Monday, June 18, 2012

தென்னேரி இருளர்களை ஆதிக்க முதலியார் அடிக்கலாம்?



       காஞ்சி மாவட்டம், வாலாஜாபாத் அருகே எட்டாவது கிலோ மீட்டரில், தென்னேரி கிராமம் உள்ளது. அதில் பத்து இருளர் குடும்பங்கள் வீடு கட்டி "நத்தம் புறம்போக்கில்" வாழ்கிறார்கள். நத்தம் புறம்போக்கைத்தான் ,அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு மனைக்கான நிலமாக தருவதாக திட்டமிட்டுள்ளது. அந்த நத்தம் புறம்,போக்கில் வாழும் இருளர் மக்களுக்கு, சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை, மின்சார தொடர்பு ஆகியவற்றை வாட்டட்சியர் செய்து கொடுத்துள்ளார். அடுத்து அந்த மணிகளை "பட்டா" போட்டு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். 

                         அந்த செய்தியை அதே தென்னேரி கிராமத்தை சேர்ந்த "ஏகாம்பர முதலியாரால்" தாங்கி  கொள்ள முடியவில்லை. அவர் உடனே தனது ஆட்கள் ஐம்பது பேரை அனுப்பி, ஞாயிறு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரை, அந்த கிராம இருளர்களை வீடு புகுந்து அடிப்பதும், ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் உதைப்பதும், இரண்டு வீடுகளை உடைப்பதும் என "வன்கொடுமைகளை" செய்துள்ளனர். அதுபற்றி புகார் கொடுக்க சென்ற மக்களை மன்றத்தினரிடம், வாலாஜாபாத் காவல் நிலையத்தினர் "புகார் எடுக்க" மறுத்துள்ளார்கள். மக்கள் மன்றத்தினர் அந்த அடிபட்ட பதின்மூன்று இருளர்களையும், மருத்துவமணையில் சேர்த்துள்ளனர். 

                        ஆதிக்க சாதியின் இந்த வான் கொடுமையை, பழ்ஜன்குடி இருளர் மீது காட்டுவதும், அதை புகார் எடுக்க மறுப்பதும், பழ்ஜன்குடி பிரதிநிதியை குடியரசு தலைவருக்கே நிறுத்தும் ஒரு முதல்வர் ஆளும் மண்ணில் "அதிகாரிகளால்" தைரியமாக செய்யமுடிகிறது. 

                     

No comments:

Post a Comment