Saturday, March 31, 2012

பிரஷாந்த் பூஷன் இடிந்தகரை வந்ததால் எழும் கேள்விகள்.

இன்று பிரஷாந்த் பூஷன் இடிந்தகரை வருகிறார். சரி. இதே உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மூன்று மாதங்கள் முன்னாள் ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். யாருக்காக? எதற்காக? இந்திய தேர்தல் ஆணையத்தின் இரண்டு முன்னாள் தலைவர்களான நெல்லை மாவட்ட கடையம் கோபாலசாமி ஐயங்கார், நெல்லை மாவட்ட திம்மராஜபுரம் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மற்றும் முன்னாள் கப்பல்படை தளபதி அட்மிரல் ராமதாஸ்,மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளரும்,பிரதமர் அலுவலக செயலாளருமான ஒருவர், மற்றும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணிய முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து போட்ட வழக்கு அது. அதில் நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்ட "அணு சக்தி ஆபத்து இழப்பீடு சட்டத்தை" ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடி தடையை உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது.


இந்த கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே அமெரிக்க-இந்திய அணு சக்தி ஒப்பந்தமான 123 ஒப்பந்தம் கைஎஷுத்தாகும் வேளையிலேயே அதுபற்றி எழுதும்போது, அது இந்திய இறையாண்மையை உடைத்துவிடுமேன்ரும், அமெரிக்க உளவாளிகளை இந்தியாவிற்குல் நுழைத்து, அணு சக்தி மற்றும் அணு அயுதம் பற்றி அனைத்து ரகசியங்களையும் எடுத்து சென்றுவிடும் ஆபத்து உள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் எழுதியுள்ளார். அதற்கு மாற்றாக இந்தியா எந்த நாட்டிலிருந்தும் யுரேனியும் வாங்காமல், இந்தியாவிலேயே கிடைக்கும் "தொரிய்ஜ்ம்" மூலம் அனுகுயண்டு தயாரிக்க உதவாத யுரேனியும் எரிபொருளை மின்சாரம் தயாரிக்க ஆக்கத்திற்கான அணு சக்தியாக பயன்படுத்தலாம் என்று எழுதியவர். இவர் போன்ற நாட்டுப்பற்று கொண்ட அறிவுஜீவிகள், முன்னாள் அதிகாரிகள், ஒய்வு பெற்ற தேசபகதர்கலான இந்திய மூத்த அறிவுஜீவிகளினைந்து போட்ட வழக்கு தான் அது.


இதே கொபாலகிருஷ்ணந்தான் இடதுசாரிகளால் ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக அமைக்கப்பட்ட அதாவது பிரான்ஸ் நாட்டு அணு உலைக்கு எதிராக போடப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். ஆகவே இந்திய அறிவுஜீவிகளினைந்து இந்திய அரசின் அணு சக்தி கொள்கைக்கு எதிராக திரண்டு வருகின்றனர். அதாவது இந்திய அரசின் அணு சக்தி கொள்கையே கேள்விக்கு உள்ளாகி உள்ளது.இத்தகைய சூழலில் கூடங்குளம் அணு உலையை இந்த அரசு எப்படி செயல்படுத்த முடியும்? தொடர்ந்து போராடுவதன் மூலம் மக்கள் போராட்டம்தான் வெல்லுமென்று வரலாறு நிரூபிக்கும்.

Friday, March 30, 2012

ராமஜெயம் கொலையாளிகள் யார்?

முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய பிரமுகரும், கட்சிக்குள் ஸ்டாலின் குழுவின் ஒரு வலுவாய்ந்த பிரமுகரும், திருச்சியின் முடிச்சூடா மன்னருமான கே.என்.நேருவின் நிழலான ராமஜெயம் நேற்று காலை நடைபயிற்சி செல்லும்போது, அவரது வீடு உள்ள தில்லைநகரின் பத்தாவது குறுக்கு தெருவிலிருந்து அதிக தொலைவு செல்லும் முன்பே, நிறைய பேர் நடபயிர்ச்சி செய்யும் வேளையிலேயே கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேருவிற்கு பணம் சேர்க்கும் பலம், வணிகம் செய்யும் பலம், அடியாள் சேர்க்கும் பலம், தேர்தல் பனி செய்யும் பலம், திருச்சி நகர் எங்கும் மாவட்டம் எங்கும் காவல்துறையை செல்வாக்கு செலுத்தி அனைத்தையும் ஆளும் ஆள் பலம் தம்பி ராமஜெயம்தான். அப்படிப்பட்ட ராமஜெயத்தை தூக்கி சென்று கொலை செய்து விட்டார்கள்.எதற்காக? என்ற கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு கதையை சொல்கிறார்கள்.

முதலில் நேற்று முட்டை ரவி குழுவினர் என்றனர். முட்டை ரவி கள்ளர் சமூகத்தவர். அவரைகாவல்துரை ரவுடி என்றது. காவல்துறையே "போலி துப்பாக்கி சூட்டில்" சுட்டு கொன்றது. அது நடந்தது திமுக ஆட்சியில்.முட்டை ரவி ஸ்ரீதர வானடையாருக்கு தேர்தல் பனி ஆற்றியவர். அவருக்கு எதிராக நேரு செயல்படுவதை கண்டித்தவர். அதற்காக வரத்து கொலையை காவல்துறை மூலம் தூண்டி விட்டவர் என்று, ராமஜெயத்தை குற்றம் சாட்டினால், அந்த முட்டை ரவி இறந்த பிறகு அவரது ஆள் என்று குணா சிறையில் இருந்து கொண்டே திட்டமிட்டிருப்பார் என்றனர். அதுவும் வெறும் கற்பனை என்று ஆகிவிட்டது. அடுத்து திருச்சி அருகே மணப்பாறை அருகே வையம்பட்டியில் ஒரு காருடன் இரண்டு ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் ஐது ஆண்டுகளுக்கு முன்பு எரித்து கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் சிறையில் இருந்த " குடமுருட்டி சேகர்" இரண்டு நாள் முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு கொடுத்த வாக்குறுதி படி ராமஜெயம் கொலையை செய்ய சொன்ன உடனே கொடுத்த பணம் தவிர மீதி பணம் கொடுக்க வில்லை, என்பதால் அவரது பழி வாங்கும் நடவடிக்கை என்றனர். அதுவும் இல்லை என்றாகி விட்டது.

நேருவையும், ராமஜெயத்தையும் நில மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ஐந்து மாதம் முன்னாள், ராவணனிடம், அவர் கேட்ட பத்து கோடி கொடுக்காமல், தான் ஒப்புக்கொண்ட ஏழு கொடியையும் கொடுக்காமல், இரண்டு கோடி மட்டுமே ராமஜெயம் கொடுத்தார் என்பதால், கோவை சிறையிலிருக்கும் சசிகலா சொந்தம் ராவணன் ஏற்பாடு செய்து, கூலி படை வைத்து கொன்று விட்டார் என்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை. திருச்சி அறிவாலயம் கட்ட அடுத்தவர் நிலத்தை பறித்ததால், பறி கொடுத்தவர் ஏற்பாடு என்றனர். அதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள். சொந்தகாரர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியை ராமானுஜத்திற்கு கிடைக்காமல் ஆ.ராஜா மூலம் பிடுங்கி விட்டார். பிறகு மத்திய மைச்சராகவும் ஆகிவிட்டார். இது அந்த வட்டார திமுகவிற்குள் உள்ள உல் முரண்பட்டு. தனது தாயார் சாவுக்கு வந்த நேபோலியானை இழிவு படுத்தி ரானஜெயம் அனுப்பினார். அதேபோல சொந்தகார ரெட்டியார்கள் முன்னாள் அசிங்கம் செய்ற்ற்ஹு இன்னொரு முறை அனுப்பினார். அகவே நேபோலியானுக்கு ராமஜெயம் மீது கோபம். நெப்போலியன் தனது குடும்பத்தை அமெரிக்காவில் நிரந்தரமாக் தானாக வைத்து விட்டு, இப்போது அமெரிக்க "பச்சை அட்டை" வாங்கி விட்டு போய்விட்டார். ஆகவே அவர்தான் ஆள் வைத்து செய்தாரா? என்றனர். அதுவும் இல்லை என்றாகி விட்டது.


சமீபத்திய அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் வந்த இடை தேர்தலில், ,நேரு மீண்டும் நின்றபோது, ராமஜெயம் பத்து கோடி செலவழித்ததால் ஆத்திரப்பட்ட ஆளும் தரப்பினர் என்றார்கள். அதுவும் இல்லை என்றாகி விட்டது. எப்படியோ காவல்துறையினர் போலத்தான் இருந்தார்கள் என்று கடத்தல்காரர்கள் பற்றி வட்டார் சாட்சிகள் கூறுகின்றன. நடைபயிற்சியில் கொலை செய்வது என்பது, அரசியல்வாதிகட்கு,வழமையான் ஆபத்துதான் என்றால், எம்.கே.பாலன் சென்னையில், தா..கிருஷ்ணன் மதுரையில், ஆலடி அருணா நெல்லையில் இப்போது ராமஜெயம் திருச்சியில் என்றால், ஊருக்கு ஒருவராய் கொலை செய்வார்களோ? என்று எண்ண தோன்றும். ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுத்தால் எத்தனைகொலைகள் விழும்?

Friday, March 16, 2012

தீக்குளித்தல் ஒரு பண்பாடா?

இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் தீக்குளித்த சின்னசாமி, அரங்கநாதன் போன்றோர் போற்றப்படுகின்றனர். தீக்குளிக்கும் போராட்டத்தை தாங்கள் உற்சாகப்படுத்த முடியாது என்றும், ஆனாலும் தீக்குளித்தவர்கள் தியாகிகள் என்றும் கூறினார்கள். தலைவர்களே அவ்வாற்று அறிக்கைகளை வெளியிட்டார்கள். அந்த நேரங்களில் எழுந்த அனுதாபப அலைகளுக்காக அப்படி வெளியிட்டார்கலேன்ரும், உண்மையில் தீக்குளிப்பதை தலைவர்கள் ஏற்கவில்லை, உர்ச்சாகபப்டுத்தவில்லை என்றே நாம் எண்ணி வந்தோம். தமிழ்மொழிக்காக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளாக அவர்களை நாம் நினைவு படுத்தவேண்டும் என்று தலைவர்கள் கூறிய போது, அதையும் தமிழ்மொழிக்காக தாய்மொழிக்காக தன்கள் இன்னுயிரையும் ஈந்தவர்கள் என்றே நாம் அவர்களை போற்றினோம். அதற்க்கு எந்த அகராதியிலும் தீக்குளித்தல் என்ற போராட்ட வடிவத்தை ஏற்றுக் கொண்டோம் என்று பொருளல்ல.என்றே எண்ணினோம். நாம் ஒன்று நினைக்க தலைவர்கள் ஒன்று நினைத்தார்களோ என்று நாம் பிரித்து பார்க்க முடியாதவர்களாக ஆகிவிட்டோம். அப்படியே திர்ஹளைவர்கள் தொண்டர்கள் நினைப்பதிலிருந்து மாறுபட்டு எண்ணினார்கள் என்றால், அது "என்னுயிர் தோழன்" படம் போல , இருக்கும் என்றே எண்ணி வந்தோம். அதாவது தொண்டனை கொளுத்தி விட்டு, தலைவர்கள் அந்த தொண்டனுக்காக அழுவது என்ற நடிப்பின் சக்கரவர்த்திகள் என்பதே அந்த படம் நமக்கு கொடுத்த பாடம்.


அதன்பின் ஈழப்போர் நடந்துவந்த காலம். தமிழன் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர் இங்கே குடும்பத்திற்கு யார்,யாருக்கு பதவி வாங்க வேண்டும் என்று கவலை கொண்டாரே ஒழிய கடல் தாண்டி இன உரிமைக்கு போராடும் தமிழன் ஒரு லட்சத்து எழுபத்தாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டு அவ்ருத்தப்படாத நேரம்.அதுகண்டு துடித்து போன முத்துகுமார் தனது இன்னுயிரை ஈந்து, தீக்கு பலியாக்கி, உயிராயுதம் ஏந்தி போரை நிறுத்த போராடினான்.அவனது உடலை கூட எடுத்துசெல்லும் பாதை தமிழர்களை எழுப்பி விடக்கொடதே என்று கவனமாக இருந்த ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தவர் சக்கரவர்த்தியாக இருந்தார். இன்று உலகத்தநிழர்கள் எல்லோருமே ஒரே குரலில் "கொடியவன் மகிந்தாவை" கூண்டிலேற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் விவாதத்தை ஆதரிக்க மத்திய அரசை கேட்கும் நேரம். தமிழக அரசியல்வாதிகள் யாருமே தஹ்நிமைப்பட விரும்பாத காலம். அதற்காக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் குரல் கொடுக்க, கடிதம் எழுத என நிறுத்தி கொண்டால், அந்த நிர்ப்பந்தத்திற்காக எதுவும் செய்ய அவர்கள் எண்ணாத காலம். அண்ட் நேரத்தில்தான் தான் தீக்குப்பேன் என்று ஒரு தலைவர் கூறியுள்ளார். அதுவும் அண்ணா பெயரில் உள்ள நூற்றாண்டு நினைவு நூல்நிலையத்தை மருத்துவமனையாக மாற்றினால்தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளார்.


தான் மருத்துவமனைகளுக்கு எதிரியல்ல என்றும் கூறியுள்ளார். அதனால் அவருக்கு அன்ன பெயரில் உள்ள கட்டிடம் என்பதுதான் முக்கியம் என்பதை இதன்மூலம் தெரிவித்து உள்ளார். அதுவும் அண்ணா நூற்றாண்டு நினைவு என்பதன் முக்கியத்துவத்தை அப்படி உணர்த்தியுள்ளார். அதனால் தங்கள கட்சியின் பெயரில் அண்ணாவை கொண்டவர்கள், தன்கள் கட்சி கோடியில் அண்ணா படம் பொறித்தவர்கள் தானகலும் அண்ணா பெயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று கூறலாம். அதுவும் அண்ணா நூற்றாண்டு நினைவு வேன்பதில் அக்கறை கொண்டவர்கள் என்றும் கூறலாம். அதனால் அவர்கள் தாங்கள் நூல்நிலையத்தை மாற்றி மருத்துவமனையாக ஆக்கினாலும் அண்ணா நூற்றாண்டு நினைவு என்ற பெயரையே அதற்கும் வைத்து தலைவரது ஆசையை நிவர்த்தி செய்யலாம். அதில் தலைவரும் திருப்தி அடையலாம்.ஆனாளொரு தஹ்லைவர் தீக்குளிப்பேன் என்று கூறுவது எந்த அளவு தமழர்களின் பண்பாட்டை பற்றி உலகிற்கு எடுத்து சொல்லும்? இளைஞர்களுக்கு இது எந்த அளவுக்கு போராட்ட வடிவனகளை டேஹ்ர்வு செய்வதில் முன்னுதாரணமாக இருக்கும்? ஒரு இனத்தில் பண்பாடு எதுவும் செய்ய முடியாமால் சிலர் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் போராட்ட வடிவனகளை தொங்கும் போய்க்குதானா?

தீக்குளிப்பு பண்பாடு போராடி வெல்ல வேண்டும் என்ற என்னத்தை அழிக்காதா? தான் முறையாக திகாரம் கையில் இருந்தபோதெல்லாம் தமழர்களின் வாழ்வுரிமைக்காக போராடாமல், தமழர்களின் உயிர் போகும்போதெல்லாம் உச்ச கட்ட போராட்டங்களை எடுக்காமல், தனது கையாலாகதனத்தை கட்டும் வகையில் ஒரு அரசியல் தலைவர், முன்மாதிரியாக இருக்க வேண்டியவர், தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்ட வேண்டும் எனப்டஹ்ர்ககா மட்டுமே தான் தீக்குளிக்க தயார் என்று கூறுவது எங்கே கொண்டு பொய் விடும்? தமிழர் பண்பாடு போராடி சாகும் வீர பண்பாடு என்று எங்களுக்கு எழுதி காட்டிய ஒரு தலைவர், ஒரு பெயர் மாறக்கொடாது என்பதற்காக உச்சகட்ட உயிர் தியாகத்திற்கு தயாரா எனக்கூறுவது விரக்தியின் வெளிப்பாடா? விவராமான தூண்டிவுதலின் செயல்பாடா? பண்பாட்டை நேநேகள் தமழருக்கு கற்று கொடுக்க வேண்டாம். தமிழர்களா உங்களுக்கு கற்று கொடுப்பார்கள்.

Wednesday, March 14, 2012

கிருஷ்ணா அறிக்கையும், பரபரப்பிர்காகவா?

நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு தலைவர் உரையில் தொடக்கி இன்றுவரை தமிழக உறுப்பினர்களின் குரல்கள் மகிந்தா வின் கொடுமை ஆட்சிக்கு எதிரான எதிரொலிகளை எழுப்பி வருகிறது. இதுவரை நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் குடியரசு தலைவரின் உரையின் நேரத்தில் இப்படி நடந்தது இல்லை என்கிறார்கள். அப்படியிருந்தால் மகிழ்ச்சிதான். தமிழனின் நீதிக்கான குரல் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கொள்வோம். திமுக, அதிமுக சி.பி.ஐ., சி.பி.எம், கட்சிகள், மதிமுக, விசிக, ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ், பாஜக என்று தமிழ்நாட்டிலிருந்தும் ஆதரவாகவும் சென்ற எம்.பி.க்கள் குரல்கொடுத்து அதன்போயறகும் ஐ.மு.கூ. அரசு செவி மதுக்க வில்லை என்ற உணர்வு தமிழக மக்களை பெரிதும் கிளர்ந்தெழ செய்துள்ளது. இந்த நிலையில் இன்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையை படிக்கிறார். அதில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் நீண்ட நெடிய ஒரு உறவு இருக்கிறது என்று கூறியுள்ளார். கிருஷ்ணாவைவிட, அந்த உறவு பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய உறவு இதுவரை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமழ்நாட்டின் விருப்பங்களுக்கு விரோதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதை தெளிவாக இன்று காலை அனகில ஏடான தி ஹிந்து நாளேட்டில் கொள்ளப்பன் எழுதியுள்ளார். அதாவது சாஸ்திரி- பண்டாரநாயகா ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில், மலையாக தமிழர்கள் அதாவது இந்திய வம்சாவழியினர் இலங்கையிலிருந்து இடம் பெயரப்பட்டு, இங்கே கொண்டுவந்து எறியப்பட்டனர். அந்த ஒப்பந்தத்தை அன்றே காமராஜ் எதிர்த்தார் என்கிறார் கட்டுரையாளர். அப்படி தமழ்நாட்டின் தலைவர்களுக்கு எதிராக, தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக டில்லிகாரர்கள் ஒப்பந்தங்கள் செய்துவருவது புதிதல்ல என்பதே அந்த செய்தி கட்டுரையின் சாரம்.அடுத்து எழுபத்தி நாலாம் ஆண்டில் போடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம்.அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக வின் எம்.பி.கால நாடாளும்னர்த்தில் அந்த கச்சதீவு பகுதியான இந்தியாவிற்கு சொந்தமான அப்பகுதியை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று வாதிட்ட பின்னாலும் இந்திரா காந்தி கொடுத்தற என்கிறது அந்த செய்தி கட்டுரை. இப்படி வரலாறு ரீதியாக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக முடிவுகளை செய்யும் டில்லி தலைமை பற்றி கேள்விகள் இன்று தமிழகத்தில் அடிபப்டை மக்களிடம் மட்டுமல்ல, மேட்டுக்குடி மக்களிடமும் பரவ தொடக்கி விட்டது.அது மேலும் டில்லி மீதான் மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கிவிடும்.


அதேநேரம் இன்று சபையில் அறிக்கையை படித்த கிருஷ்ணாவிற்கு உடனேயே அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு கொடுத்து அவரது அறிக்கையை அங்கேயே கிழித்து எரிந்து வெளியேறினர். அவர்கள் எதிர்க்கட்சி என்பதால் அப்படி எதிர்ப்பை தெரிவித்தனர்.அதேசமயம் திமுக. அப்படி செய்ய முடியாது. அவர்கள் ஆளும் கூட்டணியில் அமைச்சரவையில் இருக்கின்றனர். ஆகவே திமுக வின் திருச்சி சிவா எழுந்து அழகான மறுப்பு கொடுத்தார். அதில் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உள்ளனல்லுறவு, நாற்பதாயிரம் தமிழர்களின் உயிரை குடித்து விட்டதே என்றார். அன்றாடம் எங்கள தமிழக மீனவர்களின் உயிர்களை இந்திய கடல் எல்லையிலேயே கொலை செய்கிறதே என்றார். அதேபோல சி.பி.ஐ. கட்சியின் டி.ராஜ பேச எழுந்தார். அவர் வருத்தத்துடன் இரு நாட்டு உறவுகளின் நல்லுறவு பற்றி பேச எவ்ந்டியிருக்குஇஅர்து என்றார். அதாவது ஐ.நா. சபையில் இந்தியா பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும் என்று விரும்புகிறது. அப்படுய் ஒரு உறுப்பினர் கிடைக்க வேண்டும் என்றால்,இந்திய அரசு இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தே ஆகவேண்டும் என்றார். இப்படி பலரும் ஆதரபூர்வமாக் ஆரோக்கியமான மனத்துடன் பேசும்போது கிருஷ்ணாவின் கண்களில் கண்ணீர் தஹ்தும்பியது. அதாவது உடன் இருக்க வேண்டிய கட்சிகளே இப்படி நல்ல வாதங்களை முன்வைக்கும்போது, தென்னிந்தியனான இந்தி தெரியாத நம்மை வடநாட்டு இந்திவாலாக்கள் சிக்கலில் மாட்டி வைக்கிறார்களே என்ற எண்ணம் தோன்றியது தெரிந்தது.

அதனால் அவருகிற இருபத்தி இரண்டாம் நாளுக்குள் இறுதி முடிவு செய்யலாம் என்றும், இன்னமும் இந்திய அரசின் நிலை முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். இது நாம் ஏற்கனவே கூறியது போல வாதங்களை பெரிதாக்கி கடைசியாக இந்திய நிலையைஉலக சமூகம் மத்தியில் தனிமைப்படாமலேடுக்க முயற்சி எடுக்கும் மத்திய அரசை காட்டி கொடுக்கிறது. இப்படி ஒரு விசயத்தில் மக்களது அப்பிபிராயத்தை கிளப்பிவிட, அதன்மூலம் ஒரு க்ருத்தை பொது அபிபபிராயமாக ஆக்கி விட்டு பிறகு தனகளது வெளிவிவகார் துரையின் முடிவை எடுக்க முயலும் இந்திய அரசின் தந்திரம் அம்பலமாகி வ்ருகிறது.அதனால்தான் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் தனது உரையில் இரு நாடுகளின் உறவு கெடாமல் இந்தியா ஐ.நா.வின் முன் வந்துள்ளதீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். இப்படி பரபரப்பை உருவாக்கி நாட்டை குழப்பும் காங்கிரஸ் சரியான பதிலடியை வங்கி கட்டிக்கொள்ளும்.

வந்தே மாதரம்?.வந்து ஏமாத்தறோம்?

டில்லிகாரர்கள் அதாவது வட இந்தியர்கள் அதாவது இந்தியா என்ற மாபெரும் துணை கண்டத்தின் பூகோள அகலத்தை, நீளத்தை ஆளக்கூடிய தேசிய இனங்களின் எதிரிகள், அதாவது இந்திய சிறையில் அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களையும் ஆண்டு வரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், அதாவது காலனி நாடாக இந்த நாட்டை ஆண்டு வந்தவர்களின் கைகளில் அதிகாரத்தை மட்டுமே கை மாற்றி வாங்கி கொனடவர்கள், திடீரென தமிழ் தேசியத்தின் மீது, ஈழ தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொள்வார்களா? அல்லது அந்த தேசிய இன விரோதிகள் திடீரென தமிழ்நாட்டு தமிழர்களின் நியாயமான குரல்களுக்கு நல்ல செவி சாய்ப்பார்களா? அல்லது அவர்கள் தாங்கள்தான் ஈழத்தமிழர் மீது போர் நடத்த தூண்டியவர்கள் என்ற உணர்வே இல்லாமல் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில்முன் உள்ள அமெரிக்க தீர்மானத்தை தாங்களாகவே ஆதரிப்பார்களா?

நாள் தவறாமல் இரண்டு நாட்களாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும், பெரும் கூச்சலை எல்லா தமிழ்நாட்டு கட்சிகளும் கிளப்பிய பிறகு, தமிழ்நாட்டு வாக்களர்களை திருப்தி படுத்த வேறு வழியில்லை என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற கட்சிகள் அனைத்தும் முடிவு செய்து உண்மையாகவே அதற்காக ஐ.நா. வில் உள்ள தீர்மானத்தை ஆதரிக்க குரல் எழுப்பும் போது முதலில் குறிப்பிட்ட நாட்டில் உள்ளபிரச்ச்னை மீது தீர்மானம் கூடாது என்று கூறிய இந்திய அரசு, அத்தகைய தீர்மானத்தை தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராக நேரு காலத்தில் இந்தியா மேற்கத்திய நாடுகளை எதிர்த்து கூட கொண்டுவந்தது என்பதை மறந்த அல்லது எதிர்க்கும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் இப்போது வேறு கோணத்தில் பேசுவது எதனால்? பிரதமர் தான் எல்லா சம்பந்தப்பட்ட சக்திகளுடனும் பேசி வருவதாக கூறுவது ஏன்? இன்னமும் முடிவு செய்ய காலம் இருக்கிறது என்று பிரணாப் முகர்ஜி நீட்டுவது ஏன்? நாடாளுமன்ற விவகார மைச்சர் பன்சிலால் தனைகளுக்கு ஐ.நா. என்றால் என்ன என்றே தெரியாது என்ம்பது போல, வெளிவிவகார் அமைச்சர் கிருஷ்ணா வந்துதான் பதில் கூற வேண்டும் என்று தள்ளி போடுவது ஏன்? தமிழ்நாட்டு எம்.பி.கலை பார்த்து, ப.சிதம்பரம் தமழிலேயே பேசி, நாளை நல்ல முடிவு அவரும் என்று கூறுவது ஏன்? நாம் குரிப்புயட்டது போல அது அமெரிக்க சார்பு இந்திய அரசின் நிலை. சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ராஜபக்சே க்கு எதிரான ஒரு சிறிய முன்வைப்பு. அதேசமயம் அதற்குள் ராஜபக்சேவை காப்பாற்ற எடுக்கும் புதிய வியூகம்.

அப்படி எதை இந்திய அரசு எடுத்தாளுமுல்க சமூகம் முன்னாள் தான் அதனிமைப்படாமல் இருக்க எடுக்கும் முயற்சிதான் எடஹ்விற மனப்போர்வமான தமிழர் நலனை பாதுகாக்கும் முயற்சி அல்ல. இந்த நிர்ப்பந்தம் நாட்டிற்குள் மட்டுமின்றி உலக சூழலிலும் இந்திய அரசுக்கு வந்திருப்பதை அணங்கு டேஹ்ரிந்துதான் அவர்கள் தங்கள் கூட்டாளி கலைஞரையும், தன்கள் கட்சி ஆள் ஞானதேசிகனையும் பேச வைதிருக்கிரறாக்கள்.ஆகவே வருகின்ற இந்திய அரசின் ஆதரவு பெரும் மாதரத்தை ஏற்படுத்தாது. ஆனால் அதுவே உலக சமூகம் மத்தியில் போர் குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிரான ஒரு செய்தியை வலுப்படுத்தும். அது தொடக்கம் என்று காண்போம்.ஆகவே இந்த தீர்மானம் சரிதான். ஆனால் அதற்கும் மேலாக ஒரு சுயாதீனமான அனைத்து நாட்டு விசாரணையை ஐ.நா. தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்தி பிடிப்போம். ஆகவே இந்த கிய நகர்த்தல்கள் டில்லியின் வந்து ஏமாற்றுகிறோம் என்ற முழக்கம்தான்.,

Tuesday, March 13, 2012

ராஜபக்சே தலை தப்புமா?

ஒவ்வொன்றாக ராஜபக்சே கும்பல் செய்த கொலைக்குற்றங்கள், போர் குற்றங்கள், மனித உரிமைமீறல்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை ஐ.நா.வின் மனித உரிமைகவுன்சில் முன்னால் பட்டியலிடப்பட்டு வருகின்றன. போரின் கடைசி காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளை ரத்த வெறிபிடித்த கொலைகளை ஆதாரத்துடன் எடுத்து வைத்து அம்பலப்படுத்த மேற்கத்திய நாடுகளில் பல சக்திகல்முனைப்புடன் செயல்படுகின்றன.அவற்றில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" அதிக வேகத்துடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதன் தலைமை அமைச்சர் சட்ட தரணி விஸ்வநாதன் உருத்திரகுமார், ஒரு புத்தகமாக வெளியிட்டு போர்குற்றன்களை, வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. நிபுணர் குழு, சேனல் நாலு, டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்க வெளிவிவகார துறையின் அறிக்கையை அமெரிக்க காங்கிரசில் வைத்த நகல் மற்றும் எல்.எல்.ஆர்.சி.என்ற ராஜபக்சே அமைத்த கற்ற படிப்பினைகளும், நல்லிணக்க ஆணை குழு அறிக்கை ஆகிய ஐந்து விதமான அறிக்கைகளையும் ஒப்பிட்டு எப்படி ராஜபக்சேவின் சிங்களர்கள் அறிக்கை ஒவ்வொரு விசயத்திலும் உண்மைக்கு மாறாக, நீர்த்துபோன வடிவில் விசயங்களை முன் வைக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளனர். இந்த ஆங்கிலப்புத்தகம் ஒவ்வொரு நாட்டு தூதரகங்களுக்கும் கொடுக்கப்பட்டு ஒரு பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்த அந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறப்பினர்கள் முயன்று வருகிறார்கள்.


இப்படி பல முறைகளில் வ்வேளிப்பட்டு வரும் உண்மைகளை எல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த முறை ராஜபக்சே அரசு தப்பிக்க உலக சமூகம் முன்னாள் வழியில்லை என டேஹ்ரிகிறது. ஆனாலும் அதையும் சமாளிக்க சிங்களம் முயற்சி செய்கிறது. அதேசமயம் ராஜபக்சேவை தூக்கி எரிந்து விட்டு ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமெரிக்க ஒரு ஆட்சியை ஏற்படுத்த முயல்வதாக ஒரு பேச்ச்சும் சிங்களத்தால் பேசப்படுகிறது. அதற்கு ஆப்பு வைப்பது போல, ரணில் தலைமை தாங்கும் "ஐக்கிய டேஹ்சிய கட்சி" என்ற சிங்கள கட்சியில் பெரும் அளவு உறுப்பினர்கள் மூலம் ரணிலுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துவதில் பெரிய அளவில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சமீப ஆண்டில் தென்னிலங்கையான சிங்களத்தில் உள்ள மக்களில் பலரும் அரசு மீது அதிருப்தியை தெரிவித்த காரணத்தால், சிங்களர் பலர் காணாமல்போவதும், அதில் பலர் கொலை செய்யப்படுவதும் அதிகரிதது வருகிறது. அந்த செய்தி நாள் தஹ்வைராமல் கடந்த ஓர் ஆண்டாக காட்சி ஊடகங்களில் சிங்களத்தில் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி வரும்போது அவர்களுக்கு ஆதராவாக ஆர்ப்பட்டங்கல்கொளும்பு நகரில் நடந்த வண்ணமே இருக்கிறது. அந்த ஆர்ப்பட்டங்களிலும் கூட தமிழர்கல்கழந்து கொண்டு தோழமை காட்டுகிறார்கள். ஆனால்டமழர்கள் இதேபோல காணமல போனபோதும், கொலை செய்யப்பட போதும் சிங்கலர்கல்யாரும் ஆதரவு குரல் எழுப்பவில்லை. இப்போது நிலைமை மாறி வருகிறது.

சிறையில் இருக்கும் பொன்சேகா ஆதரவு சக்திகள் அமைதியாக ஆட்சி மாற்றத்திற்கு வேலை செய்கிறார்கள். அதேசமயம் மகிந்தாவின் தம்பி பசில் ராஜபக்சே, தனது அன்னிக்கு எதிராக சதி செய்ய தொடக்கி விட்டார். அதாவது மகிந்தாவிற்கு பிறகு அவரது மகனை கொண்டுவர மகிந்தாவின் மனைவி விரும்புகிறார். ஆனால் அதை பசில் விரும்ப வில்லை. அதனால் அவர் அதற்கு எதிராக சதி செயல்களை ஊக்குவிக்கிரார்ட். இப்படி ஒரு சூழலில் சிங்களம் ட்டிஹநிமைப்பட்டு வருகிறது.உள்நாட்டிற்குள் இப்படி தனிமைப்ப்படும்போது, உலக அரங்கிலும் தனிமை பட்டு வருகிறது. இப்போது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகனும் பன்னிரண்டு வயதே ஆனா பாலச்சந்தர் பிடிபட்டு படுகொலை ஆனா செய்தி, ஆதாரத்துடன் வெளிவந்து விட்டது. அதனால்சிங்கலம் மேலும் உலக அரங்கில் தனிமைப்படுகிறது. இந்த நேரத்தில் சரியான டியை தமிழர்கள் உலகெங்கும் கொடுத்து அந்த பாம்பு பாதி உயிருடன் திரும்ப கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.இதுவரை செய்த வேலைகளை விட இப்போதுதான் அதிகமாக ராஜபக்செகும்பலை சூடான் மன்னர் மீது ஐ.நா.போர்குற்றன்களை சுமத்தி எப்படி கைது செய்ய முடிவு செய்ததோ, அதேபோல ஒரு சூழலை இலங்கைக்கும் ஏற்படுத்த வேண்டும்.அதையொட்டி எப்படி ஐ.நா.வும் உலக சமூகமும் கேட்டுக் கொண்ட படி, சூடானில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி, தெற்கு சூடான் மக்கள் தங்களது விருப்பப்படி ஒரு சுய நிர்ணய உரிமை ஒண்ட தனிநாட்டை ஏற்படுத்திக் கொண்டார்களோ அதேபோல இலங்கையிலும் த்ஜமிழினம் தனது சுதந்திரமான ஈழத்தை ஏற்படுத்தி கொள்ள உலக சமூகம் ஒத்துழைக்க வேண்டும். அதற்கான தயாரிப்புகளை இந்தியாவிற்குள் நாம் செய்யவேண்டும்.

உலக சமூகத்துடன் இந்திய அரசு சேருமா?

நேற்று நாடாளுமன்றம் அமளி, துமளி ஆனது. திமுக, அதிமுக, சி.பி.ஐ,,வி.சி.க. என தமிழக கட்சிகள் போர் பரணி பாடின. தமிழ்நாட்டில் உள்ள கனகிராஸ் மற்றும் பாஜக கூட ஈழத்தமிழர் மீது கரிசனம் கொண்டு, மகிந்தா அரசின் போற்குற்றன்களை விசாரிக்க அமெரிக்க தீர்மானத்திற்கு ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் வாக்களிக்க கேட்டுக் கொள்கின்றன. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் உறுப்பினர்கள் நாற்பத்தி ஏழு என்கிறார்கள். அப்படியானால் இருபத்தி நாலு பேர் வாக்களித்தால் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிவிடும். அமெரிக்காவும் தீர்மானத்திற்கு வாக்களிக்கும் படி ஒவ்வொரு நாட்டையும் கேட்டுக் கொள்கிறது. இலங்கையும் அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என ஒவ்வொரு நாட்டையும் கேட்டுக் கொள்கிறது. ரஷியா, சீனா, பாகிஸ்தான் போன்றோர் இலங்கை ராஜபக்சே அரசுக்கு அதரவாக உள்ளனர். இங்கு போற்குற்றவாளிகளை தண்டிக்க போராட்டம் நடத்தும் இடது சாரிகள் அதாவது சி.பி.ஐ, சி.பி.எம். ஆகிய கட்சிகள் தனகளது தோழமை கட்சிகள் ஆட்சி நடத்தும் ரஷியா, சீனா நாடுகளின் அரசாங்கங்களை தீர்மானத்திற்கு ஆதரவாக திருப்ப முயன்றும் தோற்று விட்டன. தார்மீகரீதியாக இந்திய அரசு ஆதரித்தால்தான் இலங்கை அரசுக்கு முகம் இருக்கும்.

இப்படி சூழலில்தான் தமிழ்நாட்டு கட்சிகள் நாடாளுமன்றத்தில்குரல் எழுப்புகின்றன. குறிப்பாகவே அமெரிக்க தீர்மானத்தை ஆதரியுங்கள் என்றே நேரடியாக இந்திய அரசை கோருகின்றன. இங்கே தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் காரர்களும் சேர்ந்து அதே குரலை எழுப்புகின்றனர். வெளிவிவகார மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தானகளின்னமும் முடிவு எடுக்க வில்லை என்று சென்னையில் வந்தபோது கூறியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வெளிவிவகார அமைச்சகம் இப்போது இன்னமும் முடிவு எடுக்கக் வில்லை என்று கூறியது ஒரு அதிசயமே. உலக அரங்கிலுள்ள நிலைமை என்ன? இந்த தீர்மானம்தான் உலக தமிழர்கள் விரும்பியதா? இந்த தீர்மானத்தில் எல்.எல்.ஆர்.சி.என்று அழைக்கப்படும் " கற்ற படிப்பினைகளும், நல்லிணக்க ஆணைய குழுவும்" என்ற ராஜபக்சேவால் உருவாக்கப்பட்ட குழு சில வாரங்கள் மட்டுமே ஆய்வு செய்தது.போர் நடந்த காலம் பற்றி கணக்கு எடுத்தது.மனித உரிமை மீறல்கள் நடந்ததா? என ஆய்வு மேற்கொண்டது. அதில் பல விசயங்கள் உலக சமூகம் கண்டுபிடித்த போர்குற்றங்களை மறைத்தது. மனித உற்றிமை மீறல்கல்னடன்தது பற்றி சிறப்பு ஆணையர் போட்டு விசாரிக்க கோரியது. இந்த அணுகுமுறையை அமெரிக்க தீர்மானம் ஏற்றுக் கொண்டு அந்த எல்.எல்.ஆர்.சி.கொடுத்த ஆலோசனைகளை அமுலாக்க கோருகிறது.

அதைக்கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதையாவது அமுல்படுத்து என்று போர்குற்றம் செய்த அரசையே கேட்டுக் கொள்வதுபோல அமெரிக்கக் தீர்மானம் இருக்கிறது என்பதே எழும்பியுள்ள விமர்சனம்.
அதுதவிர தீர்மானம் வடக்கு மாவட்டத்திலிருந்து ராணுவம் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.தமிழர் பகுதிகளுட்பட மாகாண ஆட்சிகளுக்கு உரிமைகள் கொடுக்க ப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இத்தகைய தீர்மானத்தை கூடமஹிந்தா அரசு ஏற்கவில்லை. அதனால்தீர்மந்த்திற்கு எதிராக உலக சமூகம் மத்தியில் பரப்புரை செய்கிறது. இப்போது இந்தியா என்ன நிலை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை எதிர்த்து போட்டி வணிகம் நடத்த இந்திய அரசு எண்ணுகிறது. அதற்கு சீனாவின் அரசியல் செல்வாக்கை எதிர்த்து அமேரிக்கா தனது செல்வாக்கை கூட்ட இந்தியாவின் ஆதரவை வேண்டுகிறது. உலக சமூகம் மத்தியில் இருபத்தி நாலு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டால், இந்தியா அனைத்து நாட்டு சமூகம் முன்னாள் தலைகுனிய வேண்டி வரும்.


ஆகவே இந்திய அரசு யோசிக்கிறது. தனது அமெரிக்க அதரவு பொருளாதார சார்பு நிலையில் நின்று யோசிக்கிறது. அமெரிக்காவின் இளைய பங்காளியாக இருப்பதால் அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து நிற்க இந்திய அரசுக்கு "துணிவு" இல்லை. தேவையுமில்லை. கொழும்பு அரசை எதிர்க்க இந்தியா தாயாரையும் இல்லை. அப்படியானால் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் வேளையிலேயே, ராஜபக்சே அரசை பிணைஎடுக்கவும் இந்திய அரசு நினைக்கிறது. அதற்க்கு ஏதாவது திருத்தம் கொண்டுவந்து தீர்மானத்தை மேலும் நீர்த்து போக செய்யலாம். ஆனாலும் இந்திய அரசு முன் எப்போதும் செய்தது போல அமெரிக்கக் தீர்மானத்தை இந்த முறை எதிர்க்காது என்றும் தெரிகிறது. அதற்க்கு தகுந்த ஒரு சூழலை நாட்டிளுருவாக்க மத்திய அரசு எண்ணுகிறது. அதையொட்டியே, தங்கள் கட்சி, மற்றும் தங்கள் கூட்டணி கட்சி ஆகியவற்றை உசுப்பி விட்டு அமேறிக்க தீர்மானத்தை ஆடஹ்ரிக்க கூவ சொல்கிறது. அப்படி இந்திய மத்திய உளவு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு டில்லி சார் அரசியல் நடத்தும் கட்சிகளும் இந்த குரலில் இணைந்து கொள்ளசெய்யப்பட்டுள்ளன. இப்போது புரிகிறதா? சிலரது புதிய ஈழத்தமிழர் மீதான அக்கறை?

Monday, March 12, 2012

புகுஷிமா நினைவு கலபாக்கத்தில் நடந்தது?

நேற்று மார்ச் பதினோராம் நாள். அதாவது ஜப்பானில் சென்ற ஆண்டு இதே நாளில் சுனாமி வந்து அதன் தாக்குதல் பகுஷிமாவில் உள்ள அணு உலையை தாக்கி, அதன் விளைவாக பல்லாயிரம் சாக, பல்லாயிரம் காயம் பட, பல்லாயிரம் பேர் சித்திரவதையாக, பல லட்சம் பேர் இடம் பெயர, தலைநகர் டோக்கியோ வரை கதிர் வீச்சு பரவ, அதன் விளைவாக டோக்கியோவில் கூட குழந்தைகளுக்கான பால் கதிர் வீச்சால் பாதிக்கப்பட எல்லாமே சோகம் என்ற அளவில் பெரும் ஆபத்து ஒன்று உலகிற்கு ஒரு செய்தியை சொல்லி சென்றது. அந்த ஓராண்டு நினைவு நாள் நேற்று நடந்தது. அதை கடைப்பிடிக்க சென்னையில் ஜப்பானிய துணை தூதர் கூட்டம் நடத்தி, அதில் பலரும் உரை நிகழ்த்தினர். அதில் இந்தியாவின் பல உயரிய படஹ்விகளை வகித்த, ஐ.நா. சப்வையில் ஆலோசகராக பணியாற்றிய ராகவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகவன் அவருக்கே உரிய முக்கிய பிரச்ச்னயுயான "நாட்டின் பாதுகாப்பு" குறித்து பேசினார். அணு உலைகள் சுற்று சூழலை பாதிக்கும் என்பது மட்டுமே இங்கு விவாதிக்கப்படுகிறது. ஆனால் அணு உலயுகள் ஒரு நாட்டின் "பாதுகாப்பிற்கும்" ஆபத்து கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்றார்.

அதாவது கல்ப்பாக்கமோ, கூடங்குலமோ தமிழ்நாட்டின் கடற்கரையோரம் இருக்கிறது. அந்த கடலில்தான் நமது இந்திய மீனவர்களை அதாவது தமிழக மீனவர்களை, அன்றாடம் சிங்கள படை வேட்டை ஆடி வருகிறது. ஆதாவது ஆயுதங்களை வைத்து தாக்குதல்களை நடத்தயு வருகிறது. அப்படி எப்போதுமே பாடுக்கப்பிற்கு இடையூறு செய்யும் சிங்கள கடற்படை ஆயுதங்களுடன் நடமாடும் ஒரு கடலின் ஓரத்தில் ஆபத்தான அணு உலைகளை நிறுவி அவை பாடுகாப்பனவை என்றும் மத்திய அரசு கூறுவது கேள்விக்கு உரியது என்பதே அவரது பேச்சு உணர்த்திய உண்மை. , ராகவனது கூற்று மிகவும் தெளிவாக "தீவிரவாதிகளின்" தாக்குதலால் அணு உலைகளுக்கு வருகின்ற ஆபத்தை யாரும் கணக்கில் எடுத்ஹ்டு கொள்ள வில்லையே? என்ற ஆதங்கம் இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அணு கூண்டுகளை உருவாக்குகிறோம் என்று கூறாமல் கூறி மத்திய அரசு இந்த நு உலைகளை உர்வாக்கினாலும், அதுவே இந்த வட்டாரத்தின் பாதுகாப்பு இன்மைக்கு ஒரு காரணமாக மையப்போகிறது என்ற உரத்தால் அவரது பேச்சில் ஒலித்தது. இத்தனை ஆபத்தையா இந்திய அரசு தமிழர்களின் மீது திணிக்கிறது என்று எண்ணி பார்ட்டிஹ்தால் பயமாக இருக்கிறது. ராகவன் சண்டேஹ்கப்ப்படும்படி, இலங்கை ஆட்சியாளர்கள் சீன நாட்டிற்கு கொடுத்துள்ள அம்பன்தொட்டா துறைமுகம், முல்லைத்தீவு மீன்பிடி ஒப்பந்தம், ஆகியவை சீனர்களை இந்த கடல் பகுதியில் சுதந்திரமாக் நடமாட வைத்து விடும்.

அப்படி ஒரு சூழல் வந்தால் அதை தர்காக்க இந்திய அரசு என்ன தஹ்டுப்பு வைத்துள்ளது. கடற்கரியோரம் இருக்கும் கல்பாக்கமும், கூடன்குலமும் எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லாதவை. இந்த ராகவனின் உரை இந்திய அரசை உரைப்பதற்கு முன்பு தமிழக அரசியல் காட்சிகளில், யாரெல்லாம் அணு உலையை கூடங்குளத்தில் உடனடியாக திராக்க வலியிருத்துகிரார்களோ, அவர்களுக்கு உரைக்க வேண்டும். இத்தகைய சூழலில்தான் இடிந்தகரையிலும் பகுஷிமா நினைவு நாள் கடைப்பிடிக்க பட்டது என்ற செய்தி வெளியானது. ஆனால் கல்பாக்கம் அருகே மீனவர்கலதுய் கூட்டம் கொட்டப்பட்டு அதில் அந்த புகுஷயுமா நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது என்ம்பது மிக முக்கிய செய்தி. நேற்று மாலை கொடப்பட்டணம் என்ற மீனவ பகுதியில் கல்பாக்கத்திலிருந்து பத்து கிலோ மீட்டார் தூரத்தில் பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கியத்தர்கள் கூடி, பத்துக்கு மேற்பட்ட சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மீனவர் சங்க தலைவர்களும் அவர்களுடம் சேர்ந்து கொண்டு அந்த புகுஷிமா நினைவை கடைப்பிடித்தார்கள்.

அந்த கூட்டத்திற்கு தலித் தலைவர் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். வே.கருப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதில் கபடி மாறன், ஆவின் பாபு, கோபாலகிருஷ்ணன், ஜெயகுமார், கொவுரி லிங்கம், மதியழகன், பாஸ்கர், வழக்கறிஞர் தக்ஷிணாமூர்த்தி, நாராயணன், டி.எஸ்.எஸ்.மணி, .மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் அப்துல் சமது, இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றினர். குறிப்பாக "பரமன்கேணி" மீனவ கிராமத்திலிருந்து வந்திருந்த மீனவர்கள் தெளிவாக ஒரு அதிர்ச்சி செய்தியை கூறினார்கள். அதாவது மார்கழி மாதம் அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு தாங்கள் கடலுக்கு மீன் பிடிக்க நாற்பது படகுகளில் சென்ற போது, ஒரு பெரும் புகை கிளம்பி கடலுக்கு மத்தியிலிருந்து தங்களை நோக்கி வந்தது என்றனர். இது அதிர்ச்சி செய்தியாக இருந்தது. இந்த செய்தியை முழு மீனவ் கிராமமும் கண்டோம் என்றனர். தங்கது படகுகளின் நகூரங்கள் அறுந்தன என்றனர். தங்களது மணி வலைகள் அறுத்தெறியப்பட்டன என்றனர். இந்த ஆபத்தான செயலுக்கு கடலுக்கு மத்தியில் அதாவது கல்பாக்கத்திலிருந்து நூற்று நாலு கிலோ மீட்டரில், அதாவது சென்னையிலிருந்து நூற்று ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிசேரியிலிருந்து நூறு கிலோ மீட்டார் தூரத்திலும் ஒரு "எரிமலை" கடலுக்குள் இருக்கிறது என்று கூறுகிறார்களே அதுதான் காரணமா? என்று தெரியவில்லை. தானே புயலின் தாக்கத்தில் அந்த எரிமலை மீண்டும் ஒரு ஆட்டத்திற்கு உள்ளானதா? என்று தெரியவில்லை. அல்லது கல்பாக்கம் அணு உலைகளின் முப்பது ஆண்டு கழிவுகளை கடலின் நடு மத்தியில் கொண்டு பொய் இறக்கி விட்டார்களா? என்று தெரியவில்லை.

இப்படி பல்வேறு சந்தேகங்களுடன் அந்த கூட்டம் பரிதவித்தது. அந்த புகுஷிமா நினைவு கூட்டத்தை கல்பாக்கம் அருகே நடத்த கூடாது என்று தஹ்டை போட்டிருந்த காவல்துரைக்கும்கூட அந்த செய்திகள் அதிர்ச்சியை தந்தன. மீனவ மக்களை தஹ்டை போட்டு தடுக்க முடிய வில்லையே என்று அந்த காவல்துறைக்கும், களப்பக்கம் அணு உலை நிர்வாகத்திற்கும் பெரும் வருத்தம் இருந்தாலும் இந்த பரமேன்கேணி ஆபாத்தான செய்தி வெளியே வராமல் தடுக்க முயன்ற அவர்களுக்கு அந்த இடத்திற்கு வந்த கல்பாக்கம், மாமல்லபுரம், கூத்தபாக்கம் உளவு துறை அதிகாரிகல்யுக்கும் பெரும் அற்ற்ஹிர்ச்சி செய்தியாக அமைந்தது. அந்த சந்தேகங்களையும், மக்களுக்கு எழும்பியுள்ள அச்சத்தையும் மத்திய அரசு போக்க வேண்டும் என்று கூட்டத்ஜ்தில் அனிவரும் விரும்பினர். அதற்கான் முயற்ச்சிகளை மேற்கொள்ளகூட்டம் முடிவு செய்தது.

Saturday, March 10, 2012

See Jaya T.V. ??

நாளை மார்ச் 11 ஞாயிறு இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு ஜெயா டி.வி.யில்

அரைமணிநேரம் நேர்முகம் நிகழ்ச்சியில் நானும், ரபி பர்நாடும் அய்.நா.வில் இலங்கை மீதான

போர்குற்ற விசாரணைக்கான அமெரிக்கா தீர்மானம் மீது விவாதிக்கிறோம். நாடு கடந்த

தமிழீழ அரசாங்க புத்தகம் பற்றியும், அதன் பிரதமர் விசவனாதன் உரூதரகுமார் பற்றியும்

நான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன்.முடிந்தால் பார்க்கவும்.--------மணி

Thursday, March 8, 2012

தோழர் குறுஞ்சி அவர்களுக்கு,

தோழர் குறுஞ்சி அவர்களுக்கு,
நீங்கள் அறிவித்துள்ள மாநாடு ஆய்வு கூட்டம் நல்ல முயற்சி. நான் வரமுடியவில்லை என்றாலும் எனது கருத்துக்களை இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவற்றில் பயனுள்ளவற்றை எடுத்துக் கொண்டு, பயனற்றவற்றை நீக்கி விட வேண்டுகிறேன். ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தில் அணு உலை எதிர்ப்பில் பணியாற்றினாலும், நமக்குள் ஒவ்வொருவரும் பல்வேறு அனுபவங்களில் இருந்து வருவதால், வேறுபட்ட கோணங்களும், பார்வைகளும், கருத்துக்களும் இருக்க வாய்ப்புள்ளது.

முதலில் அந்த சென்னையில் நடத்தப்பட்ட மாநாடு ஒரு நல்ல முயற்சி. சரியான நேரத்தில் நடத்தப்பட்டது. அப்படி ஒரு மாநாட்டை தலைநகர் சென்னையில் நடத்த திட்டமிடும்போது, எனக்கும் பல தோழர்களுக்கும் சென்னையில் உள்ளோருக்கு தெரியாமலேயே திட்டமிடல் திருச்சியில் நடந்து விட்டதே என்ற வருத்தம் உண்டு. தெரிந்திருந்தால் திட்டமிடலில் இருந்தே நாங்களும் கலந்து கொண்டு இருக்கலாமே. பரவாயில்லை. மாநாடு வெற்றிகரமாக நடந்தது. அதில் மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டதும் சிறப்பு. அதிலும் ஒவோருவரையும இனைக்க வசதியாக பேச்சாளர்களை கருத்த்ரங்கு , பேரணி, வெளி அரங்கு என பிரித்து நடத்தப்பட்டது வெற்றிகரமாக நடந்தேறியது.. அந்த ஆலோசனைகளை பாராட்ட வேண்டும். பல தரப்பட்டவர்களுகும் நேரம் பிரித்து நடத்தப்பட்ட முறையும் சில தலைவர்கள் விசயத்தில் மீறி சென்றாலும் ந்ல்ல முயற்சி.அதேபோல பேரணி சென்னை ஊடகத்தாருக்கு படங்கள் போட உதவியாக அமைந்தது. அது கூவம் கரையருகே நடத்தப்பட்டதை காவல்துறை அனுமதி என்ற பெயரில் நாம் ஏற்றுக் கொண்டாலும் மாற்று ஆலோசனை பேசியிருக்கலாம். பரவாயில்லை.

அனேகமாக எல்லோருமே அணு உலை எதிர்ப்பில் பக்வேறு க்ருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.அதுவும் மாநிலமெங்கும் இருந்து வந்திருந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. பல மக்கள் பிரிவினர் மத்தியிலும், ஊடகத்தார் மத்தியிலும் அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் கிளப்பி விட்ட பொய் செய்தியான அணு உலையை கட்டி முடித்தபின் ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதும், என்பத்தி எட்டு காலத்திலிருந்தே ஏன் எதிர்க்கவில்லை? எனபதும் முக்கியமாக் சரியான பதிலுடன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு தனி அமர்வு ஏற்பாடு செய்து மாநாடு கொடுத்திருந்தால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்ப என்பத்தி ஆறு காலம் தொட்டு, குறிப்பாக என்பத்தி ஏழாம் ஆண்டு மூதல் உருவான கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு வரலாற்றில் உள்ள பல்வேறு முக்கிய படிக்கட்டுகளை சொல்ல உதவியிருக்கும். பல்வேறு வெற்றிகள் மத்தியில் விடுபட்ட விசயமாக அதை வைத்துக கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு எப்படி நீண்ட வரலாறு கொண்டதோ அதேபோல அந்த இயக்கம் மக்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது என்பதும், மக்கள் இயக்கமாக நடக்கிறது எனபதும் அதை தனிநபர் இயக்கம் போல கட்ட முயலும் ஆளும் கும்பலின் தந்திரத்தை மறுப்பதற்கு மேலும் அழுத்தம் தந்திருக்க வேண்டும். நம்மை திசை திருப்ப அது தனிநபர் சார்ந்தது போல சித்தரிப்பது டில்லியின் தந்திரம். அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தை திசை திருப்ப பிரதமர் முதல் முயர்சிப்பதை நாம் கவனமாக மறுக்க வேண்டும்.அவர்கள் நம்மை நிதி பற்றி பேசி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் அந்த போராட்டம் வரலாறு கொண்டதல்ல என கூற முயற்சிக்கிறார்கள். நாம் வரலாற்றை கூறி அதை மறுக்க ஆவண செய்ய வேண்டும்.

சீமான் பேச்சும், திருமா பேச்சும் சிறப்பு. அதில் திருமா இந்த போராட்டம் இருபத்தைதாண்டு வரலாறு கொண்டது, ஆனால் ஊடகங்கள் தான் அதில் தாமதமாக பதிவு செய்துள்ளன என்று கூறியது ஒரு விதத்தில் சாட்டையடி. அதை மதுரை சிம்மக்கல் பாண்டியன் பேசும்போது, அன்று போராட்டத்திற்கு முகமாக ஆண்டன் கோம்ஸ் இருந்தார் , இன்று உதயகுமார் முகமாக இருந்க்கிறார் என்றும், நாளை எந்த குமாராகவும் இருக்கலாம் எனவும் ,ஆனால் போராட்டம் தொடரும் என்று கூறியது சிறப்பு. அதேசமயம் தனது பங்கு இந்த போராட்டத்தில் எப்படி என்று அவர் பதிவு செய்ய எண்ணி "தான் அடிபட்ட செய்தியை கூறும்போது, தனது போராட்டத்துடன் ஆன்டனும் இணைந்து வந்தார் என்று கூறியது விஷயம் தெரிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்து. உள்ளபடியே ஆண்டன் கோம்ஸ் தலைமையில் ஜி.ரமேஷ், ஐகப் சாமி, சீ.ஏன். தெய்வநாயகம், நான் ஆகியோர் தலைமை குழு பணிகளை செய்து வரும் வேளையில், இந்திய மக்கள் முன்னணி சார்பாக நெல்லை சங்கரபாண்டியன் தலைமையில் நாங்கள் ஏற்பாடு செய்த சைக்கிள் பேரணியில், தூத்துக்குடி முதல் நெல்லை வரை செல்லும்போது, கூடங்குளத்தில் அணு உலை ஆதரவு உழுவாக அன்று செயல்பட்ட காங்கிரஸ், சீ.பி.எம். குழுவினர், சைக்கிள் பேரணியின் கடைசியில் வந்த விளாத்திகுளம் சங்கர்ராஜ், பாண்டியன் ஆகியோரை அடித்து சைக்கிளை பஞ்சர் செயுததை முன்னால் சென்று விட்ட ஆண்டன், நான், சங்கரபாண்டியன் ஆகியோர் அடிபட்டவர்கள் நீண்ட நேரம் கழித்து கூடங்குளம் ஊரை தாண்டி நாங்கள் செல்லும்போது வந்து கூறியதால் மட்டுமே உணரமுடிந்தது. அப்போதும் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மோதல் உருவாகாமல் நாங்கள் தவிர்த்தோம். ஏன் என்றால் அதை ஒரு சாதி மோதலாக உருவாக்க எதிரிகள் திட்டமிடலாம் என்பதால். இத உண்மையை முழுமையாக கூறினால் அது அனுபவமாக ஆகிவிடும். ஒருவர் தன்னை மட்டும் முன்னிறுத்த அந்த உணமைகளை அறை குறையாக கூறினால் அது இயக்கத்திற்கு உதவாது. அன்று ஆண்டன் தலைமையிலான இயக்கம் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் , கேரளாவிலும் நடைபெற்றது.

அந்த பெயருக்கு அத்தனை வரலாறு இருக்கிறது. அதை விடுத்து ஏன் இரண்டாயிரமாவது ஆண்டுகளில் உருவான புதிய பெயரை சிலர் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதே விலக வில்லை. அதனால் அணு உலை ஆதரவாளர்களுக்கு இது இப்போது ஆரம்பித்த போராட்டம் என்று முத்திரை குத்த வசதியாக போயிருக்கலாம். பரவாயில்லை. இன்று களத்தில் அந்த இடத்தில் நிற்பவர்கள் எண்ணுவது போலவே நடக்கட்டும். ஆனால் அங்கேயே கூடங்குளம் ஊரில் உள்ள நாடார் சமூகம் மத்தில்யில் ஊராட்சி தலைவராக இருக்கும் சண்டல்முத்துராசும், போராட்டத்தை ஆறு ஆண்டுகளாக நடத்தும் ரவி என்ற முன்னோடியும், "கூடங்குளம் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்" என்ற பெயரில்தான் போராட்டங்களை நடத்துகிறார்கள் என்பது அண்மைக்கு சொல்லப்படுகிறதா? அந்த ரவி, சாண்டல் ஆகியோரது போராட்டங்களை எனக்கு ஆண்டன் அவ்வப்போது கூற நான் அதை வின் காட்சி ஊடகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருவது எத்தனை பேருக்கு தெரியும்? நிச்சயமாக ந்த வட்டார அதாவது கூடனுலம் வட்டார மக்களுக்கு அவர்கள் தொடர்ந்து வின் டி.வி. பார்ப்பதால் தெரியும். அனுபவங்களை தெரிந்து கொண்டு தொடர்வதே ஒரு இயக்கத்திற்கு ஆரோக்கியமானது. ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இயங்குவது சிறப்பு. அதேசமயம் தங்களை "தொடக்கம் என்று எண்ணாமல் தொடர்ச்சி" என்று புரிந்து கொல்வது ஒரு இயக்கத்திற்கு நல்லது.

திட்டமிடலிலும், அதை அறிவித்தலிலும் புறக்கணிக்கப்பட்டதாக எண்ணி நாங்கள் விலகி நின்றபோது எங்களை அரவணைத்து அந்த மாநாட்டிற்கு அழைத்து வந்த பெருமை கொளத்தூர் மன்யு அவர்களுக்கே சாரும். இன்னமும் போராட்டங்களின் மத்தியில் இருக்கும் நாம் மக்கள் பிரதிநிதிகளை முன் நிருத்ஹ்டி, தொண்டு நிறுவன தோழர்கள் சற்று பின் நின்று உதவினால் போராட்டம் மேலும் வலு பெரும். நன்றி, தோழரே. ஏற்கவேண்டும் எனப்டர்காக அல்ல, பதிவு செய்ய எவ்ண்டும் என்பதற்காக எனது கருத்துகளை சிறிய அளவே பதிவு செய்துள்ளேன். நன்றி. -------தோழன்,டி.எஸ்.எஸ்.மணி.

Friday, March 2, 2012

கலைஞரின் கூற்று பொய்த்து விட்டதா?

நேற்று அதாவது ,மார்ச் முதல் நாள் ஏடுகளில் கலைஞர் கொடுத்த உரை வெளியாக்கி உள்ளது. அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க சிரமம் எடுத்து கொண்டு கல்பாக்கம் அணு உலை ஆபத்து எதையும் தரவில்லையே என்றுகூறியுள்ளார். தினகரன் ஏழாம் பக்கத்தில் அது வெளியாகி உள்ளது. நெரடிஆதரத்திர்காக அவரது பாணியிலேயே பேசினால், அவரது முரசொலி ஏட்டிலேயே அது சிறப்பாக வெளி வந்துள்ளது. அதாவது மார்ச் முதல் நாள் முரசொலி ஏடு. அதன் மூன்றாம் பக்கம். தலைவர் கலைஞர் உரை என்ற தலைப்பில், மூன்றாவது பத்தியில் அது வெளியாகி உள்ளது. "கூடங்குளத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு பக்கபலமா?. அல்லது பேரத்தின் அடிப்படையில் நடைபெறுகின்ற பலமா? என்ற தலைப்பில் அது வெளியாகி உள்ளது. அது கல்பாக்கம் அணு உலை பற்றியது. மூன்றாம் பத்தியில் இரண்டாம் பாரா.

நம்முடைய சென்னைக்கு பக்கத்தில் கடற்கரையோரத்தில் இருகின்ற இதைப்போன்ற அணு மின் நிலையம் கல்பாக்கத்தில் இருக்கிறது இப்படி அதில் கலைஞர் தொடங்குகிறார். அந்த அணு மின் நிலையம் எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது. இவர்கள் சொல்கின்ற ஆபத்துக்கள் என்றைக்காவது ஏற்பட்டது உண்டா? அப்படி ஏதாவது ஆபத்துகள் ஏற்பட்டு அதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருந்தது உண்டா? இப்படியாக கலைஞர் தொடர்கிறார். ஒரு கல்ப்பாக்கதை சென்னையின் அருகிலே அனுமதித்திருக்கின்ற நாம் கடற்கரை ஓரத்தில் அனுமதித்திருக்கின்ற நாம் ஒரு கோடந்குலத்தைஎதிர்ப்பதர்க்கு மறைமுகமாக ஆதரவு காட்டுகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. மாநில அரசு என் இதுவரை மவுனமாக இருக்கிறது? என்று அந்த பாராவில் எழுதுகிறார் கலைஞர்.அதாவது கலைஞருக்கு கல்பாக்கம் ஆபத்தானதுதான் என்று நிரூபித்தால் அதை வைத்து அவரே அணு உலைகள் வேண்டாம் என்ற அவரது பழைய நிலைப்பாட்டிற்கு வந்துவிடுவார் என நாம் எதிர்பார்க்கலாமா?

இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்பாக்கம் அணு உலை அருகே அந்த விபத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன என்பதை நாம் கலைஞர் அவர்களுக்கு தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளோம். ஏற்கனவே டாக்டர் புகழேர்ந்தியும், டாக்டர் ரமேஷ் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகத்தில் கல்பாக்கம் அணு உலை அருகே ஒரு எரிமலை கடலுக்குள் இருக்கிறது என்று எழுதியுள்ளார்கள். அதற்கு அனைத்து நாட்டு புவியியலாளர்கள கூற்றையும் மேற்கோள் காட்டியுள்ளனர். அந்த புத்தகம் அணு உலை எத்ரிப்பு மாநாட்டில் சென்னையில் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை இரண்டு நாள் முன்பு முதல்வரை சந்திக்கும்போது, டாக்டர் ரமேஷ் கொடுத்துள்ளார். அந்த எரிமலை வெடித்த சிறிய வெடிப்பு இப்போது நமக்கு தெரிந்துள்ளது. இரண்டு மாதம் முன்பு கல்பாக்கம் அருகே உள்ள "பரமான்கேணி" என்ற மீனவ கிராமத்தில் உள்ளோர் நாற்பது படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு மத்தியில் ஒரு புகை கிளம்பி பெரிதாக வந்துகொண்டு இருந்தது. இவர்கள் பாய்ச்சிய நங்கூரம் ஒரு படகில் அறுத்து கொண்டு வந்துள்ளது. தண்ணீர் சுட தொடக்கி விட்டது பயந்துபோன மீனவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். அதை நான்கு மீனவ குப்பங்களை சேர்ந்தோர் கரையில் நின்று கண்டுள்ளனர். அந்த சுடு தண்ணீரில் தன்கள் கைகளில் கொப்புளம் வந்ததையும் அந்த மீனவாகள் கூறுகின்றனர்.


மேற்கண்ட செயல்களை மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல் சமது கானொளியில் எடுத்து வந்துள்ளார். கலைஞர் அவர்களே இப்போது கூறுங்கள்? இப்போது நீங்களும் எங்களுடன் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வருகிறீர்களா? அல்லது தங்கள் கூற்று பொய் என்று அம்பலப்பட்டுவிடாதா?