Sunday, June 12, 2011

"ஜெ தீர்மானத்தை" அலட்சியப்படுத்தியவனும், அவதூறு செய்தவனும்.

தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, " ராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள்" என்று ஐ.நா. சபை அறிவிக்க, மத்திய அரசு ஆவண செய்யவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டப்பேரவையில், " தனி தீர்மானமாக" தானே முன்மொழிந்து ஏகமனதாக நிறைவ்டேரியது உலகத் தமிழர் மத்தியில் " பெரு மகிழ்ச்சியை" ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட தீர்மானத்தை முதலிலேயே " தடுக்க வான செய்த" இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம், பிறகு " தயங்கி, தயங்கி" தேசிய பாதுகாப்பு ஆலோசகர் " சிவசங்கர் மேநோனை" அனுப்பி அமைதியாக முதல்வரிடம் பேசியது.


ஆனால் "கொழுப்பு சென்ற மேநோனுக்கு" என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. தேவை இல்லாமல், தமிழக முதல்வரை " இழிவு படுத்த முயன்றுள்ளார்" தானும், நிரூபமா ராவும் ராஜபக்சே கும்பலுடன் பேசிய பேச்சில், தங்கள் பக்கம், " இந்திய நலனும், அவர்கள் பக்கம் இலங்கை நலனும்" பேசப்பட்டன என்றும், தமிழ்நாட்டு தீர்மானம் மற்றும் எந்த தனி நபர் கருத்துக்களும்" விவாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு " சட்டமன்றத்தையும், மக்களையும்" அவமானப்படுத்தும் பேச்சு. இந்த மேனன் " தமிழ்நாட்டு முதல்வரை இழிவு படுத்தி விட்டு மீண்டும் இங்கே நுழைய விடகூடாது", இப்படித்தான் தமிழர்கள் என்ன முடியும்.


இந்த மேனன் இப்படி என்றால், இன்னொரு அமெரிக்க கைக்கூலி இங்கே இருக்கிறார். அவர் பெயர் சு.சாமி. அந்த ஆள் " சட்டமன்ற தீர்மானத்தை" மிகவும் கேவலமாக பேசியுள்ளான். அது போன்ற " கடந்தகால மனிதஉரிமை மீறல்கள்" பற்றி பேசக்கூடாது என்கிறான். புலிகளை பாதுகாக்க அவர்கள் பற்றி கூறாமல், தீர்மானம் போடப்பட்டுள்ளது என்கிறான். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மின்சார பிரச்சனை, சட்ட-ஒழுங்கு பிரச்சனையைத்தான் கவனிக்க வேண்டும் என்கிறான். அதாவது" தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போடாதே" என்கிறான். இந்த அமெரிக்க கைக்கூலி "ராஜபக்செக்கும் கைக்கூலி" எண்பதை காட்டுகிறான். அதே நோக்கில், இன்னொரு மன்மோகன் கைத்தடி தனது தமிழ் நாளேட்டில், தலையங்கம் எழுதியுள்ளார். அதிலும், " பொருளாதார தடை விதித்தால் சீனா நுழைய ஏதுவாகிவிடும்" என்று எழுதி, மன்மோகன் கரத்தை பலப் படுத்தியுள்ளார்.

இவ்வாறாக " தலைமை அமைச்சர் அலுவலகம்" தான் எடுத்த முயற்ச்சியை தாண்டி, ஒன்றுக்கு, இரண்டு தீர்மானங்களை தொடர்ச்சியாக இரண்டு நாளும்" போட்டு விட்டார்களே என்று கடுப்பாகி பேசுகிறார்கள். அதில் " கச்சதீவு தீர்மானமும்" சேர்ந்தது அவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டுகிறது. இந்த எதிரிகளை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

கலைஞர் துப்பிய கோழை எச்சம்.

கொள்கை பரப்பு செயலாளரை சிறையில் தள்ளினார்கள். தலைவர் செயற்குழுவை கூட்டினார். கொ.ப.செ.க்கு ஆதரவு கொடுத்தார். சிறைக்கு அனுப்பியவர்கள் மீது தலைபருக்கு கோபம் வரவில்லை. பிறகு மாடியில் மனைவியையும், மகளையும் விசாரித்துக் கொண்டே அவர்கள் " தொகுதி பேரம்" பேசினார்கள். கேட்டதை விட்டுக்கொடுத்த தலைவருக்கு கோபம் வரவில்லை. ஆத்து மகளை சிறையில் தள்ளினர். தலைவர் அழுதார். ஆனால் சிறையில் தள்ளியவர்கள் மீது தலைவருக்கு கோபம் வரவில்லை. தொடர்ந்து மகளுக்கு " பிணையை மறுத்தார்கள்". தலைவருக்கு கோபம் வந்து விட்டது என்று தொண்டர்கள் நினைத்தார்கள்.


தலைவர் " உயர் மட்டக் குழுவை" கூட்டினார். இதுவரை தானே முடிவு எடுக்க முடியாமல் இருந்ததால் மட்டும்தான் " குட்டக் குட்ட குனியும் கூட்டமடா" என்று நினைத்து தொடர்ந்து குத்துகிறார்கள். இந்த முறை தலைவர் " வெளியே வார முடிவு எடுப்பார்" என்று தொண்டர்கள் நம்பினார். தலைவர் " காங்கிரஸ் மீது" தப்பில்லை என்றார். இது " கோழைத்தனமா"? தலைவர் " துப்பிய கோழையா"?