Tuesday, July 20, 2010

கருணாநிதி வருகிறார்.

கருணாநிதி வருகிறார்.
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழர் எம்.பி.மாரை
சந்தித்த பின்னாலே ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழரை படுகொலை
செய்த போரிலே குற்றவாளி
பெயர்பட்டியலில் இருந்தவர்
வருகிறார். இப்போ ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஐ.நா.முயற்சித்த ஆய்வில்
போர் குற்றவாளிகளை
விசாரணை செய்யவந்தால்
தனக்கும் வருமோ என
அஞ்சிய கருணாநிதி
வருகிறார். இப்போ
ஆதரவு குரல் கொடுக்க
வருகிறார். கொழும்பு
தொடங்கியுள்ள விசாரணையே
போதுமென்று ஐ.நா.
சொன்னதனால்,
ஆனந்தம் அடைந்தார்
அதே குடிமகன்.
போர்க்குற்றவாளிகளை
கணக்குபார்த்தால் தன்
பெயர் வந்துவிடுமோ
உண்மை உலகுக்கு
தெரிந்துவிடுமோ
என்ற அச்சம் கொண்டவர்
அப்படித்தான் என்ன முடியும்.
அதனால்தான் வருகிறார்.
இன்றைக்கு வருகிறார்.
மத்திய அரசு கை
காட்டியபின் வருகிறார்.
ஈழத்தமிழருக்கு குரல்
கொடுக்க வருகிறார்.

No comments:

Post a Comment