Sunday, March 27, 2011

திமுக.வை தோற்கடித்த காங்கிரஸ்.

திருச்சி சிவா, திமுகவில் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல: கட்சிக்கு தலைமைக்கு விசுவாசமான ஊழியர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதே குறிப்பறிந்து கச்சு தல்லைமைக்கு விசுவாசமாக பணியாற்றுவார் என்பதற்காகத்தான். அதுவும் கட்சியில் இருக்ககூடிய தலைமையின் குடும்ப உறுப்பினரான மத்திய அமைச்சரே கட்சித்தலைமைக்கு எதிராக காய் நகர்த்தும் நேரத்தில் கட்சி விசுவாசி அங்கே நாடாளுமன்றத்தில் இயங்க வேண்டும் என்றுதான் தலைமை சிவாவை அனுப்பி வைத்தது.அத்தகு இப்போது காங்கிரஸ் தலைமை எதிராக காய் நகர்த்துகிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை திமுக கட்சித்தலைமையின் கழுத்துக்கு கத்தியாக இருக்கும் இந்நேரத்தில், அதை பிஏசி என்றழைக்கப்படும் " பொது கணக்கு குழு"விற்கு உறுப்பினர் தேர்வு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் நடத்தப்பட்டது. அதில் திமுக. சார்பாக சிவா நிறுத்தப்பட்டார். முறைப்படி ஆளும்கூட்டணிக்குள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும். ஆனால் சிவாவிற்கு காங்கிரஸ் வாக்களிக்க தனது உறுப்பினர்களுக்கு சொல்லவில்லை. மாறாக காங்கிரஸ் முயற்ச்சியில் பழைய பிரதமர் குஜ்ரால் மகன் சுயேட்சையாக நிறுத்தப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்களால் வாகளிக்கப்பட்டு வெற்றபெற ச்செய்தார்கள்.சிவா தோல்வி அடைந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி "பொது கணக்கு குழு" தீவிரமான விசாரணையை நாடாளுமன்றத்திர்க்குல்லேயே தொடங்கியுள்ள நேரத்தில் முரளி மனோகர் ஜோஷி என்ற பாஜக முன்னாள் அமைச்சர் அதை எடுத்துள்ள நிலையில் இந்த உறப்பினர் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.அந்த ஊழல் வழக்கில் திமுகவை பழி வாங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்படுவதாக தெரிகிறது. அத்தகைய திட்டத்தில் ஒரு அங்கம்தான் திருச்சி சிவாவை தோற்கடித்த காங்கிரசின் சாதியம். ஆனால் அதற்க்கான திட்டத்தையும் காங்கிரசுக்கு சொல்லிக்கொடுத்தது தயாநிதிதான் என்கிறார்களே

1 comment:

Unknown said...

people have to think about this

Post a Comment