டுவிட்டு, "ஆவேசம்" இருத்தல் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. செய்திகளில் இருந்து எடுத்து "வழித்து போடுவது" அவரது பாணி. "எங்கள் சூர்பனகையின் அறுபட்ட முலையும், மூக்கும், இத்தனை யுகங்களுக்கு பின்னரும் உன்னில் தொடரும்" என்ற வரிகள் "எல்லா காலத்திலும் , எல்லா நாட்டிலும் இப்படிதானா?" என்று எண்ணுவதற்கு பதில் "அந்த இராமாயண காலநிலம்தானே இன்றைய ஆப்கானும் " என்று என்ன தோன்றுகிறது. அதில் ஒரு ஆரிய வாடை இருக்கிறதோ? அதைத்தான் பார்பனீயம் என்று நாம் "பாலின ஒடுக்கலாக" புரிந்து கொள்கிறோமோ? இத்தனை சிந்தனைகளை அந்த வரிகள் நமக்கு எடுத்து கொடுத்தது.


" இலக்குவனின் ஆண்திமிரை ,அரேபிய தேசத்தின் அத்தனை வாசனை திரவியங்களும் மறைக்கமுடியாது தோற்றோடும்". இப்படி எழுதியவர் இன்று சவுதியில், இராக்கில், இரானில், சூடானில் என பெண்கள் வாகனம் ஒட்டவும், வாக்கு அளிக்கவும், அதிகாரத்திற்கு போட்டி போடவும எத்தனை கடினங்களை சுமந்து போராடி அந்த உரிமைகளை பெற்று இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.முள்ளிவாய்க்கால் குறித்து மேக்கப் கவிதை எழுதியதாக குறிப்பிட்ட தோழருக்கு என்று ஒரு கவிதை.அதன் பெயர் "கழு மரம்". "ஏன் கண்ணீரின் உப்பை கண் மையை கொண்டு வடிகட்டாதீர்கள்". " உள்ளக் குமுறலை உதட்டு சாயத்தை வைத்து அளவிடாதீர்கள்". "ஏன் கவிதையை மட்டும் கொஞ்சம் தணிதிருக்க விடுங்கள்".இப்படி எழுதிய சுமதியை யார் புரிந்து கொள்ளாவிடினும் அந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தாலும் புரிந்து கொண்டுள்ளனர்..


பேரறிவாளன் அம்மா அற்புதமாளுக்கு என்று " அவ்வெண்ணிலவில்"என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். அதில் "தன் இளமையை தனிமையில் தொலைக்கப்போவதர்கான அறிகுறிகள் அற்று, அவன் தனது பத்தொன்பதாவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தான். முன்னேச்சரிக்கையற்ற இருட்குகை ஒன்றில்,எதிர்காலம் இடறிவிழுந்தபோதும் கூட, அவனது அடுத்த பிறந்த நாளுக்கான இனிப்பை அவனது அம்மா நம்பிக்கையோடு தயாரித்த படி, இருந்தாள்". இந்த வரிகள் "அற்புதம்மாலை" அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது. "கருணை மனுக்கள் மீதும் நம்பிக்கை இழந்த அவள்,இறுதியாக தன் வயோதிகத்தை கொஞ்சம் தள்ளிப் போடும்படி காலத்திடம் கருணை கூறியிருக்கிறாள்". இந்த வரிகள் தமிழச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நிலைமையை சொல்லுமானால், நமக்கு, அதுவும் "தெருப்பாடகனுக்கு" வேறு வார்த்தைகளை "கோர்த்து " கொடுக்குமல்ல்லவா? "கருணை ஒரு ஆளின் பெயர் அல்ல. அது சட்டப்பேரவை தீர்மானம். கருணை நிதியை என்றுமே தேடவில்லை.அது நீதிமன்றத்தில் அரசின் பதில்மனுவாக வந்து விழுந்தது".இது தெருப்பாடகனின் கூற்று. அது "வந்து விழுந்த திசையை நோக்கி, இன்று அந்த தாய் கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார்". இதுதான் அந்த "எசப்பாட்டின்" குரல்..


"அவங்கவங்க வீட்டுக்கு, அவரைக்காய் சோத்துக்கு".இப்படிஒரு தலைப்பு. "அக்கரையில் இருக்கும் அத்தீவில் எள் அள்ளி தெளிக்காப்ல, எங்கேயும் விதவைகள் தானாம்""கருப்பைகளும், முலைகளும் அற்ற ஒரு மொண்ணை பிறப்பிருந்தா, ஒரு வேளை, கோநேஸ்வரியும், பென்னம்பேரியும்,அங்கே அச்சமின்றி மீண்டும் பிறக்கலாம். காதலை போல, போருக்கும் வயதில்லை. கைமைக்கும் கூடத்தான்".இந்த வரிகள் அங்கே உள்ள போரின் விளைவில் பெண்களை, விவதைகளை எப்படி கூட்டம், கூட்டமாக ஆக்கி கொடுத்துள்ளது என்பதை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி நிலை குலைய வைக்கிறது. இந்த அளவுக்கு இந்த தொகுப்பு அன்னை எழுத வைத்து விட்டது..


"e

Wednesday, January 4, 2012

ஆங்கில ஏடுகளின் பாலின இம்சை.

இன்று காலை ஏடுகளில் வந்துள்ள செய்திகளில் டில்லி பாடியாலா ஹவுசில் இருக்கும் சீ.பி.அய். நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டாவது அலைவரிசை ஊழல் வழக்கில் சிறைக்குள் உள்ள ஆ.ராஜாவை பற்றி அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரி கூறிவரும் செய்திகளையும், அவற்றை ராஜா மறுப்பதையும், சீ.பி.அய். மீது ராஜா குற்றம் சாட்டுவதையும், அதற்கு ஆசீர்வாதம் மறுப்பு கொடுப்பதையும் ஒட்டி, எழுந்துள்ள வாத, பிரதிவாதங்களை "சூடாக" போடுவதில், தொடர்ச்சிகாட்டியுள்ளன. சரி. அவர்களுக்கு அந்த ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கும், அதன் விசாரணையும் "சுவை" யானதாக இருக்கும் அதனால் அவற்றை வெளியிடுகிறார்கள். அதுபோன்ற சுவைகளை வாசகர்களும் ஆர்வமாக படிப்பார்கள், அதனால அவற்றை வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது நமக்கும் புரிகிறது.

அந்த விவாதத்தில் இன்று ராஜா, அந்த ஆசீவாததிடம் கூறியதாகவும், அல்லது ராஜா சென்ற இடமெல்லாம் தனக்கு தெரியும் என்ற ரீதியில் ஆசீர்வாதம் எடுத்த "வாந்தியையும்" எழுதியிருக்கிறார்கள். சரி. அதுவும்கூட, ராஜா மீது குற்றம் சாட்டும் கூட்டத்திற்கு தேவைதான் என்பதால் எழுதுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டே அதாவது 2009 இலேயே நாம் எழுதி இருந்தோம்.அதாவது இந்த ஆசீர்வாதம் உண்மையில் ராஜாவின் உதவியாளராக இருந்த போது, ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பதும், ஏதோ தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜா அவரை நம்பி தனது உதவியாளராக போட்டார் எனபதும், அவர் திருச்சி மாவட்ட லால்குடி ஊரை சேர்ந்த உடையார் சமூக பின்னணி கொண்டவர் எனபதும், அவரை "தயா" அழைத்தார் எனபதும், அவரும் ராஜா வீட்டில் உள்ள போடோ படங்கள் உட்பட வெளிநாட்டு காரர்கள் உடன் ராஜா எடுத்து கொண்ட படங்களுடன் "தயா தயவு" நாடி சென்று விட்டார் எனபதும் நாம் ஏற்கனவே அப்போதே எழுதி இருந்தோம். அவரைத்தான் இப்போது சீ.பி.அய்.கொண்டுவந்து ராஜாவிற்கு எதிராக நிறுத்துகிறது என்பதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளவேண்டியது ஏராளம்.


ஆனால் அதற்காக இன்று ஏடுகளில் நேற்று நீதிமன்றத்தில் ஆசீர்வாதம் கூறியதாக, ஆ.ராஜா யாரையெல்லாம் நேரில்போய் அவ்வப்போது சந்திப்பார் என்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் பல திமுக எம்.பி.களையும் அவ்வப்போது சந்திப்பார் என்றும், கோயங்கா உட்பட, கார்பொரேட் முதலாளிகளையு, அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். அப்பை கூறும்போது, கனிமொழியையும் அவரது வீட்டில் போய் சந்திப்பார் என்றும்கூறியுள்ளார். இதில் ராஜா சந்தித்த திமுக எம்.பி.கள் பட்டியலில் கனிமொழியும் வருகிறார். இதில் ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் கனிமொழி திமுக தலிவரின், மற்றும் தமிழக முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அந்த சந்திப்பில் "ஆரசியல் சதி" இருக்கலாம் என்று கூற எத்தனிப்பதும் கூட நடக்கும். ஆனால் அந்த ஆச்செர்வாதம் என்ற ஒய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறும்போது, கனிமொழியை வீட்டில் சந்திக்க போகிறேன் என்று ராஜா சொல்லி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார். அது ராஜாவின் "தந்திரம்" என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


தான் செய்யும் காரியங்களுக்கு ஒரு அமைச்சர் அதனது தலைவரின் "ஒப்புதல்" இருக்கிறது என்று காட்ட விரும்பி இருக்கிறார். அது இந்த " மூட கிழவனுக்கு" புரிந்ததா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் ஏன் ஒரு அரசியல் முக்கியத்துவ பிரமுகரை சந்திக்க செல்வதை ராஜா என்ற மனிதர் சொல்லி செல்கிறார் என்று எண்ணினால் புரிந்து விடும். அதையும் தாண்டி, ராஜா கனிமொழியை சந்திக்க செல்லும்போது, "தொந்திரவு" செய்யவேண்டாம் என்று கூறியதாக இந்த ஆசீர்வதாம் கூறியுள்ளார். இந்த கூற்றில்தான் "பாலின இழிவுபடுத்தல்" இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணை சந்திக்க சென்றால் இந்த "ஆணாதிக்க" உலகத்திற்கு அது "வக்கிரபுத்தியுடன் தான்" தெரியும். அதிலும் ஒன்று ஆசீர்வாததினுடைய புத்தியோ, அல்லது அவர் சொல்வது உண்மையானால் ராஜாவினுடைய புத்தியோ "வக்கிர" சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும் என்றே கூறப்பட்டதாக இருக்க வேண்டும். திமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலுள்ள அய்.மு.கூ. ஆட்சிக்குள்ளும் தான் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொல்வது ராஜாவிற்கு "தேவைப்ப்பட்டிருக்கலாம்".

அதாவது தான் செய்யும் "கள்ள" காரியத்தை மறைக்க ராஜாவிற்கு முக்கிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறவேண்டிய "கட்டாயம்" இருந்தது என்பது நமக்கு புரிகிறது. ஏன் அப்படி? முதலில் "தான்தான்" அந்த அய்.டி.அமைச்சராக வந்து "கால்வாங்க" போகிறோம் என்றால் அபப்டி ஒரு "தேவை" வந்திருக்காது. ஆனால் ஏற்கனவே இந்த "தொழிலில்" கேட்டிகார்ராக செயல்பட்ட "தொழிலில் வெற்றி பெற்ற" ஒரு அமைச்சர்னா தாயாவிடம் இருந்து தலைவர் கலைஞர் "தன்னிடம்" இந்த களவாணி இலாகாவை "பிடிங்கி" கொடுத்துள்ள நிலையில் அதில் களவான்கும் போது, தான் பெரிய இடத்து "ஆள்" என்று காட்டவேண்டிய புத்தி ராஜாவிற்கு இருக்கும் என்பதை நாம் புரிந்துய் கொள்ள வேண்டும்.அதனாலேயே ராஜா, கனிமொழி வீட்டிற்கு செல்லும்போது அப்படிகூற முற்பட்டுள்ளார். ஆனால் அதை இந்த ஏடுகள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும்?

ஆணாதிக்க வெறி பிடித்த ஆங்கில ஏடுகளும், அதில் சில குறிப்பிட்ட ஏடுகளில் உள்ள அரசியல் சக்திகளின் எடுபிடிகளும் அந்த செய்தியை படு அசிங்கமாக் போட திர்ஹயர எனபதை காட்டியுள்ளன. உதாரணமாக டெக்கான் கிரோனிகள் என்ற ஆங்கில ஏடு இன்று காலையில், அந்த செய்தியை முதல் பக்கத்தில், " தொந்திரவு செய்யாதீர்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும்போது" என்பதாக வெளியிட்டுள்ளது. இது கேவலமான ஒரு "ஆணாதிக்க வெறி பிடித்த" அரசியல் சதிகாரர்களின் செயல்பாடு எனபது எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய வெளிப்பாடு. வரும்போது, அதை இந்த சமூகம் எதிர்க்க வேண்டும். தளபதி ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் அந்த குறிப்பிட்ட ஏட்டில் இருக்கலாம். அது வேறு. அந்த ஏட்டின் முக்கிய ஆள், கனிமொழியுடன் ஒரு காலத்தில் நண்பராக இருந்தவர் இல்லையா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்?


ஒரு பெண் பிரபல அதிகாரம் படைத்த குடும்பத்தில் இருந்து வரும்போது, அவர் எளிதில் சாதரணமாக மக்களுடன் பழகும் நற்குணத்தை கொண்டிருக்கும் போது, அவருடன் "இலக்கியம்" பேசிக்கொண்டும், "பெண்ணுரிமை" பேசிக் கொண்டும் ஒரு ஆண் தன்னையும் பிரபலமாக ஆக்குவதற்கு பழக முடியும். அது "அறிவுஜீவிகளின்" நட்பு என்று இந்த ஆணாதிக்க உலகம் சொல்லிவிடும். அதே பெண் அதிகாரம் இழந்ததாக் கருதப்படும் சூழலில், "திஹார் சிறையில்" மாட்டும் போது, அவரை பற்றி இழிவாக எழுத,பேச இந்த உலகம் தயார் என்றால் இது எப்படிப்பட்ட உலகம்? ஒரு எழுத்தாளன் அந்த பெண் பெயரை சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்வான், அதேசமயம் அந்த பெண் சிறையில் வாடினால் நக்கல் செய்து எழுதுவான். அவன் எந்த வகை? இப்போது இப்படி ஆங்கில ஏட்டில் எழியுல்லவர் எந்த வகை? அத்தகைய சூழலை ஏற்படுத்தி தான் செய்யும், அல்லது செய்த தவறுகளுக்கு "பிரபல பிரமுகர்களுடன் நெருக்கம்" என்ர்பதுபோல சித்தரிக்கும் அரசியல்வாதி எந்த வகை? இவர்களை கேள்வி கேட்டு "திணறடித்து" அதன்மூலம் அம்பலப்படுத்தும் வேலையை செய்தால் மட்டும்தான் "பெண்ணியம்" பேசும் பெரியார் மண் நிம்மதி பெறும்.