Thursday, June 17, 2010

எங்கிருந்தோ வந்த குரல்...

மௌனித்தான் தன் துவக்கை
தலைமை கட்டளையிட்டதால்.
தற்காப்பு போருக்கு செல்வதால்
தலைமை சிந்தித்த தந்திரம் அது.
இழப்பை இனியும் தாங்கமுடியாதென
தலைமை எடுத்த முடிவு அது.
அப்பாவி தமிழர் இழப்பை இனியும்.......

கிழக்கை இழந்தோம், வடக்கில்கூட
பின்வாங்கும்போது மன்னார் கண்ட
இழப்புகளை அப்பாவி தமிழர்
அவதிகளை தலைமை எண்ணி
தளம் அமைத்ததால், ....................
ஓடும் தமிழரை துரத்திய
வெறியர் படைமுன்
வயோதிகரை, குழந்தைகளை
அப்பாவி பெண்களை
பலி கொடுக்க விடுதலைப்படை
வித்திடாது. தலைவர் எடுத்த
தகுதியான முடிவு
தற்காப்பு போர்.

பூநகரியை கடந்தான் எதிரி
தலைவர் சிந்தித்தார்
ஏழு அல்ல இருபது நாட்டு
அரசுகள் இங்கே அணிசேர காண்கிறேன்
தமிழன் வீரமுள்ளவன்,
விவேகமும் இணைந்து கொண்டவன்.
வீரம் புலிப்படையில் என்றும் உண்டு.
விவேகம் இப்போது வெளியே வரவேண்டும்.
தலைவன் எண்ணினான். தற்காப்பு போர் என்று.

தாக்கும் போருக்கும், தற்காப்புக்கும்
வேறுபாடு தெரிந்தவனா சிங்களவன்?
சிங்கள இளம் சிறார் படை அது.
பதினைந்து வயதில் பால்குடி மறவா
பாலகன்கள் தென்னிலங்கை விட்டு
நிர்ப்பந்தமாக யாழ் களம் இறங்கினர்.
கொட்டியா என்றால் ஓடும் வயது.
பொய்கூறி அழைக்கப்பட்ட படைவரிசை.
தலைவர் கண்ட களங்கள் சரித்திரம் சொல்லும்.
கொழும்பு தாக்குதல், வான்வெளியை பிய்த்தது
அனுராதபுரா கரும்புலி தாக்கு, எதிரியை
மரண பயத்தில் தள்ளியது.
எதிரியின் வெறி தமிழ்ப்போராளிகளை
நிர்வாணமாக்கி வக்கிரம் காட்டியது.
எங்கள் போராளிகளின் உடல்கள்கூட
உங்களை தூங்கவிடாது.
ஆனாலும் நாங்கள் தலைவர் கூறினால்,
துவக்கையும் மௌனிப்போம்.

தலைவர் சிந்தித்தார். இனி அரசியல் போர்தான்.
அதுவும் அனைத்துலக அளவில்.
புலம் பெயர்ந்தோருக்கும் ஒரு
வாய்ப்பு அதில். இனி அவர்கள் எடுத்துச்செல்வார்கள்.
ஆயுதம் தூக்கியபோது, அதிவேக வெறியுடன்
ஆள் திரட்டல், ஆயுதம் திரட்டல், உளவு திரட்டல்,
செயற்கைகோள் வேவு என எம் தமிழரை
அடையாளம் காட்டிய அன்னியர் இனி என்ன
செய்வர்?
அரசியல் போரில் அகிலம் பங்கு கொள்ளும்.
தமிழர் அகிலம் பங்குகொள்ளும்.

No comments:

Post a Comment