Wednesday, December 30, 2009

இலங்கையில் பூசா முகாமில் அடைக்கப்பட்ட 1000 தமிழர்கள் பட்டியல்

1. வெள்ளை வாகன கடத்தலில் பாதிக்கப்பட்ட 4000 தமிழர், முஸ்லீம் பற்றிய ரகசியம் அம்பலம் .

2. கோத்தபாய ராஜபக்சேயின் சதி வெளிப்பட்டது .

3. அதிபர் தேர்தல் களேபரத்தில் உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.


இலங்கைத் தீவில் இனவாத போரை நடத்திய அரசு, அதற்கிடையே அப்பாவிமக்கள் மீது வெள்ளை வாகன கடத்தல் மற்றும் படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தது, உலகறிந்த செய்தி. அப்படி கடத்தப்பட்டவர்களது எண்ணிக்கை 4000 வரை தொட்டது. 4ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு, மலையகம், புத்தளம், கிழக்கு மாவட்டங்கள், வவுனியா, யாழ்பாணம் ஆகியவற்றிலிருந்து கடத்தப்பட்டிருந்த, தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் 1000 பேர், பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி நேற்று கசிந்தது. பூசா முகாம் என்பது தென்னிலங்கையில், சிங்களப் பகுதியில் இருக்கிறது. இதில் 25 பிளாக்குகள் இருக்கின்றன. அதில் முதல் 5 பிளாக்குகளுக்குள் இருக்கின்ற தமிழர்கள் எண்ணிக்கைதான் 1000. இந்த முகாமிலிருந்து தப்பி வெளியே வந்த இளைஞர் ஒருவர் கொடுத்த பட்டியலில் 1000 பேருடைய பெயர்கள் இருக்கின்றன. வெளிவந்துவிட்ட இந்த செய்தியை உறுதிப்படுத்திய அரசுதரப்பு, தனது மனித உரிமை துறையின் மூலம், 1000 பேருடைய குடும்பங்களுக்கும் செய்தி அனுப்பி, அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளது. இது தேர்தல் நேர விளையாட்டு. அதேசமயம் பூசா முகாமில் உள்ளே உள்ள 15 பிளாக்குகளில், மீதம் 3000 கடத்தப்பட்ட, அப்பாவி தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் இப்போது தெரிகிறது

No comments:

Post a Comment