Wednesday, July 13, 2011

தெற்குசூடான் விடுதலையும்,தமிழீழ விடுதலையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம், வருகிற 16 ஆம் நாள் சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு சென்னையில் " தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளனர்." தெற்கு சூடான் விடுதலையும், தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பில், " கொள்கை வகுக்கும் அவையின்"உறுப்பினர்கள கலந்துகொள்ளும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து ள்ளனர் அதில் சென்னை பல்கலைக் கழகப்பேராசிரியர் மணிவண்ணன், புதிய தமிழக சட்டமன்றக் கட்சித்தலைவர் டாக்டர் கிரிஷ்ணசாமி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் சட்டமன்ற கட்சித் தலைவர் கதிரவன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சட்டமன்ற கட்சித்துணை தலைவர் குணசேகரன், மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாட்சா, கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற கட்சி தலைவர் தனியரசு, ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வருக.

No comments:

Post a Comment