Tuesday, April 19, 2011

பூந்தமல்லி சிறையில் பட்டினி போர்.

போர் குற்றங்கள் செய்த ராஜபக்சே அரசை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக ஐ.நா. நிபுணர் குழு ஒரு அறிககையை வைத்தவுடன் அதை எதிர்த்து மகிந்தா அரசு கொந்தளித்தது. ஐ.நா. காட்டியுள்ள போர் குற்றங்களுக்காக ராஜபக்சே அரசை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அந்நியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் அதே கோரிக்கைக்காக பட்டினி போர் தொடங்கி உள்ளனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம் பெயரில் உள்ள சிறைக்கூடத்தில், இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பட்டினி போரை, அமலன் அப்பாதுரை[33 ], கங்காதரன் நடராஜா [ 42 ], ஜெயமோகன் விரைஜா [ 30 ], சந்திரகுமார் மாரி [38 ] ஆகியோர் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தந்து,ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசையும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment