Monday, May 16, 2011

மோடி, நாயுடு, அஜித்சிங், பரதன் எல்லாம் ஒரே அணியா?

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவர் எப்படி வரலாம்? மதவெறிக் கொலைகள் செய்தவர் என்ற குரல் எழும்பியுள்ளது. ஆனால் அவர் சிபியை யின் டி.ராஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அது தவிர சிபிஐ யின் அகில இந்திய பொதுச்செயலாளரான ஏ.பி.பரதன் வந்திருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் முதல்வரும், தலைவருமான, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜித்சிங் வந்திருந்தார். இப்படி பிரபல அகில இந்திய தலைவர்கள் வந்திருந்தார்கள்.

மோடி வந்ததால், பிஜேபி யுடன் அம்மா போகப்போகிறார் என்றால், நாயுடு வந்ததால் மூன்றாவது அணியுடன் போகப்போகிறார் என்றும், பரதன் வந்ததால் மூன்றாவது அணிதான் என்றும், அஜித்சிங் வந்ததால் காங்கிரசுடன் போகலாம் என்றும் கூறிக் கொள்ளலாம் அது அரசியல் தெரியாதவர்களின் கூற்றாக மாறிவிடும். கலைஞர் தனதுமுக்கிய நிகழ்வுகளுக்கு, சொநிஆவையும், மன்மோகனையு அழைக்கும்போதே, எடியூரப்பாவையும் அழைத்தார் அல்லவா, அதுபோன்ற அரசியல் இது. இன்னமும சொல்லப்போனால், அந்த கலிஞரின் முயற்சிக்கு இந்து பதில் என்றும் கூறலாம். கலைஞர், பிஜேபி தலைவர் இல.கணேசன் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து கூறினார் ல்லவா, அதற்கு இது பதில் என்றும் சொல்லலாம்.

இதுதான் ஆளும்வர்க்க பாணி. எம்.ஜி.ஆர் எப்படி கேபிடலிசம், சோசலிசம், எல்லாம் சேர்ந்து அண்ணாயிசம் என்று கூறினாரோ, அந்த பாணி. ஜெக்கு எப்படியாவது கலைஞருக்கு பதில் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் சோனியாவுடன் தேநீர் என்ற புதிய பாணி. கலைஞருக்கும் அப்படியே.

,.

No comments:

Post a Comment