Monday, March 21, 2011

அவசர சிகிச்சையை அதற்குத்தானே பயன்படுத்தறாங்க?

ஐந்து கோடி ரூபாயை ஒவ்வொரு வேட்பாளருக்கும் கொடுக்கணும், அவங்க அதை சிந்தாமா, சிதறாம, வாக்காளர்களுக்கு கொடுக்கணும்னு தலைவர் திட்டமிட்டார். அதற்குள் தேர்தல் ஆணையம் வாகனங்களில் கொண்டு செல்லும் பணத்தை வாரிவிடுவோமென மறிக்கத்தொடங்கினர். இப்போது தொண்டர்கள் கண்டுபிடித்துள்ள புது வழி செயல்படுகிறது.108 வாகனம் அவசர சிக்கைச்சைகளுக்கு மக்களுக்கு உதவத்தானே உள்ளது? அதனால் அதில் வட்ட செயலாலட் போய் படுத்துக்கொண்டால், வட்ட செயலாளர் தனியே செல்ல முடியுமா? அதர்காக அவருடன் ஒரு சிறு கோஷ்டி செல்லும்.அந்த கோஷ்டி பல, பத்தாயிரம் லட்சத்தை அலட்சியமாக நோய் வாய்ப்பட்ட வட்டத்துடன் eடுத்து சென்று விடுகின்றனர்.பணம் வேண்டும் நிலையில் மக்களும், பணம் கொடுத்து வாக்கு பெரும் நிலையில் மக்களும் இருப்பது அவசர சிகைச்சைக்குத்தானே?

இப்படித்தான் கிராமங்களில் வாக்குக்கு பணம் பட்டுவாடா ஏக போக மாக நடக்கிறது.அதுதவிர கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்கள் சிலரை வரவழைத்து அவர்களிடம் பணம் கொடுத்து பேருந்தில்; அவர்களை ஏற்றி அனுப்பிவுடுகின்றனர். அவர்கள் தங்கள், தங்கள் கிராமங்களில் போய் விநியோகம் செய்துவிடுகிறார்கள்.இது தேர்தல் அனையத்திற்கு தெரிந்தால் ரிந் என்ன?, தெரியாவிட்டால் என்ன?

1 comment:

Anonymous said...

எப்படி எல்லாம் நம்மாளுங்க யோசிக்கிறாங்க.. கேடிப் பசங்க ... !!!

Post a Comment