மத்திய அமைச்சரவை நேற்று கூடிய போதும், விவாதித்து ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் இணைக்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. இதுதான் இந்திய மத்திய அமைச்சகத்தின் கொள்கை நிலை. அமைச்சர்கள் குழு ஒன்றை நிறுவி, அந்த குழு தனது கருத்தை தெரிவிக்கும் என்பதாக ஒரு நழுவல்வாத முடிவை மத்திய அமைச்சகம் நேற்று எடுத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஏன் இந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளாகிறது? இந்தியாவின் மத்திய அரசால் 1931ம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 340வது பிரிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான, பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் நாடு தழுவிய அளவில் உள்ள சமூகரீதியில், கல்விரீதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை பற்றிய ஆய்வை செய்தது. அந்த காகா கலேல்கர் ஆணையம் 1955ம் ஆண்டு தனது அறிக்கையை கொடுத்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை அவர்களது வேலை அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும், எழுத்தறிவு விழுக்காடு அடிப்படையிலும், பொதுவான கல்வி முன்னேற்ற அடிப்படையிலும் அந்த ஆணையம் மதிப்பீடு செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கை அப்போதே நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டது. ஆனாலும் கூட அதன் மீது எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை.
அதேசமயத்தில் 1961ம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு ஒரு வழிகாட்டல் அனுப்பியது. அதில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் வரையறைச்செய்யும்படி கேட்டுக்கொண்டது. அந்த வழிகாட்டலில் மத்திய அரசு, சாதிவாரியாக மதிப்பீடு செய்யாமல் பொருளாதார அளவுகோலை வைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காணுமாறு கூறியிருந்தது. அதாவது அன்றைய சூழலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து, அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சென்ற, மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்கு சென்ற, அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்த நபர்களுக்கு தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீட்டை, சமூக, கல்விரீதியான பின்தங்கிய நிலையை கணக்கில் கொண்டு அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு கிடைக்கவில்லை என்பது புரிகிறது.
அதையொட்டி பல்வேறு மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை அடையாளம் காண தனி ஆணையங்களை நியமிக்கத் தொடங்கின. அதுதான் தமிழ்நாட்டில் அம்பாசங்கர் ஆணையம் என்ற ஒன்று உருவாவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. அம்பாசங்கர் ஆணையத்தின் வழிகாட்டல் தமிழ்நாட்டில் சில முன்னேறிய சாதிகளைக் கூட, பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறை அகில இந்திய ரீதியில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களை அணுகிப்பார்த்த தன்மையிலிருந்து, மாறுப்பட்டு இருந்ததா என்பது இப்போதும் சர்ச்சைக்குள்ளாக்கப்படாமல் இருக்கிறது.
உதாரணமாக பீகார் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமிகார் என்ற சமூகம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தது. மண்டல் ஆணையத்தின் அறிக்கையில் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பற்றிய மறுஆய்வு வெளியிடப்பட்டது. அதில் பூமிகார் என்ற அந்த சமூகம் முன்னேறிய சமூகமாக அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட புதிய நிலைமைகளை ஒட்டிய மதிப்பீடுகளை, மண்டல் ஆணையம் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து காட்டியது. ஆனாலும் கூட 1931ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான், மண்டல் ஆணையமும் தனது மதிப்பீட்டை செய்ய வேண்டியிருந்தது. அதுவே காலாவதியான கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது என்பதால், சில இடங்களில் பொருத்தமாக இல்லை என்ற விமர்சனத்திற்குள்ளானது.
அதனால் தான் 1931ம் ஆண்டிற்குப் பிறகு, எடுக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு, இந்த முறையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை வலுவாக எழுகிறது. உள்ளபடியே இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் இடஒதுக்கீடு, பட்டியலின சாதிகளுக்கும், பட்டியலின பழங்குடியினருக்கும் மட்டுமே, குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கப்படவில்லை. மாறாக சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள வகுப்புகள் என்ற பெயரில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு சட்டபிரிவு 340ன் கீழ், இன்னொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையமான மண்டல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில் சமூக, கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை விளக்குவதற்காக 4 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன. 1980ம் ஆண்டின் இறுதியில் மண்டல் தனது அறிக்கையை கொடுத்தார். அந்த அறிக்கையில் 3வது பாகத்தில் 1வது பிரிவில் காகா கலேல்கர் ஆணையம் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. கலேகர் ஆணையம் சமூக, கல்வி ரீதியான பின்தங்கிய வகுப்புகளை சரியான நிபந்தனைகளுடன், புறநிலை சோதனைகளுடன் முன்வைக்க தவறிவிட்டது என்பதாக கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் இதே வரையறைகளை கேட்டுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் அடையாளங்களையும் கேட்டு வருகின்றனர். கெடுவாய்ப்பாக மண்டல ஆணையமும், அதை நிவர்த்திச் செய்யவில்லை. மண்டல ஆணையத்தின் 12வது பாகத்தில், 22வது பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், இந்திய மக்கள்தொகையில் 52% என்பதாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் 1931ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே தொடர்ந்து நிலையானது என்று எப்படி கூறமுடியும்?
1931ம் ஆண்டில் இந்தியா என்ற நாடு, பாகிஸ்தானையும், இன்றைய வங்காளதேசத்தையும் சேர்த்து இருந்தது. அப்போதுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இப்போது எப்படிப் பொருந்தும்? அதனடிப்படையில் 1981ம் ஆண்டிற்கும், அதன்பிறகு 2007ம் ஆண்டிற்கும் பொருத்திப் பார்க்கும் மத்திய அரசை எந்த நிலையில் ஏற்றுக் கொள்ளமுடியும்? 198283ம் ஆண்டு மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2 முறை விவாதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்கள் அடையாளம் கண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், மண்டல் அறிக்கையால் அடையாளம் காணப்பட்டதற்கும் மத்தியில் பெருத்த வேறுபாடு தெரிந்தது.
1991ம் ஆண்டு செப்டம்பர் 25ல், பிரதமர் வி.பி.சிங்கால், மண்டல் அறிக்கை மறுஉரு பெற்று அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையில் 3743 சாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், மண்டலால் 2 கிராமங்களும், ஒரு ஒன்றியமும் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 0.06% கிராமங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சமூகபொருளாதார கள ஆய்வு 3745 சாதிகளில், 406 சாதிகள் பற்றி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 11% சாதிகள் மட்டுமே கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான் இப்போது எடுக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் மீண்டும் வலுப்பெறுகிறது.
கலேல்கர் ஆணைய அறிக்கையில் தமிழ்நாட்டில் 156 பிற்படுத்தப்பட்ட சாதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேசமயம் தமிழ்நாடு அரசு 1245 சாதிகளை, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக அறிவித்துள்ளது. அசாமிலும், கர்நாடகாவிலும், மஹாராஷ்ராவிலும் இதேபோல மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான உயர்கல்வி இடஒதுக்கீட்டில் 27% கூட இடைக்கால தடைசெய்தது. அதற்கான காரணத்தைக் கூறும் போது, 1931க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பதையே கூறியிருந்தது. இத்தனை காரணங்களையும் எடுத்துச்சொல்லி, இன்னமும் பின்தங்கியிருக்கும் மக்கள் பிரிவினரை முன்னேற்ற, அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பின் காரணங்களை முன்வைத்து, தமிழக அரசு கடுமையாக போராட வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.
Thursday, May 27, 2010
பல்லுயிரியலை அழிக்கும் பன்னாட்டு மூலதனம்----திரைப்படங்கள்
நேற்று சென்னையில் பல்லுயிரியல் பற்றிய திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்த ஆண்டு ஐ.நா.சபையால், பல்லுயிரியல் ஆண்டு என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 21ம் நாள் அதற்கான உலக நாள் என்பதாகவும் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டியே பல்லுயிரியல் பற்றிய திரைப்படங்களை, மரபணுமாற்று இயலுக்கு எதிராக தெற்கு என்ற அமைப்பிலிருந்து திரையிட்டார்கள். இயற்கையாக பல்லுயிரியல் எப்படி தாவரங்கள், விலங்கினங்கள், மனிதயினம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். விவசாயத்தில் பல்லுயிரியல் எவ்வாறு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருந்தது என்பதை, இன்றைய அழிந்து வரும் சூழலில் நின்றுக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது.
மாறிவரும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஒப்ப, ஒரே நிலத்தில் பல்வேறு வகையான பயிர்களை நமது விவசாயிகள் பயிரிடுவார்கள். அதில் சிறு தானியங்களின் உற்பத்தியும் அடங்கும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, காடை, கண்ணி போன்ற சிறு தானியங்களை, நமது விவசாயிகள் பயிரிட்டு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். நெல் உற்பத்திச் செய்கின்ற நிலத்திலேயே, காலத்திற்கு ஒப்ப கடலையையும் பயிரிடும் நமது பண்டைய விவசாயிகள், ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு பயிர்கள் ஒரே நிலத்தில் பயிரிடப்படும் போது, பூச்சிகளின் தாக்குதல்களும், நோய்வாய்படுதல்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல்லுயிரியல் என்பது நமது பாரம்பரிய விவசாயத்தின் ஊறிப்போன ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.
மேற்கண்ட பல்லுயிரியல், 1965ம் ஆண்டு இந்தியாவில் திணிக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுமைப்புரட்சி மூலம் விவசாயத்தில் முதலில் உடைக்கப்பட்டது. பாரம்பரிய பயிர்களின் விதைகள் நாடெங்கிலும் திரட்டப்பட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தலைநகர் மணிலாவில், அமெரிக்காவால் நடத்தப்பட்ட சோதனைசாலையில் உருமாற்றம் செய்யப்பட்டு, வீரிய விதைகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. அந்த வீரிய விதைகள் இந்திய விவசாயத்தின் முகத்தையே மாற்றிவிட்டன. அவற்றை பயிரிட்ட நிலங்கள், சத்துக்களை இழக்கத் தொடங்கின. அதை ஈடுசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரசாயன உரங்கள், நமது நிலங்களில் இறங்கின. அவை ஏற்படுத்திய நோய்களைத் தீர்க்க, பூச்சிமருந்து கொல்லிகளை வெளிநாட்டவர்களே இறக்குமதிச் செய்தார்கள். இப்படியாக நமது பாரம்பரிய நிலங்கள் தங்களது சத்துக்களையும் இழக்கத்தொடங்கின. இது பல்லுயிரியலுக்கு கொடுக்கப்பட்ட முதல் அடி.
அடுத்து உலக அரங்கில் பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மரபணுமாற்று விதைகள், பல்லுயிரியலை அழிப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கின. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் செயற்கை விதைகள், 80 விழுக்காடு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. வெற்றியைத் தேடி ஒரு பேராபத்து என்ற திரைப்படத்தின் மூலம், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, வடஆப்பிரிக்காவின் மாலி ஆகிய நாடுகளில், மரபணுமாற்றியல் செயல்பட்ட விதம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் பி.டி.பருத்தி விதையின் வில்லங்கங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
மான்சான்டோ நிறுவனம் மரபணுமாற்று உறுப்புகள் மூலம், பாதுகாப்பையும், அதிகமான பொருள் வரவையும் ஈட்டலாம் என்ற பரப்புரையை செய்து வருகிறது. ஆனால் அது எந்தளவுக்கு பொய்யானது என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தென்னாப்பிரிக்காவின் மகதினி என்ற பகுதியில், சிறு விவசாயிகளுக்கு மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைகள் அதிக வெற்றியைக் கொடுத்திருப்பதாக, அந்த நிறுவனம் கூறியது. ஆனால் சிறு விவசாயிகளை அழிக்கத் தான் அந்த மரபணுமாற்று பருத்தி உதவியிருக்கிறது என்பதை இந்தப் படம் நேரடியாக விளக்குகிறது.
அதேபோல இந்தோனேஷியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டு சுலாவாசி என்ற இடத்தில், ஓராண்டு கழித்து, சிறு விவசாயிகளை நட்டம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. அதேபோல தாய்லாந்தில் நிலவுகின்ற சட்டங்களை வஞ்சகமாக மீறி, விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மரபணுமாற்று பருத்தி பெரும் தோல்வியை ஏற்படுத்தி, தாய்லாந்து விவசாயிகளை புலம்பவைத்துள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டில், மரபணுமாற்று பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்குள்ள சிறு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் மூலம் மாலி நாட்டிற்குள் மரபணுமாற்றியல் நுழையக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டதையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. அதேசமயம் இந்தியாவில் பி.டி.பருத்தி 5 ஆண்டுகளில் விவசாயிகள் மத்தியில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணமாக ஆனதையும் இந்த திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.
அடுத்து மான்சாடோவின் பார்வையில் உலகம் என்ற ஒரு திரைப்படம் காட்டப்பட்டது. ஒரு மணி நேரமும், ஐம்பது நிமிடங்களும் ஓடும் இந்தப் படம், மான்சான்டோவின் இணையதளத்திற்குள் சென்று, பல்வேறு விவரங்களை பட்டியலிடுகிறது. 1901ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து தனது உற்பத்திகளில் உள்ள நச்சுத்தன்மைகளால், பல்வேறு வழக்குகளை சந்தித்தது என்பது காட்டப்படுகிறது. 2002ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ரூ.10,000 கோடி டாலரை, மான்சான்டோ நிறுவனம் சம்பாதித்துள்ளது. இந்த அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், பி.சி.பி என்று அழைக்கப்படும் பாலி குளோரினேட்டட் பைபினய்ல்ஸ் என்ற தனது உற்பத்தியின் மூலம், புற்றுநோயையும், தைராயிடையும் ஏற்படுத்தியதை நாம் காணமுடிகிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒப்புதல் குழு மூலம், நச்சுத்தன்மைக் கொண்ட மான்சான்டோவின் உற்பத்திகள் ஒப்புதல் பெற்றன என்பதும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதன் பல்லுயிரியல் ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மயன்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் திணறுவது இதில் காட்டப்படுகிறது. மான்சான்டோ உற்பத்திகளின் பக்கவிளைவுகளால் 1000 பேர் ஊனமுற்றதை அவரால் மறுக்க முடியவில்லை. அமெரிக்க குடிமக்களையே சோதனைப்பன்றிகள் போல, பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் இந்த படத்தில் குற்றம்சாட்டுகிறார்கள். கனடாவில் அதிகாரப்பூர்வமற்ற நிலையிலும், ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட நிலையிலும் உள்ள போவின் வளர்ஹார்மோன்ஸை, மாடுகளுக்கு ஊசியின் மூலம் இறக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக கூறி, நச்சுத்தன்மையை பரப்பி வருவதையும் இதில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வடஅமெரிக்க விவசாயிகள் ஒவ்வொருவருடனும், மான்சான்டோ நிறுவனம் கட்டாயமாக ஒப்பந்தம் போட்டு, தனது மரபணுமாற்று விதைகளை திணித்துள்ளது. அதில் நட்டம் அடைந்த விவசாயிகள் தங்களது பண்ணைகளுக்கு இனி மான்சான்டோ நுழையக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததையும் இப்படம் விளக்குகிறது. சோயா பீன்சிலும் மரபணுமாற்று வேலை செய்து தோல்வி அடைந்ததை காட்டுகிறார்கள். மெக்சிகோவில் பல பத்து லட்சம் விவசாயிகள் மத்தியில், பாரம்பரிய சோளத்தை அழித்து, மரபணுமாற்று சோளம் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு காட்டப்படுகிறது. மான்சான்டோ நிறுவனம் உருவாக்கிய ரசாயன கலவையான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சுப்பொருளை, அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்தியதால் 4 லட்சம் மரணத்தையும், 5 லட்சம் குழந்தைகளின் குறைப்பிரசவத்தையும் அடைந்ததை நாம் சிந்தித்துப்பார்க்க இந்தப் படம் உதவுகிறது.
இந்தியாவில் மஹிகோ என்ற விதைக் கம்பெனியை முழுமையாகவும், ஈ.ஐ.டி.பாரியின் சிறிய விதைப் பிரிவையும் மான்சான்டோ வாங்கி விட்டது. போன்கார்டு என்ற பெயரில் ஆந்திராவில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக 25 வயது விவசாயி உட்பட, பல ஆயிரம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டதை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ராசி 12, ராசி 14 என்ற பெயர்களில் மரபணுமாற்று பருத்தி விதைகளை, மான்சான்டோ மாற்றுப்பெயர்களில் சந்தையில் திணித்து வருகிறது. இந்தப்படங்கள் காட்டும் உண்மைகளை, காட்சிகளின் மூலம் ஆட்சிக்கு வரும் நமது அரசியல்வாதிகள் புரிந்துக்கொண்டு சுதாரிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
மாறிவரும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஒப்ப, ஒரே நிலத்தில் பல்வேறு வகையான பயிர்களை நமது விவசாயிகள் பயிரிடுவார்கள். அதில் சிறு தானியங்களின் உற்பத்தியும் அடங்கும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, காடை, கண்ணி போன்ற சிறு தானியங்களை, நமது விவசாயிகள் பயிரிட்டு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். நெல் உற்பத்திச் செய்கின்ற நிலத்திலேயே, காலத்திற்கு ஒப்ப கடலையையும் பயிரிடும் நமது பண்டைய விவசாயிகள், ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு பயிர்கள் ஒரே நிலத்தில் பயிரிடப்படும் போது, பூச்சிகளின் தாக்குதல்களும், நோய்வாய்படுதல்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல்லுயிரியல் என்பது நமது பாரம்பரிய விவசாயத்தின் ஊறிப்போன ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.
மேற்கண்ட பல்லுயிரியல், 1965ம் ஆண்டு இந்தியாவில் திணிக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுமைப்புரட்சி மூலம் விவசாயத்தில் முதலில் உடைக்கப்பட்டது. பாரம்பரிய பயிர்களின் விதைகள் நாடெங்கிலும் திரட்டப்பட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தலைநகர் மணிலாவில், அமெரிக்காவால் நடத்தப்பட்ட சோதனைசாலையில் உருமாற்றம் செய்யப்பட்டு, வீரிய விதைகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. அந்த வீரிய விதைகள் இந்திய விவசாயத்தின் முகத்தையே மாற்றிவிட்டன. அவற்றை பயிரிட்ட நிலங்கள், சத்துக்களை இழக்கத் தொடங்கின. அதை ஈடுசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரசாயன உரங்கள், நமது நிலங்களில் இறங்கின. அவை ஏற்படுத்திய நோய்களைத் தீர்க்க, பூச்சிமருந்து கொல்லிகளை வெளிநாட்டவர்களே இறக்குமதிச் செய்தார்கள். இப்படியாக நமது பாரம்பரிய நிலங்கள் தங்களது சத்துக்களையும் இழக்கத்தொடங்கின. இது பல்லுயிரியலுக்கு கொடுக்கப்பட்ட முதல் அடி.
அடுத்து உலக அரங்கில் பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மரபணுமாற்று விதைகள், பல்லுயிரியலை அழிப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கின. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் செயற்கை விதைகள், 80 விழுக்காடு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. வெற்றியைத் தேடி ஒரு பேராபத்து என்ற திரைப்படத்தின் மூலம், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, வடஆப்பிரிக்காவின் மாலி ஆகிய நாடுகளில், மரபணுமாற்றியல் செயல்பட்ட விதம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் பி.டி.பருத்தி விதையின் வில்லங்கங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
மான்சான்டோ நிறுவனம் மரபணுமாற்று உறுப்புகள் மூலம், பாதுகாப்பையும், அதிகமான பொருள் வரவையும் ஈட்டலாம் என்ற பரப்புரையை செய்து வருகிறது. ஆனால் அது எந்தளவுக்கு பொய்யானது என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தென்னாப்பிரிக்காவின் மகதினி என்ற பகுதியில், சிறு விவசாயிகளுக்கு மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைகள் அதிக வெற்றியைக் கொடுத்திருப்பதாக, அந்த நிறுவனம் கூறியது. ஆனால் சிறு விவசாயிகளை அழிக்கத் தான் அந்த மரபணுமாற்று பருத்தி உதவியிருக்கிறது என்பதை இந்தப் படம் நேரடியாக விளக்குகிறது.
அதேபோல இந்தோனேஷியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டு சுலாவாசி என்ற இடத்தில், ஓராண்டு கழித்து, சிறு விவசாயிகளை நட்டம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. அதேபோல தாய்லாந்தில் நிலவுகின்ற சட்டங்களை வஞ்சகமாக மீறி, விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மரபணுமாற்று பருத்தி பெரும் தோல்வியை ஏற்படுத்தி, தாய்லாந்து விவசாயிகளை புலம்பவைத்துள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டில், மரபணுமாற்று பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்குள்ள சிறு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் மூலம் மாலி நாட்டிற்குள் மரபணுமாற்றியல் நுழையக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டதையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. அதேசமயம் இந்தியாவில் பி.டி.பருத்தி 5 ஆண்டுகளில் விவசாயிகள் மத்தியில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணமாக ஆனதையும் இந்த திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.
அடுத்து மான்சாடோவின் பார்வையில் உலகம் என்ற ஒரு திரைப்படம் காட்டப்பட்டது. ஒரு மணி நேரமும், ஐம்பது நிமிடங்களும் ஓடும் இந்தப் படம், மான்சான்டோவின் இணையதளத்திற்குள் சென்று, பல்வேறு விவரங்களை பட்டியலிடுகிறது. 1901ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து தனது உற்பத்திகளில் உள்ள நச்சுத்தன்மைகளால், பல்வேறு வழக்குகளை சந்தித்தது என்பது காட்டப்படுகிறது. 2002ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ரூ.10,000 கோடி டாலரை, மான்சான்டோ நிறுவனம் சம்பாதித்துள்ளது. இந்த அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், பி.சி.பி என்று அழைக்கப்படும் பாலி குளோரினேட்டட் பைபினய்ல்ஸ் என்ற தனது உற்பத்தியின் மூலம், புற்றுநோயையும், தைராயிடையும் ஏற்படுத்தியதை நாம் காணமுடிகிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒப்புதல் குழு மூலம், நச்சுத்தன்மைக் கொண்ட மான்சான்டோவின் உற்பத்திகள் ஒப்புதல் பெற்றன என்பதும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதன் பல்லுயிரியல் ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மயன்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் திணறுவது இதில் காட்டப்படுகிறது. மான்சான்டோ உற்பத்திகளின் பக்கவிளைவுகளால் 1000 பேர் ஊனமுற்றதை அவரால் மறுக்க முடியவில்லை. அமெரிக்க குடிமக்களையே சோதனைப்பன்றிகள் போல, பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் இந்த படத்தில் குற்றம்சாட்டுகிறார்கள். கனடாவில் அதிகாரப்பூர்வமற்ற நிலையிலும், ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட நிலையிலும் உள்ள போவின் வளர்ஹார்மோன்ஸை, மாடுகளுக்கு ஊசியின் மூலம் இறக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக கூறி, நச்சுத்தன்மையை பரப்பி வருவதையும் இதில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வடஅமெரிக்க விவசாயிகள் ஒவ்வொருவருடனும், மான்சான்டோ நிறுவனம் கட்டாயமாக ஒப்பந்தம் போட்டு, தனது மரபணுமாற்று விதைகளை திணித்துள்ளது. அதில் நட்டம் அடைந்த விவசாயிகள் தங்களது பண்ணைகளுக்கு இனி மான்சான்டோ நுழையக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததையும் இப்படம் விளக்குகிறது. சோயா பீன்சிலும் மரபணுமாற்று வேலை செய்து தோல்வி அடைந்ததை காட்டுகிறார்கள். மெக்சிகோவில் பல பத்து லட்சம் விவசாயிகள் மத்தியில், பாரம்பரிய சோளத்தை அழித்து, மரபணுமாற்று சோளம் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு காட்டப்படுகிறது. மான்சான்டோ நிறுவனம் உருவாக்கிய ரசாயன கலவையான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சுப்பொருளை, அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்தியதால் 4 லட்சம் மரணத்தையும், 5 லட்சம் குழந்தைகளின் குறைப்பிரசவத்தையும் அடைந்ததை நாம் சிந்தித்துப்பார்க்க இந்தப் படம் உதவுகிறது.
இந்தியாவில் மஹிகோ என்ற விதைக் கம்பெனியை முழுமையாகவும், ஈ.ஐ.டி.பாரியின் சிறிய விதைப் பிரிவையும் மான்சான்டோ வாங்கி விட்டது. போன்கார்டு என்ற பெயரில் ஆந்திராவில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக 25 வயது விவசாயி உட்பட, பல ஆயிரம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டதை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ராசி 12, ராசி 14 என்ற பெயர்களில் மரபணுமாற்று பருத்தி விதைகளை, மான்சான்டோ மாற்றுப்பெயர்களில் சந்தையில் திணித்து வருகிறது. இந்தப்படங்கள் காட்டும் உண்மைகளை, காட்சிகளின் மூலம் ஆட்சிக்கு வரும் நமது அரசியல்வாதிகள் புரிந்துக்கொண்டு சுதாரிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
Wednesday, May 26, 2010
தமிழக அரசுக்கு டெல்லி தரும் நெருக்கடியா?
தமிழகத்தை ஆண்டுவரும் ஆளுங்கட்சி, டெல்லியை ஆண்டுவரும் அதாவது இந்தியாவை ஆண்டுவரும் ஆளுங்கட்சியுடன் கூட்டணியாக செயல்படுவது உண்மை தான். அதுமட்டுமின்றி இந்த கூட்டணியான ஐக்கியமுற்போக்கு கூட்டணி தனது 2வது ஆட்சியின் முதல் ஆண்டை முடித்திருப்பதும் உண்மை தான். அதைப்பற்றி ஓராண்டாக தான் சந்திக்காத ஊடகவியலாளர்களை, தலைமை அமைச்சர் சந்தித்ததும் உண்மை தான். எந்தவொரு கேள்விக்கும் விரிவான விடையை தலைமை அமைச்சர் கொடுக்கவில்லை என்பதே ஊடகக்காரர்களின் வருத்தம். ஆனாலும் சில கேள்விகளுக்கு அவர் விரிவாக விடையளித்ததாகத் தான் தெரிகிறது. உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய கேள்விகளுக்கு, தவறு எதுவும் நடக்கவில்லையென்று மத்திய அமைச்சர் ஆ.ராஜாவிற்கு ஒரு பாராட்டே கொடுத்துள்ளார். ஆனாலும் கடைசியில் தவறு நிரூபணமானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் தான் ஒரு சிறிய நெருடல் தெரிகிறது.
மாநிலத்தில் தேர்தல் வரயிருக்கும் காலத்தில், கூட்டணி கட்சிகளுக்குள் அதுவும் பெரிய கட்சிகளுக்குள் ஒரு பேர உரசல் இருக்கத்தான் செய்யும். தங்கள் தங்கள் பாணியில் ஒவ்வொருவரும், தங்கள் பேரத்தை அதிகப்படுத்துவதற்காக நெருக்கடி தருவார்கள். மத்திய அரசை ஆளுகின்ற பாரம்பரியக் கட்சியான காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட நெருக்கடிகளை தருகின்ற பாணியே தனிதான். அப்படிப்பட்ட ஒரு அடிநீரோட்ட காய் நகர்த்தல்கள் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறதா? மாநில ஆட்சியில் கூட்டணி ஆட்சியை நிறுவ, ஏதாவது நிர்ப்பந்தம் இப்போதிலிருந்தே கொடுக்கப்படுகிறதா? அதற்காக மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முயல்கிறார்களா? எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ. வழக்குகள் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதாக காங்கிரஸ் மீது ஏற்கனவே புகார் இருக்கிறதே? அதையும் கூட பிரதமர் தனது பேட்டியில் மறுத்திருக்கிறாரே?
இப்போது வெளிவரப்பட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கை, அப்படிப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அல்லவா? மத்திய உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் விடுதலைப்புலிகள் வந்துள்ளனர் என்பதாகவும், விடுதலைப்புலி ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகவும் கூறியுள்ளார். இதுதான் இப்போது மேல்மட்டங்களில், பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையில் நிலவும் கொந்தளிப்பைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, அதன் ஆதரவு அமைப்புகள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதாக கூறுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி.
ஏனென்றால் இலங்கைத் தீவில், விடுதலைப்புலிகள் அமைப்பில் போரில் வென்று, அதிபர் மகிந்தா அந்த வெற்றியின் ஓராண்டை கொண்டாடியும் விட்டார். அதனால் அங்கே கொந்தளிப்பான சூழல் இல்லை. தமிழ்நாட்டிலும் காவல்துறை விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு, எந்தவொரு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் எளிதாக அனுமதிக் கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவில் அனுமதிப் பெற்றவர்களையும், ஆயிரம் நிபந்தனைப் போட்டு அடக்கி வருவது தமிழக காவல்துறையின் வழக்கமாக ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு நிலைமைப் பற்றி அபாண்டமாக மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை என்ன?
உள்துறையின் அறிக்கையில் எஞ்சியுள்ள விடுதலைப்புலியின் போராளிகளும், தலைவர்களும் நம்பிக்கை துரோகிகள் என இந்திய அரசையும், எதிரிகள் என இலங்கை அரசையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்று பொறுப்பற்ற ரீதியில், ஒரு பொல்லாப்பை கூறியுள்ளது. கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று உள்துறை கூறுகிறது. இத்தகைய கூற்று, உள்துறையின் தாக்கும் குறிகளாக அப்பாவி ஈழ அகதிகள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழக முதல்வர் தனது முயற்சியில், ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு மேம்பாட்டு உதவிகளை செய்து வருகின்ற நேரத்தில், அந்த அப்பாவி 1 லட்சம் மக்கள் மீது இப்படிப்பட்ட அபாண்ட பழியை, மத்திய அரசு சுமத்த வேண்டிய காரணம் என்ன?
இணையதளத்தில் ஈழப்போரின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்ற இந்திய விரோதப்போக்கை, இலங்கைத் தமிழரிடையே விதைக்கின்ற வகையில் கட்டுரைகள் எழுதப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் இருக்கின்ற தமிழர்களின் கருத்துரிமைக்கு, எழுத்துரிமைக்கு எதிராக இந்திய அரசு தொடுக்கின்ற மிரட்டல் என்பதாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட முடியும். இதே கருத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் முறையாக அந்த அவைகளில் பதில் சொல்லாத, உள்துறை அமைச்சகம் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
மாநில நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதும் புலி ஆதரவாளர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள் எனவும் மத்திய அரசு கூறுகிறது. அதனால் தான் விடுதலைகள் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஒரு நியாயப்படுத்தல் அறிக்கையை, உள்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில ஆட்சியை நெருக்குவதற்கும், மிரட்டுவதற்கும் என்று சொன்னால் சரியாக இருக்குமா? இதற்கு முன்னால் மத்திய அரசு இதுபோன்று மாநில அரசை மிரட்டிய வரலாறு உண்டா? அதற்காக பொய்க் காரணங்களை கூறிய ஆதாரங்கள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தேட வேண்டும்.
2005ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதாவை முதல்வராகக் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இதுபோன்ற பீதியுற வைக்கும் கடிதத்தை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. 200405 ஆண்டுக்கான உள்துறை அறிக்கையில், சிவராஜ் பாட்டீல் தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார். 200304 ஆண்டுக்கான அறிக்கையில், உள்துறை அமைச்சர் அத்வானி அப்படிப்பட்ட எந்தவொரு சட்டஒழுங்கு பிரச்சனையையும் தமிழ்நாடு பற்றி கிளப்பவில்லை. இடைப்பட்ட ஓராண்டில் எதுவும் நடக்காதபோது, மத்திய உள்துறை ஏன் அப்படி பீதியை கிளப்பியது? அடுத்து அன்றைய முதல்வரை கொலை செய்வதற்காக, 2 விடுதலைப்புலிகளின் தற்கொலை பெண்புலிகள் இறங்கியிருப்பதாக, முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். இவை அனைத்துமே தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு இல்லை என்ற கற்பித்தலை ஏற்படுத்தத்தான் என்று அன்றைய முதல்வர் அறிக்கை விடுத்தார்.
இப்போது செம்மொழி மாநாட்டிற்கான துரிதப் பணிகளில், தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் செம்மொழி தமிழ் மாநாடு மூலம், விரும்பியோ, விரும்பாமலோ, தமிழின உணர்வும், தமிழ் மொழி உணர்வும் மேலோங்கும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த சந்தர்ப்பத்தில், இப்படியொரு அச்சுறுத்தல் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதை புரிந்துக்கொள்ளும் தமிழக அரசியல் சக்திகள், சரியான வழியில் பதில் கொடுத்து, அச்சுறுத்தும் அறிக்கைகளை முறியடிக்க முடியும். தேர்தல் அரசியல் களத்தில் இருக்கும் தமிழக அரசியல் சக்திகள், விவரம் புரிந்து வியூகம் உடைப்பார்களா என்பதே நமக்கு எழுகின்ற கேள்வி.
மாநிலத்தில் தேர்தல் வரயிருக்கும் காலத்தில், கூட்டணி கட்சிகளுக்குள் அதுவும் பெரிய கட்சிகளுக்குள் ஒரு பேர உரசல் இருக்கத்தான் செய்யும். தங்கள் தங்கள் பாணியில் ஒவ்வொருவரும், தங்கள் பேரத்தை அதிகப்படுத்துவதற்காக நெருக்கடி தருவார்கள். மத்திய அரசை ஆளுகின்ற பாரம்பரியக் கட்சியான காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட நெருக்கடிகளை தருகின்ற பாணியே தனிதான். அப்படிப்பட்ட ஒரு அடிநீரோட்ட காய் நகர்த்தல்கள் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறதா? மாநில ஆட்சியில் கூட்டணி ஆட்சியை நிறுவ, ஏதாவது நிர்ப்பந்தம் இப்போதிலிருந்தே கொடுக்கப்படுகிறதா? அதற்காக மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முயல்கிறார்களா? எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ. வழக்குகள் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதாக காங்கிரஸ் மீது ஏற்கனவே புகார் இருக்கிறதே? அதையும் கூட பிரதமர் தனது பேட்டியில் மறுத்திருக்கிறாரே?
இப்போது வெளிவரப்பட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கை, அப்படிப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அல்லவா? மத்திய உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் விடுதலைப்புலிகள் வந்துள்ளனர் என்பதாகவும், விடுதலைப்புலி ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகவும் கூறியுள்ளார். இதுதான் இப்போது மேல்மட்டங்களில், பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையில் நிலவும் கொந்தளிப்பைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, அதன் ஆதரவு அமைப்புகள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதாக கூறுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி.
ஏனென்றால் இலங்கைத் தீவில், விடுதலைப்புலிகள் அமைப்பில் போரில் வென்று, அதிபர் மகிந்தா அந்த வெற்றியின் ஓராண்டை கொண்டாடியும் விட்டார். அதனால் அங்கே கொந்தளிப்பான சூழல் இல்லை. தமிழ்நாட்டிலும் காவல்துறை விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு, எந்தவொரு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் எளிதாக அனுமதிக் கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவில் அனுமதிப் பெற்றவர்களையும், ஆயிரம் நிபந்தனைப் போட்டு அடக்கி வருவது தமிழக காவல்துறையின் வழக்கமாக ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு நிலைமைப் பற்றி அபாண்டமாக மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை என்ன?
உள்துறையின் அறிக்கையில் எஞ்சியுள்ள விடுதலைப்புலியின் போராளிகளும், தலைவர்களும் நம்பிக்கை துரோகிகள் என இந்திய அரசையும், எதிரிகள் என இலங்கை அரசையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்று பொறுப்பற்ற ரீதியில், ஒரு பொல்லாப்பை கூறியுள்ளது. கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று உள்துறை கூறுகிறது. இத்தகைய கூற்று, உள்துறையின் தாக்கும் குறிகளாக அப்பாவி ஈழ அகதிகள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழக முதல்வர் தனது முயற்சியில், ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு மேம்பாட்டு உதவிகளை செய்து வருகின்ற நேரத்தில், அந்த அப்பாவி 1 லட்சம் மக்கள் மீது இப்படிப்பட்ட அபாண்ட பழியை, மத்திய அரசு சுமத்த வேண்டிய காரணம் என்ன?
இணையதளத்தில் ஈழப்போரின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்ற இந்திய விரோதப்போக்கை, இலங்கைத் தமிழரிடையே விதைக்கின்ற வகையில் கட்டுரைகள் எழுதப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் இருக்கின்ற தமிழர்களின் கருத்துரிமைக்கு, எழுத்துரிமைக்கு எதிராக இந்திய அரசு தொடுக்கின்ற மிரட்டல் என்பதாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட முடியும். இதே கருத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் முறையாக அந்த அவைகளில் பதில் சொல்லாத, உள்துறை அமைச்சகம் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
மாநில நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதும் புலி ஆதரவாளர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள் எனவும் மத்திய அரசு கூறுகிறது. அதனால் தான் விடுதலைகள் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஒரு நியாயப்படுத்தல் அறிக்கையை, உள்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில ஆட்சியை நெருக்குவதற்கும், மிரட்டுவதற்கும் என்று சொன்னால் சரியாக இருக்குமா? இதற்கு முன்னால் மத்திய அரசு இதுபோன்று மாநில அரசை மிரட்டிய வரலாறு உண்டா? அதற்காக பொய்க் காரணங்களை கூறிய ஆதாரங்கள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தேட வேண்டும்.
2005ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதாவை முதல்வராகக் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இதுபோன்ற பீதியுற வைக்கும் கடிதத்தை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. 200405 ஆண்டுக்கான உள்துறை அறிக்கையில், சிவராஜ் பாட்டீல் தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார். 200304 ஆண்டுக்கான அறிக்கையில், உள்துறை அமைச்சர் அத்வானி அப்படிப்பட்ட எந்தவொரு சட்டஒழுங்கு பிரச்சனையையும் தமிழ்நாடு பற்றி கிளப்பவில்லை. இடைப்பட்ட ஓராண்டில் எதுவும் நடக்காதபோது, மத்திய உள்துறை ஏன் அப்படி பீதியை கிளப்பியது? அடுத்து அன்றைய முதல்வரை கொலை செய்வதற்காக, 2 விடுதலைப்புலிகளின் தற்கொலை பெண்புலிகள் இறங்கியிருப்பதாக, முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். இவை அனைத்துமே தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு இல்லை என்ற கற்பித்தலை ஏற்படுத்தத்தான் என்று அன்றைய முதல்வர் அறிக்கை விடுத்தார்.
இப்போது செம்மொழி மாநாட்டிற்கான துரிதப் பணிகளில், தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் செம்மொழி தமிழ் மாநாடு மூலம், விரும்பியோ, விரும்பாமலோ, தமிழின உணர்வும், தமிழ் மொழி உணர்வும் மேலோங்கும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த சந்தர்ப்பத்தில், இப்படியொரு அச்சுறுத்தல் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதை புரிந்துக்கொள்ளும் தமிழக அரசியல் சக்திகள், சரியான வழியில் பதில் கொடுத்து, அச்சுறுத்தும் அறிக்கைகளை முறியடிக்க முடியும். தேர்தல் அரசியல் களத்தில் இருக்கும் தமிழக அரசியல் சக்திகள், விவரம் புரிந்து வியூகம் உடைப்பார்களா என்பதே நமக்கு எழுகின்ற கேள்வி.
Tuesday, May 25, 2010
கள்ளத்தோணியும், நல்ல தோணியும்
இந்திய அரசுக்கு எப்போதுமே அறிக்கைகள் கொடுப்பதில் ஒரு அலாதி பிரியம் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பதில், அமைச்சர்களுக்கு பதில், உயர் அதிகாரிகள் மூலம் அறிக்கைகள் கொடுப்பதில்தான் அந்த அலாதிப் பிரியம் வெளிப்படும். இந்தமுறை அத்தகைய ஒரு அறிக்கையை மத்திய உள்துறையின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா மூலம் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு அடக்குமுறையை மாவோயிஸ்டுகள் பெயரில் கட்டவிழ்த்துவிட, உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மூலம் வெளியிடுவார்கள். அதை அடுத்த ஒரு திட்டத்திற்கு இப்போது இணைச் செயலாளரை பயன்படுத்துகிறார்கள் போலத்தெரிகிறது. இந்த அறிக்கையில் மத்திய அரசின் குறி, விடுதலைப்புலிகள் மீது. இந்திய அரசும், இலங்கை அரசும் ஏற்கனவே விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று அறிவித்தார்களே என்று நீங்கள் அப்பாவித்தனமாக கேட்கலாம். அதுவும் உண்மைதான். திட்டமிட்டு ஏழு நாடுகள் அல்லது இப்போது புரிவதுபோல இருபது நாடுகள் சேர்ந்து திட்டமிட்டு புலிகள் இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்று, இலங்கை அரசுக்கு முழுமையான உதவியைச்செய்தன. அதன் உண்மைப்பொருள் புலிகள் இயக்கத்தை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தை என்பதை அப்போது பலரும் புரிந்து கொள்ளவில்லை. உள்ளபடியே இலங்கை அரசுக்கும், அண்டை நாடுகளில் உள்ள விரிவாக்க சிந்தனையுள்ள அரசுகளுக்கும், தமிழ் இனத்தின் எழுச்சி என்பதன் மீது ஒருவிதமான அச்சம் இருக்கிறது.
பாரம்பரியமிக்க தமிழ் தேசிய இனம், ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலேயே அவர்களது தேவைக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். அதாவது அன்று ஆங்கிலேயர்களுக்கு குடிக்க தேநீர் தேவைப்பட்டது. அதற்காக தேயிலைத்தோட்டங்களை மலைப்பகுதிகளில் நிறுவ முயன்றனர். தாங்கள் காலனிகளாக ஆக்கிரமித்துள்ள நாடுகளில் மலைப்பிரதேசங்களை அடையாளங்கண்டனர். அப்படி அவர்கள் அடையாளங்கண்ட நாடுகள் மலேசியாவும், இலங்கையும். அந்த இரு நாடுகளுக்கும் தேயிலைத்தோட்டங்களை உருவாக்க கடினமாக உழைக்கும் கூட்டம் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கடின உழைப்பாளர்கள் தமிழர்களே. அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலேயிருந்து கூலித்தொழிலாளர்களை கூட்டம், கூட்டமாக அந்த இரு நாடுகளுக்கும் ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர். அப்படி அந்த நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும், மலைகளை, காடுகளை வெட்டி, பண்படுத்தி, தோட்டங்களாக மாற்றி, அவற்றில் தேயிலைச் செடிகளை வளர்த்து, அந்த தேயிலைச் செடிகளுடன் அதிகாலை ஆறு மணியிலிருந்து போராடி, மாலை வரை உழைத்து, கோடி, கோடியாக அந்த நாடுகளுக்கு சம்பாதித்து கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு, குடியுரிமை தராமல் பல ஆண்டுகள் அடிமைகளாக நடத்தி வந்தது. அதன்பிறகு இன்று வரை மலையக தோட்டத்தொழிலாளர்களான இந்திய வம்சாவழியினருக்கு, எந்த ஒரு முன்னேற்றமும் கொடுக்க வில்லை. மாறாக அவர்களது அரசியல் பிரதிநிதிகளை அடிமைகளாக இலங்கையின் சிங்கள அரசு நடத்தி வருகிறது. சுதந்திரமான தொழிற்சங்கத்தையோ, தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ வளர விடுவதில்லை. அன்றைய காலத்தில் ஷண்முகதாசன் தொடங்கி, இன்றைக்கு மனோகணேசன் வரை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வளரும் தலைவர்களை வெற்றி பெற விடுவதில்லை.
அதையும் மீறி எதிர்கட்சியான ஐ.தே.க. எம்.பி.யாக, மலையகப் பகுதியான நுவரலியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காதரையும் ஆளுங்கட்சி இப்போது இழுக்கிறது. தென்னிலங்கையில் இந்திய வம்சாவழி தமிழர்கள், சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்துடன்தான் வாழ முடிகிறது. இதே நிலைமைதான் மலேசியாவிலும் நடந்து வருகிறது. மலேசியாவில் மலாய் இனத்தவருக்கு போட்டியாக பெரும்பான்மையாக இருக்கும் சீன இனத்தை இணைத்துக் கொண்டுதான், தமிழர்கள் அங்கே அரசியல் களத்தில் வெற்றி பெற முடிகிறது. உதாரணமாக ஜனநாயக செயல்கட்சி என்ற சீன இனத்தவர் தலைமையிலான கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு, பிணாங்கு மாநிலத்தில் துணை முதல்வராகவும், அதேபோல எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் தமிழர்கள் தங்களை அறுதியிட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திறமையும், தகுதியும், கடின உழைப்பும் உள்ள தமிழர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற ஆட்சியாளர்கள், இந்த வட்டாரத்திலும் எண்ணுகிறார்கள்.
அதன் பாதிப்புதான் இன்றைக்கு விடுதலை புலிகளுக்கு எதிராக மத்திய அரசு திடீரென எதிர்பாராதவிதமாக கொடுத்திருக்கின்ற அறிக்கை. ஈழத்தில் 4வது வன்னிப்போர் தோற்றப்பிறகு, ஆயுதம் தாங்கிய தமிழர்களின் படை தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவர்களது அனைத்து நாட்டு தொடர்புகளும், போராளிகளும், பிடிபட்டபிறகும் ஆள்வோருக்கு ஏன் இந்த கொலைவெறி என்பதாக தமிழர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு, அடுத்த நாடான இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பு. அதையொட்டி, இப்போது அச்சுறுத்தும் வகையில் கள்ளத்தோணி பற்றி மத்திய உள்துறையின் அறிக்கை.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள், பழைய போராளிகள் இவர்களெல்லாம் மீண்டும் தமிழ்நாட்டில் கூடி, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று நம்ப முடியாத ஒரு புதிய கதையை நமது உள்துறை அறிவித்துள்ளது. அதற்காக மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்தி எழுதியுள்ளது. வன்னிப்போரில் இந்திய அரசின் தமிழர் விரோத பங்களிப்பை பற்றி கோபத்துடனும், ஆதங்கத்துடனும், அழுகையுடனும் உலகம் முழுவதும் தமிழர்கள் எழுதி வருகின்ற எழுத்துக்கள், மத்திய அரசால் இங்கே கோடிட்டு காட்டப்படுகின்றன. உள்ளபடியே அரசியல் போராட்டத்தில் இனி ஈடுபடுவது மட்டுமே,
தமிழ் தேசிய இனத்திற்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத் தமிழினம் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒரு வடிவமைப்பையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ஏற்படுத்தி வருகிறது. எந்த விதத்திலும் ஆயுதங்களை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல், அரசியல் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து உலகத் தமிழர்கள் தங்கள் பாதைகளை வடிவமைத்து வருகின்றனர். தமிழ் தேசிய இனத்தின் உலகம் தழுவிய தாக்கத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ள, எதிர் சக்திகள் இப்போது அத்தகைய அரசியல் போராட்டத்தை உடைப்பதற்காக பல்வேறு வழிகளில் சதிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
அவற்றில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்றும், மீண்டும் புலிப் போராளிகள் தாக்குவார்கள் என்றும் வீர வசனங்களை பேசுகின்ற உணர்ச்சித் தமிழர்களையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருபுறம் அனுமதிக்கிறார்கள். இன்னொரு புறம், ஈழத்தில் மீண்டும் காடுகளில் ஆயுதம் தாங்கிய புலிகள் இருப்பதாக, அல்லது அணி சேர்வதாக ஒரு மாயையை, கதை வடிவில் வசனங்களுடன் வெளியிடுகிறார்கள். அதன்மூலம் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கும், அவசர நிலையை இலங்கைத் தீவில் தொடர வைப்பதற்கும், மிச்சமீதி போராளிகளை அடையாளம் கண்டு கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு அதையே காரணமாக பயன்படுத்துகிறார்கள். இப்போது, மேற்கண்ட தகவல்களை காரணங்களாக மாற்றி, ஓடிவந்த அல்லது தப்பிவந்த அல்லது விரக்தியடைந்த அல்லது மனைவி, மக்களுடன் நிம்மதியாக தமிழ்நாட்டில் வாழ்வதற்காக அடைக்கலம் தேடிவந்த, ஈழத் தமிழர்களை மேலும் ஒடுக்குவதற்காக இத்தகைய அறிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சியின் மீது, ஒரு விதமான நெருக்கடியை உருவாக்குவதற்காக, மத்திய அரசு இத்தகைய அணுகுமுறைகளை செய்கிறதா என்ற சந்தேகம் மாநில ஆளுங்கட்சி வட்டாரத்தில் பிரதிபலிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்திய குடிமக்களாகிய நாம் மத்திய அரசின் கொள்கைகளையும், அறிக்கைகளையும் நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம். தமிழர்களுக்கு அமைதி வழியில், அறவழிப்பாதையில், அரசியல் போராட்டங்களின் மூலம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க, இன்றைய சூழலில் உறுதி எடுக்க வேண்டியது தேவையாக இருக்கிறது.
பாரம்பரியமிக்க தமிழ் தேசிய இனம், ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலேயே அவர்களது தேவைக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். அதாவது அன்று ஆங்கிலேயர்களுக்கு குடிக்க தேநீர் தேவைப்பட்டது. அதற்காக தேயிலைத்தோட்டங்களை மலைப்பகுதிகளில் நிறுவ முயன்றனர். தாங்கள் காலனிகளாக ஆக்கிரமித்துள்ள நாடுகளில் மலைப்பிரதேசங்களை அடையாளங்கண்டனர். அப்படி அவர்கள் அடையாளங்கண்ட நாடுகள் மலேசியாவும், இலங்கையும். அந்த இரு நாடுகளுக்கும் தேயிலைத்தோட்டங்களை உருவாக்க கடினமாக உழைக்கும் கூட்டம் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கடின உழைப்பாளர்கள் தமிழர்களே. அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலேயிருந்து கூலித்தொழிலாளர்களை கூட்டம், கூட்டமாக அந்த இரு நாடுகளுக்கும் ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர். அப்படி அந்த நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும், மலைகளை, காடுகளை வெட்டி, பண்படுத்தி, தோட்டங்களாக மாற்றி, அவற்றில் தேயிலைச் செடிகளை வளர்த்து, அந்த தேயிலைச் செடிகளுடன் அதிகாலை ஆறு மணியிலிருந்து போராடி, மாலை வரை உழைத்து, கோடி, கோடியாக அந்த நாடுகளுக்கு சம்பாதித்து கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு, குடியுரிமை தராமல் பல ஆண்டுகள் அடிமைகளாக நடத்தி வந்தது. அதன்பிறகு இன்று வரை மலையக தோட்டத்தொழிலாளர்களான இந்திய வம்சாவழியினருக்கு, எந்த ஒரு முன்னேற்றமும் கொடுக்க வில்லை. மாறாக அவர்களது அரசியல் பிரதிநிதிகளை அடிமைகளாக இலங்கையின் சிங்கள அரசு நடத்தி வருகிறது. சுதந்திரமான தொழிற்சங்கத்தையோ, தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ வளர விடுவதில்லை. அன்றைய காலத்தில் ஷண்முகதாசன் தொடங்கி, இன்றைக்கு மனோகணேசன் வரை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வளரும் தலைவர்களை வெற்றி பெற விடுவதில்லை.
அதையும் மீறி எதிர்கட்சியான ஐ.தே.க. எம்.பி.யாக, மலையகப் பகுதியான நுவரலியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காதரையும் ஆளுங்கட்சி இப்போது இழுக்கிறது. தென்னிலங்கையில் இந்திய வம்சாவழி தமிழர்கள், சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்துடன்தான் வாழ முடிகிறது. இதே நிலைமைதான் மலேசியாவிலும் நடந்து வருகிறது. மலேசியாவில் மலாய் இனத்தவருக்கு போட்டியாக பெரும்பான்மையாக இருக்கும் சீன இனத்தை இணைத்துக் கொண்டுதான், தமிழர்கள் அங்கே அரசியல் களத்தில் வெற்றி பெற முடிகிறது. உதாரணமாக ஜனநாயக செயல்கட்சி என்ற சீன இனத்தவர் தலைமையிலான கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு, பிணாங்கு மாநிலத்தில் துணை முதல்வராகவும், அதேபோல எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் தமிழர்கள் தங்களை அறுதியிட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திறமையும், தகுதியும், கடின உழைப்பும் உள்ள தமிழர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற ஆட்சியாளர்கள், இந்த வட்டாரத்திலும் எண்ணுகிறார்கள்.
அதன் பாதிப்புதான் இன்றைக்கு விடுதலை புலிகளுக்கு எதிராக மத்திய அரசு திடீரென எதிர்பாராதவிதமாக கொடுத்திருக்கின்ற அறிக்கை. ஈழத்தில் 4வது வன்னிப்போர் தோற்றப்பிறகு, ஆயுதம் தாங்கிய தமிழர்களின் படை தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவர்களது அனைத்து நாட்டு தொடர்புகளும், போராளிகளும், பிடிபட்டபிறகும் ஆள்வோருக்கு ஏன் இந்த கொலைவெறி என்பதாக தமிழர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு, அடுத்த நாடான இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பு. அதையொட்டி, இப்போது அச்சுறுத்தும் வகையில் கள்ளத்தோணி பற்றி மத்திய உள்துறையின் அறிக்கை.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள், பழைய போராளிகள் இவர்களெல்லாம் மீண்டும் தமிழ்நாட்டில் கூடி, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று நம்ப முடியாத ஒரு புதிய கதையை நமது உள்துறை அறிவித்துள்ளது. அதற்காக மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்தி எழுதியுள்ளது. வன்னிப்போரில் இந்திய அரசின் தமிழர் விரோத பங்களிப்பை பற்றி கோபத்துடனும், ஆதங்கத்துடனும், அழுகையுடனும் உலகம் முழுவதும் தமிழர்கள் எழுதி வருகின்ற எழுத்துக்கள், மத்திய அரசால் இங்கே கோடிட்டு காட்டப்படுகின்றன. உள்ளபடியே அரசியல் போராட்டத்தில் இனி ஈடுபடுவது மட்டுமே,
தமிழ் தேசிய இனத்திற்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத் தமிழினம் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒரு வடிவமைப்பையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ஏற்படுத்தி வருகிறது. எந்த விதத்திலும் ஆயுதங்களை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல், அரசியல் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து உலகத் தமிழர்கள் தங்கள் பாதைகளை வடிவமைத்து வருகின்றனர். தமிழ் தேசிய இனத்தின் உலகம் தழுவிய தாக்கத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ள, எதிர் சக்திகள் இப்போது அத்தகைய அரசியல் போராட்டத்தை உடைப்பதற்காக பல்வேறு வழிகளில் சதிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
அவற்றில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்றும், மீண்டும் புலிப் போராளிகள் தாக்குவார்கள் என்றும் வீர வசனங்களை பேசுகின்ற உணர்ச்சித் தமிழர்களையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருபுறம் அனுமதிக்கிறார்கள். இன்னொரு புறம், ஈழத்தில் மீண்டும் காடுகளில் ஆயுதம் தாங்கிய புலிகள் இருப்பதாக, அல்லது அணி சேர்வதாக ஒரு மாயையை, கதை வடிவில் வசனங்களுடன் வெளியிடுகிறார்கள். அதன்மூலம் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கும், அவசர நிலையை இலங்கைத் தீவில் தொடர வைப்பதற்கும், மிச்சமீதி போராளிகளை அடையாளம் கண்டு கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு அதையே காரணமாக பயன்படுத்துகிறார்கள். இப்போது, மேற்கண்ட தகவல்களை காரணங்களாக மாற்றி, ஓடிவந்த அல்லது தப்பிவந்த அல்லது விரக்தியடைந்த அல்லது மனைவி, மக்களுடன் நிம்மதியாக தமிழ்நாட்டில் வாழ்வதற்காக அடைக்கலம் தேடிவந்த, ஈழத் தமிழர்களை மேலும் ஒடுக்குவதற்காக இத்தகைய அறிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சியின் மீது, ஒரு விதமான நெருக்கடியை உருவாக்குவதற்காக, மத்திய அரசு இத்தகைய அணுகுமுறைகளை செய்கிறதா என்ற சந்தேகம் மாநில ஆளுங்கட்சி வட்டாரத்தில் பிரதிபலிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்திய குடிமக்களாகிய நாம் மத்திய அரசின் கொள்கைகளையும், அறிக்கைகளையும் நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம். தமிழர்களுக்கு அமைதி வழியில், அறவழிப்பாதையில், அரசியல் போராட்டங்களின் மூலம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க, இன்றைய சூழலில் உறுதி எடுக்க வேண்டியது தேவையாக இருக்கிறது.
Monday, May 24, 2010
சிதம்பரத்தை குற்றம்சாட்டிய ஆய்வறிக்கை
கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் மத்திய மற்றும் மாநில காவல்படையினர் 76 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு பற்றி ஆய்வு செய்ய, மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பு படையின் முன்னாள் பொது இயக்குநர் ராம்மோகன் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போது அந்த ராம்மோகனின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சகம், சத்தீஸ்கர் அரசாங்கம், மற்றும் அரசு நிறுவனங்களை பொறுப்பாக்கி ஆய்வுகள் வெளியிடப்பட்டன. நடவடிக்கைகளுக்காக விதிகளை வழிகாட்டியிருந்தும் கூட, அவை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மத்திய சிறப்பு காவல்படையின் 62வது அணியினர், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களை எச்சரிக்கையின்றி செயல்படுத்தினார்கள் என்று அந்த குற்றச்சாட்டுக் கூறுகிறது. காடுகள் வழியாக ஒரு அரைவட்ட வடிவில் முன்னேறி தேடுதல் வேட்டையை நடத்துமாறு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு துணை தளபதி சத்தியவான் யாதவ், சிந்தாள்நார் பகுதியிலிருந்து தனது படைவரிசையை, முக்ரம் என்ற கிராமத்திற்கு ஒற்றைவழிப் பாதை மூலம் பின்வாங்கி எடுத்துச் சென்றார் என்று குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சி ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அறிக்கை வர்ணிக்கிறது. இது மத்திய சிறப்பு காவல்படையில் பலவீனமான தலைமை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சிந்தள்நார் முகாமில், வீரர்களுக்கு எந்தவொரு தற்காப்பு வாய்ப்புகளும் இல்லை. தங்கும் இடமும் கூட, சௌகரியமாக இல்லை.
மாநில காவல்படையும், மத்திய படையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராம்மோகன் கூறுகிறார். மத்திய சிறப்பு காவல்படைக்கு உள்ளேயிருக்கும் குறைபாடுகளை ஆய்வு செய்யும் போது, மாவோயிஸ்ட்களை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் அளவிற்கு தன்மை உள்ளவர்களாக அவர்கள் இல்லை. ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதையொட்டி மத்திய சிறப்பு காவல்படை தங்களின் 3 பெரிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதில் டி.ஐ.ஜி.நலின் பிரபாத், படை தளபதி விமல் பிசிட், ஆய்வாளர் சஞ்சிவ் பாக்ரே ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மே 6ம் நாள் பேசச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தண்டேவாடா பிரச்சனை மீது விவாதம் எழுந்த போது, 1 ஐ.ஜி.யும், 2 டி.ஐ.ஜி.யும், 1 எஸ்.பி.யும் சிந்திக்காமல், திட்டமிடாமல் நடந்து கொண்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். கட்டுப்பாடுள்ள மத்திய ஆயுதப்படையின் உள்விவகாரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, சம்மந்தப்பட்ட அமைச்சர் இப்படி பகிரங்கமாக உயர் அதிகாரிகளைப் பற்றி குற்றம்சாட்டி பொது இடத்தில் பேசலாமா என்பது நமக்கு புரியவில்லை. ஆனால் ஆய்வறிக்கையை வெளியிட்ட ராம்மோகன் குழுவும், விசாரணை நீதிமன்றம் கொடுத்துள்ள கண்டுபிடித்தல்களும், மேற்கண்ட மூன்று அதிகாரிகளுக்கு மிகவும் சிறிய அளவுதான் சம்பவத்தில் பங்கு உண்டு என்று கூறியுள்ளன. அதேசமயம் படைவீரர்களும், களத்தில் இருந்த தளபதிகளும் மேலிருந்து கொடுக்கப்பட்ட திட்டங்களை அலட்சியப்படுத்தி விட்டு, மேலிடத்திற்கு தங்கள் நடமாட்டத்தைப் பற்றிய பொய்ச் செய்திகளை கொடுத்துள்ளனர் என்று ராம்மோகன் குழு கூறியுள்ளது. மத்திய சிறப்பு காவல்படையை முழுமையாக சார்ந்து தான், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு நடத்த வேண்டியுள்ளது. ஆகவே இது மிகவும் சிக்கலாகிவிட்ட ஒரு பிரச்சனை.
மாவோயிஸ்ட்கள் மத்திய சிறப்பு காவல்படை மீது நடத்திய தாக்குதல்கள் அனைத்துமே, 5கி.மி. தூரத்தில் இருக்கும் தங்களது முகாம்களில் இருந்து தான் நடத்தியுள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. அதாவது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குச் சென்ற, மத்திய அரசு படை தங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்ட்களின் குவிதலை அப்புறப்படுத்தாமல், அசட்டையாக இருந்துள்ளனர் என்பது இங்கு தெரிந்துள்ளது.
இப்போது இடமாற்றம் செய்யப்படும் அதிகாரியான பிஸ்ட், 62வது படையணியின் ஆல்பா கம்பெனியை, சுற்றுப்புறமுள்ள மாவோயிஸ்ட்களை விரட்டுவதற்கு கட்டளையிட்டிருக்கிறார். அந்த கட்டளையை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். இதை விசாரணை நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல் 4ம் நாள் மாலையில், 62வது படையணியிலிருந்து ஒரு ஒயர்லஸ் செய்தியை தங்களது தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக எழுதியுள்ளனர். உண்மையில் அவர்கள் அப்போது தங்கள் இடத்தை விட்டு நகரவில்லை. மறுநாளான ஏப்ரல் 5ம் நாள் அதிகாலை 2.30 மணிக்கு, சிந்தாள்நார் முகாமை விட்டு அவர்கள் புறப்பட்டு, புர்காபால் என்ற கிராமத்தில் சோதனை நடத்த சென்றனர். மீண்டும் அரசப்படையினர் முக்ராம் என்ற கிராமத்திற்கு திரும்பி வந்தனர். மதியத்திற்கு மேல் முக்ராம் கிராமத்தின் அருகே மைதானத்தில் அமர்ந்தனர். தண்ணீருக்கும், எரியூட்ட கட்டைகளுக்கும் ஆள் அனுப்பினர். பெரியதொரு பாத்திரத்தில் கிச்சடியை உணவுக்கு தயார் செய்தனர். படையணிக்கு கொடுக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இந்த அளவுக்கு தங்களது பாதுகாப்பில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஏப்ரல் 6ம் நாள் அதிகாலையில் முக்ரம் கிராமத்திற்கு திரும்பிய பின், தங்களது ஒயர்லஸ் செட் ஒன்று தொலைந்ததை படையணியினர் உணர்ந்துள்ளனர். இந்த நடமாட்டம் பற்றிய தெளிவான செய்திகளை, மாவோயிஸ்ட்கள் தங்களது ஒற்றர்கள் மூலம் அறிந்த பிற்பாடு, படையணி திரும்பி வரும் போது தங்களது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாகயிருக்கும் பகுதிகளில், படையணியினர் சோதனை நடத்த தயங்குகின்றனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ரெய்பூரில் உள்ள உளவுத்துறை நிலையத்திற்கு, மே 5ம் நாளே அந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக குவிந்துள்ளது பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அதை அவர்கள் தண்டேவாடாவிலுள்ள சத்தீஸ்கர் காவல்துறைக்கு, மாலையிலேயே அனுப்பியுள்ளனர். ஆனால் வட்டார காவல்துறை அப்படிப்பட்ட செய்தி தாக்குதலுக்கு முன்பு கிடைக்கவில்லை என்பதாக கூறுகிறார்கள். அரசப்படையினர் காடுகளில் போர்புரியும் தந்திரங்களிலும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. இதே நேரத்தில் உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தலைநகரில் அரசப்படையினர் பல்வேறு ஆயுதங்களையும், தோட்டாக்களையும் வட்டாரத்திலுள்ள கிரிமினல்களுக்கு விற்றதற்காக பிடிபட்டுள்ளனர்.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான கடுமையான போரை நடத்த வேண்டும் என்று கூறும் அதே நேரம், அவரது மனைவியான திட்டகமிஷன் உறுப்பினர் செயலாளர் சுதா பிள்ளை, வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, மாவோயிஸ்ட்களை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் எழுத்தாளர் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் எந்தவொரு காந்தியவாதியை விடவும், அதிக காந்தியவாதியாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அரசு செயல்படாத பகுதிகளில் தான் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள் என்றும் செய்திகள் அறிவிக்கின்றன. மேற்கண்ட அறிக்கைகளில் குற்றம்சாட்டப்படும் நிலையில் உள்ள அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கான பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி, மங்களூர் விமான விபத்திற்கு பொறுப்பேற்கிறேன் என்று அமைச்சர் ரபுல் பட்டேல் தெரிவித்த பிறகு நமக்கும் எழுகிறது.
கொல்லப்பட்ட மத்திய சிறப்பு காவல்படையின் 62வது அணியினர், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களை எச்சரிக்கையின்றி செயல்படுத்தினார்கள் என்று அந்த குற்றச்சாட்டுக் கூறுகிறது. காடுகள் வழியாக ஒரு அரைவட்ட வடிவில் முன்னேறி தேடுதல் வேட்டையை நடத்துமாறு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு துணை தளபதி சத்தியவான் யாதவ், சிந்தாள்நார் பகுதியிலிருந்து தனது படைவரிசையை, முக்ரம் என்ற கிராமத்திற்கு ஒற்றைவழிப் பாதை மூலம் பின்வாங்கி எடுத்துச் சென்றார் என்று குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சி ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அறிக்கை வர்ணிக்கிறது. இது மத்திய சிறப்பு காவல்படையில் பலவீனமான தலைமை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சிந்தள்நார் முகாமில், வீரர்களுக்கு எந்தவொரு தற்காப்பு வாய்ப்புகளும் இல்லை. தங்கும் இடமும் கூட, சௌகரியமாக இல்லை.
மாநில காவல்படையும், மத்திய படையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராம்மோகன் கூறுகிறார். மத்திய சிறப்பு காவல்படைக்கு உள்ளேயிருக்கும் குறைபாடுகளை ஆய்வு செய்யும் போது, மாவோயிஸ்ட்களை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் அளவிற்கு தன்மை உள்ளவர்களாக அவர்கள் இல்லை. ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதையொட்டி மத்திய சிறப்பு காவல்படை தங்களின் 3 பெரிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதில் டி.ஐ.ஜி.நலின் பிரபாத், படை தளபதி விமல் பிசிட், ஆய்வாளர் சஞ்சிவ் பாக்ரே ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மே 6ம் நாள் பேசச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தண்டேவாடா பிரச்சனை மீது விவாதம் எழுந்த போது, 1 ஐ.ஜி.யும், 2 டி.ஐ.ஜி.யும், 1 எஸ்.பி.யும் சிந்திக்காமல், திட்டமிடாமல் நடந்து கொண்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். கட்டுப்பாடுள்ள மத்திய ஆயுதப்படையின் உள்விவகாரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, சம்மந்தப்பட்ட அமைச்சர் இப்படி பகிரங்கமாக உயர் அதிகாரிகளைப் பற்றி குற்றம்சாட்டி பொது இடத்தில் பேசலாமா என்பது நமக்கு புரியவில்லை. ஆனால் ஆய்வறிக்கையை வெளியிட்ட ராம்மோகன் குழுவும், விசாரணை நீதிமன்றம் கொடுத்துள்ள கண்டுபிடித்தல்களும், மேற்கண்ட மூன்று அதிகாரிகளுக்கு மிகவும் சிறிய அளவுதான் சம்பவத்தில் பங்கு உண்டு என்று கூறியுள்ளன. அதேசமயம் படைவீரர்களும், களத்தில் இருந்த தளபதிகளும் மேலிருந்து கொடுக்கப்பட்ட திட்டங்களை அலட்சியப்படுத்தி விட்டு, மேலிடத்திற்கு தங்கள் நடமாட்டத்தைப் பற்றிய பொய்ச் செய்திகளை கொடுத்துள்ளனர் என்று ராம்மோகன் குழு கூறியுள்ளது. மத்திய சிறப்பு காவல்படையை முழுமையாக சார்ந்து தான், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு நடத்த வேண்டியுள்ளது. ஆகவே இது மிகவும் சிக்கலாகிவிட்ட ஒரு பிரச்சனை.
மாவோயிஸ்ட்கள் மத்திய சிறப்பு காவல்படை மீது நடத்திய தாக்குதல்கள் அனைத்துமே, 5கி.மி. தூரத்தில் இருக்கும் தங்களது முகாம்களில் இருந்து தான் நடத்தியுள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. அதாவது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குச் சென்ற, மத்திய அரசு படை தங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்ட்களின் குவிதலை அப்புறப்படுத்தாமல், அசட்டையாக இருந்துள்ளனர் என்பது இங்கு தெரிந்துள்ளது.
இப்போது இடமாற்றம் செய்யப்படும் அதிகாரியான பிஸ்ட், 62வது படையணியின் ஆல்பா கம்பெனியை, சுற்றுப்புறமுள்ள மாவோயிஸ்ட்களை விரட்டுவதற்கு கட்டளையிட்டிருக்கிறார். அந்த கட்டளையை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். இதை விசாரணை நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல் 4ம் நாள் மாலையில், 62வது படையணியிலிருந்து ஒரு ஒயர்லஸ் செய்தியை தங்களது தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக எழுதியுள்ளனர். உண்மையில் அவர்கள் அப்போது தங்கள் இடத்தை விட்டு நகரவில்லை. மறுநாளான ஏப்ரல் 5ம் நாள் அதிகாலை 2.30 மணிக்கு, சிந்தாள்நார் முகாமை விட்டு அவர்கள் புறப்பட்டு, புர்காபால் என்ற கிராமத்தில் சோதனை நடத்த சென்றனர். மீண்டும் அரசப்படையினர் முக்ராம் என்ற கிராமத்திற்கு திரும்பி வந்தனர். மதியத்திற்கு மேல் முக்ராம் கிராமத்தின் அருகே மைதானத்தில் அமர்ந்தனர். தண்ணீருக்கும், எரியூட்ட கட்டைகளுக்கும் ஆள் அனுப்பினர். பெரியதொரு பாத்திரத்தில் கிச்சடியை உணவுக்கு தயார் செய்தனர். படையணிக்கு கொடுக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இந்த அளவுக்கு தங்களது பாதுகாப்பில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஏப்ரல் 6ம் நாள் அதிகாலையில் முக்ரம் கிராமத்திற்கு திரும்பிய பின், தங்களது ஒயர்லஸ் செட் ஒன்று தொலைந்ததை படையணியினர் உணர்ந்துள்ளனர். இந்த நடமாட்டம் பற்றிய தெளிவான செய்திகளை, மாவோயிஸ்ட்கள் தங்களது ஒற்றர்கள் மூலம் அறிந்த பிற்பாடு, படையணி திரும்பி வரும் போது தங்களது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாகயிருக்கும் பகுதிகளில், படையணியினர் சோதனை நடத்த தயங்குகின்றனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ரெய்பூரில் உள்ள உளவுத்துறை நிலையத்திற்கு, மே 5ம் நாளே அந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக குவிந்துள்ளது பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அதை அவர்கள் தண்டேவாடாவிலுள்ள சத்தீஸ்கர் காவல்துறைக்கு, மாலையிலேயே அனுப்பியுள்ளனர். ஆனால் வட்டார காவல்துறை அப்படிப்பட்ட செய்தி தாக்குதலுக்கு முன்பு கிடைக்கவில்லை என்பதாக கூறுகிறார்கள். அரசப்படையினர் காடுகளில் போர்புரியும் தந்திரங்களிலும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. இதே நேரத்தில் உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தலைநகரில் அரசப்படையினர் பல்வேறு ஆயுதங்களையும், தோட்டாக்களையும் வட்டாரத்திலுள்ள கிரிமினல்களுக்கு விற்றதற்காக பிடிபட்டுள்ளனர்.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான கடுமையான போரை நடத்த வேண்டும் என்று கூறும் அதே நேரம், அவரது மனைவியான திட்டகமிஷன் உறுப்பினர் செயலாளர் சுதா பிள்ளை, வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, மாவோயிஸ்ட்களை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் எழுத்தாளர் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் எந்தவொரு காந்தியவாதியை விடவும், அதிக காந்தியவாதியாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அரசு செயல்படாத பகுதிகளில் தான் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள் என்றும் செய்திகள் அறிவிக்கின்றன. மேற்கண்ட அறிக்கைகளில் குற்றம்சாட்டப்படும் நிலையில் உள்ள அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கான பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி, மங்களூர் விமான விபத்திற்கு பொறுப்பேற்கிறேன் என்று அமைச்சர் ரபுல் பட்டேல் தெரிவித்த பிறகு நமக்கும் எழுகிறது.
Saturday, May 22, 2010
ராஜிவ்காந்தி நிலைப்பாடு தொடர்கிறதா?
19 ஆண்டுகளுக்கு முன்னால், மே 21ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில், முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தி மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார். அந்த நாள் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி உயிரோடு இருக்கும் போது கடைப்பிடித்து வந்த கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையால் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை கேட்க வேண்டிய நாள் இது.
ராஜிவ்காந்தியின் நிலைப்பாடு என்றால் என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. ராஜிவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருவதன் மூலம் திடீர் பணக்காரர்களை கல்வி வள்ளல்களாக மாற்றக்கூடிய சுயநிதி கல்விச் சாலைகளையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பது உண்மை தான். அதன் விளைவாக கல்வியின் தரம் குறைந்து, காசுக்காக கல்வியை விற்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அதுவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை பாதித்துள்ளது. அதன் விளைவாக இப்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பற்றி, மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவரது நிலைப்பாட்டின் தொடர்ச்சிதான்.
ராஜிவ்காந்தியின் தாயார் இந்திராகாந்தி, இந்திய தலைமை அமைச்சராக கடமையாற்றும் காலத்திலேயே, சீக்கிய பயங்கரவாதிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் சேவாதள உறுப்பினர்கள், டெல்லியில் சீக்கிய வீடுகளில் புகுந்து மூவாயிரம் இளைஞர்களை படுகொலை செய்தனர். ஆத்திரத்தில் ராஜிவ்காந்தி அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி பேசினார். அத்தகைய அரசமனப்பான்மை இன்றைக்கும் காங்கிரஸ் தலைமையில் தொடர்கிறது. அதனால் அவரது நிலைப்பாடு தொடர்கிறது என்று சிலர் கூறிக்கொள்ளலாம். அரச வம்சமும், வாரிசு மனப்பான்மையும், பண்ணையாதிக்கச் சிந்தனையும், பழிவாங்கும் மனப்போக்கும், வன்முறையை நியாயப்படுத்தும் தன்மையும் மட்டுமே அவரது நிலைப்பாடுகள் என யாராவது எண்ணினார்கள் என்றால், அவர்கள் அவரது நிலைப்பாடு முறையாக தொடரத்தானே செய்கிறது என்று வாதிடலாம்.
ஆனால் இந்தியா என்ற மாபெரும் தீபகற்ப நாட்டில், 100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் போது, அவர்களது எதிர்காலத்திற்காகவும், இந்தியாவின் நிலையான தன்மைக்காகவும், ராஜிவ்காந்தி அளித்த பங்களிப்பு தொடர்கிறதா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. அதிலும் கூட இலங்கைத் தீவில் சமாதானம் ஏற்படுத்த என்ற பெயரில் ராஜிவ்காந்தி, இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தது தமிழர்களுக்கு எதிரானது தானே என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி தமிழர்களுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாட்டை, மேலும் வலுப்படுத்தி ஈழத்தமிழர்களை இன அழிப்புச் செய்த, இனவாதப் போரை நடத்திய மகிந்தா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது அவரது நிலைப்பாட்டை மேலும் தொடர்வது தானே என்று சில காங்கிரசார் வாதம் செய்யலாம்.
இந்தியா இலங்கை என்ற அளவில் தனது தலையீட்டை செய்து வந்த ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை விட, இன்றைய காங்கிரஸ் தலைமை இலங்கை ஆட்சியாளர்களின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக துணை நிற்பதும், அவர்களை உலக அரங்கில் நியாயப்படுத்த அனைத்து பணிகளையும் செய்வதும், ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவில்லையா என்றும் அவர்கள் வினவலாம். ஆனால் நமது கேள்வி இந்திய மக்களுக்கு, இந்திய நாட்டிற்கு ராஜிவ்காந்தி அளித்த சாதகமான பங்களிப்பு இப்போது என்ன ஆயிற்று என்பது தான்.
ராஜிவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டு வரும் காலத்தில், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. பொருளாதார கொள்கைகளில் பண்ணையார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அதிகாரவர்க்க மூலதனத்திற்கும் வலுவேற்றிய பணியைத் தான் இந்திராகாந்தி செய்து வந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. ஜனநாயக உரிமைகளை மறுத்து, அவசர நிலை போன்ற பிரகடனங்களை செய்து, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளையும் நசுக்கி வந்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் அப்போதும் எழுந்தன. ஆனாலும் இந்திராகாந்தி சுயசார்பு பற்றி அதிகமாக பரப்புரை செய்தார். அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுப்பதற்கு தயங்கினார்.
தன் தாயைப் போலவே இந்திய மக்கள் மத்தியில் பெருமளவில் செல்வாக்கை ராஜிவ்காந்தி பெற்றிருந்தார். அதன் காரணமாக அவர் தலைமையில் இருந்த போது, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை தேர்தலில் எட்ட முடிந்தது. அதன் மூலம் இந்திய அரசு நினைத்தப்படி, தங்களது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்க முடிந்தது. அதாவது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை சார்ந்து மட்டுமே சிந்திக்கும் நிலையில் அப்போது அரசாங்கம் இல்லை. எப்போதெல்லாம் ஒரு நாட்டின் தலைமை ஆட்சியாளர்கள், பெருத்த செல்வாக்கில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் அவர்களால் உலக அரங்கில் சில முக்கிய விஷயங்களிலாவது, சுயமாக முடிவெடுக்கும் நிலைப்பாட்டை தக்கவைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு இன்று இருக்கிறதா? இந்தக் கேள்வியை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசை ஆள்வதற்காக காங்கிரஸ் சார்பாக பி.வி.நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்போது அவரது ஆட்சி சிறுபான்மை அரசு என்ற நிலையில் தான் நிற்க வேண்டி இருந்தது. 1991ம் ஆண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக நரசிம்மராவ் இருக்கும்போது தான், புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில், அமெரிக்க வழிகாட்டலில் இந்திய கொள்கைகள் வகுக்கப்பட்டன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் வந்திறங்கின. உலகமயமாக்கலின் தொடக்கம் இந்தியாவிற்குள் வரவேற்கப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை இந்தியாவின் முக்கிய பொருளாதார கொள்கைகளாக மாற்றப்பட்டன. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்தில் இருந்த பொதுத்துறை மெல்ல, மெல்ல வலுவிழக்கச் செய்யப்பட்டது. இத்தனையும் ராஜிவ் மரணத்திற்குப் பிறகு, நரசிம்மராவின் தலைமையிலான சிறுபான்மை காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதனால் அதிகமாக பயனடைந்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தான். ராஜிவ் மரணம் இவ்வாறாக அமெரிக்க உள் நுழைதலுக்கு பயன்பட்டது.
இன்று மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி அன்னிய மூலதனம் பெருமளவில் உள் நுழைந்துள்ளது. மன்மோகன், ப.சிதம்பரம், மான்டெக்சிங் அலுவாலியா ஆகியோர் பகிரங்கமாகவே அமெரிக்க பொருளாதார கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்காவுடன் ராணுவ கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் இந்திய கடலை கண்காணிக்கும் பங்காளியாக, இந்திய அரசு மாறுகிறது. இவையெல்லாம் ராஜிவ் காந்தி காலத்திய நிலைப்பாட்டின் தொடர்ச்சியா?
குடும்ப வாரிசும், கட்சி வாரிசும் நிலைப்பாடுகளை தீர்மானிப்பதில்லை. நாட்டிற்கு வகுக்கப்படும் கொள்கைகள் தான், நிலைப்பாடுகளை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பார்ப்போமானால், ராஜிவ்காந்தியின் மரணத்தால் இந்தியா இழந்திருக்கிறது; அமெரிக்கா பலனடைந்திருக்கிறது. இத்தகைய கணக்கீட்டை இந்திய மக்கள், இந்த நாளில் மதிப்பீடு செய்து பார்க்க வாய்ப்பிருக்கிறதா?
ராஜிவ்காந்தியின் நிலைப்பாடு என்றால் என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. ராஜிவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருவதன் மூலம் திடீர் பணக்காரர்களை கல்வி வள்ளல்களாக மாற்றக்கூடிய சுயநிதி கல்விச் சாலைகளையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பது உண்மை தான். அதன் விளைவாக கல்வியின் தரம் குறைந்து, காசுக்காக கல்வியை விற்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அதுவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை பாதித்துள்ளது. அதன் விளைவாக இப்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பற்றி, மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவரது நிலைப்பாட்டின் தொடர்ச்சிதான்.
ராஜிவ்காந்தியின் தாயார் இந்திராகாந்தி, இந்திய தலைமை அமைச்சராக கடமையாற்றும் காலத்திலேயே, சீக்கிய பயங்கரவாதிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் சேவாதள உறுப்பினர்கள், டெல்லியில் சீக்கிய வீடுகளில் புகுந்து மூவாயிரம் இளைஞர்களை படுகொலை செய்தனர். ஆத்திரத்தில் ராஜிவ்காந்தி அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி பேசினார். அத்தகைய அரசமனப்பான்மை இன்றைக்கும் காங்கிரஸ் தலைமையில் தொடர்கிறது. அதனால் அவரது நிலைப்பாடு தொடர்கிறது என்று சிலர் கூறிக்கொள்ளலாம். அரச வம்சமும், வாரிசு மனப்பான்மையும், பண்ணையாதிக்கச் சிந்தனையும், பழிவாங்கும் மனப்போக்கும், வன்முறையை நியாயப்படுத்தும் தன்மையும் மட்டுமே அவரது நிலைப்பாடுகள் என யாராவது எண்ணினார்கள் என்றால், அவர்கள் அவரது நிலைப்பாடு முறையாக தொடரத்தானே செய்கிறது என்று வாதிடலாம்.
ஆனால் இந்தியா என்ற மாபெரும் தீபகற்ப நாட்டில், 100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் போது, அவர்களது எதிர்காலத்திற்காகவும், இந்தியாவின் நிலையான தன்மைக்காகவும், ராஜிவ்காந்தி அளித்த பங்களிப்பு தொடர்கிறதா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. அதிலும் கூட இலங்கைத் தீவில் சமாதானம் ஏற்படுத்த என்ற பெயரில் ராஜிவ்காந்தி, இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தது தமிழர்களுக்கு எதிரானது தானே என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி தமிழர்களுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாட்டை, மேலும் வலுப்படுத்தி ஈழத்தமிழர்களை இன அழிப்புச் செய்த, இனவாதப் போரை நடத்திய மகிந்தா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது அவரது நிலைப்பாட்டை மேலும் தொடர்வது தானே என்று சில காங்கிரசார் வாதம் செய்யலாம்.
இந்தியா இலங்கை என்ற அளவில் தனது தலையீட்டை செய்து வந்த ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை விட, இன்றைய காங்கிரஸ் தலைமை இலங்கை ஆட்சியாளர்களின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக துணை நிற்பதும், அவர்களை உலக அரங்கில் நியாயப்படுத்த அனைத்து பணிகளையும் செய்வதும், ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவில்லையா என்றும் அவர்கள் வினவலாம். ஆனால் நமது கேள்வி இந்திய மக்களுக்கு, இந்திய நாட்டிற்கு ராஜிவ்காந்தி அளித்த சாதகமான பங்களிப்பு இப்போது என்ன ஆயிற்று என்பது தான்.
ராஜிவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டு வரும் காலத்தில், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. பொருளாதார கொள்கைகளில் பண்ணையார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அதிகாரவர்க்க மூலதனத்திற்கும் வலுவேற்றிய பணியைத் தான் இந்திராகாந்தி செய்து வந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. ஜனநாயக உரிமைகளை மறுத்து, அவசர நிலை போன்ற பிரகடனங்களை செய்து, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளையும் நசுக்கி வந்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் அப்போதும் எழுந்தன. ஆனாலும் இந்திராகாந்தி சுயசார்பு பற்றி அதிகமாக பரப்புரை செய்தார். அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுப்பதற்கு தயங்கினார்.
தன் தாயைப் போலவே இந்திய மக்கள் மத்தியில் பெருமளவில் செல்வாக்கை ராஜிவ்காந்தி பெற்றிருந்தார். அதன் காரணமாக அவர் தலைமையில் இருந்த போது, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை தேர்தலில் எட்ட முடிந்தது. அதன் மூலம் இந்திய அரசு நினைத்தப்படி, தங்களது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்க முடிந்தது. அதாவது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை சார்ந்து மட்டுமே சிந்திக்கும் நிலையில் அப்போது அரசாங்கம் இல்லை. எப்போதெல்லாம் ஒரு நாட்டின் தலைமை ஆட்சியாளர்கள், பெருத்த செல்வாக்கில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் அவர்களால் உலக அரங்கில் சில முக்கிய விஷயங்களிலாவது, சுயமாக முடிவெடுக்கும் நிலைப்பாட்டை தக்கவைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு இன்று இருக்கிறதா? இந்தக் கேள்வியை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசை ஆள்வதற்காக காங்கிரஸ் சார்பாக பி.வி.நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்போது அவரது ஆட்சி சிறுபான்மை அரசு என்ற நிலையில் தான் நிற்க வேண்டி இருந்தது. 1991ம் ஆண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக நரசிம்மராவ் இருக்கும்போது தான், புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில், அமெரிக்க வழிகாட்டலில் இந்திய கொள்கைகள் வகுக்கப்பட்டன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் வந்திறங்கின. உலகமயமாக்கலின் தொடக்கம் இந்தியாவிற்குள் வரவேற்கப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை இந்தியாவின் முக்கிய பொருளாதார கொள்கைகளாக மாற்றப்பட்டன. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்தில் இருந்த பொதுத்துறை மெல்ல, மெல்ல வலுவிழக்கச் செய்யப்பட்டது. இத்தனையும் ராஜிவ் மரணத்திற்குப் பிறகு, நரசிம்மராவின் தலைமையிலான சிறுபான்மை காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதனால் அதிகமாக பயனடைந்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தான். ராஜிவ் மரணம் இவ்வாறாக அமெரிக்க உள் நுழைதலுக்கு பயன்பட்டது.
இன்று மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி அன்னிய மூலதனம் பெருமளவில் உள் நுழைந்துள்ளது. மன்மோகன், ப.சிதம்பரம், மான்டெக்சிங் அலுவாலியா ஆகியோர் பகிரங்கமாகவே அமெரிக்க பொருளாதார கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்காவுடன் ராணுவ கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் இந்திய கடலை கண்காணிக்கும் பங்காளியாக, இந்திய அரசு மாறுகிறது. இவையெல்லாம் ராஜிவ் காந்தி காலத்திய நிலைப்பாட்டின் தொடர்ச்சியா?
குடும்ப வாரிசும், கட்சி வாரிசும் நிலைப்பாடுகளை தீர்மானிப்பதில்லை. நாட்டிற்கு வகுக்கப்படும் கொள்கைகள் தான், நிலைப்பாடுகளை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பார்ப்போமானால், ராஜிவ்காந்தியின் மரணத்தால் இந்தியா இழந்திருக்கிறது; அமெரிக்கா பலனடைந்திருக்கிறது. இத்தகைய கணக்கீட்டை இந்திய மக்கள், இந்த நாளில் மதிப்பீடு செய்து பார்க்க வாய்ப்பிருக்கிறதா?
Monday, May 17, 2010
மே17, வன்னிப்படுகொலையின் ஓராண்டு நினைவு
இன்று 2010ம் ஆண்டின் மே17. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நாளில் மௌன அஞ்சலி செலுத்தும்படி தமிழ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் இந்த நாளை வலி சுமக்கும் நாளாக, கடைபிடிக்கிறார்கள். தமிழின அழிப்புப் போர் பற்றிய அனுபவங்களை தொகுக்கிறார்கள். வீரச்சாவை அடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர்கள் நடத்தி வந்த விடுதலைப் போர், ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்தியது. அதே சமயம் 4வது வன்னிப் போர் அவருடைய இக்கட்டான நிலைமையை சந்திக்கத் தொடங்கிய 2008ம் ஆண்டு இறுதியிலிருந்து, ஒரு இறுக்கமான மனப்போக்கை உலகத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி, 7 நாட்டு அரசுகளின் உதவியுடன் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனவாதப் போர், உலகத்தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஊசி கொண்டு தைத்தது. அந்த இனவாதப் போர் ஒரு இன அழிப்புப் போராக திசைத் திரும்புவதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில், உலகத்தமிழர்கள் கூக்குரலிட்டனர். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் மூன்றரை லட்ச மக்களுடன், தமிழீழ போராளிகள் ஓரங்கட்டப்பட்ட போது, உலகத் தமிழர்கள் புலம்பித் தவித்தனர். 2009ம் ஆண்டின் மே 17ல் ஒரே நாளில் 30,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட போது, உலகத் தமிழர்கள் வாய் விட்டு அழுதனர். அந்த நாள்தான் இந்த நாள். ஓராண்டு நிறைவுற்று விட்டது. ஆனால் அன்று சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த 3 லட்சத்திற்கு மேலான தமிழர்கள் நிலை இன்று வரை, கூண்டில் அடைப்பட்ட நிலைமையிலேயே உள்ளது.
வன்னிப் போரில் வென்றதாக சிங்கள பேரினவாதம் கொக்கரித்தது. ஆனால் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் கிராமங்களில் சிக்கிய அப்பாவி தமிழ்மக்கள் 3 லட்சம் பேருக்கு மேல், ராணுவத்தின் அதிகாரமுள்ள பகுதிக்கு வரும்போது, அச்சத்துடனேயே சிங்கள ராணுவம் நடந்து கொண்டது. அப்பாவி தமிழர்கள் மத்தியிலிருந்து, புலிப்படையின் தற்கொலைப் படையினர் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து தமிழ் மக்களையும் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக தங்கள் அதிகாரப் பகுதிக்கு வருமாறு கட்டளையிட்டது. தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தந்தையும், தாயும், மகனும், மகளும், குழந்தைகளும் நிர்வாணமாக அந்த நெடியத் தூரத்தை நடந்து வந்து கடந்தனர். இத்தகைய ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு உலகப் போர் சூழலிலும் கூட, நடந்ததில்லை. போர் விதிகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள எந்த ஒரு விதிகளிலும், இத்தகைய அணுகுமுறை அங்கீகரிக்கப்படவில்லை. தமிழனுக்கு மட்டும் இந்த உலகில் தனியான விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. கடுமையாக உழைக்கக் கூடிய அப்பாவி களாக இருக்கின்ற தமிழினத்திற்கு மாத்திரம் தனியான அணுகுமுறை என்பது புரியப்படவேண்டும். அதற்கான வரலாற்று காரணம் அறியப்படவேண்டும்.
உலகுக்கு வெளிப்படையாக தெரிந்த இன மோதல் நாள் 1983ம் ஆண்டின் ஜூலை 23. அன்றைய நாளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, சிறைக்குள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, யுலைப் படுகொலை நாள் என்பதாக ஈழத்தமிழர்கள் பதிவு செய்தார்கள். இனியும் அமைதியான வழியில், சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த தமிழ் இளைஞர்கள் பேரினவாத அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.
30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் இந்த நாளில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, அரசாங்கங்கள் அறிவித்தன. இதுவரை இந்தப் போரில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, அரசாங்கக் கணக்குப்படி 80,000 பேர். தமிழர்களின் பட்டியலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் செயல் தந்திரங்களில் அல்லது ராணுவ முறைகளில் பயங்கரவாதம் இருப்பதாக, உலக வல்லரசுகள் குற்றம் சாட்டினர். அதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், இந்தியா உட்பட 32 நாட்டு அரசாங்கங்கள், புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்தனர். போர் முடிந்து விட்டது என அறிவித்த பிற்பாடும், விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிந்து விட்டனர் என்று கூறி பெரு மகிழ்ச்சியடைந்த இந்திய அரசு, சில நாட்கள் முன்பு புலிகள் மீதான தடையை இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
இந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்திற்குள், 3 முறை பேச்சு வார்த்தை காலம் என்று அறிவிக்கப்பட்டு, மேசைப் பேச்சும் நடந்தது. ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ஒரு பேச்சு வார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தியது. அது 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நீடித்தது.
இந்திய இலங்கை அரசுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதிகார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளாத புலிகள் மீது, இந்திய ராணுவம் மோதல் கொள்ளத் தொடங்கியது. அதனாலேயே முதல்கட்ட பேச்சு வார்த்தை, தொடக்க காலத்திலேயே மறைந்து விட்டது. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், புலிகள் பக்கத்திலிருந்து தன்னார்வமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அனைத்து நாட்டு மேற்பார்வையுடன் கூடிய ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002ம் ஆண்டு, அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் கையெழுத்தானது. 2005ம் ஆண்டு அத்தகைய சூழலிலும் விரிசல் ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் தொடங்கி, புலிகளுக்கு எதிராக ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்தது.
அதையொட்டி கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கிக் கொள்ள, சிங்கள ராணுவம் கிழக்கே வென்று விட்டதாக அறிவித்தது. 2007ம் ஆண்டு வடக்கு மாகாணங்கள் மீது ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. 2008ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு தொடர்ந்த 4வது வன்னிப்போர்தான், தமிழனை இந்த நிலைமைக்கு தள்ளியது.
இலங்கையில் நடக்கும் இன உரிமைப் போர், வீச்சாக வளர்ந்ததற்கும் பிறகு வீழ்ந்ததற்கும், வெளிச்சக்திகளின் காரணங் களும் ஆராயப்படவேண்டும். மே8ம் நாள் சென்னையில் ஒரு வார ஏட்டால் நடத்தப் பட்ட கருத்தரங்கில் பேசிய பிரமுகர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள். இந்திய அரசு 4ம் வன்னிப்போரில் தமிழர்கள் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டினார்கள். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தியாவின் தலையீடு என்பது, ஈழத்தமிழர்களின் உரிமைப் போருக்கு கேடு விளைவித்தது என்றும் கூறினார்கள். 80ம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்தே அத்தகைய தலையீடுகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்கள் தங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக, போரிட்டு வரும் போது, இந்திரா காந்தி அரசு இலங்கையில் வாழும் ஈழத் தமிழருக்கு எந்த விதத்தில் நியாயம் செய்ய தலையிட்டார் என்பதாக இப்போது அறிவு ஜீவிகள் விவாதிக்கிறார்கள்.
தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களின் உரிமைப் போரில் அக்கறை இல்லை. ஆனாலும் கூட அவர்களை பல்லாயிரக்கணக்கில் இந்தியாவிற்கு தருவித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவித்த இந்திய அரசின் தொலை தூர நோக்கம் என்ன என்று விவாதிக்கிறார்கள். இப்போது நேரடி தலையீட்டின் மூலம், ஈழப்போர் தோற்பத ற்கும், தமிழீன அழிப்பு நடப்பதற்கும் காரணமாகி விட்டதாக கருதுகிறார்கள்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட இளைஞர்கள், அடுத்த நாட்டின் அரவணைப்பை முழுமையாக சார்ந்து நின்ற வரலாறு இப்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதைத்தான் அன்றே கவிஞர் இன்குலாப் எழுதும் போது,
“நமது அவசரத்தில் அட்டைகளிடம் போய் ரத்ததானம் கேட்க வேண்டாம்.
கம்சனின் பிடியில் ஈழக்குழந்தை கதறுகின்றது உண்மைதான்.
அதற்காக பூதகியைப்போய் பாலூட்டச் சொல்லாதீர்கள்.” அதுதான் நினைவுக்கு வருகிறது.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர்கள் நடத்தி வந்த விடுதலைப் போர், ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்தியது. அதே சமயம் 4வது வன்னிப் போர் அவருடைய இக்கட்டான நிலைமையை சந்திக்கத் தொடங்கிய 2008ம் ஆண்டு இறுதியிலிருந்து, ஒரு இறுக்கமான மனப்போக்கை உலகத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி, 7 நாட்டு அரசுகளின் உதவியுடன் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனவாதப் போர், உலகத்தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஊசி கொண்டு தைத்தது. அந்த இனவாதப் போர் ஒரு இன அழிப்புப் போராக திசைத் திரும்புவதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில், உலகத்தமிழர்கள் கூக்குரலிட்டனர். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் மூன்றரை லட்ச மக்களுடன், தமிழீழ போராளிகள் ஓரங்கட்டப்பட்ட போது, உலகத் தமிழர்கள் புலம்பித் தவித்தனர். 2009ம் ஆண்டின் மே 17ல் ஒரே நாளில் 30,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட போது, உலகத் தமிழர்கள் வாய் விட்டு அழுதனர். அந்த நாள்தான் இந்த நாள். ஓராண்டு நிறைவுற்று விட்டது. ஆனால் அன்று சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த 3 லட்சத்திற்கு மேலான தமிழர்கள் நிலை இன்று வரை, கூண்டில் அடைப்பட்ட நிலைமையிலேயே உள்ளது.
வன்னிப் போரில் வென்றதாக சிங்கள பேரினவாதம் கொக்கரித்தது. ஆனால் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் கிராமங்களில் சிக்கிய அப்பாவி தமிழ்மக்கள் 3 லட்சம் பேருக்கு மேல், ராணுவத்தின் அதிகாரமுள்ள பகுதிக்கு வரும்போது, அச்சத்துடனேயே சிங்கள ராணுவம் நடந்து கொண்டது. அப்பாவி தமிழர்கள் மத்தியிலிருந்து, புலிப்படையின் தற்கொலைப் படையினர் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து தமிழ் மக்களையும் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக தங்கள் அதிகாரப் பகுதிக்கு வருமாறு கட்டளையிட்டது. தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தந்தையும், தாயும், மகனும், மகளும், குழந்தைகளும் நிர்வாணமாக அந்த நெடியத் தூரத்தை நடந்து வந்து கடந்தனர். இத்தகைய ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு உலகப் போர் சூழலிலும் கூட, நடந்ததில்லை. போர் விதிகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள எந்த ஒரு விதிகளிலும், இத்தகைய அணுகுமுறை அங்கீகரிக்கப்படவில்லை. தமிழனுக்கு மட்டும் இந்த உலகில் தனியான விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. கடுமையாக உழைக்கக் கூடிய அப்பாவி களாக இருக்கின்ற தமிழினத்திற்கு மாத்திரம் தனியான அணுகுமுறை என்பது புரியப்படவேண்டும். அதற்கான வரலாற்று காரணம் அறியப்படவேண்டும்.
உலகுக்கு வெளிப்படையாக தெரிந்த இன மோதல் நாள் 1983ம் ஆண்டின் ஜூலை 23. அன்றைய நாளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, சிறைக்குள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, யுலைப் படுகொலை நாள் என்பதாக ஈழத்தமிழர்கள் பதிவு செய்தார்கள். இனியும் அமைதியான வழியில், சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த தமிழ் இளைஞர்கள் பேரினவாத அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.
30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் இந்த நாளில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, அரசாங்கங்கள் அறிவித்தன. இதுவரை இந்தப் போரில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, அரசாங்கக் கணக்குப்படி 80,000 பேர். தமிழர்களின் பட்டியலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் செயல் தந்திரங்களில் அல்லது ராணுவ முறைகளில் பயங்கரவாதம் இருப்பதாக, உலக வல்லரசுகள் குற்றம் சாட்டினர். அதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், இந்தியா உட்பட 32 நாட்டு அரசாங்கங்கள், புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்தனர். போர் முடிந்து விட்டது என அறிவித்த பிற்பாடும், விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிந்து விட்டனர் என்று கூறி பெரு மகிழ்ச்சியடைந்த இந்திய அரசு, சில நாட்கள் முன்பு புலிகள் மீதான தடையை இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
இந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்திற்குள், 3 முறை பேச்சு வார்த்தை காலம் என்று அறிவிக்கப்பட்டு, மேசைப் பேச்சும் நடந்தது. ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ஒரு பேச்சு வார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தியது. அது 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நீடித்தது.
இந்திய இலங்கை அரசுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதிகார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளாத புலிகள் மீது, இந்திய ராணுவம் மோதல் கொள்ளத் தொடங்கியது. அதனாலேயே முதல்கட்ட பேச்சு வார்த்தை, தொடக்க காலத்திலேயே மறைந்து விட்டது. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், புலிகள் பக்கத்திலிருந்து தன்னார்வமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அனைத்து நாட்டு மேற்பார்வையுடன் கூடிய ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002ம் ஆண்டு, அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் கையெழுத்தானது. 2005ம் ஆண்டு அத்தகைய சூழலிலும் விரிசல் ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் தொடங்கி, புலிகளுக்கு எதிராக ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்தது.
அதையொட்டி கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கிக் கொள்ள, சிங்கள ராணுவம் கிழக்கே வென்று விட்டதாக அறிவித்தது. 2007ம் ஆண்டு வடக்கு மாகாணங்கள் மீது ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. 2008ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு தொடர்ந்த 4வது வன்னிப்போர்தான், தமிழனை இந்த நிலைமைக்கு தள்ளியது.
இலங்கையில் நடக்கும் இன உரிமைப் போர், வீச்சாக வளர்ந்ததற்கும் பிறகு வீழ்ந்ததற்கும், வெளிச்சக்திகளின் காரணங் களும் ஆராயப்படவேண்டும். மே8ம் நாள் சென்னையில் ஒரு வார ஏட்டால் நடத்தப் பட்ட கருத்தரங்கில் பேசிய பிரமுகர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள். இந்திய அரசு 4ம் வன்னிப்போரில் தமிழர்கள் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டினார்கள். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தியாவின் தலையீடு என்பது, ஈழத்தமிழர்களின் உரிமைப் போருக்கு கேடு விளைவித்தது என்றும் கூறினார்கள். 80ம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்தே அத்தகைய தலையீடுகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்கள் தங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக, போரிட்டு வரும் போது, இந்திரா காந்தி அரசு இலங்கையில் வாழும் ஈழத் தமிழருக்கு எந்த விதத்தில் நியாயம் செய்ய தலையிட்டார் என்பதாக இப்போது அறிவு ஜீவிகள் விவாதிக்கிறார்கள்.
தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களின் உரிமைப் போரில் அக்கறை இல்லை. ஆனாலும் கூட அவர்களை பல்லாயிரக்கணக்கில் இந்தியாவிற்கு தருவித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவித்த இந்திய அரசின் தொலை தூர நோக்கம் என்ன என்று விவாதிக்கிறார்கள். இப்போது நேரடி தலையீட்டின் மூலம், ஈழப்போர் தோற்பத ற்கும், தமிழீன அழிப்பு நடப்பதற்கும் காரணமாகி விட்டதாக கருதுகிறார்கள்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட இளைஞர்கள், அடுத்த நாட்டின் அரவணைப்பை முழுமையாக சார்ந்து நின்ற வரலாறு இப்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதைத்தான் அன்றே கவிஞர் இன்குலாப் எழுதும் போது,
“நமது அவசரத்தில் அட்டைகளிடம் போய் ரத்ததானம் கேட்க வேண்டாம்.
கம்சனின் பிடியில் ஈழக்குழந்தை கதறுகின்றது உண்மைதான்.
அதற்காக பூதகியைப்போய் பாலூட்டச் சொல்லாதீர்கள்.” அதுதான் நினைவுக்கு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
