Wednesday, March 10, 2010

பொய் சொல்கிறதா ஆண் ஆதிக்கம்?

பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா, பல சர்ச்சைகளுக்குப் பிறகு, பல மோதல்களுக்குப் பிறகு நேற்று இந்தியாவின் மாநிலங்களவையில் விவாதத்திற்கு விடப்பட்டது. விவாத நிறைவில், வாக்களிப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் தற்போதுள்ள நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து 28 வாக்குகள் பதிவாகின. வாக்கெடுப்பில் மசோதாவை ஆதரிக்கவும் செய்யாமல், எதிர்க்கவும் செய்யாமல் இருந்த எண்ணிக்கைகள் 6 என்றால், அதில் 2 உறுப்பினர்கள் அவைக்கு வராமலும், 4 உறுப்பினர்கள் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று முடிவு செய்யாத நிலையிலும் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கின்ற லட்சணத்தை அது காட்டுகிறது. இதைத்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயம் சரியான இடத்தில், வலுவாக இருக்கிறது என்று நேற்று தலைமை அமைச்சர் மன் மோகன் சிங் கூறியிருக்கிறார் போலும்.
முக்கியமாக மாநிலங்களவையில் இரண்டு நாட்களாக சண்டையும், சச்சரவும் நடக்கிறது. சண்டைக்கும், சச்சரவுக்கும் காரணமாக மசோதாவின் தற்போதைய நிலையை எதிர்க்கின்ற சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு பிரிவினரும், கோருவது பிற பிற்படுத்தப்பட்டோருக்கான மற்றும் சிறுபான்மையினருக்கான உள்ஒதுக் கீட்டை மசோதாவிற்குள் உறுதி செய்ய வேண்டும் என்பதே. அதற்காக அவர்கள் வைக்கின்ற வாதம், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமூகங்களின் பெண் பிர திநிதிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்ட மன்றத்திற்கும் வரவேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்தனர். தற்போதைய நிலையில் மசோதா நிறை வேற்றப்பட்டால், நகர்புறங்களைச்
சேர்ந்த மேட்டுக்குடி ஆதிக்க சாதிகளின் பெண் பிரதிநிதிகள் மட்டுமே இடஒதுக் கீட்டில் வரமுடியும் என்பதாக வாதம் செய்தனர். அதற்காகத்தான் தாங்கள் சண் டையிடுகிறோம் என்பதாகவும், அவர்கள் கூறிவந்தார்கள்.
14 ஆண்டுகளாக இந்தியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இந்த பெண்கள் இடஒதுக்கீடு
மசோதா இழுபறியாக இருந்து வந்தது. அதன் வரலாறு கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது, வேதனையைத் தருகிறது. 1996ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் தேவகவுடா தலைமை அமைச் சராக இருந்த நேரம் அப்போது முதன் முதலாக பெண்களுக்கான இடஒதுக் கீடு
மசோதா மக்களவையில் அறிமுகப்படுத் தப்பட்டது. மறுநாள் வாக்கு விடுவதற்கு அன்றைய பேரவைத்தலைவர் சங்மா உடன்படவில்லை. அதனால் அப்படியே நின்று போனது. ஆனால் மறுநாள் பல மக்களவை உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பியவுடன், பல உறுப்பினர்களது கோரிக்கையை ஏற்று, அது கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு ஆய்வுக்காக கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் டிசம்பர் 6ம் நாள் இதன் மீதான ஆய்வு அறிக்கையை கூட்டு நாடாளு மன்றக் குழு மக்களவைக்கு முன்னால் வைத்தது.
1998ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய ஆட்சி நடக்கும் போது, ஜுன் 26ம் நாள் இந்த
மசோதா மீண்டும் முன்வைக்கப்பட்டது. அப்போதும் கடுமையான எதிர்ப்பு அத னுடைய பொதுத் தன்மைக்கு எதிராக எழுந்தது. அந்த நேரமும் முலயாம் சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும் எதிர்ப் பில் முதன்மைப் பங்கைச் செலுத்தினர். 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியுனுடைய ஆட்சி நடக்கும் போதே, அட்டல் பீகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும் போதே, இந்த பெண்கள் மசோதா மீண்டும் மக்கள வையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பலத்த எதிர்ப்புகள் மக்களவையினுடைய அமர்வுகளையே தள்ளிப்போட வைக்கும் அளவுக்கு எழுந்ததால் மீண்டும் நிறைவேற்ற முடியாமல் போனது. அதே போல அவர்கள் ஆட்சியிலேயே, 2002ம் ஆண்டு ஒருமுறையும், 2003ம் ஆண்டு ஒருமுறையும் இதே மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட முடியாமல் போனது. அதன் பிறகு தற்போது 2010ம் ஆண்டு, நூறாவது ஆண்டு உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, 2 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு, முதலில் மாநிலங்களவையில் இந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறி இருக்கிறது.
உள்ஒதுக்கீடு செய்யப்படாத நிலை யில், இப்போது முன்வைக்கப்பட்ட மசோதா மீதான எதிர்ப்புகளை சமூக நீதியின் பெயரிலும், அரசாங்க ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்ற மிரட்டலின் பெயரிலும் எதிர்க்கும் கட்சிகள் குரல் எழுப்பினர். அப்படி சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தாங்கள் அரசாங்கத்திற்கு கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என மிரட்டியவுடன், ஊடகங்கள் கணக்குப் போட்டன. 321 உறுப்பினர்களின் உள், வெளி ஆதரவுடன் மன்மோகன் அரசாங் கம் இப்போது பீடுநடை போடுகிறது என்றனர். ஆனால் சமாஜ்வாதி கட்சியின் 22 உறுப்பினர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 4 உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டால், மன்மோகன் அரசாங்கத்திற்கு உள், வெளி ஆதரவு 295 என்பதாகக் குறைந்து விடும் என்று ஒரு கணக்கை வெளியிட்டனர். 21 பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள், இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதிலிருந்து, ஆதரவைத் திரும்பிப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகலாம். ஏனென்றால் அவர்களும் உள்ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள். அப்போது அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது 274 உறுப்பினர்கள் என்பதாக குறைந்து விடும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் அது இப்போதுள்ள அரசாங்கத்திற்கு சிக்கலை உருவாக்கலாம். மேற்படி மிரட்டல்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விடப்பட்டன. பெண்கள் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படுமானால், 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில், 181 பெண் உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினருக்கு 122 தொகுதிகள் ஒதுக்கப்படும் போது, மீதி பொதுத் தொகுதியாக ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு 282 தொகுதிகள்தான் என்பதும் இன்னொரு கணக்காகக் காட்டப்படுகிறது.
இப்போது மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் மசோதாவிற்கு, மாநிலங்களவை உறுப்பினர்களான 233ல் 185 உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளார். இந்த நேரத்தில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த மசோ தாவை எதிர்த்தவர்கள் உண்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கான உள்ஒதுக் கீட்டிற்காக குரல் எழுப்பினார்களா? அல்லது பெண்கள் இடஒதுக்கீடு மசோ தா வை அடிப்படையிலேயே ஆணாதிக்க மனோபாவத்துடன் எதிர்த்தார்களா? இது ஒரு முக்கியமான கேள்வி.
மசோதாவை ஆதரித்து பேசியவர் களில், அதிலும் பெண் உறுப்பினர்களில் குறிப்பாக மாநிலங்களவையின் உறுப் பினரான கனிமொழி பேசும் போது, இத்தனை ஆண்டுகளும் பொதுத் தொகுதிகளில், பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கேட்காத சக்திகள், இப்போது மட்டும் பெண்கள் மசோதா வரும் போது, அத்தகைய உள்ஒதுக்கீட்டை கேட்பதற்கான உள் நோக்கம் என்ன என்று புரியும்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 3விழுக்காடு உள்ஒதுக்கீடாக அருந்ததியர் களுக்கு ஒதுக்கியது போல, இந்த மசோதா நிறைவேறிய பிற்பாடு திருத்தத்தை உள்ஒதுக் கீட்டிற்காக கொண்டுவர முடியும் என்றும் அவர் அப்போது கூறினார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய் வதும்,பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மகாகவி பாரதியின் கனவுகள் இன்று நனவாகியுள்ளன என்று மாநிலங்களவையில் கனிமொழி செய்த பதிவு ஒரு மைல்கல்லாக நிற்கிறது.
அதே சமயம் தலித் மக்களுக்கான உள்ஒதுக்கீட்டை பெண்கள் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று தான் கூறுவதாக லாலு சொல்வது உண்மையா என்ற பார்க்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் தலித் மக்களுக்கான உள்ஒதுக்கீடு, எல்லா இடஒதுக்கீட்டிற்குள்ளும் தானாகவே சேர்க்கப்பட வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டின் உள்ளாட்சி மன்ற பெண்களுக்கான இடஒதுக்கீட்டில், தானாகவே தலித் உள்ஒதுக்கீடு சேர்க்கப் பட்டதை நினைவு கூற வேண்டும். அதே போல வடஇந்திய மாநிலங்களில், குறிப்பாக உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள் ஒதுக்கீடு
கிடைக்காவிட்டால், பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள் வெற்றிப் பெற்று வர வாய்ப்பில்லை என்ற செய்தியை அவர்கள் கூறி வருவது உண்மைதானா என்று ஆராய வேண்டும். மண்டல் கமிஷன் அறிக்கை வெளியான பிற்பாடு, வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட சாதிகள் செல்வாக்காக இருக்கும் தொகுதி களில், அந்த சாதிகளைச் சேர்ந்த ஆண் அல்லது பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு அமுலாகும் பட் சத்தில், தானாகவே ஏகப்பெரும்பான்மை பெண் தொகுதிகளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்கள் மட்டுமே அனைத்துக் கட்சிகளாலும் வேட்பாளர்களாக நிறுத்தப் படுவார்கள். அவர்களே வெல்வதற்கு வாய்ப்பு உள்ளவர்கள். உண்மை இப் படி இருக்கும் போது, உள்ஒதுக்கீட்டை காரணம் காட்டி பெண்கள் மசோதவை எதிர்க்கும் எண்ணம் ஆணாதிக்க மனோ பாவம் தானே என்ற கருத்து தானாகவே வருகிறது. அப்படியானால் இங்கே ஆணாதிக்க சக்திகள் பொய் சொல் கின்றனவா என்ற விவாதம் எழுப்பப் படவேண்டும்.