ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் தயார் செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. அதற்காக ஐக்கிய சபை மூலம் ஈரான் நாட்டிற்கு எதிராக அனைத்து காய் நகர்த்தும் வேலைகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஈரான் நாட்டின் தலைநகரான் டெஹ்ரானில் இந்த ஆண்டு ஏப்ரல் 17,18 தேதிகளில், ‘அணு சக்தி எல்லோருக்கும். அணு ஆயுதம் யாருக்கும் இல்லை’என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை ஈரான் நடத்தியது. அந்த மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதி செல்லக் கூடாது என்ற கருத்தை அமெரிக்கா வைத்திருந்தது. 55 நாடுகளிலிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும், அணுசக்தி நிபுணர்களும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில், ஈரான் நாட்டில் இந்திய தூதராக இருக்கின்ற சஞ்சய் சிங், கலந்து கொள்வதையே அமெரிக்கா விரும்பாமல் இருந்தது. ஏனென்றால் ஈரான் நாட்டினுடைய அணுசக்தி திட்டத்தின் மீது குற்றம்சாட்டி அதையொட்டி ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 12,13 தேதிகளில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகனும் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.
ஏற்கனவே ஈரான் நாட்டிலிருந்து எரிவாயுவை குழாய் மூலம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குக் கொண்டு வரும் திட்டத்தை அமெரிக்கா எதிர்த்தாலும், இந்திய நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தேவைக்காக, வளர்ந்து வரும் பொருளாதார நிலையில், டெல்லி அரசு ஆதரித்து வருகிறது. ஏற்கனவே சென்ற மார்ச் மாதத்திலேயே பாகிஸ்தான் அரசு ஈரான் நாட்டுடன் ஒரு பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள வாயு குழாய் மூலம் இரண்டு நாடுகளையும் இணைப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவும் அந்த குழாய் திட்டத்தை தன் நாட்டை நோக்கி நீட்டிக்க விரும்பி வருகிறது. இவையெல்லாமே அமெரிக்க அரசால் செரிக்கப்பட முடியவில்லை.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்தாலும், அமெரிக்காவில் உள்ள பெரும் முதலாளிகளும், வணிகர் சங்கமும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை கொண்டுவரும் அமெரிக்க சபையான காங்கிரசின் திட்டத்தை, அவர்கள் எதிர்க்கிறார்கள். அது அமெரிக்க நலனுக்கு உகந்ததல்ல என்பது அவர்களது கருத்து. அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன், அமெரிக்காவில் இருக்கின்ற பொருளாதார, தூதரக, சட்டபூர்வமான உறவுகளில் மோதலை, அத்தகைய பொருளாதார தடை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் கடிதம் மூலமாக அமெரிக்க பெரு வணிக சங்கங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதமே தெரிவித்திருந்தன. உலகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு நாடுகளுடன் உள்ள வர்த்தக உறவுகள், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதனால் பாதிக்கப்படும் என்பது அவர்கள் வாதம். ஆனால் அமெரிக்காவின் ஹவுஸ் மற்றும் செனட் ஆகிய இரண்டு பிரதிநிதித்துவ சபைகளும் அப்படிப்பட்ட தடையை முன்வைத்தன.
இது அமெரிக்க பொருளாதாரத்திற்குள் இருக்கின்ற இரண்டு வகையான பெரு முதலாளிகளுக்குள் நிலவும் முரண்பாடு. அதாவது ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சாவு வியாபாரிகள், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை செல்வாக்குச் செலுத்துவதில் எப்போதுமே முதன்மைப் பங்கை வகித்து வருகிறார்கள். அவர்கள் தான் ஈரானுடன் இருக்கின்ற உறவை உடைத்து, அதையே ஒரு போருக்கு தள்ளிவிட முயல்பவர்கள். அதன் மூலம் அவர்களால் தங்களது ஆயுத விற்பனையை அமெரிக்க அரசாங்கத்திற்கும், மற்ற நட்பு நாடுகளின் ராணுவங்களுக்கும், அதேசமயம் வேறு வழியில் எதிர்தரப்பு நாடுகளுக்கும் செய்து விட முடியும். அது அவர்களுக்கு பெரும் லாபத்தை கொண்டு வந்து குவிக்கும். அதே நேரத்தில் விவசாயப் பொருட்களையும், நுகர்வுப் பொருட்களையும் தயார் செய்கின்ற பெரு முதலாளிகள் தங்களது வர்த்தக உறவுகள் பாதிக்கப்படுமே என அஞ்சுவதிலும் நியாயமிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் போது, அதை அதே நிலையில் தக்கவைக்கின்ற திறமை ஆயுத வியாபாரிகளிடம் இருந்தது. ஆனால் இன்று பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்கா இருக்கும் போது, ஆயுத உற்பத்தி அல்லாத பிற உற்பத்திகளில் ஈடுபடுகின்ற பெரு முதலாளிகள் செல்வாக்கு அதிகமாகி வருகிறது. ஆனாலும் கூட வரலாற்றுக் காரணங்களால் செனட்டிலும், ஹவுசிலும் இரு சபைகளிலுமே ஆயுத வியாபாரிகளின் நலன்களை ஊக்குவிக்கும் பிரதிநிதிகள் அதிகமாக இருப்பது புலனாகிறது.
இத்தகைய சூழலில் மக்கள் சீன குடியரசு, ஈரான் நாட்டின் மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடையை எதிர்க்கிறது. ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டத்தின் மீது, அனைத்து நாட்டு புறக்கணிப்பை கூடுதலாக அறிவிப்பதை சீன நாட்டின் துணை வெளிவிவகாரத்துறை அமைச்சர் எதிர்த்துள்ளார். டெஹ்ரானில் நடந்த அனைத்து நாட்டு அணுஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சீனா அந்த மாநாட்டை ஆக்கபூர்வமானது என்று வரவேற்றுள்ளது. இப்படியொரு மாநாட்டை நடத்தியதற்காக ஈரானை சீனா பாராட்டியுள்ளது.
ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக நான்காவது முறையாக பொருளாதார தடையை திணிப்பதற்கு, அமெரிக்கா பரப்புரை செய்யும் நேரம், அந்த கவுன்சிலில் தீர்மானங்களை நிராகரிக்கும் வீட்டோ உரிமையைப் பெற்ற ஒரு உறுப்பினரான சீனா அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக தயாராகயில்லை. ஈரான் நாடு ஆக்கப்பூர்வமான தேவைகளுக்காக அணுசக்தியை உற்பத்திச் செய்யும் திட்டத்தை பொய்யாக அறிவித்து விட்டு, ராணுவ தேவைகளுக்கான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒரு புறம் ஈரான் மறுத்து வருகிறது. அணுசக்தி தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றத்தை ஈரான் நாடு அடைய கூடாது என மேற்கத்திய நாடுகள் தடுத்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. அதேசமயம் தங்களது மத நம்பிக்கையின் படி, பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கோ, வைத்துக் கொள்வதற்கோ இடமில்லை என்று ஈரான் திரும்ப, திரும்ப சொல்லி வருகிறது. அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உலக அளவில் அழிக்க வேண்டும் என்றும் ஈரான் அறைகூவல் விடுகிறது.
இதையே கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் கூறினார். அப்போது அணு ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் நாடுகள் எப்படி அணு ஆயுதங்களுக்கு எதிராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அணு ஆயுதங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். சில வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிரான புறக்கணிப்பை கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா துடி துடிக்கிறார். ஆனால் அதற்கு சீனா உடன்படவில்லை. சீனாவைத் தவிர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களும் அமெரிக்காவின் முயற்சிக்கு உடன்பட்டு விட்டனர். ஈரான் நாட்டின் சார்பாக அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தலைவர் சையத் ஜலிலி சீன நாடு சென்றிருக்கும் நேரத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா சீனத் தலைவர் ஹுவுடன் தொலைபேசியில் இதுபற்றி பேசினார்.
ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் நிர்ப்பந்தம் செய்வது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வியை ஜலிலி எழுப்பினார். அமெரிக்கா தயார் செய்துள்ள தீர்மான நகலில், ஈரானின் புரட்சிகர படையும் மற்றும், ஈரானின் கம்பெனிகளின் சொத்துக்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும், ஈரான் வணிகர்களுடன் காப்பீடும், கப்பல் உறவும் தடுக்கப்பட வேண்டும் என்றும், ஈரான் நிதி நிறுவனங்களின் கறுப்புப் பட்டியலில், ஈரான் மத்திய வங்கியும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதன் மீது விவாதிக்க தயாராகும் சீனாவை, ரஷ்யாவும், பிரேசிலும் ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் ஐ.நா.வில் நிறைவேறும் தீர்மானம் ஒரு பைசாவுக்கு கூட பயனில்லை என்று உறுதியாக ஈரான் நாட்டு அதிபர் அஹமதி நிஜாத் அறிவித்துள்ளது, உலக மக்களின் பகுத்தறிவு உணர்வுகளை, போர் எதிர்ப்பு சிந்தனைகளை உசுப்பி விட்டுள்ளது.
Thursday, May 13, 2010
Wednesday, May 12, 2010
பிரபலங்களிடையே சிக்கிய பிரபல அமிதாப் பச்சன்
திரைத்துறையின் பிரபலங்கள் எப்போதுமே உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், சாதாரண குடிமக்களை விட அதிகமாக கவனிக்கப்படுகிறார்கள். அதிகமாக விரும்பப்படுகிறார்கள். அதனால் அரசியலிலும், வணிகத்திலும் அதிகமாக திரையுலக பிரமுகர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான யாரையும், எதையும் வணிகக்குழுமங்களுக்கு சமமாக இன்றைக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த விரும்புகிறார்கள். பிரபலங்கள் மூலம் தங்கள் கட்சியும் அதன் செயல்பாடும் பிரபலமடையும் என்று அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். அதன் மூலம் பொதுமக்களை ஈர்த்து தாங்கள் வாக்குகள் பெறுவது எளிதானது என்பதாக அவர்கள் நம்புகிறார்கள். வணிகக்குழுமங்கள் தங்களது சரக்குகளை விற்பனைச் செய்ய, விளம்பரங்களில் பிரபலங்களை ஆடவிட்டு, ஓடவிட்டு, பேசவிட்டு அதன்மூலம் லாபம் அடைகிறார்கள். இன்று அரசியல் ஒரு வணிகமாகிப்போனதினாலோ என்னவோ, அரசியலிலும் பிரபலங்களை நோக்கி ஓடுகின்ற ஒரு போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது.
திரைத்துறையில் பிரபலமான கலைஞர்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் கூட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய வரலாறுகள் நம் கண் முன்னே உள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்திருக்கின்ற எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அதற்கான சாட்சியங்கள். அதேபோல கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகை தீபா வரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி கூட தயங்கியதில்லை. வைஜயந்திமாலா பாலி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததும், தமிழ் திரையில் இருந்து வடஇந்திய திரைத்துறைக்குச் சென்ற நடிகை ஹேமமாலினி அன்று முதல் இன்று வரை பா.ஜ.க. கட்சியில் பொறுப்புக்கு வருவதும் இதற்கான கூடுதல் சாட்சிகள்.
தமிழ்நாட்டு அரசியலில் சரத்குமார், விஜயகாந்த், பாக்கியராஜ், சந்திரசேகர், லஷ்மி முதல் அம்பிகா, சிம்ரன் வரை தொடர்ந்து ஈடுபட்டு வருவது புதிய செய்தி அல்ல. ஆந்திராவில் எடுத்துக்கொண்டால் என்.டி.ராமாராவ் தொடங்கி கிருஷ்ணா மற்றும் இன்று சிரஞ்சீவி வரை அரசியல் அரங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. வடக்கே சத்ருகன் சின்கா முதல் ராஜ் பப்பர் வரை அவ்வாறு இழுக்கப்பட்டவர்கள் தான். தெலுங்கானா தனிமாநில போராட்டம் என வந்தாலும், நடிகை விஜயசாந்தி வருகை தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயபாதுரி, ஜெயபிரதா என்று உத்திரபிரதேச அரசியலிலும் நடிகைகள் ஈர்க்கப்படாமலில்லை. இத்தகைய சூழலில் தான் அமிதாப் பச்சனுக்கு, பிரபலமே சிக்கலாக வந்து சேர்ந்திருக்கிறது.
அமிதாப் பச்சன் இந்தியாவின் பரந்த சந்தையைக் கொண்ட இந்திப் படவுலகின் இமாலயம் என்று கூறலாம். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நண்பராக மட்டும் தான், அவரது அன்றைய அரசியல் பங்கு இருந்தது. அவரது மனைவி ஜெயபாதுரி உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும், அமிதாப் அரசியலில் இறங்கவில்லை. திரைத்துறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலையை அமிதாப் எட்டியிருக்கும் போது, அரசாங்கங்கள் அவரது பிரபலத்தை பயன்படுத்த முயன்றன.
மதவாதியாக படம் பிடித்துக் காட்டப்படும் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, அவரது மாநில அரசாங்கத்தின் தூதராக பிரபல அமிதாப்பை நியமித்தார். அதன் பிறகு மும்பையிலிருக்கும் ஒரு பாலத்தின் திறப்பு விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். அப்போது மாநில அரசின் அமைச்சர்கள் அழைத்ததின் பேரில், அமிதாப்பும் விழாவில் கலந்து கொண்டார். இதுவே விழாவை நடத்திய மஹாராஷ்டிர அரசாங்கத்திற்கு தலைவலியாகப் போய்விட்டது.
அன்னை சோனியா கோபித்துக் கொண்டார் என்பதால், மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைமை, அமிதாப்பின் வருகை பற்றி குழப்பமான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதற்கு பதில் கொடுக்க பிரபல அமிதாப்பிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இணையதளத்தில் இருக்கும் தனது வலைத்தளத்தில் அழைப்பில் தனது பெயரைப் போட்டு, தன்னை மாநில அமைச்சர் அழைத்ததினால் தான் கலந்து கொண்டேன் என்று சுய விளக்கம் கூறியிருந்தார். பா.ஜ.க.வின் குஜராத் ஆட்சிக்கு தூதராக நியமிக்கப்பட்டதால் தான், அன்னை சோனியா கோபம் கொண்டார் என்பதாக ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால் ராஜிவ் காந்தி காலத்திய குடும்ப நண்பர், ராஜிவ் மறைவிற்குப் பின் பிரிந்து நிற்கும் சூழலில் அவர்களுக்குள் என்ன முரண்பாடு என்று ஆய்வு செய்ய ஊடகங்கள் முயலவில்லை.
அடுத்து கேரள மாநிலத்தை ஆளுகின்ற இடதுசாரி அரசாங்கம், பிரபல திரைப்படக் கலைஞர் அமிதாப் பச்சனை தங்கள் அரசாங்கத்தின் தூதராக தேர்வு செய்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் அமர்ந்திருக்கின்ற சீத்தாராம் யெச்சுரி, அந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் விளைவாக மாநில அரசாங்கம் சுயமாக தங்களுடைய அரசாங்க பிரபலத்திற்கும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் ஒரு பிரபலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசாங்கத்தின் தூதர் என்ற அளவுகோல் மட்டுமே உதவியது. அதேநேரம் கேரள சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக, பல்வேறு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒரு பிரபல இந்தி திரைப்பட பிரமுகரான அமிதாப் பச்சனை பயன்படுத்த அந்த மாநில அரசாங்கத்தால் முடியாமல் போனது.
அதேபோல டெல்லியிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. டெல்லி மாநில அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது. உலகம் முழுவதும் பூமி நாளை, உலக வனத்தள நிதியம் கடைபிடிக்கும் போது, டெல்லியில் மாநில அரசாங்கம் மூலம் அது ஏற்பாடு செய்யப்பட்டது. செய்யப்பட்ட ஏற்பாட்டில் அமிதாப் பச்சனின் மகனான பிரபல அபிஷேக் பச்சன் பேசிய ஒலி நாடா வெளியிடப்படுவதற்காக தயாரானது. அங்கங்கே அபிஷேக் பச்சனின் படங்களும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் பூமி நாளன்று அனைத்து விளம்பர பலகைகளும் நீக்கப்பட்டது. அபிஷேக் பச்சனின் பேச்சு கொண்ட ஒலி நாடாவும் நீக்கப்பட்டது. இவையெல்லாமே டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் செய்த ஏற்பாடு என்பதாக தெரிந்தது. கடைசி நேரத்தில் ஷீலா தீட்சித் அன்னை சோனியாவின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க அதை செய்து விட்டார் என்று கூறப்பட்டது. இதையும் கூட அமிதாப் தனது வலைத்தளத்தில் எழுதினார்.
காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் இப்படி ஒரு முடிவை எடுக்குமானால், அதே போன்ற முடிவை குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கட்சியும் எடுத்து விட்டது. குஜராத் அரசாங்கத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டதை காங்கிரசும், இடதுசாரிகளும் குற்றமாகப் பார்த்தால், கடைசியாக குஜராத்தின் நரேந்திர மோடி அரசாங்கமே, அமிதாப்பை தூதர் நிலையிலிருந்து துரத்தி விட்டது.
இந்திய அரசியல்வாதிகளின் பல்வேறு பிரிவுகளாலும் துரத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசின் அதிபரிடமிருந்து அமிதாப்பிற்கு அழைப்பு வந்தது. இது தொல்லையல்ல என்று எண்ணி அமிதாப்பும் அதை ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் பிரபலங்களை பயன்படுத்துவதில் கூர்மையாக உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அமிதாப்பை, அனைத்து நாட்டு திரைப்பட விழாவிற்கு முக்கியத் தூதராக அறிவித்தார். உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்.
ஆனால் இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்பது அமிதாப்பிற்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் திரைத்துறையினர் மற்றும் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள் இத்தகைய இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு முடிவுகள் திக்குமுக்காடுகின்றன. அமிதாப் பச்சனின் மும்பை இல்லம் தொடர்ந்து தமிழர்களால் முற்றுகையிடப்படுகிறது. இப்போது அத்தகைய அவல விளையாட்டிற்கு செல்லாமல் நிறுத்திக்கொள்வார் என்று அமிதாப் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. பிரபலங்களை விட பிரபலங்களை பயன்படுத்த விரும்பும் அரசியல் தலைவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பது நமக்கு விளங்குகிறது.
ஒரு லட்சம் தமிழர்களை புதைத்த சுடுகாட்டு மண்ணில், திரைப்பட விழாவா என்ற கேள்வி தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்வுகளிலிருந்து எழுகிறது. அதற்கு மதிப்பளித்தால் மட்டும் தான், பிரபலங்கள் உண்மையான பிரபலங்களாக இருக்க முடியும்.
திரைத்துறையில் பிரபலமான கலைஞர்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் கூட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய வரலாறுகள் நம் கண் முன்னே உள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்திருக்கின்ற எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அதற்கான சாட்சியங்கள். அதேபோல கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகை தீபா வரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி கூட தயங்கியதில்லை. வைஜயந்திமாலா பாலி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததும், தமிழ் திரையில் இருந்து வடஇந்திய திரைத்துறைக்குச் சென்ற நடிகை ஹேமமாலினி அன்று முதல் இன்று வரை பா.ஜ.க. கட்சியில் பொறுப்புக்கு வருவதும் இதற்கான கூடுதல் சாட்சிகள்.
தமிழ்நாட்டு அரசியலில் சரத்குமார், விஜயகாந்த், பாக்கியராஜ், சந்திரசேகர், லஷ்மி முதல் அம்பிகா, சிம்ரன் வரை தொடர்ந்து ஈடுபட்டு வருவது புதிய செய்தி அல்ல. ஆந்திராவில் எடுத்துக்கொண்டால் என்.டி.ராமாராவ் தொடங்கி கிருஷ்ணா மற்றும் இன்று சிரஞ்சீவி வரை அரசியல் அரங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. வடக்கே சத்ருகன் சின்கா முதல் ராஜ் பப்பர் வரை அவ்வாறு இழுக்கப்பட்டவர்கள் தான். தெலுங்கானா தனிமாநில போராட்டம் என வந்தாலும், நடிகை விஜயசாந்தி வருகை தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயபாதுரி, ஜெயபிரதா என்று உத்திரபிரதேச அரசியலிலும் நடிகைகள் ஈர்க்கப்படாமலில்லை. இத்தகைய சூழலில் தான் அமிதாப் பச்சனுக்கு, பிரபலமே சிக்கலாக வந்து சேர்ந்திருக்கிறது.
அமிதாப் பச்சன் இந்தியாவின் பரந்த சந்தையைக் கொண்ட இந்திப் படவுலகின் இமாலயம் என்று கூறலாம். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நண்பராக மட்டும் தான், அவரது அன்றைய அரசியல் பங்கு இருந்தது. அவரது மனைவி ஜெயபாதுரி உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும், அமிதாப் அரசியலில் இறங்கவில்லை. திரைத்துறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலையை அமிதாப் எட்டியிருக்கும் போது, அரசாங்கங்கள் அவரது பிரபலத்தை பயன்படுத்த முயன்றன.
மதவாதியாக படம் பிடித்துக் காட்டப்படும் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, அவரது மாநில அரசாங்கத்தின் தூதராக பிரபல அமிதாப்பை நியமித்தார். அதன் பிறகு மும்பையிலிருக்கும் ஒரு பாலத்தின் திறப்பு விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். அப்போது மாநில அரசின் அமைச்சர்கள் அழைத்ததின் பேரில், அமிதாப்பும் விழாவில் கலந்து கொண்டார். இதுவே விழாவை நடத்திய மஹாராஷ்டிர அரசாங்கத்திற்கு தலைவலியாகப் போய்விட்டது.
அன்னை சோனியா கோபித்துக் கொண்டார் என்பதால், மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைமை, அமிதாப்பின் வருகை பற்றி குழப்பமான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதற்கு பதில் கொடுக்க பிரபல அமிதாப்பிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இணையதளத்தில் இருக்கும் தனது வலைத்தளத்தில் அழைப்பில் தனது பெயரைப் போட்டு, தன்னை மாநில அமைச்சர் அழைத்ததினால் தான் கலந்து கொண்டேன் என்று சுய விளக்கம் கூறியிருந்தார். பா.ஜ.க.வின் குஜராத் ஆட்சிக்கு தூதராக நியமிக்கப்பட்டதால் தான், அன்னை சோனியா கோபம் கொண்டார் என்பதாக ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால் ராஜிவ் காந்தி காலத்திய குடும்ப நண்பர், ராஜிவ் மறைவிற்குப் பின் பிரிந்து நிற்கும் சூழலில் அவர்களுக்குள் என்ன முரண்பாடு என்று ஆய்வு செய்ய ஊடகங்கள் முயலவில்லை.
அடுத்து கேரள மாநிலத்தை ஆளுகின்ற இடதுசாரி அரசாங்கம், பிரபல திரைப்படக் கலைஞர் அமிதாப் பச்சனை தங்கள் அரசாங்கத்தின் தூதராக தேர்வு செய்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் அமர்ந்திருக்கின்ற சீத்தாராம் யெச்சுரி, அந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் விளைவாக மாநில அரசாங்கம் சுயமாக தங்களுடைய அரசாங்க பிரபலத்திற்கும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் ஒரு பிரபலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசாங்கத்தின் தூதர் என்ற அளவுகோல் மட்டுமே உதவியது. அதேநேரம் கேரள சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக, பல்வேறு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒரு பிரபல இந்தி திரைப்பட பிரமுகரான அமிதாப் பச்சனை பயன்படுத்த அந்த மாநில அரசாங்கத்தால் முடியாமல் போனது.
அதேபோல டெல்லியிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. டெல்லி மாநில அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது. உலகம் முழுவதும் பூமி நாளை, உலக வனத்தள நிதியம் கடைபிடிக்கும் போது, டெல்லியில் மாநில அரசாங்கம் மூலம் அது ஏற்பாடு செய்யப்பட்டது. செய்யப்பட்ட ஏற்பாட்டில் அமிதாப் பச்சனின் மகனான பிரபல அபிஷேக் பச்சன் பேசிய ஒலி நாடா வெளியிடப்படுவதற்காக தயாரானது. அங்கங்கே அபிஷேக் பச்சனின் படங்களும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் பூமி நாளன்று அனைத்து விளம்பர பலகைகளும் நீக்கப்பட்டது. அபிஷேக் பச்சனின் பேச்சு கொண்ட ஒலி நாடாவும் நீக்கப்பட்டது. இவையெல்லாமே டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் செய்த ஏற்பாடு என்பதாக தெரிந்தது. கடைசி நேரத்தில் ஷீலா தீட்சித் அன்னை சோனியாவின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க அதை செய்து விட்டார் என்று கூறப்பட்டது. இதையும் கூட அமிதாப் தனது வலைத்தளத்தில் எழுதினார்.
காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் இப்படி ஒரு முடிவை எடுக்குமானால், அதே போன்ற முடிவை குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கட்சியும் எடுத்து விட்டது. குஜராத் அரசாங்கத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டதை காங்கிரசும், இடதுசாரிகளும் குற்றமாகப் பார்த்தால், கடைசியாக குஜராத்தின் நரேந்திர மோடி அரசாங்கமே, அமிதாப்பை தூதர் நிலையிலிருந்து துரத்தி விட்டது.
இந்திய அரசியல்வாதிகளின் பல்வேறு பிரிவுகளாலும் துரத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசின் அதிபரிடமிருந்து அமிதாப்பிற்கு அழைப்பு வந்தது. இது தொல்லையல்ல என்று எண்ணி அமிதாப்பும் அதை ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் பிரபலங்களை பயன்படுத்துவதில் கூர்மையாக உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அமிதாப்பை, அனைத்து நாட்டு திரைப்பட விழாவிற்கு முக்கியத் தூதராக அறிவித்தார். உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்.
ஆனால் இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்பது அமிதாப்பிற்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் திரைத்துறையினர் மற்றும் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள் இத்தகைய இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு முடிவுகள் திக்குமுக்காடுகின்றன. அமிதாப் பச்சனின் மும்பை இல்லம் தொடர்ந்து தமிழர்களால் முற்றுகையிடப்படுகிறது. இப்போது அத்தகைய அவல விளையாட்டிற்கு செல்லாமல் நிறுத்திக்கொள்வார் என்று அமிதாப் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. பிரபலங்களை விட பிரபலங்களை பயன்படுத்த விரும்பும் அரசியல் தலைவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பது நமக்கு விளங்குகிறது.
ஒரு லட்சம் தமிழர்களை புதைத்த சுடுகாட்டு மண்ணில், திரைப்பட விழாவா என்ற கேள்வி தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்வுகளிலிருந்து எழுகிறது. அதற்கு மதிப்பளித்தால் மட்டும் தான், பிரபலங்கள் உண்மையான பிரபலங்களாக இருக்க முடியும்.
Tuesday, May 11, 2010
ஜெய்ராம் ரமேஷ் கூறியதில் என்ன தவறு?
இரண்டு நாட்களாக ஊடகங்கள் இந்திய சுற்றுச் சூழல் மற்றும் வன இலாகாவின் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், தனது சீன பயணத்தின் போது பேசிய பேச்சுகளால் எழும்பியுள்ள பிரச்சனைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவிற்கு பயணம் செய்த இந்த மத்திய அமைச்சர் நிறைய செய்திகளைப் பேசியுள்ளார். அவற்றில் சீன நாட்டின் மூலதனங்களை, இந்தியாவில் கொண்டு வருவதற்கு தேவையற்ற எச்சரிக்கைகளையும், மிகைப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளையும் பேசி வருகின்ற உள்துறை அமைச்சகத்தை ஒரு கடி கடித்துள்ளார். இதை ஊடகங்கள் பிரபலமாக வெளியிட்ட பிற்பாடு அவற்றிற்கு பதில் சொல்லும் முகத்தோடு, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் குறுக்கிட்டுள்ளார். இன்னொரு நாட்டு மண்ணில் இருந்து கொண்டு இந்திய நாட்டின் இன்னொரு அமைச்சகமான உள்துறை அமைச்சகம் பற்றி மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். இதுவே எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகப் போய்விட்டது. பா.ஜ.க. உடனடியாக ஜெய்ராம் ரமேஷ் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டது.
உள்ளபடியே இந்தியசீன நட்புறவை மேலும் பேணுவதற்கும், வலுப்படுத்துவதற்கும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீன நாட்டிற்குச் சென்றார். அப்போது ஆக்கப்பூர்வமான உறவுகளை சீனாவிடம் வைத்துக்கொள்ள இந்திய அரசு விரும்புவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த கோபன் ஹெகனின் பருவநிலை மாற்ற மாநாட்டில், ஒரு முடிவான தீர்மானம் எழாதபோது, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் சொல்கின்ற நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று சீனாவை வற்புறுத்திய போது, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக நிலையெடுத்து சீனாவிற்கு உதவியது என்றும் ஜெய்ராம் ரமேஷ் திருவாய் மலர்ந்துள்ளார். உள்ளபடியே அந்த உலக மாநாட்டில் இந்த வேலையை செய்தவரும் ஜெய்ராம் ரமேஷ் தான்.
இந்தியாவின் தலைமை அமைச்சர் வழமையாக இந்த பருவநிலை மாற்றம் பற்றிய அனைத்து சந்திப்புகளிலும், இந்திய நாட்டின் நிலைப்பாட்டை கறாராக பின்பற்றி, கியோடா பிரகடனம் என்ற ஜி8 நாடுகள் உருவாக்கிய ஒப்பந்தத்தை அமுலாக்குவதற்காக குரல் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அந்த நேரத்தில் கடைசியாக அமெரிக்க அரசு எடுக்கின்ற நிலைப்பாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்து விடுகின்ற நிலைப்பாடுகளையே எடுத்திருக்கிறார். ஒரு முறை ஜி8 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பார்வையாளராக சென்ற இந்திய தலைமை அமைச்சர், கியோடா பிரகடனத்தை அமுலாக்க முதல் குரல் கொடுத்தார். ஆனால் விவாதத்தில் இறுதி வரை அதே குரலில் நிற்காமல் நழுவி விட்டார். கியோடா பிரகடனம் என்பது உலகில் குளோரோ புளோரோ கார்பன் என்ற வாயுவை உருவாக்கிக் கொடுக்கின்ற பன்னாட்டு மூலதன கம்பெனிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நிபந்தனையைக் கொண்டது. கரியமில வாயுவை அதிகமான அளவு காற்றிலே கலக்கவிட்டு, அதன் மூலம் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுவதற்கான ஏற்பாட்டை செய்வது தான் இந்த குளோரோ புளோரோ கார்பன்.
இத்தகைய உற்பத்தியை அதிகமாக செய்கின்ற வேதியல் பொருட்களை பயன்பாட்டிற்கு இறக்கி விடுகின்ற நிறுவனங்கள் அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள். அவற்றில் உற்பத்தியை குறைக்கச் சொல்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் தயாராகயில்லை. அதனால் அமெரிக்க சார்பு சிந்தனைகளை தன்னுடைய இறுதி முடிவாக வழக்கமாக எடுத்து வரும் இந்திய தலைமை அமைச்சரும் அத்தகைய நிபந்தனைகளை அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் மீது போடுவதை வலியுறுத்த தயாராகயில்லை. இதுதான் ஒவ்வொரு வேறுபாடுகளிலும், முரண்பாடுகளிலும் இந்திய மத்திய அமைச்சரவைக்குள் வெடித்து வெளியே வருகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்தியாவில் மூலதனமிட எந்தவொரு தடங்கலோ, எச்சரிக்கையோ இல்லாத நிலையில், சீன நாட்டிற்கு மாத்திரம் அத்தகைய நிலைகள் கடைப்பிடிக்கப்படுகிறதே என்ற ஒப்பீடுதான் ஜெய்ராம் ரமேஷை இவ்வாறு பேசவைத்துள்ளது. உதாரணமாக அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான யூனியன் கார்பைடு, எவரெடி செல்களை அதாவது பேட்டரிகளை உருவாக்குகிறது. அதேசமயம் மத்தியபிரதேச மாநிலத்தில் போபால் நகரில் 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில் இந்த யூனியன் கார்பைடு கம்பெனி நடத்தி வந்த, பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து, நச்சுவாயு கசிந்தது. அதனால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் மரணமடைந்ததும், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை போபால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வாரண் ஆண்டர்சன் என்ற யூனியன் கார்பைடு முதலாளியை, கைது செய்ய இந்திய உள்துறை அமைச்சகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமெரிக்க குடிமகனாக இருக்கின்ற வாரண் ஆண்டர்சன், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. அதேபோல யூனியன் கார்பைடு கம்பெனியிடமிருந்து, அந்த போபால் நச்சு ஆலையை விலைக்கு வாங்கியுள்ள இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்ஸ், இதுவரை நச்சுவாயு பாதிப்பிற்கு எந்த பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது. ஆனால் அந்த டௌ கம்பெனிக்கு இந்திய அரசு, சிவப்புக்கம்பளம் விரிக்கிறது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருக்கும் போது, அவரது இந்திய வருகை நேரத்தில், விருந்து கொடுத்த தலைமை அமைச்சர் மன்மோகன் அந்த விருந்தில், இந்த டௌ கெமிக்கல்சையும் அழைத்து விருந்தாளியாக ஆக்கினார். அமெரிக்க கம்பெனிகள் இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு, ஆபத்தை விளைவித்தாலும் அவர்களுக்கு இந்திய அரசு சிவப்புக்கம்பளம் விரிக்கிறது என்ற உண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. அதேசமயம் அண்டை நாடான சீனாவிலிருந்து வருகின்ற கம்பெனிகளுக்கு, உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே எச்சரிக்கை என்ற பெயரில் தடங்கல்கள் விதிக்கிறது. இந்த உண்மையைத் தான் ஜெய்ராம் ரமேஷ் போட்டு உடைத்துவிட்டார்.
இந்திய அரசு தனது உள்நாட்டு பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் தான், சீன நாட்டின் கம்பெனிகளுக்கு அப்படிப்பட்ட எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது என்றே நம்புவோம். அப்படியானால் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான், இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரியதொரு ஆபத்தாக இருக்கிறது. அதில் சிக்கியுள்ள அஜ்மல் கசாபிற்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, மகிழ்ச்சியடைந்த உள்துறை அமைச்சகம், அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அமெரிக்க குடிமக்களான ஹெட்லியையும், ராணாவையும் இந்தியாவிற்கு அழைத்து வந்து, விசாரிக்க எத்தகைய முன்முயற்சி எடுத்தது?
ஹெட்லியை அமெரிக்கா சென்று விசாரிப்பதற்கே இதுவரை இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்காத அமெரிக்காவை, நமது உள்துறை எச்சரிக்கை அணுகுமுறையில் வைக்கவில்லை. அதேபோல ராணா பற்றி எந்த கேள்வியையும் எழுப்புவதற்கு, இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை வாயைத் திறக்கவில்லை. ஆகவே இந்தியாவின் பாதுகாப்பிற்காகத் தான், ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சீன நாட்டின் முதலீடுகளை எச்சரிக்கையோடு தணிக்கைச் செய்கிறது என்ற வாதம் எடுபடப்போவதில்லை.
அமெரிக்காவிற்கு ஒரு அணுகுமுறை, அதேசமயம் சீனாவிற்கு வேறொரு அணுகுமுறை என்பது தான் இந்திய அரசிடம் இருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. அமெரிக்க மூலதனம் மற்றும் ஐரோப்பிய மூலதனத்திற்கு போட்டியாக சீனாவிலிருந்து மூலதனம் இறக்குமதி செய்யப்படல் கூடாது என்று இந்திய உள்துறை அமைச்சகம் எண்ணுகிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. அதனால் தான் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய கேள்வியில் என்ன தவறு இருக்கிறது என்று நாமும் கேட்கலாம்.
உள்ளபடியே இந்தியசீன நட்புறவை மேலும் பேணுவதற்கும், வலுப்படுத்துவதற்கும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீன நாட்டிற்குச் சென்றார். அப்போது ஆக்கப்பூர்வமான உறவுகளை சீனாவிடம் வைத்துக்கொள்ள இந்திய அரசு விரும்புவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த கோபன் ஹெகனின் பருவநிலை மாற்ற மாநாட்டில், ஒரு முடிவான தீர்மானம் எழாதபோது, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் சொல்கின்ற நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று சீனாவை வற்புறுத்திய போது, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக நிலையெடுத்து சீனாவிற்கு உதவியது என்றும் ஜெய்ராம் ரமேஷ் திருவாய் மலர்ந்துள்ளார். உள்ளபடியே அந்த உலக மாநாட்டில் இந்த வேலையை செய்தவரும் ஜெய்ராம் ரமேஷ் தான்.
இந்தியாவின் தலைமை அமைச்சர் வழமையாக இந்த பருவநிலை மாற்றம் பற்றிய அனைத்து சந்திப்புகளிலும், இந்திய நாட்டின் நிலைப்பாட்டை கறாராக பின்பற்றி, கியோடா பிரகடனம் என்ற ஜி8 நாடுகள் உருவாக்கிய ஒப்பந்தத்தை அமுலாக்குவதற்காக குரல் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அந்த நேரத்தில் கடைசியாக அமெரிக்க அரசு எடுக்கின்ற நிலைப்பாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்து விடுகின்ற நிலைப்பாடுகளையே எடுத்திருக்கிறார். ஒரு முறை ஜி8 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பார்வையாளராக சென்ற இந்திய தலைமை அமைச்சர், கியோடா பிரகடனத்தை அமுலாக்க முதல் குரல் கொடுத்தார். ஆனால் விவாதத்தில் இறுதி வரை அதே குரலில் நிற்காமல் நழுவி விட்டார். கியோடா பிரகடனம் என்பது உலகில் குளோரோ புளோரோ கார்பன் என்ற வாயுவை உருவாக்கிக் கொடுக்கின்ற பன்னாட்டு மூலதன கம்பெனிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நிபந்தனையைக் கொண்டது. கரியமில வாயுவை அதிகமான அளவு காற்றிலே கலக்கவிட்டு, அதன் மூலம் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுவதற்கான ஏற்பாட்டை செய்வது தான் இந்த குளோரோ புளோரோ கார்பன்.
இத்தகைய உற்பத்தியை அதிகமாக செய்கின்ற வேதியல் பொருட்களை பயன்பாட்டிற்கு இறக்கி விடுகின்ற நிறுவனங்கள் அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள். அவற்றில் உற்பத்தியை குறைக்கச் சொல்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் தயாராகயில்லை. அதனால் அமெரிக்க சார்பு சிந்தனைகளை தன்னுடைய இறுதி முடிவாக வழக்கமாக எடுத்து வரும் இந்திய தலைமை அமைச்சரும் அத்தகைய நிபந்தனைகளை அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் மீது போடுவதை வலியுறுத்த தயாராகயில்லை. இதுதான் ஒவ்வொரு வேறுபாடுகளிலும், முரண்பாடுகளிலும் இந்திய மத்திய அமைச்சரவைக்குள் வெடித்து வெளியே வருகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்தியாவில் மூலதனமிட எந்தவொரு தடங்கலோ, எச்சரிக்கையோ இல்லாத நிலையில், சீன நாட்டிற்கு மாத்திரம் அத்தகைய நிலைகள் கடைப்பிடிக்கப்படுகிறதே என்ற ஒப்பீடுதான் ஜெய்ராம் ரமேஷை இவ்வாறு பேசவைத்துள்ளது. உதாரணமாக அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான யூனியன் கார்பைடு, எவரெடி செல்களை அதாவது பேட்டரிகளை உருவாக்குகிறது. அதேசமயம் மத்தியபிரதேச மாநிலத்தில் போபால் நகரில் 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில் இந்த யூனியன் கார்பைடு கம்பெனி நடத்தி வந்த, பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து, நச்சுவாயு கசிந்தது. அதனால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் மரணமடைந்ததும், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை போபால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வாரண் ஆண்டர்சன் என்ற யூனியன் கார்பைடு முதலாளியை, கைது செய்ய இந்திய உள்துறை அமைச்சகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமெரிக்க குடிமகனாக இருக்கின்ற வாரண் ஆண்டர்சன், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. அதேபோல யூனியன் கார்பைடு கம்பெனியிடமிருந்து, அந்த போபால் நச்சு ஆலையை விலைக்கு வாங்கியுள்ள இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்ஸ், இதுவரை நச்சுவாயு பாதிப்பிற்கு எந்த பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது. ஆனால் அந்த டௌ கம்பெனிக்கு இந்திய அரசு, சிவப்புக்கம்பளம் விரிக்கிறது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருக்கும் போது, அவரது இந்திய வருகை நேரத்தில், விருந்து கொடுத்த தலைமை அமைச்சர் மன்மோகன் அந்த விருந்தில், இந்த டௌ கெமிக்கல்சையும் அழைத்து விருந்தாளியாக ஆக்கினார். அமெரிக்க கம்பெனிகள் இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு, ஆபத்தை விளைவித்தாலும் அவர்களுக்கு இந்திய அரசு சிவப்புக்கம்பளம் விரிக்கிறது என்ற உண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. அதேசமயம் அண்டை நாடான சீனாவிலிருந்து வருகின்ற கம்பெனிகளுக்கு, உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே எச்சரிக்கை என்ற பெயரில் தடங்கல்கள் விதிக்கிறது. இந்த உண்மையைத் தான் ஜெய்ராம் ரமேஷ் போட்டு உடைத்துவிட்டார்.
இந்திய அரசு தனது உள்நாட்டு பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் தான், சீன நாட்டின் கம்பெனிகளுக்கு அப்படிப்பட்ட எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது என்றே நம்புவோம். அப்படியானால் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான், இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரியதொரு ஆபத்தாக இருக்கிறது. அதில் சிக்கியுள்ள அஜ்மல் கசாபிற்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, மகிழ்ச்சியடைந்த உள்துறை அமைச்சகம், அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அமெரிக்க குடிமக்களான ஹெட்லியையும், ராணாவையும் இந்தியாவிற்கு அழைத்து வந்து, விசாரிக்க எத்தகைய முன்முயற்சி எடுத்தது?
ஹெட்லியை அமெரிக்கா சென்று விசாரிப்பதற்கே இதுவரை இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்காத அமெரிக்காவை, நமது உள்துறை எச்சரிக்கை அணுகுமுறையில் வைக்கவில்லை. அதேபோல ராணா பற்றி எந்த கேள்வியையும் எழுப்புவதற்கு, இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை வாயைத் திறக்கவில்லை. ஆகவே இந்தியாவின் பாதுகாப்பிற்காகத் தான், ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சீன நாட்டின் முதலீடுகளை எச்சரிக்கையோடு தணிக்கைச் செய்கிறது என்ற வாதம் எடுபடப்போவதில்லை.
அமெரிக்காவிற்கு ஒரு அணுகுமுறை, அதேசமயம் சீனாவிற்கு வேறொரு அணுகுமுறை என்பது தான் இந்திய அரசிடம் இருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. அமெரிக்க மூலதனம் மற்றும் ஐரோப்பிய மூலதனத்திற்கு போட்டியாக சீனாவிலிருந்து மூலதனம் இறக்குமதி செய்யப்படல் கூடாது என்று இந்திய உள்துறை அமைச்சகம் எண்ணுகிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. அதனால் தான் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய கேள்வியில் என்ன தவறு இருக்கிறது என்று நாமும் கேட்கலாம்.
Sunday, May 9, 2010
கசாப் மரணதண்டனை, ஒரு தப்பித்தலா?
இன்று நாட்டில் ஆங்கில காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படும் பெரிய விவாதமே, கசாபிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றியதுதான். முதலில் மரணதண்டனை என்பதே சரியா அல்லது தப்பா என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது. மரணதண்டனை என்பது தண்டனையே அல்ல என்று உலகம் தழுவிய அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதித்து வருகிறார்கள். ஆம்நெஸ்டி இன்டர்நேஷனல் எனப் படும் உலகப்பொது மன்னிப்பு சபை இந்த மரணதண்டனையை எதிர்த்து கடுமையாக பரப்புரை செய்து வருகிறது. உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.நா. சபையில் மரணதண்டனைக்கு எதிராக தீர்மானமே கொண்டுவரப்பட்டது. 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள் ஐ.நா.சபையின் பொதுச்சபை குழு கூடி மரணதண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. சபையின் மூன்றாவது குழு மனிதஉரிமைகளை கையாளுவதனால், அதில் வாக்குக்கு விடப்பட்ட போது, மரணதண்டனையை எதிர்த்து 99 வாக்குகளும் ஆதரவாக 52 வாக்குகளும் விழுந்தன. அடுத்த மாதம் டிசம்பர் 18ம் நாள் ஐ.நா. வின் 62வது பொது சபையின் 76வது மற்றும் 77வது கூட்டத்தில் மரணதண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை 104 நாடுகள் வரவேற்க, 54 நாடுகள் எதிர்க்க, 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தன. சமூக, மனிதாபிமான, பண்பாட்டு பணிகளை செய்யும் அந்த மூன்றாவது கமிட்டி, ஐ.நா.பொதுசபையின் வரலாற்று மைல்கல்லாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் கலந்து கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ளாத நாடுகளும்கூட, மரணதண்டனையை கைவிடவேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டது. அந்த வேண்டுகோளைக்கூட இந்திய அரசோ, இந்திய நாடாளுமன்றமோ, இந்திய நீதித்துறையோ சட்டை செய்யவில்லை. அதனால்தான் மும்பை நீதிமன்றம் இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. தீர்ப்புக்கு முன்பே நாடு தழுவிய அளவில் கசாபிற்கு மரணதண்டனை கொடுக்கப்படுமா இல்லையா என்ற விவாதமே ஊடகங் களால் நடத் தப்பட்டது. இந்த நாட்டில் இப் போதெல்லாம் ஊடகங்கள் தீர்ப்பு எழுததொடங்கிவிட்டன. சென்சேசனல் கேசெஸ் என்று சொல்லப்படுகின்ற இதுபோன்ற உணர்ச்சிவசப்படுத்தும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே மக்களால் அல்லது ஊட கத்தாரால் அல்லது அரசியல்வாதிகளால், அல்லது மதவாதிகளால், அல்லது தேசிய குருங்குழுவாதிகளால், பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு, உச்சகட்ட தீர்ப்பை எப்படியும் கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தை, நீதியரசர்களின் மூளைக்குள் ஏற்றிவிடுகிறது. அதனா லேயே மக்கள் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பு வெளிவந்துவிடுகிறது. அப்படி வந்தது தான் கசாப் தீர்ப்பும்.
அதேசமயம் உலக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஒரு வழக்கில் கொடுக்கப்படும் தண்டனை என்பது, குற்றம் சாட்டப்பட்ட மனிதனைத் திருத்துவதற்காக கொடுக்கப்படுகிறது. மாறாக பழிவாங்க அல்ல. இது இந்த தீர்ப்பில் அணுகப்படவில்லை.
அதாவது மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த நீதியரசர் இந்த குற்றவாளியான
கசாப் திருந்தவே முடியாத ஆள் என்று கூறி விட்டார். இப்படி சோசியம் சொல்வதற்கு நீதிபதிகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. நீதியரசர் களிடம் நாடு எதிர்பார்ப்பதும் அதுவல்ல. திருத்துவதற்காக தண்டனை கொடு என்றால் கதை சொல்லிக்கொண்டிருக்க நீதியரசருக்கு வேலை இல்லை.
இப்படி சோசியம் தெரிந்தவர்களை மரத்தடியில் அமர்த்தலாம். அவர்கள் நீதித்துறைக்கு எப்படி வந்தார்கள் என்பது ஆச்சர் யமான செய்திதான்.ஆனாலும் எப் படியோ ஒரு மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பை அவர்கள் கொடுத்துவிட்டனர். அதாவது கசாபிற்கு மரணதண்டனை என அறிவித்துவிட்டனர்.
இப்போது அது விவாதிக் கப் படுகிறது. மரணதண்டனை என்பது ஒரு வழக் கில் நிரூபிக்கப்பட்ட குற்ற வாளியை திருத்துவதற்கு பதில் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக் கிறது என்பதே மனித உரிமை ஆர்வலர் களின் குற்றச்சாட்டு. கண்ணுக்கு கண் என்றோ பழிக்குப்பழி என்றோ கூறும் அடிப்பயைக்கொண்டது அல்ல இந்திய தண்டனைச்சட்டம். அது குற்றம் செய்த வர்களைத்திருத்துவதற்கானது அப்படி திருத்துவதற்கு மரணதண்டனையில் இடம் இல்லை. ஆகவே இது அடிப் படியில் மனித உரிமை அல்ல. அடுத்து மரணதண்டனை கொடுப்பதால் குற்றங்கள் நின்று விடுமா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறார் வீ.ஆர். கிருஷ்ணய்யர். அவர் கூறும்போது மூன்று காரணங்களுக்காக ஒருவர் மரண தண்டனை தரும் அளவுக்கு குற்றம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்படி செய்பவர் திட்டமிட்டு குற்றம் செய்து அதில் தப்பித்து விடலாம் என்று எண்ணு வாரானால், அப்படி திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள் இந்த மரண தண்டனை நீடிப்பதனால் திருந்தப்போவதில்லை.
ஏனென்றால் அவர்கள் திட்டமிட்டு தவறு செய்து தப்பித்து விடலாமென எப்போதும் நினைப்பார்கள். அடுத்து திடீரென கொலை போன்ற பெரிய குற்றங்களை செய்பவர்கள்.
அவர் களும் மரணதண்டனை இருக்கிறதே என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு செய்யும் குற்றங்களைத்தவிர்க்க முடியாது அடுத்து கொள்கைக்காக பயங்கரக்குற்றங்களை செய்பவர்கள். அவர்களும் எந்த மரணதண்டனை பற்றியும் பயப்படப்போவதற்கில்லை. ஆகவே மரணதண்டனையால் எந்த குற்றத்தையும் தடுக்க முடியாது. அப்படியானால் மரணதண்டனை எதற் காக என்று கிருஷ்ணய்யர் கேள்வி எழுப் புகிறார்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மரணதண்டனை கொலை செய்யப் பட்ட தனது கணவனையும், தனது பிள்ளையையும் இழந்த ஒரு தாயாரால் எதிர்க்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் ஒபராய் ஹோட்டலில் வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஆலன்ஸ்கெர் என்ற தனது கணவனையும், நவோமி என்ற தனது 13வயது மகளையும் பலிகொடுத்த, கியாஸ்கெர் என்ற விதவை அமெரிக்க பெண்மணி, என்றைக்குமே தான் மரணதண்டனையை ஆதரிக்கவில்லை என்றும், கசாபிற்கு ஆயுள்தண்டனை தான் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்று அன்னையர் தினம் என்பதால் நாம் அதை நினைவு கூறல் சரியாக இருக்கும். தனது பிள்ளையை இழந்ததால் இன்னொரு தாயாரும் தனது பிள்ளையை இழக்க வேண்டும் என இந்த தாயார் எண்ணவில்லை.
அது மட்டுமல்ல இப்போது கொடுக்கப்பட்டுள்ள மரண தண்டனை அடுத்து இந்தியச்சட்டப்படி மேல்முறையீடுக்கு செல்லும். அதன் பிறகு உச்சநீதிமன்றம் செல்லும். அதற்குப்பிறகு குடியரசுத்தலைவரின் கருணை மனுவிற்கு செல்லும். காலம் நீட்டப்படும். அதற்குள் இந்திய பாகிஸ் தான் உறவு நல்ல உறவாக மாறலாம். காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் வரலாம். அதற்கு அமெரிக்கா முழு முயற்சி எடுக்கலாம்.
அப்போது இந்த கசாப்புக்கு மன்னிப்பு வழங்கப்படலாம். அப்படி நடக்காவிட்டாலும், இதுவரை இந்தியாவின் சிறைகளில் மரணதண்டனைக்காக காத்துக்கொண்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 50ஐ தாண்டுகிறது. அவர்களுக்கு மரணதண்டனை கொடுக் கலாமா வேண்டாமா என்ற விவாதம் உள்துறையில் நடந்து வருகிறது.
அதில் கசாப் வழக்கு கடைசி வழக்கு என்பதால் அதிக காலம் ஆகலாம். அதற்குள் நிலைமைகள் மாறலாம். ஆகவே கசாபிற்கு ஆயுள் தண்டனை கொடுத்திருந்தால் அதுவே அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக இருந் திருக்கும். உணர்ச்சிவசப்பட்டு மரண தண்டனை அறிவித்தது கசாபிற்கு நல்லதுதான்.
அதுவே ஆயுள் தண்டனை ஆகி இருந்தால், கசாப் அதிகம் கஷ்டப் பட்டிருப்பான். ஆகவே இது
கசாபிற்கு லாபமான தண்டனையா என்றும் விவாதம் எழுகிறது. எப் போதுமே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது இதுதானோ?
அதேசமயம் உலக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஒரு வழக்கில் கொடுக்கப்படும் தண்டனை என்பது, குற்றம் சாட்டப்பட்ட மனிதனைத் திருத்துவதற்காக கொடுக்கப்படுகிறது. மாறாக பழிவாங்க அல்ல. இது இந்த தீர்ப்பில் அணுகப்படவில்லை.
அதாவது மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த நீதியரசர் இந்த குற்றவாளியான
கசாப் திருந்தவே முடியாத ஆள் என்று கூறி விட்டார். இப்படி சோசியம் சொல்வதற்கு நீதிபதிகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. நீதியரசர் களிடம் நாடு எதிர்பார்ப்பதும் அதுவல்ல. திருத்துவதற்காக தண்டனை கொடு என்றால் கதை சொல்லிக்கொண்டிருக்க நீதியரசருக்கு வேலை இல்லை.
இப்படி சோசியம் தெரிந்தவர்களை மரத்தடியில் அமர்த்தலாம். அவர்கள் நீதித்துறைக்கு எப்படி வந்தார்கள் என்பது ஆச்சர் யமான செய்திதான்.ஆனாலும் எப் படியோ ஒரு மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பை அவர்கள் கொடுத்துவிட்டனர். அதாவது கசாபிற்கு மரணதண்டனை என அறிவித்துவிட்டனர்.
இப்போது அது விவாதிக் கப் படுகிறது. மரணதண்டனை என்பது ஒரு வழக் கில் நிரூபிக்கப்பட்ட குற்ற வாளியை திருத்துவதற்கு பதில் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக் கிறது என்பதே மனித உரிமை ஆர்வலர் களின் குற்றச்சாட்டு. கண்ணுக்கு கண் என்றோ பழிக்குப்பழி என்றோ கூறும் அடிப்பயைக்கொண்டது அல்ல இந்திய தண்டனைச்சட்டம். அது குற்றம் செய்த வர்களைத்திருத்துவதற்கானது அப்படி திருத்துவதற்கு மரணதண்டனையில் இடம் இல்லை. ஆகவே இது அடிப் படியில் மனித உரிமை அல்ல. அடுத்து மரணதண்டனை கொடுப்பதால் குற்றங்கள் நின்று விடுமா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறார் வீ.ஆர். கிருஷ்ணய்யர். அவர் கூறும்போது மூன்று காரணங்களுக்காக ஒருவர் மரண தண்டனை தரும் அளவுக்கு குற்றம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்படி செய்பவர் திட்டமிட்டு குற்றம் செய்து அதில் தப்பித்து விடலாம் என்று எண்ணு வாரானால், அப்படி திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள் இந்த மரண தண்டனை நீடிப்பதனால் திருந்தப்போவதில்லை.
ஏனென்றால் அவர்கள் திட்டமிட்டு தவறு செய்து தப்பித்து விடலாமென எப்போதும் நினைப்பார்கள். அடுத்து திடீரென கொலை போன்ற பெரிய குற்றங்களை செய்பவர்கள்.
அவர் களும் மரணதண்டனை இருக்கிறதே என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு செய்யும் குற்றங்களைத்தவிர்க்க முடியாது அடுத்து கொள்கைக்காக பயங்கரக்குற்றங்களை செய்பவர்கள். அவர்களும் எந்த மரணதண்டனை பற்றியும் பயப்படப்போவதற்கில்லை. ஆகவே மரணதண்டனையால் எந்த குற்றத்தையும் தடுக்க முடியாது. அப்படியானால் மரணதண்டனை எதற் காக என்று கிருஷ்ணய்யர் கேள்வி எழுப் புகிறார்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மரணதண்டனை கொலை செய்யப் பட்ட தனது கணவனையும், தனது பிள்ளையையும் இழந்த ஒரு தாயாரால் எதிர்க்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் ஒபராய் ஹோட்டலில் வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஆலன்ஸ்கெர் என்ற தனது கணவனையும், நவோமி என்ற தனது 13வயது மகளையும் பலிகொடுத்த, கியாஸ்கெர் என்ற விதவை அமெரிக்க பெண்மணி, என்றைக்குமே தான் மரணதண்டனையை ஆதரிக்கவில்லை என்றும், கசாபிற்கு ஆயுள்தண்டனை தான் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்று அன்னையர் தினம் என்பதால் நாம் அதை நினைவு கூறல் சரியாக இருக்கும். தனது பிள்ளையை இழந்ததால் இன்னொரு தாயாரும் தனது பிள்ளையை இழக்க வேண்டும் என இந்த தாயார் எண்ணவில்லை.
அது மட்டுமல்ல இப்போது கொடுக்கப்பட்டுள்ள மரண தண்டனை அடுத்து இந்தியச்சட்டப்படி மேல்முறையீடுக்கு செல்லும். அதன் பிறகு உச்சநீதிமன்றம் செல்லும். அதற்குப்பிறகு குடியரசுத்தலைவரின் கருணை மனுவிற்கு செல்லும். காலம் நீட்டப்படும். அதற்குள் இந்திய பாகிஸ் தான் உறவு நல்ல உறவாக மாறலாம். காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் வரலாம். அதற்கு அமெரிக்கா முழு முயற்சி எடுக்கலாம்.
அப்போது இந்த கசாப்புக்கு மன்னிப்பு வழங்கப்படலாம். அப்படி நடக்காவிட்டாலும், இதுவரை இந்தியாவின் சிறைகளில் மரணதண்டனைக்காக காத்துக்கொண்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 50ஐ தாண்டுகிறது. அவர்களுக்கு மரணதண்டனை கொடுக் கலாமா வேண்டாமா என்ற விவாதம் உள்துறையில் நடந்து வருகிறது.
அதில் கசாப் வழக்கு கடைசி வழக்கு என்பதால் அதிக காலம் ஆகலாம். அதற்குள் நிலைமைகள் மாறலாம். ஆகவே கசாபிற்கு ஆயுள் தண்டனை கொடுத்திருந்தால் அதுவே அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக இருந் திருக்கும். உணர்ச்சிவசப்பட்டு மரண தண்டனை அறிவித்தது கசாபிற்கு நல்லதுதான்.
அதுவே ஆயுள் தண்டனை ஆகி இருந்தால், கசாப் அதிகம் கஷ்டப் பட்டிருப்பான். ஆகவே இது
கசாபிற்கு லாபமான தண்டனையா என்றும் விவாதம் எழுகிறது. எப் போதுமே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது இதுதானோ?
Saturday, May 8, 2010
சிதம்பரம் தரும் தேநீர் கோப்பையில் என்ன இருக்கும்?
சென்ற மாத இறுதியில், புது டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பலகலைக்கழகத்தில் நடந்த ஜனநாயக மாணவர் சங்கத்தின், ‘மக்கள் மீது நடத்தப்படும் போர்’ என்ற கருத்தரங்கு ஒன்றில், காங்கிரசு கட்சியின் மாணவர் சங்கத்தினர் உள்ளே நுழைந்து கலாட்டா செய்தனர். அதன்விளைவாக புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர்களிடம் நன்றாக உதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அடுத்த நாளே காங்கிரசு மாணவர்கள் தங்கள் சார்பாக ஒரு எதிர்ப்பு மன்றத்தை உருவாக்கிகொண்டனர்.இந்தியாவின் அரசியல் தலைமையில், அதாவது ஆட்சி அதிகாரத்தில் அமெரிக்கச் செல்வாக்கு கூடி வரும் இன்றைய நாட்களில் அறிவுஜீவிகளின் பங்கு என்பதும், அறிவுஜீவிகளின் கருத்து என்பதும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய போக்கை ஆள்வோரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பொதுவாக ஆட்சியாளர்கள் அறிவிக்கும் சலுகைகளும், திட்டங்களும் அறிவுஜீவிகள் கொடுக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதை அப்படியே உலக வங்கிக்கும், அனைத்து நாட்டு நிதியத்துக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் அனுப்பி மத்திய அரசு அதிகமான அளவில் நிதிகளைப்பெற்று வருகிறது. அதற்கு அடிப்படையாக இருப்பது அறிவுஜீவிகளின் புள்ளிவிவர ஆராய்ச்சிதான். அத்தகைய ஆராய்ச்சிகளை அதிகம் செய்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தான். அதுமட்டுமின்றி இந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள ஐ.நா. அதிகாரிகள் மத்தியிலும், அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் மத்தியிலும், உலக வங்கி போன்ற கடன் கொடுக்கும் உலக மார்வாடிகள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் செய்த ஆராய்சிகளின் அடிப்படையில் தான் பல முடிவுகளும் ஆள்வோரால் எடுக்கப்படுகின்றன. இது போன்ற அறிவுஜீவிகளின் கோரிக்கையில்தான் இந்தியாவில் தகவல் பெறும் உரிமைசட்டமே இயற்றப்பட்டது. இதுபோன்ற அறிவுஜீவிகளின் தொடர்ந்த பரப்புரையில்தான் பா.ஜ.க விற்கு எதிரான மதச்சார்பற்ற இந்தியாவிற்கான பரப்புரை நாடு முழுவதும் நடத்தப்பட்டு காங்கிரசுக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதில் நேரடியாக இதுபோன்ற அறிவுஜீவிகளிடம் தொடர்பு வைத்திருந்தவர் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி. அதில் சப்னம் ஹஸ்மி போன்றோர் அடக்கம். ஆகவே இத்தகைய அறிவுஜீவிகளின் பங்கை முழுமையாக மறுக்க முடியாத இக்கட்டில் காங்கிரஸ் தலைமை இருக்கிறது.
அதனால்தான் மாவோயிஸ்டுகளின் பிரச்சனையை தொடங்கிய காலத்திலிருந்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவுஜீவிகள் எப்படி மாவோயிஸ்டுகளை நியாயப்படுத்தலாம் என அலறுகிறார். அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகளும் சிதம்பரத்தால் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அறிவுஜீவிகளை உருவாக்கித் தரும் பட்டறையாக பயன்படுத்தப்படும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இவர்களது கண்களை உறுத்துகிறது. மாவோயிஸ்ட்கள் பிரச்சனையில், மத்திய துணை ராணுவப்படை கடுமையான இழப்புக்களை பெற்று திணறிக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குள்ளேயே சிதம்பரத்திற்கு எதிராக பல சிந்தனைகள் கிளம்பியுள்ளன. இதனால் சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சோசலிச கொள்கைகளை கொண்டிருப்பது போலவும், அவர்களது கொள்கைகளின் அமுலாக்கத்திற்கு ப.சிதம்பரம் நடத்தும் பச்சைவேட்டை என்ற மாவோயிஸ்ட்கள் ஒழிப்பு என்ற பெயரில், ஆதிவாசிகளுக்கெதிராக நடத்தப்படும் நரவேட்டை, தடையாக உள்ளதாக கட்சித்தலைமையில் கேள்விக்குறியாகியுள்ளது.
அதுபற்றி சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா கூறும்போது, அது காங்கிரசின் திட்டமிட்ட தந்திரம் என்று காங்கிரஸ் கட்சியைச் சாடினார். இத்தகைய சூழ்நிலையில் தான் இப்போது சிதம்பரத்தின் தேனீர் கோப்பை விருந்து வெளியே வந்துள்ளது.
காங்கிரசுக் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள தைரியமாக நமது உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்திற்குள் நேற்று சென்றிருக்கிறார். அப்போது பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்புப் படிக்கும் ஒரு மாணவி பல்வேறு கேள்விகளால் சிதம்பரத்தை துளைத்திருக்கிறார். விபா என்ற அந்த மாணவி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகள் மீது கேள்விகளை தொடுத்திருக்கிறார். அவருக்கு அருகேயிருந்த இன்னொரு மாணவியும், முதல் மாணவியை ஆதரித்து குரலெழுப்பியிருக்கிறார். இது அமைச்சர் சிதம்பரத்திற்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. முழக்கங்கள் இட்ட மாணவிகளை, காங்கிரஸ் மாணவர்கள் அடக்க முயன்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் அடங்கவில்லை. அப்போது அமைச்சர் அதை கவனித்துவிட்டு, யார் அந்த பெண்மணி என்பதாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக வெள்ளை உடையில் வந்து திருவாளர் பரிசுத்தமாக காட்சி தரும் சிதம்பரம், நேற்று நீலவண்ணச் சட்டையும், காக்கி கால்சட்டையும் அணிந்து வந்திருக்கிறார். குரலெழுப்பிய மாணவிகளை விரட்டத் தொடங்கிய பெண் காவலர்களை சிதம்பரம் அடக்கியிருக்கிறார். காக்கி கால்சட்டை அணிந்து வந்த சிதம்பரம், காக்கி வேட்டையை அடையாளம் காட்டுவதாக மாணவர்கள் மத்தியில் நையாண்டி செய்திருக்கின்றனர். ஆர்வமாக கேட்ட அமைச்சரிடம், விபா என்ற மாணவி கேள்விகளை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
முதல் கேள்வியே மணிப்பூரைப் பற்றியது. மணிப்பூரில் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம் ஏன் அமுல்படுத்தப்படுகிறது என்று ஒரு மனிதஉரிமை கேள்வியை அமைச்சர் மீது தூக்கியெறிந்திருக்கிறார். அதை எதிர்த்து காந்திய வழியில், 7 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் சர்மிளா என்ற பெண்மணியின் போராட்டத்தை ஏன் அடக்குகிறீர்கள் என்று அடுத்த கேள்வியை அமைச்சர் மீது தொடுத்திருக்கிறார். வழக்கம்போல் சிதம்பரம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதற்கே பிறந்த ஒரு மாமனிதர் போல், பதில் கூறியிருக்கிறார்.
உங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் தவறு என்றும், அவை நாளேடுகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்றும், அதற்காக உங்களை குறைசொல்லப்போவதில்லை என்றும், உங்கள் வயதில் நானும் அப்படித்தான் எடுத்துக்கொண்டிருப்பேன் என்றும் ஒரு நிதானவாதிப் போல பதில் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு உண்மையான பதிலையும் அவரே கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு முன்பிருந்த பல அரசுகளும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தி வந்தன என்றும், அப்போது எல்லோரும் அமைதி காத்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தகைய சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது திருத்தவேண்டும் என்றும் கூறிய முதல் அமைச்சர் தான் தான் என்று மார்தட்டியிருக்கிறார். அதற்கான அனைத்துக் கட்சி ஒப்புதல் வேண்டும் என்றும், அதன் மீது தான் செயல்பட்டு வருவதாகவும் கூறி சமாளித்திருக்கிறார். இதற்கு திருப்தியடையாத அந்த மாணவி, அடுத்த கேள்வி கேட்க முனைந்திருக்கிறார். உடனடியாக சிதம்பரம், எனது கடமை பதில் சொல்லுவது மட்டும்தான் என்றும், நீங்கள் கேட்க விரும்பும் பதிலை சொல்வது அல்ல என்றும் கூறி தனது இறுமாப்பை காட்டியிருக்கிறார்.
அந்த மாணவியை சுட்டிக்காட்டி வேண்டுமானால் உங்களைப் போன்றவர்கள் ஜனநாயக வழியில் அதிகாரத்திற்கு வந்து, அதன் மூலம் கொள்கைகளை மாற்றுங்கள் என்றும், அதற்காக ஆயுதம் தூக்காதீர்கள் என்றும் கூறியிருக்கிறார். அதாவது கேள்வி கேட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியை, ஆயுதப்போராட்ட ஆதரவாளர் என்பது போல உள்துறை அமைச்சர் முத்திரை குத்துகிறார். அத்தோடு நிறுத்தாமல் மத்திய அரசு நியமித்த அர்ஜுன்சென் குப்தா குழு, 77% இந்தியர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கு குறைவாக கூலி வாங்குவதாக கூறியிருப்பது உண்மையானால், 60 கோடி கைப்பேசிகள் இந்தியாவில் எப்படியிருக்கும் என்று நக்கல் அடித்திருக்கிறார். தன்னால் ஒரு சிறந்த பொருளாதாரவாதியை காட்ட முடியும் என்றும் உறுமியிருக்கிறார். வேதாந்தா என்ற கனிமவள கொள்ளை அடிக்கும் பன்னாட்டு மூலதன நிறுவனம் பற்றி, தனது அலுவலகம் வந்து தேநீர் குடித்து விவாதிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
சிதம்பரத்தின் தேநீர் கோப்பையில் இருக்கும் நச்சு தான், மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் அமைப்பான கனிமவளக் கொள்ளையன் வேதாந்தா நிறுவனம் என்பது இதன்மூலம் நமக்குத் தெளிவாகிறது.
அதனால்தான் மாவோயிஸ்டுகளின் பிரச்சனையை தொடங்கிய காலத்திலிருந்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவுஜீவிகள் எப்படி மாவோயிஸ்டுகளை நியாயப்படுத்தலாம் என அலறுகிறார். அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகளும் சிதம்பரத்தால் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அறிவுஜீவிகளை உருவாக்கித் தரும் பட்டறையாக பயன்படுத்தப்படும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இவர்களது கண்களை உறுத்துகிறது. மாவோயிஸ்ட்கள் பிரச்சனையில், மத்திய துணை ராணுவப்படை கடுமையான இழப்புக்களை பெற்று திணறிக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குள்ளேயே சிதம்பரத்திற்கு எதிராக பல சிந்தனைகள் கிளம்பியுள்ளன. இதனால் சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சோசலிச கொள்கைகளை கொண்டிருப்பது போலவும், அவர்களது கொள்கைகளின் அமுலாக்கத்திற்கு ப.சிதம்பரம் நடத்தும் பச்சைவேட்டை என்ற மாவோயிஸ்ட்கள் ஒழிப்பு என்ற பெயரில், ஆதிவாசிகளுக்கெதிராக நடத்தப்படும் நரவேட்டை, தடையாக உள்ளதாக கட்சித்தலைமையில் கேள்விக்குறியாகியுள்ளது.
அதுபற்றி சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா கூறும்போது, அது காங்கிரசின் திட்டமிட்ட தந்திரம் என்று காங்கிரஸ் கட்சியைச் சாடினார். இத்தகைய சூழ்நிலையில் தான் இப்போது சிதம்பரத்தின் தேனீர் கோப்பை விருந்து வெளியே வந்துள்ளது.
காங்கிரசுக் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள தைரியமாக நமது உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்திற்குள் நேற்று சென்றிருக்கிறார். அப்போது பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்புப் படிக்கும் ஒரு மாணவி பல்வேறு கேள்விகளால் சிதம்பரத்தை துளைத்திருக்கிறார். விபா என்ற அந்த மாணவி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகள் மீது கேள்விகளை தொடுத்திருக்கிறார். அவருக்கு அருகேயிருந்த இன்னொரு மாணவியும், முதல் மாணவியை ஆதரித்து குரலெழுப்பியிருக்கிறார். இது அமைச்சர் சிதம்பரத்திற்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. முழக்கங்கள் இட்ட மாணவிகளை, காங்கிரஸ் மாணவர்கள் அடக்க முயன்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் அடங்கவில்லை. அப்போது அமைச்சர் அதை கவனித்துவிட்டு, யார் அந்த பெண்மணி என்பதாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக வெள்ளை உடையில் வந்து திருவாளர் பரிசுத்தமாக காட்சி தரும் சிதம்பரம், நேற்று நீலவண்ணச் சட்டையும், காக்கி கால்சட்டையும் அணிந்து வந்திருக்கிறார். குரலெழுப்பிய மாணவிகளை விரட்டத் தொடங்கிய பெண் காவலர்களை சிதம்பரம் அடக்கியிருக்கிறார். காக்கி கால்சட்டை அணிந்து வந்த சிதம்பரம், காக்கி வேட்டையை அடையாளம் காட்டுவதாக மாணவர்கள் மத்தியில் நையாண்டி செய்திருக்கின்றனர். ஆர்வமாக கேட்ட அமைச்சரிடம், விபா என்ற மாணவி கேள்விகளை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
முதல் கேள்வியே மணிப்பூரைப் பற்றியது. மணிப்பூரில் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம் ஏன் அமுல்படுத்தப்படுகிறது என்று ஒரு மனிதஉரிமை கேள்வியை அமைச்சர் மீது தூக்கியெறிந்திருக்கிறார். அதை எதிர்த்து காந்திய வழியில், 7 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் சர்மிளா என்ற பெண்மணியின் போராட்டத்தை ஏன் அடக்குகிறீர்கள் என்று அடுத்த கேள்வியை அமைச்சர் மீது தொடுத்திருக்கிறார். வழக்கம்போல் சிதம்பரம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதற்கே பிறந்த ஒரு மாமனிதர் போல், பதில் கூறியிருக்கிறார்.
உங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் தவறு என்றும், அவை நாளேடுகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்றும், அதற்காக உங்களை குறைசொல்லப்போவதில்லை என்றும், உங்கள் வயதில் நானும் அப்படித்தான் எடுத்துக்கொண்டிருப்பேன் என்றும் ஒரு நிதானவாதிப் போல பதில் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு உண்மையான பதிலையும் அவரே கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு முன்பிருந்த பல அரசுகளும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தி வந்தன என்றும், அப்போது எல்லோரும் அமைதி காத்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தகைய சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது திருத்தவேண்டும் என்றும் கூறிய முதல் அமைச்சர் தான் தான் என்று மார்தட்டியிருக்கிறார். அதற்கான அனைத்துக் கட்சி ஒப்புதல் வேண்டும் என்றும், அதன் மீது தான் செயல்பட்டு வருவதாகவும் கூறி சமாளித்திருக்கிறார். இதற்கு திருப்தியடையாத அந்த மாணவி, அடுத்த கேள்வி கேட்க முனைந்திருக்கிறார். உடனடியாக சிதம்பரம், எனது கடமை பதில் சொல்லுவது மட்டும்தான் என்றும், நீங்கள் கேட்க விரும்பும் பதிலை சொல்வது அல்ல என்றும் கூறி தனது இறுமாப்பை காட்டியிருக்கிறார்.
அந்த மாணவியை சுட்டிக்காட்டி வேண்டுமானால் உங்களைப் போன்றவர்கள் ஜனநாயக வழியில் அதிகாரத்திற்கு வந்து, அதன் மூலம் கொள்கைகளை மாற்றுங்கள் என்றும், அதற்காக ஆயுதம் தூக்காதீர்கள் என்றும் கூறியிருக்கிறார். அதாவது கேள்வி கேட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியை, ஆயுதப்போராட்ட ஆதரவாளர் என்பது போல உள்துறை அமைச்சர் முத்திரை குத்துகிறார். அத்தோடு நிறுத்தாமல் மத்திய அரசு நியமித்த அர்ஜுன்சென் குப்தா குழு, 77% இந்தியர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கு குறைவாக கூலி வாங்குவதாக கூறியிருப்பது உண்மையானால், 60 கோடி கைப்பேசிகள் இந்தியாவில் எப்படியிருக்கும் என்று நக்கல் அடித்திருக்கிறார். தன்னால் ஒரு சிறந்த பொருளாதாரவாதியை காட்ட முடியும் என்றும் உறுமியிருக்கிறார். வேதாந்தா என்ற கனிமவள கொள்ளை அடிக்கும் பன்னாட்டு மூலதன நிறுவனம் பற்றி, தனது அலுவலகம் வந்து தேநீர் குடித்து விவாதிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
சிதம்பரத்தின் தேநீர் கோப்பையில் இருக்கும் நச்சு தான், மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் அமைப்பான கனிமவளக் கொள்ளையன் வேதாந்தா நிறுவனம் என்பது இதன்மூலம் நமக்குத் தெளிவாகிறது.
Friday, May 7, 2010
தொலைபேசி ஒட்டுக்கேட்டல் யாரை அம்பலப்படுத்தியது?
இரண்டு நாட்களாக மத்திய அமைச்சர் ஆ.ராஜாவையும், அவருடன் தொலை பேசியில் பேசியதாக நீராராடியாவையும், அவருடன் பேசியதாக கனிமொழியையும், ஊடகங்கள் வெளியிட்டன. பல மணிநேரம் செய்த உரையாடல்கள் என்பதாக அந்த அம்பலப்படுத்தல் இடம்பெற்றது. நடந்த அந்த நிகழ்ச்சி ஓராண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம். அப்போது மத்திய அமைச்சரவை தயார் செய்து கொண்டிருந்த நேரம். அதன் பொறுட்டு தமிழக முதல்வர் டெல்லி சென்றது ரகசிய செய்தி அல்ல. அப்போது காங்கிரஸ் கட்சி தலைமையுடன் தமிழக தி.மு.க. தலைவர் பல முறை பேரம் பேசியதும் அனைவரும் அறிந்த செய்திதான். அதே போல அதிக இடங்களைப்பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையுடன் அமைச்சரவை இடங்களுக்காக பேரம் பேசி வந்ததும் நாடறிந்த செய்தியே. மம்தாவிற்கு கொடுக்கும் அளவுகோல்தான், கருணாநிதிக்கும் கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் சார்பாக கூறுவதாகவும் செய்திகள் வெளியாகின. அதை ஒட்டி, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.விற்கு எத்தனை இடம் கிடைக்கும் என்று யூகங்கள் விவாதிக்கப்பட்டன. நாலு மத்திய அமைச்சரா அல்லது மூன்று மத்திய அமைச்சரா என்ற வாதமும் எல்லோராலும் பேசப்பட்டது. அது தவிர எத்தனை துணை அமைச்சர்கள் என்பதும் விவாதிக்கப்பட்டது. அதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள அழகிரிக்கு, மத்திய அமைச்சர் பொறுப்பா அல்லது துணை அமைச்சர் பொறுப்பா என்று கூட விவாதிக்கப்பட்டது. பிறகு அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்புதான் என்றும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் நடந்த தொலைபேசி உரையாடல்தான் இப்போது வெளியிடப் படுகிறது. ஏற்கனவே முந்திய ஆட்சியிலும், அதற்கு முந்திய பா.ஜ.க. ஆட்சியிலும் அமைச்சராக இருந்த ஆ.ராஜாவிற்கு, தான் இந்தமுறை பொறுப்புக்கு வருவேனா என்று கேட்பதில் ஆர்வமாக இருப்பது இயல்புதானே. அதைப்பற்றி தொலைபேசியில் பேசினார் என்பதில் என்ன புதிய பிரச்சனையை இருக்கிறது? அதே சமயம் கனிமொழியிடம் பேசிய ஒருவரிடம் அவரும் தனக்கு கேள்விப்பட்ட செய்திகளைச் சொல்வதும் சாதாரணமான விசயம்தானே? அதில் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று மத்திய அமைச்சர்களை நியமிப்பதில் கருணாநிதி தயங்குகிறார் என்பதும் தவறான செய்தி இல்லையே? ஆனால் இதில் வேறு ஒரு முக்கியப் பிரச்சினை வெளியாகி உள்ளது. அது என்ன என்றால் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மத்திய அமைச்சரவையில் வரப்போகிற நியமனங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பதும், அதை அமைச்சர்கள் கேட்டு தெரிந்து கொள்வதும், இந்தியாவின் மத்திய அமைச்சரவையை தீர்மானிப்பது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதாவது இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் இந்தியாவின் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கிறாரா அல்லது கார்ப்பரேட் என்ற வணிகக் குழுமங்கள் தீர்மானிக்கின்றனவா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
ஓராண்டு கழித்து ஒரு தொலைபேசி உரையாடலை, காட்சி ஊடகங்களுக்கு கொடுத்து அதை வெளியிட வைத்த சக்திகள் யார் என்பதோ, அதற்கான காரணம் என்ன என்பதோ வேறு சேதி. அதாவது மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள குறிப்பிட்ட காங்கிரஸ் மத்தியமைச்சரது பங்கு அதில் உள்ளது என்பது ஒரு செய்தி. அதை இப்படி வெளியிட வைத்ததற்கு இன்னொருவர் பங்கு என்று சொல்வதும் இன்னொரு செய்தி. ஆனால் அது யாரை அம்பலப்படுத்த என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டதோ அவர்களை அம்பலப்படுத்துவதற்கு பதில், அம்பை எய்தவர்கள் மீதே பாய்கிறது என்பதுதான் இப்போது உள்ள செய்தி. அதாவது மத்திய காங்கிரஸ் ஆட்சியைத் தீர்மானிப்பது பெரும் வணிகக் குழுமங்கள்தான் என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது விவாதத்தில் வரும் நீராராடியா டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிறார்கள். அப்படியானால் வணிகக் குழுமங்களுக்கு அமைச்சரவை அமைப்பதில் முக்கியப்பங்கு இருப்பது அம்பலமாகிறது. இது என்ன இந்திய வணிகக் குழுமங்கள் மட்டுமே சம்பந்தப்படும் விசயமா? வெளி நாட்டு முதலாளிகளுக்கு தொடர்பு கிடயாதா? இப்படி ஒரு கேள்வி எழுகிறது. அது தெரிந்த செய்திதானே என்று சிலர் சொல்லலாம். அதாவது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அந்நிய நேரடி மூலதனத்தின் சொந்தக்காரர்கள் தங்கள் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, இந்திய அமைச்சரவையை நியமிக்கும் போது தங்கள் நலனைப் பாதுகாக்கும் நபர்கள் அமைச்சரவையில் வரவேண்டும் என்று விரும்புவார்கள் என்பதும் புரிய முடிகிறது.
அப்படி இந்தியாவுக்குள் அமெரிக்க பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் அதிகமாக தங்கள் மூலதனத்தை இங்கே போடும் போது இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியப்பட வேண்டும்.
அப்படி நடந்ததால் தான், அமெரிக்கா தனது எதிர்ப்பைக் காட்டிவந்த போதும், இந்தியா ஈரானுடன் எரிவாயுக் குழாய்கள் அமைத்து எரிவாயு வாங்க முயற்சி எடுத்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்த முயன்ற மத்திய அமைச்சர் நட்வர்சிங்கை வெளியேற்றச் சொன்னது அமெரிக்காதான் என்பது ஏற்கனவே வெளிவந்த கதை. அதுமட்டுமின்றி நட்வர்சிங் மீது ஐ.நா.சபை செய்த ஆய்வில் ஊழல் நடந்த ஆதாரம் இருப்பதாக அமெரிக்காவே ஏற்பாடு செய்து செய்தி வெளியிட்டு, அதை வைத்தே அவரை வெளியேற்றிய அருஞ் செயலையும் இந்திய அமைச்சரவைக்குள் அமெரிக்காவால் செய்ய முடிந்தது என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. அதேபோல அடுத்து பெட்ரோலியம் அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதே ஈரான் நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கானத் திட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தபோது, அவரது அமைச்சர் பொறுப்பும் அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்டது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.
ஆகவே இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், இந்திய மத்திய அமைச்சரவையைத் தீர்மானிப்பது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்ல. அதைத் தீர்மானிப்பது அந்நிய மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளும், வணிகக் குழுமங்களும், பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் என்பது இப்போது தெள்ளந்தெளிவாக நிரூபணமாகி உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியின் பண்பு என்பதாகத்தானே பதிவாகும்?
ஓராண்டு கழித்து ஒரு தொலைபேசி உரையாடலை, காட்சி ஊடகங்களுக்கு கொடுத்து அதை வெளியிட வைத்த சக்திகள் யார் என்பதோ, அதற்கான காரணம் என்ன என்பதோ வேறு சேதி. அதாவது மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள குறிப்பிட்ட காங்கிரஸ் மத்தியமைச்சரது பங்கு அதில் உள்ளது என்பது ஒரு செய்தி. அதை இப்படி வெளியிட வைத்ததற்கு இன்னொருவர் பங்கு என்று சொல்வதும் இன்னொரு செய்தி. ஆனால் அது யாரை அம்பலப்படுத்த என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டதோ அவர்களை அம்பலப்படுத்துவதற்கு பதில், அம்பை எய்தவர்கள் மீதே பாய்கிறது என்பதுதான் இப்போது உள்ள செய்தி. அதாவது மத்திய காங்கிரஸ் ஆட்சியைத் தீர்மானிப்பது பெரும் வணிகக் குழுமங்கள்தான் என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது விவாதத்தில் வரும் நீராராடியா டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிறார்கள். அப்படியானால் வணிகக் குழுமங்களுக்கு அமைச்சரவை அமைப்பதில் முக்கியப்பங்கு இருப்பது அம்பலமாகிறது. இது என்ன இந்திய வணிகக் குழுமங்கள் மட்டுமே சம்பந்தப்படும் விசயமா? வெளி நாட்டு முதலாளிகளுக்கு தொடர்பு கிடயாதா? இப்படி ஒரு கேள்வி எழுகிறது. அது தெரிந்த செய்திதானே என்று சிலர் சொல்லலாம். அதாவது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அந்நிய நேரடி மூலதனத்தின் சொந்தக்காரர்கள் தங்கள் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, இந்திய அமைச்சரவையை நியமிக்கும் போது தங்கள் நலனைப் பாதுகாக்கும் நபர்கள் அமைச்சரவையில் வரவேண்டும் என்று விரும்புவார்கள் என்பதும் புரிய முடிகிறது.
அப்படி இந்தியாவுக்குள் அமெரிக்க பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் அதிகமாக தங்கள் மூலதனத்தை இங்கே போடும் போது இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியப்பட வேண்டும்.
அப்படி நடந்ததால் தான், அமெரிக்கா தனது எதிர்ப்பைக் காட்டிவந்த போதும், இந்தியா ஈரானுடன் எரிவாயுக் குழாய்கள் அமைத்து எரிவாயு வாங்க முயற்சி எடுத்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்த முயன்ற மத்திய அமைச்சர் நட்வர்சிங்கை வெளியேற்றச் சொன்னது அமெரிக்காதான் என்பது ஏற்கனவே வெளிவந்த கதை. அதுமட்டுமின்றி நட்வர்சிங் மீது ஐ.நா.சபை செய்த ஆய்வில் ஊழல் நடந்த ஆதாரம் இருப்பதாக அமெரிக்காவே ஏற்பாடு செய்து செய்தி வெளியிட்டு, அதை வைத்தே அவரை வெளியேற்றிய அருஞ் செயலையும் இந்திய அமைச்சரவைக்குள் அமெரிக்காவால் செய்ய முடிந்தது என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. அதேபோல அடுத்து பெட்ரோலியம் அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதே ஈரான் நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கானத் திட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தபோது, அவரது அமைச்சர் பொறுப்பும் அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்டது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.
ஆகவே இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், இந்திய மத்திய அமைச்சரவையைத் தீர்மானிப்பது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்ல. அதைத் தீர்மானிப்பது அந்நிய மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளும், வணிகக் குழுமங்களும், பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் என்பது இப்போது தெள்ளந்தெளிவாக நிரூபணமாகி உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியின் பண்பு என்பதாகத்தானே பதிவாகும்?
Thursday, May 6, 2010
மக்கள் கணக்கெடுப்பில், சாதி புள்ளி விவரம்
நேற்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி முக்கிய விவாதத்தை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அவர்களுடன் பா.ஜ.க. உட்பட ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்கள். தொடங்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. நேற்றைய நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் எழுந்துள்ளது. அப்போது ஒரு பா.ஜ.க. உறுப்பினர், வங்கதேசத்தின் அகதிகளை கணக்கெடுக்கக்கூடாது என பிரச்சினையை, வேறுபுறம் திருப்பி விட்டார். 1931ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகையை கணக்கெடுக்கும் போது, சாதிவாரியான புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுத்தது போல இப்போதும் கணக்கெடுப்பில் அதை இணைக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டனர்.
இந்த கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டத்தில் மட்டும்தான் நின்றதா? அப்படிக் கூறிவிடமுடியவில்லை. இன்று சாதிவாரி புள்ளி விவரங்களை கோரி வரும் பின் தங்கிய வகுப்பினர், ஆளும் கட்சியிலும், ஆளும் கூட்டணியிலும் இல்லையா? அப்படி இருப்பதனால்தான், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதே கோரிக்கை பலரால் எழுப்பப்படுகிறது. அதன் விளைவாக மத்திய அமைச்சரவையிலும் அது எதிரொலிக்கிறது. அப்படி எதிரொலிக் கும் போது, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை இதன் மீது விவாதிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அப்போது ஒத்த கருத்தில் மத்திய அமைச்சர வை இந்த விவகாரத்தில் இல்லை என்பது புரிந்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி புள்ளி விவரங்களை இணைக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் வெளி வந்துள்ளன. செவ்வாய்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதி கணக்கு எடுக்கக் கூடாது என அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் வலியுறுத் தியுள்ளனர். ஆனாலும் அரசாங்கத்திற் குள்ளேயும், ஐ.மு.கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளுடனும், அதிகமான விவாதம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதாக தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.
1881ம் ஆண்டு இந்திய கணக்கெடுப்புக் குழு தனது பணியை முதலில் தொடங்கியது. 1931ம் ஆண்டு வரை சாதி வாரி கணக்கெடுப்பையும் அது எடுத்தது. ஆனால் 80 ஆண்டுகளாக எஸ்.சி., எஸ்.டி. தவிர மற்ற பின்தங்கிய வகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரம் எடுக்கப்படவில்லை. இதுவே 80 ஆண்டுகளில் கூடியிருக்கும் தங்களது சாதி எண்ணிக்கையை கணக்கில் எடுக்காமல் இருக்கும் அவல நிலை என்று பாதிக்கப் பட்டோர் குரல் எழுப்புகின்றனர். 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படியே மண்டல் ஆணைய அறிக்கை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக் கீடு செய்துள்ளது. அத்தகைய மண்டல அறிக்கை இன்றைக்கும் அமுலில் இருப்பதால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக் கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளான இடஒதுக்கீடு, புதிய புள்ளி விவரங்களை கணக்கில் எடுக்காமல் எப்படி நியாயமாக கொடுக்கப்பட முடியும் என்பதே அவர்களது வாதம்.
சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துகின்ற ஒரு அரசாங்கம், அதை சரியாகவும், உண்மை யாகவும், புள்ளி விவரப்படியும் செய்ய மறுப்பது ஏன்? என்பதே அவர்களது கேள்வி.
இடஒதுக்கீடு என்பது ஒரு உலகம் தழுவிய விவாதமாக இருக்கிறது. அமெரிக்காவில் 1964ம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டத்தின் ஒப்புதலுக்கு பிறகு, 1970ன் ஆண்டுகளில் இன ரீதியான இடஒதுக்கீடு அமுலாகத் தொடங்கியது. அன்றைய அதிபர் ரிச்சர்டு நிக்சனின் தொழிலாளர் அமைச்சரான ஜார்ஜ் பி ஸ்குல்ஸ் என்பவர் கறுப்பர்களுக்கு எதிரான கட்டுமான சங்கங்களில், கறுப்பர்களையும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் இணைக்க வேண்டும் என்று கோரினார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வழக்கு ஒன்றில், இன ரீதியான பாரபட்சம் சட்ட விரோதமானது என்று கூறிய பிறகு, பல நிறுவனங்கள் தாங்களாகவே இடஒதுக்கீடு கொடுக்கத் தொடங்கினர். 1973ம் ஆண்டு நீதிமன்ற வழக்கில், கனக்டிக்கட் மாநில காவல் துறையில் புதிய ஊழியர்களை எடுக்கும் போது, பாதி பேராவது கறுப்பர்கள் இருக்க வேண்டும் என்பதாக தீர்ப்பானது. 1974ம் ஆண்டில் நீதித்துறை மற்றும் அமெரிக்க எஃகு தொழிலாளர் சங்கம் அதிகமான ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டது. 1978ம் ஆண்டு இதே போல உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று வெளியானது. 1989ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், தனியார் நிறுவனங்களும் தங்களது இடஒதுக்கீட்டை அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. 1990ல் அமெரிக்க உச்சநீதிமன்றம், மாநில ஒப்பந்தக் காரர்கள் 10% இனவழி ஒதுக்கீடு செய்ய அனுமதி கொடுத்தது. அதே சமயம் 1991ல் அதிபர் ஜார்ஜ் புஷ் இது போன்ற இடஒதுக்கீடுகளை அறவே நீக்க முயற்சி எடுத்தார். அதை 1991ன் சிவில் உரிமைகள் சட்டம் என்பதாக உருவாக்க முயன்றார். ஆனால் வெல்லவில்லை. ஜார்ஜ் புஷ் அணுகுமுறையை, இந்தியாவின் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் பின்பற்று கிறார்களா என்பது தெரியவில்லை.
அமெரிக்காவில் ஆக்கபூர்வமான ஒதுக்கீடு அணுகுமுறை என்று 1961ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியால் கையெழுத்திடப்பட்டது. அதே போல நிர்வாக ஆணை 1965ம் ஆண்டு செப்டம்பர் 24ல் அதிபர் லிண்டன் ஜான்சனால் கையெழுத்திடப்பட்டது. பெண் களுக்கு இடஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும் என்று 2967ம் ஆண்டு அக்டோபர் 13ம் நாள் அமெரிக்க நிர்வாக ஆணை அமுலாக்கப்பட்டது. அமெரிக்காவி லேயே இத்தகைய நிலை என்றால், சாதி ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவில் ஏன் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது அரசாங்கத்திலும், பொதுத்துறையிலும் மற்றும் தனியார் கல்வி சாலைகளிலும் இருக்கிறது. ஆனாலும் கூட மத, மொழி அடிப்படையிலான கல்வி நிறுவனங்களில் கட்டாயப் படுத்தப் படுவதில்லை. இட ஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27% என்பது அமுலில் உள்ளது.
மண்டல் ஆணைய அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள சாதிகளின் பின்தங்கிய நிலைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதையொட்டி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு என்பது அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையை அமுலாக்கினால், உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறியவர்களும் உண்டு. அத்தகைய சக்திகளின் மிச்ச சொச்சங்களால் இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரி புள்ளி விவரத்தை எடுக்கவிடாமல் தடுக்க வைக்க முடியலாம். ஆனால் அதுவே இந்தியாவின் எதிர்காலமாக இருக்காது.
மண்டல் 11 விதமான அடையாளங்களை கூறியுள்ளார். சமூக ரீதியில் பின்தங்கிய சாதிகள். தங்கள் வாழ்க்கைக்காக உடல் உழைப்பை சார்ந்து நிற்கும் சாதிகள். 17 வயதிற்குள் திருமணமான பெண்கள் எண்ணிக்கை 25% என்று கிராமங்களிலும், 10% என்று நகரங்களிலும் இருந்தால், இடஒதுக்கீடு. 17 வயதிற்கு முன்னால் திருமணமான ஆண்கள் 10% கிராமத்திலும், 5% நகரத்திலும் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% அதிகமாக பணியில் ஈடுபடும் பெண்கள் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% பள்ளிக்கு செல்லாத 5 முதல் 15 வயதுள்ள குழந்தை கள். அதே போல பொருளாதார மதிப்பீட்டை யும் மண்டல் கூறுகிறார். மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள குடும்பங்களின் சொத்துக்கள் மதிப்பீடு எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறார். 50% குடும்பங்கள் அரைகிலோ மீட்டருக்கு மேல் சென்று குடிதண்ணீர் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கும் ஒதுக்கீடு என்கிறார். மாநில சராசரிக்கு மேல் 25% நுகர்வு கடன் வாங்கும் குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார். இப்படியாக சமூக, கல்வி, பொருளாதார நிலைகளையும் ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மண்டல் முன்வைக்கிறார்.
இத்தகைய விரிவான ஆய்வை அமுலாக்கி வரும் இந்தியாவில், எந்த ஒரு முறையான அளவு கோலையும் எடுத்துக் கொள்ளாமல் மக்கள் தொகை கணக்கீடு செய்து என்ன பயன்? நிலச்சீர்த்திருத்தங்களையும் மண்டல் முன்வைக்கிறார். அதுபோல சாதிவாரி புள்ளி விவரம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே, இன்றைய இந்தியாவின் வறுமை சூழலை, மாற்றுவதற் கான திட்டத்தை முன்வைக்க ஆள்வோருக்கு உதவப் போகிறது. அத்தகைய அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டத்தில் மட்டும்தான் நின்றதா? அப்படிக் கூறிவிடமுடியவில்லை. இன்று சாதிவாரி புள்ளி விவரங்களை கோரி வரும் பின் தங்கிய வகுப்பினர், ஆளும் கட்சியிலும், ஆளும் கூட்டணியிலும் இல்லையா? அப்படி இருப்பதனால்தான், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதே கோரிக்கை பலரால் எழுப்பப்படுகிறது. அதன் விளைவாக மத்திய அமைச்சரவையிலும் அது எதிரொலிக்கிறது. அப்படி எதிரொலிக் கும் போது, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை இதன் மீது விவாதிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அப்போது ஒத்த கருத்தில் மத்திய அமைச்சர வை இந்த விவகாரத்தில் இல்லை என்பது புரிந்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி புள்ளி விவரங்களை இணைக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் வெளி வந்துள்ளன. செவ்வாய்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதி கணக்கு எடுக்கக் கூடாது என அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் வலியுறுத் தியுள்ளனர். ஆனாலும் அரசாங்கத்திற் குள்ளேயும், ஐ.மு.கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளுடனும், அதிகமான விவாதம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதாக தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.
1881ம் ஆண்டு இந்திய கணக்கெடுப்புக் குழு தனது பணியை முதலில் தொடங்கியது. 1931ம் ஆண்டு வரை சாதி வாரி கணக்கெடுப்பையும் அது எடுத்தது. ஆனால் 80 ஆண்டுகளாக எஸ்.சி., எஸ்.டி. தவிர மற்ற பின்தங்கிய வகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரம் எடுக்கப்படவில்லை. இதுவே 80 ஆண்டுகளில் கூடியிருக்கும் தங்களது சாதி எண்ணிக்கையை கணக்கில் எடுக்காமல் இருக்கும் அவல நிலை என்று பாதிக்கப் பட்டோர் குரல் எழுப்புகின்றனர். 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படியே மண்டல் ஆணைய அறிக்கை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக் கீடு செய்துள்ளது. அத்தகைய மண்டல அறிக்கை இன்றைக்கும் அமுலில் இருப்பதால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக் கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளான இடஒதுக்கீடு, புதிய புள்ளி விவரங்களை கணக்கில் எடுக்காமல் எப்படி நியாயமாக கொடுக்கப்பட முடியும் என்பதே அவர்களது வாதம்.
சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துகின்ற ஒரு அரசாங்கம், அதை சரியாகவும், உண்மை யாகவும், புள்ளி விவரப்படியும் செய்ய மறுப்பது ஏன்? என்பதே அவர்களது கேள்வி.
இடஒதுக்கீடு என்பது ஒரு உலகம் தழுவிய விவாதமாக இருக்கிறது. அமெரிக்காவில் 1964ம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டத்தின் ஒப்புதலுக்கு பிறகு, 1970ன் ஆண்டுகளில் இன ரீதியான இடஒதுக்கீடு அமுலாகத் தொடங்கியது. அன்றைய அதிபர் ரிச்சர்டு நிக்சனின் தொழிலாளர் அமைச்சரான ஜார்ஜ் பி ஸ்குல்ஸ் என்பவர் கறுப்பர்களுக்கு எதிரான கட்டுமான சங்கங்களில், கறுப்பர்களையும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் இணைக்க வேண்டும் என்று கோரினார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வழக்கு ஒன்றில், இன ரீதியான பாரபட்சம் சட்ட விரோதமானது என்று கூறிய பிறகு, பல நிறுவனங்கள் தாங்களாகவே இடஒதுக்கீடு கொடுக்கத் தொடங்கினர். 1973ம் ஆண்டு நீதிமன்ற வழக்கில், கனக்டிக்கட் மாநில காவல் துறையில் புதிய ஊழியர்களை எடுக்கும் போது, பாதி பேராவது கறுப்பர்கள் இருக்க வேண்டும் என்பதாக தீர்ப்பானது. 1974ம் ஆண்டில் நீதித்துறை மற்றும் அமெரிக்க எஃகு தொழிலாளர் சங்கம் அதிகமான ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டது. 1978ம் ஆண்டு இதே போல உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று வெளியானது. 1989ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், தனியார் நிறுவனங்களும் தங்களது இடஒதுக்கீட்டை அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. 1990ல் அமெரிக்க உச்சநீதிமன்றம், மாநில ஒப்பந்தக் காரர்கள் 10% இனவழி ஒதுக்கீடு செய்ய அனுமதி கொடுத்தது. அதே சமயம் 1991ல் அதிபர் ஜார்ஜ் புஷ் இது போன்ற இடஒதுக்கீடுகளை அறவே நீக்க முயற்சி எடுத்தார். அதை 1991ன் சிவில் உரிமைகள் சட்டம் என்பதாக உருவாக்க முயன்றார். ஆனால் வெல்லவில்லை. ஜார்ஜ் புஷ் அணுகுமுறையை, இந்தியாவின் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் பின்பற்று கிறார்களா என்பது தெரியவில்லை.
அமெரிக்காவில் ஆக்கபூர்வமான ஒதுக்கீடு அணுகுமுறை என்று 1961ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியால் கையெழுத்திடப்பட்டது. அதே போல நிர்வாக ஆணை 1965ம் ஆண்டு செப்டம்பர் 24ல் அதிபர் லிண்டன் ஜான்சனால் கையெழுத்திடப்பட்டது. பெண் களுக்கு இடஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும் என்று 2967ம் ஆண்டு அக்டோபர் 13ம் நாள் அமெரிக்க நிர்வாக ஆணை அமுலாக்கப்பட்டது. அமெரிக்காவி லேயே இத்தகைய நிலை என்றால், சாதி ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவில் ஏன் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது அரசாங்கத்திலும், பொதுத்துறையிலும் மற்றும் தனியார் கல்வி சாலைகளிலும் இருக்கிறது. ஆனாலும் கூட மத, மொழி அடிப்படையிலான கல்வி நிறுவனங்களில் கட்டாயப் படுத்தப் படுவதில்லை. இட ஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27% என்பது அமுலில் உள்ளது.
மண்டல் ஆணைய அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள சாதிகளின் பின்தங்கிய நிலைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதையொட்டி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு என்பது அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையை அமுலாக்கினால், உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறியவர்களும் உண்டு. அத்தகைய சக்திகளின் மிச்ச சொச்சங்களால் இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரி புள்ளி விவரத்தை எடுக்கவிடாமல் தடுக்க வைக்க முடியலாம். ஆனால் அதுவே இந்தியாவின் எதிர்காலமாக இருக்காது.
மண்டல் 11 விதமான அடையாளங்களை கூறியுள்ளார். சமூக ரீதியில் பின்தங்கிய சாதிகள். தங்கள் வாழ்க்கைக்காக உடல் உழைப்பை சார்ந்து நிற்கும் சாதிகள். 17 வயதிற்குள் திருமணமான பெண்கள் எண்ணிக்கை 25% என்று கிராமங்களிலும், 10% என்று நகரங்களிலும் இருந்தால், இடஒதுக்கீடு. 17 வயதிற்கு முன்னால் திருமணமான ஆண்கள் 10% கிராமத்திலும், 5% நகரத்திலும் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% அதிகமாக பணியில் ஈடுபடும் பெண்கள் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% பள்ளிக்கு செல்லாத 5 முதல் 15 வயதுள்ள குழந்தை கள். அதே போல பொருளாதார மதிப்பீட்டை யும் மண்டல் கூறுகிறார். மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள குடும்பங்களின் சொத்துக்கள் மதிப்பீடு எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறார். 50% குடும்பங்கள் அரைகிலோ மீட்டருக்கு மேல் சென்று குடிதண்ணீர் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கும் ஒதுக்கீடு என்கிறார். மாநில சராசரிக்கு மேல் 25% நுகர்வு கடன் வாங்கும் குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார். இப்படியாக சமூக, கல்வி, பொருளாதார நிலைகளையும் ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மண்டல் முன்வைக்கிறார்.
இத்தகைய விரிவான ஆய்வை அமுலாக்கி வரும் இந்தியாவில், எந்த ஒரு முறையான அளவு கோலையும் எடுத்துக் கொள்ளாமல் மக்கள் தொகை கணக்கீடு செய்து என்ன பயன்? நிலச்சீர்த்திருத்தங்களையும் மண்டல் முன்வைக்கிறார். அதுபோல சாதிவாரி புள்ளி விவரம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே, இன்றைய இந்தியாவின் வறுமை சூழலை, மாற்றுவதற் கான திட்டத்தை முன்வைக்க ஆள்வோருக்கு உதவப் போகிறது. அத்தகைய அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
Subscribe to:
Posts (Atom)
