Monday, August 8, 2011

ஜெயலலிதாவை தாக்கிய கோதபாயேவை என்ன செய்ய?

இலங்கை அரசத்தலைவரின் தம்பியும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும், பசில் ராஜபக்சேவின் சகோவும், ஜமால் ராஜபக்சே என்ற பேரவைதளைவரின் தம்பியும், நமால் ராஜபக்சேவின் சித்தச்ப்பாவுமான, தமிழின இரத்தம் குடித்த காட்டுமிராண்டி, அமெரிக்க குடியுரிமை பெற்ற கோதபாயே ராஜபக்சே, இந்திய காட்சி ஊடகமான "ஹெட்லைன்ஸ் டுடே" ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில்,[ இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பு } தமிழக முதல்வர் பற்றி " அதிகப்பிரசிங்கித்தனமாக" தாக்கி பேசியுள்ளான். "இலவச ஆலோசனைகளை" ஜெயலலிதாவிற்கு கொடுத்துள்ளான்.
'
தமிழக சட்டப்பேரவை "சென்ற சட்டப்பேரவை" போல இல்லாமல், முதல்வர் முன்முயற்சியிலேயே "ஒரு தனி தீர்மானம்" மூலம் அந்த இரத்தவெறி இலங்கை சிங்கள கும்பலை "போற்குற்றவாளிகல" என்றும், அவர்கள் மீதான "பொருளாதாரத் தடை" விதிக்கவும், "ஏகமனதான தீர்மானத்தை" நிறைவேற்றியது, இலங்கை அரசை அச்சப்படுத்தியது. அந்த தீர்மானத்தின் அமுலாக்கலில் மத்திய அரசை "நிர்ப்பந்தம்" செய்ய எடுக்கப்படும் முயற்சிகள், அந்த இரத்தவெறி இன அழிப்புவாதிகளை " அசிங்கமாக " பேசவைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மத்தியில் செல்வி.ஜெயலலிதாவிற்கு ஆதரவு கூடுவதும், அவரை அவர்கள் எதிர்பார்த்து நிற்பதும் "தமிழின விரோதிகளுக்கு" ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

அதவிளைவே, இந்த "கோத்தப்பாய் பேட்டி". அதில் "ஜெயா தனது வேலையை பார்க்கட்டும்" என்கிறான் அந்த கொடுங்கோலன். ஜெயாவிற்கு "தமிழர்கள் மீது அக்கறை " இருப்பதாக சொல்கிறாரே, முதலில் தனது "தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை, இலங்கை மீனவர்கள் செல்வாக்கின் கீழ் இருக்கும் கடல் பகுதிக்குள் வரவேண்டாம்" என்று சொல்லட்டும். என்பதாக திரிக்கிறான். ஏ.கோத்தப்பாய், இரண்டு கரைகளின் தமிழ் மீனவர்களும், 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, கரையின் இருபுறமும் "போகவர இருந்து மீன் பிடித்துவந்தார்கள்" என்பது உனக்கு தெரியுமா? உன் அறிவுக்கு எட்டுமா? கடலில் அதுவும் இந்த பதினெட்டு மைல் அகலக் கடலில், இருபுறமும் உள்ள "மீனவர்களுக்கு எல்லை கிடையாது" எனபது உனக்கு விளங்குமா? "மீன்பிடி தொழிலில்" இப்படி குறுகிய தூரத்தில் உள்ளவர்கள் மத்தியில் "எல்லை போடமுடியாது" என்பதாவது உனக்கு புரியமுடியுமா? இந்திய மத்திய அரசு வேண்டும் என்றே "கடலில் எல்லை" என்ற இல்லாத பிரச்னையை கிளப்பி வருவதால், அவர்களது "ஆலோசனையில்" நீ இதை கூறுகிறாயா?

அடுத்து, "எங்கள் தமிழக முதல்வரைப்" பார்த்து, "அடுத்த நாட்டு பிரச்சனையில் உங்கள் தலையை நுழைக்காதீர்கள்" என்று கூறுகிறாயே? உனக்கு எவ்வளவு "நெஞ்ச ழுத்தம்" இருந்தால், தமிழ்நாட்டின் ஏழரைக் கோடி மக்களின் தலைவரை, இன்று உலகத்தமிழினம் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு தலைமையைப் பார்த்து இந்த "வார்த்தையை" கூறுவாய்?" எது அடுத்தநாட்டு பிரச்சனை? ஒன்றரை லட்சம் தமிழர்களை நீயும் உன் சகோதரர்களும் சேர்ந்து கொல்வீர்கள்? அது "அடுத்தநாட்டு பிரச்சனை" என்று நாங்கள் சும்மா இருக்க வேண்டுமா? நீ எங்கள் நாட்டு மீனவர்கள் "ஐநூற்று நாற்பத்தி மூன்று" பேரை நடுக்கடலில் "கொலை" செய்வாய்? நாங்கள் அடுத்தநாட்டு பிரச்சனை என்று கைகட்டி நிற்கவேண்டுமா? அது, கருணாநிதி என்ற உனது "சகா" ஆண்ட காலத்தோடு முடிந்துவிட்டது.

உனக்கு ''தைரியம்" கொடுத்தது 'டில்லிதான்" என்பது எங்களுக்கு தெரியும். அதே டில்லி "உன்னையும் உன் சகோகளையும்" தமிழ்நாட்டில் பெரும் அளவு செல்வாக்குடன் "ஜெயலலிதா வெற்றி" பெற்று வந்துவிட்டார், அதனால் அவரை எபப்டியாவது "ந'அத்பு கொள்ளுங்கள் என்று கூறியதே? அப்போது நீயும் உன் தம்பியும் "டில்லியிடம் பேசி, தமிழக முதல்வரை சந்திக்க பல முயற்சிகளை எடுத்தீர்களே? இப்போது "அது எதுவும் பலிக்காத நிலையில்" டில்லி உங்களிடம் "கை விரித்துவிட்டதே?" தமிழக அரசை "''பகைத்துக்கொள்" என்று கூறிவிட்டதே? அதற்குபிறகு நீ சிங்கள ஆன்மிக பயணிகள்" என்ற பெயரில் " உன் ஒற்றர்களை" அனுப்பி சென்னையில் "'சட்ட ஒழுங்கை கெடுக்க முயற்சி செய்தாயே? அதையும் இங்கே உள்ள தமிழக அரசு முறியடித்து" விட்டதே? அதற்கு பிறகு டில்லி" கொடுத்த "தைர்யத்திதானே" இப்படி நேர்காணலில், கண்டபடி உளறுகிறாய்? இதை தமிழ்மக்கள் சந்திப்பார்கள்.

No comments:

Post a Comment