Tuesday, March 15, 2011

பகுஷிமா டையசி தொடங்கி, கூடங்குளம் வரை....

இன்று ஜப்பானின் பகுசிமா டையசியில் உள்ள அணு உலைகள் உருகுவதும், வெடிப்பதும் ஊடக அதிர்ச்சிகளாக வெளிப்படுகின்றன.இந்த விபத்துக்கள் சுனாமியின் பேரலைகள் மற்றும் நில அதிர்வுகளால் ஏற்பட்டுள்ளன என்பது படம் பிடித்து காட்டப்படுகிறது. இதுவரை பத்து லட்சம் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் உள்ள மக்களுக்கும் அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. மழை பெய்யும்போது வீட்டு கதவுகளை மூடி வைத்துக்கொள்ளுங்கள், கழுத்தில் உள்ள தைராயிடு சுரப்பிதான் முதலில் அணுக்கதிர் வீச்ச்சால் தாக்கப்படும் என்பதால், அதை மூடி வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு ஜப்பான் அரசு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

அறிவியலாளர் வி.டி.பத்மநாபன் ஒரு பெரும் விளக்கத்தையே நமக்கு அனுப்பி உள்ளார். ஜப்பானின் வட கிழக்கு பகுதியான பாகுஷிமா டையசுயில் நடந்த ஆபத்துக்கள் எப்படி அகிலம் தழுவியது என்று விளக்குகிறார்.1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 சோவியத் யூனியனின் செர்னோபில்லில், நடந்த அணு உலை விபத்து பற்றி நினைவூட்டுகிறார். அந்த செர்நோபில் விபத்து இப்போது ஜப்பானில் நடந்ததை காட்டிலும் மிகவும் சிறியது என்கிறார். அத்தகைய செர்நோபில் விபத்தின் விளைவாக பறந்து வந்த அணு கதிர்வீச்ச்சு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல்களை கடந்து வந்தது என்கிறார்.

அதே 1986 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் நாள் கூடங்குளத்தில், மற்றும் கல்பாக்கத்தில் உள்ள சுகாதார, பௌதீக சோதனை சாலைகளில் அணு கதிர்வீச்சு அயோடின், செர்னோபில்லில் இருந்து நகர்ந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் இந்த விஞ்ஞானி. இந்த அணு விபத்து நடந்து எண்பது நாட்களுக்கு மக்கள் பாலியல் உறவுகளை காண்டம் மூலம் மட்டுமே வைத்துக்கொள்ளல் வேண்டும் என்கிறார். மூன்று அணு உலைகள் இப்போது உருகிவிட்டன. அடுத்து பல அதேநிலைமையை எட்டபோகின்றன. ஒரு வாரம் கழித்தே அறிவியலாளர்கள் எந்த அகவு அணு கத்ரிசீச்ச்சு வெளியாகி உள்ளது என கூறமுடியும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு செர்னோபில்லில், விபத்தின் விளைவாக காற்றில் 300000000000000000000000000 அணு கதிர்கள் கலந்தன என்கிறார் பத்மநாபன்.ஒவ்வொரு அணு கதிரும், புற்று நோயையும், மன நோயையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்று எச்சரிக்கிறார். பல லட்சம் மக்கள் அந்த பாதிப்பு உள்ள பகுதிகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள், அந்த கதிர்வீச்சின் துகள்கள் பூமியின் எல்லா பகுதிகளுக்கும் பரவும் என்கிறார் அவர்.கடல் வழியாக இலங்கை தீவிற்கும் அது பரவி வருவதாக இப்போது ஒரு செய்தி கூறுகிறது. ஆனால் இனிசிய அரசு மட்டுமே எந்த ஒரு பாதுகாப்பையும் மக்களுக்கு செய்யாமல் இருக்கிறது. அணு கதிர்களை கண்டறியும் கருவி கூட இங்கே எல்லா முக்கிய அலுவலகங்களிலும் இல்லை.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை இன்னும் சில மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அதை எதிர்த்த போராட்டம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழ்நாடு தழுவிய அளவில் நடந்து வந்தது. அதை காதில் வாங்கி கொள்ளாமல் அங்கே நில அத்ரிவுகளுக்கு உள்ள வாய்ப்பை பூமி ஆய்வாளர்கள் கூறியும் கூட அரசு செவி மடுக்க வில்லை. தமிழன் ஈழத்தில் அழ்க்கப்படுவதில் பங்கு கொண்ட டில்லி, இப்போது தமிழன் தமிழ்நாட்டில் அணு உலையால் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளுமா?

கூடங்குளத்தில் எட்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும், 235 யுரேனியத்தின் மூன்று கிலோ கிராம் கழிவை கக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் அந்த எட்டு அணு உலைகளும் 5000000000000000000000000 பொருள்களை உற்பத்தி செய்யும் தகுதிபடைத்தவை என்கிறார் பத்மநாபன்.அதிவிரைவு ப்ரோடோ தன்மை அணு உலைகளை கூடங்குளத்தில் நிறுவுவதை பொதுமக்கள் மத்தியிலும், அறிவியலாளர் மத்தியிலும் கடும் அளவில் எதிர்த்தும் கூட அரசு செவி மடுக்கவில்லை. அதை இந்திய மற்றும் ரஷிய அறிவியலாளர்களே சோதனை செய்து பார்த்து எதிரத்துள்ளனர்.

அதேபோல கூடங்குளம் அணு உலை அருகே சுனாமி நிவாரணம் என்ற பெயரில் மீனவர்களுக்கு காசா என்ற கிருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கட்டிக்கொடுத்துள்ளனர். அமெரிக்கா ப்ராட்டச்டன்ட் திருச்சபைகளின் உதவியில் அந்த வீடுகள் அவ்வளவு ஆபத்தான இடத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதை இடம் பெயர்த்து வேறு இடத்தில் கட்டிக்கொடுக்க அரசுக்கு துப்பு இல்லை. இப்போது டையிச்சியில் வெடித்த முதல் அணு உலை 40 ஆண்டுகள் பழையது. அதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சோதனைக்கு பிறகு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சேவை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவிலும் பழைய அணு உலைகள் மும்பையில் தாராப்பூரில் உள்ளன என்கிறார் விஞ்ஞானி. அதற்கும் டையிசி போலவே அடுத்த பத்தாண்டுகளுக்கு பணிக்காலம் நீட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர். இந்தியாவில் இந்த அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதன்மூலம் உண்மையில் ஒரு விழுக்காடு மின் உற்பத்திதான் கிடைக்கிறது. ஆனால் மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தப்படி ஆக்கத்திற்கான அணு உலைகள் என்ற பெயரில் இதுபோன்ற தரமில்லா அந்நிய அணு உலைகள் வந்து இறங்கப்போகின்றன.

சூரிய ஒளி மின் உற்பத்தி எந்த ஒரு ஆபத்தையும் கொடுக்காது. அதுபோன்ற உற்பத்திகளுக்கு நமது மக்கள் போராடுவார்களா?

Monday, March 14, 2011

ஆளுக்கு அஞ்சு கோடி கொடுப்போம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு எல்லோரும் போல தி.மு.க. தலைமை தயார் செய்யவதில்லை. திருமங்கலம் சூத்திரம், கைகொடுத்ததால், அதற்கு முன்பே 2006 பொது தேர்தலில் தொகுதிக்கு ஒன்றரை கோடி செலவு செய்த அனுபவம் இருப்பதால், இரண்டையும் சேர்த்து இப்போது கடைப்பிடிக்கலாம் என்று எண்ணுகிறது.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2009 இல் அதே அனுபவம் மீண்டும் கை கொடுத்தது.


அதன்பிறகு எங்கள் தலைமைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் கணிசமான பணம் கைக்கு வந்ததால் தைரியமாக செலவு செய்யலாம் என்று நினைப்பதாக தி.மு.க. பிரமுகர்கள் கூறுகிறார்கள்.அதற்காக தலைமை ஏற்கனவே ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும், அதாவது பூத் கமிட்டிக்கும், முதல் தவணையாக 3000 ரூபாயும், இரண்டாவது தவணையாக 5000 ரூபாயும் கொடுத்து முடித்தாயிற்று. அதில் பகுதி, வட்டம், கிளை எடுத்தது போக கணிசமான பணம் ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும் போயசசேர்ந்துர்ந்துவிட்டது. இது தொண்டர்களுக்கு உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கான பணம்தான்.இதை வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது.

நாலு சக்கர வாகனங்களில் பணம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையம் பிடிக்கிறது. எங்கள தலைமை அடுத்த தந்திரத்தை அமுல்படுத்துகிறது.. இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள்களில்தான் இந்த முறை எங்களது இரண்டாவது தவணையான பூத் கமிட்டி பணம் வந்து சேர்ந்தது. அதனால் கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்றால் கள்ளன்தான் பெருசு. இவாறு தி.மு.க. முக்கிய பிரமுகர் கூறினார்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தி.மு.க. தலைமை ஐஞ்சு கோடி கொடுக்கிறது. அது மக்களுக்கு சேரவேண்டிய பணம். நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மாற்றி போட்டுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை. அதனால்தான் நகர்ப்புறங்களை எங்கள் தலைமை மாற்று கட்சிகளுக்கு கொடுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பணம் கைநீட்டி வாங்கி விட்டால் கட்டாயமாக எங்களுக்கு தான் போடுவார்கள். அதனால் அங்கேதான் வாக்காளர்கள்
ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் 2000 , 3000 என்று தொடங்கி 5000 வரை கொடுக்க இருக்கிறோம்.அதில் எங்களுக்கு கணிசமாக வாக்குகள் விழவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இவாறு அந்த தி.மு.க. வாக்குமூலத்தையே பெருமையாக சொல்லி க்கொண்டிருந்தார்.

யார் இந்த புகழேந்திரன்?

நான்கு நாட்களாக ஊடகங்களில் ஒரு ஈழத்தமிழரின் பெயர் மாபெரும் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறது. அவர் பெயரை புகழேந்தி என்றும் புகழேந்திரன் மாஸ்டர் என்றும் அழைக்கிறார்கள். அதற்கும் மேலாக அவர் பொட்டுஅம்மானால் தயாரிக்கப்பட்டவர் என்று வேறு தி.ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடவைத்ததில் மகிந்தா வெற்றிபெற்றுவிட்டார். அந்த புகழேந்திரன் யார் எப்று நாமும் அலசினோம். அதில் பல உண்மைகள் கிடைத்தன.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வான்னி போரில் சரணடைந்தோர் பட்டியலில் இந்த புகழேந்தி வாத்தியும் இருந்தார். அப்படித்தான் ஈழத்தமிழர்கள் அவரை அழைக்கிறார்கள். சரணடைந்த போராளிகளில், பலரும் சுட்டு கொல்லப்பட்டபோது, அதில் புகழேந்தி வாத்தி கொல்லப்படவில்லை என் என்பது நமக்கு தெரியாது. அவர் அவ்வளவு முக்கிட ஆளில்லை என்றுகூட சிங்களம் நினைத்திருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு கிடைக்காத சலுகை வாத்திக்கு கிடைத்தது. அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார். ஏன் என்று நமக்கு புரியவில்லை. அதேநேரம் அதே சிங்களம் இப்போது அவரை பயங்கரவாதி என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமரே கூறியுள்ளது ஏன் என்பதே இப்போதைய கேள்வி.

இந்தியாவிற்கு அப்போதே வந்த புகழேந்தி வாத்தி இந்திய உளவுத்துறையின் நேரடி பராமரிப்பில் இருக்கிறார் என்பதும் தொடர் செய்தியாக தெரியவந்துள்ளது. அதாவது பா.சிதம்பரம் என்ற ஒரு பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் அந்த வாத்தி இருப்பதாக தெரிகிறது. அவர் மூலம் இந்திய உளவுத்துறையான "ரா" கேரள-தமிழ்நாட்டு எல்லையில் சிலரை வைத்து மீண்டும் ஈழத்தமிழர்களை பலிகடா ஆக்கி இந்திய அரசுக்கும், அதன் இந்திய முதலாளிகளுக்கும் இலங்கை தீவில் வணிகம் செய்ய ஒப்பந்தங்கள் போட இலங்கை அரசை பயமுறுத்த முடியுமா என சிந்திக்கிறார்களாம்.

அந்த வாத்தியை காரணம் காட்டி இந்த புளுகு மூட்டைகள் அவிழ்த்து விடுபவை அதைவிட ஆபத்தானவை. அதாவது வாத்தி ஆட்கள் இந்திய தலைவர்களை கொள்ள திட்டமிட்டுள்ளனராம். இத்தகைய புருடாக்களை சிங்களம்தான் தயார்செய்து அவிழ்த்து விட்டதா என்றால் அதுவும் இல்லை. இந்த புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதும் சிதம்பரம் தலைமையிலான உள்துறைதான். ஏற்கனவே நாம் எழுதியதுபோல, நான்கு வாரங்களுக்கு முன்பே மத்திய அரசின் உள்துறை இதேபோன்ற அறிககையை தமிழக அரசுக்கு அனுப்பியது என்று அதே ஹிந்து ஏடு செய்தி வெளியிட்டது.

தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்துவிடும் என்றும் அப்போது தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்னையை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்யும் என்றும் எண்ணிய சிதம்பரம் அப்படி ஒரு அறிககையை கொடுக்க வைத்து, தி.மு.கே. தலைமையை மிரட்டிவைக்க அதைசெய்துள்ளார். அப்போது காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மூலம் அப்படி ஒன்றும் புலிகளின் முகாம்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று அறிக்கை கொடுக்கசொன்ன கருணாநிதி
இப்போதும் இலங்கை பிரதமருக்கு பதில் கொடுக்க லத்திகாசரனையே பயன்படுத்தி உள்ளார். ஏன் என்றால் அந்த இலங்கை பிரதமரின் அறிக்கை அல்லது நாடாளுமன்ற பேச்சு சிதம்பரம் அலுவலகத்தில் தயாரான ஒரு அறிக்கை எனபது வெள்ளிடை மலையாக அனைவருக்கும் தெரியும்.

இலங்கை பிரதமர் ஜெயரத்னே தங்கள் நாட்டில் அவசர நிலைமையை தொடர்வதற்காக, அதன்மூலம் மட்டுமே சிங்களர் மத்தியில் திரண்டுள்ள அதிருப்தியை அடக்குவதற்காக இந்த இந்தியாவில் புலி முகாம்கள் என்ற சாக்கை பயன்படுத்திக்கொண்டார்.இப்போதும் இந்திய மத்திய அரசு அதற்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில் இல்லாததை சொல்வதாக இலங்கை அரசை குற்றம் சாட்டவும் இல்லை: லம்டிக்கவும் இல்லை: மாறாக கெடுவாயப்பானது [ துரதிரஷ்டமானது] என்று மட்டுமே மத்திய அரசிலிருந்து பதில் கொடுத்த்துள்ளது. அதிலிருந்தே இவர்களது விளையாட்டை யாரும் புரிந்து கொள்ளலாம்.

Thursday, March 10, 2011

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.
பயன்படுத்திய ராஜபக்சே
கருணாநிதியின் தேர்தல் தந்திரங்கள், கூட்டணி தந்திரங்கள் ஆகியவற்றை உணர்ந்த காங்கிரஸ் இந்த முறை விழிப்போடு இருந்து அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி விட வேண்டும் என்று எண்ணித்தான், டில்லி காங்கிரஸ் காய் நகர்த்தியது.அதில் மௌன அடிமையாக இருந்த தங்கபாலுவை விட, ஜெயந்தியை விட, வாசனை விட, வேகமாக இருந்தவராக சிதம்பரம் கவனிக்கப்பட்டார். ஸ்டாலின் அவர்களை அவமரியாதை செய்தபோதும், துரைமுருகன் நக்கல் செய்து கிண்டலடித்தபோதும், அதிக ஆத்திரப்பட்டவர் சிதம்பரம்தான். அதுகூட ஒரு கார்பொரேட் தந்திரமா என்று தெரியாது.

அத்தகைய சூழலில், மூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம்கள் வைத்திருப்பதாகவும், அதில் பயிற்சி பெற்ற புலிகள் தலைவர்களை கொள்ள இருப்பதாகவும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். அதை உடனடியாக தமிழக அரசின் டி.ஜி.பி. மூலம் மறுத்து அறிவுப்பு வெளியிட்டார்கள். அது காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுக்கும், தி.மு.க.வின் மாநில அரசுக்கும் உள்ள போர் என பலரும் அக்கறையற்று இருந்துவிட்டனர். காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் உள்முரன்பாடுதானே என்று கூட பலரும் சும்மா இருந்துவிட்டனர்

அதுவே இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஜெயரத்னே, விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் பயிற்சி முகாம்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று ருத்திரகுமரால் நடத்தப்படும் நாடு கடந்த தமிழீழ அரசு என்றும், இன்னொன்று நர்டியவன் தலைமையிலான முகாம் என்றும், பிரிதொன்று போட்டு அம்மான் வழிகாட்டலில் இருந்த விநாயகம் என்றும்,புகழேந்த்ரா என்று அவர் அழைக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியை இலங்கை அரசுக்கு இந்திய மத்திய உளவு அமைப்பான "ரா"கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் உள்துறை தி.மு.க. அரசு மீது சேற்றைவாரி எறிய தமிழ்நாட்டில் விடுதலை புலிகளது முகாம் இருப்பதாக கூறியது.

தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் காய் விட்டுக்கொண்ட நேரத்தில் அத்தைகைய குற்றச்சாட்டை காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஏற்பாட்டில் செய்தார்கள். இது இந்தியாவின் மத்திய அரசு வழமையாக செய்துவரும் ஒரு தந்திரம்தான்.அதாவது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் முரண்பட்டு வந்த நேரத்தில் எல்லாம் மத்திய உள்துறை இப்படி மோசமான குற்றச்ச்காட்டை வெளியிடும். அதுகண்டு மாநில கட்சிகள் அசைவர். இதே தந்திரத்தை 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போது மத்திய அரசு செயது பார்த்தது.அப்போது ஜெயலலிதாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது.அப்போது சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சராக இருந்தார்.

முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை கொள்ள இரண்டு பெண் புலிகள் வந்திருப்பதாக அப்போது உள்துறை அறிக்கை கூறியது. விசாரித்ததில் அதுபோன்ற ஒரு புகார் வந்ததாகவும், அதை ஐ.பீ.என்ற மத்திய உளவு நிறுவனம் சம்பவம் பற்றி கூறப்பட்ட மணப்பாக்கம் சென்று பார்த்ததாகவும் அவை அத்தனையும் போய் என்றும் அப்போதே உள்துறைக்கு செய்தி அனுப்பி விட்டதாகவும் கூறினார்கள்.ஆனால் அதே விஷயத்தை உள்துறை ஜெயலலிதா ஆட்சி பற்றி கெட்ட பெயரை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அறிக்கை தரவும், அந்த குற்றச்சாட்டை பயன்படுத்த முயன்றது. அதை ஜெயலலிதா அரசு கடுமையாக எதிர்த்து அறிக்கை விட்டதாலும், ஜெயா தொலைக்காட்சியில் அது பற்றி விரிவாக விவாதம் செய்து அம்பலப்படுத்தியதாலும், அந்த தந்திரத்தை காங்கிரஸ் மத்திய அரசு கைவிட்டது.


அந்த நேரத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆண்டு அறிக்கையில் மத்திய உள்துறை இவ்வாறு கூறியிருப்பதை கேள்வி கேட்டது. அதாவது அதற்கு முந்திய ஆண்டு ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தனது ஆண்டு அறிக்கையில் தமிழ்நாடு பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பாத போது, ஓராண்டிற்குள் எந்த ஒரு வன்முறையும் தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளால் நடக்காத போது, எப்படி காங்கிரஸ் அரசு இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுகிறது என்று அந்த ஆங்கில ஏடு சென்னை பதிப்பில் தீட்டியிருந்தது. அப்போதே மத்திய உள்துறை மாநில அரசுகளை மிரட்ட இப்படி புலிகள் பெயரால் மிரட்டல்களை செய்வதை பழக்கமாக கொண்டுள்ளது என்பது அம்பலமானது.

இப்போது கருணாநிதி அரசுடன் அல்லது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு பிரச்சனைகள் எழுந்துள்ள நேரம். இன்னமும் சொல்லப்போனால் மத்திய அரசில் சிதம்பரம் உள்துறைஅமைச்சராக பொறுப்பேற்றுள்ள நேரம்.சிதம்பரத்தின்செயல்பாடுகளில் தி.மு.க.அரசுக்குஎதிராக ஒவ்வொரு காய்களும் நகர்த்தப்பட்டபோது, விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரே சட்ட மன்ற உறுப்பினரான ரவிக்குமார் முதல்வர் கருணாநிதியை வழக்கம் போல பார்க்கசெல்கிறார். அப்போது தேத்தலில் தோற்றுப்போன சிதம்பரத்தை எதற்க்காக வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தீர்கள் என்று வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நானா செய்தேன்.என் பய்யன் செய்துவிட்டான் என்று விடையளித்துள்ளார். அந்த அளவிற்கு சிதம்பரத்தின் ச்யல்பாடுகளில் கருணாநிதி சந்தேகம் கொண்டிருந்தார்.

அதே சித்ம்பரம்தான் இப்போது தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிகளின் எண்ணிக்கை பற்றியும், ஆட்சியில் பங்கு பற்றியும் முரண்பாடுகள் வந்தபோது, துரைமுருகன் கேலி செய்தார் என்றும், ஸ்டாலின் நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்து போனார் என்றும் அதன்மூலம் தன்னையும் காங்கிரசையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி கடும் அக்டுப்பு கொண்டு தி.மு.க. பற்றி கண்டபடி சோனியாவிடம் எடுத்து சொன்னவர். காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை விட்டு பிரியும் நிலைமை வரும் என்று முன்கூட்டியே அவதானித்த சிதம்பரம் அதற்குதான் இப்படி புலி கதையை தி.மு.க. அரசுக்கு எதிராக கிளப்பிவிட்டார்.atharku அவர் பயன்படுத்திய உள்துறை அறிக்கையில் சென்னை அருகே வளசரவாக்கத்தில் புலிகளின் பயிற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மறுத்திருந்தார்.

இப்போது அதே குற்றச்சாட்டை ராஜபக்சே அரசின் பொம்மை பிரதமர் ஜெயரத்னே இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதாவது தி.ஹிந்து ஏடு இன்று காலை வெளியிட்டுள்ளபடி,தமிழ்நாட்டில் ருத்த்ரகுமார் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று முகாம் வைத்திருப்பதாகவும், நெடியவன் தலைமையிலான புலிகள் முகாம் ஒன்று இருப்பதாகவும், பொட்டம்மான் வழிகாட்டலில் வளர்ந்த புகழேந்திரன் தலைமையிலான புலிகள் முகாமில் முக்கிய ரசியல்வாதிகளை கோளை செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் அந்த இலங்கை இபிரதமர் பிதற்றியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் இதை இந்திய அரசிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு வாய் மூடி மௌனியாக அந்த அமைச்சக உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இந்த செய்தி இந்திய உளவு நிறுவனமான "ரா" கூறிய அறிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

இபடி ஒரு அறிககையை "ரா" தயார் செய்யவேண்டிய அவசியம் என்ன? தி.மு.க. காங்கிரசை விட்டு வெளியே வந்து தனது கூட்டணியை கட்டி செயல்பட தயாராகி வருகிறது என்று தாயாநிதி மாறன் காங்கிரஸ் தலைமையிடம் ஏற்கனவே கூறிவிட்டார். அப்படி செய்யும்போது தி.மு.க.தலைமை தமிழர் பிரச்னையை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எடுக்க திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய அரசுக்கு சித்தி பறந்தது. அதன்விளைவே தி.மு.க. அரசு புலிகளுக்கு சரணாலயம் தர்ய்வதாக குற்றம் சாட்ட சிதம்பரம் போட்ட திட்டம் என்ற சிதம்பர ரகசியம் வெளியாகி உள்ளது. ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவர்கள் இறந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்துள்ள சீ.பி.ஐ.யின் செயலை செய்த அதே மத்திய அரசு இது போன்ற கபட நாடகங்களை அரங்கேற்றும் போது எல்லாமே அம்பலமாகி நிற்கிறது.

Wednesday, March 9, 2011

மன்னர் மண்டியிட்டாரா?

தன்னை ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று அழைத்துக்கொண்ட, கேரளாவின் மாவேலி அரசரின் ஆட்சி போல ஆளும் மன்னர் என்று பெருமைப்பட்டுக்கொண்ட ஒருவர், தமிழ் மன்னர்கள் மக்களாட்சியை நடத்தத் வந்தனர் என்று மன்னர்களை அவர்களது ஆட்சிகளை நியாயப்படுத்தி வாதிட்ட ஒருவர் இன்று சோனியா என்ற காங்கிரஸ் தலைவியிடம் மண்டி இட்டுவிட்டாரா? இருக்கவே முடியாது. காங்கிரசிடம் கேட்ட தொகுதிகளை கொடுத்திருக்கலாம். காங்கிரசிடம் பணம் எதிர்பார்த்து தமிழ்நாட்டு மன்னர் செல்லவேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் வாக்குகளில்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையும் தி.மு.க.விற்கு இல்லை.பின் எதற்காக தி.மு.க. தலைமை காங்கிரசிடம் மண்டியிடவேண்டும்?

தி.மு.க. தலைமை தேர்தல்களை சந்திக்க புதிய உத்திகளை திருமங்கலம் தேர்தல் தொடங்கி நடைமுறைப்படுத்துகிறது. அது இந்திய நாடாளுமன்ற டேஹ்ர்தல்களுக்கு புதிய உத்திதான். மக்களிடம் பெற்றதை மக்களிடமே தருவது என்பது அதற்கு பெயர். நம்மை ஆட்சியி அமரவைத்த மக்களால்தான் நமக்கு அதிகமான நிதி சேர்ந்தது என்று ஒப்புக்கொள்ளும் தி.மு.க.தலைமை அதில் ஒரு பகுதியை அந்த மக்களுக்கே திருப்பி தருவது என்று நடைமுறை தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய தர்மச்செயலை பலரும் பலமாதிரி பேசுகிறார்கள்.தேர்தல் நேரம் இல்லாதபோது, அரசு மக்களுக்கு இலவசமாக மழை, வெள்ள நிவாரணம் கொடுக்கலாம். இலவசமாகவான்ன தொலைகாட்சி பெட்டிகளை கொடுக்கலாம். சமையல் வாயு அடுப்புகளை கொடுக்கலாம். முதியோருக்கு கண்ணாடி கொடுக்கலாம். ஏழைகளுக்கு செருப்பு கொடுக்கலாம்.மாணவர்களுக்கு சிக்கொள் கொடுக்கலாம். தேர்தல் நேறத்தில் மட்டும் கொடுக்க கூடாது. இது என்னய்யா சட்டம் என்று கேட்கிறது தி.மு.க.தலைமை.

தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெற்றதை மக்களிடமே கொடுக்கும் தி.மு.க.தலைமையின் பெருந்தன்மையை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே? அது என்ன நியாயம்? தேர்தல் ஆணையத்திற்கும் அது புரியவில்லை. மக்கள் இன்று ஏழைகளாக இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வேண்டாமா? அவர்களை ஒரு மன்னர் ஆட்சி ஏதோ முடிந்த அளவு தேர்தல் நேரத்திலாவது வசதியாக வைத்திருக்க முயல்கிறதே? இது விளங்க வேண்டாமா? இந்த தேர்தல் ஆணையம் எப்போதுமே மாநில கட்சிகள் சொன்னால் கேட்பதில்லை. மத்தியில் உள்ள எதிர்க்கட்சி சொன்னாலும் கேட்பதில்லை. மாறாக மத்தியில் ஆளும் கட்சி அதுவும் காங்கிரஸ் போன்ற நூறு ஆண்டு கட்சி சொன்னால் மட்டும்தான் கேட்கிறது.


அதனால்தான் எத்தனை மண்டியிட்டாலும் பரவாயில்லை, மன்னரின் மூத்த மைந்தன் கண்டுபிடித்த இந்த தேர்தல் தந்திரத்தை எப்படியாவது அமுல்படுத்தி மக்களுக்கு அவர்களது சொந்தமான நிதியில் ஒரு சிறு தொகையாவது போய்சேர வேண்டுமே என்று மன்னர் கவலைப்பட்டு தேர்தல் ஆணையஹ்திற்கு புரியும் மொழியில் அதை சொல்ல காங்கிரஸ் தலைமையுடன் மண்டியிட்டாவது கூட்டணி என்று அமைத்துக்கொண்டுள்ளார்.மன்னர்களை புரிந்துகொல்பதே இந்த தமிழர்களுக்கு கடினம் போலிருகிறது.அதுவும் தமிழ் மன்னர்களை தமிழர்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்களே?


தொழிற்சங்கம் நடத்துபவர்களுக்கு இது புரிய வேண்டும். தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தின் ஒரு பகுதியே போனஸ் என்ற ஊக்கத்தொகை என்று கூறுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இப்போது காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேர்ந்தாகிவிட்டது. இனி தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து தி.மு.க.வின் செயல்தந்திரத்தை முறியடிக்க முடியுமா?

Tuesday, March 8, 2011

கருவிலும், உருவிலும், சிதையிலும் சிதைக்கிறாயே

உலக பெண்கள் தினம் என்பதால் எல்லா அரசியல் தலைவர்களும் நீளமான வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இன்றும் கருவில் பெண்கள் அழிக்கப்படுவது அதிகமாக பெண் உரிமை பேசும் தமிழ்நாட்டிலேயே ஒழிக்கப்படவில்லை. அதற்கு பொருளாதாரம் காரணமாக சொல்லப்படுவதும் அதை கேட்டு பலரும் அனுதாபபடுவதும் கொடுமை மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. உருவில் பெண்ணாக வளர்ந்தபின்னும் தொடரும் சிசுக்கொலைகள் நின்றபாடில்லை. பொதுமக்கள் இயல்பாகவே பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிடவில்லை. அதற்கு வளர்ப்பு கூட காரணமாக ஆகிவிடுகிறது. வளர்ந்த பின்னும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

யாராவது மானுடத்தில் பெண்கள் சரிபாதி என்று மனதார அனுமதிக்கிறார்களா? சமீபகூட்டம் ஒன்ரிபெராசிரியர் சரஸ்வதி ஒரு செய்தியை கூறினார். பெண்களுக்கு கல்வி கொட்த்தும் கூட அதற்கு மக்கள் வரிப்பணம் செலவானால் கூட, பெண்களை படித்து முடித்த பின், வேளைக்கு செல்ல அனுமதிக்காமல் கல்யாணம் கட்டிக்கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டினார். உங்கள் கல்யாணமும், உங்கள் குடும்பங்களும் எவ்வளவு செய்தரினாலும், சிரித்தாலும் நீங்கள் திருந்துவதாய் இல்லை என்பதுதானே உங்கள் நிலை? உரப்படும் போங்கள்.இந்த அடிமை மனோபாவத்திலிருந்து எப்போது வெள்யே வரப்போகிறீர்கள்?

பெண்களும் மானுடத்தின் சரிபாதி என்றால் அவர்கள் வேளைக்கு செல்வதும், அவர்களே தங்கள் திருமணத்தை தீர்மானிப்பதும் உங்களுக்கு ஏற்கமுடியவில்லையா? இப்போது பெண்கள் ஆரோக்கியமான புலிக்குட்டியை பெற்றெடுத்தாலும், அவர்களது மறைவுக்கு பின்கூட அவரது சிதையில் கூட சாம்பலை சிதறடிப்போம் என்ற இனவெறி செயலை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பார்வதியம்மாள் தனது மரணத்தின் மூலம். அதை எண்ணியாவது உலக பெண்கள் தினத்தில் ,தமிழ்பெண்கள் துவக்கெடுத்த பின்தான் தமிழீஹத்தில் சரியான சமத்துவம் பெற முடிந்தது என்பதை உலகம் புரிந்துகொண்டால் சரி.

Saturday, March 5, 2011

எந்த நிபந்தனை அடிப்படையில் ஆதரவு?

அய்யா, கலைஞர் அவர்களே. காங்கிரஸ் உங்களது சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள்.உங்கள் கட்சியான தி.மு.க.வின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். உங்களுடன் தொகுதி உடன்பாட்டில் ஒத்துவராத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெள்யே வந்துவிட்டீர்கள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணுகிறது. நீங்கள் இவ்வளவு நாளும் எந்த அளவுக்கு புழுங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். அதாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் செயல்களுக்கு பின்னால் காங்கிரஸ் இருந்தது என்று தெரிந்தும் நீங்கள் மத்திய அமைச்சரவையில் பங்கு கொண்டு "பங்கு" எடுக்கவேண்டுமே என்பதால், அதன்மூலம் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் வளம் பெறவேண்டுமே என்பதற்காக, தமிழ்நாட்டு நலன்கள் கூட முக்கிய அல்ல என்று பொறுமை காத்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது.

அதன் பிறகு, நீங்கள் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய அஞ்சலி கவிதையை கூட தாங்காத மத்திய அரசை எதிர்க்காமல், பதிவிக்காக தொங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். அதன்பிறகு இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு நேரத்தில் நீங்கள் காங்கிரஸ் உடன் உள்ள உறவுக்காக ஏங்கித்தவித்ததும் தமிழினத்திற்கு தெரியும. அதேபோல இலங்கையில் தமிழின அழிப்பை முழுமைப்படுத்தவும், புலிகளை அழிக்கவும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தபோதுகூட, நீங்கள் பதவியால் கிடைக்கும் லாபம் உங்கள் அமைச்சர்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் தானே என்று அமைதி காத்ததும் எங்களுக்கு நினைவில் இல்லாமல் இல்லை. ஆனாலும் கூட்டணி என்றால் கொள்ளை அடிப்பதில், அதில் பங்கு பெறுவதில் என்றுதானே அர்த்தம். அதை விடுத்து ராஜாவை மட்டும் அவர்கள் சிறையில் அடைப்பது உங்களை துன்புறுத்தியது என்பது எங்களுக்கு புரிகிறது.

இப்போது உங்களிடம் நாடி நிற்கும் காங்கிரஸ் தனது கையை உயர்த்தி தமிழ்நாட்டு ஆட்சியில் பங்கு கேட்பதும், எத்தனை தொகுதி என்று கேட்பதும், தொகுதிகளை முன்கூட்டி கூறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் எந்தவகையில் நியாயம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. அதனால் நீங்கள் மத்திய அமைச்சரவையை விட்டு வெளியே வருவதும் விளங்குகிறது.அதில் உங்கள் பேரன் என்று கூறிக்கொள்பவர் கூடவெளியே வந்தாக வேண்டுமே? அவர் அதை விரும்ப மாட்டாரே? அவர்தானே இத்ததனைக்கும் காரணம் என்று உங்களுக்கு தெரியுமே? சரி. அது என்ன பிரச்சனை அடிபடையில் நிபந்தனை அற்ற ஆதரவு? எந்த பிரச்னையை சொல்கிறீர்கள்?

ஈழத்தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய பிரச்சனை அடிப்படையை எடுப்பீர்களா? ஈழத்தமிழர்களை முகாம்களிலிருந்து வெளியேற்ற பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தில் இன்று வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவ பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தமிகர் பகுதிகளை வடக்கையும், கிழக்கையும் ஒன்று சேர்க்கும் பிரச்னையை எடுப்பீர்களா? அரசியல் தீர்வு என்று பொதுக்குழுவில் எழுதினீர்களே,அது தமிழீழம்தான் என்று பிரச்சனையை காங்கிரஸ் கட்சிக்கு சொல்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பிரச்சனையை மத்திய அரசிடம் கூறுவீர்களா? விடுதலை புலிகள் மீதன்ன தடையை நீக்கவேண்டும் என்ற பிரச்னை அடிப்படையில் காங்கிரசை கோருவீர்களா? என்னய்யா பிரச்சனை அடிப்படை? தமிழ் கூறும் நல்லுலகம் நம்ப வேண்டாமா?.