Wednesday, September 29, 2010

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? ராமர் பிறந்தது எங்கே?-மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்குமா?

இந்தியாவில் ஒரு பிரச்சனையில்லா பிரச்சனை உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அதுவே மத நம்பிக்கையாக கற்ப்பிக்கப்பட்டு, பிற மத நம்பிக்கையுடன் மோதல் இருப்பதாக வரலாறு கூறப்பட்டு, அந்த வரலாற்றை மீண்டும் படைக்க வந்ததாக தங்களை தாங்களே சிலர் வர்ணித்துக்கொண்டு, இன்று நாடே அந்த மத மோதல் சகதியில் விழா இருப்பதாக அரசால் கூறப்படுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதற்க்கான வழக்கில் தீர்ப்பு கூறப்போவதனால் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது என அரசு கூறுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறப்போகும் வழக்கு, அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியது. அதாவது அந்த சர்ச்சைக்குரிய அயோத்யா நிலம் ராமர் பிறந்த இடமா? அல்லது பாபர் மசூதி கட்டப்பட்ட இடமா? என்பதுதான் அந்த வழக்கின் சர்ச்சை. இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மூன்று கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஒன்று, ராமர் பிறந்த இடம் என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது? இரண்டாவது, ராமர் கோவில் ஒன்று இருந்ததை இடித்துவிட்டுத்தான் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? கோவில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்டதாகவோ, ஒரு பிரபல கருத்து அன்றைய காலத்தில் இருந்ததா? அல்லது சமீபத்தில் உருவாக்கப்பட்டதா? இப்படிப்பட்ட மூன்று கேள்விகளை ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
மகாராஜா விக்ரமாதித்தன் ராமர் கோவிலை கட்டினான் என்று ஒரு கருத்து உள்ளது. விக்ரமாதித்தன் என்ற பெயர் கொண்ட அரசன் ஒருவன் அல்ல ; பலர் இருந்திருக்கிறார்கள். எந்த விகிரமாதித்த அரசன் என்று சரியாக கூறுவதற்கு இந்துத்துவாவாதிகளிடம் சான்று இல்லை. வால்மீகி தனது ராமாயணத்தில், அயோத்தி மன்னர் ராமர் என்று குறிப்பிட்டுள்ளதும், எந்த அயோத்தி என்பதற்கான ஆதாரத்தை இந்துத்துவா சக்திகளால் கொடுக்க முடியவில்லை. கிருத்து பிறப்பதற்கு முன்பு 3102 ஆம் ஆண்டில் காலி யுகத்திற்கு முன்பு என்று அயோத்தி நகரை குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தாரால் ஆதாரமாக கொடுக்கப்பட முடியவில்லை. வால்மீகி ராமாயணம் ஒரு கற்பனைக்கதை என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அயோத்தி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு வளர்ச்சி அடைந்த நகரம் என்பதாக காவியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வளர்ந்த நகரை நம்மால் இந்தியாவில் காண முடியவில்லை. மிகவும் பின்னுள்ள ஒரு காலத்தை சேர்ந்ததாக அந்த அயோத்தி நகர் பற்றிய கதை எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. சகேடா நகர் என்பதைத்தான் அவர்கள் அயோத்தி என்று கூறுகிறார்கள் என்பதாகவும் தெரிகிறது.
ஸ்கந்த குப்தா என்ற விகிரமாதித்தனைத்தான் இவர்கள் அயோத்தி நகரை உருவாகியதாக குறிப்பிடுவதாக தெரிகிறது. கிருத்து பிறந்த பின்பு ஐந்தாவது நூற்றாண்டின் கடைசியில் சூரியவம்ச அரசு அயோத்தியில் இருந்தது. அந்த அயோத்தியில் புத்திசம், சமண மதம், இந்து மதம் ஆகியவை இருந்துள்ளது. ராமர் வழிப்பாடு என்பது மிக அண்மைகாலத்தில் தான் வந்துள்ளது. ஒன்றாவது மற்றும் நான்காவது சமண தீர்த்தகாரன் மரபு என்பது அங்கே இருந்திருக்கிறது. பர்ஷ்வனாதா, மகாவீரா ஆகியோரது வருகை அயோத்தி நகரில் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது நூற்றாண்டு வரை அந்த இடத்தில் ராமர் வழிபாடு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் யாரிடத்திலும் இல்லை. பதினோராவது மற்றும் பன்னிரெண்டாவது நூற்றாண்டுவரை ராமர் என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. இதுதான் வரலாற்று உணமையாக இருக்கிறது.
1528 இல் பாபர் மசூதி இந்தியாவில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தி நகரம் எந்த நதிக்கரையில் இருந்தது என்ற ஆதாரம் வேறு புதிய குழப்பத்தை ஏற்ப்படுத்துவதாக இருக்கிறது. கங்கை நதிக்கரையில்தான் இந்தியாவில் உள்ள அயோத்தி இருக்கிறது... . ஆனால் சகேடா என்ற நகர் சரயு நதிக்கரையில் இருக்கிறது. அன்றைய அயோத்தியும் சரயு நதிக்கரையில்தான் இருந்தது.. அந்த சரயு நதி இன்றைய ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. இந்தியாவின் அயோத்திக்கு புத்தர் இரண்டு முறை வருகை புரிந்துள்ளார். இவ்வாறு வரலாறு கூறும் எந்த ஆதாரமும் இவர்கள் இன்று கூறுகின்ற அயோத்தியை ராமர் பிறந்த இடம் என்று சொல்வதற்கான ஆதாரமாக இல்லை. அப்படியானால் இவர்கள் கூறும் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற பெரிய நகரம், சராயு நதிக்கரையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அயோத்தியாக இருக்கலாம். அதை கேள்விப்பட்டதனால், ஆத்திரம், மதரீதியான பகைமை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்திய அயோத்தியை சர்ச்சைக்குரிய இடமாக மதவாதிகள் ஆக்கியிருக்கலாம் அதுவே பின்னாளில் மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு சாதகமாக போய் இருக்கலாம். அதனாலேயே இந்தியாவில் உள்ள அயோத்தி இப்போது பெறும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவெங்கும் பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பெயர் பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் ராதாகிரிஷ்ணனின் மகனான சர்வபள்ளி கோபால், இந்த பாபர் மசூதி சர்ச்சை பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர், " மோதலை பற்றிய உடல்கூறு". அதில் பணிக்கர், ஸ்ரீவத்சவா, நூரானி ஆகியோர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகள் நேரடியாக மசூதி--கோவில் விவகாரத்தை பற்றி எழுதப்பட்டுள்ளன.அதில் பணிக்கர் கூறும்போது, வால்மீகியின் அயோத்தியா இன்றைய அயோத்தியா அல்ல என்று எழுதுகிறார். கிருத்துவின் முதல் நூற்றாண்டிற்கு பிறகுதான் ராமர் வழிபாடு தொடங்கப்பட்டது என்றால், ராமர் வழிபாட்டின் மையமாக அயோத்தியா உருவானது பதினெட்டாம் நூற்றாண்டில்தான் என்கிறார் அவர். அதேபோல பாபர் ஆட்சி மத சகிப்புதனமையற்று நடந்துகொண்டதாகவோ, கோவில் இடிப்பில் ஈடுபாட்டதாகவோ எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை என்பதை அவர் உறுதி செய்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முந்திய காலத்திய இந்து மத நூல்கள் எதிலுமே, கோவில்கள் எதுவும் இடிக்கப்பட்டதாக எழுதப்படவில்லை. இவ்வாறு வரலாற்று உண்மைகள் வித்தியாசமாக இருக்கும்போது, மத உணர்வுகளை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று என்னுபவர்கல்தான் இந்த சர்ச்சையை பெரும் சிக்கலாக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே அலஹாபாத் உயர்நீதிமன்றம், செப்டம்பர் முப்பதாம் நாள் எந்த தீர்ப்பை கொடுத்தாலும், இந்திய மக்கள் தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை உடைக்க எந்த மத உணர்வுகளையும் அனுமதிக்க கூடாது என்று நாமும் கேட்டுக்கொள்வோம்.