Sunday, April 17, 2011

உளவு துறை செய்தியால் அடிப்போனாரா கலைஞர்?

வாக்கு பதிவு முடிந்துவிட்டது. ஒரு மாதம் கஹித்துதான் வாக்கு எண்ணிக்கை நடக்க போகிறது. அதற்குள் அவசரப்பட்ட முதல்வர் உளவு துறை மூலம் சரியான முறையில் விழுந்த வாக்குகளை எண்ண பணித்தாராம். தொகுதி, தொகுதியாக வெற்றிபெற இருப்பவர்களை பட்டியலிட சொன்னாராம். அவர்களும் கணக்கெடுத்து கலைஞர் மனம் கோணாத அளவில் அவரிடம் கணக்கு சொல்லவேண்டுமே என்பதற்காக ," அய்யா, தங்கள் கூட்டணிக்கு தொண்ணூறு தொகுதி வரை வெற்றி பெற வாய்ப்பி உள்ளது அய்யா" என்றார்களாம். அதற்கே ஆடிப்போய் விட்டாராம் திமுக தலைவர். பெரிய கட்சிகளை தவிர தனி சுயேச்சை சின்னங்களில் நின்ற வேட்பாளர்களில் வெற்றி பெறுபவர்களிடம் பேசலாமில்லையா என்று தலைவர் வினவினாராம்.இதை தங்களுக்குள் அசை போடும் காவல் அதிகாரிகள் தாங்கள் முதலில் அவரிடம் சொன்ன எண்ணிக்கையே மிகைப்படுத்தல் என்ற உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.

அதேபோல சிதம்பரம் அய்யா தனது உள்துறை மூலம் தமிழ்நாட்டு நிலைமையை கேட்டாராம். அவருக்கும் அவர்கள் இதேபோல, அதிமுக கூட்டணி 130 முதல் 140 வரை வரும் என்று கூறினார்களாம். அதுவும் குறைத்து கூறிய கணக்குதான் என சிதம்பரம் அய்யாவுக்கு தெரியுமா என்று நமக்கு தெரியாது. இந்த மாநில, மத்திய உளவு துறைகள் சொன்ன கணக்கிலேயே இப்படி திணறும் அய்யாமார்கள் முழு தீர்ப்பு வந்தவுடன் எண்ண செய்ய போகிறார்கள்?

2 comments:

ராஜேஷ், திருச்சி said...

neena ulavu thurai heada? illai idha kanakku koduthaga unga kitta kalaijar ad chidambaram phone la sonnangala?

ராஜேஷ், திருச்சி said...

neenga ulavu thurai heada? illai indha kanakku koduthaganu unga kitta kalaijar and chidambaram phone la sonnangala?

Post a Comment