Monday, March 29, 2010

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும், முடிக்கப்படாத முக்கியப் பிரச்சனைகளும்

வருகிற ஏப்ரல் 8ம் நாள் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப் படயிருக்கிறது. அதிகமானசொல் லாடல்கள் ஆக்கிரமித்துள்ள தேர்தலாகத் தான் இந்த முறையும் அது இருக்கிறது. கடந்த தேர்தல்கள் எல்லாமே இதுபோன்ற தன்மையில் தான் நடைபெற்றன. இந்தியாவில் ஒவ் வொரு பொதுத் தேர்தலிலும் எப்படி வாக்குகள் பெறுவதற்காக வாக்குறுதிகள் கொடுக் கப்படுமோ, அதுபோல சற்றும் குறையாத நிலையில் தான் இலங்கைத் தேர்தல்களும் நடக்கின்றன. ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என் பது 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை. அதை தீர்ப்பதற்கான அணுகு முறைகளை ஒவ் வொரு முறையும், ஒவ்வொரு வடி வில் ஆளும் வர்க்கக் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் வாக்குறுதிக் கொடுப்பார்கள். அது வும் பழகிப்போன செய்தியாகப் போய் விட்டது.
சந்திரிகா குமாரதுங்கா போர் எதிர்ப்பு பேசி ஆட்சிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு தமிழர்கள் மீது போரை ஏவிவிட்டு, இனவாத தன்மையைக் காட் டினார். அதேபோல மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வரும்போது, சிங்கள தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு தேர்தல் பரப்புரைச் செய்தார். ஆட்சிக்கு வந்த வுடன் போரை நடத்தி, இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்கள் வாழ் நிலையையும் ஒழித்து விட்டார். பொன் சேகா அதிபர் தேர்தலில் மகிந்தாவுக்கு எதிராக போட்டியிட்டக் காரணத்தினால், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப்பட இருக்கிறார். அதன் மூலம் போர் வெற்றியை மகிந்தா கையெடுக்கலாம் என்றாலும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கூடுதலாக சிங்கள பவுத்த பிக்கு மாணவர்களை, காவல் துறையில் வைத்து மகிந்தா அரசாங்கம் அடித்து வைக்கிறது. அப்படி இருந்த போதும், சிங்கள மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெறுப்பு, ஆட்சியாளர் மீது உருவானதா என்று தெரியவில்லை. பொன்சேகாவின் கைதும், புத்த பிக்கு மாணவர்களை அடித்து துவைப்பதும் மகிந்தாவின் பெருமைகளை கேள்விக் கேட்கின்றன. அதாவது தமிழர்களை எதிர்த்து போரிட்டு வெல்வது தான் தனது லட்சியம் என்ற சிங்கள இனவாத தன்மையை இனி மேலும் ராஜபக்சே கூறி ஏமாற்ற முடியாது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி பெற்று, பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டோம் என்று வீராப்புக் கூறிக் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமே தன்னுடைய கொள்கை என்று இனியும் மகிந்தா பீற்றிக் கொள்ள முடியுமா? சிங்களர்கள் மீதும் தாக்குதல்களை குறிவைத்துச் செய்யக் கூடிய மகிந்தாவின் ஆட்சி, ஒரு குறிப்பிட்ட கும்பல் தனது அதிகார வெறிக்காக நடத்தப்படும் ஆட்சி தான் என்பது அம்பலமாகி நிற்கிறது.
மகிந்தாவின் இத்தகைய செயல்பாடுகள் அனைத்து நாட்டு சமூகத்தை, அவர் பக்கம் ஈர்க்கவில்லை. மேற்கத்திய நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும், மீண்டும் கூறி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இந்திய அரசும், சீன அரசும் கூட இப்போது எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லை என்று செய்தி வெளிவருகிறது. நேற்று வரை மகிந்தா ஆட்சிக்கு ஆதரவாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் பேசி வந்த இந்திய அரசும், சீன அரசும் இப்போது மௌனம் சாதிப்பதே ஆச்சரி யமான செய்தி தான்.
மனிதஉரிமைகள், கருத்துரிமை, சுதந்திர மான ஊடக உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்காத ஒரு அரசாங்கம், தனது அரசியல் தந்திரமாக அவசரகால அரசியலை பயன்படுத்தி வருகிறது என்பதாக இந்திய ராணுவத்தில் உளவு தலைமையாக இருந்த கர்னல் ஹரிஹரன் கூறியுள்ளார். அடிப்படையில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு எந்தவொரு மனோபலமும் இல்லாத ஒரு சிங்கள அரசாங்கம், தங் களுக்குள்ளேயே பிரச்சனைகளை உரு வாக்கிக் கொள்வதும், அதிலேயே மூழ்கி விடுவதும் தான் இன்றைய நிலை.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 196 பேர் நேரடி உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இதில் மகிந்தா தலைமையிலான ஐக்கிய மக்கள் விடு தலை கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கான அனைத்து தந்திரங்களையும் மகிந்தா செய்துள்ளார் என்கிறார்கள். விகிதாச்சார முறைப்படி தேசிய பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, போட்டியிடும் கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகள் விழுக்காடுகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் 29 உறுப்பினர்களையும் சேர்த்து, முழுமை யான எண்ணிக்கையை நாடாளு மன்றத்திற்கு உருவாக்குவார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சவால் களைச் சந்திக்கிறது. இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரது தலைமையை எதிர்த்து, வெளியே
சென்று புதிய அமைப்புகளை உருவாக் கிக் கொண்டவர்கள் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் குறிப்பிட்டு சொல் லப்பட வேண்டியவர்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், கஜேந்திரன் போன்றோர் செய்கின்ற பரப்புரைகள், மகிந்தாவை எதிர்த்தோ, டக்ளஸ் தேவானந்தத்தை எதிர்த்தோ இருப்பதை விட சம்பந் தத்தையும், சுரேஷையும் எதிர்த்து அதிக மாக இருக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமான ஈர்ப்பை வைத்திருந்தார்கள். அதனால் தான் அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்ட தற்கிணங்க, தமிழ் மக்கள் பொன்சேகா விற்கு அதிகமான வாக்குகளை அளித் தார்கள் என்பதை மகிந்தா அரசாங்கம் கவனித்துக் கொண்டேயிருந்தது. அதை யொட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்ற செல்வாக்கை, எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது மகிந்தா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது. இயல்பாகவே வெளியேறிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வு பூர்வமான விமர்சனங்களை செய்து வந்தாலும், அவர்களது வாக்குப் பிரிப்பு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வீனப்படுத்தப்படும். பலவீனப்படுத் தப்படும் இடங்களில், டக்ளஸ் கட்சியும், பிள்ளையான் கட்சியும் அதிக வாக்குகளை பெற முடியும். இவ்வாறு தான் ராஜபக்சே திட்டமிடுகிறார். இத்தகைய திட்டத்தை தமிழ் மக்கள் எந்த அளவுக்கு புரிந்துக் கொண்டு செயல்படுத்த முடியும் என்ற கேள்வியும் விவாதமாக இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட் டது என்பது ஒரு விமர்சனம். ஓஸ்லா மாநாட்டில் புலிகள் முன்வைத்த கருத்துக் கோப்பை ஏற்கவில்லை என்றும், இன் னொரு விமர்சனம். ஆனால் சம்பந்தரோ, சுரேஷோ கூறும்போது, தாங்கள்
சுயநிர்ணய உரிமைக்கான எந்தவொரு லட்சியத்தையும் விட்டு விடவில்லை என்கிறார்கள். எப்படியோ தமிழர் அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட்டால், சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு இன்றைய தேர்தலை சந்திப்பதற்கு அதுவே எளிதாக ஆகிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்ற கொள்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களையும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மட்ட கிளப் மாகாணத்தின் ஐ.தே.கா. வேட்பாளர் பஷீர் சுகதாவுத் கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், சிறுபான்மையினர் உரிமையை பறித்து அரசியல் சட்டம் உருவாகி விடுமோ என அஞ்சுவதாகவும் அவர் கூறி யுள்ளார். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அவர்களுக்கு அதிக நிலங்கள் சொந்தமாக இல்லை என்பதால் அரசு சிங்கள காலணியமயமாக ஆக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. போருக்குப் பிறகு முஸ் லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் கூடி வருகிறது என்றும் கூறுகிறார்கள். இருவரும் இருபெரும் சிறுபான்மை சமூகங்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் அமைப்புகளுடன் இந்தத் தேர்தலில் தோழமையை வைத்துக் கொண்டுள்ளது.
மேற்கண்ட செய்திகள் சிங்கள ஆட்சியாளர்களின், பிளவுப்படுத்தி வெல்லும் சதியை முறியடிக்குமா என்ற கேள்வியுடன், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இன்றைய இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கின்ற குறைவான இடத்தில், தமி ழர்கள் எப்படி விவேகமாக காய் நகர்த்தப் போகிறார்கள் என்ற கவலை நமக்கு எழுகிறது.