தமிழ்நாட்டில் விவாசாயிகளின் தற்கொலைகள் பற்றிய புள்ளிவிவரம் பொங்கல் வாழ்த்து செய்தியில் சீ.பி.எம்.செயலாளர் ஜி.ராமகிரிஷ்ணனால் கொடுக்கப்பட்டது. அதில் 5000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை உள்ள புள்ளிவிவரம் அது. அதுவும் சீ.பி.எம். கட்சி எடுத்த புள்ளி விவரம் அல்ல அது. தேசிய குற்ற பதிவு காப்பகம் கொடுத்துள்ள புள்ளிவிவரம். அதை எடுத்துகூரியிருப்பதுதான் ஜி.ஆர். ஆனால் அதுவே நமது முதல்வருக்கு அடிவயிற்றை கலக்கிவிட்டது. எதிர்க்ல்கட்சி கூட்டணியில் இருப்பதால்தான் ஜி.ஆர். இப்படி எழுதுகிறார் என்பதாகவெல்லாம் அங்கலாய்த்து இருக்கிறார். முரசொலி நாளேட்டில் சனவரி-பதினெட்டாம் நாள் இதற்கு பதில் சொல்வதாக எண்ணிக்கொண்டு, மன்னிக்க முடியாத பொய் என்று பெரிய அளவில் கட்டம் போட்டு எழுதியிருக்கிறார். பெயர் போடாமல் எழுதப்பட்ட அந்த கட்டுரைக்கு கலைஞர்தான் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜி.ஆர் . மேற்கோள் காட்டுவதற்கு முன்பே தி.மு.க. தலைமைக்கு அந்த தேசிய குற்றபதிவு காப்பகம் கொடுத்த புள்ளிவிவரம் ஒரு சவாலாக மாறிவிட்டது. அதனால் தற்கொலை என்றால் காவல்துறையின் பதிவேட்டில் பதிவாகி இருத்தல் வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தன்னால் நியமனம் செய்யப்ப்பட்ட காவல்துறையின் தலைவரான டி.ஜி.பி. லத்திகா சரணை கொண்டு ஒரு மறுப்பு அறிககையை கொடுக்க வைத்துள்ளார். அய்யோபாவம் லத்திகா சரணும் அரசியல் தெரியாத நிலையில் அந்த அரசியல் அறிககையை வெளியிட்டுள்ளார். அதை நாம் உட்பட யாருமே கவனிக்காமல் இருந்துவிட்டோம். ஆனால் அதை எடுத்து இப்போது ஜி.ஆருக்கு பதில் என்ற பெயரில் முரசொலியில் போட்டு அந்த லத்திகா சரண் அறிககையை எல்லோர் கவனத்துக்கும் கலைஞர் கொண்டுவந்துவிட்டார்.அதில் தேசிய குற்றபதிவு காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தற்கொலைகளை பாற்றி ஆய்வு செய்துள்ளார். அதாவது ஐந்து ஆண்டுகளில் 5000 விவசாயிகள் தற்கொலை தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று அதில் லத்திகாச்சரனும் கூறவில்லை; முதல்வரும் மறுக்கவில்லை. ஆனால் அது எதற்க்காக நடந்தது எனபதில்தான் இவர்ககளுக்கு வேறுபாடு இருப்பதாக காட்டிக்கொண்டுள்ளார்கள்.
"வறுமை காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொல்கொண்டார்கள் என்று சொல்லியிருப்பது உண்மையின் அடிப்படையிலோ, புள்ளி விவரங்களின் அடிப்படையிலோ தயாரிக்கப்பட்ட விவரம் அல்ல. தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பற்றி விசாரிக்காமலேயே தரப்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும், வேளாண்மை நடவடிக்கையின் போது, ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும் கூறுவது முற்றிலும் தவறானது.திண்டுக்கல் மாவட்டத்தில் இடியாபட்டி என்று கிராமம் இல்லை, இடியாகொட்டை என்றுதான் கிராமம் உள்ளது." என்ற ஒரு அரசியல் கலப்புள்ள அறிககையை லத்திகா சரண் மூலம் தாங்கள் வெளியிட்டதை இப்போது முதல்வர் தம்பட்டம் அடித்துள்ளார். இது தனக்குத்தானே குத்திக்கொல்வதாக இல்லையா?
Tuesday, January 18, 2011
டி.ஆர்.பாலு பெயரைக்கேட்டாலே டில்லி நடுங்குகிறது
புதிய ஆண்டு தொடங்கியதும், பல ஊழல்களில் மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அரசியல் மரியாதை சர்ச்சைக்குள்ளானதும் சேர்ந்து தேவையை ஒட்டியும் அமைச்சரவையில் மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன. தலைமை அமைச்சர் பொறுப்பிலும், உள்துறையிலும், நிதிதுறையிலும், வெளிவிவகாரதுறையிலும், பாதுகாப்புதுறையிலும், எந்த மாற்றமும் கிடையாது என்றனர். ஆ.ராஜா, இருந்த அமைச்சர் பொறுப்பில் இன்று கபில்சிபல் அமர்ந்திருப்பதால் அந்த இலாக்கா பாற்றி விவாதம் எழவில்லை. மாறாக தி.மு.க.விற்கு இருந்த ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பை அதே கட்சியில் யாருக்கு கொடுப்பது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சசி தரூர் இருந்த வெளிவிவகார துறை இணை அமைச்சர் பொறுப்பில் யாரை அமரவைப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் தலைவலி. மகாராஷ்ட்ராவின் முதல்வர் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய வீடுகள் ஊழலில் சிக்கி வெளியே போனபிறகு, அந்த இடத்தில் பிரதமரின் அலுவலக பொறுப்பில் இருந்த பிருதுவிராஜ் சவான் மகாராஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் அமரவைக்கப்பட்ட
பிறகு, அந்த இடம் காலியானது. அதற்கும் காங்கிரசில் ஆள் பார்க்கும் படலம் ஆண்டின் புதிய படலமானது. கபில் சிபல் கையில் முக்கிய இரண்டு இலாக்காகலான ஐ.டி.யும், மனிதவள மேம்பாடுமா என்றும் கட்சிக்குள் கேட்கப்பட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் குறிப்பாக சோனியா மற்றும் ராகுலின் நேரடி கவனத்தில் இருப்பதால், அந்த மாநிலத்தை சேர்ந்த வாக்கு வங்கிகளை குறிவைக்க ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்து பிரமுகர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை கொடுத்து அவர்கள் மூலம் வாக்கு வங்கிகளை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. அதற்காக தங்கள் கட்சி தலைமையின் விசுவாசிகளான மத்திய துணை அமைச்சர்கள் இருவருக்கு அதாவது உத்தரபிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அப்படி பொறுப்புகளை கொடுக்கவும் திட்டமிட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் பெயரும், ஸ்ரீ மகேஷ் ஜெய்ஸ்வால் பெயரும் அடிபட்டது. அதேபோல ஆந்திர மாநிலத்தில் ஜகன் மோகனின் விலகலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அதை சரிசெய்ய, தெலுங்கானாவிற்கு ஒரு அமைச்சர், கடலோர ஆந்திராவிற்கு இன்னொரு அமைச்சர் என்று பிரித்து கொடுப்பது பற்றியும் விவாதிதித்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தி.மு.க. மத்திய அமைச்சரை தேர்வு செய்ய கட்சிக்குள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் ஏ.கே.எஸ்.விஜயன் என்ற பெயர்கள் அடிபட்டாலும், பிரதமர் டி.ஆர்.பாலுவை விரும்பவில்லை என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது. ஏற்கனவே டி.ஆர்.பாலு இருந்த கப்பல் துறை மூலம் அவர் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலில் போட்டேன் என்று கூறி முந்நூறு கோடியை முழுங்கியதை பிரதமர் அலுவலகம் மறக்கவில்லை. அதற்குமுன்பு சுற்று சூழல் அமைச்சரவை என்ற பெயரில் அடித்த காசுகளையும் கனகு பார்க்கிறார்கள். ஆகவே புதிய ஆள்களை டில்லிக்கு காட்டவேண்டிய நிலைமையில் கலைஞர் இருக்கிறார். அதனால்தான் சாதி பிரநித்தித்த்துவம் என்ற பெயரில் ஆ.ராஜாவிற்கு பதில் ஏ.எஸ்.கே. விஜயன் சரியாக இருக்கும் என்ற பார்வை கருணாநிதி கருதுவதாக தெரிகிறது.
பிறகு, அந்த இடம் காலியானது. அதற்கும் காங்கிரசில் ஆள் பார்க்கும் படலம் ஆண்டின் புதிய படலமானது. கபில் சிபல் கையில் முக்கிய இரண்டு இலாக்காகலான ஐ.டி.யும், மனிதவள மேம்பாடுமா என்றும் கட்சிக்குள் கேட்கப்பட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் குறிப்பாக சோனியா மற்றும் ராகுலின் நேரடி கவனத்தில் இருப்பதால், அந்த மாநிலத்தை சேர்ந்த வாக்கு வங்கிகளை குறிவைக்க ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்து பிரமுகர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை கொடுத்து அவர்கள் மூலம் வாக்கு வங்கிகளை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. அதற்காக தங்கள் கட்சி தலைமையின் விசுவாசிகளான மத்திய துணை அமைச்சர்கள் இருவருக்கு அதாவது உத்தரபிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அப்படி பொறுப்புகளை கொடுக்கவும் திட்டமிட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் பெயரும், ஸ்ரீ மகேஷ் ஜெய்ஸ்வால் பெயரும் அடிபட்டது. அதேபோல ஆந்திர மாநிலத்தில் ஜகன் மோகனின் விலகலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அதை சரிசெய்ய, தெலுங்கானாவிற்கு ஒரு அமைச்சர், கடலோர ஆந்திராவிற்கு இன்னொரு அமைச்சர் என்று பிரித்து கொடுப்பது பற்றியும் விவாதிதித்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தி.மு.க. மத்திய அமைச்சரை தேர்வு செய்ய கட்சிக்குள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் ஏ.கே.எஸ்.விஜயன் என்ற பெயர்கள் அடிபட்டாலும், பிரதமர் டி.ஆர்.பாலுவை விரும்பவில்லை என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது. ஏற்கனவே டி.ஆர்.பாலு இருந்த கப்பல் துறை மூலம் அவர் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலில் போட்டேன் என்று கூறி முந்நூறு கோடியை முழுங்கியதை பிரதமர் அலுவலகம் மறக்கவில்லை. அதற்குமுன்பு சுற்று சூழல் அமைச்சரவை என்ற பெயரில் அடித்த காசுகளையும் கனகு பார்க்கிறார்கள். ஆகவே புதிய ஆள்களை டில்லிக்கு காட்டவேண்டிய நிலைமையில் கலைஞர் இருக்கிறார். அதனால்தான் சாதி பிரநித்தித்த்துவம் என்ற பெயரில் ஆ.ராஜாவிற்கு பதில் ஏ.எஸ்.கே. விஜயன் சரியாக இருக்கும் என்ற பார்வை கருணாநிதி கருதுவதாக தெரிகிறது.
தமிழீழ அரசுக்கு அங்கீகாரம். /./ டில்லி அதிர்ச்சி
தென் சூடான் விடுதலை பெறுகிறது. அதன் விடுதலை நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தனிநாட்டிற்கான வாக்கதேப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம்[ எஸ்.பி.எல்.எம்.] அழைத்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அதுபற்றி கொடுத்த அறிக்கையில்," இது அரசாங்கத்திற்கான அங்கீகாரம் மட்டுமின்றி ஈழ விடுதலை போராட்டத்திற்கான அங்கீகாரமும் ஆகும் என்றார். விடுதலை பெற்ற தென் சூடான் மக்களின் மகிழ்ச்ச்சியை ஈழத்தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்வதுடன் அதில் இணைந்துகொள்கிரார்கள் என்றார். இந்த உறவு புதிதல்ல. மே 2009 இல் பிலடல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வில் சூடான் மக்கள் விடுதலை இயக்க பிரதிநிதி கலந்துகொண்டார். தென் சூடானின் விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், விடுதலை போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும், ஈழத்தமிழ் மக்களுடனான தங்கள் திட வோற்றுமையுனர்வை குறிப்பிட்டு உரையாற்றினார்.வடக்கு சூடானிலிருந்து, தெற்கு சூடான் மக்கள் விடுதலை பெற போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திவந்தது. சுதந்திர தென்சூடான் அரசை அமைக்கவுள்ளது.
ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென் சூடான் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த துன்பங்கள் தொலைந்துபோகும். அவர்களது போராட்டத்தின்போது சுமார் இருபது லட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாக படுகொலை செய்யப்பட்டும், இறந்துபோனார்கள். தென் சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. 1977 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, வட்டுக்கோட்டை தீர்மானத்திர்க்கமைய தமிழீழ தனியரசினை அமைப்போம் என்று வாக்கு கேட்ட கட்சிகள் ஈழத்தில் அறுதிபெரும்பான்மை வாக்குகளை பெற்றன. ஆயுதப்போராட்டம் ஸ்ரீ லங்காவில் ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஈழத்தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள்.புலம் பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009 இல் நடந்த இறுதிப்போரின்போது நடைபெற்ற தமிழின படுகொலை தமிழருக்கென தனிநாடு உருவாவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உர்திசெய்யும் ஒரே தீர்வாகும் என்பதை தெளிவாக்கி நியாயப்படுத்தியுள்ளது. அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும், இன்றைய ஸ்ரீ லங்காவின் ஆட்சியாளருக்கும் சீனாவே சர்வதேச பாதுகாவலார்க்க செயல்பட்டுவருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஸ்ரீ லங்கா அரச தலைவர் ராஜபக்சே இனப்படுகொலை குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார். தென் சூடானிய மக்களுக்கும், அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென் சூடான் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த துன்பங்கள் தொலைந்துபோகும். அவர்களது போராட்டத்தின்போது சுமார் இருபது லட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாக படுகொலை செய்யப்பட்டும், இறந்துபோனார்கள். தென் சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. 1977 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, வட்டுக்கோட்டை தீர்மானத்திர்க்கமைய தமிழீழ தனியரசினை அமைப்போம் என்று வாக்கு கேட்ட கட்சிகள் ஈழத்தில் அறுதிபெரும்பான்மை வாக்குகளை பெற்றன. ஆயுதப்போராட்டம் ஸ்ரீ லங்காவில் ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஈழத்தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள்.புலம் பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009 இல் நடந்த இறுதிப்போரின்போது நடைபெற்ற தமிழின படுகொலை தமிழருக்கென தனிநாடு உருவாவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உர்திசெய்யும் ஒரே தீர்வாகும் என்பதை தெளிவாக்கி நியாயப்படுத்தியுள்ளது. அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும், இன்றைய ஸ்ரீ லங்காவின் ஆட்சியாளருக்கும் சீனாவே சர்வதேச பாதுகாவலார்க்க செயல்பட்டுவருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஸ்ரீ லங்கா அரச தலைவர் ராஜபக்சே இனப்படுகொலை குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார். தென் சூடானிய மக்களுக்கும், அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
Saturday, January 15, 2011
தமிழன் என்றால் உழவன் என்றல்லோ பொருள்
தை மாதம் முதல் நாள். பொங்கல் திரு நாள். அறுவடை திருநாள். உழவுத்தமிழன் தான் குடும்பத்துடன் வயலில் வியர்வை சிந்தி, உழைத்து சேர்த்த நெல்மணிகளை அறுத்து குவித்து மகிழும் நாள். அதையே பொங்கலாக பொங்கி, குடும்பம், குடும்பமாக கரும்பு கட்டி கொண்டாடும் திருநாள். அதனால் அதுவே ஆண்டாண்டு காலமாக வழங்கப்படும் தமிழர் திருநாள். உழவுத்தொழில் தமிழனின் பழம் பெரும் தொழில். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, நாத்து நட்டு, வரப்பு கட்டி, களை பிடுங்கி, உரமிட்டு, அறுவடைக்கு காத்திருக்கும் உழவுத்தமிழனை தமிழகம் மரபு வழியில் சந்தித்து வந்தது. அதையே பசுமை புரட்சியின் கதாநாயகர்களும், விவசாயத்தை அறிந்திராத அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டின் இயற்கை விவசாயத்தை திட்டமிட்டு அழிக்க தலைப்பட்டனர்.வீரிய விதைகளை இறக்கிவிட்டு, மரபு விதைகளை விரைந்து அழிப்பதில் முன்னேறினர். அமெரிக்கா தாயாரிப்பான வீரிய விதைகளால் உருவாகும் பூச்சிகளை அழிக்க, பூச்சி மருந்துகளை அங்கிருந்தே இறக்குமதி செய்தனர். அதுபோன்ற பூச்சிமருந்து தயாரிப்புதான், போபாலில் நச்சு வாயுக்களை கக்கி மனிதர்களை அழித்தது. அதுவும் அமெரிக்கா பன்னாட்டு மூலதன நிறுவனம்தான். தவிர செயற்கை ரசாயன உரங்களை கொண்டுவந்து கொட்ட தொடங்கினர். இவையெல்லாமே பன்னாட்டு நிறுவங்களுக்கு வங்கத்தை கொடுத்தது.
நிலமற்ற உழவனோ, சிறு நில உழவனோ, நடுத்தர விவசாயியான உழவனோ, நசுக்கப்படும் நிலை கண்டு, ஆள்வோர் கவலை கொள்ளவில்லை. நிலங்களும் இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகின்ற நிலைமை. இயற்கை விவசாயம் மட்டுமே, மரபு வழி விதிகளும், உரங்களும், மட்டுமே விவசாயத்தை காப்பாற்றும் என்ற நிலைமை அதவே இயக்கமாக ஆகின்ற ஒரு சூழல். இத்தகைய சூழ்நிலையில் இந்த பொங்கல் வருகிறது. நமதி உழவர்களின் உழைப்பால் விளைந்த விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்லும்போது, அமெரிக்காவின், ஐரோப்பாவின் மானியம் பெரும் விவசாயி உறவாக்கிய விலை பொருள்களை சந்தைஎன்கும் குவிக்க ஊக்குவிக்கும், ஒரு அரசு. அதற்காகவே உலக வர்த்தக அமைப்பு மூலம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு வெளிநாட்டார் பொருள்களை சந்தையில் இறக்குகிறது. இதுவே இந்திய விவசாயத்தை நசுக்க வெளிசக்திகள் செய்யும் சதியாக ஆகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த பொங்கலும் வருகிறது. உழவுத்தமிழன் கணக்குப்பார்க்கும் நாளாக இதை காணவேண்டும்.
பயிர் நிலங்கள் யார் கையில்? உழுபவன் கையில் இருக்கும் நிலங்கள் ஊருக்கே உணவை தரும். சோம்பேறிகள் கைகளில் இருக்கும் நிலங்கள் தரிசாகும். தரிசாக போடப்படும். பயிர் நிலங்கள் சோம்பேறிகள் கைகளில் குவிந்து கிடந்தால் உழைப்பவன் அதிலே கூலியாகிறான். உழவு தொழிலை ஈடுபாட்டுடன் செய்பவன் உழும் நிலத்தின் உரிமையாளனாக இருந்தால் மட்டுமே உழவுக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும். சிலர் கைகளில் குவிந்து கிடக்கும் பயிர் நிலங்களை, உழுபவன் கைகளில் பெரும்போதே, உழவுத்தமிழர் வாழ்வு பெறுவான். உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்பது உண்மையானால் உழவர் விடுதலை மாத்திரமே தமிழர் விடுதலையை சாத்தியமாக்கும் என்ற உண்மையை உணரவேண்டும்.
பொங்குக பொங்கல். பொங்குக உண்மை. பொங்குக விடுதலை உணர்வு.
நிலமற்ற உழவனோ, சிறு நில உழவனோ, நடுத்தர விவசாயியான உழவனோ, நசுக்கப்படும் நிலை கண்டு, ஆள்வோர் கவலை கொள்ளவில்லை. நிலங்களும் இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகின்ற நிலைமை. இயற்கை விவசாயம் மட்டுமே, மரபு வழி விதிகளும், உரங்களும், மட்டுமே விவசாயத்தை காப்பாற்றும் என்ற நிலைமை அதவே இயக்கமாக ஆகின்ற ஒரு சூழல். இத்தகைய சூழ்நிலையில் இந்த பொங்கல் வருகிறது. நமதி உழவர்களின் உழைப்பால் விளைந்த விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்லும்போது, அமெரிக்காவின், ஐரோப்பாவின் மானியம் பெரும் விவசாயி உறவாக்கிய விலை பொருள்களை சந்தைஎன்கும் குவிக்க ஊக்குவிக்கும், ஒரு அரசு. அதற்காகவே உலக வர்த்தக அமைப்பு மூலம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு வெளிநாட்டார் பொருள்களை சந்தையில் இறக்குகிறது. இதுவே இந்திய விவசாயத்தை நசுக்க வெளிசக்திகள் செய்யும் சதியாக ஆகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த பொங்கலும் வருகிறது. உழவுத்தமிழன் கணக்குப்பார்க்கும் நாளாக இதை காணவேண்டும்.
பயிர் நிலங்கள் யார் கையில்? உழுபவன் கையில் இருக்கும் நிலங்கள் ஊருக்கே உணவை தரும். சோம்பேறிகள் கைகளில் இருக்கும் நிலங்கள் தரிசாகும். தரிசாக போடப்படும். பயிர் நிலங்கள் சோம்பேறிகள் கைகளில் குவிந்து கிடந்தால் உழைப்பவன் அதிலே கூலியாகிறான். உழவு தொழிலை ஈடுபாட்டுடன் செய்பவன் உழும் நிலத்தின் உரிமையாளனாக இருந்தால் மட்டுமே உழவுக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும். சிலர் கைகளில் குவிந்து கிடக்கும் பயிர் நிலங்களை, உழுபவன் கைகளில் பெரும்போதே, உழவுத்தமிழர் வாழ்வு பெறுவான். உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்பது உண்மையானால் உழவர் விடுதலை மாத்திரமே தமிழர் விடுதலையை சாத்தியமாக்கும் என்ற உண்மையை உணரவேண்டும்.
பொங்குக பொங்கல். பொங்குக உண்மை. பொங்குக விடுதலை உணர்வு.
Monday, January 10, 2011
அவர் ஒன்று சொல்ல, நாம் ஒன்று நினைக்க....
தி.க. நடத்திய நாத்திக மாநாட்டில், பேரா.நாகநாதன் பேசினார். அதை முரசொலி ஏட்டில் ஜனவரி-பத்தாம் நாள் ஆறாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு 325 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அலக்சாண்டர் படைஎடுத்தபோது, சமண அறிஞர்கள் அவரை புறக்கணிக்க, அதற்கான காரணம் கேட்ட அலக்சாண்டரிடம் அவர்கள், "மன்னர் அலக்சாண்டர் அவர்களே, ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த புவிப்பரப்பில் இருப்பதற்கு நாங்கள் நின்று கொடிருக்கின்ர இடமே போதுமானது. நீங்களும் எங்களை போன்று ஒரு மனிதர். இருப்பினும் நீங்கள் எப்போதுமே ஓய்வில்லாமல் சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறீர்கள்.எந்த பயனுமில்லை " என்று அவர் வெற்றி பெற்ற நிலங்கள் பற்றி கூறினார்களாம். அதுவேதான் நமக்கும் தோன்றுகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள் ஒரு மன்னர் போல ஆண்டுவருகிறீர்கள். நீங்கள் வாங்க குவித்த நிலங்கள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும், கேரளாவிலும் மட்டுமின்றி, இலங்கை தீவிலும், மல்ய்சிய அருகிலும், மௌரீஷியாசிலும், ஏன் இருக்கின்றன. இதுதான் இப்போது மக்களது
Friday, January 7, 2011
பொய் சொன்னார் முதல்வர்?
பிரதமரை சந்தித்து விட்டு வந்த கருணாநிதியை சந்தித்த ஊடகத்தாரை அவர் எப்படி ஏமாற்றினார் என்பது ஒரு பெரிய கதை. ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, தான் முந்திய நாள் ஏன் பிரதமருடன் ஒப்புக்கொண்ட சந்திப்பை ரத்து செய்தார் என்ற கேள்விக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், அதில் பேச்சாளர்கள் பட்டியல் அதிக நீளமாக இருந்ததாகவும் அதனால் தான் அங்கிருந்து பிரதமரை வரவேற்கவும் சரி, அவரை சந்தித்து பேசவும் சரி செல்லமுடியவில்லை என்று ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். வைரமுத்துவின் ஆயிரம் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேசி முடிக்கும்போது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழரை மணி. விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க முதல்வர் செல்ல வேண்டிய மரபுவழி பணி என்பது இரவு ஏழே முக்காலுக்கு. வைரமுத்து விழா நடந்த லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து விமான நிலையம் செல்ல முதல்வரின் வாகன வரிசைக்கு ஐந்து நிமிடம்தான் எடுக்கும். அதன்பிறகு பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வந்தபிறகு முதல்வர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்ப்பட்ட நேரம் எட்டே காலில் இருந்து எட்டே முக்கால் வரை. அந்த ஆளுநர் மாளிகைக்கும் லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து செல்ல ஐந்து நிமிடம் கூட எடுக்காது. ஆகவே கருணாநிதி திட்டமிட்டு இரண்டு சந்திப்புகளையும் தவிர்த்திருப்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.ஆனாலும் தனது திடீர் முடிவால் கூட்டணியும் பாதிக்கும், ஆட்சியையும் பாதிக்கும் என்று அறிவுரை கூறிய மகனின் கருத்தை ஏற்று தனது முடிவை மறுபரிசீலனை செய்த கருணாநிதிதான் அடுத்த நாள் அதாவது ஆண்டின் மூன்றாம் நாள் பிரதமரை ஆளுநர் மாளிகையில் சந்தித்திருக்கிறார். அதை அப்படியே ஊடகத்தாரிடம் மறைக்க முயன்று தோற்றுப்போனார் என்பதுதான் அன்று நடந்த கூத்து. இரவு முழுவதும் தெருக்கூத்து நடக்கும் என்று சென்னை சங்கமம் பற்றி அறிவித்த மகளின் சொல்லை, அன்று இரவே ஒரு சிறிய தெருக்கூத்தை நடத்தி கான்பித்திவிட்டார் போலிருக்கிறது அவரது தந்தை.
பணியிடத்தில் பாலியல் வன்முறை!
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒரு சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் சில விஷயங்கள் உரிய முறையில் எழுதப்படவில்லையெனவும் அவை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் மேலும் சில விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டுமெனவும் பெண்கள் அமைப்பினர் கருதுகின்றனர். இல்லையெனில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். இச்சட்டத்தின் 14வது பிரிவு தவறான, தீயநோக்கம் கொண்ட புகார் அளிக்கும் பெண்களைத் தண்டிப்பது பற்றிக் கூறுகிறது. இந்த நாட்டில், பாலியல் வன்கொடுமைக்கெதிராகப் புகார் செய்வதென்பதே அரிதினும் அரிது. அச்சத்தினாலும் சில தவறான கருத்துக்களினாலும் பாதிக்கப்படும் பெண்களில் மிகச்சிலர் தான் புகார் கொடுக்க முன்வருகின்றனர். சமூக யதார்த்தம் இவ்வாறிருக்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கு என்று சொல்லி கொண்டுவரப்படும் இந்தச் சட்டத்தை பெண்களுக்கு எதிரானதாக இந்த 14வது பிரிவு ஆக்கிவிடுகிறது. மேலும் தவறான புகார் அளிப்பவரைத் தண்டிப்பதற்கு தான் வேறு சட்டம் ஏற்கனவே இருக்கிறதே. எனவே இப்பிரிவினை நீக்கிவிட வேண்டும். இந்தச் சட்டம், அமைப்பாக்கப்படாத பெண் தொழிலாளர்களைக் கவனத்தில் கொள்கிறது. ஆனால் வீட்டுப்பணிகள் செய்யும் பெண்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வீட்டுப்பணி செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் பற்றி ஷைனி அஹுஜா வழக்கு நன்றாக உணர்த்துகிறது. எனவே ‘பணியிடம்’ என்பதில் ‘வீடு’ என்பதும் ‘வசிப்பிடம்’ என்பதும் சேர்க்கப்பட வேண்டும். மாணவியர் மற்றும் நோயாளிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டால் அவர்களும் புகார் அளிக்கும் விதத்தில் ‘பணியிடம்’ என்பது வரையறை செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 15, இழப்பீடு பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால் இழப்பீட்டை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. குற்றவாளிக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என்று பிரிவு 25 கூறுகிறது. அபராதம் மட்டும் போதுமானதல்ல, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருங்காலத்தில் நேரக்கூடிய பணியிழப்பு, பணிநிலை உயர்வு இழப்பு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் சட்டப்பிரிவு இச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மேலும் சேர்த்தல்களும் செழுமைப்படுத்தல்களும் இச்சட்டத்தில் தேவைப்படுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் அமைப்புகளின் தலைவர்கள், பிரபலமான பெண் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் விவாதத்திற்கும் பரிசீலனைக்கும் சுற்றுக்கு விடப்பட்டு தேசிய அளவில் பெண்கள் ஆய்வு செய்து விவாதித்து அதன் மூலம் இந்தச் சட்ட முன்வடிவு உருவாக்கப்படுவது தான் முழுமையானதாகவும் முறையானதாகவும் இருக்கும். அதை விடுத்து, அரசுக்கு ஏன் இந்த அவசரம்? நோக்கமே நீர்த்துப் போய்விடுகிறதே!
Subscribe to:
Posts (Atom)
