Monday, November 14, 2011

மேட்டுக்குடி சாராயம் விற்கப்போவது தனியார்துறை?

சகா நினைவு படுத்திவிட்டார். இன்று கூட காட்சி ஊடகத்தில் கூறிவிட்டேன். தமிழக அரசு எலைட் சாராயக்கடைகளை அதாவது மேட்டுக்குடி சாராயக் கடைகளை "தனியாரிடம்" ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாம். அப்படியானால் சாராயக் கடைகள் தனியாரிடம் இருப்பதால் , தனியாரின் ஏலத்திற்கு செல்வதால், ரௌடியிசம் வளர்கிறது என்ற பெயரில் அரசு எடுத்து நடத்துவது என்ற க்கை முடிவு "காற்றில்" பறந்து விட்டதா? அதனால்தான் இன்று முரசொலியில் கட்டம் கட்டி, இனி விபச்சார விடுதிகள் வரும், சூதாட்டம் வரும், குதிரை பந்தயம் வரும் என்று நீட்டி முழங்கி இருக்கிறார்கள்.

நாம் கேட்பல்தேல்லாம் எது வந்தாலும் "தனியாருக்கு" வருணம் என்பது ஒரு கொள்கை முடிவுதானே? அதாவது ஏதோ ஒரு குழு இதற்காகவே அரசிற்குள் உழைந்து செயல்படுவது தெரிகிறதே? எந்த காரணத்தை கூறி தனியாரிடம் இருந்து சாராயக் கடிகள பறிக்கப்பட்டதோ, அதே காரணம் "திசை" மாறி விட்டதே? இந்த பழைய குருடி கதவை திறக்க ஒரு வருடமாவது ஆகவேண்டாமா? அதற்குள் பொறுக்காமல் "திடீர்" பணக்காரர்கள் சேர்ந்துகொண்டு, மேட்டுகுடி சாராயக் கடைகளை ஏலம் எடுக்க தயாராகி விட்டார்களா? யார் சொன்னது? எடுத்தாச்சு, அய்யா. அந்த விமான நிலைய ஏலக்காரர்கள்தான் எடுத்திருக்காங்கலாமே?

இனி எல்லாம் தனியாரிடம்தானா? சரி. அரசின் ஒவ்வொரு இலாகாவையும் தனியாரிடம் கொடுத்தால் நிறைய காசு கிடைக்குமாமே? அதுவும் நடக்கப்போகுதா?

1 comment:

வலிப்போக்கன் said...

சாரயக்கடையில்தான் சமத்துவம் நிலவுகிறது என்று
இனி சொல்லமுடியாது.அங்கேயும் மேட்டுக்குடி,சேரிக் குடின்னு வந்திரும்ல!!

Post a Comment