Thursday, February 18, 2010

மாவோயிஸ்ட் கோட்டையில் கண்ணிவெடிகள்

சமீபத்திய நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்கள் அல்லது அவர்கள் மீது அரசப்படை நடத்திய தாக்குதல்கள் என் பதாக செய்தி வராத நாளே இல்லை என்று கூறலாம். ஊடகங்களுக்கும் அத் தகைய செய்திகள், பர
ப ரப்பூட்டும் ஆய்வுகளை நடத்த உதவியுள்ளன. சமீபத்தில் நமது மத்திய உள்துறை அமைச்சர், தற்காலிகமாக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையும், இந்திய அரசியல்
சட்டத்திற்குட்பட்ட ஆட் சியில் மாவோயிஸ் டுகளின் கொள்கைகளுக்கு இட மில்லை என்பதையும், விரிவாக விளக்கியிருந்தார். அது மேற்கு வங்க மாநி லத்திலுள்ள, மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற் றியது. தாக்குதலில் பலியான அரசப்படை வீரர்கள் மீது, பலத்த அனுதாபம் ஏற்பட்டது. ஜர்க்ரம் பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள், ஆறு மாதங்களுக்குள் அரசப்படை மீது ஐந்து தாக்குதல்கள் நடந்து விட் டன என்று கூறுகிறது. 32 படைவீரர்கள் கொல்லப் பட்டனர். பல பத்துப் பேர் காயமடைந்தனர். ஆயுதங் கள் பறிக்கப்பட்டன. காவல் முகாம்கள் பிடிக்கப் பட்டன. அதேசமயம் மாவோயிஸ்டுகளின் முகாம்களில் மூன்று உடைக்கப்பட்டது. கொரில்லக்கள் என சந் தேகிக்கப்படும் 3 பேர் கொல் லப்பட்டனர். 190 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட படை அதி காரி அத்திந்தரநாத் தத்தாவை விடுதலை செய்வதற்காக 23 பேர் விடுதலை செய் யப்பட்டனர். மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, எல்லா விவரங்களையும் மறைந்து இருந்து கொண்டே, ஊடகப் பேட்டிகள் கொடுக்கிறார். ஜங்கல் மஹால் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப்பகுதியில், அரசப்ப டைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை மக் கள் ஆதரிக்கிறார்கள்.
2008ம் நவம்பர் மாதத்திற்கு பிறகு, அதாவது காவல்துறை அராஜ கங்களுக்கு எதிரான மக் கள் குழுவை அமைத்த பிற்பாடு, ஒவ்வொன்றாக மாவோயிஸ்ட்கள், வெற்றி பெற்று வருகிறார்கள். 2009 ஜனவரியில் லால் கரில் காவல்துறையை புறக்கணித்தார்கள். காவல்துறைக்கு உளவுக் கொள்பவர்களை தீர்த்துக் கட்டினார்கள். 300 கிராமங் களிலுள்ள 3 லட்சம் மக் களை பாதுகாக்க லால்கரில் 36 காவலர்களே அப்போது இருந்தனர். உள்ளூர் உளவு கட்டமைப்புத் தான், காவல்துறைக்கு இருந்த ஒரே அமைப்பு. அதையும் மாவோ யிஸ்ட்கள் குறி வைத்து தாக்கினார்கள். இரவு ஆனபிறகு காவலர்கள் வெளியே வருவதில்லை. படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி யுள்ளன. இதன் மூலம் விடுதலை பகுதியை ஏற்படுத்தி, மேற்கு மிதி னாப்பூரையும் தாண்டி, புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களுக்கு, மாவோ யிஸ்ட்கள் செல்வாக்கு விரி வடைந்துள்ளது. கிணறுகள் தோண்டுதல், சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை வளர்ச் சியுறாத பகுதி களில் உருவாக்கி மக்கள் செல்வாக் கையும், மாவோயிஸ்ட்கள் பெற்று விட்டார்கள். அரசப்படைகளுக்கு இல்லாத அனைத்து கட்ட மைப்புகளும், அங்கே மாவோயிஸ்ட்களுக்கு இருக்கிறது.
9 மாதங்களாக அந்த வட்டாரத்திலேயே முகாமிட்டு இருக்கின்ற அரசப்படைகள், அந்த வட் டாரம் பற்றி இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு கிராமப்புற பாதை தெரியவில்லை. காடுகளில் உள்ளே உள்ள வழிகள் தெரியவில்லை. காலை முதல் மாலை வரை தாங்கள் வலம் வரும் பகுதிகள் மட்டும் தான் தெரியும். இரண்டு வாரங்களாகத் தான் காடுகளுக்குள் அரசப்படைகள் செல்கின்றார்கள். புதிதாக உள்ளே செல்லும் போது குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்று, கையில் ஆயுதங்கள் இல் லாத நிலையில் அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
மேற்கண்ட நிலைமை மேற்கு வங்கத்தில் என்று சொன்னால், சத்திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் பகு தியில் இருந்து வரும் செய்திகள், மாபெரும் உள்நாட்டு போர் சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 14வது நூற்றாண்டில், பஸ்டர் என்ற அரசாட்சி அங்கே நடந்து வந்திருக்கிறது. ராமா யணத்தில் தண்டகாரண்யா என்று சொல்லப்படும் பகுதி தான் அது. மகாபாரதத்தில் கோசல ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிராந் தியம் தான் அது. 19ம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில், பஸ்டர் என்ற அந்த அரசாட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய பிராந்தியமாக அழைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பஸ்டர் பகுதி இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2000மாவது ஆண்டு சத் திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் வட்டாரத்தின் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது. இந்தி ராவதி நதிக்கரையோரம் அந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் ஒரிசா இன்னொரு புறம் ஆந்திரா. எல்லாம் காடுகள் இவ்வாறு வர லாற்று புகழ் பெற்ற அந்த பகுதி தான் இப்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அரசப்படைகளுக்கும் மத் தியில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல நடந்து வருகிறது.
ஒரு பிரபல ஊடகம் தண்டகாருண்யாவின் அடர்த்தியான காடுகளில், தர்பா என்ற பகுதியின் மாவோயிஸ்ட் குழு தலைவர்கள் 3 பேரை சந்தித்திருக்கிறது. பத்ரு, வினோத், தேவா என்ற அந்த மூன்று பேர் கொண்ட குழுவின் தளப தியான பத்ரு, ஊடகத் திற்கு கடுமையான நேர்காணலைக் கொடுத் துள்ளார். பன்னாட்டு மூல தன கம்பெனிகளுக்கு, தங்கள் பகுதியின் நிலங் களை விற்கத் துடிக்கின்ற மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்ய முடியாது என்றும் தாங்கள் அரசு ஏற்றுக் கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது அந்த வட்டார நிலங்கள் ஆதி வாசிகள் உட்பட வட்டார மக்களுக்கே சொந்தம் என்று அவர் தெரிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஆயுதக்குழு தலைவர் பத்ருவிற்கும், இந்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது இருவருமே அவரவர் துப் பாக்கிகளை, துடைத்து வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தான் சமாதா னத்திற்கோ, பேச்சுவார்த் தைக்கோ, வழிவகுக்குமா என்ற கேள்வி தான் எழு கிறது.
அரசப்படைகளிட மிருந்து, அப்பாவி மக்களை தாங்கள் காப்பாற்ற விரும் புவதாகவும், அதற்காகவே தாங்கள் துப்பாக்கி தூக் கியிருப்பதாகவும், பத்ரு போன்றவர்கள் கூறுகி றார்கள். அப்பாவிகளைத் தான் அரசப்படைகள் கொலை செய்ய முடியுமே தவிர, தங்களை அல்ல என் றும் மாவோயிஸ்ட்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதன் விளைவாக அதிகமான மக்கள் துப் பாக்கி ஏந்துவார்கள் என்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். பச்சை வேட்டை என்ற பெயரில் அரசப்படையும், அரசால் ஆயுதபாணியாக்கப்பட்ட, கூலிப் படையான சல்வா ஜுடுமும், அப்பாவி மக்களை கொலை செய்வ தனால், எதிர் விளைவுகளே உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்ரம பள்ளிகளை உடைத்தீர்களே என்ற கேள்விக்கு, அரசப் படைகள் அவற்றை ஆக் கிரமித்திருந்தன என்றும் பதில் கூறுகிறார்கள். பா.ஜ.க.வும், காங்கிர
சும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை, அந்த வட்டாரத்திற்கு கொண்டு வந்து, பாரம்பரியமாக வாழும் மக்களை நிர்பந் தமாக இடம் பெயர வைக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
அதேசமயம் அரசு தரப்பு செய்திகள், தாங்கள் செய்கின்ற பச்சை வேட்டை என்பது, பொது இடங்களில் மாவோயிஸ்ட்களால் நிலத்தில் புதைக்கப்பட்ட, கண்ணிவெடிகளை நீக்குவது தான் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பஸ்டர் பகுதியில் கண்ணிவெடிகளை நீக் குவதற்காக, இறங்கிய காவல்துறையினர் பலர் தங்களது உயிரை இழந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது கால்களை இழந்திருக்கிறார்கள். இதுபற்றி மனித உரிமை அமைப்புகள் பேசு வதில்லை என்பது அரசுதரப்பு குற்றச்
சாட்டு. சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், காடுகளிலும், பொது இடங் களிலும் இதுபோன்ற கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத் திருக்கிறார்கள்.
அங்கே ஆதிவாசி பகுதி களில், ஒரு உள்நாட்டுப் போருக்கான சூழல் நில விக்கொண்டிருக்கிறது. அத னால் தான் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தும் மாவோயிஸ்ட்கள்,
சாதாரணமாக தாங்கள் அறிவித்துள்ள விடுதலைப் பகுதிகளை, நெருங்கும் இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகளை புதைத் திருக்கிறார்கள். அதே சம யம் காவல்துறையின் சித் ரவதைகளை எதிர்த்து, 2005ம் ஆண்டு 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் சில தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டலுடன் பதிவு செய்யப்பட்டுள்ள. மனித உரிமைகள் என்ற அடிப்படையான அளவு கோல் மூலம் அந்த வட் டாரம் பார்க்கப்படுமா? 2005ம் ஆண்டு 26 மாவோயிஸ்ட்களும், 48 அரசப்படையினரும், 52 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு 117 மாவோயிஸ்ட்களும், 55 அரசப்படைகளும், 189 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 73 மாவோயிஸ்ட்களும், 182 அரசப்படைகளும், 95 அப்பாவிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டு 66 மாவோயிஸ்டுகளும், 67 அரசப்படைகளும், 35 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 2009ம் ஆண்டு 137 மாவோயிஸ்ட்களும், 121 அரசப்படைகளும், 87 அப் பாவிமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைமை 2010லும் தொடர வேண்டுமா என் பதே நமது கேள்வி.

Wednesday, February 17, 2010

கனடாவிலிருந்து வந்த இயற்கை விஞ்ஞானம்!

இன்று இந்தியா எங்கும் விவாதப் பொருளாகி வருவது, மரபணு மாற்று உணவு நல்லதா, கெட்டதா என்பதே. சமீபத் தில் நாடெங்கிலும் பல நகரங்களில் நடந்து முடிந்த, மலட்டு கத்தரிக் காய் பற்றிய கலந்துரையா டல்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை, மரபணு மாற்று கத்தரிக்காய்கள் விற்ப னைக்கு அனுமதிக்கப் படுவதை, குறைந்த பட்சம் தள்ளிப் போட்டது. அதே சமயம் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் அதே மரபணு மாற்றை, கெடுதல் அல்ல என்பதாகக் கூறிய கூற் றும் வெளிவந்தது. இதே ஊடகங்கள் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அர சாங்கத்திற்குள், இரண்டு கருத்துக்கள் என்பதாக எழுதியிருந்தன. இன்ன மும் தீர்க்கப்படாத பிரச்சினையாக, இந்தியா வில் இந்த மரபணு மாற்று விதைகளும், உணவு களும் இருக்கின்றன. அதனால்தான் தங்கள் தலைமேலே, கூர்வாள் தொங்கிக் கொண்டிருக் கிறது என்று இயற்கை விவசாயிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவியலா ளர்களும் கூறுகிறார்கள். கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் ஆகியவற்றின் அரசாங்கங் கள் கறாராக மரபணு மாற்று விதைகளை மறுப்பது போல செய்யா விட்டாலும், தமிழக அரசு தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என்றாவது கூறியுள்ளதே என்ற ஆறுதல் ஒருபுறம். அதே சமயம் விவசாயப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டி லும், பஞ்சாபிலும் இந்த மரபணு மாற்று விதை களை சந்தையில் இறக்கி விடும் பன்னாட்டு நிறுவனங் களுக்கு, பயன்பாடாக
சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் விவசாய உற்பத்திக்கு பெயர் பெற்றது என்பதாக கூறு கிறார்கள். அந்த பஞ்சாபி லிருந்து பிறந்து 1960ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் வாழ்ந்து வரும், இயற்கை விஞ்ஞானி டாக்டர் சிவ்சோப்ரா, இந்தியா வந்துள்ளார். இவர் ஹைதராபாத், சென்னை, கொச்சி, மைசூர், பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சென்று தனது கருத்துக்களை தெளித்துக் கொண்டிருக் கிறார். மரபணு மாற்று உணவுகளின் அரசியலும், அதனால் ஏற்படும் சுகாதார தாக்கங்களும் என்பதுதான் இவரது விளக்கத்தின் தலைப்பு. அறிவியல், சமூகம், மதம் பற்றி பல் வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர், கால்நடை மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கனடா நாட்டில் எல்லாமே முன்னேறி இருக்கும் என்ற நம் பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. ஆனால் இந்திய வம்சாவழியான இந்த விஞ்ஞானியின் அனு பவம், மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாய உற்பத்தி பெருகியதற்கு காரணம், பசுமைப் புரட்சிதான் என்று சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் இன்னமும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஆங்கிலேயனுடைய ஆட்சி இருக்கும் போது, இந்தியாவும், பாகிஸ்தா னும் ஒன்றாக ஆளப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் விவசாய விளைச்சலில் இயற்கையாகவே, சிறந்து விளங்கியது. அதில் முக்கிய விளைச்சல் பகுதிகள் பாகிஸ்தானுடன் சென்று விட்டன. ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில், வெள்ளைக்காரர்கள் நிரந்தரமாக தாங்கள் இந்தி யாவை ஆளப்போகி றோம் என்ற எண்ணத்தில், பஞ்சாப் விளைச்சலை அதிகப்படுத்தினார்கள் என் கிறார் சோப்ரா. அதற்காக நிலமற்ற உழவர்களுக்கு, நிர்ப்பந்தமாக நிலச் சீர்திருத்தம் செய்து, நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இலவச மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் அளித்தார்கள். எந்த ஒரு ஆலை உற்பத்தியும் இல்லாமல், பஞ்சாப் விவ சாயத்தை மட்டுமே சார்ந் திருந்தது. அத்தகைய காரணங்களினால் விளைந்த விளைச்சல், பஞ்சாப் உட்பட இந்தியா முழுமைக்கும் உணவு தந்தது. இப்படியாக பஞ்
சாப் பற்றி நமக்கு ஒரு புதிய வரலாற்றுச் செய்தியை, சோப்ரா அளிக்கிறார்.
ஆங்கிலேயே ஆட்சி யாளர்களது அன்றைய
சதித்திட்டத்தையும்
சோப்ரா அம்பலப்படுத் தினார். இந்தியாவை வணி கத்தின் மூலம் அதிகாரம் செலுத்திய, கிழக்கிந்திய கம்பெனி கடுமையாக ஊழல் செய்யத் தொடங் கினார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயே அரசு மெக்காலே பிரபுவை, இந்தியாவிற்கு ஆளுநராக இறக்கிவிட்டது. 1833ம் ஆண்டு மெக்காலே இங்கு வந்தார். இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த் தார். பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இந்த பூமி யில் இல்லை என்று அதிர்ச்சியுடன் எழுதினார். இந்தியாவிலிருக்கும் வளத்தையும், மனத்தி
டத்தையும், மரபையும், பண்பாட்டையும் உடைத்து இந்தியர்களின் முதுகெலும்பை முறிக்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதற்காக அடிமைக்கல்வியை அறிமுகப்படுத்தினார். 1858ல் மெக்காலே மறைந்தார். 1859ல் ராணி விக்டோரியாவின் தலைமையில் இந்தியா முழுமையான காலனி நாடாக ஆனது. இப்படி ஒரு அரசியல் வரலாற்றை தொகுத்து, அதன் மூலம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்த, சுயசார்பு பொருளா தாரத்தை எப்படி உடைத் தார்கள் என்று சோப்ரா விளக்குகிறார்.
பருத்தியை விளைச் சல் செய்யுங்கள். ஆனால் இங்கிலாந்தில் கொண்டு போய் நெய்து கொள்கிறோம். இப்படிப் பட்ட கொள்கையுடன் ஆங்கிலேயே ஏகாதிபத் யம், இந்திய விவசாயத்தை தனக்கான உற்பத்திப் பின்னிலமாக ஆக்கியது என்பதே சோப்ரா கொடுக்கின்ற வரைபடம். பருத்தி இந்தியாவின் பாரம்பரிய, சுயமான உற்பத்தி. இந்தியாவை காலனியாக்கிய ஆங்கிலே யர்களுக்கு பருத்தி உற்பத்தி பற்றியும், பருத்தி உடைகள் பற்றியும் தெரியாது. மேற்கிந்திய, கிழக்கிந்திய மொரீசியஸ் நாடுகளுக்கு, இந்திய விவசாயிகளை கூட்டிச் சென்று, பருத்தி உற்பத்தியை அவர்கள் பரவலாக்கினர். இப்படி வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கின்ற அந்த இயற்கை விஞ்ஞானி, பசுமைப் புரட்சி பற்றி யும், மரபணுக்களை மாற்றி புதிய செயற்கை விதைகளை உருவாக்கும், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் விளக்குகிறார்.
வீரிய விதைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே, அவற்றினால் ஏற்படும் பூச்சிகளை அழிக்க, அவர்களே தயாரித்து பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனைக்கு தயாரானதை சுட்டிக் காட்டுகிறார். உயிரியல் தொழில் நுட்பம், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில், இயற்கை யாகவே 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந் தது என்று கூறுகிறார். இப்போது வந்திருக்கும் மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படும் செயற்கை முறைகளை விளக்குகிறார். பாக்டீரியா எனப்படும் குறிப்பிட்ட கிருமியை, குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து எடுத்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாட்டுக்கு கொடுப்பதோ, கத்தரிக்காய் உற்பத்தியை அதிகப்படுத்தவோ, பருத்தி உற்பத்தியை அதிகப் படுத்தவோ, அந்தந்த பொருள்களுக் குள் ஊசி மூலம் ஏற்று வதோ, மரபணு மாற்று என்று கூறுகிறார்கள்.
மரபணு மாற்று கத்த ரிக் காய்கள் விளையும் போது, பூச்சிக் கொல்லி மருந்து களுக்கு வேலையே இல்லை என்பது சிலரது வாதம். தானாகவே அந்த மரபணு மாற்று ஊக்கி, பூச்சிகளைக் கொன்று விடுகிறது என்பது அவர்களது விளக்கம். உள்ளபடியே தன்மீது அமரும் பூச்சிகள் மீது, ஒரு பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள, எப்படி நச்சை கக்குகிறதோ, அப்படி நச்சைக் கக்கி இந்த ஊக்கிகள் (ஹார் மோன்கள்) அனைத்துப் பூச்சிகளையும் கொன்று விடுகின்றன என்பதே
சோப்ரா கொடுத்த விளக்கம். அதனால் பயிருக்கு பயனுள்ள பூச்சிகளும் கூட அழிக்கப்படும் என்பதே விளைவு. ஆகவே இந்த மரபணு மாற்று உணவுகள், எந்த விதத்திலும் இயற்கையான ஆரோக்கிய தன்மை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.
கனடா நாட்டு நாடாளு மன்றம், மான்சான்டோ என்ற மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு, ஆதரவாக நிலை எடுத் தது. பால் உற்பத்தியை அதிகப்படுத்த, மாடுகளுக்கு மரபணு மாற்று ஊக்கிகளை உள்ளே செலுத்தும் முறையை, கனடா நாட்டு அரசாங்க அதிகாரியாக இருந்த
சோப்ரா எதிர்த்திருக்கிறார். பொவைன் வளர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படும் மரபணுவை, மாட்டுக்கு செலுத்துவது ஆபத்தானது என்று கனடா நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, சோப்ரா ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். அதையொட்டி கனடா நாடு தனது அனுமதியை நிறுத்தி வைத்தது. ஆனால் அமெரிக்கா மட்டும் தனது அனுமதியைத் தொடர்ந்தது. இத்தகைய அம்பலப்படுத்தலால்
சோப்ரா அரசு பணியை இழந்தார். தனது பணியை விட, மக்களது ஆரோக்கியமும், இயற் கையான உற்பத்தியும் தான் முக்கியம் என்று உணர்ந்த சோப்ராக்கள், இளைய தலைமுறையில் உருவா கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி யுள்ளது.

Tuesday, February 16, 2010

60 ஆண்டுகளாக பற்றி எரியும் நாகர்கள் பிரச்சினை

அனைத்து நாட்டு நாகர் ஆதரவு மையம் என்ற அமைப்பு, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர் டாங் நகரில் இருந்து ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அரசு தங்கள் இனமக்கள் மீது மோதல் போக்கை கையாளுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அமைதிக்கான பேச்சு வார்த்தைகள், நாகர் புரட்சியாளர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தி யில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், அது இழுத்துக் கொண்டே இருக்கிறது. நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை என்பதாகத்தான், இரு சாராருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங் கியது. இந்திய அரசுக் கும், நாகர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, இரண்டு நாடுகளுக்கு இடையிலானது என்பதாக அந்த அனைத்து நாட்டு அமைப்பு நினைவு படுத்துகிறது. அதாவது நாகர்கள் தங்களை இந்தியாவின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண் டதே இல்லை. இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கும் போதும், அத்தகைய ஒரு புரிதலை அவர்கள் கொண்டிருக்க வில்லை. தங்களை இந் தியர்கள் என்பதாக, எந்த நாகரும் இதுவரை எண்ணவும் இல்லை. இதை இந்தியாவெங்கும் பல்வேறு வேலை களுக்காக, நடமாடும் நாகர்கள் அனைவருமே தங்களது சிந்தனையாகக் கொண்டுள்ளனர்.
தென்னிந்தியர்கள் வட இந்தியா செல்லும் போதோ, வேறு இடங்களிலோ, நாகர்களை சந்தித்தால், சந்தித்து அவர்களது தேசிய இனப்பிரச்சினையின் மீது அக்கறையுடன் விவாதித்தால், நீங்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியே வரப் போகிறீர்கள் என்ற கேள் வியை சாதாரணமாக நாகர் கள் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, இந்தியாவை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். தங்களுடைய பிரச்சனை கள் மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருக்கின்ற அனைத்து தேசிய இனங் களும், சுயநிர்ணய உணர் வுள்ளவர்கள் என்பதாக நாகர்கள் எண்ணுகி றார்கள்.
பேச்சு வார்த்தையின் இந்த கட்டத்தில் இந்திய அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் நாகர்களோ, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப் படவேண்டும் என்று, முன்பு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள விவ ரத்தை வெளியே கூறி, தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் நல்லதொரு தீர்வை எட்டலாம் என நாகர்கள் முயற்சிப்பதாகவும், ஏற் கனவே ஒப்புக் கொண்ட விதிகளை மீறுவதன் மூலம், இந்திய அரசு அத்தகைய பேச்சுவார்த் தையை உடைத்து விட முயற்சிக்கிறது என்றும், நாகர்கள் குற்றம் சாட்டுகி றார்கள். பேச்சு வார்த்தை உடைந்தால், அதற்காக நாகர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அவர் கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
இப்போது இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரை நாகர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தியில் 60வது முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. சென்ற ஆண்டு நாகாலாந்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் இல்லாத முறையில், ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்ப தாக அந்த தீர்மானம் அழைக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இருக்கின்ற, அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒரே குரலில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் நாகா அரசியல் பிரச்சினையின் மீது ஆய்வு செய்ய, ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதாக எழுதப்பட்டது. பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கின்ற இந்தியநாகா அரசியல் பிரச்சினைக்கு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்காக தங்களது புதிய நேர்மையான முயற்சியை எடுப்பதாக, இந்திய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அந்த தீர்மானம் பாராட்டியுள் ளது.
மேற்படி செய்தியை மாநிலங்களவை உறுப் பினர் கேகிஹோ சிமோமி, நாடாளுமன்றத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆகவே பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தலைமறைவு நாகர் குழுக்களான, ஐசக்முய்வா தலைமையிலான நாகா லாந்து தேசிய சோசலிச கவுன்சிலும், கப்லாங் தலை மையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலும் மற்றும் நாகா தேசிய கவுன்சிலும் எந்த ஒரு நாகர்களுக்கான சிறந்த தீர்வையும், பல் வேறு குழுக்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி. கூறினார்.
1950ம் ஆண்டு காலகட்டங்களிலேயே, நாகா எழுச்சி, பிசோ தலைமையில் உருவான நாகா தேசிய கவுன்சில் மூலமாகக் கிளம்பியது. அது சுதந்திரமான, தனி இறை யாண்மை கொண்ட ஒரு நாகா தேசத்தை அடைவதுதான் தங்கள் லட்சியம் என்பதை முன்வைத்தது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வட்டார நிர்வாகத்தின் கீழ், நாகா மலைகளின் மாவட்டம் என்பது இருந்தது. அத னால் அப்போது கிளம்பிய நாகா எழுச்சியை, உள்ளே நுழைந்த இந்திய ராணு வம் அடக்கி விட்டது. அதனாலேயே நாகா தேசிய கவுன்சிலின் புரட்சிகர உறுப்பினர்கள், தலைமறைவாகச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் பிசோ லண்டனுக்கு தப்பி ஓடினார். கிறித்துவ பாதிரியாரான மைக்கேல் ஸ்காட் பொறுப்பில் பிசோ, லண்டனிலேயே தங்கியிருந்து ஆங்கிலேய நாட்டின் குடியுரிமைப் பெற்று, தொடர்ந்து தன் மக்களுக்கான பிரதிநிதித் துவத்தை, மறையும் வரை தொடர்ந்தார். மிதவாத நாகா தலைவர் சிலுஆவோ தலைமையில் வந்தவர்கள், இந்திய அரசுடன் பேசி தீர்க்க முதன்மை கொடுத்தார்கள். அதனால் 1963ம் ஆண்டு ஜனவரி முதல் நாளே, தனி நாகாலாந்து மாநிலம் உருவானது. அதன் முதல் முதலமைச்சராக சிலுஆவோ பொறுப் பேற்றார். ஆனாலும் நாகா தேசிய கவுன்சில் பெயரில் சில தலைவர்கள் ஆயுதப் போராட்ட நடவடிக் கையை தொடர்ந்தார்கள். அன்றைய கிழக்கு பாகிஸ் தானுக்கும், சீனாவிற்கும் சென்று, கொரில்லா போராட்ட பயிற்சிகள் எடுத்து, ஆயுதங்களையும், தோட்டாக்களையும் பெற்று வந்து தாக்கு தல்கள் நடத்தினார்கள். 1976ம் ஆண்டு இந்திய அரசுடன், நாகர்கள் போர் நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரி புராவுக்கு ஆளுநராக இருந்த எல்.பி.சிங் முயற் சியில், சில்லாங் சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை நிராகரித்த
ஐசக் ஸ்வு மற்றும் துயிங்கலன் முய்வா ஆகி யோர் பிசோ தலைமை யிலான நாகா தேசிய கவுன்சிலில் இருந்து வெளியே வந்து புதிய நாகா புரட்சிகர குழுவை உருவாக்கினார்கள். 1980ம் ஆண்டு அது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்று பெயர் பெற்றது. ஆயுதப் போராட் டத்தை அது தொடர்ந்து நடத்தியது. அந்த அமைப்பு இரண்டாக உடைந்து, அதில் ஒன்றை கப்லாங் தலைமையேற்றார்.
ஐசக்கும், முய்வாவும் 1995ம் ஆண்டு பாரீஸ் நகரிலும், பிறகு நியூயார்க் நகரிலும், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். 1997ம் ஆண்டு பிப்ரவரியில் சூரிச் நகரில் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2002ம் ஆண்டில் டோக்கியோவில் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவ்வாறு 9 ஆண்டுகளாக ஒரு தீர்வு வேண்டி, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கள் எழுப்பி வரும், சுதந்திரமான தனி இறையாண்மை கொண்ட அரசு என்ற கோரிக்கையை கைவிடுவதோ, அல்லது இந்தியாவிற்கு உட்பட்டு, பெரிய அளவில் சுயாட்சி கொண்ட நாகா மாநிலத்தை உருவாக்குவது என்பதோ, பேச்சு வார்த்தை நிறை வில் காணப்படும். மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பலப் பகுதிகளை, நாகாலாந் துடன் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். 50க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய ஆதி வாசி இனங்கள் அங்கே வாழ்கின்றனர். அங்கு வாழும் மைத்தி இன மக்கள் இந்துக்களாகவும், அனைத்து மலைவாழ் பழங்குடியினர் கிறித்துவர் களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நிலப்பிரச்சினையில் மோதல்களையும் கொண் டிருக்கிறார்கள். அந்த இடைவெளியில்தான் இதுவரை இந்திய அரசு தனது அதிகாரத்தை நிலைக்க வைத்துக் கொண் டிருக்கிறது.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுவாகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவர் களாகவும், தங்களுக்கென ஒரு தலைமறைவு அர
சாங்கத்தை நடத்திக் கொண் டிருப்பவர்களாகவும், ஆயுதம் தாங்கிய படை யணியையும், போது மான தளவாடங்களையும் வைத்திருப்பவர் களாகவும், 60 ஆண்டு போராட்ட வரலாற்று அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருக்கின்ற நாகா புரட்சியாளர்களுடன், இந்திய அரசு ஒரு மரியாதைக்குரிய தீர்வை எட்டுமா என்பதே எதிர் காலத்தை நோக்கி நிற்கும் கேள்வி.

Monday, February 15, 2010

எண்ணெய்க்கான போர், இன அழிப்பானதா?

இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 4வது ஈழப்போர், சென்ற ஆண்டு மே 3ம் வாரம் முடிவுற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்தப் போரில் 40,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஐ.நா.சபையே உறுதி செய்துள்ளது. போரை நடத்தியவர்கள் சிங்கள பேரினவாத அரசு சக்திகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவி செய்த 7 வெளிநாடுகளின் அரசுகளும் என்பதாகவும், பல நேரங்களில் பல சக்திகள் கூறியுள்ளன. இந்தியா, பாகிஸ் தான், சீனா ஆகிய நாட்டின் அரசுகள் தங்களுக்கு போரில் வெல்ல உதவி செய்ததாக, இலங்கை ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் கூறி யுள்ளனர். அதில் குறிப்பாக இந்தியாவும், சீனாவும் எதற்காக தமிழருக்கெதிரான இனவாதப் போரில், தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி, பதில் கிடைக்காமலேயே நின்று கொண்டிருக்கிறது.
மேற்கண்ட அண்டை நாடுகளின் அரசுகள், ஆயுதங்களை அளிப்பதும், ராணுவ ஆலோசனைகள் கொடுப்பதும், நேரடியாக களத்தில் இறங்குவதும், உளவுப் பணி மூலம் உதவுவதும் என அந்த இனவாதப் போரில் அங்கம் வகித் தார்கள். அதில் பாகிஸ்தான் தனது விமானிகளை அனுப்பி, அவர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் விமானங்களை, போர்ப் பகுதியில் இயக்கினர். சீன அரசு அதிகமான அளவில் ஆயுதங்களை, இலங்கை அரசுக்கு போர் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்திய அரசு தனது உளவு செயற்கைக் கோள்கள் மூலமும், தான் அனுப்பிய ரேடார்கள் மூலமும், போராளிகள் பற்றிய நடமாட்டச் செய்திகளை, போர் நடத்திய பேரினவாத சக்திகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இந்த அளவுக்கு நியாயமற்ற போர் என்ற உண்மை தெரிந்திருந்தும், எதற்காக பேரார்வத்துடன் அண்டை நாட்டு அர சாங்கங்கள், ஒரு இனவாதப் போரில் ஈடுபட்டார்கள்? இன அழிப்பு என்ற அளவுக்கு அந்தப் போர் இட்டுச் சென் றாலும், இந்த அண்டை நாட்டு அரசர் கள் ஏன் பின்வாங்கவில்லை? அந்த அளவுக்கு இந்த அண்டை நாட்டு அர சாங்கங்களுக்கு ஈழப்போரிலே என்ன ஈடுபாடு?
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக, இந்திய அரசு இந்த இன அழிப்புப் போரில் ஈடுபட்டது என்று சொல்வாருமுண்டு. ஆனால் வேறுசில கேள்விகள் எழுகின்றன. ராஜிவ் காந்தி பொறுப்பிலிருந்த போது, கொழும்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில், ஒரு சிங்கள சிப்பாய் அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்க முயற்சித்த சதி, அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கள ராணுவ வீரன் மீது, இந்திய அரசோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையோ, அல்லது சோனியா காந்தி குடும்பமோ எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்? அதேபோல ஒரு நிகழ்ச்சிக்காக, ஒரு நாட்டின் அரசு முழுவதும் ஈடுபட்டு, ஒரு இன அழிப்பை நடத்துவதற்கு துணியுமா? அப்படியானால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே? அது என்ன?
ஒவ்வொரு நாட்டின் அரசும், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஏதாவது ஒரு வகையில், பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதில் நல்ல வழி அல்லது கெட்ட வழி என்ற வேறுபாட்டிற்கே இடமில்லாமல், எல்லா அரசுகளும் நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டிற்குள் மக்கள் மத்தியில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக வெளி யிலிருந்து, ஏதாவது வகையில் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது. வளராத நாடுகள் அதை அன்னிய நாடுகளிலிருந்து கடனாகப் பெறுகின்றனர். வளர்ந்த நாடுகள் அடுத்த கட்டமாக, தங்களது சுரண்டலை நாடு தாண்டி நடத்துவதற்கு, தருணம் பார்த்து அலைகின்றனர். இதில் 2வது வகை சிந்தனை இந்திய அரசையும், சீன அரசையும் பீடித்துள் ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டு எண்ணைய் வளங்களை, கைப்பற்ற அனுமதிக்கின்ற இந்த நாடுகள், தங்கள் பங்குக்கு தங்களை விட சிறிய நாடுகளிடம் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு முயற்சி இலங்கைத் தீவில் உள்ள எண்ணெய் வளங்களின் மீது பாய்ச்சப்பட்டது.
புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையோ இந்திய அரசுக்கு மேலோங்கியிருக்க நியாயமில்லை. மாறாக இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடிய எண்ணெய் வளங்களின் மீது இந்திய அரசுக்கு ஒரு கண் உண்டு.
இலங்கையில் தமிழர்களின் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணமான மன்னாரிலும், கிழக்கு மாகாணமான திரிகோணமலையிலும், கடற்கரை ஓரத்தில் எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை இந்த அரசுகள் முகர்ந்து பார்த்து விட்டன. திரிகோணமலை துறைமுகப் பகுதியில், சீனகுடா என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை தேக்கி வைக்கலாம். இந்தியாவின் இந்திய ஆயில் கம்பெனி நிறுவனம், இந்த இடத்தில் தனது தலைமையகத்தை வைத்துள்ளது. அதில் தேக்கி வைக்கும் பெட்ரோலையும், டீசலையும், 200க்கு மேற்பட்ட பங்குகள் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வியாபாரம் செய்து வருகிறது. இதேபோல மன்னார் மாவட்டத்தில் எண்ணெய் வளம் அதிகம் கிடைக்கிறது. அங்கு கடற்கரையோரம் கடலுக்கு உள்ளே, 100 ஏக்கர் பகுதியை, இந்திய அரசு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக வாங்கி வைத்துள்ளது. ஓ.என்.ஜி.சி. என்ற எண்ணெய், இயற்கை வாயு கமிஷன், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கையான துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஒன்று. உயரமான மலைப்பகுதிகளை அருகிலேயே கொண்ட இந்த உட் துறைமுகம், போர் காலங்களிலும் கப்பல்களை உள்ளே ஒளித்து வைக்க வாய்ப்பான ஓர் இடம். அதனருகே உள்ள உவர் மலையில், இலங்கை ராணுவத் தளம் உள்ளது. அதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, கப்பல் படை அனுப்பப்படும். யாழ்ப்பாண கப்பல் சேவையும், ராணுவத்திற்கு வேண்டிய சேவைகளும், இந்த தளத்திலிருந்து கொண்டு செல்லப்படும். ஆகவே உட்துறைமுக வீதியில், மீன்வளம் அதிகமாக கிடைத் தாலும், அதி உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில், மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. துறைமுகம் அருகே யுள்ள மாவாலை என்ற இடத்தில் ஒரு சிமெண்ட் ஆலை இருக்கிறது. அதில் இப்போது சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் அதை அடுத்துள்ள புல்மோட்டை என்ற இடத்தில் இலுமினேட் என்ற உயர் ரக தாதுப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. அங்கே வெளிநாட்டுக் கப்பல்களை மண் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளது.
2003ம் ஆண்டு மே 12ம் நாள் வெளியான செய்திப்படி, இந்தியாவின் ஐ.ஓ.சி., சிலோன் பெட்ரோலியம் கார்ப் ரேஷனுக்கு சொந்தமான, திரிகோணமலை குளப்பண்ணையை குத்தகையாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டது. அதற்காக ஐ.ஓ.சி. ரூ.200 கோடியை கொடுத்தது. 2002 செப்டம்பர் முதல், 2003 ஆகஸ்ட் வரை 0.48 மில்லியன் டன் விநியோகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக இலங்கை ஐ.ஓ.சி.க்கு 10 ஆண்டுகளுக்கு வணிகத்திற்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிலவும் 35% வரியை குறைத்து 15% என்று பெறுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான கருவிகள் கொணர, சுங்கவரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக்க இந்திய அரசு, அந்த வட்டாரத்தில் அல்லது அருகே உள்ள பகுதிகளில், எந்தவொரு ஆயுதம் தாங்கிய சட்டவிரோத குழுக்களுடைய நடமாட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது.
அதேசமயம் சீன அரசு மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் வாயு கிணறுகளை தோண்ட திட்டமிட்டது. இந்தியாவின் நடமாட்டத்தை சமன் படுத்த, மகிந்தா அரசு சீனாவிற்கு அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தது. அந்த பகுதியை 8 பிரிவுகளாகப் பிரித்து, இந்தியாவிற்கு ஒன்றும், சீனாவிற்கு ஒன்றும், மீதி 6 பிரிவுகளை அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது என 2007ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் இலங்கை அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்குள் சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அந்த பகுதியில் இறங்கியது. இவ்வாறாக இந்த இரு அரசுகளும் தங்களுக்கான எண்ணெய் வயல்களை கைப்பற்ற, மகிந்தாவின் இனவாதப் போருக்கு உதவ வேண்டிய கட்டாயம் எழுந்தது. தந்திரமாக இந்த இரு அரசுகளுக்கும் எண்ணெய் வளத்தை தாரை வார்த்து, அவர்களை தான் நடத்திய இனவாதப் போரில் இலங்கை அரசு ஈடுபடுத்தியது. அதன் மூலம் தனது தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தியது. அதேசமயம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவையும் இலங்கை அரசு, எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க அழைத்தது. அதனால் தான் எண்ணெய்க்கான இந்தப் போர், ஒரு இன அழிப்பு வேலையை செய்து, சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி விட்டது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பேரரசு, தனது மேலாதிக்க மனோபாவத்துடனும், விரிவாக்க செயல் திட்டத்துடனும், தெற்காசியா எங்கும் அதிகாரம் செய்வதற்கான தன்மைகொண்டது என்பதனால், 2000தின் பத்தாண்டுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டவும், இந்த இனஅழிப்பு போர் அதற்கு உதவிகரமாக இருந்து விட்டது. என்பதையும் நாம் மறக்க முடியாது. தன்நாட்டிற்கு உள்ளேயே, தேசிய இனங்களின் உரிமையை அடக்கும் ஒரு அரசிடம், நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.

Sunday, February 14, 2010

காதலர் தினம் என்றால் என்ன?

இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். கையில் தாலியை வைத் துக்கொண்டு சிலர் இந்துத்துவாவாதிகள், யாராவது இளைஞர்களாக இருக்கும் ஆண்களும், பெண்களும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தாலே, அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அந்த தாலியைக் கட்டச்சொல்லலாம் என்று அலைகிறார்கள். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று அறிந்ததனால், காவல்துறை அதிகாரிகள் காதலர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வன்முறை சக்தி களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். மதவாத சக்திகள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட் டங்களும், போராட்டங்களும், மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாடு என்று இந்த தினத்தை வர்ணிக்கிறது. மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாட்டில் ஒரு அங்கமான, ஆங்கில நாட்காட்டி கூறும் தேதியைக் குறிப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் அறிவித்துக்கொள்கிறார்கள். மேற்கத்திய பண்பாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, பேண்ட், சட்டையை போட்டுக் கொண்டு, பல மதவாத சக்திகளும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட போராட் டங்களின் மூலம் அவர்கள் இந்தியாவின் நாட்டுப்பற்று உணர்வை வளர்க்க முடியும் என்றால், மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கும்.
இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.
காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;
அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.
குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.
உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.

Saturday, February 13, 2010

ஒரு ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாகிறது

அஸ்ஸாம் மாநிலத்தின் முழு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கும் உல்ஃபா என்ற ஒன்றுபட்ட அஸ்ஸாம் விடுதலை முன்னணி, ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தில் தனி
சுயாட்சி மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்ட, கரீபி ஆங்லாங் என்ற ஆதிவாசி பகுதியை, விடுதலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை, அங்குள்ள போராளிகள் அமைப்பு நடத்திக் கொண் டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளுடனும் மத்திய அரசு பிப்ரவரி 7ம் தேதியும், பிப்ரவரி 13ம் தேதியும் பேச்சு வார்த்தை நடத்த எடுத்த முயற்சிகள், வெற்றிகரமாக நடந்து வரு கின்றன. இரண்டு நாட்கள் முன்னால் கரீபி லாங்ரீ நோத் காசர் மலைகள் விடு தலை முன்னணி என்ற அமைப்பின் தலைவரான தீபு சங்கியா திமுங், தனது துப்பாக்கிகளை அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகாய் முன்னிலையில், கவுகாத்தியில் திபு என்ற இடத்தில் அடையாளமாக ஒப்படைத்து, தனது போராளி அமைப்பு ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து மாறிக் கொள்வதை அறிவித்தார். இந்த அமைப்புக்கு கே.எல்.என்.எல்.எஃப். என்று பெயர். இதற்கு முன்பே கருப்பு விதவை என்ற திமா ஹலம் தாவோ காவின் அமைப்பு இதே போல ஆயுதங்களுக்கு விடைகொடுத்து, அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது. மொத்தத்தில் 412 போரா ளிகள் இவ்வாறாக தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதில் 27 பெண் போராளிகளும் அடக்கம். அவர்கள் மொத்தம் 158 தாக்கும் துப்பாக்கிகளை அந்த விழாவில், அரசாங்கத் திடம் ஒப்படைத்தனர். அப்போது அஸ்ஸாம் முதல்வர், ஆயுதங்கள் பிரச்சனைகளை தீர்க்காது என்றும், இலக்கை அதன் மூலம் அடைய முடியாது என்றும், வழக்கமான அரசியல்வாதிகள் போல, வியாக்யானம் செய்தார்.
கரீபி பழங்குடியினரின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையில் எடுத்த கே.எல்.என்.எல்.எஃப். என்ற இந்த அமைப்பு, ஒன்று பட்ட மக்கள் ஜனநாயக தோழமை என்ற அமைப் பிலிருந்து வெளியே வந்த ஒரு கரீபி பழங்குடியினர் போராளி அமைப்பு. இவர்கள் தான் அஸ்ஸாம் மாநிலத்தில், வேலைக்கு வந்திறங்கிய இந்தி பேசும் மக்களைப் படுகொலை செய்தவர்கள். ஏற்கனவே 2002ம் ஆண்டு மே மாதம் யு.பி.டி.எஸ். என்று அழைக்கப்படும் ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக தோழமை அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது ஆயுதப் போராட்டப் பாதை யிலிருந்து விலகிக் கொண் டது. 2004ம் ஆண்டு மே மாதம் கே.எல்.என்.எல்.எஃப். உருவானது. இப்போது 6 ஆண்டுகள் கழித்து, இவர்களும் தங்களது ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் போராட்டத்திற்கு வந்துள் ளனர். இந்த அமைப்பினர் அவ்வப்போது கொடுத்து வந்த நகர்ந்து செல்லும் தாக்குதல்களால், அந்த வட்டாரத்தில் வெளிச் சக்திகளாகப் போய் இறங்கிய இந்திய ராணுவம், கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அதே போல உல்ஃபா அமைப்பும் எத்தனை தாக்குதல்களை சந்தித்தாலும், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் வேரூன்றிய நிலை யிலேயே இருக்கிறது. இந்த இரு போராளி அமைப்புகளுடன் மத்திய அரசை பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்தம் செய்த பணி, குறிப்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாயால் முன் னெடுக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 1978ம் ஆண்டு வரை, வங்காளிகளின் ஆதிக்கம் இருந்து வந்தது. கல்விச் சாலைகளிலும், அரசாங்க பணிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்காளிகளே அதிகமாக ஆக்கிரமிப்பு செய்திருந் தார்கள். அஸ்ஸாம் மாநிலத் தினுடைய மக்கள் தங்க ளுக்குரிய பணியிடங்கள் கிடைக்காமல், தத்தளித் தார்கள். அதுதான் 197879 ஆண்டுகளில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் மக்கள் நடத்திய எழுச் சிப் போராட்டமாக எழுந்தது. அதையொட்டி வங்காளிகள் விரட்டப் பட, அஸ்ஸாம் மாநிலத்த வர்கள் முழுமையாக ஈடுபடும் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங் களும் வலுப்பெற்றன. அதுவே சில ஆண்டுகள் கழித்து ஏ.ஜி.பி. என்று அழைக்கப்படும், அஸ்ஸாம் கனபரிஷத் ஆட்சிக்கு வர உதவியது. ஆனாலும் கூட அவர் கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மத்திய ஆளும் வர்க்கத் தின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள் என்ற குற்றச்
சாட்டிற்கு உள்ளானார் கள். அஸ்ஸாம் மாநி லத்தில் பல்வேறு விதமான பழங் குடிகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாவட்டங்களில் வசித்து வரும், கரீபி ஆங்லாங் பழங்குடியினர், போர் குணமிக்க அறுதியிடும் தன்மை கொண்ட வர்கள்.
அவர்கள் தங்களு டைய சுயாட்சி உரிமை களை பெறுவதற்கு, ஏ.எஸ்.டி.சி. என்றழைக் கப்படக் கூடிய, சுயாட்சி மாநில கோரிக்கை குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவினர் நக்சல் பாரி புரட்சியாளர்களால் வழிகாட்டப் பட்டார்கள். அந்த ஏ.எஸ்.டி.சி. சார்பாக நாடாளுமன்றத்திற்கு, காங்கிரஸ் கட்சியையும், ஏ.ஜி.பி. கட்சியையும் எதிர்த்து நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே போல கரீபி ஆங்லாங் பகுதியைச் சேர்ந்த 4 சட்டமன்றத் தொகு திகளுக்கும், ஏ.எஸ்.டி.சி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் முறையின் மூல மாகவும், ஜனநாயக போராட்ட இயக்கங்களின் மூலமாகவும் போராடிப் பார்த்த, கரிபீ ஆங்லாங் பழங்குடி மக்கள் தங்களது விடுதலை லட்சியங்களை அடையவில்லை என உணர்ந்தார்கள். அதன் பிறகு அங்கே உருவானது தான் யு.பி.டி.எஸ். என்ற அமைப்பு. அதுவும் தனது ஆயுதப்போராட்டப் பாதையைக் கைவிட்டப் பிறகு உருவானதுதான் கே.எல்.என். எல்.எஃப். என்ற அமைப்பு. அதுவும் கூட இப்போது தனது ஆயுதப் போராட்டப் பாதையை கைவிட்டுள் ளது.
மேற்கண்ட நிகழ்வு களிலிருந்து நமக்குப் புரிவதெல்லாம், ஆயுதப் போராட்டப் பாதையும், அரசியல் போராட்டப் பாதையும், மாறி மாறி அந்தப் பகுதியில் எடுக்கப் பட்டுள்ளது என்பததான். தமிழ்நாடு தனிநாடு என்ற கோரிக்கையை கைவிடும் போது அண்ணா கூறிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது. தனிநாடு கோரிக்கை இப்போது கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பது தான் அன்று அண்ணா குறிப்பிட்ட செய்தி. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் இயக்கங்கள் வளர்ந்தன. தேர்தல் அரசியலில் நுழைந்து விட்ட அந்த கட்சி சார்பற்ற மக்கள் இயக்கம், ஒரு அரசியல் கட்சியாக மாறியது. அதன் பிறகு மக்களது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. அதுவே அஸ்ஸாம் முழுமைக்கான விடுதலையை, ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவ தற்கான அமைப்பை தோற்றுவித்தது. அந்த அமைப்பும் கூட பல்வேறு நிர்ப்பந்த வேலைகளை செய்தாலும், தொடர்ந்து வெற்றி பெற முடிய வில்லை. அதற்குள் அஸ் ஸாம் மாநிலத்திற்குள் வாழுகின்ற பல்வேறு பழங்குடிகள், தங்களது சுயாட்சிக்கான போராட் டங்களை உருவாக் கினார்கள். அதுவே கரீபி ஆங்லாங் பகுதியில், ஜனநாயக இயக்கமாக வளர்ந்து, அதன் மூலம் மாவட்ட சுயாட்சியைப் பெற்றார்கள். அதன் மூலமும் கரீபி பழங்குடி மக்களுக்கான உரிமைகள் கிடைக்காததனால், புதிய அமைப்புகள் தோன்றி, ஆயுதப்போராட்டங் களை நடத்தினார்கள். இப்போது அவர்களும் தங்களது போராட்ட முறையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள் ளது.
இதில் அடிப்படையாகப் புரிய வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது பழங்குடி மக்களும், சிறிய தேசிய இனங்களும் தங்களது சுயாட்சியையும், சுய அதிகாரத்தையும், உரிமை களையும் நிலவுகின்ற அரசாட்சி அமைப்புக்குள் பெற முடியாமல், திக்கு முக்காடிப் போகிறார்கள். அதன் மூலம் மறுக் கப்பட முடியாத தங்களது நீதியான கோரிக்கை களுக்காக, பல்வேறு போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு, உரிமைப் போராட்டத்தை தொடர்கிறார்கள். அதில் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறுவதும், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாக மாறு வதும் இடையில் நடக்கக் கூடிய வழிமுறையே தவிர, போராட்ட இலக்கை கைவிட்டதாக பொரு ளல்ல. இதுவே நாம் இந்தியாவிலும் கற்றுக் கொண்டிருக்கும் பாடம்.

Friday, February 12, 2010

தென்னிலங்கையில் ஆயுதப் போர் வெடிக்குமா?

இலங்கைத் தீவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தல், புதிய அணி
சேர்க்கைகளை உருவாக் கிய அதே நேரத்தில், புதிய பிளவுகளையும் உரு வாக்கியுள்ளது. அதிபர் ஆட்சி அல்லது நாடாளு மன்ற ஆட்சி என்ற தளத்தில் அந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதிபராக முதலில் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் போது, அவர் சந்திரிகாவை ஓரங்கட்டினாலும், ஜனத விமுக்தி பெரமுனாவை தனது கூட்டணிக்கட்சியாக சேர்த்துக் கொண்டார். அப்போது ஜே.வி.பி.க்கு இலங்கை அரசாட்சியை ஒற்றையாட்சி என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அழுத்தமாக இருந்தது. அதை மகிந்தா ஏற்றுக் கொண்டார். அதையே அவர் தனது தேர்தல் வியூகத்திற்கும் பயன் படுத்தினார். மகிந்தாவை எதிர்த்து ஐ.தே.க. தலை வர் ரணில் விக்ரம சிங்கே அப்போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். ரணில் அதிகமாக தமிழர் வாக்குகளை எதிர்பார்த்து அந்த தேர்தலில் ஈடுபட் டார். அப்போது வன்னிப் பகுதியில் தமிழ் அர
சாங்கத்தை நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு வேறு பட்டு சிந்தித்தது. புலிகள் அமைப் பிலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணாவையும், கருணாவுடன் 5,000 போராளிகளையும் பிரித்து, புலிகள் அமைப்பை
உடைத்தது ரணில் விக்கிரம சிங்கே தான் என்ற கருத்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தமிழ் ஈழ ஆர்வலர்களின் விருப்பம், தேர்தலில் ரணிலுக்கு சாத கமாக இல்லை. போரை நடத்திக் கொண்டிருந்த மகிந்தாவும், ஒற்றையாட்சி அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு பேருக்குமே வாக் களிக்க முடியாது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அதிபர் தேர்தலைப் புறக் கணித்தார்கள். அதன் காரணமாகவே மகிந்தா வெற்றி பெற்றார். மகிந்தா வின் சர்வாதிகார ஆட்சியை பார்த்தவர்கள், தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும், அந்த தவறினால் தான் மகிந்தா வெற்றி பெற்றார் என்றும், அந்த தவறை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இப்போது 2வது முறை யாக அதிபர் தேர்தலில் மகிந்தா நின்றார். இந்த முறை அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத் தினார்கள். மகிந்தாவை சென்ற அதிபர் தேர்தலில் ஆதரித்து வேலை செய்த ஜே.வி.பி., இந்த முறை மகிந்தாவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித் தது. இப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்றம் தென் னிலங்கையில் ஏற்பட்டது என்றால், வடக்கிலும், கிழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள், பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதனாலேயே தமிழர்கள் வாழும் வடக்கிலும், கிழக்கி லும், கொழும்பிலும், மலையகத்திலும், பொன்சேகாவிற்கே வாக்குகள் விழுந்தன. இதுவும் கூட ஒரு அரசியல் அணி சேர்க்கை என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்போது தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பொன்சேகாவை கைதா அல்லது கடத்தலா என்றே தெரியாத அளவுக்கு, ராணுவ காவல் துறை மூலம் மகிந்தா செயல் பட்டுள்ளார். அதுவே தென்னிலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கு ஆதர வாக தெருவில் இறங்கி போராடியவர் கள் மீது, மகிந்தா ஆதரவாளர் கள் தாக்கியிருக் கிறார்கள். இத்தகைய போராட்டங் களும், தாக்குதல்களும் தொடரும் என்று தெரி கிறது.
தமிழர்கள் மத்தியில் உலகம் எங்கிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டி ருக்கிறது. ராஜபக்சே அர சாங்கத்தால், கைது செய் யப்பட்ட பொன்சேகா ஏற்கனவே தமிழருக்கு எதிரான போரில், மோசமாக நடந்து கொண்டதற்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ப தாக ஒரு கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து, அதிபர் தேர்தல் நேரத்திலேயே வெளிவந்த சிந்தனைப் போக்குதான். அதாவது ராஜபக்சேயும், பொன்சேகாவும் போட்டியிடுகின்ற ஒரு தேர்தலில், இருவரை யுமே தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதுதான் அந்த கருத்து. இருவரும் சேர்ந்து தான் ஒரு இன அழிப்புப் போரை, தமிழர்கள் மீது நடத்தினார்கள். அந்தப் போரை நடத்துவதற்கான அனைத்து திட்டங் களையும் உருவாக்கி, அந்நிய நாட்டு உதவிகளை யும் வாங்கிக் கொண்டு, அரசியல் முடிவுகளை செய்தது மகிந்த ராஜபக் சேயின் கும்பல் என் பதால், தமிழர்கள் வாக்கு மகிந்தாவிற்கு ஆதரவாக போடப்பட முடியாது. அதே சமயம் மகிந்தாவை எதிர்க்கிறேன் என்ற பெய ரில் நிற்கின்ற பொன்சேகா, நேரடியாக வடக்கு மாகாணத்தில் சிங்களப் படைக்கு தலைமை எடுத்து நின்று, தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதனால் அவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அந்தக் கருத்து. மேற்கண்ட கருத்துக்கு ஏதுவாக சிவாஜிலிங்கமும், டாக்டர் விக்ரமபாகு கருணா ரத்னேயும் சேர்ந்து நின்று போட்டியிட்டார்கள். அவர்களது பிரச்சாரம் முக்கிய இரு வேட்பாளர் களான, ராஜபக்சேயையும், பொன்சேகாவையும் போர் வெறியர்களாக சித்தரித்தது.
பொன்சேகாவை பொருத்தவரை அவர் எந்த விதத்திலும், தமிழர்களுக்கு சாதகமாக போர் நேரத்தில் சிந்தித்தது இல்லை. அப்பாவி தமிழர்கள் படு கொலையானதற்கும், தமிழ் போராளிகள் மீது ரசாயன குண்டுகளைப் போட்டு, படுகொலை செய்வதற்கும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானதற்கும், சிங்கள ராணுவம்தான் பொறுப்பு எனும் போது, அந்த ராணுவத்திற்கு தலைமை தாங்கிய
சரத் பொன்சேகாதான் நேரடியான பொறுப்பு என்ற அழுத்தமான கருத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.
அதே சமயம் தமிழின அழிப்புப் போர் நடை பெறும் நேரத்தில், ராணு வத் தளபதி சரத்பொன்சேகா, கூறிய வார்த்தை உலக மெங்கிலும் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்ததை, இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு, சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற வர்கள் அங்கே வாழலாம்; ஆனால் உரிமை கேட்கக்கூடாது என்றும், பொன்சேகா கூறியதை இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அப்படி கூறிய பொன்சேகாவிற்கு, தமிழர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணமாக அமைந்ததும், அதிபர் தேர்தல் நேரத்தில் பொன்சேகா உதிர்த்த உறுதிமொழிகள்தான். அந்த உறுதிமொழிகளில், தமிழர் பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக அறி வித்திருப்பதை நீக்குவேன் என்றும், ராணுவத்தை அந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெறுவேன் என்றும், முள்வேலி முகாம்களை முழுமையாக திறந்து விடுவேன் என்றும், கைது செய்யப்பட்டவர்களை போராளிகள் உட்பட விடுதலை செய்வேன் என்றும், கடத்தப் பட்டவர்களில் மரண மடைந்தவர்கள் குடும்பத் திற்கு நட்டஈடு தருவேன் என்றும், கூறிய வாக்குறுதி கள்தான் தமிழர்களை ஈர்த்தது. போர் நேரத்தில் கண்டபடி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய, பொன்சேகா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசியதுதான் அதி சய நிகழ்வாக நடந்தது.
இப்போது தென்னிலங் கையில் பொன்சேகாவின் பெயரால் கொந்தளிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த கொந்தளிப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. ராஜபக்சே குடும்பத்தினர் பொருள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்று தென்னிலங்கையில் உள்ள ஏழை சிங்கள மக்கள் எண்ணிப் பொரு முகிறார்கள். ஜனநாயக ரீதியாக செயல்பாடுகள் இல்லை என்ற தாக்கம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அவர்களை துன்புறுத்துகிறது. ஜே.வி.பி. இப்போது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்களுடைய
செல்வாக்கு பகுதிகளில், இளைஞர்களும், மக்களும் பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு, தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் அரசு ஊழியர்களை யும், ராணுவத் தினரையும் நோக்கி கலகம் செய்யும்படி அறைகூவல் விடுகின்றனர். தவறான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
இன்னொரு ஆயுதக் கிளர்ச்சி தென்னிலங் கையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜே.வி.பி. நடத்திய ஆயுத கிளர்ச்சி, 1971ம் ஆண்டி லும், 80களிலும் தென்னிலங் கையை நிலைகுலைய வைத்தது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தால் அநியாயமாகக் கொல் லப்பட்டனர். அத்தகைய எழுச்சி மீண்டும் எழலாம் என்ற அறிகுறிகள் தென் படுகின்றன. அதனால்தான் ரஷ்யாவிடம் சென்று 300 மில்லியன் டாலர் பெறு மான ஆயுத உதவியை ராஜபக்சே பெற்றுள்ளார். சிங்கள தேசத்தின் நாட்டுப்பற்றாளர்கள் இந்த முறை எழுவார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உழுவார்கள். இலங்கைத் தீவிலும் ஒரு ஜனநாயக வெளிச்சம் பிறக்க உதவுவார்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்பு சில ஜன நாயக உணர்வாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.