Sunday, October 16, 2011

அணு உலையில் தலையைவிட்ட இந்திய பிரதமர்.

அணு உலைகள் மின்சாரம் தரும் என்று நாட்டு மக்களை ஏமாற்றி விட்டு, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை பொட்டுக் கொண்ட நமது பிரதமர், இப்போது கூடங்குளம் மக்கள் போராட்டம், ஜைதாபுரில் வர இருக்கும் அணு உலைகளை தயார் செய்யும் பிரான்ஸ் நாட்டு முதலாளியின் "பாதுகாப்பற்ற " நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் "அபராதம்" ஆகிய செய்திகளால் "நிலை குலைந்து" இருப்பது ஒருபுறம். இப்போது "முன்னால் அதிகாரிகளால்" போடப்பட்ட அவ்ழக்கில் "இந்நாள் பிரதமர்" மாட்டிக் கொண்டார் என்பது புது கதை.

முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம், முன்னாள் கடல்படை தலைவர் அட்மிரல் எல். ராமதாஸ், மத்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் கோபால்சாமி, அறிவு ஆணைய முன்னாள் உறுப்பினர் பி.எம்.பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலாளர் ஆர்.வேணுகோபால், ஆகியோரும் இணைந்து ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் அணு உலைகளுக்கு எதிராக போட்டுள்ளனர். இந்த வழக்கு அணு உலைகளை செயல்படுத்தும்போது, வருகின்ற "ஆபத்துகளில்" பாதிக்கப்படும் மக்களுக்கு "நட்ட ஏஅடு" கொடுப்பதற்காக் போடப்பட்ட "சட்டம்" நியாயமாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. இந்திய ஆரசியல் சட்டத்தின் அடிப்படையில், அணு உலை ஆபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு "இழப்பீடு" கொடுப்பதில் ,அணு உலையை "இயக்கிய" அந்நிய நாட்டு முதலாளிக்கும், அதை "விநியோகம்" செய்த தனியார் முதலாளிக்கும் "பொறுப்பு" அதிகம் உண்டு என்று இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.

ஏற்கனவே போடப்பட்ட "இழப்பீடு" சட்டம் போததாது என்றும், அணு உலைகளை இறக்கும் மற்றும் விநியோகிக்கும் தனியார் ஏகபோக கார்பரேட் முதலாளிகளை "முக்கிய" பொறுப்பு ஏற்க வைத்து அவர்களை " முக்கிய நட்ட ஈட்டை" கட்ட வைக்க வேண்டுமே ன்று இந்த வழக்கு கூறுகிறது. இந்த "கூற்று" இதிய நீதிமன்றங்களிலும், இந்திய மக்களின் மனங்களிலும், இந்திய நாட்டு பற்றாளர் மத்தியிலும், ஏகமனதாக வரவேற்கப்படும். ஆகவே இந்த அவ்ழக்கும் இன்னொரு தலைவலியை "மத்திய அரசுக்கு" ஏற்படுத்தும் என்பதை அணு உலை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொண்டு அதையே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.
உள்ளாட்சி தேர்தல் "திங்கள் அன்றும், புதனன்றும்" தமிழ்நாடெங்கும் நடக்கும். அதில் பத்து மாநகராட்சிகள், மற்றும் அறுபது நகராட்சிகள் முதல் கட்டத்திலும் மீதி இரண்டாம் கட்டத்திலும் நடக்கும். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், ஒவ்வொரு வாக்காளரும், "இரண்டு" வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று அந்த மாநகராட்சி தலைவர் அல்லது நகராட்சி தலைவர், அல்லது பேரூராட்சி தலைவர் என்ற பொறுப்புக்கு போடப்பட வேண்டிய வாக்கு. இன்னொன்று தாங்கள் வாக்காளராக இருக்கும் வட்டத்தில், நிற்கின்ற மாநகராட்சி உறுப்பினருக்கோ, நகராட்சி உறுப்பினருக்கோ, பேரூராட்சி உறுப்பினருக்கோ போடப்பட வேண்டிய வாக்கு.

இந்த பகுதிகளை தாண்டி,உள்ளாட்சியில் கிராமங்களில் இருக்கும் வாக்காளர்கள், "நான்கு" வாக்குகளை போடவேண்டும். அதாவது தங்கள் "மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கும், தங்கள் ஒன்றிய உறுப்பினருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற தலைவருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற உறுப்பினருக்கும் என நான்கு வாக்க்குகளை ஒவ்வொரு வாக்காளரும் போட வேண்டும். இந்த விளக்கத்தை எந்த அளவுக்கு "தமிழ்நாடு தேர்தல் ஆணையம்" புரிய வைத்துள்ளது என்பது நமக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்த "உள்ளாட்சிதேர்தல்" எந்த வகையில் "சட்டமன்ற, நாடாளுமன்ற" தேர்தல்களில் இருந்து "வேறுபட்டது" என்பதை புரிய வைக்க வில்லை என்பது நமக்கு தெரியும்.


சட்டமன்ற தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர் வெற்றிபெற்றால் "சட்டமன்ற உறுப்பினராக" ஆகிறார். அவர் சட்டமன்றம் சென்று தனது "தொகுதி மக்களுக்கு" என்ன செய்ய முடியும்? தங்கள் தொகுதியை பற்றி, தொகுதி மக்களது கோரிக்கைகளைபற்றி சட்டமனரத்தில் "வாய்ப்பு" கிடைத்தால் பேச முடியும். ஆனால் அவற்றை "நிறைவேற்றும்" அதிகாரம் அவருக்கு கிடையாது. அது "அமைச்சரவைக்கு" மட்டுமே உண்டு. அதேபோல "நாடாளுமணர் தேர்தலில்" நிற்கின்ற வேட்பாளர் "நாடாளுமன்ற உறப்பினர்" ஆகிறார். அவரும் நாடாளுமன்றத்தில், தங்கள் தொகுதி பற்றியோ, தொகுதி மக்களது கோரிக்கைகள் பற்றியோ, "பேசத்தான்" முடியும். அவற்றை அவரால் செய்ய முடியாது. அங்கும் "அமைச்சரவைதான்" அவற்றை நிறைவேற்ற முடியும். அதனால்தான் "புரட்சியாளர் லெனின்" இந்த நாடாளுமன்ற பாதையை " அரசுக்கும், மக்களுக்கும் மத்தியில் இடப்பட்டிருக்கும் ஒரு திரை" என்று குறிப்பிட்டார்.


ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் வித்தியாசமானவை. அவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு "திட்டமிடும் அதிகாரத்தை" கொடுக்கிறது. அதாவது வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் "மாநகராட்சி உறுப்பினரோ, நகராட்சி உர்ப்பினரோ, பேரூராட்சி உறுப்பினரோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினரோ, ஒன்றிய ஊராட்சயுருப்பினரோ, ஊராட்சி தலைவரோ, ஊராட்சிமன்ற உறுப்பினரோ" தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களின் "நலனுக்காகான" திட்டங்களை தீட்டுவதற்கு அந்த அவைகள் இடம் கொடுக்கின்றன. அத்தகைய திட்டங்களுக்கான "நிதியை" ஒதுக்க அவர் சம்பந்தப்பட்ட அவைகளில் கருத்து தெரிவித்து "பெற்று கொள்ள" வசதி செய்கினறன. உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற "ஒவ்வொரு உறுப்பினரும்" அவர் தலைவராக இருந்தாலும், உறுப்பினராக இருந்தாலும் "திட்டமிடவும்,.நிதி ஒதுக்கவும்" அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற "அதிகாரத்தை" அந்த உள்ளாட்சி அமைப்பு அளிக்கிறது.


ஆகவே உள்ளாட்சி அமைப்புகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, "கூடுதலான" அம்க்களுக்கு தேவையான "அதிகாரத்தை" பெற்றிருக்கிறார்கள். இந்த செய்தியை தேர்தல் ஆணையம் கூட மக்களுக்கு எடுத்து சொல்வது இல்லை. உள்ளாட்சிகளுக்கு "அதிகாரத்தை பரவலாக்க" நாடாளுமன்றம் "பண்ச்சாயத் ராஜ், நகர்பாளிகா" என்ற சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த போது, முதிர்ச்சி பெற்ற மாநில கட்சிகளின் தலைமைகள் அதை "ரசிக்கவில்லை". தங்களிடம் உள்ள "திரை" போன்ற அதிகாரத்தை மக்களுக்கான அதிகாரம் என்று "ஏமாற்றி கொடு" இருக்கும் போது, உண்மையான "அதிகார பரவலாக்கலை" மக்களுக்காக இந்த உள்ளாட்சிகள் கொண்டு வந்து விடுமே என்றும், அதனால் "தங்கள் அதிகாரம்" குறிக்கப்பட்டு விடுமே என்றும் அந்த கட்சி தலைமைகள் எண்ணி பார்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆகவே இந்த உண்மையை "உள்ளாட்சிகளின் உணமையான் ஆதிகாரத்தை" மக்கள் மத்தியில் கொண்டு சென்றால், அதை விளங்கிய பிறகு மக்கள் எங்காவது "குழுக்கள் முறையில்" அல்லது "குத்தகை" முறையில் அல்லது "ஏல முறையில்" தங்கள் ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்வார்களா? உள்ளாட்சியில் நிற்கும் வேட்பாளர்களிடம் "காசும், பொருளும்" வாங்கி கொண்டு வாகளிப்பார்களா? உண்மை அதிகாரம் தங்கள் உறுப்பினருக்கு இருப்பது தெரிந்தால், அதை பயன்படுத்த "சரியான" வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்ற "அவா" கூடாதா? அதன் மூலம் "ஊழல்" குறையாதா? அது கூடாது என்பதற்காகவே இந்த தேர்தல் ஆணையர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு உள்ளாட்சி அதிகாரம் எப்படி வேறுபட்டது என்று கூராமால் இருக்கிறார்களா?

Saturday, October 15, 2011

மன்னர் குடும்பத்திற்குள் குத்து வெட்டா?

மன்னர் குடும்பத்திற்குள் குத்து வெட்டா?
அரசாண்ட அல்லது அரசாலும் மன்னர் குடும்பத்திற்குள் குத்து வெட்டா என்றால், நம்மவர்களுக்கு புரிவது, " கருணாநிதி குடும்பம்தான்". ஆனால் அந்த குத்து வெட்டுதாந ஊரறிந்தது ஆயிற்றே? இது வெளிவராத ஒரு புகைச்சல். அதாவது மகிந்தா தனது தம்பி கோதபாயியை, "முடிசூட்ட" விரும்புகிறார் என்பதே புதிய தகவல். அதை பசில் விரும்பவில்லையாம். மகிந்தாவின் மகனும், மனிவியும் கூட விரும்பவில்லையாம்.


இந்த ' மன்னர் குடும்பத்தை" முழுவதுமே அந்த "கட்சியின்" மற்ற தலைவர்களும், தொண்டர்களும் விரும்பவில்லையாம்.இத்தகைய முரண்பாடுகளை பயன்படுத்தி அந்த குடும்பத்தினரை போற்குற்றங்களுக்காக விசாரிக்குமா உலக சமூகம் என்றால், அதுதான் இல்லை. மாறாக அமெரிக்காவும், இந்தியாவும் இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி, தனைகளுக்கு அதிக லாபம் தர மகிந்தாவை நிர்ப்பந்தித்து வரூகின்றன.,

Friday, October 14, 2011

தில்லிக்குள் நுழைந்த இண்டிகா வெடிமருந்துடன் வந்து வெடிக்காமல் பிடிபட்டதா?

இன்றைய ஊடகங்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை வீசின.அன்றாடம் ஒரு அதிர்ச்சி செய்தியை வீசுவது, ஊடகங்களுக்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். அலுவலகம் போக கிளம்பும் ஊழியர்களுக்கும், பள்ளிக்கு செல்ல புறப்படும் பிள்ளைகளுக்கும், அவர்களை அனுப்பி வைக்க வாசலுக்கு வரும் தாய்மார்களுக்கும் எப்படி சுவாரசியமாக இருக்கும்? வேதனையாகத்தானே இருக்கும்? அதுவும் தங்கள் வீடு மனிதர்கள் வெளியே போய்விட்டு பத்திரமாக திரும்புவார்களா என்ற கவலை வந்து விடாதா? ஊடகங்கள் எ இப்படி செய்கின்றன? அவர்களை கேட்டால் அரசுதானே இப்படி செய்திகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள்.

அரசு ஏன் இப்படி செய்திகளை கொடுகிறது? வெடிக்கும் போது கொடுக்கமாட்டார்களா? சரிதான். வெடித்தால் செய்தியை கொடுப்பார்கள். வெடிக்காமல் இறக்கும்போது கொடுப்பது ஏன்? என்று கேட்டால், வெடி வைத்தால் கொடுக்க மாட்டார்களா? என்றும் பதில் வரும். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. உண்மையிலேயே இப்படி வரும் செய்திகளை நாம் எல்லோரும் நம்பி விடுகிறோம். அதனால்தான் தொடர்ந்து இப்படி செய்திகளை அதிகாரிகள் கொடுக்கிறார்கள். அப்படிஎன்றால் இந்த செய்திகளை நம்பக் கூடாதா? நம்பக் கூடாது என்று சொல்வதற்கு நாம் யார்? நம்புங்கள் என்று சொல்வதற்கும் அரசு அதிகாரிகள் யார்? அன்ம்புவதும், நம்பாததும் அதை வாங்கிக் கொள்ளும் மக்களைப் பொறுத்து உள்ளது.

இந்தியாவில் வறுமையின் எல்லைக்கோடுக்கு கீழ் பெரும்பாலும் இல்லை என்று திட்டக் குழு துணைத்தலைவர் கூறினார். அவர் ரொம்ப பெரிய ஆல்ல்தான். அவரை யார் நம்பினார்கள்? அவர் கணக்கு போட்டு சொன்னார். நகர்புறத்தில் முப்பத்தி இரண்டு ரூபாய் மற்றும் கிராமப்புறத்தில் இருபத்தைந்து ரூபாய் சம்பாதிப்பவர்களை எல்லாம் வறுமை கோடிற்கு மேல் உள்ளவர்கள் என்று அவர் கணக்கு கூறினார். யார் நம்பினார்கள்? சோனியா காந்திக்கு வேண்டிய தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் அருணா ராய், வலிய ஒய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், அம்தச்சர்படர்வாதியுமான மோடி எதிர்ப்பாளர் ஹர்ஷ் மந்திர், முன்னால் அதிகாரி சக்சேனா ஆகியோர் கூட அதை நம்பவில்லையே? அதற்குபிரகுதானே பிரதமரும் அதை சர்ச்சிக் குரியது என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டார்? இதுபோல திகாரிகள் சொல்லிவிட்டால் நம்புவது என்று ஒன்று இருக்க முடியாது.

அப்படித்தான் பயங்கரவாதிகள் விசயத்திலும் பார்க்க வேண்டாமா? நாம் பயங்கரவாதத்தை எதிர்த்து விழிப்போடு இருக்க வேண்டாமா? விழிப்போடு இருக்க வேண்டும் என்பது உணமிதான். ஆனால் எது பயங்கரவாதம் என்று தெரிந்திருக்க வேண்டாமா? அரசு சொல்வது எல்லாம் பயங்கரவாதமா? அப்படியானால் மனித உரிமையாளர்கள் அரசு பயங்கரவாதம் என்று ஒன்றை சொல்கிறார்களே? அது என்ன? பயங்கரவாதம் இரண்டு அவ்கைப்படும் என்று புரிந்துகொள்ளலாமா? இதில் எந்த பயங்கரவாதம் அதிகம் ஆபத்தானது? இந்த சர்ச்சைக்கு போவதற்கு முன்பு எந்த, எந்த விசயத்தில் அரசு சொல்வதை நம்புவது எந்த விசயத்தில் கேள்விகள் கேட்பது என்றாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போது வந்திருக்கும் செய்தி, டில்லியில் ஒரு இண்டிகா சிறிய வாகனம், ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்தது. அதில் ஐந்து கிலோ ஆர.டி.எக்ஸ். என்ற பயங்கர வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையாய் இருந்தால் நிச்சயம் ரொம்ப பெரிய விசயம்தான். டில்லி என்ற இந்தியாவின் தலினகருக்கு, கலக்க ப்போம்மியாக இருக்கும் ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒரு வாகனத்தில் பெரும் வெடி பொருள்களை ஏற்றி அனுப்பி இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இது பெரிய விசயம்தான். உடனடியாக ஒரு ஏடு அந்த வெடிகளை கொண்டுவந்தவர்கள் "பாபர் கல்சா" என்று கூறியுள்ளது. இன்னொரு ஏடு அந்த வெடிகளை கொண்டு வந்தது "லஷ்கர் ஈ தொய்பா" என்று கூறியுள்ளது. இரண்டு ஏடுகளுக்கும் செய்தி கொடுப்பது ஏதோ ஒரு அதிகாரிதான். அப்படி செய்தி கொடுப்பவருக்கு "கொடுக்கும் செய்தியின்" வீரியம் தெரியாமல் கூட இருக்கலாம். அதை வெளியிடும் ஊடகத்திற்கு கூட, அந்த செய்தியின் "விளைவுகள்" புரியாமல் இருக்கலாம்.

ஆனால் "பாபர் கல்சா" எனபது சீக்கிய போராளிகள் அமைப்பு. அதன் தொடர்பை இந்த பிடிபட்டதாக கூறப்படும் வெடிகளுடன் சேர்ப்பது, அந்த "சுய நிர்ணய உரிமைக்கு" போராடும் சீக்கியர்களை மனத்தளவில் பாதிக்கும். அவர்கள் அருகே உள்ள இந்து மக்களை "கலவரப்படுத்தும்". இது பற்றி செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு கவலை இல்லை. அதேபோல "லஷ்கர் ஈ திபா" எனபது காஷ்மீர் விடுதலைக்கு போராடும் அமைப்பு. அது "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்" என்று இந்தியாவாலும், "விடுதலை பெற்ற காஷ்மீரம் " என்று போராளிகளாலும் சொல்லப்படும் பகுதியில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் அமைப்பு. அது இந்த வெடிகளில் தொடர்பு என்றால் "சம்பந்தப்பட்ட பலரையும்" கவலைக்கு உள்ளாக்கும். அதுபற்றி எந்த வணிக புத்தி ஊடகங்களுக்கும் கவலை இல்லை.

சரி. இப்போது ஜம்மு காஷ்மீர் முழுக்க பயங்கரமான ளவில் இந்திய ராணுவம் நிற்கிறது. அவர்களது முழுமையான ஆக்கிரமிப்பில் அந்த பகுதி இருக்கிறது. அப்படியானால் அங்கிருந்து இப்படி ஒரு பயங்கர வேத்களுடன் ஒரு வாகனம் டில்லி நோக்கி வரமுடியுமா? ராணுவமும், பாதுகாப்பிற்கு நிற்கும் உளவு துறையும், டில்லி அதிகாரிகளும் அனுமதித்தால் மட்டுமே வரமுடியும். அப்படி அவர்களே அனுப்பி இருப்பார்களா? அனுப்பி இருந்தால் எதற்காக அனுப்பி இருப்பார்கள்? அந்த வாகனத்தில் வந்தவர்கள் யாரவது பிடிபட்டிருக்கிரார்களா? யாரும் பிடிபடவில்லை.. எல்லோரும் தப்பிவிட்டார்கள் என்று அந்த செய்தி கூறுகிறது. அப்படியானால் அவர்களை "தப்பவிட்டு விட்டார்களா?". அல்லது அப்படி ஒரு வாகனமும், வரவில்லை, அதில் யாரும் பயங்கரவாதிகளும் வரவில்லை, எல்லாமே அதிகாரிகளின் நாடகம் என்பதுதான் உண்மையா? இவ்வாறு கேள்விகள் எழ வேண்டாமா? அதுதான் பகுத்தறிவு?

ஒன்று சீக்கிய தேசிய இன சம்பந்தம். இன்னொன்று காஷ்மீர் தேசிய இனம் சம்பந்தம். அதாவது இரண்டு டேஹ்சிய இன போராட்டங்களிலும் சமந்தப்பட்ட "அப்சல் குரு", " தேவேண்டற்பல்சிங் புல்லார்" இருவரும் மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் வெலௌஇல், இந்த செய்திகள் பரப்பப்புகின்றன. அதுவும், உள்துறை இரண்டு மரண தண்டனைகள் பற்றிய முடிவேடுதளிலும், " சட்டமன்றம், நீதிமன்றம்" என்று சிக்கலை எதிர்கொள்ளும் போது, இந்த செய்திகள் பரப்பபடுகின்றன. அதற்கு இந்த டில்லி வெடிகளுடன் கூடிய வாகனம் பயன்படுத்த படுகிறது.

இப்போது டில்லிக்கு இருக்கும் "நெருக்கடியை" எண்ணிப்பாருங்கள். காஷ்மீர் விசயத்தில் முதல் மைச்சர் தனது கட்சியின் தொண்டருக்கே "காவல் சாவு' அவ்ந்ததில் மாட்டிக் கொண்டார். எதிர்க் கட்சி துள்ளி குதிக்கிறது. மக்கள் எழுச்சி பெற்று ராணுவம், காவல் துறை ஆகியோருக்கு எதிராக இருக்கிறார்கள். காஷ்மீரை விட்டு ராணுவத்தை அகற்ற "கோரிக்கைகளா" எழுந்து விட்டன. காஷ்மீர் பற்றி "ஆராய" மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிபுணர் குழு உள்துறை அமைச்சரிடம் தனது அறிக்கையி கொடுத்து விட்டது. அதை பகிரங்கமாக உள்துறை வைக்க வேண்டும் என்றும் அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர். பிரஷாந்த் பூஷன் "காஷ்மீர் மக்களின்" கருத்துக்களுக்காக வாக்கெடுப்பு வேட்னுமே ன்று வேறு கூறி, தனது அறை வரை 'அடிவாங்கி" விட்டார். அவரது அறையில் புகுந்து அடித்தவர்களை " நீதிமன்ற காவலுக்கு" கொண்டு செல்லும்போதும், அங்கே வந்து "அன்னா ஹசாரே" ஆட்களை அடித்து காவி உடைவாதிகள் "பகிரங்கமாக" கலாட்ட செய்வதை ஊடகங்களில் பார்க்கிறோம். அதை முன்கூட்டியே கண்டுபிடித்து "தடுக்க" டில்லியில் உளவு துறை வேலை செய்யவில்லை. அல்லது அவர்கள் ஏற்பாட்டில்தான் "அதுவே" நடந்துள்ளது என்பது தெரிகிறது.


இப்படி சூழலில், தில்லிக்குள் ஒரு வாகனம் "வெடிகளுடன்" வந்ததாம். பிடிபட்டதாம். ஆட்கள் ஓடிவிட்டார்களாம். யார் காதில் யார் பூ சுற்றுகிறார்கள்? இதில் ஒன்று புரிகிறது. உள்துறைக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், இப்போது காஷ்மீர் விசயத்தில் "வசமான சிக்கல்" ஏற்பட்டுள்ளது. அதற்கு பரிகாரம் தேட, "பிரஷாந்த் பூஷன்" மீது தாக்குதல், "வெடிகளுடன் வாகனம்" எல்லாம் ஏற்பாடு செய்யும் நிர்ப்பந்தம் உளவு துறைக்கு ஏற்பட்டுள்ளது. இது "நியாயமான" சந்தேகம்தானே? இதுகூட ஏற்படவில்லையானால், நாம் ஒரு "முட்டாளுங்க".

Thursday, October 13, 2011

ஸ்ரீராம் சேனா எதற்காக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளில் நுழைய வேண்டும்?

பொதுவாக நீதிமன்றங்களில் அல்லது அதன் வழக்கறிஞர்களின் அறைகளில் "பாதுகாப்பு" இல்லை என்ற கருத்தை , டில்லி நீதிமன்ற "குண்டுவெடிப்பு" பரப்பிக் கொண்டிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் " பிரஷான்ட் பூஷன்" என்ற பிரபல் வழக்கறிஞரை புகுந்து தாக்குவதும், தாக்கியவர்கள் ஸ்ரீராம் செனவினர் என்று அறிவிப்பதும், அதுவும் "காட்சி ஊடக நேர்காணல்" நேரத்தில் தாக்குவதும், "தற்செயலாக" நடந்தது என்று சொல்லிவிட்டு நழுவி விடலாமா? இப்போதெல்லாம் 'டில்லியில் நடக்கும்" எந்த செயலும் ஏதாவது "பின்னணி நோக்கம்" இல்லாமல் நடப்பது இல்லையே? அபப்டியானால் இந்த தாக்குதலில் எண்ண பின்னணி நோக்கம் இருக்கிறது?

முதலில் பிரஷாந்த் பூஷன் " அன்னா ஹசாரே" குழுவை சேர்ந்தவர். அண்ணா ஹசாரே காங்கிரசுக்கு எதிராக பரப்புரையில் சமீபத்தில் ஈடுபட்டு வருவது அந்த கட்சி தலைமைக்கு ஒரு பெரும் தலைவலியை தந்து கொண்டிருக்கிறது. அதனால் பா.ஜ.க.விற்குதான் பலன். அப்படி இருக்கையில் இந்துத்துவா சக்திகள் இந்த நேரத்தில் அண்ணா ஹசாரேவின் ஆளான பிரஷாந்த் பூசனை தாக்குவார்களா? வாய்ப்பில்லை. அதேநேரம் காஷ்மீரில் கருத்து கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியதற்குதான் இந்த தாக்குதல் என்று அவர்கள் கூறியதாகவும் வெளிவந்துள்ளது. அத்தகைய "மாற்று கருத்து" பா,ஜ,கவிற்கும் உண்டு, கான்க்கியர்சுக்கும் உண்டு. அப்படியானால் அந்த இரண்டு கட்சிகளுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம். ஆனால் பிரஷாந்த் பூஷனால் அதிக லாபம் பெரும் பாஜக வைவிட இந்த தாக்குதல் மூலம் அந்த பிரபல வழக்கறிஞரை மிரட்டி வைக்க வேண்டிய தேவை காங்கிரசுக்குதான் அதிகமாக இருக்கிறது.


ஒரே கல்லில் இரண்டு மானக்கை என்பதுபோல வழக்கறிஞரையும மிரட்டி, அதேபோல மற்றவருக்கும் வரும் என்று டில்லி அறிவு ஜீவிகளையும் மிரட்டி, காஷ்மீர் பற்றி ஆதரவாக பேச விடாமல் செய்யலாம். அதுபோலவே இனி காங்கிரசை எதிர்த்தால் அண்ணா ஹசாரே வுக்கும் இதுதான் என்று சுட்டி காட்டலாம். பாதுகாப்பான நீதிமன்ற அவ்ழக்கறிஞர் அறைகளுக்கே போய் அடிக்க முடியும், அன்னா ஹசாரே எண்ண "துக்கடா" என்று அதன் மூலம் காட்டலாம்.அதேசமயம் இந்துத்துவா சக்திகள்தான் அடித்தன என்று காட்டி, இந்துத்துவா பக்கம் அந்த அறிவுஜீவிகளை போக விடாமல் செய்யலாம். அதே இந்தத்துவா காகிரசிடமும் இருக்கிறது என்பதை தெரியவிடாமல் செய்யலாம். வழக்கறிஞர் அறைபோய் தாக்கியவர்கள் "திட்டமிடாமல்" தாக்கப்போகும் இடம் பற்றிய முன்னறிவு இல்லாமல் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். அதனால் ஏற்கனவே அங்கே இருந்த அவர்களது ஆட்கள் மூலம், காட்சி ஊடகம் நேர்காணலுக்கு வந்திருப்பதை அறிந்த பிறகுதான் தாக்குதலை நடத்தவேண்டும் என்று திட்டம் இருக்கலாம். அப்போதுதான் வர்களைத் தாக்குதல் நேதேன்கும் பரவி அதற்கே உரிய அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கும்.

தாக்குதல் நடத்திய அமைப்பிற்கு "ஸ்ரிராம்சென" என்று பயரிட்டது கூட, பெங்களூரில் தாக்குதலை பெண்கள் நாட்டிய நிகழ்வில் நடத்திய "அன்ஜெநேய சேனா" என்பதுபோல இருக்கிறது. அதாவது அந்த பெங்களூர் தாக்குதல் நடத்தியவர்கள் அதற்குபிறகு, சில வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். அந்த பெங்களூர் தாக்குதலுக்கு தலைமை ஏற்ற முத்தலீக் அதற்குபிறகு, தமிழர்கள் அடையாளத்தை வெறும் "இந்துதுவா அடையாளம்" என்று பரப்பி வருகிறார். அது தமிழர்கள் ஒற்றுமையை கலைக்க விரும்பும் டில்லிக்கு சாதகமான திட்டமிட்ட செயல்பாடு. அதுபோல இப்போது அறிமுகப்படுத்தப்படும் "ஸ்ரீராம் சேனா "வும் டில்லி அதிகார மையம் திட்டமிட்டு செய்த செயல்பாடாக இருக்கவே அதிக காரணங்கள் இருக்கின்றன. எப்படியோ நமது "ஆளும் கும்பல்" பயங்கரவாதம் செய்வதில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

Wednesday, October 12, 2011

மெட்ராஸ் பலகலையில் "அம்பேத்கர் வாசகர் வட்டம்" கூட்டம்.

இன்று நடந்த "அம்பேத்கர் பொருளியல் மையம்" சார்பாக "அம்பேத்கரும் தொழிலாளர் சட்டங்களும்" என்ற கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக " பலராமன்" கலந்து கொண்டார். பலராமன் தமிழ்நாட்டில் "தொழிலாளர் துறையில்" பல பத்து ஆண்டுகளாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அம்பேத்கர் "கருத்தியலில்" ஊறிப்போனவர். இந்த அம்பேத்கர் வாசகர் வட்டத்தை பேராசிரியர் தங்கராஜ் "விடாப்பிடியாக" தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில், பலராமன் எடுத்து வைத்த வாதங்களில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந் நேரத்திற்குள், "அம்பேத்கர் எப்படி தொழிலாளர்" நலன்களை கவனித்து அதற்கேற்ற முறையில் "முடிந்த ளவில்" பல சட்டங்களை இயற்றினார் என்பதை புட்டு, புட்டு, வைத்தார்.

அவர் கூறிய விவரப்படி, அம்பேத்கர் இயற்றிய சட்டத்தில், " 141 சட்டங்கள்" தொழிளாலருக்காக எழுதப்பட்டவை என்ற செய்தியை பலராமன் பகிர்ந்து கொண்டார். அவை தவிர சில சட்டங்கள் தான் அம்பேத்கருக்கு பிறகு, இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு இயற்றப்பட்டுள்ளன என்றார் பலராமன். அம்பேத்கரின் வாரிசுகள் இன்றுவரை அத்தகைய "தொழிலாளர் நல சட்டங்களின்" பலன்களை பெறவில்லை எனபதை நாம் பார்த்து வ்ருகிறோம்.

இம்மானுவேல் அடிகளாரை ஏன் "திருப்பி" அனுப்பினர்?

இந்தியா ஒரு "ஒற்றையாட்சி" அரசமைப்பு கொண்ட நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து "அழக தமிழர் மன்றம்" என்ற "ஜி.தி.எப்." தலைவரான "எழுபத்தேழு" வயதுடைய அருட் திரு . இம்மானுவேல் அய்யாவை, இங்கிலாந்தில் உள்ள "இந்திய தூதரகம்" இரட்டை விசா கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதைக்கூட, "டில்லி" மதிக்கவில்லை. அதனால் நேற்று இரவு சென்னை வந்து இறங்கிய 'அடிகளாரை" உடனேயே "டில்லியிலிருந்து மேலிடம்" உத்தரவு என்ற பெயரில், சென்னை விம்மான நிலையத்தில் உள்ள " எமிக்ரேசன்" அதிகாரிகள் அவர் பயணம் செய்து வந்த இடமான 'துபாய்" கே திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த செய்தியை "வெளியே" தெரிய விடாமல் பார்த்து கொண்டார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "அவர் விடுதலை புலி ஆதரவாளர்" என்றும் இந்திய அரசை தாக்கி பேசியுள்ளார் எனவும் கூறினார்கள்.

இந்த அதிகாரிகளுக்கு "இம்மானுவேல் அடிகளாரை" திருப்பி அனுப்பியதற்கான "காரணம்" சரியாக தெரியாது எனபது நமக்கு டேஹ்ரியும். ஆனாலும் தங்களது "புத்ஹ்டிசாளித்தனத்தை" காட்டுவதாக எண்ணிக் கொண்டு இப்படி '" ஏறுக்கு மாறாக" பதில் சொல்கிறார்கள். அவர்கள் "வாதமே" உண்மையான "காரணம்" என்றால், உங்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள "இந்திய ஹைகமிசனுக்கு" இது போன்ற "காரணங்கள்" தெரியாதா? அல்லது இதுபோன்ற "காரணங்களை" கூறி "யாரையும்" திருப்பி அனுப்ப எந்த "அனைத்து நாட்டு விதிகளும்" இடம் கொடுக்காது எனபது இந்திய அரசுக்கும் தெரியாதா? ஏன் இந்த விளையாட்டு? தமிழ்நாட்டில் ஒரு "ஆட்சி" ஈழத் தமிழருக்கு "ஆதரவாக" இருக்கிறதே என்ற "கோபம்" டில்லிக்கு இருக்கலாம். அதற்காக "தமிழ்நாட்டிற்குள்" வருகின்ற வெளிநாட்டுக் காரர்களை " தமிழக அரசுக்கு" தெரியாமலேயே "திருப்பி" அனுப்ப டில்லிக்கு எவ்வளவு "துணிச்சல்?".


இந்த "துணிச்சலை" தந்தது யார்? இதற்கு முன்னால் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது. அது டில்லி சொன்னதெற்கெல்லாம் "தலையாட்டி" கொண்டு இருந்ததே? இப்போதுள்ள "ஆட்சியாளர்கள்" மட்டும் ஏன் அப்படி செய்வதில்லை என்ற கோபம் டில்லிக்கு இருக்கிறதா? அதற்காக "அனைத்து நாட்டு விதிகளை" மீறி, மனித உரிமைமீறளாக, இததகைய வேலையை டில்லி செய்வதை "யார்" பொறுத்து கொள்ள முடியும். உலக மாந்தர்களுக்கு "கருத்து சுதந்திரம்" கிடையாது என்று இந்திய மண்ணில் "புதிய" ஒரு சரித்திரத்தை இந்த மத்திய அரசு எழுதப் போகிறதா? இத்தகையா "இழிவான" போக்கை எத்ரித்து " தமிழர்களும், மனித உரிமையாளர்களும்" கிளர்ந்து எழவேண்டும். கிளர்ந்து எழுவோம். டில்லியின் 'சர்வாதிகார" போக்கை எதிர்ப்போம். இனிமேலாவது "இந்தியா என்பது ஒரு ஒற்றையாட்சி நாடு" என்பதை விளங்கி கொள்ளுங்கள்.