சென்னை ஊடகமே கேரள அரசின் பொய்யை பரப்ப உதவுவதா?
கடந்த சில நாட்களாக சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு இணையதளத்தின் மீது சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டிற்கு பெறும் கோபம் வந்துவிட்டது. அந்த இணைய தளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை காரணம் காட்டி, அந்த கட்டுரையாளர் மீதும், அதன் ஆசிரியர் மீதும், அதன் வெளியீட்டாளர் மீதும் அவதூறு வழக்கு தொடுப்போம் என அந்த பிரபல நாடு தழுவிய ஆங்கில ஏட்டின் சென்னை பதிப்பிலிருந்து வழக்கறிஞர் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் முதல் அறிக்கையில் ஒரு கோடி ரூபாய் நட்டஈடு கேட்டும், இரண்டாவது அறிக்கையில் "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டும் மிரட்டல் விடப்பட்டுள்ளது.
அந்த இணைய தளம் பெயர் வீகென்ட் லீடர். { www .weekendleader .com } அந்த கட்டுரையார் பெயர் "ராதிகா கிரி". அவர் statesman என்ற ஆங்கில ஏட்டின் சிறப்பு ஊடகவியலாளர். அவர் தனது கட்டுரையில் ஏன் இந்த சென்னை ஆங்கில ஏட்டில் முல்லைபெரியார் விசயத்தில் " சார்பற்ற நிலை" எடுக்காமல் கேரள சார்பு நிலை எடுக்கிறார்கள்? என்று வினவி இருக்கிறார். அதற்கு அந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் சென்னை பிரிவில் எல்லா பொறுப்புகளிலும் "மலையாளிகள்" இருப்பதுதான் காரணமா? என்றும் கேட்டிருக்கிறார். முல்லை பெரியார் பெயரையே ஏன் அவர்கள் முல்லபெரியார் என்று மலையாள உச்சரிப்பில் போடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். ஏற்கனவே எம்ஜீஆர் காலத்திலேயே 1978 இல் திட்டமிட்டு கேரள மலையாள மனோரமா ஏட்டில் "பீதியை" உருவாக்க எழுதியதையும் அப்போது அந்த கருத்தை கேரள மின்சார வாரிய தலைவர் பரமேஸ்வரன் நாயர் கூறியதையும் எடுத்து காட்டி இருக்கிறார்.
இத்தகைய உண்மை கருத்துக்களை கொண்ட கட்டுரை சென்னை ஆங்கில ஏடான "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டிற்கு "சூட்டை" கிளப்பி விட்டது. அதனால்தான் அவர்கள் வீகன்ட்லீடர் இணைய தள ஏட்டிற்கு மிரட்டலாக "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டு வக்கீல் நோடிஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த சென்னை பதிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா தனது "சார்பு நிலையை" மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அதை இன்று அவர்களது ஏட்டின் வெளியீடுகள் காட்டிவிட்டன. அதை வின் காட்சி ஊடக செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நாங்களும் சொல்லிவிட்டோம்.
இன்றைய இதழில், எல்லா நாளேடுகளும், ஆங்கில ஏடுகளான தி ஹிந்து, நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ், டெக்கான் கிரநிகள் உட்பட தமிழ் ஏடுகளும், "சட்டசபை தீர்மானத்தை" முதல் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதாவது முல்லைபெரியார் பற்றிய
தமிழக சட்டமன்ற தீர்மானம் ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் கொண்டது என்று புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.எல்லா கட்சிகளும் ஒட்டுமொத்தமாக் சேர்ந்து தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு "துணையாக" நிற்கும் மகத்தான நிகழ்வை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய "ஊடக கடமையை" சரியாக செய்துள்ளன. ஆனால் இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" மட்டும் அந்த செய்தியை "ஒன்பதாம் பக்க" செய்தியாக ஆக்கி, அதற்கு முதல் பக்க கீழ்பகுதியில் ஒரு "தொடர்பை" கொடுத்துள்ளது. ஏன் இந்த விபரீத புத்தி? இது "மலையாள இனஉணர்வா?" இப்படி ஒரு கேள்வியை அனைவரும் எழுப்ப எதுவாக அந்த செய்தி வெள்யீடு உள்ளது.
அந்த ஏட்டின் சென்னை பதிப்பை பார்த்து நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். செல்வி.ஜெயலலிதாவின் "கொடும்பாவியை" எரித்த கேரள வெறியர்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? எங்கள் முதல்வரது தீர்மானம் உங்களுக்கு அவ்வளவு "கசக்கிறதா?". இந்த செய்தியை "ஓரங்கட்டி" வெளியிடும் அளவு கூட "கேரளாவிலிருந்து தமிழக தேவாரம் பகுதிக்கு" ஓடிவந்த தமிழர்கள் செய்தியை நீங்கள் மட்டும் வெளியிட வில்லையே? அது ஏன்? தி ஹிந்து கூட அதை வெளியிட்டதே? அதேபோல இதே சென்னை பதிப்பான நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏட்டில் வெளியிடப்பட்ட "கேரள மனித உரிமை ஆணைய" கருத்தையோ, கேரள அரசு வழக்கறிஞரின் கருத்தையோ, கேரள உயர்நீதி மன்றத்தில் நிபுணர் குழு சார்பாக "பரமேஸ்வரன் நாயர்" முன்வைத்த கருத்தையோ இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏன் வெளியிடவில்லை? அவை எல்லாமே கேரளாகாரர்களால் கூறப்பட்ட "தமிழக அரசின் நிலை சார்பான" கருத்துக்கள என்பதனாலேயே?
இப்படி ஒரு ஏடு "ஒரு சார்பு நிலை" எடுக்கலாமா? தமிழ்நாட்டில் விற்க வேண்டும் என்று கருதிகூட அந்த இதழால் "சார்பற்ற நிலை எடுத்து உண்மைகளை" போட முடிய வில்லையே? அது ஏன்? அதற்கு "இன வெறி" காரணமாக இருக்கிறதா? சரி. அப்படி உண்மை செய்திகளை சார்பற்ற நிலையில் வெளியிட முடியவில்லை. கேரள டிரச்போர்ட் போன்ற விளம்பரங்கள் வாங்கி போடுவதற்காக என்றுகூட நாம் இறங்கிவந்து ஏற்றுக்கொள்வோம். ஆனால் வீகன்ட்லீடர் இணைத்தளம் மீது அனுப்பிய வக்கிள்நோடிசில் கூறியுள்ளபடி அவர்களிடம் "தேசிய உணர்வு, நாற்றுபற்று" இருப்பதாகவும் தெரியவில்லையே? இன்று அவர்களது ஏட்டில் முதல் பக்கத்தில் அவர்கள் முதல்வரின் சட்டபேரவை தீர்மானத்தை வெளியிடவில்லை என்ற் அக்குற்றம் இருக்கும்போதே, வண்ண, வண்ண படங்களுடன் முதல் பக்கத்திலேயே, "சென்னையில் மலையாள படங்களுக்கு சினிமா கொட்டகைகள் தடை" என்று போட்டு பயந்துபோய் தடை செய்துள்ள சென்னை சினிமா கொட்டகைகளை " கலவரம்" மூட்டும் நோக்கத்தோடு அசிங்கப்படுத்தி செய்தி வெளியிடிருக்கிரார்களே? அது ஏன்?
அவர்களுக்கு செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அரசின் "சட்ட ஒழங்கை" கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? தலைநகர் சென்னையில் மட்டும்தான் "தமிழர்-மலையாள" பிரச்சனை அடிதடி ஆகாமல் இருக்கிறது என்ற "நல்லெண்ணத்தை" கெடுக்க எண்ணுகிறார்களா? பிரதமரும், உச்சநீதிமன்றமும் கூறிய பிறகு, ஊமன் சாந்தியே அமைதியாகி விட்டார். ஆனால் இவர்கள் சென்னையில் ஊடகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே? இங்கே ஒரு "ரத்த மோதலுக்கு" தயார் செய்கிறார்களா? இதுபோல்தானே "டேம் 999 " எடுத்த ஷோகன் ராய் அண்ணன்காரன் "விமல் ராய்" இங்கே சென்னை "ஆசிய நெட்" தலைவராக இருந்துகொண்டு அந்த ஊடகத்திலே "பீதியை" கிளப்புகிற வேலையை செய்ததையும், அவர் தம்பி மூலம் படம் எடுத்து கேரள மக்களை பீதி அடைய செய்ததையும் "தாமதமாக " நாம் உணர்ந்து "திட்டமிட்ட சகோதரர்களின் "சதியா" என்று வினாவை எழுப்பி
வருகிறோம். அதேபோல்தான் இவர்களும் செய்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் அந்த ஏடு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் எதற்காக "பாதுகாப்பு" கேட்டார்கள்? தாங்கள் "தவறான, தமிழ் மக்களுக்கு விரோதமான" செய்திகளை வெளியிடுகிறோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால்தானே கேட்டார்கள். மதுரையில் இருந்து இன்னொரு ஆங்கில ஏட்டின் நிருபர் "கேரளாவில் விரட்டப்பட்ட" தமிழர்கள் பற்றி எழுதினால் எதற்காக இவர்களது சென்னை பதிப்பின் அலுவலகத்திலிருந்து அவரை "மிரட்ட வேண்டும்?". இப்படி சென்னையில் அமர்ந்துகொண்டே "தவறுகள் செய்யாதீர்கள்" என எச்சரிக்கை செய்கிறோம்.
இதே ஏட்டில் இருக்கின்ற ஒரு முக்கிய ஆசிரியர் "யாழ் சென்று போர் நேரத்தில்" நேர்மையான செய்திகளை வெளியிட்டதையும் நாங்கள் மறக்கவில்லை. ஆகவே எல்லா இன மக்கள் மத்தியிலும் "நல்லவர்கள்-கெட்டவர்கள்" இருவரும் இருக்கிறார்கள். நாங்கள் இந்த எட்டிலும் நல்ல, நேர்மையான சார்பற்ற ஊடகவியலாளர்களை எதிர்பார்க்கிறோம்.
Friday, December 16, 2011
Monday, December 12, 2011
இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைத்துவிடு
ஏன் இந்த கூச்சல்? எதற்காக முல்லைபெய்யார் அணை உடையுமா? என்று இல்லாத ஆராய்ச்சியைஎல்லாம் மலாயளிகள் கிள்ளப்பவேண்டும்? மின்சாரம் தங்கள் தேவைக்கு தகுந்தாற்போல இடுக்கி அணையிலிருந்து கிடைக்க வில்லை என்ற வருத்தம் மட்டுமே காரணமா? பிரவம் தொகுதியில் எர்ணாகுளத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறதே என்று "தயாரிப்பு ஏற்பாடு" மட்டுமே காரணமா? அணை 999 என்ற சினிமா படத்தை எடுத்த ஷோகன் ராய், இந்த பீதியை அதிகமாக கிளப்பிவிடும் " ஆசியா நெட்" என்ற டி.வி.யின் சென்னை தலைமையான "விமல் ராய்" இன் சகோதரர் என்பதனால் மட்டுமா காரணம்? கடலுக்கு வீணாக போகும் நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மாட்டோமென அடம்பிடிக்க என்ன காரணம்?
அந்த அணையின் அடியில் ஐந்தாயிரம் ஏக்கரில் "உள்ளாச்விடுதிகள், சுற்றுலா வாசங்கள்" வைத்துள்ளவர்களை சார்ந்து வாழும் அரசியல்வாதிகள் மட்டமா காரணம்? இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் தமிழ்நாட்டை சேர்ந்த "தேவிகுளம், பீர்மேடு" பகுதிகளை காமராசர் காலத்திலேயே தமிழர்கள் கேட்ட போது, அப்போதுள்ள காங்கிரஸ் கட்சிகாரர்கள், "குளமாவது, மேடாவது,போ" என்று பூகோள அறிவு, நில உரிமை அறிவு சிறிதும் இல்லாமல் கூறியது தானே அடிப்படை காரணம்? அந்த வட்டாரம் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்று இப்போது "முரசொலியில்" எழுதும் ரஹ்மான்கான் கட்டுரையை வெளியிடும் கலைஞர் அந்த செய்தியை "தான் ஆட்சியில்" இருக்கும் போது கூறாதது ஏன்?
இப்போது அடுத்தவர் ஆட்சிக்கு சிக்கல் வரட்டும் என்று எண்ணியாவது தமிழர் நலனுக்கான இந்த உண்மையை முரசொலியில் வெளியிட்டாரே? அதற்காக பாராட்டலாம். தனக்கு ஏக இந்தியா அடுத்தவருக்கு தமிழ்நாடு என்ற அவரது கொள்கை வாழ்க. இப்போது பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜெ.எம். ஹாரூன் ஒரு புதிய "கோரிக்கையை" முன்வைக்கிறார். அது "இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டிற்கு"கொடுத்துவிடு.என்பதே. அறுபது விழுக்காடு மக்கள்தொகை தமிழர்களாக இருக்கும் இடுக்கி நமக்கே. எழுபது விழுக்காடு சபரிமலை பக்தர்கள் தமிழர்களே எனபதும் அந்த கோரிக்கையை வலுப்படுத்தும்.
வளமான தமிழ்நாட்டோடு சேரவேண்டுமா? அல்லது வரட்சியான கேரளாவில் இருக்க வேண்டுமா? என்ற முழக்கத்தை இடுக்கி மாவட்ட மக்கள் மத்தியில் வைக்கலாம் என்கிறார் ஹாரூன்.இது நல்லாதானே இருக்கு?
அந்த அணையின் அடியில் ஐந்தாயிரம் ஏக்கரில் "உள்ளாச்விடுதிகள், சுற்றுலா வாசங்கள்" வைத்துள்ளவர்களை சார்ந்து வாழும் அரசியல்வாதிகள் மட்டமா காரணம்? இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் தமிழ்நாட்டை சேர்ந்த "தேவிகுளம், பீர்மேடு" பகுதிகளை காமராசர் காலத்திலேயே தமிழர்கள் கேட்ட போது, அப்போதுள்ள காங்கிரஸ் கட்சிகாரர்கள், "குளமாவது, மேடாவது,போ" என்று பூகோள அறிவு, நில உரிமை அறிவு சிறிதும் இல்லாமல் கூறியது தானே அடிப்படை காரணம்? அந்த வட்டாரம் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்று இப்போது "முரசொலியில்" எழுதும் ரஹ்மான்கான் கட்டுரையை வெளியிடும் கலைஞர் அந்த செய்தியை "தான் ஆட்சியில்" இருக்கும் போது கூறாதது ஏன்?
இப்போது அடுத்தவர் ஆட்சிக்கு சிக்கல் வரட்டும் என்று எண்ணியாவது தமிழர் நலனுக்கான இந்த உண்மையை முரசொலியில் வெளியிட்டாரே? அதற்காக பாராட்டலாம். தனக்கு ஏக இந்தியா அடுத்தவருக்கு தமிழ்நாடு என்ற அவரது கொள்கை வாழ்க. இப்போது பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜெ.எம். ஹாரூன் ஒரு புதிய "கோரிக்கையை" முன்வைக்கிறார். அது "இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டிற்கு"கொடுத்துவிடு.என்பதே. அறுபது விழுக்காடு மக்கள்தொகை தமிழர்களாக இருக்கும் இடுக்கி நமக்கே. எழுபது விழுக்காடு சபரிமலை பக்தர்கள் தமிழர்களே எனபதும் அந்த கோரிக்கையை வலுப்படுத்தும்.
வளமான தமிழ்நாட்டோடு சேரவேண்டுமா? அல்லது வரட்சியான கேரளாவில் இருக்க வேண்டுமா? என்ற முழக்கத்தை இடுக்கி மாவட்ட மக்கள் மத்தியில் வைக்கலாம் என்கிறார் ஹாரூன்.இது நல்லாதானே இருக்கு?
Sunday, December 11, 2011
உலைக்கு எதிராக உலக உரிமை நாளில்....
டிசம்பர் பத்து உலக மனித உரிமை நாள். அன்று சென்னையில் "கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக" பட்டினி போராட்டம் நடத்தப்பட்டது பொருத்தமானதே. ஆனால் கூவம் கரை ஓரம் இடம் ஒத்துக்கிய மாநகர காவல்துறையை திட்டாதவர்களே இல்லை. இரண்டு நாள் முன்பே மனோ தகராஜ் ஊடகங்களுக்கு கூட்டம் நடத்தினார். அதில் அவருடன் இடிந்தகரை இவாரிஸ், ஆர்ம்ச்டிரான்க், பாதிரியார் ராஜன், ஆவின் பாபு, சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதேபோல சென்ற இருபத்தி ஆறாம் நாள், வணிகர் சங்க பேரவை வெள்ளையன், உலக தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன், மனித நேய மக்கள் கட்சி போது செயலளார் அப்துல் சமது, இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, மக்கள் சிவி உரிமை கழக டி.எஸ்.எஸ்.மணி, மீனவர் சங்க மாறன், மகேஷ், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிசாமி,போன்றோர் கலந்துகொண்டு,"சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற பெயரில், விஞ்ஞானி வி.டி.பி. மூலம் பவர் பாயிண்ட்விளக்கம் கொடுத்தனர். இப்போது பட்டினி போர் நடத்தினர். .
இந்த போராட்டம் சென்னை கூட்டமைப்பு என்றும், அணு சக்தி எதிர்ப்பு என்றும் பெயர் பெற்று இருந்தது. இதில் சென்னை களம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மனோ, இவாரிஸ், கண்ணன், ஆர்ம்ஸ், ஆண்டன் கோமேஸ், வெள்ளையன், கலை,சமுத்திராதேவி, காஞ்சனை சீனிவாசன், தொல்.திருமாவளவன், உதுயகுமார், மைபா, சலபதி, கில்பர்ட், வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியியலாளர் ரவி, எஸ்.எம்.பாக்கர், அப்துல் சமது, சதீஷ்குமார், அருண்ஷோரி,மருத்துவர் புகழேந்தி, டி.எஸ்.ஏ.ஸ்.மணி, அருள் எழிலன்,எஸ்.யு.சீ.அய். தோழர்கள், ஜெ.சிதம்பரநாதன், மீத.பாண்டியன்,ஏ.எஸ்.குமார்,திருமுருகன்,மக்கள்மன்றம் மகேஷ், மேகலா, நாத்திகன், என்று பலரும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்கள் பலரும்தங்கள் தொண்டர்களுடன் வந்து பேசிவிட்டு செல்வதாக இருந்தனர்.
தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவ சகோதரர்கள் இடிந்தகரை, கூத்தான்குழி, உட்பட ஒரு ஐம்பது பேர் சென்னை வாழ் மீனவர்களாக வந்திருந்தனர். கில்பர்ட் ஏற்பாட்டில் காஞ்சி மாவட்ட கடலோர பெண்கள் இயக்கம் ஒரு எழுபது பெண்களும், சமுத்திராதேவி ஏற்பாட்டில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரு அறுபது மீனவ பெண்களும் கலந்துகொண்டது பெறும் எழுச்ச்சியை தந்தது. தங்கள் அடையாளமாக அவர்கள் " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்று பெயர் பட்டையை சட்டைகளில் அணிந்து இருந்தனர். சென்னை மீனவ சங்கங்களான தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் மாறன் உடன் டி.பாண்டியன் உட்பட, ஆவின் பாபுவின் "இந்திய மீனவர் பேரவை" சலபதியின் மீனவ தொழிலாளர் சங்கம்", மகேசின் "அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்" என்று சென்னைவாழ்மீனவர்களும்கலந்துகொண்டதுசிறப்பு. பங்கெடுத்தவர்களில் மீனவர்களின் எண்ணிக்கையே சரிபாதிக்கு மேல் இருந்தது. அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. ஆண்டன் கோமெசின் அழைப்பின் பேரில் அவர்கள் வந்திருந்தனர்.
எஸ்.எம்.பாக்கர் பேசும்போது "பட்டினி போராட்டங்கள் பயன்படாது என்றும், முற்றுகை போராட்டமே அணு உலைக்கு பொருத்தமானது "என்றும்பேசிய உடனே கூடங்குளம் வட்டார மக்கள் ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ் தலைமையில் கூடங்குளம் அணு உலை முன்பு "முற்றுகை" இடும் செய்தி வந்தது. அங்கேயே சமைக்கவும் தொடங்கி விட்டார்கள் என்றும், பெண்கள் முன்னாள் நின்று அங்கு முற்றுகை போர் நடக்கிறது என்பதும் சிறப்பு செய்திகளாக இருந்தது. கோமாளிகள் போல அமைச்சர் நாராயணசாமியும், அப்துல் கலாமும், பேசிவருவது விமர்சிக்கப்பட்டது.வேய்நாட்டு பணம் விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டை, "தற்காப்பு பாணியில் பதில் சொல்ல கூடாது" என்றும், தாக்கும் பாணியில் பதில் கூற வேண்டும் என்றும் கூறப்பட்டது. அது என்ன? என்றால், வெளிநாட்டு பணமான அமெரிக்கா பணம் அணு உலை ஒப்பந்தம் போட்டதற்கு ஆதரவாக "அணு உலை ஆதரவு குழுவிற்கு வருகிறது" என்பது விளக்கப்பட்டது. அதேபோல "அணு சக்தி துறை", தேசிய மின்சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா" ஆகியவற்றுடன் "கூடங்குளம் அணு மின் உலை திட்டம்" இணைத்து அந்த நிதியை செலவழிக்கிறது என்றும் அங்கே குற்றம் சாட்டப்பட்டது.
மேற்கண்ட செலவுகளை செய்ய கணக்கு கேட்க முடியாது என்பதும் விளக்கப்பட்டது. அதாவது 1962 ஆம் ஆண்டு சட்டப்படி, அணு உலை ரகசியங்களை அந்த அணுசக்தி துறை தலைவரும், பிரதமரும் "கமுக்கமாக" வைத்து கொள்ளலாம் என்றும், அதை அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, கூறவேண்டிய அவசியம் இல்லை என்பதாகவும், அவர்கள் அதற்காக செலவழிக்கும் பணத்திற்கு "கணக்கு காட்டவேண்டாம்" எனவும் அந்த சட்டத்தில் இருப்பது சுட்டி காட்ட பட்டது. ஆகவே அணு உலை ஆதரவு கும்பல்களுக்கு செலவு இவ்வாறு அதிகம் செய்யப்படுகிறது என்பதும், மக்கள் போராட்டத்தை பணம் பற்றி பேசி "கொச்சை படுத்தாதே" எனவும் அங்கே கூறப்பட்டது. மாலையில் சேவ் தமிழ்ச சார்பாக பேரணி எடுக்கப்பட்டது. சன்னியும் எழுந்துவிட்டது என்பதை அது காட்டியது.
இந்த போராட்டம் சென்னை கூட்டமைப்பு என்றும், அணு சக்தி எதிர்ப்பு என்றும் பெயர் பெற்று இருந்தது. இதில் சென்னை களம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மனோ, இவாரிஸ், கண்ணன், ஆர்ம்ஸ், ஆண்டன் கோமேஸ், வெள்ளையன், கலை,சமுத்திராதேவி, காஞ்சனை சீனிவாசன், தொல்.திருமாவளவன், உதுயகுமார், மைபா, சலபதி, கில்பர்ட், வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியியலாளர் ரவி, எஸ்.எம்.பாக்கர், அப்துல் சமது, சதீஷ்குமார், அருண்ஷோரி,மருத்துவர் புகழேந்தி, டி.எஸ்.ஏ.ஸ்.மணி, அருள் எழிலன்,எஸ்.யு.சீ.அய். தோழர்கள், ஜெ.சிதம்பரநாதன், மீத.பாண்டியன்,ஏ.எஸ்.குமார்,திருமுருகன்,மக்கள்மன்றம் மகேஷ், மேகலா, நாத்திகன், என்று பலரும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்கள் பலரும்தங்கள் தொண்டர்களுடன் வந்து பேசிவிட்டு செல்வதாக இருந்தனர்.
தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவ சகோதரர்கள் இடிந்தகரை, கூத்தான்குழி, உட்பட ஒரு ஐம்பது பேர் சென்னை வாழ் மீனவர்களாக வந்திருந்தனர். கில்பர்ட் ஏற்பாட்டில் காஞ்சி மாவட்ட கடலோர பெண்கள் இயக்கம் ஒரு எழுபது பெண்களும், சமுத்திராதேவி ஏற்பாட்டில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரு அறுபது மீனவ பெண்களும் கலந்துகொண்டது பெறும் எழுச்ச்சியை தந்தது. தங்கள் அடையாளமாக அவர்கள் " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்று பெயர் பட்டையை சட்டைகளில் அணிந்து இருந்தனர். சென்னை மீனவ சங்கங்களான தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் மாறன் உடன் டி.பாண்டியன் உட்பட, ஆவின் பாபுவின் "இந்திய மீனவர் பேரவை" சலபதியின் மீனவ தொழிலாளர் சங்கம்", மகேசின் "அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்" என்று சென்னைவாழ்மீனவர்களும்கலந்துகொண்டதுசிறப்பு. பங்கெடுத்தவர்களில் மீனவர்களின் எண்ணிக்கையே சரிபாதிக்கு மேல் இருந்தது. அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. ஆண்டன் கோமெசின் அழைப்பின் பேரில் அவர்கள் வந்திருந்தனர்.
எஸ்.எம்.பாக்கர் பேசும்போது "பட்டினி போராட்டங்கள் பயன்படாது என்றும், முற்றுகை போராட்டமே அணு உலைக்கு பொருத்தமானது "என்றும்பேசிய உடனே கூடங்குளம் வட்டார மக்கள் ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ் தலைமையில் கூடங்குளம் அணு உலை முன்பு "முற்றுகை" இடும் செய்தி வந்தது. அங்கேயே சமைக்கவும் தொடங்கி விட்டார்கள் என்றும், பெண்கள் முன்னாள் நின்று அங்கு முற்றுகை போர் நடக்கிறது என்பதும் சிறப்பு செய்திகளாக இருந்தது. கோமாளிகள் போல அமைச்சர் நாராயணசாமியும், அப்துல் கலாமும், பேசிவருவது விமர்சிக்கப்பட்டது.வேய்நாட்டு பணம் விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டை, "தற்காப்பு பாணியில் பதில் சொல்ல கூடாது" என்றும், தாக்கும் பாணியில் பதில் கூற வேண்டும் என்றும் கூறப்பட்டது. அது என்ன? என்றால், வெளிநாட்டு பணமான அமெரிக்கா பணம் அணு உலை ஒப்பந்தம் போட்டதற்கு ஆதரவாக "அணு உலை ஆதரவு குழுவிற்கு வருகிறது" என்பது விளக்கப்பட்டது. அதேபோல "அணு சக்தி துறை", தேசிய மின்சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா" ஆகியவற்றுடன் "கூடங்குளம் அணு மின் உலை திட்டம்" இணைத்து அந்த நிதியை செலவழிக்கிறது என்றும் அங்கே குற்றம் சாட்டப்பட்டது.
மேற்கண்ட செலவுகளை செய்ய கணக்கு கேட்க முடியாது என்பதும் விளக்கப்பட்டது. அதாவது 1962 ஆம் ஆண்டு சட்டப்படி, அணு உலை ரகசியங்களை அந்த அணுசக்தி துறை தலைவரும், பிரதமரும் "கமுக்கமாக" வைத்து கொள்ளலாம் என்றும், அதை அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, கூறவேண்டிய அவசியம் இல்லை என்பதாகவும், அவர்கள் அதற்காக செலவழிக்கும் பணத்திற்கு "கணக்கு காட்டவேண்டாம்" எனவும் அந்த சட்டத்தில் இருப்பது சுட்டி காட்ட பட்டது. ஆகவே அணு உலை ஆதரவு கும்பல்களுக்கு செலவு இவ்வாறு அதிகம் செய்யப்படுகிறது என்பதும், மக்கள் போராட்டத்தை பணம் பற்றி பேசி "கொச்சை படுத்தாதே" எனவும் அங்கே கூறப்பட்டது. மாலையில் சேவ் தமிழ்ச சார்பாக பேரணி எடுக்கப்பட்டது. சன்னியும் எழுந்துவிட்டது என்பதை அது காட்டியது.
Wednesday, December 7, 2011
அணை பாதுகாப்பாய் உள்ளது என கூறிய மலையாள நிபுணர்கள்.
ஏதோ முழு மலையாள நாட்டவர்களும், அரசியல் சந்தர்ப்பவாதம் செய்யும் சக்திகளுடன் இணைந்துகொண்டு "அணை உடையும் என்று பீதியை" கிளப்புவதாக ஒரு தவறான புரிதல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுவே தமிழ்நாட்டில் உள்ள மலையாள வணிகர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வர்தான் தெளிவாக" எந்த அளவுக்கு மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தமிழர்கள் கேரளாவில் இருக்கிறார்கள்" என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும், பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயல்வதை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதைகூட கேரள அரசியல்வாதிகள் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நாம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே "முல்லைபெரியார் உடையாது.அப்படியே உடைந்தாலும் இடுக்கி அணை அந்த நீரை தாங்கிக் கொள்ளும்" என்பதை கூறியிருந்தோம். இப்போது அதையே கேரள நிபுணர்கள் கொர்ரியுள்ளனர் என்பது இனிப்பான செய்திதானே? அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள் என்பது மேலும் "அழுத்தமான" செய்தி.
நேற்று செவ்வாய் கிழமை கேரள உயர்நீதிமன்றம் முன்னால் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்கின் முக்கிய "கவலை"பகுதியான "தாக்குபிடிக்குமா இடுக்கி அணை?" என்ற விசயத்தில் ஆய்வு நடத்த கூறி ஏற்கனவே அங்குள்ள நீதியரசர்களால் உத்திரவிடப்பட்டு, அங்குள்ள ஒரு "மலையாள நிபுணர்களை" கொண்ட குழு தனது ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதியரசர் பொறுப்பில் இப்போது உள்ள மஞ்சுஆளா செல்லூர் மற்றும் நீதியரசர் பி.கே. ராமச்சந்திர மேனன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் "அணை பாதுகாப்பு நிபுணர்களான" எம்.கே.பரமேச்வரன் நாயர் உட்பட நிபுணர்கள் குழு தன்கள் ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளனர்.ஒரு "பேரழிவு" வருமானால் மக்களது உயிர்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும்படி அந்த நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவர்கள் அந்த அறிககையை முன்வைத்தனர். அதில், முல்லைபெரியார் சிறப்பு குழுவின் நிபுணர் எம்.கே.பரமேஸ்வரன் நாயரும் இருப்பதால் அந்த அறிக்கைமேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
அந்த அறிக்கை இடுக்கி அணைக்கட்டின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு பற்றி தனது முன்வைப்பை கூறவேண்டும். அப்படியே அந்த நிபுணர் குழுவும் செய்தது. அதில் இடுக்கி அணையின் அடித்தள கட்டுமானம் ஆய்வு செய்யப்பட்டதை எடுத்து சொல்லியுள்ளார்கள். அந்த அணை எந்த ஒரு " நில அதிர்வையும்" தாங்கும் பக்குவத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடுக்கி நீர்தேக்கத்தின் முகப்பகுதிக்கும், முல்லைபெரியார் நீர்தேக்கத்திளிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் கேட்டிருந்தனர். அதற்கும் அந்த அறிக்கை விளக்கம் கூறியிருந்தது. அந்த அணையிலிருந்து இந்த நாய்க்கு நீரின் வேகம் எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்கள்.வெய்யில் காலங்களில் எவ்வளவு நீர் தேக்கப்படும், என்றும், எவ்வளவு தண்ணீர் " மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்" என்றும் கேட்டிருந்தார்கள். இவ்வாறு கேரள மக்களின் உண்மையான டேஹ்வைகளை ஒரு உயர்நீதிமன்றம் ஆய்வு செய்து, நிபுணர்கள் மூலம் கேட்டு அறியும் போது, இந்த அரசியல்வாத சந்தற்ற்ப்பவாதிகள் கிளப்பும் "பொய்கள்" எத்தனை நாட்கள் நிற்கும்?
நாம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே "முல்லைபெரியார் உடையாது.அப்படியே உடைந்தாலும் இடுக்கி அணை அந்த நீரை தாங்கிக் கொள்ளும்" என்பதை கூறியிருந்தோம். இப்போது அதையே கேரள நிபுணர்கள் கொர்ரியுள்ளனர் என்பது இனிப்பான செய்திதானே? அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள் என்பது மேலும் "அழுத்தமான" செய்தி.
நேற்று செவ்வாய் கிழமை கேரள உயர்நீதிமன்றம் முன்னால் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்கின் முக்கிய "கவலை"பகுதியான "தாக்குபிடிக்குமா இடுக்கி அணை?" என்ற விசயத்தில் ஆய்வு நடத்த கூறி ஏற்கனவே அங்குள்ள நீதியரசர்களால் உத்திரவிடப்பட்டு, அங்குள்ள ஒரு "மலையாள நிபுணர்களை" கொண்ட குழு தனது ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதியரசர் பொறுப்பில் இப்போது உள்ள மஞ்சுஆளா செல்லூர் மற்றும் நீதியரசர் பி.கே. ராமச்சந்திர மேனன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் "அணை பாதுகாப்பு நிபுணர்களான" எம்.கே.பரமேச்வரன் நாயர் உட்பட நிபுணர்கள் குழு தன்கள் ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளனர்.ஒரு "பேரழிவு" வருமானால் மக்களது உயிர்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும்படி அந்த நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவர்கள் அந்த அறிககையை முன்வைத்தனர். அதில், முல்லைபெரியார் சிறப்பு குழுவின் நிபுணர் எம்.கே.பரமேஸ்வரன் நாயரும் இருப்பதால் அந்த அறிக்கைமேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
அந்த அறிக்கை இடுக்கி அணைக்கட்டின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு பற்றி தனது முன்வைப்பை கூறவேண்டும். அப்படியே அந்த நிபுணர் குழுவும் செய்தது. அதில் இடுக்கி அணையின் அடித்தள கட்டுமானம் ஆய்வு செய்யப்பட்டதை எடுத்து சொல்லியுள்ளார்கள். அந்த அணை எந்த ஒரு " நில அதிர்வையும்" தாங்கும் பக்குவத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடுக்கி நீர்தேக்கத்தின் முகப்பகுதிக்கும், முல்லைபெரியார் நீர்தேக்கத்திளிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் கேட்டிருந்தனர். அதற்கும் அந்த அறிக்கை விளக்கம் கூறியிருந்தது. அந்த அணையிலிருந்து இந்த நாய்க்கு நீரின் வேகம் எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்கள்.வெய்யில் காலங்களில் எவ்வளவு நீர் தேக்கப்படும், என்றும், எவ்வளவு தண்ணீர் " மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்" என்றும் கேட்டிருந்தார்கள். இவ்வாறு கேரள மக்களின் உண்மையான டேஹ்வைகளை ஒரு உயர்நீதிமன்றம் ஆய்வு செய்து, நிபுணர்கள் மூலம் கேட்டு அறியும் போது, இந்த அரசியல்வாத சந்தற்ற்ப்பவாதிகள் கிளப்பும் "பொய்கள்" எத்தனை நாட்கள் நிற்கும்?
Tuesday, December 6, 2011
பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்றுதான் எனபது கேரளாவிலும் காணலாம்.
காங்கிரஸ் கட்சிதான் இந்த முல்லைபெரியார் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, பொய்யை கிளப்பி அதில் மீன் பிடிக்க, எர்நாகுல்கம் மாவட்ட, பிரவம் தொகுதிக்கான இடைதேர்தல் ஒத்திகையை பார்க்கிறது என்றால், அதற்கு போட்டி போட்டு அச்ச்தானந்தனும் அந்த தொகுதியை கைப்பற்ற அதே நாடகத்தை நடத்துகிறார்கள் என்றால், பா.ஜா.காவிற்கு எண்ண இழவு வந்தது? அவர்கள் பங்கிற்கு கோட்டயம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற "ஐயப்ப சாமிகள்" வரும்போது அவர்களை வழி மறித்து, அதில் இரண்டு "சாமிகளுக்கு" செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள். அதில்தான் தொடங்கியது மோதல்.
ஆமாம். இந்த பா.ஜ க .தான் "சாமி"களை வைத்து அரசியல் செய்யும் கட்சிதானே? இவர்களே தமிழ்நாட்டு சாமிகளை கேவலப்படுத்தினால், இவர்களுக்கு உண்மையில் "சாமி நம்பிக்கை" கிடையாது என்பதும், அது வெறும் அரசியலுக்கு தான் என்பதும் இதிலிருந்து புரிகிறதே? கேரள மாநில மனித உரிமை ஆணையம் இந்த மோதலையும், அணை உடையும் என்ற பரப்புரையையும், "ஊடக, அரசியல்வாதிகளின் " கூட்டு சேட்டை என்று தெளிவாக கூறி விட்டதே? கேரள அரசு வழக்கறிஞரும் முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது என்று தெளிவாக நீதிமன்றத்திலேயே கூறி விட்டாரே? இவர்களும் மலயாளிகல்தானே? உண்மை சொல்லும் மலையாளி, பொய் சொல்லும் மலையாளி என்று வேண்டுமானால் பிரித்து பார்க்கலாம்.இது காங்கரஸின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகிவிட்டது.
செல்வி. ஜெயலலிதா மீது "கூடங்குளம்" விசயத்திலும் இன்ன அபிர விசயங்களிலும் மோதல் போக்கை கையாளும், டில்லிக்காரர்கள் இந்த முல்லை பெரியார் பிரச்சனையை பெரிதாக்குவதில் முழுமையாக கேரளா பக்கம் நின்று செயல்படுகிறார்கள். கடலுக்கு சென்று வீணாகும் "தண்ணீரை" கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க தயாரில்லாத கேரள அரசியல்வாதிகள் எப்படி இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவானவர்கள்? இந்த கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்.டில்லிகாரனை பொறுத்தவரை "நீ கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தை" போக்க சொன்னாயல்லவா? நான் கேரள மக்கள் மத்தியில் இப்போது முல்லை பெரியார் இடையும் என்ற அச்சத்தை கிளப்புகிறேன் பார் எனபதுதான் டில்லியின் தந்திரம்.
2006 ஆம் ஆண்டு இதே டில்லியில் இருக்கும் உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியார் வழக்கில் தலைமை நீதியரசர் "சபர்வால்" கொடுத்த தீர்ப்பில் " 142 அடி உயர்த்தலாம்" என்று மட்டும் கொடுக்க வில்லை. கேரளா பயப்படுவ்பது போல முல்லை பெரியார் அணை உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு "பதினோரு டி.எம்.சீ. தண்ணீர்தான்". அந்த தண்ணீர் இடிக்கி அணிக்கு வரும். இடிக்கி அணையின் கொள்ளளவு "எழுபது டி.எம்.சீ.". அதில் பெருமழை வந்த காலங்களிலேயே "ஐம்பத்தி ஏழு டி.எம்.சீ" தண்ணீர்தான் நிரம்புகிறது. அதாவது பெருமழை காலங்களிலேயே இடிக்கி அணையில் " பதினேழு டி.எம்.சீ." க்கு இடம் இருக்கிறது. முல்லை பெரியார் உடைந்தாலுமே " பதினோரு" டி.எம்.சீ.தான் வெளிவரும் என்பதால் இடிக்கி அணை தாங்கி கொள்ளும். இந்த தகவலை "அமணை பற்றிய ஆராய்ச்சியை" செய்த உச்சநீதிமன்றம் கணக்கெடுத்து கூறியுள்ளது. இது அந்த சபரிவாலது தீர்ப்பில் உள்ள செய்திகள்.
இவ்வாறு கூறிய உச்சநீதிமன்றம் நியமித்த "முன்னாள் நீதியரசர் ஆனந்த் " தலைமையிலான குழு வருகிற "ஜனவரியில்" தங்கள் "அறிககையை" வைக்க போகிறார்கள் என்று தெரிந்த கேரள காங்கிரஸ்காரர்கள் இப்போது அவசர , அவசரமாக "அணை 999 " என்று சினிமாவை வெளியிட்டு அதன்மூலம் கேரள மக்களை "பீதி" அடைய செய்கிறார்கள். இவ்வாறு செய்வதே அணை அருகே " ஆக்கிரமிப்பு செய்தவர்களும், உல்லாச விடுதி" நடத்துபவர்களுமான அரசியல் வாதிகள்தான் என்றும் செய்தி வருகிறது. புதிய அணை கட்டவும், பழைய அணையை உடைக்கவும் "ஒப்பந்தம்" எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. ஆக மொத்தத்தில் கேரள மக்களை ஏமாற்றும் கேரள அரசியல்வாதிகள்தான் உண்மையான "வில்லன்கள்".
ஆமாம். இந்த பா.ஜ க .தான் "சாமி"களை வைத்து அரசியல் செய்யும் கட்சிதானே? இவர்களே தமிழ்நாட்டு சாமிகளை கேவலப்படுத்தினால், இவர்களுக்கு உண்மையில் "சாமி நம்பிக்கை" கிடையாது என்பதும், அது வெறும் அரசியலுக்கு தான் என்பதும் இதிலிருந்து புரிகிறதே? கேரள மாநில மனித உரிமை ஆணையம் இந்த மோதலையும், அணை உடையும் என்ற பரப்புரையையும், "ஊடக, அரசியல்வாதிகளின் " கூட்டு சேட்டை என்று தெளிவாக கூறி விட்டதே? கேரள அரசு வழக்கறிஞரும் முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது என்று தெளிவாக நீதிமன்றத்திலேயே கூறி விட்டாரே? இவர்களும் மலயாளிகல்தானே? உண்மை சொல்லும் மலையாளி, பொய் சொல்லும் மலையாளி என்று வேண்டுமானால் பிரித்து பார்க்கலாம்.இது காங்கரஸின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகிவிட்டது.
செல்வி. ஜெயலலிதா மீது "கூடங்குளம்" விசயத்திலும் இன்ன அபிர விசயங்களிலும் மோதல் போக்கை கையாளும், டில்லிக்காரர்கள் இந்த முல்லை பெரியார் பிரச்சனையை பெரிதாக்குவதில் முழுமையாக கேரளா பக்கம் நின்று செயல்படுகிறார்கள். கடலுக்கு சென்று வீணாகும் "தண்ணீரை" கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க தயாரில்லாத கேரள அரசியல்வாதிகள் எப்படி இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவானவர்கள்? இந்த கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்.டில்லிகாரனை பொறுத்தவரை "நீ கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தை" போக்க சொன்னாயல்லவா? நான் கேரள மக்கள் மத்தியில் இப்போது முல்லை பெரியார் இடையும் என்ற அச்சத்தை கிளப்புகிறேன் பார் எனபதுதான் டில்லியின் தந்திரம்.
2006 ஆம் ஆண்டு இதே டில்லியில் இருக்கும் உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியார் வழக்கில் தலைமை நீதியரசர் "சபர்வால்" கொடுத்த தீர்ப்பில் " 142 அடி உயர்த்தலாம்" என்று மட்டும் கொடுக்க வில்லை. கேரளா பயப்படுவ்பது போல முல்லை பெரியார் அணை உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு "பதினோரு டி.எம்.சீ. தண்ணீர்தான்". அந்த தண்ணீர் இடிக்கி அணிக்கு வரும். இடிக்கி அணையின் கொள்ளளவு "எழுபது டி.எம்.சீ.". அதில் பெருமழை வந்த காலங்களிலேயே "ஐம்பத்தி ஏழு டி.எம்.சீ" தண்ணீர்தான் நிரம்புகிறது. அதாவது பெருமழை காலங்களிலேயே இடிக்கி அணையில் " பதினேழு டி.எம்.சீ." க்கு இடம் இருக்கிறது. முல்லை பெரியார் உடைந்தாலுமே " பதினோரு" டி.எம்.சீ.தான் வெளிவரும் என்பதால் இடிக்கி அணை தாங்கி கொள்ளும். இந்த தகவலை "அமணை பற்றிய ஆராய்ச்சியை" செய்த உச்சநீதிமன்றம் கணக்கெடுத்து கூறியுள்ளது. இது அந்த சபரிவாலது தீர்ப்பில் உள்ள செய்திகள்.
இவ்வாறு கூறிய உச்சநீதிமன்றம் நியமித்த "முன்னாள் நீதியரசர் ஆனந்த் " தலைமையிலான குழு வருகிற "ஜனவரியில்" தங்கள் "அறிககையை" வைக்க போகிறார்கள் என்று தெரிந்த கேரள காங்கிரஸ்காரர்கள் இப்போது அவசர , அவசரமாக "அணை 999 " என்று சினிமாவை வெளியிட்டு அதன்மூலம் கேரள மக்களை "பீதி" அடைய செய்கிறார்கள். இவ்வாறு செய்வதே அணை அருகே " ஆக்கிரமிப்பு செய்தவர்களும், உல்லாச விடுதி" நடத்துபவர்களுமான அரசியல் வாதிகள்தான் என்றும் செய்தி வருகிறது. புதிய அணை கட்டவும், பழைய அணையை உடைக்கவும் "ஒப்பந்தம்" எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. ஆக மொத்தத்தில் கேரள மக்களை ஏமாற்றும் கேரள அரசியல்வாதிகள்தான் உண்மையான "வில்லன்கள்".
பேராசிரியர் கல்யாணி என்ன தவறு செய்தார்?
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில், மண்டபம் ஊரில்
நான்கு இருளர் பழங்குடி பெண்களை "பாலியல் சித்திரவதை" செய்ததாக புகார்
வந்தது. அதை கல்விமணி கல்யாணி எடுத்து பதிவு செய்தார். அதற்காக
விருத்தாசலத்தை சேர்ந்த தங்கமணி என்ற பழங்குடி கட்சி ஓரை வைத்திருப்பவர்
ஏன் "ஆத்திரப்படவேண்டும்?".
அந்த தங்கமணியை ஆதரித்து அவருக்கு தங்க இடம் கொடுத்த
சீ.பி.எம். கட்சியின் விழுப்புரம் அலுவலகம் இந்த விவகாரத்தில் ஒன்றுமே
தெரியாமல் ஆதரித்து விட்டார்களா? அதிமுக கொடுத்த தொகுதி என்பதால்
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று விட்டோமே, அந்த வட்டாரத்தில்
கட்சி பலமாக இல்லையே என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு நடந்த தவறா?
ஆத்திரப்பட்ட தங்கமணி கல்யாணி மீதும், பழங்குடி தலைவர் ரமேஷ் மீதும்
வழக்கு பதிவு செய்வது முறையா?
அந்த அவ்ழக்குகளை காவல்துறை பதிவு செய்யலாமா? முதல்வர்
அறிவித்த ஐந்து லட்சம் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு போய் சேர்வதை
ஏன் இந்த தங்கமணி எதிர்க்க வேண்டும்? பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை
என்று ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும்? பாலியல் வன்புணர்ச்சி வேறு, பாலியல்
பலாத்காரம் வேறு என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?
வடக்குமண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அறிவித்ததும், உதல்வர்
அறிவித்ததும் முதல் கட்ட விசாரணையில் அந்த நான்கு பெண்களை விதிகளை மீறி
காவல் நிலையத்தில் வைத்திருந்தது தவறு என்றுதானே ஐந்து காவல் அதிகாரிகளை
இடை நீக்கம் செய்தார்கள்? காட்டிற்குள் கூட்டி போனதாக அந்த பழங்குடி
பெண்கள் கூறும்போது, கூட்டி சென்ற காவலர்களை தண்டிக்க வேண்டியது
தேவைதானே?
முதல்வர் அறிவிப்பையே எதிர்க்கும் வேலையை அரசியல்வாதிகள்
"கூட்டணி குழப்பத்தில்" செய்யலாம். காவல்துறையும் செய்கிறதே? அதற்கு
தனியாக தண்டனை உண்டா?
நான்கு இருளர் பழங்குடி பெண்களை "பாலியல் சித்திரவதை" செய்ததாக புகார்
வந்தது. அதை கல்விமணி கல்யாணி எடுத்து பதிவு செய்தார். அதற்காக
விருத்தாசலத்தை சேர்ந்த தங்கமணி என்ற பழங்குடி கட்சி ஓரை வைத்திருப்பவர்
ஏன் "ஆத்திரப்படவேண்டும்?".
அந்த தங்கமணியை ஆதரித்து அவருக்கு தங்க இடம் கொடுத்த
சீ.பி.எம். கட்சியின் விழுப்புரம் அலுவலகம் இந்த விவகாரத்தில் ஒன்றுமே
தெரியாமல் ஆதரித்து விட்டார்களா? அதிமுக கொடுத்த தொகுதி என்பதால்
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று விட்டோமே, அந்த வட்டாரத்தில்
கட்சி பலமாக இல்லையே என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு நடந்த தவறா?
ஆத்திரப்பட்ட தங்கமணி கல்யாணி மீதும், பழங்குடி தலைவர் ரமேஷ் மீதும்
வழக்கு பதிவு செய்வது முறையா?
அந்த அவ்ழக்குகளை காவல்துறை பதிவு செய்யலாமா? முதல்வர்
அறிவித்த ஐந்து லட்சம் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு போய் சேர்வதை
ஏன் இந்த தங்கமணி எதிர்க்க வேண்டும்? பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை
என்று ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும்? பாலியல் வன்புணர்ச்சி வேறு, பாலியல்
பலாத்காரம் வேறு என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?
வடக்குமண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அறிவித்ததும், உதல்வர்
அறிவித்ததும் முதல் கட்ட விசாரணையில் அந்த நான்கு பெண்களை விதிகளை மீறி
காவல் நிலையத்தில் வைத்திருந்தது தவறு என்றுதானே ஐந்து காவல் அதிகாரிகளை
இடை நீக்கம் செய்தார்கள்? காட்டிற்குள் கூட்டி போனதாக அந்த பழங்குடி
பெண்கள் கூறும்போது, கூட்டி சென்ற காவலர்களை தண்டிக்க வேண்டியது
தேவைதானே?
முதல்வர் அறிவிப்பையே எதிர்க்கும் வேலையை அரசியல்வாதிகள்
"கூட்டணி குழப்பத்தில்" செய்யலாம். காவல்துறையும் செய்கிறதே? அதற்கு
தனியாக தண்டனை உண்டா?
Tuesday, November 29, 2011
பல்டியா? பரிசீலனையா?
பல்டியா? பரிசீலனையா?
ஜெ ஆட்சி பரமக்குடி துப்பாக்கி சூடி நடத்தி ஏழு தேவேந்திரகுல மக்களை சுட்டு கொன்றது. இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சட்டமன்றத்தில் அந்த நிகழ்வை " இன மோதல்" என்று முதல்வர் வர்நித்ததுவே அவரது ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ம.நடராசன்கூட "செந்தில்வேல் அய்.பி.எஸ்." பற்றி குறை கூறியும் அரசு அசையவில்லை. ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஐயரை நியமித்த அரசு, கருப்பு கொடிகளையே எதிர்கொண்டது. ஆனாலும்கூட தேவேந்திர மக்கள் வாக்குகள் ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கே உள்ளாட்சியிலும் விழுந்தது.இத்தனையும் நடந்தும்கூட அசையாத அரசு இப்போது முதல்வர் பார்மகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் என்றும் காயம் பட்டவர்களுக்குகூடுதளாக பதினைந்தாயிரம் என்றும் அறிவித்துள்ளார்.
நிதி மட்டுமே அறிவித்தார் என்று பார்க்க முடியாமல் இறந்தவர் குடும்பங்களின் அடுத்த வாரிசுக்கு "அரசு வேலை" என்றும் அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மக்களை திருப்தி செய்யும். இவையெல்லாம் நீதிமன்றம் சென்றதால் வந்ததா? ஒவ்வொருவரும் அப்படி பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு அப்படி பணியக் கூடிய அதுவும் முன்கூட்டியே பணியக் கூடியவர் அரசு என்று நாம் பார்க்க முடியவில்லை. நடக்கும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும், விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் "எதிர்கட்சிகளுக்கு" செவி மடுக்கும் செயல்பாட்டிற்கு கொண்டு செல்கிறது என்ற உளவு துறை செய்தியை கேட்டிருப்பார்கள்.ஆகா. வாக்கு வங்கியை விட்டு விடக்கூடாதே என்று "மறு பரிசீலனை" வந்திருக்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு "வாக்கு வங்கிகள்"தான் முக்கியம். இதை உணர்ந்தே நாம்கூட கடந்த நாட்களில் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில், காட்சி ஊடக நமது நிகழ்வில், "மாவீரர் நாள்" அனுமதி மறுப்பையும், கைதையும், பரமக்குடி துப்பாக்கி சூட்டையும், விழுப்புரம் திருக்கோவிலூர் இருளர் பழங்குடி மீதான "பாலியல் வன்புணர்ச்சி" செய்த காவல்துறை தப்பிப்பதையும், சுட்டி காட்டி, "ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை" என்று இடித்து உரைத்தோம். அதுகூட உஅரித்திருக்கலாம். ஏன் என்றால் "இருளர் பழங்குடி" பெண்கள் பாதிப்பு பற்றி "முரசொலியை" படித்து காட்டி நேற்று நாம் நமது நிகழ்வில் பேசிய பின், வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு "ஐந்து காவலர்களை" இடை நீக்கம் செய்ததை சில்லி பார்ரட்டிர்யிருந்தோம். அதனால் ஊடகங்களின் பார்வளியிலும் "கேட்ட பெயர்" வாங்காமல் இருக்கவோ, எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்புகளுக்கு தலைவனங்கியோ, அதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை எண்ணியோ, "மறு பரிசீலனைக்கு" ஆரசு உள்ளாகி இருக்கலாம். அதை "பல்டி' என்று நாம் சொல்ல வேண்டியது இல்லை. மக்கள் கூறினால் நாம் ஒன்றும் கூற முடியாது.
வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகள், " இருளர் பழங்குடி பெண்கள்" மீதான காவலர் பாலியல் வன்புணர்ச்சியை இன்னமும் நீருபணம் ஆகாவிடினும், முதல்கட்ட விசாரணையில், இரவு நேரம் பெண்களை காவல் நிலையத்தில் "வைத்திருந்தது" தெரிந்தவுடன் அய்.ஜி எடுத்த நடவடிக்கை அங்கீகரிக்க தக்கது. அதை ஒட்டி இப்போது, முதல்வர் அந்த " இருளர் பழங்குடி பெண்களுக்கு தலா ஐந்து லட்சம்" அறிவித்திருப்பதும், காவல்துரையின் "கருப்பு ஆடுகளுக்கு" ஒரு தலைவலிதான். இவாறு செய்துவந்தால் நாங்கள் ஏன் குறை சொல்கிறோம்?
அதேபோல "மாவீரர் நாளை" அனுமதி மறுப்பு கொடுத்த அதிகாரிகளிடம் மீண்டும் மாவீரர் நாள் கடைப்பிடிக்க "பொதுக்கூட்டங்கள்" நடத்த சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அனுமதி கொடுத்தால் பாராட்டலாம். மீண்டும் நாங்கள் பல்டி என்று கூற மாட்டோம். மறு பரிசீலனை என்றே கூறுவோம்.
அதேபோல உயர்நீதிமன்றத்தில் "சாந்தன், பேரறிவாளன், முருகன்" வழக்கில் தமிழக அரசு "தள்ளுபடி" செய்ய சொன்னது என்ற செய்தி "தவறு" என்றும், "இப்போது வைகோவிற்கு திருப்தியா" என்றும் அரசு தரப்பு கேட்டதே அதையும் "நல்ல மறுபரிசீலனை" என்றே கூறத் தயார். எப்படியோ எங்களுக்கு வேலை நடக்க வேண்டும். டேஹ்ர்தல் கட்சிகள் திருந்தப் ப்கிரார்கள் என்றோ, திருந்தி விடுவார்கள் என்றோ மனப்பால் குடிக்க தயாராயில்லை. அதேபோல நேற்று இரவு "சட்ட எரிப்பு நாளையும்", பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் வைத்து பெரியார் திக திருவல்லிகேணியில் நடத்திய போது கூட்டத்தில் "கொளத்தூர் மணி"பேச அவ்ரும்போது காவல்துறை தடுத்து நேர காரணம் கூறி கூட்டத்தை முடித்ஹ்டு கொண்டார்களே, அந்த கூட்டத்தில் உண்மையான பெரியார் தொண்டர்களை காவல் நிலையத்தில், "ரவுடிகள்" என்று குரித்ஹ்டு வைக்கும் போக்கையும் எடுத்ஹ்டு சொன்னார்களே அதையும் மாற்றி "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ்,ஜெசி,உமா போன்ற பெண் ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை இல்லாமல் செய்யவேண்டும். காவல் அதிகாரி "காத்திருந்தோம், இப்போது வந்துவிட்டீர்கள். இனி மக்கள் மன்றத்தை பார்த்து கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் வசனம் பேசும் பாணியை நிறுத்த வேண்டும். செய்வார்களா? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு "ஆபத்து" கூடும் நேரத்தில், எந்த நேரமும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாம் என்ற எண்ணத்தில், நாற்பது தொகுதியையும் கைப்பட்டார் வேண்டும் என்றால் இந்த "மறு பரிசீலனைகள்" வந்துவிடுமோ? சரி. போற்குற்றங்களுக்கு துணை போனவர் என்று அவரை தமிழ்நாட்டு மக்கள் விரட்டினாலும், இவர்களது ஆட்சிமுரையிலேயே, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நாம் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் கூறியது காரணம் என்று நாம் பெருமை படவில்லை. இவையெல்லாமே "தானே" நடந்தவைதான்.
ஜெ ஆட்சி பரமக்குடி துப்பாக்கி சூடி நடத்தி ஏழு தேவேந்திரகுல மக்களை சுட்டு கொன்றது. இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சட்டமன்றத்தில் அந்த நிகழ்வை " இன மோதல்" என்று முதல்வர் வர்நித்ததுவே அவரது ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ம.நடராசன்கூட "செந்தில்வேல் அய்.பி.எஸ்." பற்றி குறை கூறியும் அரசு அசையவில்லை. ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஐயரை நியமித்த அரசு, கருப்பு கொடிகளையே எதிர்கொண்டது. ஆனாலும்கூட தேவேந்திர மக்கள் வாக்குகள் ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கே உள்ளாட்சியிலும் விழுந்தது.இத்தனையும் நடந்தும்கூட அசையாத அரசு இப்போது முதல்வர் பார்மகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் என்றும் காயம் பட்டவர்களுக்குகூடுதளாக பதினைந்தாயிரம் என்றும் அறிவித்துள்ளார்.
நிதி மட்டுமே அறிவித்தார் என்று பார்க்க முடியாமல் இறந்தவர் குடும்பங்களின் அடுத்த வாரிசுக்கு "அரசு வேலை" என்றும் அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மக்களை திருப்தி செய்யும். இவையெல்லாம் நீதிமன்றம் சென்றதால் வந்ததா? ஒவ்வொருவரும் அப்படி பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு அப்படி பணியக் கூடிய அதுவும் முன்கூட்டியே பணியக் கூடியவர் அரசு என்று நாம் பார்க்க முடியவில்லை. நடக்கும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும், விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் "எதிர்கட்சிகளுக்கு" செவி மடுக்கும் செயல்பாட்டிற்கு கொண்டு செல்கிறது என்ற உளவு துறை செய்தியை கேட்டிருப்பார்கள்.ஆகா. வாக்கு வங்கியை விட்டு விடக்கூடாதே என்று "மறு பரிசீலனை" வந்திருக்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு "வாக்கு வங்கிகள்"தான் முக்கியம். இதை உணர்ந்தே நாம்கூட கடந்த நாட்களில் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில், காட்சி ஊடக நமது நிகழ்வில், "மாவீரர் நாள்" அனுமதி மறுப்பையும், கைதையும், பரமக்குடி துப்பாக்கி சூட்டையும், விழுப்புரம் திருக்கோவிலூர் இருளர் பழங்குடி மீதான "பாலியல் வன்புணர்ச்சி" செய்த காவல்துறை தப்பிப்பதையும், சுட்டி காட்டி, "ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை" என்று இடித்து உரைத்தோம். அதுகூட உஅரித்திருக்கலாம். ஏன் என்றால் "இருளர் பழங்குடி" பெண்கள் பாதிப்பு பற்றி "முரசொலியை" படித்து காட்டி நேற்று நாம் நமது நிகழ்வில் பேசிய பின், வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு "ஐந்து காவலர்களை" இடை நீக்கம் செய்ததை சில்லி பார்ரட்டிர்யிருந்தோம். அதனால் ஊடகங்களின் பார்வளியிலும் "கேட்ட பெயர்" வாங்காமல் இருக்கவோ, எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்புகளுக்கு தலைவனங்கியோ, அதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை எண்ணியோ, "மறு பரிசீலனைக்கு" ஆரசு உள்ளாகி இருக்கலாம். அதை "பல்டி' என்று நாம் சொல்ல வேண்டியது இல்லை. மக்கள் கூறினால் நாம் ஒன்றும் கூற முடியாது.
வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகள், " இருளர் பழங்குடி பெண்கள்" மீதான காவலர் பாலியல் வன்புணர்ச்சியை இன்னமும் நீருபணம் ஆகாவிடினும், முதல்கட்ட விசாரணையில், இரவு நேரம் பெண்களை காவல் நிலையத்தில் "வைத்திருந்தது" தெரிந்தவுடன் அய்.ஜி எடுத்த நடவடிக்கை அங்கீகரிக்க தக்கது. அதை ஒட்டி இப்போது, முதல்வர் அந்த " இருளர் பழங்குடி பெண்களுக்கு தலா ஐந்து லட்சம்" அறிவித்திருப்பதும், காவல்துரையின் "கருப்பு ஆடுகளுக்கு" ஒரு தலைவலிதான். இவாறு செய்துவந்தால் நாங்கள் ஏன் குறை சொல்கிறோம்?
அதேபோல "மாவீரர் நாளை" அனுமதி மறுப்பு கொடுத்த அதிகாரிகளிடம் மீண்டும் மாவீரர் நாள் கடைப்பிடிக்க "பொதுக்கூட்டங்கள்" நடத்த சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அனுமதி கொடுத்தால் பாராட்டலாம். மீண்டும் நாங்கள் பல்டி என்று கூற மாட்டோம். மறு பரிசீலனை என்றே கூறுவோம்.
அதேபோல உயர்நீதிமன்றத்தில் "சாந்தன், பேரறிவாளன், முருகன்" வழக்கில் தமிழக அரசு "தள்ளுபடி" செய்ய சொன்னது என்ற செய்தி "தவறு" என்றும், "இப்போது வைகோவிற்கு திருப்தியா" என்றும் அரசு தரப்பு கேட்டதே அதையும் "நல்ல மறுபரிசீலனை" என்றே கூறத் தயார். எப்படியோ எங்களுக்கு வேலை நடக்க வேண்டும். டேஹ்ர்தல் கட்சிகள் திருந்தப் ப்கிரார்கள் என்றோ, திருந்தி விடுவார்கள் என்றோ மனப்பால் குடிக்க தயாராயில்லை. அதேபோல நேற்று இரவு "சட்ட எரிப்பு நாளையும்", பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் வைத்து பெரியார் திக திருவல்லிகேணியில் நடத்திய போது கூட்டத்தில் "கொளத்தூர் மணி"பேச அவ்ரும்போது காவல்துறை தடுத்து நேர காரணம் கூறி கூட்டத்தை முடித்ஹ்டு கொண்டார்களே, அந்த கூட்டத்தில் உண்மையான பெரியார் தொண்டர்களை காவல் நிலையத்தில், "ரவுடிகள்" என்று குரித்ஹ்டு வைக்கும் போக்கையும் எடுத்ஹ்டு சொன்னார்களே அதையும் மாற்றி "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ்,ஜெசி,உமா போன்ற பெண் ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை இல்லாமல் செய்யவேண்டும். காவல் அதிகாரி "காத்திருந்தோம், இப்போது வந்துவிட்டீர்கள். இனி மக்கள் மன்றத்தை பார்த்து கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் வசனம் பேசும் பாணியை நிறுத்த வேண்டும். செய்வார்களா? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு "ஆபத்து" கூடும் நேரத்தில், எந்த நேரமும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாம் என்ற எண்ணத்தில், நாற்பது தொகுதியையும் கைப்பட்டார் வேண்டும் என்றால் இந்த "மறு பரிசீலனைகள்" வந்துவிடுமோ? சரி. போற்குற்றங்களுக்கு துணை போனவர் என்று அவரை தமிழ்நாட்டு மக்கள் விரட்டினாலும், இவர்களது ஆட்சிமுரையிலேயே, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நாம் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் கூறியது காரணம் என்று நாம் பெருமை படவில்லை. இவையெல்லாமே "தானே" நடந்தவைதான்.
Subscribe to:
Posts (Atom)
