Tuesday, October 4, 2011

மின்தடை யார் ஆட்சியில் "அதிகம்" என்று "சண்டை" போடுகிறார்களா?

கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று "பதில்" கொடுத்துள்ளார். பதில் முழுக்க தங்களது திமுக ஆட்சியில் மின்தடை பற்றி செல்வி.ஜெயலலிதா "என்னவெல்லாம்" கூறினார் எனப்தைப்பற்றியே இருக்கிறது. முரசொலியில் "நீட்டி" முழக்கியுள்ளார். அதில் "கருணாநிதியும், ஆற்காடு வீராசாமியும்" எப்படியெல்லாம் "கையாலதார்களாக" இருந்தார்கள் என்று ஜெயலலிதா கொர்ரியுல்லத்தை சுட்டிக் காட்டியுள்ளார். உட்கார்ந்துகொண்டு, "டேஹ்டிப்பிடித்து" ஜெயலிதா சொன்னதையெல்லாம் "வரிச்ப்படுத்தி" நாள் தவறாமல் அந்த "செய்திகளை" மேற்கோள் காட்டி " கேள்வி கேட்பதில்" கருணாநிதிக்கு இணை கருணாநிதிதான்.

அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு "மின்தடை" குறையுமா? மின்தடை நீங்குமா? இதுதான் இப்போது கேள்வி. மின்வாரிய அதிகாரிகள் "முதல்வருக்கு" உண்மை தகவல்களை கொடுக்கிறார்களா? அதுவும் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் கருணாநிதி காலத்தில்" ஓராண்டு மின்துறை தலிவராக இருந்த "வர்மா" என்பவர்த்ஜான் இப்போதும் இருக்கிறார். அவருக்கும், இப்போதைய மின்துறை அமைச்சர் "நத்தம் விஸ்வநாதனுக்கும்: அப்படி ஒரு நெருக்கம் என்கிறார்கள். அதாவது நத்தம் உடன் அதே அதிகாரி முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஒரு வருடம் இதே துறையில் "குப்பை" கொட்டியவராம். எபப்டியோ " சேர்வாருடன்தானே சேர்வார் சேர்வர்".

நமக்கு கிடைத்த தகவல்கள்படி, " காற்றாலை மின் உற்பத்தி" 3000 கிலோவாட் மற்றும் 4000 கிலோவாட் ௦௦௦அளவுக்கு "உற்பத்தி" ஆகும்போது, அதை "தமிழ்நாடு மின்வாரியம்" வாங்கி கொள்ள தாயாராயில்லை. ஆதாவது "தமிழ்நாடு மின்வாரியம்" 2000 ௦ கிலோவாட் மின்சாரத்தை மட்டும்தான் "சேமித்துவைக்கமுடியும்" என்று அப்போது கூறியிருந்தது. இது இன்றைய முதல்வர் "காதுக்கு" சென்றதா என்பது நமக்கு தெரியாது. இப்போது முதல்வர் தமிழ்நாட்டில் "காற்றாலை மின் உற்பத்தி" குறைவாகி உள்ளது என்று ஒரு "கணக்கு" காட்டுவதனால் நாம் இதை கூறவேண்டியுள்ளது.

வெளிச்சந்தைகளில் "மின்சாரம்" வாங்கப் போகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே "தமிழ்ஜ்நாடு மின்வாரியம்" வெளிச் சந்தைகளில் "வாங்கிய' மின்சாரத்திற்கு 10000 கோடி ரூபாய் "கடன்" வைத்துள்ளது என்பது முதல்வருக்கு தெரியுமா ந நமக்கு தெரியாது. ஆகவே "அதிகாரிகள்" எழுதிக் கொடுப்பதை படிப்பது மாட்டும் போதாது. அதில் உண்மை "எவ்வளவு தூரம்" இருக்கிறது என்று "ஆய்வு" செய்ய ஒரு "வழிமுறை" இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment