Tuesday, February 21, 2012

பலூசிச்தானுக்கு சுய நிர்ணய உரிமை என அமெரிக்கா கூறுகிறதா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதும், இந்திய அரசை ஆவப்போது காஷ்மீர் பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை போன்றவற்றில் இடிப்பதும் அமெரிக்காவிற்கு கைவந்த கலை என்பதுதான் இனாம் எல்லோரும் இதுவரை எண்ணிப்பார்த்து வரும் வரலாறு? அது மாற்றப்படுகிறதா? அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது பாகிஸ்தானிற்குள் இருக்கும் பலூசிஸ்தான் என்ற தனி இனத்தின் "சுய -நிர்ணய உரிமை" பற்றி பேசியது. மனித உரிமைகள் என்ற பிரச்சனை பற்றி தான் மிகவும் கவலை படுவதாக அமெரிக்க செனட்டர்கள் கூறினார். ஆகா? இது என்னடா புது நாடகம்? என்று கேட்டீர்கள் என்றால் நிறைய கதை பின்னால் இருக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு குடியரசு கட்சியின் தானா ரோஹ்ரபாசேர் என்ற உர்ப்பினர்தான் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தவர். அதை இரண்டு அமெரிக்க குடியரசு கட்சியின் காங்கிரசார் வழி மொழிந்தனர். அவர்களது பெயர்கள் டெக்சாசின் லூஹி கொஹ்மேர்ட், மற்றும் ஐயோவா வின் ஸ்டீவ் கிங் என்பதே. அப்படியானால் அந்த தீர்மானம் குடியரசு கட்சியால் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்செயலாக நடந்த ஒன்று அல்ல.

இத்தகைய தீர்மானத்தை காங்கிரசில் கொண்டுவரும் அளவுக்கு அமெரிக்காவிற்கு தொர்யம் இருந்தும், இதுபோல ஒன்றை பல லட்சம் தமிழர்களை கொன்றதாக அமெரிக்காவே ஒப்புக்கொள்ளும் இலங்கை அரசிடம் "தமிழீழ சுய நிர்ணய உரிமை" பற்றி பேச ஒரு தீர்மனாம் கொண்டுவர என் முடியவில்லை? அதுதான் அமெரிக்க தந்திரம். அபப்டி என்ன தந்திரம் இதில் இருக்கிறது? அந்த கலிபோர்னியாவின் காங்கிரஸ் உறுப்பினர் தானா ரோஹேற்பசேர் இதற்குமுன்பு இந்திய அரசுக்கு எதிராக "காஷ்மீர் சுய நிர்ணய உரிமை" பற்றி பேசிவந்தவர். இப்போது பலூச்சி ஒரு வரலாற்று ரீதியான சியா நிர்ணய உரிமை பெறுவதற்கான தன்மை கொண்டது என்கிறார். அது தமிழீழத்திற்கு இல்லையா? பலூச்சியில் அதிகமாக பாக் ராணுவத்தால் கொலைகளும், கொடுமைகளும், சித்திரவதைகளும் நடக்கின்றன என்கிறார். அதுவே தமிழீழத்திலும் உண்மை இல்லையா? இதே தானா ரோஹேற்பசேர் இதற்கு முன்பு காஷ்மீர் சுய நிர்ணயம் மட்டுமல்ல, காலிஸ்தான் சுய நிர்ணயம் பற்றியும் பேசி வந்தவர். அதாவது அவர் இந்திய அரசுக்கு எதிரான் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகளுக்காக பேசினார். இப்போது இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதுபோல பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார். அதைதான் பாக்சிதனைன் அதிபர் கூறுகிறார். அதற்கு அமெரிக்க ஒபமாவும் ப-அகிச்தானை உடைப்பதை அனுமதிக்காது அமெரிக்க என்று பதில் கூறுகிறார்.


இந்த மற்றம் அந்த குறிப்பிட்ட குடியரசு கட்சிகாரரிடம் ஏன் வந்தது? அமெரிக்கவிற்கும் அந்த தேவை ஏன வந்தது? அமெரிக்க இன்று பாகிஸ்தான் தலிபானுக்கு கொடுக்கும் ஆதரவை எதிர்த்தும், ஆப்கானிஸ்தானை குறிவைத்தும், இரானை எதிர்த்தும் இந்த வட்டாரத்தில் ராணுவ தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது. அதற்கு சரியான தந்திரமாக பலூச்சிச்தானை தன வசப்படுத்தும் தந்திரத்தை எடுக்கிறது. ஏன் என்றால் பலூச்சிஸ்தான் ஒருபுறம் இரான், மறுபுறம் ஆப்கானிஸ்தான், இன்னொருபுறம் பாகிஸ்தானிற்கு உள்ளே என்று இருக்கும் பகுதி. அதனால் அந்த மூன்று சக்திகளையும் அடக்க பலூச்சிச்தானில் "ராணுவ தளம் அமைக்க" அமெரிக்க முயற்சிக்கிறது. இதுதான் இந்த தந்திரத்தின் காரணம். அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பது என்பது எரியும் விறகு கட்டையை எடுத்து சொரிந்து கொள்வதற்கு சமம். அதாவது இப்படி ஒரு தேசிய இன பிரச்சனையை வைத்து அமெரிக்க இங்கே நுழையுமானால் அது இந்த வட்டார சக்திகளுக்கு பலவீனமும், அமெரிக்க ராணுவ தந்திரத்திற்கு இந்த வட்டாரத்தில் இடம் கொடுப்பதும் எனப்டதையே செய்யும். அதற்கு நாட்டுபற்றும், தீரமும் வேண்டும்.அதுதான் இந்திய ஆளும் கும்பலிடம் இல்லையே?

No comments:

Post a Comment