ஜூன்-26ஐ.நா.அறிவித்த"அனைத்துநாட்டுசித்திரவதை எதிர்ப்பு நாள்".
அன்று இந்தியாவின் சென்னையில் "தமிழ் உறவுகள்" நடத்திய மாபெரும் "மெழுகு வர்த்தி நினைவேந்தல்" நிகழ்வு ஒரு பெரும் ஆதரவை "ஈழத் தமிழ் உறவுகளுக்கு" ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட பங்கு கொண்டு, மெரீனா கடற்கரையில் "மழைத்தூரல்களுக்கு" நடுவே அமைதியாக அமர்ந்து "கைகளில் மெழுகுவர்த்திகளை" ஏந்தி, தெரிவித்த "தோழமை" உலகின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்தது.
திருமுருகன் எடுத்த முன்முயர்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், மீனவர் அமைப்புகளும், தனி மனிதர்களும், கொடுத்த ஆதரவு "உலகம் முழுவதும் உள்ள தமிழரை ஒன்றாக சேர்ப்பதாக" இருந்தது. திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் இது பற்றி கூறும்போது, "இது எந்த ஒரு தலைவருக்கோ, அல்லது அமைப்ப்ற்கோ வந்த கூட்டமல்ல.ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு
மாக்கள் கொடுத்தஆதரவு"என்றுகூறினார்.குறிப்பிட்ட நேரத்திற்கு வராத தலைவர்கள், தாமதமாக வரும்போது, அதுவே அவரகளது நுழைவு ஏற்படுத்திய சல,சலப்பையும், அதனால் ஏற்பட்ட நெரிசலும், கட்டுப்பாட்டை குலைக்கவே உதவின. அதில்; இருக்கையிலிருந்த முக்கியமானவர்கள் கூட பாதிக்கப்படும் நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. ஆனாலும் அதையும் தாண்டி, அந்த மாபஐம் தமிழ் மக்கள் கூட்டம் அமைதியாக கலந்து கொண்டு கொடுத்த ஆதரவு மெய் சிலிர்க்கும்படி இருந்தது.
காசி அனந்தன், பழ.நெடுமாறன், புலமைப் பித்தன், வேல்முருகன்,சீமான், பேராசிரியர். சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திருச்சி வேலுசாமி, ஓவியர் வீரசந்தானம், மருத்துவர் எழிலன்,மீனவர் தலைவர்கள் மகேஷ், ரூபேஷ், மாறன், சரவணன், திருமுருகனுடன் பணியாற்றிய ராஜ்குமார் பழனிச்சாமி, உமர், ராஜா ஸ்டாலின், ம.திமுக. வேளச்சேரி மணிமாறன், மல்லை சத்தியா, தாமரை, தியாகு, டேவிட்பெரியார்,புலம்பெயர்ந்த தமிழர்கள்,ராவணன்,குணசேகரன்,பாண்டிமாதேவி, ஏகலைவன், அரக்கோணம் விமலா, நெல்லை சிவகுமார், அன்பு தென்னரசு, டி.எஸ்.எஸ்.மணி, ஓவியர் புகழேந்தி, வா.மு.சேதுராமன், தெய்வநாயகம், ஓவியர் புருஷோத்தமன், தவசி குமரன், தனசேகரன், இன்னும்பல பிரமுகர்கள் கலந்துகொண்டது சிறப்பு சேர்த்தது.
நினைவு தூண்கள் இரண்டு "மறைந்த தமிழ் தியாகிகளுக்காக" உருவாக்கப்பட்டிருந்தது எல்லோரையும் அமைதி கொள்ள வைத்தது. மலர்கள் தூவப்பட்ட படுக்கைகளில், மணலில் "மெழுகுவர்த்தியை" வைத்து எரியூட்டிய நிகழ்வுகள் நெகிழ் வைத்தன. துண்டறிக்கைகளையும், சுவரொட்டிகளையும், இணையதள பரப்புரைகளையும், குறுன்செய்திகளையும், நேரடி அணுகுமுறைகளையும், பல அமைப்புகளின் தலைவர்களையும் சந்திப்பதன் மூலம் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டது. இதன்முழு காரணமாக,முன்முயர்ச்சியாக இருந்தவர் என்றவகையில் திருமுருகனை பர்ராட்டாமல் இருக்க முடியாது.
Monday, June 27, 2011
Friday, June 24, 2011
முதல்வரின் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க மெரினாவில் கூடுவோம்.
ஜூன் 26 என்பது "அனைத்து நாட்டு சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள்". அந்த நாள் இன்றைய சூழலில், ராஜபக்சேவின் "தமிழின அழிப்பு உலகம் முழுவதும் அம்பலமாகி உள்ள" நேரத்தில், முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இலங்கையின் திர்க்கட்சியாக இருந்தாலும், "சிங்கள பௌத்த பேராண்மை கொள்கையை" உறுதியாக தூக்கிப் பிடிக்கும் ரணில் விக்ரமசிங்கே சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம், " ஐ.நா. போர்விதி மீறல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத இலங்கை அரசை எந்த ஒரு போர் விதி மீறல் தீர்மானமும்" கட்டுப்படுத்தாது என்று கூறினான்.
அதேசமயம் உலகம் முழுவதும், "ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் "இலங்கை கையெழுத்து போட்டுள்ளது என்ற குரல் எழும்பியது. அந்த " சித்திரவதைக்கு எதிரான அனைத்து நாட்டு ஒப்பந்த நாள் " ஜூன் 26 இல் வருவதால், அதே நாளில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடி, சென்னை கடற்கரை மெரினாவில், கண்ணகி சிலைக்கு பின்புறம் கடற்கரை மணலில், மாபெரும் "மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வினை" நடத்த திட்டமிட்டுள்ளனர். இது "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும்? வலுப்படுத்துவதாக அமையும். டில்லியின் முழுமையான "தலையீடுகளையும்" தாண்டி, முதல்வர் செல்வி.ஜெயலலிதா நிறைவேற்றிய "தனித் தீர்மானமான" போர்குற்றம் செய்தவர்களை, "போர் குற்றவாளிகள்" என்று அறிவிக்க கோருவது, தில்லியையும், கொழும்பையும் அச்சுறுத்தி உள்ளன.
டில்லியும், கொழும்பும் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை மறைமுகமாக கொடுத்து வரும்போது, "சட்டப் பேரவை தீர்மானத்திற்கு முழுமையாக தமிழக மக்கள் மன்றம் வலுச் சேர்கிறது" எண்பதை இந்த ஞாயிறு கடற்கரை அணிதிரட்டல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள்.
அதேசமயம் உலகம் முழுவதும், "ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் "இலங்கை கையெழுத்து போட்டுள்ளது என்ற குரல் எழும்பியது. அந்த " சித்திரவதைக்கு எதிரான அனைத்து நாட்டு ஒப்பந்த நாள் " ஜூன் 26 இல் வருவதால், அதே நாளில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடி, சென்னை கடற்கரை மெரினாவில், கண்ணகி சிலைக்கு பின்புறம் கடற்கரை மணலில், மாபெரும் "மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வினை" நடத்த திட்டமிட்டுள்ளனர். இது "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும்? வலுப்படுத்துவதாக அமையும். டில்லியின் முழுமையான "தலையீடுகளையும்" தாண்டி, முதல்வர் செல்வி.ஜெயலலிதா நிறைவேற்றிய "தனித் தீர்மானமான" போர்குற்றம் செய்தவர்களை, "போர் குற்றவாளிகள்" என்று அறிவிக்க கோருவது, தில்லியையும், கொழும்பையும் அச்சுறுத்தி உள்ளன.
டில்லியும், கொழும்பும் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை மறைமுகமாக கொடுத்து வரும்போது, "சட்டப் பேரவை தீர்மானத்திற்கு முழுமையாக தமிழக மக்கள் மன்றம் வலுச் சேர்கிறது" எண்பதை இந்த ஞாயிறு கடற்கரை அணிதிரட்டல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள்.
நிரூபமா ராவ் அமெரிக்காவின் எடுபிடியா?
நிருபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளராக வந்தார். முக்கியமாக இலங்கை அரசின் தமிழின அழிப்பு வேலைகளை செய்வதற்கு துணை சென்றார். அதில் இந்திய அரசின் நலனை நிலை நிறுத்தினார். இலங்கையில் தமிழின அழிப்பை நடைமுறைப்படுத்த, அந்த போருக்கு முழு உதவியையும் செய்தது இந்திய அரசு என்றால், அதற்கான டிப்படையை போட்டுக்கொடுத்து, உலக அளவிலான " பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"என்ற பெயரைக் கொடுத்தும் அமெரிக்காவின் கைங்கரியம்தான். ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும்,இந்தியாவிலும், "புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி" தடை செய்ய ஏற்பாடு செய்ததும் அமெரிக்காதான் என்பது இப்போது பகிரங்கமாகி உள்ளது.
இத்தகைய சூழலில், நிரூபமா ராவ் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு இணங்க " இலங்கை-இந்திய உறவை" பேணி பாதுகாத்தார் என்பதால், அதில் இலங்கையை சீனா பக்கம் முழுமையாக சார்ந்து நிற்க விடாமல் கையாண்டார் என்பதால் அது அமெரிக்காவின் நலனை பேணுவதில் உள்ள கெட்டிகாரத்தனம் என்றுதான் புரியப்படவேண்டும். அதுமட்டுமின்றி "இந்தியாவில் முக்கிய பதவிகளுக்கு வருவோரை" தேர்வு செய்யும்போது, சிறந்த உளவுத் துறை வைத்திருப்பதாக டில்லியால் நம்பப்படும் அமெரிக்கா சொல்கின்ற நபர்களை அந்த பதவிகளில் போடுவது இந்திய அரசுக்கு வாடிக்கைதான்.
அவ்வாறுதான் "எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேநோனும், நிரூபமா ராவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அன்ஹா விசவாசத்தை நிரூபமா அராவ் முறையாக காட்டுவார். இப்போது "காஷ்மீர் பிரச்சனயை" அமெரிக்கா விரும்பும் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள நட்பை அமெரிக்கா விரும்பும்படி பேசி வருகிறார். அதேபோல "அமெரிக்கா விரும்புவது போல, மியான்மரில், சூ கியூ வுடன் பேசச் சென்று அவரை நிதானப்படுத்தி அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களையும் காப்பாற்றி உள்ளார். இத்தகைய வேலைகளை அவசர் அவசரமாக செய்வதன் மூலம், தான் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதுவராக போக தகுதி உள்ளவர் எண்பதை நிரூபித்து கொண்டுள்ளார்
இத்தகைய சூழலில், நிரூபமா ராவ் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு இணங்க " இலங்கை-இந்திய உறவை" பேணி பாதுகாத்தார் என்பதால், அதில் இலங்கையை சீனா பக்கம் முழுமையாக சார்ந்து நிற்க விடாமல் கையாண்டார் என்பதால் அது அமெரிக்காவின் நலனை பேணுவதில் உள்ள கெட்டிகாரத்தனம் என்றுதான் புரியப்படவேண்டும். அதுமட்டுமின்றி "இந்தியாவில் முக்கிய பதவிகளுக்கு வருவோரை" தேர்வு செய்யும்போது, சிறந்த உளவுத் துறை வைத்திருப்பதாக டில்லியால் நம்பப்படும் அமெரிக்கா சொல்கின்ற நபர்களை அந்த பதவிகளில் போடுவது இந்திய அரசுக்கு வாடிக்கைதான்.
அவ்வாறுதான் "எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேநோனும், நிரூபமா ராவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அன்ஹா விசவாசத்தை நிரூபமா அராவ் முறையாக காட்டுவார். இப்போது "காஷ்மீர் பிரச்சனயை" அமெரிக்கா விரும்பும் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள நட்பை அமெரிக்கா விரும்பும்படி பேசி வருகிறார். அதேபோல "அமெரிக்கா விரும்புவது போல, மியான்மரில், சூ கியூ வுடன் பேசச் சென்று அவரை நிதானப்படுத்தி அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களையும் காப்பாற்றி உள்ளார். இத்தகைய வேலைகளை அவசர் அவசரமாக செய்வதன் மூலம், தான் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதுவராக போக தகுதி உள்ளவர் எண்பதை நிரூபித்து கொண்டுள்ளார்
Thursday, June 23, 2011
கனிமொழிக்கு அன்று கோபம், தணித்தார் கலைஞர்
கனிமொழிக்கு உச்சநீதிமன்றத்தில், பிணை கிடைக்கவில்லை. அது பெரியதொரு இழப்பு. ஏன் என்றால் சிறையில் உள்ளவர்கள் எப்போதுமே பிணிக்கு, மேல் முறையீடு என்று அடுத்த கட்ட உயர்ந்த நீதிமன்றத்திற்கு செல்ல அவசரப்பட மாட்டார்கள். ஏன் என்றால் உயர்ந்த நீதிமன்றத்தில் ஒரு முறை பிணை மறுப்பு வந்துவிட்டால், அடுத்து பிணை போட மிக தாமதமாக ஆகும்.இது உள்ளே இருய்க்கும் எல்லா கைதிகளுக்கும் தெரிந்த செய்தி. வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது, விளங்காது. அதே விசயம்தான் கனிமொழி விசயத்திலும் நடந்தது.
கனிமொழியும், சரத் குமார் ரெட்டி யும், தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் பிணிக்கு முறையிடக்கூடாது என்பதில் உறுதியாக கூறி வந்தனர். அவர்களுக்கு இந்த ரகசியம், சிறைக்குள் சென்ற உடனேயே பல கைதிகளின், மற்றும் சிறைத்துறை காவலர்களின் ஆலோசனைகளில் தெரிந்து விடும், தெரிந்து விட்டது. அதனால் அதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அமைச்சர் ஜகத் ரட்சகனும், டில்லியில் ராஜாத்தி குழுவிற்கு உதவி வரும் துறை என்பவரும் அதற்கு எதிராக ஏதோ தாங்கள் அதிக அக்காரை கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தினர். அவர்களுக்கு இதன் விவரம் தெரியாது. களிஞருக்கும், ராஜாத்திக்கும் விவரம் புரியவில்லை. ஏற்கனவே இவர்களை ஏமாற்றி ஒரு பெரிய அதிகாரி இப்போது அகதிகள் முகாமிற்கு அனுப்பப் பட்டவர் பல பத்து கோடிகளை சம்பாதித்து விட்டார் என்ற கருத்தும் இருய்க்கிறது.
உச்சநீதிமன்றம் மறுத்தது மட்டுமின்றி, குடர்ப்பத்திற்கை தாக்கலான பிறகுதான் கீழ் கோர்டில் பிணிக்கு அணுக வேண்டும் என்று வேறு கூறி விட்டது. இது பெரிய அடி. சிறைக்குள் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். கனிமொழிக்கு பயங்கர கோபம். தந்தையிடம் கடுமையாக பேச எண்ணி இருந்தார். அது களிஞருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் முதலில் கனிமொழியை தனியாக பத்து நிமிடம் சந்தித்தார். அப்போது முதலில் கலிஞர் கண்ணீர் விட்டு விட்டார். பாவம். மகளும் கண்ணீர் விட்டு விட்டார். திட்டு .வாங்காமல் தான் தஹ்ப்பித்த பிறகுதான், ராசாத்தியை உள்ளே அனுமதித்து அவருடன் பத்து நிமிடங்கள் மகளை சந்தித்து உரையாடினார்.
எப்படியோ, கனிமொழியை பழிவாங்க எண்ணிய குடும்பத்தின் பிற உர்ப்பினர்களுக்கு இது திருப்தியைத் தந்திருக்கும். ஆனால் அவர்களுக்கும் வருகிறது வரலாறு என்று கணிம்ழிகுழுவினர் கூறுகிறார்கள்.
கனிமொழியும், சரத் குமார் ரெட்டி யும், தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் பிணிக்கு முறையிடக்கூடாது என்பதில் உறுதியாக கூறி வந்தனர். அவர்களுக்கு இந்த ரகசியம், சிறைக்குள் சென்ற உடனேயே பல கைதிகளின், மற்றும் சிறைத்துறை காவலர்களின் ஆலோசனைகளில் தெரிந்து விடும், தெரிந்து விட்டது. அதனால் அதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அமைச்சர் ஜகத் ரட்சகனும், டில்லியில் ராஜாத்தி குழுவிற்கு உதவி வரும் துறை என்பவரும் அதற்கு எதிராக ஏதோ தாங்கள் அதிக அக்காரை கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தினர். அவர்களுக்கு இதன் விவரம் தெரியாது. களிஞருக்கும், ராஜாத்திக்கும் விவரம் புரியவில்லை. ஏற்கனவே இவர்களை ஏமாற்றி ஒரு பெரிய அதிகாரி இப்போது அகதிகள் முகாமிற்கு அனுப்பப் பட்டவர் பல பத்து கோடிகளை சம்பாதித்து விட்டார் என்ற கருத்தும் இருய்க்கிறது.
உச்சநீதிமன்றம் மறுத்தது மட்டுமின்றி, குடர்ப்பத்திற்கை தாக்கலான பிறகுதான் கீழ் கோர்டில் பிணிக்கு அணுக வேண்டும் என்று வேறு கூறி விட்டது. இது பெரிய அடி. சிறைக்குள் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். கனிமொழிக்கு பயங்கர கோபம். தந்தையிடம் கடுமையாக பேச எண்ணி இருந்தார். அது களிஞருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் முதலில் கனிமொழியை தனியாக பத்து நிமிடம் சந்தித்தார். அப்போது முதலில் கலிஞர் கண்ணீர் விட்டு விட்டார். பாவம். மகளும் கண்ணீர் விட்டு விட்டார். திட்டு .வாங்காமல் தான் தஹ்ப்பித்த பிறகுதான், ராசாத்தியை உள்ளே அனுமதித்து அவருடன் பத்து நிமிடங்கள் மகளை சந்தித்து உரையாடினார்.
எப்படியோ, கனிமொழியை பழிவாங்க எண்ணிய குடும்பத்தின் பிற உர்ப்பினர்களுக்கு இது திருப்தியைத் தந்திருக்கும். ஆனால் அவர்களுக்கும் வருகிறது வரலாறு என்று கணிம்ழிகுழுவினர் கூறுகிறார்கள்.
Monday, June 20, 2011
கனிமொழிக்கு பிணை மறுப்பு யாருக்கு எதிரானது?
கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் சீ.பி.ஐ. சம்பந்தப்படுத்தி கித்து செய்துள்ளது. அவர்தான் 'கலைஞர் டிவி.க்கு" முக்கிய ஆலோசகர் என்றும், அவர்தான் கலைஞர் டிவி.யை இயக்கியவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்படிக் குற்றம் சட்ட எதுவாக "அமிர்தம்" கொடுத்த சாட்சியையும், "ஆசிர்வாதம்" கொடுத்த சாட்சியையும் சீ.பி.ஐ. கூறுகிறது. நமக்கு தெரிந்து "கலைஞர் டி.வி.க்கு பின்னாலிருந்து இயக்கியவர் அல்லது அதற்கான முயற்சியை செய்தவர் இதே அமிர்தம் என்பதுதான். அமிர்தத்திற்கு, தயாநிதி மேலும், கலாநிதி மேலும்தான் அதிக பாசம் உண்டு. அவர்களது "சன் டி.வி.க்கு எதிராக கலைகர் டி.வி.யை நிறுத்துவதில் கனிமொழிக்கு பங்கு உண்டு என்று அவர் நினைக்கலாம் அல்லது கோபப்படலாம்.
அதற்காக அவர் அப்படி ஒரு "சாட்சியத்தை" கொடுத்திருக்கலாம். ஆனாலும் முழுமையாக "குடும்பத்திற்குள்" ஒருவர் அவர். அவரை " குடும்பத் தலைவர்"தான் கேட்க முடியும் அல்லது "திசி திருப்ப" முடியும். ஆனால் "கனி வெளியே வந்தால்" சாட்சிகளை "கலைத்துவிடுவார்" என்பதுதான் சீ.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. "ராஜாத்தி குடும்பத்தை சேர்ந்த கனி" எப்படி "தயாளு குடும்பத்தை சேர்ந்த அமிர்தத்தை" கலைக்க முடியும்? இரண்டு குடும்பத்திற்கும் ஆகாது என்பது நாடறிந்த உண்மை. "கலைஞர்" மட்டும்தான் "அமிர்தம் என்ற சாட்சியை"கலைக்கும் வல்லமை கொண்டவர். அப்படியிருக்கையில் அவரை உள்ளே வைக்காமல் , கனியை சிறையில் வைப்பதனால் எப்படி "சாட்சியை" கலைக்காமல் சீ.பி.ஐ பார்த்துக் கொள்ளும்?
அடுத்த "சாட்சி" திருச்சிகாரரான "ஆசிர்வாதம்". அவர் " கனிமொழி அடிக்கடி கலைஞர் டி.விக்கு வந்து போவார்" என்று சாட்சி சொன்னாராம். இது எப்படி "கனிமொழியை குற்றவாளியாக ஆக்கும்?" இந்த "சாட்சியான ஆசிர்வாதம்"என்பவர் ஆ.ராஜாவின் உதவியாளராக இருந்தவர். அவர் முன்னால் ரயில்வே ஊழியர். இப்போது ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஏதோ நம்மூர் அதிகாரி ஆயிற்றே என்று டில்லியில் இவரை நம்பி ஆ.ராஜா தனது உதவியாளராக வைத்திருந்தார். பொதுவாக ராஜா நம்பி பழகிய பல உடையார் சமூக நண்பர்களில் இவரும் ஒருவர்..இவர் ராஜாவிடம் முரண்பட்டு வந்தபோது, "தயாவால்" அணுகப்பட்டு, ராஜாவிடம் இருந்த "பல ஆவணங்களையும், போடோ படங்களையும்" கூட எடுத்துக் கொண்டு "தயாவிடம்" கொண்டு பொய் கொடுத்து விட்டார். அதனால்தான் அவர் "தயாவின்" போட்டியாளர் "கனிக்கு" எதிராக "சாட்சி" சொல்லியுள்ளார்.இந்த "ஆசிர்வாதத்தை" கனி பிணையில் வந்தால் மட்டும் கலைத்து விடமுடியுமா?
"ஆசிர்வாதம், அமிர்தம்" ஆகியோரை கலைக்கும் திறமை அல்லது பலம், "குடும்பத் தலைவருக்கு" மட்டுமே உள்ளது. அவர் வெளியே இருக்கும் போது, கனி வெளியே வந்தால் கலைத்து விடுவார் என்பது எத்தனை ஏமாற்று? தவிர கலைஞர் கூற்றுப்படியே , தனது மகள் எந்த குற்றமும் அறியாதவர் என்றும், அவரை கலைஞர் டி.வி.யில் அவரது விருப்பத்திற்கு மாறாக "பங்குதாரர்" ஆகியது தான் தான் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளாரே? ஆப்டியானால் "விசாரிக்கப் படவேண்டியவர்" கலைஞர்தானே? எதற்கு கனிமொழியைபோய் துன்புறுத்துகிறார்கள்?
இப்போது உச்சநீதிமன்றம் கனிமொழிக்கும் , சரத்குமார் ரெட்டிக்கும் "பிணை மறுத்துவிட்டது" . விசாரணை நீதிமன்றத்தில், " பெண் என்ற காரணத்தை காட்டி, 437 பிரிவின் கீழ், குற்றப்பத்திரிகை வைத்த பிறகு, "பிணை கேளுங்கள்" என்று ஒரு நல்ல ஆலோசனையையும் கூறியள்ளது. இந்த ஆலோசனை சிலரது " வயிற்ரை கலக்கத் "தொடங்கியுள்ளது. ஒரு பெரும் "ஊடக பெருசசாளி" விரைவில் கைதாவார் என்ற செய்தி இருக்கிறது. அந்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் அவர் மாட்டுவார் என்றும் தெரிகிறது. அவருக்கும் இதே நிலைதானே உச்சநீதிமரம் கூட எடுக்கும். அல்லது எடுக்க வேண்டும். அவரையும் "விசாரணை நீதிமன்றத்தில்" பிணை கேளுங்கள் என்றுதான் கூறும். ஆனால் அவருக்கு "பெண் என்ற அடிப்படையில்" எந்த பிரிவின் கீழும் பிணை கேளுங்கள் என்று கூறா முடியாதே? இதுதான் "தன் வினை தன்னை சுடுமா?"
சரி. "குடும்பத் தலைவர்" கனி மாட்டினால் பரவாயில்லை. தன் மகன் "கழகத்திற்கு பட்டத்து இளவரசனாக" வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராமே? அதனால்தான் வெறும்" நீலிக் கண்ணீர்" மட்டுமே கனிமொழிக்காக விடுகிறார் என்று சீ.ஐ.டி. காலனி நினைக்கிறதே? இந்த "உச்சநீதிமன்ற பிணை மறுப்பு" யாருக்கு எதிரானது?
அதற்காக அவர் அப்படி ஒரு "சாட்சியத்தை" கொடுத்திருக்கலாம். ஆனாலும் முழுமையாக "குடும்பத்திற்குள்" ஒருவர் அவர். அவரை " குடும்பத் தலைவர்"தான் கேட்க முடியும் அல்லது "திசி திருப்ப" முடியும். ஆனால் "கனி வெளியே வந்தால்" சாட்சிகளை "கலைத்துவிடுவார்" என்பதுதான் சீ.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. "ராஜாத்தி குடும்பத்தை சேர்ந்த கனி" எப்படி "தயாளு குடும்பத்தை சேர்ந்த அமிர்தத்தை" கலைக்க முடியும்? இரண்டு குடும்பத்திற்கும் ஆகாது என்பது நாடறிந்த உண்மை. "கலைஞர்" மட்டும்தான் "அமிர்தம் என்ற சாட்சியை"கலைக்கும் வல்லமை கொண்டவர். அப்படியிருக்கையில் அவரை உள்ளே வைக்காமல் , கனியை சிறையில் வைப்பதனால் எப்படி "சாட்சியை" கலைக்காமல் சீ.பி.ஐ பார்த்துக் கொள்ளும்?
அடுத்த "சாட்சி" திருச்சிகாரரான "ஆசிர்வாதம்". அவர் " கனிமொழி அடிக்கடி கலைஞர் டி.விக்கு வந்து போவார்" என்று சாட்சி சொன்னாராம். இது எப்படி "கனிமொழியை குற்றவாளியாக ஆக்கும்?" இந்த "சாட்சியான ஆசிர்வாதம்"என்பவர் ஆ.ராஜாவின் உதவியாளராக இருந்தவர். அவர் முன்னால் ரயில்வே ஊழியர். இப்போது ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஏதோ நம்மூர் அதிகாரி ஆயிற்றே என்று டில்லியில் இவரை நம்பி ஆ.ராஜா தனது உதவியாளராக வைத்திருந்தார். பொதுவாக ராஜா நம்பி பழகிய பல உடையார் சமூக நண்பர்களில் இவரும் ஒருவர்..இவர் ராஜாவிடம் முரண்பட்டு வந்தபோது, "தயாவால்" அணுகப்பட்டு, ராஜாவிடம் இருந்த "பல ஆவணங்களையும், போடோ படங்களையும்" கூட எடுத்துக் கொண்டு "தயாவிடம்" கொண்டு பொய் கொடுத்து விட்டார். அதனால்தான் அவர் "தயாவின்" போட்டியாளர் "கனிக்கு" எதிராக "சாட்சி" சொல்லியுள்ளார்.இந்த "ஆசிர்வாதத்தை" கனி பிணையில் வந்தால் மட்டும் கலைத்து விடமுடியுமா?
"ஆசிர்வாதம், அமிர்தம்" ஆகியோரை கலைக்கும் திறமை அல்லது பலம், "குடும்பத் தலைவருக்கு" மட்டுமே உள்ளது. அவர் வெளியே இருக்கும் போது, கனி வெளியே வந்தால் கலைத்து விடுவார் என்பது எத்தனை ஏமாற்று? தவிர கலைஞர் கூற்றுப்படியே , தனது மகள் எந்த குற்றமும் அறியாதவர் என்றும், அவரை கலைஞர் டி.வி.யில் அவரது விருப்பத்திற்கு மாறாக "பங்குதாரர்" ஆகியது தான் தான் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளாரே? ஆப்டியானால் "விசாரிக்கப் படவேண்டியவர்" கலைஞர்தானே? எதற்கு கனிமொழியைபோய் துன்புறுத்துகிறார்கள்?
இப்போது உச்சநீதிமன்றம் கனிமொழிக்கும் , சரத்குமார் ரெட்டிக்கும் "பிணை மறுத்துவிட்டது" . விசாரணை நீதிமன்றத்தில், " பெண் என்ற காரணத்தை காட்டி, 437 பிரிவின் கீழ், குற்றப்பத்திரிகை வைத்த பிறகு, "பிணை கேளுங்கள்" என்று ஒரு நல்ல ஆலோசனையையும் கூறியள்ளது. இந்த ஆலோசனை சிலரது " வயிற்ரை கலக்கத் "தொடங்கியுள்ளது. ஒரு பெரும் "ஊடக பெருசசாளி" விரைவில் கைதாவார் என்ற செய்தி இருக்கிறது. அந்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் அவர் மாட்டுவார் என்றும் தெரிகிறது. அவருக்கும் இதே நிலைதானே உச்சநீதிமரம் கூட எடுக்கும். அல்லது எடுக்க வேண்டும். அவரையும் "விசாரணை நீதிமன்றத்தில்" பிணை கேளுங்கள் என்றுதான் கூறும். ஆனால் அவருக்கு "பெண் என்ற அடிப்படையில்" எந்த பிரிவின் கீழும் பிணை கேளுங்கள் என்று கூறா முடியாதே? இதுதான் "தன் வினை தன்னை சுடுமா?"
சரி. "குடும்பத் தலைவர்" கனி மாட்டினால் பரவாயில்லை. தன் மகன் "கழகத்திற்கு பட்டத்து இளவரசனாக" வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராமே? அதனால்தான் வெறும்" நீலிக் கண்ணீர்" மட்டுமே கனிமொழிக்காக விடுகிறார் என்று சீ.ஐ.டி. காலனி நினைக்கிறதே? இந்த "உச்சநீதிமன்ற பிணை மறுப்பு" யாருக்கு எதிரானது?
Sunday, June 19, 2011
"ஜெ" அறிவித்த குழுவில், கல்வி வியாபாரிகள்.
வார,வார நமக்குத்தான் எதுவும் புரிவதில்லை. "சமச்சீர் கல்வி" என்றால் என்ன என்று சென்ற ஆட்சியாளர்களுக்கு புரிந்த செய்தியில், கலைஞரின் கவிதைகளும், கட்டுரைகளும் உள்ளடக்கம் என்பதுனமக்கு புரியவில்லை. முத்துகுமரன் குழு அறிககையை அல்லது அவரது பர்ந்துரைகளை ஏற்காமல் இருப்பது சமச்சீர் கல்வி என்பதும் நமக்கு புரியாமல் இருந்தது. அதற்குப் பெயர் " பொதுப் பாடத் திட்டம்தான் " என்பது முற்போக்கு எழுத்தாளர்களுக்கு புரிந்தது போல நமக்கு புரியவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் மட்டும் ஏன் அதை கொண்டு வந்தார்கள் என்பது நமக்கு புரியவில்லை.மற்ற வகுப்புகளுக்கு கொண்டுவர நிறைய தயாரிப்புப்பணி அவசியமா என்பது நமக்கு புரிய வில்லை. அப்படியானால் இந்த உச்சநீதிமன்றம எப்படி இரண்டு வாரங்களுக்குள் மற்ற வகுப்புகளுக்கும் தயார் எய்யுங்கள் என்று கூறினார்கள் எனபது நமக்கு புரியவில்லை.
"கல்வியாளர்கள்தானே சமச்சீர் கல்வியை" திட்டமிட முடியும் என்று நாம் நினைத்தால், உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு அறிவிப்பு கொடுத்தால், தமிழக முதல்வர், " கல்வி வியாபாரிகளை" அந்த குழுவில் நியமித்து இருக்கிறார்களே? அதுவும் புரியவில்லை. முதல்வர் விவரம் தெரியாதவரா? அவர் நியமித்தால் அதில் "அர்த்தம்" இருக்கும் எனபது நமக்கு புரிகிறது. இரணூற்று மூன்று தொகுதிகளின் மக்களது வாக்குகளால் வெற்றி பெற்றவரை நாம் எப்படி சந்தேகிக்க முடியுமெனப்தும் நமக்கு தெரிகிறது. அதனால் அவர் செய்ததில் அர்த்தம் இருக்கும். அது என்ன அர்த்தம்? " கல்வியாளர்கள் என்று அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்டோரில்" இந்த நல்ல " கல்வியாளர்களை" முதல்வர் குழுவிற்காக தேர்ந்தெடுத்து இருப்பாரோ? அதில் வேறு வழி இல்லாமால், "பத்மா சேஷாத்ரி" முதலாளியும், டி.வி.எ.சீ. முதலாளியும் இடம் பெற்று இருப்பார்களோ? அதுதான் புரியவில்லை.
இந்த " மேட்டுக் குடி கல்வி நிலையங்களில்" முதல் தலைமுறை மாணவர்கள் அருகே கூட போக முடியாதே? படித்த பட்டம் பெற்ற பெற்றோர்களை நேரில் நேர்காணல் கண்டுதானே இந்த குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர் செர்ர்க்கையை நடத்துவார்கள்? அப்படிப்பட்ட " அனுபவத்தை கொண்டு " யார்கள் "சமச்சீர் கல்வி திட்டத்தை" உருவாக்குவார்களோ? இதுவும் நல்லமுயர்ச்சிதான். "சமச்சீர் கல்வி" வரக்கூடாது என்பதற்காக, "தங்கள் கல்வி நிலையத்தில்" உயர்தர கல்வி கற்றுத்தருவதாக விளம்பரம் செய்தே வியாபாரம் செய்யும் இந்த முதலாளிகள் கையாலேயே " சமச்சீர் கல்வியை" உருஆக்குவது என்பது நல்ல தந்திரம் தானே? "திருடன் கையிலேயே சாவியா?" என்று கீட்டு விடாதீர்கள். "பொதுத் தொகுதியில்" தலித்தை நிறுத்தி வெற்றிபெற வைக்கவில்லையா? அதுபோல எண்ணிக்கொள்ளுங்கள். எண்ணுவது என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் யதார்த்தம் கொஞ்சம் இடிக்கிறதே? என்கிறீர்களா?
தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக ஒரு "அரசானை" போட்டுள்ளது. அதில் " தனியார் சுய நிதி கல்வி நிலையங்கள்" வறுமையின் எல்லைக்கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 25 விழுக்காடு , இடம் ஒதுக்க வேண்டும் என்று இருக்கிறது. மேற்கண்ட "நல்ல கல்வி வியாபாரிகள்" அதை ஒதுக்கி உள்ளார்களா? இனொரு விபரீதமான அரசாணையையும் போட்டுள்ளது.அதில் " கிராமப்புற ஏழை எளிய மாநார்களில், யாரெல்லாம் முதல் மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களில் முதல் "ஐந்து விழுக்காட்டை" அந்த மாவட்ட "சிறந்த தனியார் கல்வி நிலையத்தில்" சேர்த்து, அவர்களுக்கு அரசே மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் கட்டணம் கட்ட வேண்டும்" என்றும் உள்ளது. இது சென்ற ஆட்சியில் " பகிரங்கமாக தனியார் கல்வி வியாபாரிகளை" அங்கீகரிக்கும் அரசானை இல்லையா? சரி. அந்த ஆணையை எத்தனை "தனியார் வியாபாரிகள்" அமுல்படுத்தினார்கள்?
இப்போது "கல்வியாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள வியாபாரிகள்" அத்தகைய அரசாணைகளை நிறைவேற்றி உள்ளனனரா? கல்வியாளர்கள் என்று நாம் நினைக்கும் "முத்துகுமர்ந்களோ" " எஸ்.எஸ்.ராஜகோபாலன்களோ" கல்வி வியாபாரத்தை எதிர்ப்பதால் " குழுவிற்கு வர தகுதியை இழந்து விட்டார்களோ?" சரி. கலைஞர் ஏற்படுத்திய, " கோவிந்தராஜன் குழு" பள்ளி கட்டணத்தை கறார் செய்ததால், "ரவிராஜ் பாண்டியன்" என்ற சொந்தகார நீதியரசரை சென்ற ஆட்சி கட்டண நிர்ணயத்திற்கு போட்டதே? அவர் சரியாக "ஸ்டாலின் மகள்" கல்வி வியாபாரம் செய்தால் "மழலை படிப்பிற்கே" 24000 ரூபாய் கட்டவேண்டும் என்றும், ஈரோடு பள்ளியில் 32000 ரூபாய் கட்டவேண்டும் என்றும் அறிவித்து உள்ளதே? இது எந்த "சமச்சீர்?"
மொத்தத்தில் இந்த " தனியார் கல்வி வியாபாரிகள்" எல்லோரும் சேர்ந்து கல்வி வணிகத்தை திறம்பட செய்ய முனைந்தால், அடஹ்ர்கு பெற்றோரும், அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பதுமட்டும்தானே புரிகிறது.
"கல்வியாளர்கள்தானே சமச்சீர் கல்வியை" திட்டமிட முடியும் என்று நாம் நினைத்தால், உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு அறிவிப்பு கொடுத்தால், தமிழக முதல்வர், " கல்வி வியாபாரிகளை" அந்த குழுவில் நியமித்து இருக்கிறார்களே? அதுவும் புரியவில்லை. முதல்வர் விவரம் தெரியாதவரா? அவர் நியமித்தால் அதில் "அர்த்தம்" இருக்கும் எனபது நமக்கு புரிகிறது. இரணூற்று மூன்று தொகுதிகளின் மக்களது வாக்குகளால் வெற்றி பெற்றவரை நாம் எப்படி சந்தேகிக்க முடியுமெனப்தும் நமக்கு தெரிகிறது. அதனால் அவர் செய்ததில் அர்த்தம் இருக்கும். அது என்ன அர்த்தம்? " கல்வியாளர்கள் என்று அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்டோரில்" இந்த நல்ல " கல்வியாளர்களை" முதல்வர் குழுவிற்காக தேர்ந்தெடுத்து இருப்பாரோ? அதில் வேறு வழி இல்லாமால், "பத்மா சேஷாத்ரி" முதலாளியும், டி.வி.எ.சீ. முதலாளியும் இடம் பெற்று இருப்பார்களோ? அதுதான் புரியவில்லை.
இந்த " மேட்டுக் குடி கல்வி நிலையங்களில்" முதல் தலைமுறை மாணவர்கள் அருகே கூட போக முடியாதே? படித்த பட்டம் பெற்ற பெற்றோர்களை நேரில் நேர்காணல் கண்டுதானே இந்த குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர் செர்ர்க்கையை நடத்துவார்கள்? அப்படிப்பட்ட " அனுபவத்தை கொண்டு " யார்கள் "சமச்சீர் கல்வி திட்டத்தை" உருவாக்குவார்களோ? இதுவும் நல்லமுயர்ச்சிதான். "சமச்சீர் கல்வி" வரக்கூடாது என்பதற்காக, "தங்கள் கல்வி நிலையத்தில்" உயர்தர கல்வி கற்றுத்தருவதாக விளம்பரம் செய்தே வியாபாரம் செய்யும் இந்த முதலாளிகள் கையாலேயே " சமச்சீர் கல்வியை" உருஆக்குவது என்பது நல்ல தந்திரம் தானே? "திருடன் கையிலேயே சாவியா?" என்று கீட்டு விடாதீர்கள். "பொதுத் தொகுதியில்" தலித்தை நிறுத்தி வெற்றிபெற வைக்கவில்லையா? அதுபோல எண்ணிக்கொள்ளுங்கள். எண்ணுவது என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் யதார்த்தம் கொஞ்சம் இடிக்கிறதே? என்கிறீர்களா?
தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக ஒரு "அரசானை" போட்டுள்ளது. அதில் " தனியார் சுய நிதி கல்வி நிலையங்கள்" வறுமையின் எல்லைக்கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 25 விழுக்காடு , இடம் ஒதுக்க வேண்டும் என்று இருக்கிறது. மேற்கண்ட "நல்ல கல்வி வியாபாரிகள்" அதை ஒதுக்கி உள்ளார்களா? இனொரு விபரீதமான அரசாணையையும் போட்டுள்ளது.அதில் " கிராமப்புற ஏழை எளிய மாநார்களில், யாரெல்லாம் முதல் மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களில் முதல் "ஐந்து விழுக்காட்டை" அந்த மாவட்ட "சிறந்த தனியார் கல்வி நிலையத்தில்" சேர்த்து, அவர்களுக்கு அரசே மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் கட்டணம் கட்ட வேண்டும்" என்றும் உள்ளது. இது சென்ற ஆட்சியில் " பகிரங்கமாக தனியார் கல்வி வியாபாரிகளை" அங்கீகரிக்கும் அரசானை இல்லையா? சரி. அந்த ஆணையை எத்தனை "தனியார் வியாபாரிகள்" அமுல்படுத்தினார்கள்?
இப்போது "கல்வியாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள வியாபாரிகள்" அத்தகைய அரசாணைகளை நிறைவேற்றி உள்ளனனரா? கல்வியாளர்கள் என்று நாம் நினைக்கும் "முத்துகுமர்ந்களோ" " எஸ்.எஸ்.ராஜகோபாலன்களோ" கல்வி வியாபாரத்தை எதிர்ப்பதால் " குழுவிற்கு வர தகுதியை இழந்து விட்டார்களோ?" சரி. கலைஞர் ஏற்படுத்திய, " கோவிந்தராஜன் குழு" பள்ளி கட்டணத்தை கறார் செய்ததால், "ரவிராஜ் பாண்டியன்" என்ற சொந்தகார நீதியரசரை சென்ற ஆட்சி கட்டண நிர்ணயத்திற்கு போட்டதே? அவர் சரியாக "ஸ்டாலின் மகள்" கல்வி வியாபாரம் செய்தால் "மழலை படிப்பிற்கே" 24000 ரூபாய் கட்டவேண்டும் என்றும், ஈரோடு பள்ளியில் 32000 ரூபாய் கட்டவேண்டும் என்றும் அறிவித்து உள்ளதே? இது எந்த "சமச்சீர்?"
மொத்தத்தில் இந்த " தனியார் கல்வி வியாபாரிகள்" எல்லோரும் சேர்ந்து கல்வி வணிகத்தை திறம்பட செய்ய முனைந்தால், அடஹ்ர்கு பெற்றோரும், அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பதுமட்டும்தானே புரிகிறது.
Friday, June 17, 2011
சமச்சீர்காரர்களுக்கு சமச்சீர் இல்லையா?
தமிழ்நாட்டில் சச்சரவில் உள்ள விவாதம் " சமச்சீர்கல்வி"பற்றியது. எல்லோரும் சமச்சீர் கல்வியை ஆதரிப்பதாக கூறிரார்கள். அது உண்மையா? கலைஞர் அரசு "சமச்சீர் கல்வி"யை அமுல் படுத்தியதாக , அதாவது ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்காவது அமுல்படுத்தியதாக திமுக கூறுகிறது. அது "சமச்சீர் கல்வியே" அல்ல என்றும், அது ஒரு " பொதுப்பாடம்"தான் என்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். "சமச்சீர் கல்விக்காக" திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட " முத்துகுமரன் குழுவோ" தான் கொடுத்த நூற்று ஒன்பது ஆலோசனைகளில் எந்த ஒருஆலொஸநலையையும் திமுக ஆட்சி அமுல்படுத்த வில்லை என்று கூறுகிறது.
"சமச்சீர் கல்வியை" ஆதரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு தமிழ்மகனும் எது சமச்சீர் கல்வி என்றே தெரியாமல் முழிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் ஏதோ சமச்சீர் கல்விக்கு எதிராக கைகள் நகர்த்தப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது என்ன என்றே புரியவில்லை. உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு ஆதரவு என்றும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது என்றும் அங்கும் சமச்சீ ர்கல்விக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்துவிட்டது என்றும் எல்லோரும் படிக்கிறார்கள். ஆனால் அந்த சமச்சீர் கல்வி எது, அதை எப்படி அமுல்படுத்துவது என்பது யாருக்கும் தெரிந்துவிட்டதா எபது நமக்கு தெரியவில்லை.
" என் எழுத்துக்களை" எதிர்க்கத்தான் அந்த "அம்மா" சமச்சீர் கல்வியை எத்ரிக்கிறார் என்று கலைஞர் அனுதாப லையை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, கல்வி அமைச்சரோ தாங்கள் "சமச்சீர் கல்விக்கு" எதிரி அல்ல என்று கூறுகிறார்கள். திமுக அமுல்படுத்தியது "அரைவேக்கட்டுத்தனமானது" என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார். அபப்டியானால் சிபிஎம் சொல்வது போலத்தான் அதிகவும் கூறுகிறது என்று அர்த்தமா? அந்த அறைவீகாட்டு கல்வியை அதிமுக வேண்டாம் என்றும், சிபிஎம் "வேம்டும்" என்றும் கூறுகிறார்களே?
இன்று ஒரு செய்தி. சென்னை சாந்தோம் "மாநகராட்சி பள்ளியில்" ஒன்றாம் வகுப்பிற்கு "பிழைகளே" சேரவில்லை. பக்கத்தில் இருக்கும், மீனவ, மற்றும் தலித், மற்றும் ஏழை குழந்தைகளைக் கூட "பெற்றோர்கள்" தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இப்படி ஒரு மனோ நிலை பெற்றோர் மத்தியில் இருக்குமானால் அது "சமச்சீர் கல்விக்கு" கிடைக்கும் ஆதரவா? இவாறு நமது மக்கள் மத்தியில் "மாநகராட்சி பள்ளிகளைவிட" தனியார் பள்ளிகள் சிறந்தது என்ற யானோ நிலை இருக்குமானால் எங்கிருந்து சமசீர் கல்வியை கொடுவர முடியும்? தஹ்னியார் கல்வி வணிகர்களை எப்படி விரட்ட முடியும்? " சமசீர் கல்வியின்" நோக்கம் அதுதானே?
முதலில் அதிகமாக "சமச்சீர் கல்வி"பற்றி பேசும் சிபிஎம், சிபியை, கட்சிகளின் தோழர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் சேர்த்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களை "மாநகராட்சி பள்ளிகளில்" குழந்தைகளை சேர்க்க சொல்லி வற்புறுத்த வேண்டும். அடுத்து "தலித்" இயக்கங்களின் தோழர்களும், முற்போக்கு பேசும் "கல்வியாளர்களும்"தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிறகுதான் நாம் திமுக, அதிமுக கட்சிகாரர்களை பார்த்து அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சொல்ல முடியும். அபப்டி செய்துவிட்டால், தானாகவே "கல்வி வணிகர்கள்" ஓடிப்போய் விடுவார்களே? அத்தகைய கட்டமைப்பு வந்தவுடன் "சமச்சீர் கல்விக்கான" சூழல் ஏற்பட்டுவிடுமே?
"சமச்சீர் கல்வியை" ஆதரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு தமிழ்மகனும் எது சமச்சீர் கல்வி என்றே தெரியாமல் முழிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் ஏதோ சமச்சீர் கல்விக்கு எதிராக கைகள் நகர்த்தப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது என்ன என்றே புரியவில்லை. உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு ஆதரவு என்றும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது என்றும் அங்கும் சமச்சீ ர்கல்விக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்துவிட்டது என்றும் எல்லோரும் படிக்கிறார்கள். ஆனால் அந்த சமச்சீர் கல்வி எது, அதை எப்படி அமுல்படுத்துவது என்பது யாருக்கும் தெரிந்துவிட்டதா எபது நமக்கு தெரியவில்லை.
" என் எழுத்துக்களை" எதிர்க்கத்தான் அந்த "அம்மா" சமச்சீர் கல்வியை எத்ரிக்கிறார் என்று கலைஞர் அனுதாப லையை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, கல்வி அமைச்சரோ தாங்கள் "சமச்சீர் கல்விக்கு" எதிரி அல்ல என்று கூறுகிறார்கள். திமுக அமுல்படுத்தியது "அரைவேக்கட்டுத்தனமானது" என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார். அபப்டியானால் சிபிஎம் சொல்வது போலத்தான் அதிகவும் கூறுகிறது என்று அர்த்தமா? அந்த அறைவீகாட்டு கல்வியை அதிமுக வேண்டாம் என்றும், சிபிஎம் "வேம்டும்" என்றும் கூறுகிறார்களே?
இன்று ஒரு செய்தி. சென்னை சாந்தோம் "மாநகராட்சி பள்ளியில்" ஒன்றாம் வகுப்பிற்கு "பிழைகளே" சேரவில்லை. பக்கத்தில் இருக்கும், மீனவ, மற்றும் தலித், மற்றும் ஏழை குழந்தைகளைக் கூட "பெற்றோர்கள்" தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இப்படி ஒரு மனோ நிலை பெற்றோர் மத்தியில் இருக்குமானால் அது "சமச்சீர் கல்விக்கு" கிடைக்கும் ஆதரவா? இவாறு நமது மக்கள் மத்தியில் "மாநகராட்சி பள்ளிகளைவிட" தனியார் பள்ளிகள் சிறந்தது என்ற யானோ நிலை இருக்குமானால் எங்கிருந்து சமசீர் கல்வியை கொடுவர முடியும்? தஹ்னியார் கல்வி வணிகர்களை எப்படி விரட்ட முடியும்? " சமசீர் கல்வியின்" நோக்கம் அதுதானே?
முதலில் அதிகமாக "சமச்சீர் கல்வி"பற்றி பேசும் சிபிஎம், சிபியை, கட்சிகளின் தோழர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் சேர்த்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களை "மாநகராட்சி பள்ளிகளில்" குழந்தைகளை சேர்க்க சொல்லி வற்புறுத்த வேண்டும். அடுத்து "தலித்" இயக்கங்களின் தோழர்களும், முற்போக்கு பேசும் "கல்வியாளர்களும்"தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிறகுதான் நாம் திமுக, அதிமுக கட்சிகாரர்களை பார்த்து அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சொல்ல முடியும். அபப்டி செய்துவிட்டால், தானாகவே "கல்வி வணிகர்கள்" ஓடிப்போய் விடுவார்களே? அத்தகைய கட்டமைப்பு வந்தவுடன் "சமச்சீர் கல்விக்கான" சூழல் ஏற்பட்டுவிடுமே?
Subscribe to:
Posts (Atom)
