"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.
மூன்று தமிழர் உயிர் காக்க ஒவ்வொரு தமிழரும், மனித உரிமை ஆர்வலர்களும் பெரு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவது வேகப்பட்டுள்ளது. அவரவர் பாணியில் " முறையிடுவது", வேண்டுகோள் விடுப்பது", " கெஞ்சுவது", "நினைவு படுத்துவது" , "சட்ட நியாயங்களை சொல்வது", "முன்னுதாரணங்களை காட்டுவது", உணர்சிகரமாக பேசுவது", உணர்ச்சி முழக்கங்களை இடுவது", "வழக்கின் முடிவுறாதன்மையை சுட்டிக் காட்டுவது", "சாட்சிகளை வர்ணிப்பது", "குற்றம் சட்டப்பட்டவருக்காக வாதாடுவது", "இன உணர்வோடு குரல் கொடுப்பது", "விடுதலை செய்ய கோருவது", " பதிலுக்கு எதிரிகள் மீது பாய்வது", " அழுது புலம்புவது" , " ஆத்திரப்படுவது", இப்படி பல முறைகளிலும் இன்று குரல்கள் கிளம்பி வருகின்றன. அவதரி "ஒருங்குபடுத்தி", இன்றைய " சாத்தியப்பாடான கோரிக்கையான" "மரணதண்டனையை" "ஆயுள் தண்டனையாக குறையுங்கள்" எண்பதை தொடர் முழக்கமாக முன்வைக்க வேண்டிய தருணம் இது. மனித உரிமை தளத்தில் நின்று கொண்டு அவ்வாறு எழுப்பும் கோரிக்கைக்கு உலகம் செவி சாய்க்க முடியும். "மரணதண்டனை ஒழிப்போம்" என்ற உலக முழ்ஜக்கத்துடன் நாமும் சேர்ந்து கொள்வோம்.
Wednesday, August 24, 2011
Monday, August 22, 2011
அமெரிக்க் மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?
இந்தியாவில் "யூனியன் பிரதேசங்கள்" எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே " மரணதண்டனையை" தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் " மரண தண்டனையை" தங்கள் மாநிலங்களில் "ரத்து" செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, "நெபராஸ்கா" அன்ர மாநிலத்தில் உள்ள "உச்சநீதிமன்றம்" மரணதண்டனைகளை "மின்சாரம் பாய்ச்சி" நடத்துவது, " கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்" என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.
இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற "அரசு கட்டமைப்போ" அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் "அமைச்சரவைகள்" இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, "மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக" குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற "அரசு கட்டமைப்போ" அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் "அமைச்சரவைகள்" இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, "மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக" குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
மரணதண்டனையை ரத்து செய்த நாடுகள்.
மரணதண்டனையை ரத்து செய்த நாடுகள்.
அனைத்து நாட்டு பொதுமன்னிப்பு சபை, தனது அறிக்கையில், 137 நாடுகள் "மரணதண்டனையை" ரத்து செய்து விட்டன என்றும், 2008 ஆம் ஆண்டு அர்ஜென்டைனா, சிலி, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் "சட்டவிரோதமானதாக" மரணதண்டனையை அறிவித்துவிட்டன என்றும் கூறியுள்ளது.மேலும் 2007 ஆம் ஆண்டு சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட 24 நாடுகளில் 1252 பேர் மரணதனடனையால் சாகடிக்கப்பட்டுள்ளனர். இது 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 1591 ஐ விட குறைவு. ஐம்பத்தியொரு நாடுகளில் கிட்டத்தட்ட 3350 பேர் இந்த தண்டனை மூலம் கொலைசெய்யப்பட்டுள்ளனர். உலகம்முழுவதும் 20000 கைதிகள் மரணதண்டனையை எதிர்பார்த்து சிறையில் இருக்கின்றனர்.
மரணதண்டனை சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நாடுகளும், நீக்கப்பட்ட ஆண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அல்பேனியா {2000 }, அன்டோர {1990 }, அங்கோலா { 1992 }, அர்ஜென்டைனா { 2008 }, ஆர்மேனியா{ 2003 }, அசெர்பைஜான் { 1998 }, ஆஸ்த்ரேலியா { 1984 }, ஆஸ்திரியா {1950 }, பெல்ஜியம் { 1996 }, பூடான் { 2004 }, போஸ்னியா -- ஹெர்ஸ்கோவினா { 1997 }, பல்கேரியா { 1998 }, கம்போடியா { 1989 }, கனடா { 1976 }, கேப் வேர்டே { 1981 }, சிலி {2008 }, கொலம்பியா { 1910 }, கூக் தீவுகள் { 2007 }, கோஸ்டா ரீகா { 1877 } கோடே டில்வைரா {2000 }, க்ரோஷயா {1990 }, சைப்ரஸ் { 1983 }, செக் குடியரசு { 1990 }, டென்மார்க் {1933 }, டிஜிபௌடி { 1995 }, டொமினிகன் குடியரசு { 1966 }, கிழக்கு தைமூர் { 1999 },மார்ஷல் தீவுகள்{ 1986 }, மவுரீஷியஸ் { 1995 }, மெக்சிகோ {2005 }, மைக்ரோனேசியா { 1986 }, மோல்டோவா { 1995 }, மொநாகா { 1962 }, மொண்டேநிக்ரோ { 2002 }, மொசாம்பிக் { 1990 }, நாம்பியா { 1990 }, நேபாளம் {1990 }, நெதர்லாந்து { 1870 }, நியூசிலாந்து { 1961 }, நிகாரகுவா { 1979 } , நியே , நார்வே { 1905 }, பலாவு , பனாமா { 1903 }, பராகுவே { 1992 }, போலந்து { 1997 }, போர்சுகல் { 1867 }, பிலிப்பைன்ஸ் { 2006 }, ருமேனியா { 1989 }, ரிவாண்டா { 2007 }, சமோவா { 2004 }, சன் மரினோ { 1848 }, சாவோ டோமே & பிரின்சிபி { 1990 }, செனெகல் {2004 }, ஈகுவேடார் { 1906 }, எஸ்டோனியா { 1998 }, பின்லாந்து { 1949 }, கிரீஸ் { 1993 }, கினியா- பிசாவா { 1993 }, ஹைதி {1987 }, ஹோண்டுரஸ்{ 1956 }, ஹங்கேரி { 1990 }, ஐஸ்லாந்து {1928 }, அயர்லாந்து { 1990 }, இத்தாலி { 1947 }, கிரிபாடி { 1979 }, லிபேரியா{ 2005 }, லியச் டெண்ச்டீன் { 1987 }, லித்துவானியா { 1998 }, லக்சம்பர்க் { 1979 }, மசிடோனியா { 1991 }, மால்டா { 1971 }, செர்பியா {2002 }, செய்செலஸ் { 1993 }, ஸ்லோவாக் குடியரசு { 1990 }, ஸ்லோவேனியா { 1989 }, சாலமன் தீவுகள் { 1966 }, தென்னாப்பிரிகா { 1995 }, ஸ்பெயின் {1978 }, ஸ்வீடன் { 1921 }, ஸ்விட்சர்லாந்து { 1942 }, துருக்கி { 2002 }, துர்க்மெனிஸ்தான் { 1999 }, துவாலு {1978 }, உக்ரைன் { 1999 }, இங்கிலாந்து { 1973 }, உருகுவே { 1907 }, உஸ்பெகிஸ்தான் { 2008 }, வனுவாட்டு { 1980 }, வாடிகன் நகரம் { 1969 }, வெனிசுலா { 1863 }.
இன்னமும் 70 நாடுகளில் மரணதண்டனை சட்டத்தில் இருக்கிறது. அவற்றில் "இந்தியாவும்" ஒன்று.
ஐ.நா. தீர்மானம்.
-------------------------------
2007 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு, " மரண தண்டனையை" ஒழிப்பதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தது. அப்போது சபையில் இருந்த உறுப்பினர்களில் "ஆகபெரும்பான்மையான" 104 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் "தீர்மானத்திற்கு ஆதரவாக" வாக்களித்தனர். 54 நாடுகள் எதிராகவும், 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியும் நின்றனர்.அந்த தீர்மானம் எண்: 62 / 149 . பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்திற்கு ஒரு "தார்மீக பலம்" உலக நாடுகள் மீது உண்டு. அதில் இந்திய நாடும் அடங்கும்.
ஐ.நா. போது சபையால் இதே "மரணதண்டனை ஒழிப்பிற்காக" இரண்டாவது தீர்மானம் ஒன்று 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அது முந்தைய ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தியதற்காக, ஐ.நா. போது செயலாளரை பாராட்டி நிறைவேற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஐ.நா.வின் அருப்பத்தைந்தாவது அமர்வில் மரணதண்டனை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும் அது கூறியது. இந்த இரண்டாவது தீர்மானத்திற்கு "ஆதரவு " முந்தியதை விட கூடியது. அப்போது 106 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். 46 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர். உலகப் போது மன்னிப்பு சபை, வாக்களிக்காத நாடுகளையும் இந்த தீர்மானத்தை அமுலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அனைத்து நாட்டு பொதுமன்னிப்பு சபை, தனது அறிக்கையில், 137 நாடுகள் "மரணதண்டனையை" ரத்து செய்து விட்டன என்றும், 2008 ஆம் ஆண்டு அர்ஜென்டைனா, சிலி, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் "சட்டவிரோதமானதாக" மரணதண்டனையை அறிவித்துவிட்டன என்றும் கூறியுள்ளது.மேலும் 2007 ஆம் ஆண்டு சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட 24 நாடுகளில் 1252 பேர் மரணதனடனையால் சாகடிக்கப்பட்டுள்ளனர். இது 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 1591 ஐ விட குறைவு. ஐம்பத்தியொரு நாடுகளில் கிட்டத்தட்ட 3350 பேர் இந்த தண்டனை மூலம் கொலைசெய்யப்பட்டுள்ளனர். உலகம்முழுவதும் 20000 கைதிகள் மரணதண்டனையை எதிர்பார்த்து சிறையில் இருக்கின்றனர்.
மரணதண்டனை சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நாடுகளும், நீக்கப்பட்ட ஆண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அல்பேனியா {2000 }, அன்டோர {1990 }, அங்கோலா { 1992 }, அர்ஜென்டைனா { 2008 }, ஆர்மேனியா{ 2003 }, அசெர்பைஜான் { 1998 }, ஆஸ்த்ரேலியா { 1984 }, ஆஸ்திரியா {1950 }, பெல்ஜியம் { 1996 }, பூடான் { 2004 }, போஸ்னியா -- ஹெர்ஸ்கோவினா { 1997 }, பல்கேரியா { 1998 }, கம்போடியா { 1989 }, கனடா { 1976 }, கேப் வேர்டே { 1981 }, சிலி {2008 }, கொலம்பியா { 1910 }, கூக் தீவுகள் { 2007 }, கோஸ்டா ரீகா { 1877 } கோடே டில்வைரா {2000 }, க்ரோஷயா {1990 }, சைப்ரஸ் { 1983 }, செக் குடியரசு { 1990 }, டென்மார்க் {1933 }, டிஜிபௌடி { 1995 }, டொமினிகன் குடியரசு { 1966 }, கிழக்கு தைமூர் { 1999 },மார்ஷல் தீவுகள்{ 1986 }, மவுரீஷியஸ் { 1995 }, மெக்சிகோ {2005 }, மைக்ரோனேசியா { 1986 }, மோல்டோவா { 1995 }, மொநாகா { 1962 }, மொண்டேநிக்ரோ { 2002 }, மொசாம்பிக் { 1990 }, நாம்பியா { 1990 }, நேபாளம் {1990 }, நெதர்லாந்து { 1870 }, நியூசிலாந்து { 1961 }, நிகாரகுவா { 1979 } , நியே , நார்வே { 1905 }, பலாவு , பனாமா { 1903 }, பராகுவே { 1992 }, போலந்து { 1997 }, போர்சுகல் { 1867 }, பிலிப்பைன்ஸ் { 2006 }, ருமேனியா { 1989 }, ரிவாண்டா { 2007 }, சமோவா { 2004 }, சன் மரினோ { 1848 }, சாவோ டோமே & பிரின்சிபி { 1990 }, செனெகல் {2004 }, ஈகுவேடார் { 1906 }, எஸ்டோனியா { 1998 }, பின்லாந்து { 1949 }, கிரீஸ் { 1993 }, கினியா- பிசாவா { 1993 }, ஹைதி {1987 }, ஹோண்டுரஸ்{ 1956 }, ஹங்கேரி { 1990 }, ஐஸ்லாந்து {1928 }, அயர்லாந்து { 1990 }, இத்தாலி { 1947 }, கிரிபாடி { 1979 }, லிபேரியா{ 2005 }, லியச் டெண்ச்டீன் { 1987 }, லித்துவானியா { 1998 }, லக்சம்பர்க் { 1979 }, மசிடோனியா { 1991 }, மால்டா { 1971 }, செர்பியா {2002 }, செய்செலஸ் { 1993 }, ஸ்லோவாக் குடியரசு { 1990 }, ஸ்லோவேனியா { 1989 }, சாலமன் தீவுகள் { 1966 }, தென்னாப்பிரிகா { 1995 }, ஸ்பெயின் {1978 }, ஸ்வீடன் { 1921 }, ஸ்விட்சர்லாந்து { 1942 }, துருக்கி { 2002 }, துர்க்மெனிஸ்தான் { 1999 }, துவாலு {1978 }, உக்ரைன் { 1999 }, இங்கிலாந்து { 1973 }, உருகுவே { 1907 }, உஸ்பெகிஸ்தான் { 2008 }, வனுவாட்டு { 1980 }, வாடிகன் நகரம் { 1969 }, வெனிசுலா { 1863 }.
இன்னமும் 70 நாடுகளில் மரணதண்டனை சட்டத்தில் இருக்கிறது. அவற்றில் "இந்தியாவும்" ஒன்று.
ஐ.நா. தீர்மானம்.
-------------------------------
2007 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு, " மரண தண்டனையை" ஒழிப்பதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தது. அப்போது சபையில் இருந்த உறுப்பினர்களில் "ஆகபெரும்பான்மையான" 104 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் "தீர்மானத்திற்கு ஆதரவாக" வாக்களித்தனர். 54 நாடுகள் எதிராகவும், 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியும் நின்றனர்.அந்த தீர்மானம் எண்: 62 / 149 . பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்திற்கு ஒரு "தார்மீக பலம்" உலக நாடுகள் மீது உண்டு. அதில் இந்திய நாடும் அடங்கும்.
ஐ.நா. போது சபையால் இதே "மரணதண்டனை ஒழிப்பிற்காக" இரண்டாவது தீர்மானம் ஒன்று 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அது முந்தைய ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தியதற்காக, ஐ.நா. போது செயலாளரை பாராட்டி நிறைவேற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஐ.நா.வின் அருப்பத்தைந்தாவது அமர்வில் மரணதண்டனை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும் அது கூறியது. இந்த இரண்டாவது தீர்மானத்திற்கு "ஆதரவு " முந்தியதை விட கூடியது. அப்போது 106 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். 46 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர். உலகப் போது மன்னிப்பு சபை, வாக்களிக்காத நாடுகளையும் இந்த தீர்மானத்தை அமுலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
Thursday, August 18, 2011
நாடு தழுவிய மக்கள் ஐ.மு.கூ.ஆட்சியை அடிபணிய வைத்துள்ளனர்.
அன்னா ஹசாரே அறிவிக்கும் "பட்டினிப் போராட்டத்தை" அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கைக்கு உட்பட்ட மக்கள்தான் கலந்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் அதாவது டில்லி காவல்துறை சொல்லும் நாட்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்ற கட்டளைகளை மீறியதால், "கைது" செய்யப்பட்டார். அதை எதிர்த்து "நாடெங்கும் மக்கள் எதிர்ப்பு அலை" வீசியது. சென்னையிலும், தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கூட, மக்கள் தெருவிற்கு வந்தனர். இது அன்னா ஹசாரே என்ற தனிநபருக்காக வந்த கூட்டமல்ல. மாறாக "ஊழலை எதிர்க்க வேண்டும்" என்ற உத்வேகத்திர்காக வந்த கூட்டம். முழுமையாக "பிற்போக்குத்தனம்" கொண்ட ஒருவர் என்று அவரது நெருக்கமானவர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு மனிதர் அப்படி "கூட்டத்திற்கு" வந்திருந்தார். ஏன் என்று ஆராய்ந்தால், அவர் உட்பட ஒவ்வொரு மனிதனும் தனது "அறிவுக்கு" உட்பட்டு ஒவ்வொரு கருத்தை நம்புகின்றனர். ஆனால் அவர்களது இதயத்தில், " தாய்நாட்டு பற்றும், ஜனநாயக உணர்வும்" ஒவ்வொருவருக்கும் ததும்பிக்கொண்டு இருக்கிறது. அதனாதான் எல்லா மட்டங்களிலிருந்தும் மனிதர்கள் இந்த "ஊழல் எதிர்ப்பில்" கலந்துகொள்ள வருகிறார்கள்.
அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி, நாடெங்கும் வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மத்திய ஆட்சியாளர்கள், " அன்னா ஹசாரே மக்கள் கூடிய ராமலீலா மைதானத்திலேயே" பட்டினி போராட்ட்டம் நடத்தட்டும் என்றும், மூன்று நாள்தான் அனுமதி எண்பதை, ஐந்து நாள், எழு நாள், பத்து நாள், கடைசியாக பதினைத்து நாள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எத்தனை மக்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளட்டும் என்று அறிவித்துள்ளனர். அதாவது இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையான, யாரும் எங்கும், எப்போதும் போராடலாம் என்ற அடிப்படை உரிமையை அமைதியாக மறுதலித்து, தாங்கள் அனுமதி கொடுத்தால்தான், பட்டிப் போராட்டம் கூட நடத்த வேண்டும் எண்பதை "பதிவு" செய்வதில் ஆள்வோர் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் எழுச்சிக்கும் ஒரு " வடிகால்" என்பதாக அந்த பட்டினி போரை அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிதம்பரம் கூறிய " காவல்துறைக்கு கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறிய வார்த்தைகள் பொய்த்து விட்டன. அதேபோல பிரதமர் கூறியபடி, " உச்ச நீதிமன்றத்திற்கு" அன்னா ஆதரவாளர்கள் செல்வதால், டில்லி காவல்துறை, நீதிமன்றம் போய் "விடுதலை" உத்தரவு பெற்றனர் என்ற கூற்றை, மறுத்து சிதம்பரம் "தான்தான் இல்லை காவல்துறையிடம்" விடுதலை செய்ய ஆலோசனை வழங்கினேன் என்ற சொல் "பொய்யாகிவிட்டது". இது சிதம்பரம் போன்ற " கொடூரமான பாசிஸ்டுகளுக்கு" கிடைத்த பதிலடிதான்.
அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி, நாடெங்கும் வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மத்திய ஆட்சியாளர்கள், " அன்னா ஹசாரே மக்கள் கூடிய ராமலீலா மைதானத்திலேயே" பட்டினி போராட்ட்டம் நடத்தட்டும் என்றும், மூன்று நாள்தான் அனுமதி எண்பதை, ஐந்து நாள், எழு நாள், பத்து நாள், கடைசியாக பதினைத்து நாள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எத்தனை மக்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளட்டும் என்று அறிவித்துள்ளனர். அதாவது இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையான, யாரும் எங்கும், எப்போதும் போராடலாம் என்ற அடிப்படை உரிமையை அமைதியாக மறுதலித்து, தாங்கள் அனுமதி கொடுத்தால்தான், பட்டிப் போராட்டம் கூட நடத்த வேண்டும் எண்பதை "பதிவு" செய்வதில் ஆள்வோர் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் எழுச்சிக்கும் ஒரு " வடிகால்" என்பதாக அந்த பட்டினி போரை அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிதம்பரம் கூறிய " காவல்துறைக்கு கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறிய வார்த்தைகள் பொய்த்து விட்டன. அதேபோல பிரதமர் கூறியபடி, " உச்ச நீதிமன்றத்திற்கு" அன்னா ஆதரவாளர்கள் செல்வதால், டில்லி காவல்துறை, நீதிமன்றம் போய் "விடுதலை" உத்தரவு பெற்றனர் என்ற கூற்றை, மறுத்து சிதம்பரம் "தான்தான் இல்லை காவல்துறையிடம்" விடுதலை செய்ய ஆலோசனை வழங்கினேன் என்ற சொல் "பொய்யாகிவிட்டது". இது சிதம்பரம் போன்ற " கொடூரமான பாசிஸ்டுகளுக்கு" கிடைத்த பதிலடிதான்.
Tuesday, August 16, 2011
மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.
மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.
இன்று மதியம் பெரியார் திராவிடக் கழகத் தலைவர் தோழர் குளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு" சார்பாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் தோழர் வேளுசாமியுடன் "ஊடவியலாலர்களை" சந்தித்தனர். அப்போது " பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டு, உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் பரிந்துரையின் பேரில், குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், "கருணை மனுவை" நிராகரித்த கொடுமையை கண்டிக்க "போராட்டங்களை" அறிவித்தனர். அதில் முதலில், ஆகஸ்டு 19 ஆம் நாள் காலை, பதினோரு மணிக்கு, சென்னை கடற்கரை சாலையில், "கலங்கரை விளக்கிலிருந்து" புறப்பட்டு, "உழைப்பாளர் சிலை" வரை "வேண்டுகோள் பேரணி" ஒன்று நடத்தப்படும் என்று கூறினர். அதில் "தமிழக அரசு" தனது பரிந்துரை மூலம் "மரண தண்டனையை" ரத்து செய்ய ஆளுநருக்கு ஆலோசை அனுப்பினால், அந்த "மூன்று தமிழகளின்" உயிர்கள் பதுகாகப்படுமேன்றனர். அதற்கு முன் உதாரணங்கள்" இருக்கின்றன என்றனர. சீ.ஏ.பாலன் வழக்கில், கேரள நம்பூதிரிபாட அமைச்சர்வை கொடுத்த "ஆலோசனையை" ஏற்று மத்திய அரசு "தன்ப்டனையை ஆயுள் தண்டனையாக" குறைத்தது என்று கூறினர். அதேபோல "தயா சிங் " வழக்கில் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, உச்சநீதி மன்றம் தணடனையை குறைத்தது என்றனர். மேற்கண்ட கோரிக்கைகாக அடுத்து "ரயில் மறியல்" போராட்டம் வரை திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.மேற்கண்ட "வேண்டுகோள் பேரணிக்கு" திரண்டு வரக் கோரினர். .
இன்று மதியம் பெரியார் திராவிடக் கழகத் தலைவர் தோழர் குளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு" சார்பாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் தோழர் வேளுசாமியுடன் "ஊடவியலாலர்களை" சந்தித்தனர். அப்போது " பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டு, உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் பரிந்துரையின் பேரில், குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், "கருணை மனுவை" நிராகரித்த கொடுமையை கண்டிக்க "போராட்டங்களை" அறிவித்தனர். அதில் முதலில், ஆகஸ்டு 19 ஆம் நாள் காலை, பதினோரு மணிக்கு, சென்னை கடற்கரை சாலையில், "கலங்கரை விளக்கிலிருந்து" புறப்பட்டு, "உழைப்பாளர் சிலை" வரை "வேண்டுகோள் பேரணி" ஒன்று நடத்தப்படும் என்று கூறினர். அதில் "தமிழக அரசு" தனது பரிந்துரை மூலம் "மரண தண்டனையை" ரத்து செய்ய ஆளுநருக்கு ஆலோசை அனுப்பினால், அந்த "மூன்று தமிழகளின்" உயிர்கள் பதுகாகப்படுமேன்றனர். அதற்கு முன் உதாரணங்கள்" இருக்கின்றன என்றனர. சீ.ஏ.பாலன் வழக்கில், கேரள நம்பூதிரிபாட அமைச்சர்வை கொடுத்த "ஆலோசனையை" ஏற்று மத்திய அரசு "தன்ப்டனையை ஆயுள் தண்டனையாக" குறைத்தது என்று கூறினர். அதேபோல "தயா சிங் " வழக்கில் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, உச்சநீதி மன்றம் தணடனையை குறைத்தது என்றனர். மேற்கண்ட கோரிக்கைகாக அடுத்து "ரயில் மறியல்" போராட்டம் வரை திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.மேற்கண்ட "வேண்டுகோள் பேரணிக்கு" திரண்டு வரக் கோரினர். .
Friday, August 12, 2011
அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....
அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....
இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் இருந்தும், மட்டக்கிளப்பு மாவட்டத்தில் இருந்தும், தமிழ்ப் பெண்களிடம் இருந்து வரும் செய்திகள் "ஆரோக்கியமாக" இல்லை. இரவில் "தமிழர் வீடுகளில்" சிங்கள காடையர் புகுந்து தமிழ் பெண்களை "பாலியல் வன்முறைக்கு" உட்படுத்துகிறார்கள். அந்த "சிங்கள காடையர்கள்" முகங்களில் "கிரீஸ்" என்று சொல்லப்படும் எண்ணையை தடவிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் சில நாட்களாக , " திரிகோணமலை" மாவட்டத்திலும், "மாட்டகிலப்பு" மாவட்டத்திலும் "தமிழர் வீடுகளில்" இரவு நேரத்தில் திடீரெனப் புகுந்து பேகல் மீது வன்முறை செய்கிறார்கள். அதனால் அலறிப்போன தமிழ்ப் பெண்கள், இரவுகளை "தூக்காமல்" கழ்க்கின்றனர். இந்த "கொடுமை" கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. " யாராவது தடுப்பீர்களா?" என்று அங்கிருந்து தமிழ் பெண்கள் அலறுகிறார்கள்.
இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் இருந்தும், மட்டக்கிளப்பு மாவட்டத்தில் இருந்தும், தமிழ்ப் பெண்களிடம் இருந்து வரும் செய்திகள் "ஆரோக்கியமாக" இல்லை. இரவில் "தமிழர் வீடுகளில்" சிங்கள காடையர் புகுந்து தமிழ் பெண்களை "பாலியல் வன்முறைக்கு" உட்படுத்துகிறார்கள். அந்த "சிங்கள காடையர்கள்" முகங்களில் "கிரீஸ்" என்று சொல்லப்படும் எண்ணையை தடவிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் சில நாட்களாக , " திரிகோணமலை" மாவட்டத்திலும், "மாட்டகிலப்பு" மாவட்டத்திலும் "தமிழர் வீடுகளில்" இரவு நேரத்தில் திடீரெனப் புகுந்து பேகல் மீது வன்முறை செய்கிறார்கள். அதனால் அலறிப்போன தமிழ்ப் பெண்கள், இரவுகளை "தூக்காமல்" கழ்க்கின்றனர். இந்த "கொடுமை" கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. " யாராவது தடுப்பீர்களா?" என்று அங்கிருந்து தமிழ் பெண்கள் அலறுகிறார்கள்.
Thursday, August 11, 2011
மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?
மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?
சிவகங்கை சீமான் "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கலைஞரால் ஒருமுறை வர்ணிக்கப்பட்டவர், வழமையாக "அறிவிக்கப்பட்ட மரணதண்டனைகளை" வைத்துக்கொண்டு "சித்து விளையாட்டு" விளையாடுவதில் கெட்டிக்காரர். ஏற்கனவே அவர் "அபசல்குறு"வின் மரணதண்டனையை "அமுல்படுத்தப்பாவ்கிறோம்" என்று அறிவித்து, அதன்மூலம் "பாகிஸ்தானை" தங்கள வழிக்கு கொண்டுவர மிரட்டியதில் "பிரபலமானவர்". பாகிஸ்தானுக்கும், அப்சல்குருவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்கலாம். உண்மைதான். எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் "இந்திய-பாகிஸ்தான்" விவகாரத்தில் அல்லது "சண்டையில்" தொடர்ந்து இரண்டு நாட்டு அரசாங்கமும், இதுபோன்ற " போட்டி" விளையாட்டுகளை, சாதாரணமாக "காய்" நகர்த்துவார்கள். இதே சிதம்பரம் ஏற்கனவே "பாகிஸ்தான்" அரசாங்கம், "இந்திய குடிமகனான சர்பஜத்சிங்" கிற்கு கொடுக்கப்பட்ட "மரணதண்டனையை" நிறைவேற்ற போகிறோம் என்று ஒரு "பூச்சாண்டி" காட்டியபோது, அடஹ்ர்கு பதிலடி கொடுப்பதாக காட்ட, "அப்சல்குரு"விற்கு தாங்கள் மரணதண்டனையை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு இரண்டு நாடுகளும் "சமாதானம்" ஆகி பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டனர்.
அப்சல்குரு காஷ்மிர்காரர். அவரை "நாடாளுமன்ற கட்டிடம்" மேல் நடந்த "தாக்குதலில்" சம்பந்தப்பட்டவர் என்று இந்திய நீதிமன்றம் "தண்டனை" கொடுத்திருக்கிறது. அவரை "காஷ்மீர் சுதந்திரத்திற்கு" போராடுபவர்கள் ஆதரிப்பது புரிய முடியும். ஆனால் "காஷ்மீர்" பிரச்சனையை வைத்து அரசியல் நடத்தும் பாகிஸ்தான் அரசும், அதேபோல "காஷ்மீர் தேசிய இனப்பிரச்சனையை" முஸ்லிம் பிரச்சனை என்று " திரித்து" விளையாடும் அரசியல்வாதிகளும் "கையாள்வது" அசிங்கமானது. அப்படி கையாண்டு வருவதன் விளைவு "அபசல்குருவை" தூகிலடக்கூடாது என்பது "முஸ்லிம் "பிரச்சனை" போலவும், "சர்பஜத்சிங்கை" தூகிலடக்கூடாது என்பது "இந்து மத" பிரச்சனை போலவும் இந்த அரசியல்வாதிகள் அல்லது "ஆளும் வர்க்க" அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டார்கள் அதற்காகவே ஒரு ஆளும்வர்க்க கட்சியை இவர்கள் "இந்துமதவெறி" கட்சியாக தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த "பா..ஜ.க.".கட்சி எப்போதும் "சர்பஜத்சிங்" பக்கம் பேசும். டில்லி இமாம் போன்றவர்கள் எப்போதும், "அப்சல்குரு" பக்கம் பேசுவார்கள். ஆனால் இந்த "இரண்டு கும்பல்களுக்கும்" அந்த இரண்டு "மரண தண்டனை " விதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இப்படி ஆளும்வர்க்க கட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டில் நாம் எப்போதும் மாட்டிக்கொள்வது உண்டு. இப்போதும் "இரண்டு நாட்கள்" முன்பு "பாகிஸ்தான் அரசு" சர்பஜத்சிங் மரணதண்டனை விசயமாக ஒரு காய் நகர்த்தலை செய்தது. உடனே நமது "உள்துறையும்" அப்சல்குருவின் மரணதண்டனை விசயமாக "கருணை மனுவை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரசு தலைவருக்கு" அறிக்கை அனுப்பியது. அதையொட்டியே, "ராஜீவ் கொலையில்" மரணதண்டனை வித்திக்கப்பட்ட " பேரறிவாளன், முருகன், சாந்தன்" ஆகியோருக்கும் "கருணை மனுக்களை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரு தலைவருக்கு" உள்துறை அறிக்கை அனுப்பியதாக செய்தி வந்துள்ளது. அப்சல்குரு விஷயம் "பாகிஸ்தான்-இந்தியா" அரசுகளின் அடரசியல் பிரச்சனை என்றால், "ராஜீவ் கொலை மரணதண்டனை" என்பது எந்த அரசியல் பிரச்சனை என்று நாம் கேட்கவேண்டும். அதுவும் அப்படித்தான். இது, "மத்திய-மாநில" அரசுகளுக்குள் உள்ள அரசியல் பிரச்சனை. அதுவும் "சிதம்பரம்_ஜெயலலிதா" அரசியல் பிரச்சனை.அது எப்படி? என்று வினா எழலாம். ஜெயலலிதாவும், சிதம்பரமும் "ராஜீவ் கொலை" விசயத்தில் ஒரே கருத்தை கொண்டவர்கள்தானே? அவர்களுக்குள் அந்த விசயத்தில் எப்படி அரசியல் பிரச்சனை வரும்?
இப்போது நடக்குமரசியலில், "கடந்தகால" அரசியல் விளையாடுகிறது. இப்போது "ஜெயலலிதா" உலகத் தமிழர்களால் பாராட்டப்படுகிறார். அதை "மத்தியஅரசோ" காங்கிரஸ் கட்சியோ விரும்பவில்லை. குறிப்பாக "ஜெயலலிதா" கான்க்கியர்ஸ் தலைமையை எதிர்த்து "காய்" நகர்த்துகிறார். அடஹ்ர்கு "தான் கேட்டும்" கீட அளவு "நிதியை" மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு ஓடிக்கொண்டிருக்கும் " தமிழினப் பிரச்சனை" ஒரு தந்திரமாகக் கூட பயன்படத்தான் செய்யும். இந்த நேரத்தில், "உலகத் தமிழர்" மத்தியில் கருணாநிதியின் "தலைமை நாற்காலி" பறிக்கப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது. அந்த "நாற்காலியை" ஜெயலலிதா பறித்துக் கொள்ளக்கூடாது என்பதில் மத்திய அரசுக்கு அக்கறை உண்டு. அதை உள்துறை மூலம் தான் அவர்கள் செய்யவேண்டும். அதேநேரம் ஜெயலலிதா சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிதம்பரமும் விடுவதாக இல்லை. சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்ப்பட்ட ஒரு திமுக முன்னால் எம்.எல்.ஏ. விடமிருந்து, அதாவது "சிதம்பரத்தின் முன்னால் பினாமி" இடமிருந்து, சிதம்பரம் சம்பந்தப்பட்ட பல " ரகசிய காணொளி குறுந்தகடுகள்" பிடிபட்டுள்ளன என்று கசிந்த செய்தி காரணமாக இருக்கலாம். இப்போது ஜெயலலிதாவிற்கு "பெருகி வரும்" தமிழின ஆதரவை உடைக்கவேண்டிய பொறுப்பு சிதம்பரத்திடம் உள்ளது.
கோத்தப்பாய் இந்த நேரம் பார்த்து உளறிக்கொட்டி, ஜெயலலிதாவின் புகழை "தமிழர்கள்" மத்தியில் உயர்த்திவிட்டான். அதை எப்படி உடைப்பது? "ராஜீவ் கொலையாளிகள்" என்று அறிவிக்கப்பட்டவர்கள் மேல் உள்ள "மரண தண்டனையை" இப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று கிளப்பி விட்டால், "தமிழின உணர்வாளர்கள்" ஜெயலலிதாவை பாராட்டும் வேலையை விட்டுவிட்டு, "ராஜிவ்கொலை" பற்றி பேசுவார்கள். அந்த சிக்கலில், "ராஜ்விகொலையை வைத்து " அரசியல் செய்வதில் சளைக்காத ஜெயலலிதா, "தமிழின உணர்வாலர்களிடமிருந்து" தனிமைப் படுவார். ஆகவே அந்த "ஆயுதத்தையும்" எடுக்க சிதம்பரம் துணிந்து விட்டார். ஆகவே இப்போது அதிகமாக பேசவேண்டியவர்கள், "மனித உரிமை" ஆர்வலர்கள்தான். "உலகப் போது மன்னிப்பு சபை" மற்றும் பி.யு.சீ.எல். ஆகிய பிரபல மனித உரிமை அமைப்புகள் "மரண தண்டனைக்கு" எதிராக "தொடையை" தட்டிக் கொண்டு போராடி வருகின்றன. "பேரறிவு, முருகன், சாந்தன்" பிரச்சனை வெறும் "தமிழினப்" பிரச்சனை அல்ல. அது "ஒரு மனித உரிமை "பிரச்சனை" சிதம்பரமே அரசியல் செய்யாதே. "மனிதர்களின் உயிர்களில்" உனது அரசியல் சதுரங்கத்தை ஆடாதே என்று நாம் குரல் எழுப்பவேண்டும்.
சிவகங்கை சீமான் "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கலைஞரால் ஒருமுறை வர்ணிக்கப்பட்டவர், வழமையாக "அறிவிக்கப்பட்ட மரணதண்டனைகளை" வைத்துக்கொண்டு "சித்து விளையாட்டு" விளையாடுவதில் கெட்டிக்காரர். ஏற்கனவே அவர் "அபசல்குறு"வின் மரணதண்டனையை "அமுல்படுத்தப்பாவ்கிறோம்" என்று அறிவித்து, அதன்மூலம் "பாகிஸ்தானை" தங்கள வழிக்கு கொண்டுவர மிரட்டியதில் "பிரபலமானவர்". பாகிஸ்தானுக்கும், அப்சல்குருவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்கலாம். உண்மைதான். எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் "இந்திய-பாகிஸ்தான்" விவகாரத்தில் அல்லது "சண்டையில்" தொடர்ந்து இரண்டு நாட்டு அரசாங்கமும், இதுபோன்ற " போட்டி" விளையாட்டுகளை, சாதாரணமாக "காய்" நகர்த்துவார்கள். இதே சிதம்பரம் ஏற்கனவே "பாகிஸ்தான்" அரசாங்கம், "இந்திய குடிமகனான சர்பஜத்சிங்" கிற்கு கொடுக்கப்பட்ட "மரணதண்டனையை" நிறைவேற்ற போகிறோம் என்று ஒரு "பூச்சாண்டி" காட்டியபோது, அடஹ்ர்கு பதிலடி கொடுப்பதாக காட்ட, "அப்சல்குரு"விற்கு தாங்கள் மரணதண்டனையை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு இரண்டு நாடுகளும் "சமாதானம்" ஆகி பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டனர்.
அப்சல்குரு காஷ்மிர்காரர். அவரை "நாடாளுமன்ற கட்டிடம்" மேல் நடந்த "தாக்குதலில்" சம்பந்தப்பட்டவர் என்று இந்திய நீதிமன்றம் "தண்டனை" கொடுத்திருக்கிறது. அவரை "காஷ்மீர் சுதந்திரத்திற்கு" போராடுபவர்கள் ஆதரிப்பது புரிய முடியும். ஆனால் "காஷ்மீர்" பிரச்சனையை வைத்து அரசியல் நடத்தும் பாகிஸ்தான் அரசும், அதேபோல "காஷ்மீர் தேசிய இனப்பிரச்சனையை" முஸ்லிம் பிரச்சனை என்று " திரித்து" விளையாடும் அரசியல்வாதிகளும் "கையாள்வது" அசிங்கமானது. அப்படி கையாண்டு வருவதன் விளைவு "அபசல்குருவை" தூகிலடக்கூடாது என்பது "முஸ்லிம் "பிரச்சனை" போலவும், "சர்பஜத்சிங்கை" தூகிலடக்கூடாது என்பது "இந்து மத" பிரச்சனை போலவும் இந்த அரசியல்வாதிகள் அல்லது "ஆளும் வர்க்க" அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டார்கள் அதற்காகவே ஒரு ஆளும்வர்க்க கட்சியை இவர்கள் "இந்துமதவெறி" கட்சியாக தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த "பா..ஜ.க.".கட்சி எப்போதும் "சர்பஜத்சிங்" பக்கம் பேசும். டில்லி இமாம் போன்றவர்கள் எப்போதும், "அப்சல்குரு" பக்கம் பேசுவார்கள். ஆனால் இந்த "இரண்டு கும்பல்களுக்கும்" அந்த இரண்டு "மரண தண்டனை " விதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இப்படி ஆளும்வர்க்க கட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டில் நாம் எப்போதும் மாட்டிக்கொள்வது உண்டு. இப்போதும் "இரண்டு நாட்கள்" முன்பு "பாகிஸ்தான் அரசு" சர்பஜத்சிங் மரணதண்டனை விசயமாக ஒரு காய் நகர்த்தலை செய்தது. உடனே நமது "உள்துறையும்" அப்சல்குருவின் மரணதண்டனை விசயமாக "கருணை மனுவை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரசு தலைவருக்கு" அறிக்கை அனுப்பியது. அதையொட்டியே, "ராஜீவ் கொலையில்" மரணதண்டனை வித்திக்கப்பட்ட " பேரறிவாளன், முருகன், சாந்தன்" ஆகியோருக்கும் "கருணை மனுக்களை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரு தலைவருக்கு" உள்துறை அறிக்கை அனுப்பியதாக செய்தி வந்துள்ளது. அப்சல்குரு விஷயம் "பாகிஸ்தான்-இந்தியா" அரசுகளின் அடரசியல் பிரச்சனை என்றால், "ராஜீவ் கொலை மரணதண்டனை" என்பது எந்த அரசியல் பிரச்சனை என்று நாம் கேட்கவேண்டும். அதுவும் அப்படித்தான். இது, "மத்திய-மாநில" அரசுகளுக்குள் உள்ள அரசியல் பிரச்சனை. அதுவும் "சிதம்பரம்_ஜெயலலிதா" அரசியல் பிரச்சனை.அது எப்படி? என்று வினா எழலாம். ஜெயலலிதாவும், சிதம்பரமும் "ராஜீவ் கொலை" விசயத்தில் ஒரே கருத்தை கொண்டவர்கள்தானே? அவர்களுக்குள் அந்த விசயத்தில் எப்படி அரசியல் பிரச்சனை வரும்?
இப்போது நடக்குமரசியலில், "கடந்தகால" அரசியல் விளையாடுகிறது. இப்போது "ஜெயலலிதா" உலகத் தமிழர்களால் பாராட்டப்படுகிறார். அதை "மத்தியஅரசோ" காங்கிரஸ் கட்சியோ விரும்பவில்லை. குறிப்பாக "ஜெயலலிதா" கான்க்கியர்ஸ் தலைமையை எதிர்த்து "காய்" நகர்த்துகிறார். அடஹ்ர்கு "தான் கேட்டும்" கீட அளவு "நிதியை" மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு ஓடிக்கொண்டிருக்கும் " தமிழினப் பிரச்சனை" ஒரு தந்திரமாகக் கூட பயன்படத்தான் செய்யும். இந்த நேரத்தில், "உலகத் தமிழர்" மத்தியில் கருணாநிதியின் "தலைமை நாற்காலி" பறிக்கப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது. அந்த "நாற்காலியை" ஜெயலலிதா பறித்துக் கொள்ளக்கூடாது என்பதில் மத்திய அரசுக்கு அக்கறை உண்டு. அதை உள்துறை மூலம் தான் அவர்கள் செய்யவேண்டும். அதேநேரம் ஜெயலலிதா சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிதம்பரமும் விடுவதாக இல்லை. சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்ப்பட்ட ஒரு திமுக முன்னால் எம்.எல்.ஏ. விடமிருந்து, அதாவது "சிதம்பரத்தின் முன்னால் பினாமி" இடமிருந்து, சிதம்பரம் சம்பந்தப்பட்ட பல " ரகசிய காணொளி குறுந்தகடுகள்" பிடிபட்டுள்ளன என்று கசிந்த செய்தி காரணமாக இருக்கலாம். இப்போது ஜெயலலிதாவிற்கு "பெருகி வரும்" தமிழின ஆதரவை உடைக்கவேண்டிய பொறுப்பு சிதம்பரத்திடம் உள்ளது.
கோத்தப்பாய் இந்த நேரம் பார்த்து உளறிக்கொட்டி, ஜெயலலிதாவின் புகழை "தமிழர்கள்" மத்தியில் உயர்த்திவிட்டான். அதை எப்படி உடைப்பது? "ராஜீவ் கொலையாளிகள்" என்று அறிவிக்கப்பட்டவர்கள் மேல் உள்ள "மரண தண்டனையை" இப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று கிளப்பி விட்டால், "தமிழின உணர்வாளர்கள்" ஜெயலலிதாவை பாராட்டும் வேலையை விட்டுவிட்டு, "ராஜிவ்கொலை" பற்றி பேசுவார்கள். அந்த சிக்கலில், "ராஜ்விகொலையை வைத்து " அரசியல் செய்வதில் சளைக்காத ஜெயலலிதா, "தமிழின உணர்வாலர்களிடமிருந்து" தனிமைப் படுவார். ஆகவே அந்த "ஆயுதத்தையும்" எடுக்க சிதம்பரம் துணிந்து விட்டார். ஆகவே இப்போது அதிகமாக பேசவேண்டியவர்கள், "மனித உரிமை" ஆர்வலர்கள்தான். "உலகப் போது மன்னிப்பு சபை" மற்றும் பி.யு.சீ.எல். ஆகிய பிரபல மனித உரிமை அமைப்புகள் "மரண தண்டனைக்கு" எதிராக "தொடையை" தட்டிக் கொண்டு போராடி வருகின்றன. "பேரறிவு, முருகன், சாந்தன்" பிரச்சனை வெறும் "தமிழினப்" பிரச்சனை அல்ல. அது "ஒரு மனித உரிமை "பிரச்சனை" சிதம்பரமே அரசியல் செய்யாதே. "மனிதர்களின் உயிர்களில்" உனது அரசியல் சதுரங்கத்தை ஆடாதே என்று நாம் குரல் எழுப்பவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
