Friday, January 20, 2012

பெருமை தேடுவது சிறுமைதானே.

ஒரு மனிதர் தனது பொங்கல் விழாவில் சொன்னாராம். தான்தான் தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றியவர் என்று கூறினாராம். முதலில் ஒரு தனி மனிதர் ஆட்சியை மாற்ற முடியுமா? அடுத்து அப்படி மாற்ற ஒரு தனி மனிதர் காரணம் என்றால் அவர் "பெரியார்"போல, "அண்ணா" போல, குறைந்த பட்சம் "அண்ணா ஹசாரே"போல அதிக நாட்கள் மக்கள் மத்தியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும். அப்படி ஈடுபட்டவர்கள் கூட தானே வாய் திறந்து அப்படி சொல்லமாட்டார்கள். மக்கள்தான் ஆட்சியை மாற்றும் மந்திரக்கோலை கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.அதனால் அத்தகைய பெரிய மனிதர்கள் கூட, மக்களை திசை வழிப்படுத்தினார்கள் என்றுதான் நாமே கூறுவோம் . .

உண்மை அப்படி இருக்கையில் ஒரு தனி மனிதர் தன்னைத்தானே ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர் என்று பீற்றிக் கொண்டால், ஒன்று அவருக்கு மன நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்வியும் எழும். இந்த குறிப்பிட்ட மனிதர் "நிழல் மனிதர்" என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்டவர்.இவர் யாருக்கு நிழல் என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம்.ஆனால் அவர் யாருக்கும்நிழல் அல்ல என்பதும், அவரது சித்து விளையாட்டுக்கள் எல்லாமே இப்போது சமீபத்தில் அம்பலமாகி அவரும், அவரது குடும்பத்தாரும் நிலையில்லா நிலைக்கு வந்ததும் யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர் ஏன் தன்னை இப்படி ஒருபெரும் வேலையை செய்த திறமைசாலி போல காட்டிக் கொள்கிரார்? "கேழ் விறகில நெய் வடியுதுன்னா, கேட்கறவன் புத்தி எங்க போச்சு" என்று கிராமத்தில் கூறுவார்கள்.

இந்த நாட்டில் இதுபோல பல காரியங்கள் நடக்கும் பொது, இதே போல பல பேர் தாங்கள்தான் அந்த மாற்றங்களுக்கு காரணம் என்று பீற்றி கொல்வது நடக்கிறது. .இந்த "புளுகுன்னி" வேலையை செய்யும் சிலர் "தொண்டு நிறுவன" இயக்குனர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதனால் பலன் உண்டு. ஏமாறும் நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு அந்த கூற்றை நம்பி பணம் கொடுப்பார்கள். சிலர் இதுபோன்ற "பெருமைகளை" கூறி தனகளது "தொழிலை"நடத்துவார்கள். எடு எப்படியோ, இதுபோன்று பெருமை தேடுபவர்கள் செய்யும் அல்லது சொல்லும் செய்திகள் எப்படியானாலும் "சிறுமை"தானே.

No comments:

Post a Comment