Friday, November 25, 2011

சென்னையில் அணு உலை எதிர்ப்பு களம்

எல்லோரும் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? இல்லையா? என்று சர்ச்சை செய்துவரும் வேளையில் சென்னையில் இன்று " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற அமைப்பை அறிவித்து,பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன், உணவு பொருள்கள் விநியோக சங்கங்களின் தலைவர், மற்றும் உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளர், தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரும், நில உடமையாலருமான சென்னை வாழ் பிரமுகர் சந்தரேசன், அறிவியலாளரும், திருவனந்தபுரம் பிரமுகரும், அணு உலைகளின் ஆய்வுகள் மூலம் அணு பாதிப்பு கதிர்வீச்சை கருவி கொண்டு அளந்து விளக்கும் விஞ்ஞானியும், கர்நாடகாவில் கிகா அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் இப்போது ஈடுபட்டு வருபவரும், இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டவருமான வி.டி.பத்மநாபனும், முதலில் பேசினர்.

வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.

அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.

அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.

அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.

அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.

1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.

அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.

மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.

Wednesday, November 23, 2011

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.
இன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் "திட்டம்" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான "வால்மார்ட்" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் "ஆயிரம் கொடிகளை" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் "பெரும் பல்முனை அங்காடிகளை" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் "வால்மார்ட்" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.


பத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி "வால்மார்ட்" மாத்திரமே சந்தையை "கபளீகரம்" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது "தொழிலாளர்களை" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், "கடுமையான கெட்டபெயரை" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் "சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை "பொட்டலம்" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் "பரிவர்த்தனை". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு "உத்திரவாதமான" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.

இயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா? ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும்? இது "மனித உறவு" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும்? இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது "படாடோபமாக" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை "வஞ்சிக்கின்ற" ஒரு செயலே.

சில்லறை வர்த்தகத்தை அழிக்கவரும் அமைச்சரவை கூட்டம்.

நாளை மாலை இந்தியாவில் உலா வரும் சில்லறை வர்த்தகங்களுக்கு சாவுமணி அடிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடப் போகிறது. அதாவது சில்லறை வர்த்தகத்தில் "அந்நிய நேரடி மூலதனத்தை" உள்ளே நுழைப்பதற்காக ஒரு "நூற்று பத்து" பக்கம் கொண்ட அறிககையை தயார் செய்து "நிதி அமைச்சகம்" மத்திய அமைச்சகம் கையில் கொடுத்துள்ளது. அந்த பக்கங்களை படித்துக்கொண்டு வந்து மத்திய அமைச்சரவை நாளை மாலை கூடி, அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். அதில் எந்த துறைகளில் எல்லாம் அந்நிய நேரடி மூலதனம் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது. விவசாயம், மற்றும் அனைத்து பல் [பொருள்களிலும் அந்நிய மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரை வரலாம் எண்மரு அதில் குறிப்பு கொடுக்கப் பட்டு=ள்ளது. இது அந்த துறைகளில் இருக்கும் சில்லறை வணிகத்தை ஓரங்கட்டிவிடும்.

ஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் "கட்டுப்பாடு" வித்திப்பது போல அந்த அறிக்கையில் "படம்" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரிதான் வரவேண்டும். "பத்து லட்சம்" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் "பல்பொருள் அங்காடிகள்" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் "ஏமாற்று வேலை". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த "பட்டியலில்" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் "கடைகளை மூடிவிட்டு" ஓட வேண்டி வரும்.

ஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல " ஏமாற்று வேலை" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே "கூறு போட்டு" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. "வால்மார்ட்" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .

கார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்தது.?

கனிமொழி பிணைகாக, திமுக தலைவர் கலைஞர் டில்லி சென்று மன்மோகனையும், சோனியாவையும் சந்தித்து நெஞ்சுருக பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பாட்டியாலா நீதிமன்றம் என்ற விசாரணை நீதிமன்றத்திலும், டில்லியின் உயர நீதிமன்றத்திலும் கனிமொழிகான பிணை மறுக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தின் தோல்வி அல்லது அரசியல் அதிகாரம் தன்னால் பிரிதொரு அதிகாரத்தை எதிர்த்து செயல்பட முடியாத விளைவு. சீ.பி.அய். வழக்கறிஞர் கனிமொழிக்கு பிணை கொடுக்க மறுப்பு கூறவில்லை எனு அறிவித்த பின்னாலும், நீதிமன்றங்கள் மசியவில்லை. உச்சகட்ட அதிகாரம் அரசியல் அதிகாரம்தான் என்று எண்ணியவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை எப்படி விவரிப்பது என்று திணறிப் போனார்கள். ஏதோ ஒரு அதிகார சக்தி இடை மறிக்கிறது என்று மட்டுமே புலம்பினார்கள்.


ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று "ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே "பிணை கொடுக்க சொல்கிறது" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் "சிறப்பு விமானங்கள்" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் "உல்லாசபுரிகளுக்கும்" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா? அப்படி ஒரேயடியாக சொல்லமுடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் "பலம் வாய்ந்தவை". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.

நீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா?

டில்லி பாட்டியாலா நீதிமன்றம். கனிமொழி உட்பட விசாரிக்கப்படும் சீ.பி.அய். நீதிமன்றம். தொடர்ந்து கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் பிணை மறுக்கப்படும் இடம். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமரம் அழைத்து வராமலேயே திஹார் சிறை சென்று விசாரிக்கப் போகிறேன் என்று அந்த ஷைனி அறிவிக்கிறார். இது எண்ண புது கதை?

கனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.

அப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார்? அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும்? யார்? யார்? யார்? அது யார்? என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.

Thursday, November 17, 2011

நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே

நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே
இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றதாக கொக்கரிக்கும் இலங்கை அரசு, வன்னியில் ஒரு தமிழின அழிப்பு போரை நடத்தியது என்பது இன்று அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொல்லப்பட்ட செய்தி. அந்த்ச இன அழிப்பு போரில் ஈடுபட்ட எழு நாடுகளை பற்றிய செய்தியும் வெகுவாக அம்பலமாகி உள்ளது. அந்த எழு நாட்டு பின்புலத்தில், தெற்காசியாவின் வல்லரசு நாடாக இருக்கும் இந்திய அரசின் செயல்பாடும், மவுனமும் எந்த அளவுக்கு ஈழ இன அழிப்பு போரில் செயல்பட்டுள்ளது எனபதை நார்வே நாடு இப்போது தனது அறிக்கையாக கொடுத்துள்ளது.

அந்த அறிக்கை இந்திய பேரரசை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. ஈழ விடுதலை போரில் பல ஆண்டுகளாக சமாதான முயற்சியில் ஈடுபட்ட நார்வே நாட்டின், அமைச்சர் எரிக் சொல்டீம் இந்த அறிககையை முன்வைத்துள்ளது சாலப் பொருத்தமானது. முக்கிய நேரங்களில், போரின் முக்கிய நேரங்களில், இந்திய அரசு தலியிட்டு, விடுதலைப் புலிகள் காப்படர்ப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமா ஐருன்தது என்பதே நார்வேயின் வெளிப்படுத்தல். காங்கிரஸ் அரசு வந்த பிற்பாடு, ஈழ விடுதலையை ஒடுக்குவதில் காங்கிரஸ் அரசு அதிக கவனத்தை எடுத்துக் கொண்டது என்பதும் நார்வே அரசின் அம்பலப்படுத்தல். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் எப்படி தங்கள் சொந்த நலன், சொந்த விருப்பம், சொந்த மதிப்பீடு ஆகியவற்றை வைத்துக் கொண்டு அந்த போரின் கடைசி க்ட்டத்தில் விடுதலைப் புலிகளையும், தமிழீழ மக்களையும் தனிமை படுத்தி சாகடிப்பதில் கவனமாக இருந்தது எனபது அந்த அறிக்கையில் வெளிப்படுகிறது.


இனி போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சே என்று மட்டும் கூறுவதை விடுத்து, இந்திய அரசையும் சேர்த்து நாம் முழங்க வேண்டும் என்று நம்மை அழைப்பது போல இந்த நார்வே அறிக்கை அமைந்திருக்க வில்லையா?.

Tuesday, November 15, 2011

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?
ஸ்டெரிலைட் ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட இருக்கும்போதே, அது மகாராஷ்டிரா மாநிலத்தில் அல்போன்சா மாம்பழ தோட்டங்களை அழித்து விடும் என்று மாம்பழ உற்பத்தி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஒரு தாமிர உருக்கு ஆலை. அதாவது தாமிரத்தை பூமிக்கு அடியிலிருந்து எடுத்து, தாமிர கனிம வளங்களை கொள்ளையடிக்கும் தனியார் ஏகப்க முதலாளி வேதாந்தா அகர்வால், இளிச்சவாய் மாநிலம் என்ருதமிழ்நாட்டை கணடதால்,தொத்துகுடியில் 1995 இல் இறக்குமதி ஆனது.மாறி, மாறி வரும் ஆட்சியாளர்களின் ஆதரவோடு எத்தனை தொழிலாளரை ஆலைக்கு உள்ளேயே கொன்றாலும், மீண்டும்,மீண்டும் இந்த ஸ்டெரிலைட் ஆலை அனுமதி பெற்று இயங்க வைக்கப்படுகிறது.

இதன் முதலாளி நிறுவனமான வேதாந்தா இந்தியாவில் எத்தனை முறை தடைகளை அபராதங்களை,மூடல்களை எதிர்கொண்டாலும் "கையூட்டு" கொடுத்தே ஆலையை திறந்து மாசுகளை அள்ளி தெளித்தே தனது மோசமான வாழ்க்கையை நடத்தி வருகிறது. ஒரிஸ்ஸாவில், வேடாந்தாவின் வன அழிப்பு அத்துமீறல்களும், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. ஆலை மூடல் அம்பலமானது. பங்குதாரர் கூட்டத்தில் லண்டனில் வேதாந்தா கேள்விகள் கேட்கப்பட்டு அம்பலமானது. நார்வே நாட்டின் "ஓய்வூதியம் பெறுவோர்" தங்கள் பங்குகளை திரும்ப பெற்றனர். இதே வேடாந்தாவின் ஸ்டெரிலைட் நிறுவனம் எந்த விதி மீறலையும் சாதரணமாக தூத்துக்குடியில் செய்துகொண்டு இருக்கிறது. இதன் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும் அது பற்றி கவலைப் படாமல் பணம் கொடுத்தே தனது காரியங்களை செய்து வருகிறது.

இரண்டு நாட்கள் முன்பு ஒரு தொழிலாளி ஸ்டெரிலைட் ஆலை உள்ளேயே மரணம் அடைந்தும் இன்னமும் "சட்ட விரோத" வேலைகளை ஸ்டெரிலைட் ஆலை நிறுத்த வில்லை. இன்று "அதீனா" என்ற கப்பல் ஒன்று "தாமிர கைமன்களை" ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வாசலில் வந்து நின்று கொண்டு இருக்கிறது. அந்த துறைமுகத்திற்குள் 36000 டன் தாமிர கனிமம் தான் கொண்டுவரலாம். ஆனால் இந்த கப்பல் 42000 டன் கணிமத்துடன் வந்துள்ளது. இதுவே சட்ட விரோத செயல். அதனால் அதிகமாக உள்ள 6000 டன் தாமிரத்தை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு அதாவது புர்ஜர்களுக்கு மாற்றி எடுக்க ஸ்டெரிலைட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இன்று அதற்கான பர்ஜர்கள் தயார் ஆகிவிட்டன. ஆனால் காற்று அதிகமாக வீசியதால் நாளை இறக்கலா என இருக்கிறார்கள்.

கப்பல் மேலிருந்து கீழே உள்ள சிறிய பர்ஜர்களில் 6000 தங்களை கொட்டும்போது, கடலிலும் அவை விழா நேரிடும். ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த "தாமிர கனிமம்" மலை போல குவிக்கப்பட்டிருக்கும். அந்த "பச்சை மலையை" அருகில் சென்னு கூட காண முடியாது. அத்தனை நெடி வீசும். மூக்கால் தாங்க முடியாது. இப்போது அந்த தாமிர கனிமம் கடலிலே கலப்பதால், கடல் வாழ் உயிரினங்கள் சாகும்.கடும் மாசு கிளம்பும். கடலையே களங்கப்படுத்தி விடும். அத்தகைய நடவடிக்கை நாளை நடக்கப் போகிறது. நமது மத்திய, மாநில அரசுகள் அதைகானதது போல இருக்கின்றன.தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கஸ்டம்ஸ் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கள் நலனை மட்டுமே பேணுவதால் இது நடக்க போகிறது.