ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் ஒரு பிரபலமான நிறுவனம். இந்த ஆலை தாமிர உருக்காலை திட்டத்தை செயல்படுத்துகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த ஆலை, முத்துநகரில் தொடங்கப்பட்டு பல்வேறு புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி, அவ்வப்போது மூடப்பட்டு, பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, உயிர்பலிகள், மூச்சுத் திணறல்கள், காற்று மாசுப்படுத்தல், நீர் வளத்தைக் கெடுத்தல், மண் வளத்தை சேதப்படுத்தல் போன்றவற்றில், புகழ் வாய்ந்த பெயரை எடுத்துள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்களால் அரவணைக்கப்பட்டும், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டும், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு பயன்படும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகா ஆகியவற்றின் நற்சான்றிதழ்கள், இந்த ஆலையின் தொடர்ந்த இயங்குதலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
இந்த தாமர உருக்காலைத் திட்டத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுவினர், உலக அளவில் பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் வந்திருக்கின்ற செய்திப்படி, இங்கிலாந்தில் இருக்கின்ற ஜோசப் ரவுண்ட்ரீ தர்ம அறக்கட்டளை என்ற நிறுவனம், தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 22 லட்சம் டாலர் பெறுமான பங்குகளை, சில நாட்கள் முன்பு விற்று விடுவது என முடிவு செய்து விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், சுற்றுப்புறச்சூழலை வேதாந்தா குழு, கெடுத்து வருகிறது என்பதுதான். உதாரணமாக ஒரிசா மாநிலத்தில், கோந்த் ஆதிவாசிகள் வசிக்கின்ற நியாம்கிரி மலைகளை, சுரங்கம் தோண்டுவது என்ற பெயரில் வேதாந்தா குழுமம் அழித்து வருகிறது என்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற நியாம்கிரி மலைகளில், பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற கோந்த் பழங்குடி மக்கள், அந்த மலையை தங்களது புனிதத்தலமாக நினைக்கிறார்கள். அந்த மலையை ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தாதுப்பொருட்களை கொள்ளை யடிப்பதற்காக, சுரங்கம் தோண்டுவதற்கான உரிமத்தை ஏதோ ஒரு வகையில் அரசிடம் பெற்றுக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு, அவர்களை நிர்பந்தமாக இடம் பெயர வைப்பதும், மலை வளங்களை அழிப்பதும் என்று சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்த முயலும் போது, அந்த ஆதிவாசிகளின் பெரும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.
கோந்த் பழங்குடி மக்கள், அந்த நியாம்கிரி மலைகளைச் சார்ந்துதான், தங்களது உணவுகளையும் தேடிக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி அந்த ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரமே, நியாம்கிரி மலைகள்தான் என்ற அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். இயற்கையைச் சார்ந்து, மலைகளையும், நதிகளையும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டு, பல நூறு ஆண்டுகளாக நியாம்கிரி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அந்த ஆதிவாசி மக்களின், பண்பாட்டு அடையாளங்களும், அந்த மலைகளைச் சார்ந்தே உள்ளது. இது மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து வரும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு புரிய நியாயமில்லை. அதுமட்டுமின்றி சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து வரும், மாநகர வளர்ப்பான பெரிய அதிகாரிகள் தாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகங்களில் பணியாற்றினாலும், இயற்கையான ஆதிவாசிகளின் பண்பாட்டு அடையாளங்களையோ, அவற்றை செயற்கைத் திட்டங்களால் அழிப்பதையோ, உணரப் போவதில்லை. அதனால்தான் அத்தகைய அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் அனுமதியின் பேரில், இப்படிப்பட்ட மாசுபடுத்தும் சுரங்கங்களும், நிறுவனங்களும் உள்ளே நுழைகின்றன.
இங்கிலாந்தில் உள்ள ஜோசப் ரவுண்ட்ரீ நிறுவனம், சில நாட்கள் முன்பு தனது வேதாந்தா பங்குகளை விற்றது போலவே, சென்ற வாரம் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இங்கிலாந்தின் திருச்சபை என்ற அமைப்பு, தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 21 லட்சம் டாலர் பங்குகளை, சுற்றுச்சூழலை கெடுக்கின்ற வேதாந்தா நிறுவனத்திலிருந்து, நீதிக்கொள்கையின் அடிப்படையில் விற்றுவிட முடிவு செய்தது. இதே போல 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 30,000 டாலருக்கான தங்கள் பங்குகளை, நார்வே நாட்டு அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதி அமைப்பு, வேதாந்தா குழுமத்திலிருந்து விற்றுவிட்டது. 2009ம் ஆண்டில் 23 லட்சம் டாலர்கள் பெருமான பங்குகளை, வேதாந்தா குழுமத்திலிருந்து மார்ட்டின் கேரி என்ற நிறுவனம் தான் போட்ட மூலதனத்தை, விற்றுவிட்டது. இப்படியாக ஒவ்வொரு பங்குதாரரும், மேற்கண்ட பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மோசமான, மக்கள் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட நேரத்திலேயே, தங்கள் பங்குகளை விற்றுவிடுகிறார்கள் என்ற செய்தி இத்தகைய மாசுபடுத்தும் நிறுவனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மனித உரிமை மீறல்களை செய்கின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, புதிய முறையில் இதுபோன்ற எதிர்ப்புகள் காட்டப்படுவது, அந்த நிறுவனங்களின் அடிப்படையாக இருக்கின்ற பொருளாதார அடித்தளத்தையே நிலைகுலைய வைக்கும் செயல். ஆனால் மேற்கண்ட வேதாந்தா நிறுவனமோ, தான் மக்களுக்காக சேவை செய்வதாக பரப்புரை செய்து வருகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தாங்கள் மேலாண்மை செய்து வருவதாகவும், ஒரு வலுவான உள்கட்டுப்பாடு இயங்கி வருவதாகவும் தனது கார்ப்பரேட் நிர்வாக ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. அது தவிர தங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு என்ற பெயரில், ஒரு தொகையை ஒதுக்கி அதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் என்ற தன்மையில், தாங்கள் கெடுத்துவரும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் மக்களிடையே, காசுகளை இறைத்து செயல்பட்டு வருவதை பெருமையாக தங்கள் ஆண்டறிக்கையில் கூறுகிறார்கள்.
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, உலக அளவிலான பெரும் தொழிற்சாலை விபத்தாக, போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயு கசிவு அறியப்படுகிறது. அதற்கு பிறகு இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகள், பல்வேறு சட்டங்களின் மூலமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க போன்ற வெளிநாட்டவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அதே சமயம் அத்தகைய ஒழுங்கு படுத்தல் எதுவுமே நடைமுறையில் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உண்மை. இந்தியாவின் மலைகளிலும், காடுகளிலும் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் மற்றும் தலித் மக்களின் பாரம்பரிய உரிமைகள், மண்ணுரிமை, வாழ்வுரிமை, பண்பாட்டு உரிமை ஆகியவற்றை தகர்த்தெறியும் நடைமுறைகளை, சட்ட அங்கீகாரத்தையும், அரசாங்க ஒப்புதலையும் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, உலக அரங்கில் தெரியத் தொடங்கியுள்ளது. அவ்வாறு சுரங்கம் தோண்டுதல் என்ற தொழிலில், வேதாந்தாவின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றைய காலத்தில், புதியதொரு செயல் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள். ரோகர் மூடி என்ற ஒரு சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான இங்கிலாந்து நாட்டுக்காரர், வேதாந்தா குழுமத்தில் சிறியதொரு பங்குதாரராக சேர்ந்து கொண்டு, லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த நிறுவனம் நடத்தி வரும் சுற்றுச்சூழல் கேடுகளை பட்டியல் போட்டு அம்பலப்படுத்தினார்.
இதுபோன்ற அம்பலப்படுத்தல்கள், உலக அரங்கில் சுற்றுச்சூழல்வாதிகளால் செய்யப்படும் போது, வேதாந்தா போன்ற சூழலைக் கெடுக்கும் கார்ப்பரேட்டுகள், பொதுவான பங்குதாரர்கள் மத்தியில் அசிங்கப்பட்டு தனிமைப்படுகின்றன. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற மூதாதையர் பழமொழி போல, நமது ஊரில் சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை, சற்று காலம் சென்று பங்குதாரர்கள் மத்தியில் பகிரங்கமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணம் இனி மனித உரிமை ஆர்வலர்களால் பயன்படுத்தப் படமுடியும். ஒவ்வொரு தவறுக்கும், கார்ப்பரேட்டுகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
Saturday, February 20, 2010
Friday, February 19, 2010
விடுதலைத் தாகம் அழியக்கூடியதா?
இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உலகமெங்கிலும் ஒரு தீவிரமான விவாதம் நடந்து வருகிறது. இனி மேல் ஈழத்திலும், இலங்கையிலும் என்ன நடக்கும் என்பதே அந்த விவாதத்தின் சாரமாகும். இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் மட்டு மின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும், இந்திய வம்
சாவழி தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதி யிலும், நேரடியாக இத்தகைய விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. யார் யார் எந்தப் பக்கம் என்ற
சர்ச்சை இருந்தது. தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தன. தமிழர் பகுதி களில் அதிக வாக்குகள் பொன் சேகாவிற்கே போய்ச் சேர்ந்தன. இப் போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் யார் யார் எந்தப்பக்கம் என்று மீண்டும் விவாதம் வந்தது. எந்தப்பக்கமும் இல்லாமல், தனித்து நிற்கின்ற அணிகளும் கிளம்பியுள்ளன. இது நிலவும் அரசியல் அமைப் பிற்குள், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மா னிக்கின்ற முயற்சிகள். ஆனால் உலக அரங்கில், குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் வேறொரு விவாதம் வேர் கொண்டு வருகிறது. அதுதான் நான்காவது ஈழப்போரில், விடு தலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டு விட்டனரா என்ற விவாதம்.
இந்த விவாதத்தில் குதித்துள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் அட்டேல் பார்க்கர் தனது ஆங்கில புத்த கத்தில் ஒரு புதிய விளக் கத்தை கூறுகிறார். இலங்கையில் இந்த அமெரிக்கப் பேராசிரியர் 20012002 ஆண்டுகளில் தங்கியிருந்து, அனுப வங்களைப் பெற்றுள் ளார். இலங்கை அர
சாங்கம் முற்றுமுழுதாக புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக கூறிக் கொண்டாலும், இன்ன மும் கூட அவர்களுக்கு அதில் கலக்கம் இருக் கிறது என்கிறார் அவர். ஈழத் தமிழர்களுக்கு அடிப் படை பிரச்சினைகளாக இருக்கும், நாட்டு வளங் களை சமமாக பங்கீடு செய்யாமை, கல்வி, வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல் லாமை போன்றவை மீண்டும் புலிகளை உருவாக்கியே ஆகும் என்று இந்த பேராசிரியர் வாதம் செய்கிறார்.
போராளிகள் அமைப் பின் உயர்மட்ட தலை வர்கள் கொல்லப்பட்ட தாகவும், அதுவே அவ் வியக்கத்தின் முடிவாக கருதப்படக் கூடாது என்றும் அவர் வாதம் செய்கிறார். போர் முடிந்த பிற்பாடும், அதே வட்டாரத்தில் அதிகள வில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டு கிறார். சந்தேகிக்கப்படு பவர்களை, இன்னமும் ராணுவம் முகாம்களில் அடைத்து வைக்கிறது என்கிறார் அவர். உலகம் விடுதலைப்புலிகள் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது இந்தப் பேராசிரியரின் வாதம். அந்த இயக்கம் கடைபிடித்த ரகசியத் தன்மை அதற்கு காரண மாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். இங்கிலாந்து ஊடகங்கள், இது பற்றிய விவரங்களை அமெரிக்க ஊடகங்களை விட அதிகமாக தெரிந்திருக் கின்றன என்றும் கூறியுள் ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப் பட்ட இயக்கம் என்கிறார் அட்டேல் பார்க்கர். பெரும் பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் லட்சியத்தையே வரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் அடிப் படையில் அஹிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்ப தையும் குறிப்பிடுகிறார். இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்ட பௌத் தம் வேறுபோல இருக் கிறது என்பது அவரது கருத்து. மகாவம்சம் என்ற காப்பியத்தின்படி, இலங் கைக்கு புத்தர் வந்தார் என்று நம்பப்படுகிறது என்றார். அதனால் புத்த பிக்குகளும் அதை காப்பாற்ற, சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பார்வை அமெரிக்க பேராசிரியர் அட்டேல் பார்க்கருக்கு மட்டும் இருக்கிறதா? அண்டை நாடான இந்தியா வின் ஆட்சியாளர்களும், அறிவுசார் பிரிவினரும் இதே உண்மைகளை அறியாமல் இருக்கிறார் களா? உலக நாடுகளில் பரந்து கிடக்கும் தமிழ் மக்கள் மத்தியில், <<ஈழத் தமிழர் போர்முறை தெளி வுடன் புரியப்பட்டுள் ளதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியை, உலகம் தழுவிய தமிழர்கள் எப்படி புரிந்து கொண்டுள் ளார்கள்?
மேற்கண்ட கேள்விக ளுக்கெல்லாம் விடை தேட வேண்டும் என்றால், நடந்து முடிந்த வன்னிப் போரின் ஒவ்வொரு கட்டத்தையும், அசை போட் டுப் பார்க்க வேண்டும். அதிலி ருந்து கிடைக்கின்ற படிப்பினைகள், பல் வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்கும். உணர்ச்சி கரமான எல்லைகளுக்கு செல்வதிலிருந்து, தமிழர் களை சிந்திக்க வைக்கும். எதிர்கால நடவடிக்கைகளுக்கு திட்டமிட, இந்த தேசிய இனத்திற்கு திசைவழிகாட்டும். போர் விதிகள் பற்றிய அறிவையும் கூட கற்றுக் கொடுக்கும். வரலாற்றில் எடுத்து வைக்க வேண்டிய படிக்கட்டுகளை, வரி சைப்படுத்திக்காட்டும்.
ஒரு கட்டத்தில் புலி களின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டுள் ளன. அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் உணரப்பட்ட, தேசிய இன உரிமைக்கான குரல் ஈழத்தில், அறவழிப் போராக தொடங்கியது. அது நாடாளுமன்ற பாதை யையும் பயன்படுத்த தவறவில்லை. வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள், சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகவே அளிக் கப்பட்டன. அத்தகைய பாதைகளால் இனவாதத் தையும், இன ஒடுக் கலையும், இனத்தாக்கு தலையும் நிறுத்தமுடிய வில்லை என்பதனால், தமிழ் இளைஞர்களின் பார்வை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியது. ஆயுதப் போராட்டம், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அறவழி அரசியல் போராட்டத்தை விட, உயர்ந்தது என்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒரு திட்டத்திற் கான முயற்சி தொடங் கப் பட்டுள்ளது. அது உலகம் தழுவிய அளவிலான அரசியல் போராட்டம் என்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கும், நடக்கயிருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் சரியான முறையில், விளங்கிக் கொள்ளப்படாமல் இருக் கிறது. வன்னிப்போரில் தோற்றதனால், தமிழர்கள் அரசியல் போராட்டம் என்பதாக தங்களது இயலாமையைக் காட் டுகிறார்களா என்ற கேள்வியும், சிலரை செரிக்க விடாமல் செய் கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், ஆயுதப் போரான வன்னிப் போரின் தொடர்ச்சி தான் உலகம் எங்கும் நடத்தப் பட இருக்கும் அரசியல் போர். இத்தகைய அரசியல் போராட்டம், எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்திற்கு குறைந் தது அல்ல.
இது எப்படி அதன் தொடர்ச்சியாக இருக்க முடியும் என்ற அப்பா வித்தனமான கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆயுதப் போரை நடத்திக் கொண் டிருந்த, தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் வே.பிரபா கரனும், எத்தகைய அனுபவங்களையும் மற்றும் படிப்பினை களையும் அதிலிருந்து கற்றார்கள் என்பது புரியப்படவேண்டும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும், முப்படைகளையும் உருவாக்கி, தங்களுடைய விடுதலைப் பகுதியில், புரட்சிகர அரசாங்கத்தையும் நிறுவி, போரில் ஈடுபட்ட வரலாற்றை, ஈழப் போராளிகள் நடத்திக் காட்டியது போல செய்து காட்டவில்லை. அப்படிப்பட்ட புலிகள் இயக்கம், 7 நாடுகளின் ஒத்துழைப்புடன், அரசப்படை நடத்திய போரை எதிர்கொண்டது. அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியாக உணர்ந்து கொண்டது. அதனாலேயே கிழக்கு மாகாணங்களிலிருந்து, புலிப்படையை அதன் தலைவர் திரும்பப் பெற் றார். வடக்கு மாகாணத்தில் கூட, கிளிநொச்சிக்குள் தமிழர் படைகளை உள்ளிழுத்துக் கொண் டார். அங்கும் தாக்குதல் தொடங்கிய போது, முல்லைத் தீவிற்கு பின் வாங்க வைத்தார். முல்லைத் தீவு நகருக்குள் சிங்களப் படை நுழைந் தவுடன், மக்கள் திரளுடன் புலிப்படை புதுக் குடியி ருப்புக்கு நகர்ந்தது. அங்கும் எதிரிப்படை இறங்கியவுடன், முள்ளி வாய்க்கால், ரெட்டை வாய்க்கால் பகுதிக்கு விடுதலைப் படை, தன்னை பின்னிழுத்துக் கொண்டது. இவை யெல்லாம் போர் விதிக ளின்படி, தற்காப்புப் போர் உத்திகளாகப் புரி யப்படவேண்டும்.
ஒவ்வொரு அங்கு லமும் தற்காப்புப் போரில் ஈடுபடுத்தப்பட்ட புலிப்படை, உலகத்திற்கு ஒரு செய்தியை உரக்கக் கூவியது. அதுதான் அரசியல் போராட்டமாக, புலம் பெயர் தமிழர்கள் இந்த விடுதலைப் போராட் டத்தை, முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற செய்தி. அதை உணர்ந்து தான் விடுதலைப் படை யின் தலைமையின் முழு வழிகாட்டலில் தான், பெற்ற படிப்பினைகளின் தொடர்ச்சியில் தான், இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. இது ஆயுதப் போராட்டத் திலிருந்து, அரசியல் போராட்டம் என்ற பரி ணாம வளர்ச்சிக்கு வந்தி ருக்கும் ஒரு இயங் கியல் விதி. அதனால் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாகம், அழியக்கூடியதல்ல.
சாவழி தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதி யிலும், நேரடியாக இத்தகைய விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. யார் யார் எந்தப் பக்கம் என்ற
சர்ச்சை இருந்தது. தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தன. தமிழர் பகுதி களில் அதிக வாக்குகள் பொன் சேகாவிற்கே போய்ச் சேர்ந்தன. இப் போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் யார் யார் எந்தப்பக்கம் என்று மீண்டும் விவாதம் வந்தது. எந்தப்பக்கமும் இல்லாமல், தனித்து நிற்கின்ற அணிகளும் கிளம்பியுள்ளன. இது நிலவும் அரசியல் அமைப் பிற்குள், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மா னிக்கின்ற முயற்சிகள். ஆனால் உலக அரங்கில், குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் வேறொரு விவாதம் வேர் கொண்டு வருகிறது. அதுதான் நான்காவது ஈழப்போரில், விடு தலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டு விட்டனரா என்ற விவாதம்.
இந்த விவாதத்தில் குதித்துள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் அட்டேல் பார்க்கர் தனது ஆங்கில புத்த கத்தில் ஒரு புதிய விளக் கத்தை கூறுகிறார். இலங்கையில் இந்த அமெரிக்கப் பேராசிரியர் 20012002 ஆண்டுகளில் தங்கியிருந்து, அனுப வங்களைப் பெற்றுள் ளார். இலங்கை அர
சாங்கம் முற்றுமுழுதாக புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக கூறிக் கொண்டாலும், இன்ன மும் கூட அவர்களுக்கு அதில் கலக்கம் இருக் கிறது என்கிறார் அவர். ஈழத் தமிழர்களுக்கு அடிப் படை பிரச்சினைகளாக இருக்கும், நாட்டு வளங் களை சமமாக பங்கீடு செய்யாமை, கல்வி, வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல் லாமை போன்றவை மீண்டும் புலிகளை உருவாக்கியே ஆகும் என்று இந்த பேராசிரியர் வாதம் செய்கிறார்.
போராளிகள் அமைப் பின் உயர்மட்ட தலை வர்கள் கொல்லப்பட்ட தாகவும், அதுவே அவ் வியக்கத்தின் முடிவாக கருதப்படக் கூடாது என்றும் அவர் வாதம் செய்கிறார். போர் முடிந்த பிற்பாடும், அதே வட்டாரத்தில் அதிகள வில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டு கிறார். சந்தேகிக்கப்படு பவர்களை, இன்னமும் ராணுவம் முகாம்களில் அடைத்து வைக்கிறது என்கிறார் அவர். உலகம் விடுதலைப்புலிகள் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது இந்தப் பேராசிரியரின் வாதம். அந்த இயக்கம் கடைபிடித்த ரகசியத் தன்மை அதற்கு காரண மாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். இங்கிலாந்து ஊடகங்கள், இது பற்றிய விவரங்களை அமெரிக்க ஊடகங்களை விட அதிகமாக தெரிந்திருக் கின்றன என்றும் கூறியுள் ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப் பட்ட இயக்கம் என்கிறார் அட்டேல் பார்க்கர். பெரும் பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் லட்சியத்தையே வரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் அடிப் படையில் அஹிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்ப தையும் குறிப்பிடுகிறார். இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்ட பௌத் தம் வேறுபோல இருக் கிறது என்பது அவரது கருத்து. மகாவம்சம் என்ற காப்பியத்தின்படி, இலங் கைக்கு புத்தர் வந்தார் என்று நம்பப்படுகிறது என்றார். அதனால் புத்த பிக்குகளும் அதை காப்பாற்ற, சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பார்வை அமெரிக்க பேராசிரியர் அட்டேல் பார்க்கருக்கு மட்டும் இருக்கிறதா? அண்டை நாடான இந்தியா வின் ஆட்சியாளர்களும், அறிவுசார் பிரிவினரும் இதே உண்மைகளை அறியாமல் இருக்கிறார் களா? உலக நாடுகளில் பரந்து கிடக்கும் தமிழ் மக்கள் மத்தியில், <<ஈழத் தமிழர் போர்முறை தெளி வுடன் புரியப்பட்டுள் ளதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியை, உலகம் தழுவிய தமிழர்கள் எப்படி புரிந்து கொண்டுள் ளார்கள்?
மேற்கண்ட கேள்விக ளுக்கெல்லாம் விடை தேட வேண்டும் என்றால், நடந்து முடிந்த வன்னிப் போரின் ஒவ்வொரு கட்டத்தையும், அசை போட் டுப் பார்க்க வேண்டும். அதிலி ருந்து கிடைக்கின்ற படிப்பினைகள், பல் வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்கும். உணர்ச்சி கரமான எல்லைகளுக்கு செல்வதிலிருந்து, தமிழர் களை சிந்திக்க வைக்கும். எதிர்கால நடவடிக்கைகளுக்கு திட்டமிட, இந்த தேசிய இனத்திற்கு திசைவழிகாட்டும். போர் விதிகள் பற்றிய அறிவையும் கூட கற்றுக் கொடுக்கும். வரலாற்றில் எடுத்து வைக்க வேண்டிய படிக்கட்டுகளை, வரி சைப்படுத்திக்காட்டும்.
ஒரு கட்டத்தில் புலி களின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டுள் ளன. அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் உணரப்பட்ட, தேசிய இன உரிமைக்கான குரல் ஈழத்தில், அறவழிப் போராக தொடங்கியது. அது நாடாளுமன்ற பாதை யையும் பயன்படுத்த தவறவில்லை. வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள், சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகவே அளிக் கப்பட்டன. அத்தகைய பாதைகளால் இனவாதத் தையும், இன ஒடுக் கலையும், இனத்தாக்கு தலையும் நிறுத்தமுடிய வில்லை என்பதனால், தமிழ் இளைஞர்களின் பார்வை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியது. ஆயுதப் போராட்டம், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அறவழி அரசியல் போராட்டத்தை விட, உயர்ந்தது என்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒரு திட்டத்திற் கான முயற்சி தொடங் கப் பட்டுள்ளது. அது உலகம் தழுவிய அளவிலான அரசியல் போராட்டம் என்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கும், நடக்கயிருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் சரியான முறையில், விளங்கிக் கொள்ளப்படாமல் இருக் கிறது. வன்னிப்போரில் தோற்றதனால், தமிழர்கள் அரசியல் போராட்டம் என்பதாக தங்களது இயலாமையைக் காட் டுகிறார்களா என்ற கேள்வியும், சிலரை செரிக்க விடாமல் செய் கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், ஆயுதப் போரான வன்னிப் போரின் தொடர்ச்சி தான் உலகம் எங்கும் நடத்தப் பட இருக்கும் அரசியல் போர். இத்தகைய அரசியல் போராட்டம், எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்திற்கு குறைந் தது அல்ல.
இது எப்படி அதன் தொடர்ச்சியாக இருக்க முடியும் என்ற அப்பா வித்தனமான கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆயுதப் போரை நடத்திக் கொண் டிருந்த, தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் வே.பிரபா கரனும், எத்தகைய அனுபவங்களையும் மற்றும் படிப்பினை களையும் அதிலிருந்து கற்றார்கள் என்பது புரியப்படவேண்டும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும், முப்படைகளையும் உருவாக்கி, தங்களுடைய விடுதலைப் பகுதியில், புரட்சிகர அரசாங்கத்தையும் நிறுவி, போரில் ஈடுபட்ட வரலாற்றை, ஈழப் போராளிகள் நடத்திக் காட்டியது போல செய்து காட்டவில்லை. அப்படிப்பட்ட புலிகள் இயக்கம், 7 நாடுகளின் ஒத்துழைப்புடன், அரசப்படை நடத்திய போரை எதிர்கொண்டது. அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியாக உணர்ந்து கொண்டது. அதனாலேயே கிழக்கு மாகாணங்களிலிருந்து, புலிப்படையை அதன் தலைவர் திரும்பப் பெற் றார். வடக்கு மாகாணத்தில் கூட, கிளிநொச்சிக்குள் தமிழர் படைகளை உள்ளிழுத்துக் கொண் டார். அங்கும் தாக்குதல் தொடங்கிய போது, முல்லைத் தீவிற்கு பின் வாங்க வைத்தார். முல்லைத் தீவு நகருக்குள் சிங்களப் படை நுழைந் தவுடன், மக்கள் திரளுடன் புலிப்படை புதுக் குடியி ருப்புக்கு நகர்ந்தது. அங்கும் எதிரிப்படை இறங்கியவுடன், முள்ளி வாய்க்கால், ரெட்டை வாய்க்கால் பகுதிக்கு விடுதலைப் படை, தன்னை பின்னிழுத்துக் கொண்டது. இவை யெல்லாம் போர் விதிக ளின்படி, தற்காப்புப் போர் உத்திகளாகப் புரி யப்படவேண்டும்.
ஒவ்வொரு அங்கு லமும் தற்காப்புப் போரில் ஈடுபடுத்தப்பட்ட புலிப்படை, உலகத்திற்கு ஒரு செய்தியை உரக்கக் கூவியது. அதுதான் அரசியல் போராட்டமாக, புலம் பெயர் தமிழர்கள் இந்த விடுதலைப் போராட் டத்தை, முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற செய்தி. அதை உணர்ந்து தான் விடுதலைப் படை யின் தலைமையின் முழு வழிகாட்டலில் தான், பெற்ற படிப்பினைகளின் தொடர்ச்சியில் தான், இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. இது ஆயுதப் போராட்டத் திலிருந்து, அரசியல் போராட்டம் என்ற பரி ணாம வளர்ச்சிக்கு வந்தி ருக்கும் ஒரு இயங் கியல் விதி. அதனால் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாகம், அழியக்கூடியதல்ல.
Thursday, February 18, 2010
மாவோயிஸ்ட் கோட்டையில் கண்ணிவெடிகள்
சமீபத்திய நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்கள் அல்லது அவர்கள் மீது அரசப்படை நடத்திய தாக்குதல்கள் என் பதாக செய்தி வராத நாளே இல்லை என்று கூறலாம். ஊடகங்களுக்கும் அத் தகைய செய்திகள், பர
ப ரப்பூட்டும் ஆய்வுகளை நடத்த உதவியுள்ளன. சமீபத்தில் நமது மத்திய உள்துறை அமைச்சர், தற்காலிகமாக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையும், இந்திய அரசியல்
சட்டத்திற்குட்பட்ட ஆட் சியில் மாவோயிஸ் டுகளின் கொள்கைகளுக்கு இட மில்லை என்பதையும், விரிவாக விளக்கியிருந்தார். அது மேற்கு வங்க மாநி லத்திலுள்ள, மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற் றியது. தாக்குதலில் பலியான அரசப்படை வீரர்கள் மீது, பலத்த அனுதாபம் ஏற்பட்டது. ஜர்க்ரம் பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள், ஆறு மாதங்களுக்குள் அரசப்படை மீது ஐந்து தாக்குதல்கள் நடந்து விட் டன என்று கூறுகிறது. 32 படைவீரர்கள் கொல்லப் பட்டனர். பல பத்துப் பேர் காயமடைந்தனர். ஆயுதங் கள் பறிக்கப்பட்டன. காவல் முகாம்கள் பிடிக்கப் பட்டன. அதேசமயம் மாவோயிஸ்டுகளின் முகாம்களில் மூன்று உடைக்கப்பட்டது. கொரில்லக்கள் என சந் தேகிக்கப்படும் 3 பேர் கொல் லப்பட்டனர். 190 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட படை அதி காரி அத்திந்தரநாத் தத்தாவை விடுதலை செய்வதற்காக 23 பேர் விடுதலை செய் யப்பட்டனர். மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, எல்லா விவரங்களையும் மறைந்து இருந்து கொண்டே, ஊடகப் பேட்டிகள் கொடுக்கிறார். ஜங்கல் மஹால் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப்பகுதியில், அரசப்ப டைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை மக் கள் ஆதரிக்கிறார்கள்.
2008ம் நவம்பர் மாதத்திற்கு பிறகு, அதாவது காவல்துறை அராஜ கங்களுக்கு எதிரான மக் கள் குழுவை அமைத்த பிற்பாடு, ஒவ்வொன்றாக மாவோயிஸ்ட்கள், வெற்றி பெற்று வருகிறார்கள். 2009 ஜனவரியில் லால் கரில் காவல்துறையை புறக்கணித்தார்கள். காவல்துறைக்கு உளவுக் கொள்பவர்களை தீர்த்துக் கட்டினார்கள். 300 கிராமங் களிலுள்ள 3 லட்சம் மக் களை பாதுகாக்க லால்கரில் 36 காவலர்களே அப்போது இருந்தனர். உள்ளூர் உளவு கட்டமைப்புத் தான், காவல்துறைக்கு இருந்த ஒரே அமைப்பு. அதையும் மாவோ யிஸ்ட்கள் குறி வைத்து தாக்கினார்கள். இரவு ஆனபிறகு காவலர்கள் வெளியே வருவதில்லை. படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி யுள்ளன. இதன் மூலம் விடுதலை பகுதியை ஏற்படுத்தி, மேற்கு மிதி னாப்பூரையும் தாண்டி, புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களுக்கு, மாவோ யிஸ்ட்கள் செல்வாக்கு விரி வடைந்துள்ளது. கிணறுகள் தோண்டுதல், சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை வளர்ச் சியுறாத பகுதி களில் உருவாக்கி மக்கள் செல்வாக் கையும், மாவோயிஸ்ட்கள் பெற்று விட்டார்கள். அரசப்படைகளுக்கு இல்லாத அனைத்து கட்ட மைப்புகளும், அங்கே மாவோயிஸ்ட்களுக்கு இருக்கிறது.
9 மாதங்களாக அந்த வட்டாரத்திலேயே முகாமிட்டு இருக்கின்ற அரசப்படைகள், அந்த வட் டாரம் பற்றி இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு கிராமப்புற பாதை தெரியவில்லை. காடுகளில் உள்ளே உள்ள வழிகள் தெரியவில்லை. காலை முதல் மாலை வரை தாங்கள் வலம் வரும் பகுதிகள் மட்டும் தான் தெரியும். இரண்டு வாரங்களாகத் தான் காடுகளுக்குள் அரசப்படைகள் செல்கின்றார்கள். புதிதாக உள்ளே செல்லும் போது குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்று, கையில் ஆயுதங்கள் இல் லாத நிலையில் அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
மேற்கண்ட நிலைமை மேற்கு வங்கத்தில் என்று சொன்னால், சத்திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் பகு தியில் இருந்து வரும் செய்திகள், மாபெரும் உள்நாட்டு போர் சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 14வது நூற்றாண்டில், பஸ்டர் என்ற அரசாட்சி அங்கே நடந்து வந்திருக்கிறது. ராமா யணத்தில் தண்டகாரண்யா என்று சொல்லப்படும் பகுதி தான் அது. மகாபாரதத்தில் கோசல ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிராந் தியம் தான் அது. 19ம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில், பஸ்டர் என்ற அந்த அரசாட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய பிராந்தியமாக அழைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பஸ்டர் பகுதி இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2000மாவது ஆண்டு சத் திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் வட்டாரத்தின் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது. இந்தி ராவதி நதிக்கரையோரம் அந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் ஒரிசா இன்னொரு புறம் ஆந்திரா. எல்லாம் காடுகள் இவ்வாறு வர லாற்று புகழ் பெற்ற அந்த பகுதி தான் இப்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அரசப்படைகளுக்கும் மத் தியில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல நடந்து வருகிறது.
ஒரு பிரபல ஊடகம் தண்டகாருண்யாவின் அடர்த்தியான காடுகளில், தர்பா என்ற பகுதியின் மாவோயிஸ்ட் குழு தலைவர்கள் 3 பேரை சந்தித்திருக்கிறது. பத்ரு, வினோத், தேவா என்ற அந்த மூன்று பேர் கொண்ட குழுவின் தளப தியான பத்ரு, ஊடகத் திற்கு கடுமையான நேர்காணலைக் கொடுத் துள்ளார். பன்னாட்டு மூல தன கம்பெனிகளுக்கு, தங்கள் பகுதியின் நிலங் களை விற்கத் துடிக்கின்ற மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்ய முடியாது என்றும் தாங்கள் அரசு ஏற்றுக் கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது அந்த வட்டார நிலங்கள் ஆதி வாசிகள் உட்பட வட்டார மக்களுக்கே சொந்தம் என்று அவர் தெரிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஆயுதக்குழு தலைவர் பத்ருவிற்கும், இந்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது இருவருமே அவரவர் துப் பாக்கிகளை, துடைத்து வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தான் சமாதா னத்திற்கோ, பேச்சுவார்த் தைக்கோ, வழிவகுக்குமா என்ற கேள்வி தான் எழு கிறது.
அரசப்படைகளிட மிருந்து, அப்பாவி மக்களை தாங்கள் காப்பாற்ற விரும் புவதாகவும், அதற்காகவே தாங்கள் துப்பாக்கி தூக் கியிருப்பதாகவும், பத்ரு போன்றவர்கள் கூறுகி றார்கள். அப்பாவிகளைத் தான் அரசப்படைகள் கொலை செய்ய முடியுமே தவிர, தங்களை அல்ல என் றும் மாவோயிஸ்ட்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதன் விளைவாக அதிகமான மக்கள் துப் பாக்கி ஏந்துவார்கள் என்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். பச்சை வேட்டை என்ற பெயரில் அரசப்படையும், அரசால் ஆயுதபாணியாக்கப்பட்ட, கூலிப் படையான சல்வா ஜுடுமும், அப்பாவி மக்களை கொலை செய்வ தனால், எதிர் விளைவுகளே உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்ரம பள்ளிகளை உடைத்தீர்களே என்ற கேள்விக்கு, அரசப் படைகள் அவற்றை ஆக் கிரமித்திருந்தன என்றும் பதில் கூறுகிறார்கள். பா.ஜ.க.வும், காங்கிர
சும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை, அந்த வட்டாரத்திற்கு கொண்டு வந்து, பாரம்பரியமாக வாழும் மக்களை நிர்பந் தமாக இடம் பெயர வைக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
அதேசமயம் அரசு தரப்பு செய்திகள், தாங்கள் செய்கின்ற பச்சை வேட்டை என்பது, பொது இடங்களில் மாவோயிஸ்ட்களால் நிலத்தில் புதைக்கப்பட்ட, கண்ணிவெடிகளை நீக்குவது தான் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பஸ்டர் பகுதியில் கண்ணிவெடிகளை நீக் குவதற்காக, இறங்கிய காவல்துறையினர் பலர் தங்களது உயிரை இழந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது கால்களை இழந்திருக்கிறார்கள். இதுபற்றி மனித உரிமை அமைப்புகள் பேசு வதில்லை என்பது அரசுதரப்பு குற்றச்
சாட்டு. சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், காடுகளிலும், பொது இடங் களிலும் இதுபோன்ற கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத் திருக்கிறார்கள்.
அங்கே ஆதிவாசி பகுதி களில், ஒரு உள்நாட்டுப் போருக்கான சூழல் நில விக்கொண்டிருக்கிறது. அத னால் தான் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தும் மாவோயிஸ்ட்கள்,
சாதாரணமாக தாங்கள் அறிவித்துள்ள விடுதலைப் பகுதிகளை, நெருங்கும் இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகளை புதைத் திருக்கிறார்கள். அதே சம யம் காவல்துறையின் சித் ரவதைகளை எதிர்த்து, 2005ம் ஆண்டு 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் சில தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டலுடன் பதிவு செய்யப்பட்டுள்ள. மனித உரிமைகள் என்ற அடிப்படையான அளவு கோல் மூலம் அந்த வட் டாரம் பார்க்கப்படுமா? 2005ம் ஆண்டு 26 மாவோயிஸ்ட்களும், 48 அரசப்படையினரும், 52 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு 117 மாவோயிஸ்ட்களும், 55 அரசப்படைகளும், 189 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 73 மாவோயிஸ்ட்களும், 182 அரசப்படைகளும், 95 அப்பாவிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டு 66 மாவோயிஸ்டுகளும், 67 அரசப்படைகளும், 35 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 2009ம் ஆண்டு 137 மாவோயிஸ்ட்களும், 121 அரசப்படைகளும், 87 அப் பாவிமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைமை 2010லும் தொடர வேண்டுமா என் பதே நமது கேள்வி.
ப ரப்பூட்டும் ஆய்வுகளை நடத்த உதவியுள்ளன. சமீபத்தில் நமது மத்திய உள்துறை அமைச்சர், தற்காலிகமாக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையும், இந்திய அரசியல்
சட்டத்திற்குட்பட்ட ஆட் சியில் மாவோயிஸ் டுகளின் கொள்கைகளுக்கு இட மில்லை என்பதையும், விரிவாக விளக்கியிருந்தார். அது மேற்கு வங்க மாநி லத்திலுள்ள, மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற் றியது. தாக்குதலில் பலியான அரசப்படை வீரர்கள் மீது, பலத்த அனுதாபம் ஏற்பட்டது. ஜர்க்ரம் பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள், ஆறு மாதங்களுக்குள் அரசப்படை மீது ஐந்து தாக்குதல்கள் நடந்து விட் டன என்று கூறுகிறது. 32 படைவீரர்கள் கொல்லப் பட்டனர். பல பத்துப் பேர் காயமடைந்தனர். ஆயுதங் கள் பறிக்கப்பட்டன. காவல் முகாம்கள் பிடிக்கப் பட்டன. அதேசமயம் மாவோயிஸ்டுகளின் முகாம்களில் மூன்று உடைக்கப்பட்டது. கொரில்லக்கள் என சந் தேகிக்கப்படும் 3 பேர் கொல் லப்பட்டனர். 190 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட படை அதி காரி அத்திந்தரநாத் தத்தாவை விடுதலை செய்வதற்காக 23 பேர் விடுதலை செய் யப்பட்டனர். மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, எல்லா விவரங்களையும் மறைந்து இருந்து கொண்டே, ஊடகப் பேட்டிகள் கொடுக்கிறார். ஜங்கல் மஹால் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப்பகுதியில், அரசப்ப டைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை மக் கள் ஆதரிக்கிறார்கள்.
2008ம் நவம்பர் மாதத்திற்கு பிறகு, அதாவது காவல்துறை அராஜ கங்களுக்கு எதிரான மக் கள் குழுவை அமைத்த பிற்பாடு, ஒவ்வொன்றாக மாவோயிஸ்ட்கள், வெற்றி பெற்று வருகிறார்கள். 2009 ஜனவரியில் லால் கரில் காவல்துறையை புறக்கணித்தார்கள். காவல்துறைக்கு உளவுக் கொள்பவர்களை தீர்த்துக் கட்டினார்கள். 300 கிராமங் களிலுள்ள 3 லட்சம் மக் களை பாதுகாக்க லால்கரில் 36 காவலர்களே அப்போது இருந்தனர். உள்ளூர் உளவு கட்டமைப்புத் தான், காவல்துறைக்கு இருந்த ஒரே அமைப்பு. அதையும் மாவோ யிஸ்ட்கள் குறி வைத்து தாக்கினார்கள். இரவு ஆனபிறகு காவலர்கள் வெளியே வருவதில்லை. படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி யுள்ளன. இதன் மூலம் விடுதலை பகுதியை ஏற்படுத்தி, மேற்கு மிதி னாப்பூரையும் தாண்டி, புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களுக்கு, மாவோ யிஸ்ட்கள் செல்வாக்கு விரி வடைந்துள்ளது. கிணறுகள் தோண்டுதல், சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை வளர்ச் சியுறாத பகுதி களில் உருவாக்கி மக்கள் செல்வாக் கையும், மாவோயிஸ்ட்கள் பெற்று விட்டார்கள். அரசப்படைகளுக்கு இல்லாத அனைத்து கட்ட மைப்புகளும், அங்கே மாவோயிஸ்ட்களுக்கு இருக்கிறது.
9 மாதங்களாக அந்த வட்டாரத்திலேயே முகாமிட்டு இருக்கின்ற அரசப்படைகள், அந்த வட் டாரம் பற்றி இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு கிராமப்புற பாதை தெரியவில்லை. காடுகளில் உள்ளே உள்ள வழிகள் தெரியவில்லை. காலை முதல் மாலை வரை தாங்கள் வலம் வரும் பகுதிகள் மட்டும் தான் தெரியும். இரண்டு வாரங்களாகத் தான் காடுகளுக்குள் அரசப்படைகள் செல்கின்றார்கள். புதிதாக உள்ளே செல்லும் போது குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்று, கையில் ஆயுதங்கள் இல் லாத நிலையில் அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
மேற்கண்ட நிலைமை மேற்கு வங்கத்தில் என்று சொன்னால், சத்திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் பகு தியில் இருந்து வரும் செய்திகள், மாபெரும் உள்நாட்டு போர் சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 14வது நூற்றாண்டில், பஸ்டர் என்ற அரசாட்சி அங்கே நடந்து வந்திருக்கிறது. ராமா யணத்தில் தண்டகாரண்யா என்று சொல்லப்படும் பகுதி தான் அது. மகாபாரதத்தில் கோசல ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிராந் தியம் தான் அது. 19ம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில், பஸ்டர் என்ற அந்த அரசாட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய பிராந்தியமாக அழைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பஸ்டர் பகுதி இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2000மாவது ஆண்டு சத் திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் வட்டாரத்தின் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது. இந்தி ராவதி நதிக்கரையோரம் அந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் ஒரிசா இன்னொரு புறம் ஆந்திரா. எல்லாம் காடுகள் இவ்வாறு வர லாற்று புகழ் பெற்ற அந்த பகுதி தான் இப்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அரசப்படைகளுக்கும் மத் தியில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல நடந்து வருகிறது.
ஒரு பிரபல ஊடகம் தண்டகாருண்யாவின் அடர்த்தியான காடுகளில், தர்பா என்ற பகுதியின் மாவோயிஸ்ட் குழு தலைவர்கள் 3 பேரை சந்தித்திருக்கிறது. பத்ரு, வினோத், தேவா என்ற அந்த மூன்று பேர் கொண்ட குழுவின் தளப தியான பத்ரு, ஊடகத் திற்கு கடுமையான நேர்காணலைக் கொடுத் துள்ளார். பன்னாட்டு மூல தன கம்பெனிகளுக்கு, தங்கள் பகுதியின் நிலங் களை விற்கத் துடிக்கின்ற மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்ய முடியாது என்றும் தாங்கள் அரசு ஏற்றுக் கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது அந்த வட்டார நிலங்கள் ஆதி வாசிகள் உட்பட வட்டார மக்களுக்கே சொந்தம் என்று அவர் தெரிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஆயுதக்குழு தலைவர் பத்ருவிற்கும், இந்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது இருவருமே அவரவர் துப் பாக்கிகளை, துடைத்து வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தான் சமாதா னத்திற்கோ, பேச்சுவார்த் தைக்கோ, வழிவகுக்குமா என்ற கேள்வி தான் எழு கிறது.
அரசப்படைகளிட மிருந்து, அப்பாவி மக்களை தாங்கள் காப்பாற்ற விரும் புவதாகவும், அதற்காகவே தாங்கள் துப்பாக்கி தூக் கியிருப்பதாகவும், பத்ரு போன்றவர்கள் கூறுகி றார்கள். அப்பாவிகளைத் தான் அரசப்படைகள் கொலை செய்ய முடியுமே தவிர, தங்களை அல்ல என் றும் மாவோயிஸ்ட்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதன் விளைவாக அதிகமான மக்கள் துப் பாக்கி ஏந்துவார்கள் என்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். பச்சை வேட்டை என்ற பெயரில் அரசப்படையும், அரசால் ஆயுதபாணியாக்கப்பட்ட, கூலிப் படையான சல்வா ஜுடுமும், அப்பாவி மக்களை கொலை செய்வ தனால், எதிர் விளைவுகளே உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்ரம பள்ளிகளை உடைத்தீர்களே என்ற கேள்விக்கு, அரசப் படைகள் அவற்றை ஆக் கிரமித்திருந்தன என்றும் பதில் கூறுகிறார்கள். பா.ஜ.க.வும், காங்கிர
சும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை, அந்த வட்டாரத்திற்கு கொண்டு வந்து, பாரம்பரியமாக வாழும் மக்களை நிர்பந் தமாக இடம் பெயர வைக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
அதேசமயம் அரசு தரப்பு செய்திகள், தாங்கள் செய்கின்ற பச்சை வேட்டை என்பது, பொது இடங்களில் மாவோயிஸ்ட்களால் நிலத்தில் புதைக்கப்பட்ட, கண்ணிவெடிகளை நீக்குவது தான் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பஸ்டர் பகுதியில் கண்ணிவெடிகளை நீக் குவதற்காக, இறங்கிய காவல்துறையினர் பலர் தங்களது உயிரை இழந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது கால்களை இழந்திருக்கிறார்கள். இதுபற்றி மனித உரிமை அமைப்புகள் பேசு வதில்லை என்பது அரசுதரப்பு குற்றச்
சாட்டு. சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், காடுகளிலும், பொது இடங் களிலும் இதுபோன்ற கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத் திருக்கிறார்கள்.
அங்கே ஆதிவாசி பகுதி களில், ஒரு உள்நாட்டுப் போருக்கான சூழல் நில விக்கொண்டிருக்கிறது. அத னால் தான் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தும் மாவோயிஸ்ட்கள்,
சாதாரணமாக தாங்கள் அறிவித்துள்ள விடுதலைப் பகுதிகளை, நெருங்கும் இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகளை புதைத் திருக்கிறார்கள். அதே சம யம் காவல்துறையின் சித் ரவதைகளை எதிர்த்து, 2005ம் ஆண்டு 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் சில தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டலுடன் பதிவு செய்யப்பட்டுள்ள. மனித உரிமைகள் என்ற அடிப்படையான அளவு கோல் மூலம் அந்த வட் டாரம் பார்க்கப்படுமா? 2005ம் ஆண்டு 26 மாவோயிஸ்ட்களும், 48 அரசப்படையினரும், 52 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு 117 மாவோயிஸ்ட்களும், 55 அரசப்படைகளும், 189 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 73 மாவோயிஸ்ட்களும், 182 அரசப்படைகளும், 95 அப்பாவிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டு 66 மாவோயிஸ்டுகளும், 67 அரசப்படைகளும், 35 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 2009ம் ஆண்டு 137 மாவோயிஸ்ட்களும், 121 அரசப்படைகளும், 87 அப் பாவிமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைமை 2010லும் தொடர வேண்டுமா என் பதே நமது கேள்வி.
Wednesday, February 17, 2010
கனடாவிலிருந்து வந்த இயற்கை விஞ்ஞானம்!
இன்று இந்தியா எங்கும் விவாதப் பொருளாகி வருவது, மரபணு மாற்று உணவு நல்லதா, கெட்டதா என்பதே. சமீபத் தில் நாடெங்கிலும் பல நகரங்களில் நடந்து முடிந்த, மலட்டு கத்தரிக் காய் பற்றிய கலந்துரையா டல்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை, மரபணு மாற்று கத்தரிக்காய்கள் விற்ப னைக்கு அனுமதிக்கப் படுவதை, குறைந்த பட்சம் தள்ளிப் போட்டது. அதே சமயம் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் அதே மரபணு மாற்றை, கெடுதல் அல்ல என்பதாகக் கூறிய கூற் றும் வெளிவந்தது. இதே ஊடகங்கள் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அர சாங்கத்திற்குள், இரண்டு கருத்துக்கள் என்பதாக எழுதியிருந்தன. இன்ன மும் தீர்க்கப்படாத பிரச்சினையாக, இந்தியா வில் இந்த மரபணு மாற்று விதைகளும், உணவு களும் இருக்கின்றன. அதனால்தான் தங்கள் தலைமேலே, கூர்வாள் தொங்கிக் கொண்டிருக் கிறது என்று இயற்கை விவசாயிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவியலா ளர்களும் கூறுகிறார்கள். கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் ஆகியவற்றின் அரசாங்கங் கள் கறாராக மரபணு மாற்று விதைகளை மறுப்பது போல செய்யா விட்டாலும், தமிழக அரசு தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என்றாவது கூறியுள்ளதே என்ற ஆறுதல் ஒருபுறம். அதே சமயம் விவசாயப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டி லும், பஞ்சாபிலும் இந்த மரபணு மாற்று விதை களை சந்தையில் இறக்கி விடும் பன்னாட்டு நிறுவனங் களுக்கு, பயன்பாடாக
சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் விவசாய உற்பத்திக்கு பெயர் பெற்றது என்பதாக கூறு கிறார்கள். அந்த பஞ்சாபி லிருந்து பிறந்து 1960ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் வாழ்ந்து வரும், இயற்கை விஞ்ஞானி டாக்டர் சிவ்சோப்ரா, இந்தியா வந்துள்ளார். இவர் ஹைதராபாத், சென்னை, கொச்சி, மைசூர், பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சென்று தனது கருத்துக்களை தெளித்துக் கொண்டிருக் கிறார். மரபணு மாற்று உணவுகளின் அரசியலும், அதனால் ஏற்படும் சுகாதார தாக்கங்களும் என்பதுதான் இவரது விளக்கத்தின் தலைப்பு. அறிவியல், சமூகம், மதம் பற்றி பல் வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர், கால்நடை மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கனடா நாட்டில் எல்லாமே முன்னேறி இருக்கும் என்ற நம் பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. ஆனால் இந்திய வம்சாவழியான இந்த விஞ்ஞானியின் அனு பவம், மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாய உற்பத்தி பெருகியதற்கு காரணம், பசுமைப் புரட்சிதான் என்று சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் இன்னமும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஆங்கிலேயனுடைய ஆட்சி இருக்கும் போது, இந்தியாவும், பாகிஸ்தா னும் ஒன்றாக ஆளப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் விவசாய விளைச்சலில் இயற்கையாகவே, சிறந்து விளங்கியது. அதில் முக்கிய விளைச்சல் பகுதிகள் பாகிஸ்தானுடன் சென்று விட்டன. ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில், வெள்ளைக்காரர்கள் நிரந்தரமாக தாங்கள் இந்தி யாவை ஆளப்போகி றோம் என்ற எண்ணத்தில், பஞ்சாப் விளைச்சலை அதிகப்படுத்தினார்கள் என் கிறார் சோப்ரா. அதற்காக நிலமற்ற உழவர்களுக்கு, நிர்ப்பந்தமாக நிலச் சீர்திருத்தம் செய்து, நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இலவச மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் அளித்தார்கள். எந்த ஒரு ஆலை உற்பத்தியும் இல்லாமல், பஞ்சாப் விவ சாயத்தை மட்டுமே சார்ந் திருந்தது. அத்தகைய காரணங்களினால் விளைந்த விளைச்சல், பஞ்சாப் உட்பட இந்தியா முழுமைக்கும் உணவு தந்தது. இப்படியாக பஞ்
சாப் பற்றி நமக்கு ஒரு புதிய வரலாற்றுச் செய்தியை, சோப்ரா அளிக்கிறார்.
ஆங்கிலேயே ஆட்சி யாளர்களது அன்றைய
சதித்திட்டத்தையும்
சோப்ரா அம்பலப்படுத் தினார். இந்தியாவை வணி கத்தின் மூலம் அதிகாரம் செலுத்திய, கிழக்கிந்திய கம்பெனி கடுமையாக ஊழல் செய்யத் தொடங் கினார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயே அரசு மெக்காலே பிரபுவை, இந்தியாவிற்கு ஆளுநராக இறக்கிவிட்டது. 1833ம் ஆண்டு மெக்காலே இங்கு வந்தார். இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த் தார். பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இந்த பூமி யில் இல்லை என்று அதிர்ச்சியுடன் எழுதினார். இந்தியாவிலிருக்கும் வளத்தையும், மனத்தி
டத்தையும், மரபையும், பண்பாட்டையும் உடைத்து இந்தியர்களின் முதுகெலும்பை முறிக்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதற்காக அடிமைக்கல்வியை அறிமுகப்படுத்தினார். 1858ல் மெக்காலே மறைந்தார். 1859ல் ராணி விக்டோரியாவின் தலைமையில் இந்தியா முழுமையான காலனி நாடாக ஆனது. இப்படி ஒரு அரசியல் வரலாற்றை தொகுத்து, அதன் மூலம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்த, சுயசார்பு பொருளா தாரத்தை எப்படி உடைத் தார்கள் என்று சோப்ரா விளக்குகிறார்.
பருத்தியை விளைச் சல் செய்யுங்கள். ஆனால் இங்கிலாந்தில் கொண்டு போய் நெய்து கொள்கிறோம். இப்படிப் பட்ட கொள்கையுடன் ஆங்கிலேயே ஏகாதிபத் யம், இந்திய விவசாயத்தை தனக்கான உற்பத்திப் பின்னிலமாக ஆக்கியது என்பதே சோப்ரா கொடுக்கின்ற வரைபடம். பருத்தி இந்தியாவின் பாரம்பரிய, சுயமான உற்பத்தி. இந்தியாவை காலனியாக்கிய ஆங்கிலே யர்களுக்கு பருத்தி உற்பத்தி பற்றியும், பருத்தி உடைகள் பற்றியும் தெரியாது. மேற்கிந்திய, கிழக்கிந்திய மொரீசியஸ் நாடுகளுக்கு, இந்திய விவசாயிகளை கூட்டிச் சென்று, பருத்தி உற்பத்தியை அவர்கள் பரவலாக்கினர். இப்படி வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கின்ற அந்த இயற்கை விஞ்ஞானி, பசுமைப் புரட்சி பற்றி யும், மரபணுக்களை மாற்றி புதிய செயற்கை விதைகளை உருவாக்கும், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் விளக்குகிறார்.
வீரிய விதைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே, அவற்றினால் ஏற்படும் பூச்சிகளை அழிக்க, அவர்களே தயாரித்து பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனைக்கு தயாரானதை சுட்டிக் காட்டுகிறார். உயிரியல் தொழில் நுட்பம், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில், இயற்கை யாகவே 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந் தது என்று கூறுகிறார். இப்போது வந்திருக்கும் மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படும் செயற்கை முறைகளை விளக்குகிறார். பாக்டீரியா எனப்படும் குறிப்பிட்ட கிருமியை, குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து எடுத்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாட்டுக்கு கொடுப்பதோ, கத்தரிக்காய் உற்பத்தியை அதிகப்படுத்தவோ, பருத்தி உற்பத்தியை அதிகப் படுத்தவோ, அந்தந்த பொருள்களுக் குள் ஊசி மூலம் ஏற்று வதோ, மரபணு மாற்று என்று கூறுகிறார்கள்.
மரபணு மாற்று கத்த ரிக் காய்கள் விளையும் போது, பூச்சிக் கொல்லி மருந்து களுக்கு வேலையே இல்லை என்பது சிலரது வாதம். தானாகவே அந்த மரபணு மாற்று ஊக்கி, பூச்சிகளைக் கொன்று விடுகிறது என்பது அவர்களது விளக்கம். உள்ளபடியே தன்மீது அமரும் பூச்சிகள் மீது, ஒரு பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள, எப்படி நச்சை கக்குகிறதோ, அப்படி நச்சைக் கக்கி இந்த ஊக்கிகள் (ஹார் மோன்கள்) அனைத்துப் பூச்சிகளையும் கொன்று விடுகின்றன என்பதே
சோப்ரா கொடுத்த விளக்கம். அதனால் பயிருக்கு பயனுள்ள பூச்சிகளும் கூட அழிக்கப்படும் என்பதே விளைவு. ஆகவே இந்த மரபணு மாற்று உணவுகள், எந்த விதத்திலும் இயற்கையான ஆரோக்கிய தன்மை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.
கனடா நாட்டு நாடாளு மன்றம், மான்சான்டோ என்ற மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு, ஆதரவாக நிலை எடுத் தது. பால் உற்பத்தியை அதிகப்படுத்த, மாடுகளுக்கு மரபணு மாற்று ஊக்கிகளை உள்ளே செலுத்தும் முறையை, கனடா நாட்டு அரசாங்க அதிகாரியாக இருந்த
சோப்ரா எதிர்த்திருக்கிறார். பொவைன் வளர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படும் மரபணுவை, மாட்டுக்கு செலுத்துவது ஆபத்தானது என்று கனடா நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, சோப்ரா ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். அதையொட்டி கனடா நாடு தனது அனுமதியை நிறுத்தி வைத்தது. ஆனால் அமெரிக்கா மட்டும் தனது அனுமதியைத் தொடர்ந்தது. இத்தகைய அம்பலப்படுத்தலால்
சோப்ரா அரசு பணியை இழந்தார். தனது பணியை விட, மக்களது ஆரோக்கியமும், இயற் கையான உற்பத்தியும் தான் முக்கியம் என்று உணர்ந்த சோப்ராக்கள், இளைய தலைமுறையில் உருவா கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி யுள்ளது.
சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் விவசாய உற்பத்திக்கு பெயர் பெற்றது என்பதாக கூறு கிறார்கள். அந்த பஞ்சாபி லிருந்து பிறந்து 1960ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் வாழ்ந்து வரும், இயற்கை விஞ்ஞானி டாக்டர் சிவ்சோப்ரா, இந்தியா வந்துள்ளார். இவர் ஹைதராபாத், சென்னை, கொச்சி, மைசூர், பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சென்று தனது கருத்துக்களை தெளித்துக் கொண்டிருக் கிறார். மரபணு மாற்று உணவுகளின் அரசியலும், அதனால் ஏற்படும் சுகாதார தாக்கங்களும் என்பதுதான் இவரது விளக்கத்தின் தலைப்பு. அறிவியல், சமூகம், மதம் பற்றி பல் வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர், கால்நடை மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கனடா நாட்டில் எல்லாமே முன்னேறி இருக்கும் என்ற நம் பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. ஆனால் இந்திய வம்சாவழியான இந்த விஞ்ஞானியின் அனு பவம், மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாய உற்பத்தி பெருகியதற்கு காரணம், பசுமைப் புரட்சிதான் என்று சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் இன்னமும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஆங்கிலேயனுடைய ஆட்சி இருக்கும் போது, இந்தியாவும், பாகிஸ்தா னும் ஒன்றாக ஆளப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் விவசாய விளைச்சலில் இயற்கையாகவே, சிறந்து விளங்கியது. அதில் முக்கிய விளைச்சல் பகுதிகள் பாகிஸ்தானுடன் சென்று விட்டன. ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில், வெள்ளைக்காரர்கள் நிரந்தரமாக தாங்கள் இந்தி யாவை ஆளப்போகி றோம் என்ற எண்ணத்தில், பஞ்சாப் விளைச்சலை அதிகப்படுத்தினார்கள் என் கிறார் சோப்ரா. அதற்காக நிலமற்ற உழவர்களுக்கு, நிர்ப்பந்தமாக நிலச் சீர்திருத்தம் செய்து, நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இலவச மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் அளித்தார்கள். எந்த ஒரு ஆலை உற்பத்தியும் இல்லாமல், பஞ்சாப் விவ சாயத்தை மட்டுமே சார்ந் திருந்தது. அத்தகைய காரணங்களினால் விளைந்த விளைச்சல், பஞ்சாப் உட்பட இந்தியா முழுமைக்கும் உணவு தந்தது. இப்படியாக பஞ்
சாப் பற்றி நமக்கு ஒரு புதிய வரலாற்றுச் செய்தியை, சோப்ரா அளிக்கிறார்.
ஆங்கிலேயே ஆட்சி யாளர்களது அன்றைய
சதித்திட்டத்தையும்
சோப்ரா அம்பலப்படுத் தினார். இந்தியாவை வணி கத்தின் மூலம் அதிகாரம் செலுத்திய, கிழக்கிந்திய கம்பெனி கடுமையாக ஊழல் செய்யத் தொடங் கினார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயே அரசு மெக்காலே பிரபுவை, இந்தியாவிற்கு ஆளுநராக இறக்கிவிட்டது. 1833ம் ஆண்டு மெக்காலே இங்கு வந்தார். இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த் தார். பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இந்த பூமி யில் இல்லை என்று அதிர்ச்சியுடன் எழுதினார். இந்தியாவிலிருக்கும் வளத்தையும், மனத்தி
டத்தையும், மரபையும், பண்பாட்டையும் உடைத்து இந்தியர்களின் முதுகெலும்பை முறிக்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதற்காக அடிமைக்கல்வியை அறிமுகப்படுத்தினார். 1858ல் மெக்காலே மறைந்தார். 1859ல் ராணி விக்டோரியாவின் தலைமையில் இந்தியா முழுமையான காலனி நாடாக ஆனது. இப்படி ஒரு அரசியல் வரலாற்றை தொகுத்து, அதன் மூலம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்த, சுயசார்பு பொருளா தாரத்தை எப்படி உடைத் தார்கள் என்று சோப்ரா விளக்குகிறார்.
பருத்தியை விளைச் சல் செய்யுங்கள். ஆனால் இங்கிலாந்தில் கொண்டு போய் நெய்து கொள்கிறோம். இப்படிப் பட்ட கொள்கையுடன் ஆங்கிலேயே ஏகாதிபத் யம், இந்திய விவசாயத்தை தனக்கான உற்பத்திப் பின்னிலமாக ஆக்கியது என்பதே சோப்ரா கொடுக்கின்ற வரைபடம். பருத்தி இந்தியாவின் பாரம்பரிய, சுயமான உற்பத்தி. இந்தியாவை காலனியாக்கிய ஆங்கிலே யர்களுக்கு பருத்தி உற்பத்தி பற்றியும், பருத்தி உடைகள் பற்றியும் தெரியாது. மேற்கிந்திய, கிழக்கிந்திய மொரீசியஸ் நாடுகளுக்கு, இந்திய விவசாயிகளை கூட்டிச் சென்று, பருத்தி உற்பத்தியை அவர்கள் பரவலாக்கினர். இப்படி வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கின்ற அந்த இயற்கை விஞ்ஞானி, பசுமைப் புரட்சி பற்றி யும், மரபணுக்களை மாற்றி புதிய செயற்கை விதைகளை உருவாக்கும், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் விளக்குகிறார்.
வீரிய விதைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே, அவற்றினால் ஏற்படும் பூச்சிகளை அழிக்க, அவர்களே தயாரித்து பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனைக்கு தயாரானதை சுட்டிக் காட்டுகிறார். உயிரியல் தொழில் நுட்பம், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில், இயற்கை யாகவே 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந் தது என்று கூறுகிறார். இப்போது வந்திருக்கும் மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படும் செயற்கை முறைகளை விளக்குகிறார். பாக்டீரியா எனப்படும் குறிப்பிட்ட கிருமியை, குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து எடுத்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாட்டுக்கு கொடுப்பதோ, கத்தரிக்காய் உற்பத்தியை அதிகப்படுத்தவோ, பருத்தி உற்பத்தியை அதிகப் படுத்தவோ, அந்தந்த பொருள்களுக் குள் ஊசி மூலம் ஏற்று வதோ, மரபணு மாற்று என்று கூறுகிறார்கள்.
மரபணு மாற்று கத்த ரிக் காய்கள் விளையும் போது, பூச்சிக் கொல்லி மருந்து களுக்கு வேலையே இல்லை என்பது சிலரது வாதம். தானாகவே அந்த மரபணு மாற்று ஊக்கி, பூச்சிகளைக் கொன்று விடுகிறது என்பது அவர்களது விளக்கம். உள்ளபடியே தன்மீது அமரும் பூச்சிகள் மீது, ஒரு பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள, எப்படி நச்சை கக்குகிறதோ, அப்படி நச்சைக் கக்கி இந்த ஊக்கிகள் (ஹார் மோன்கள்) அனைத்துப் பூச்சிகளையும் கொன்று விடுகின்றன என்பதே
சோப்ரா கொடுத்த விளக்கம். அதனால் பயிருக்கு பயனுள்ள பூச்சிகளும் கூட அழிக்கப்படும் என்பதே விளைவு. ஆகவே இந்த மரபணு மாற்று உணவுகள், எந்த விதத்திலும் இயற்கையான ஆரோக்கிய தன்மை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.
கனடா நாட்டு நாடாளு மன்றம், மான்சான்டோ என்ற மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு, ஆதரவாக நிலை எடுத் தது. பால் உற்பத்தியை அதிகப்படுத்த, மாடுகளுக்கு மரபணு மாற்று ஊக்கிகளை உள்ளே செலுத்தும் முறையை, கனடா நாட்டு அரசாங்க அதிகாரியாக இருந்த
சோப்ரா எதிர்த்திருக்கிறார். பொவைன் வளர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படும் மரபணுவை, மாட்டுக்கு செலுத்துவது ஆபத்தானது என்று கனடா நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, சோப்ரா ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். அதையொட்டி கனடா நாடு தனது அனுமதியை நிறுத்தி வைத்தது. ஆனால் அமெரிக்கா மட்டும் தனது அனுமதியைத் தொடர்ந்தது. இத்தகைய அம்பலப்படுத்தலால்
சோப்ரா அரசு பணியை இழந்தார். தனது பணியை விட, மக்களது ஆரோக்கியமும், இயற் கையான உற்பத்தியும் தான் முக்கியம் என்று உணர்ந்த சோப்ராக்கள், இளைய தலைமுறையில் உருவா கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி யுள்ளது.
Tuesday, February 16, 2010
60 ஆண்டுகளாக பற்றி எரியும் நாகர்கள் பிரச்சினை
அனைத்து நாட்டு நாகர் ஆதரவு மையம் என்ற அமைப்பு, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர் டாங் நகரில் இருந்து ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அரசு தங்கள் இனமக்கள் மீது மோதல் போக்கை கையாளுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அமைதிக்கான பேச்சு வார்த்தைகள், நாகர் புரட்சியாளர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தி யில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், அது இழுத்துக் கொண்டே இருக்கிறது. நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை என்பதாகத்தான், இரு சாராருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங் கியது. இந்திய அரசுக் கும், நாகர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, இரண்டு நாடுகளுக்கு இடையிலானது என்பதாக அந்த அனைத்து நாட்டு அமைப்பு நினைவு படுத்துகிறது. அதாவது நாகர்கள் தங்களை இந்தியாவின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண் டதே இல்லை. இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கும் போதும், அத்தகைய ஒரு புரிதலை அவர்கள் கொண்டிருக்க வில்லை. தங்களை இந் தியர்கள் என்பதாக, எந்த நாகரும் இதுவரை எண்ணவும் இல்லை. இதை இந்தியாவெங்கும் பல்வேறு வேலை களுக்காக, நடமாடும் நாகர்கள் அனைவருமே தங்களது சிந்தனையாகக் கொண்டுள்ளனர்.
தென்னிந்தியர்கள் வட இந்தியா செல்லும் போதோ, வேறு இடங்களிலோ, நாகர்களை சந்தித்தால், சந்தித்து அவர்களது தேசிய இனப்பிரச்சினையின் மீது அக்கறையுடன் விவாதித்தால், நீங்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியே வரப் போகிறீர்கள் என்ற கேள் வியை சாதாரணமாக நாகர் கள் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, இந்தியாவை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். தங்களுடைய பிரச்சனை கள் மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருக்கின்ற அனைத்து தேசிய இனங் களும், சுயநிர்ணய உணர் வுள்ளவர்கள் என்பதாக நாகர்கள் எண்ணுகி றார்கள்.
பேச்சு வார்த்தையின் இந்த கட்டத்தில் இந்திய அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் நாகர்களோ, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப் படவேண்டும் என்று, முன்பு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள விவ ரத்தை வெளியே கூறி, தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் நல்லதொரு தீர்வை எட்டலாம் என நாகர்கள் முயற்சிப்பதாகவும், ஏற் கனவே ஒப்புக் கொண்ட விதிகளை மீறுவதன் மூலம், இந்திய அரசு அத்தகைய பேச்சுவார்த் தையை உடைத்து விட முயற்சிக்கிறது என்றும், நாகர்கள் குற்றம் சாட்டுகி றார்கள். பேச்சு வார்த்தை உடைந்தால், அதற்காக நாகர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அவர் கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
இப்போது இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரை நாகர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தியில் 60வது முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. சென்ற ஆண்டு நாகாலாந்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் இல்லாத முறையில், ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்ப தாக அந்த தீர்மானம் அழைக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இருக்கின்ற, அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒரே குரலில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் நாகா அரசியல் பிரச்சினையின் மீது ஆய்வு செய்ய, ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதாக எழுதப்பட்டது. பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கின்ற இந்தியநாகா அரசியல் பிரச்சினைக்கு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்காக தங்களது புதிய நேர்மையான முயற்சியை எடுப்பதாக, இந்திய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அந்த தீர்மானம் பாராட்டியுள் ளது.
மேற்படி செய்தியை மாநிலங்களவை உறுப் பினர் கேகிஹோ சிமோமி, நாடாளுமன்றத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆகவே பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தலைமறைவு நாகர் குழுக்களான, ஐசக்முய்வா தலைமையிலான நாகா லாந்து தேசிய சோசலிச கவுன்சிலும், கப்லாங் தலை மையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலும் மற்றும் நாகா தேசிய கவுன்சிலும் எந்த ஒரு நாகர்களுக்கான சிறந்த தீர்வையும், பல் வேறு குழுக்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி. கூறினார்.
1950ம் ஆண்டு காலகட்டங்களிலேயே, நாகா எழுச்சி, பிசோ தலைமையில் உருவான நாகா தேசிய கவுன்சில் மூலமாகக் கிளம்பியது. அது சுதந்திரமான, தனி இறை யாண்மை கொண்ட ஒரு நாகா தேசத்தை அடைவதுதான் தங்கள் லட்சியம் என்பதை முன்வைத்தது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வட்டார நிர்வாகத்தின் கீழ், நாகா மலைகளின் மாவட்டம் என்பது இருந்தது. அத னால் அப்போது கிளம்பிய நாகா எழுச்சியை, உள்ளே நுழைந்த இந்திய ராணு வம் அடக்கி விட்டது. அதனாலேயே நாகா தேசிய கவுன்சிலின் புரட்சிகர உறுப்பினர்கள், தலைமறைவாகச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் பிசோ லண்டனுக்கு தப்பி ஓடினார். கிறித்துவ பாதிரியாரான மைக்கேல் ஸ்காட் பொறுப்பில் பிசோ, லண்டனிலேயே தங்கியிருந்து ஆங்கிலேய நாட்டின் குடியுரிமைப் பெற்று, தொடர்ந்து தன் மக்களுக்கான பிரதிநிதித் துவத்தை, மறையும் வரை தொடர்ந்தார். மிதவாத நாகா தலைவர் சிலுஆவோ தலைமையில் வந்தவர்கள், இந்திய அரசுடன் பேசி தீர்க்க முதன்மை கொடுத்தார்கள். அதனால் 1963ம் ஆண்டு ஜனவரி முதல் நாளே, தனி நாகாலாந்து மாநிலம் உருவானது. அதன் முதல் முதலமைச்சராக சிலுஆவோ பொறுப் பேற்றார். ஆனாலும் நாகா தேசிய கவுன்சில் பெயரில் சில தலைவர்கள் ஆயுதப் போராட்ட நடவடிக் கையை தொடர்ந்தார்கள். அன்றைய கிழக்கு பாகிஸ் தானுக்கும், சீனாவிற்கும் சென்று, கொரில்லா போராட்ட பயிற்சிகள் எடுத்து, ஆயுதங்களையும், தோட்டாக்களையும் பெற்று வந்து தாக்கு தல்கள் நடத்தினார்கள். 1976ம் ஆண்டு இந்திய அரசுடன், நாகர்கள் போர் நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரி புராவுக்கு ஆளுநராக இருந்த எல்.பி.சிங் முயற் சியில், சில்லாங் சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை நிராகரித்த
ஐசக் ஸ்வு மற்றும் துயிங்கலன் முய்வா ஆகி யோர் பிசோ தலைமை யிலான நாகா தேசிய கவுன்சிலில் இருந்து வெளியே வந்து புதிய நாகா புரட்சிகர குழுவை உருவாக்கினார்கள். 1980ம் ஆண்டு அது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்று பெயர் பெற்றது. ஆயுதப் போராட் டத்தை அது தொடர்ந்து நடத்தியது. அந்த அமைப்பு இரண்டாக உடைந்து, அதில் ஒன்றை கப்லாங் தலைமையேற்றார்.
ஐசக்கும், முய்வாவும் 1995ம் ஆண்டு பாரீஸ் நகரிலும், பிறகு நியூயார்க் நகரிலும், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். 1997ம் ஆண்டு பிப்ரவரியில் சூரிச் நகரில் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2002ம் ஆண்டில் டோக்கியோவில் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவ்வாறு 9 ஆண்டுகளாக ஒரு தீர்வு வேண்டி, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கள் எழுப்பி வரும், சுதந்திரமான தனி இறையாண்மை கொண்ட அரசு என்ற கோரிக்கையை கைவிடுவதோ, அல்லது இந்தியாவிற்கு உட்பட்டு, பெரிய அளவில் சுயாட்சி கொண்ட நாகா மாநிலத்தை உருவாக்குவது என்பதோ, பேச்சு வார்த்தை நிறை வில் காணப்படும். மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பலப் பகுதிகளை, நாகாலாந் துடன் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். 50க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய ஆதி வாசி இனங்கள் அங்கே வாழ்கின்றனர். அங்கு வாழும் மைத்தி இன மக்கள் இந்துக்களாகவும், அனைத்து மலைவாழ் பழங்குடியினர் கிறித்துவர் களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நிலப்பிரச்சினையில் மோதல்களையும் கொண் டிருக்கிறார்கள். அந்த இடைவெளியில்தான் இதுவரை இந்திய அரசு தனது அதிகாரத்தை நிலைக்க வைத்துக் கொண் டிருக்கிறது.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுவாகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவர் களாகவும், தங்களுக்கென ஒரு தலைமறைவு அர
சாங்கத்தை நடத்திக் கொண் டிருப்பவர்களாகவும், ஆயுதம் தாங்கிய படை யணியையும், போது மான தளவாடங்களையும் வைத்திருப்பவர் களாகவும், 60 ஆண்டு போராட்ட வரலாற்று அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருக்கின்ற நாகா புரட்சியாளர்களுடன், இந்திய அரசு ஒரு மரியாதைக்குரிய தீர்வை எட்டுமா என்பதே எதிர் காலத்தை நோக்கி நிற்கும் கேள்வி.
தென்னிந்தியர்கள் வட இந்தியா செல்லும் போதோ, வேறு இடங்களிலோ, நாகர்களை சந்தித்தால், சந்தித்து அவர்களது தேசிய இனப்பிரச்சினையின் மீது அக்கறையுடன் விவாதித்தால், நீங்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியே வரப் போகிறீர்கள் என்ற கேள் வியை சாதாரணமாக நாகர் கள் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, இந்தியாவை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். தங்களுடைய பிரச்சனை கள் மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருக்கின்ற அனைத்து தேசிய இனங் களும், சுயநிர்ணய உணர் வுள்ளவர்கள் என்பதாக நாகர்கள் எண்ணுகி றார்கள்.
பேச்சு வார்த்தையின் இந்த கட்டத்தில் இந்திய அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் நாகர்களோ, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப் படவேண்டும் என்று, முன்பு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள விவ ரத்தை வெளியே கூறி, தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் நல்லதொரு தீர்வை எட்டலாம் என நாகர்கள் முயற்சிப்பதாகவும், ஏற் கனவே ஒப்புக் கொண்ட விதிகளை மீறுவதன் மூலம், இந்திய அரசு அத்தகைய பேச்சுவார்த் தையை உடைத்து விட முயற்சிக்கிறது என்றும், நாகர்கள் குற்றம் சாட்டுகி றார்கள். பேச்சு வார்த்தை உடைந்தால், அதற்காக நாகர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அவர் கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
இப்போது இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரை நாகர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தியில் 60வது முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. சென்ற ஆண்டு நாகாலாந்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் இல்லாத முறையில், ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்ப தாக அந்த தீர்மானம் அழைக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இருக்கின்ற, அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒரே குரலில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் நாகா அரசியல் பிரச்சினையின் மீது ஆய்வு செய்ய, ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதாக எழுதப்பட்டது. பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கின்ற இந்தியநாகா அரசியல் பிரச்சினைக்கு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்காக தங்களது புதிய நேர்மையான முயற்சியை எடுப்பதாக, இந்திய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அந்த தீர்மானம் பாராட்டியுள் ளது.
மேற்படி செய்தியை மாநிலங்களவை உறுப் பினர் கேகிஹோ சிமோமி, நாடாளுமன்றத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆகவே பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தலைமறைவு நாகர் குழுக்களான, ஐசக்முய்வா தலைமையிலான நாகா லாந்து தேசிய சோசலிச கவுன்சிலும், கப்லாங் தலை மையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலும் மற்றும் நாகா தேசிய கவுன்சிலும் எந்த ஒரு நாகர்களுக்கான சிறந்த தீர்வையும், பல் வேறு குழுக்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி. கூறினார்.
1950ம் ஆண்டு காலகட்டங்களிலேயே, நாகா எழுச்சி, பிசோ தலைமையில் உருவான நாகா தேசிய கவுன்சில் மூலமாகக் கிளம்பியது. அது சுதந்திரமான, தனி இறை யாண்மை கொண்ட ஒரு நாகா தேசத்தை அடைவதுதான் தங்கள் லட்சியம் என்பதை முன்வைத்தது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வட்டார நிர்வாகத்தின் கீழ், நாகா மலைகளின் மாவட்டம் என்பது இருந்தது. அத னால் அப்போது கிளம்பிய நாகா எழுச்சியை, உள்ளே நுழைந்த இந்திய ராணு வம் அடக்கி விட்டது. அதனாலேயே நாகா தேசிய கவுன்சிலின் புரட்சிகர உறுப்பினர்கள், தலைமறைவாகச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் பிசோ லண்டனுக்கு தப்பி ஓடினார். கிறித்துவ பாதிரியாரான மைக்கேல் ஸ்காட் பொறுப்பில் பிசோ, லண்டனிலேயே தங்கியிருந்து ஆங்கிலேய நாட்டின் குடியுரிமைப் பெற்று, தொடர்ந்து தன் மக்களுக்கான பிரதிநிதித் துவத்தை, மறையும் வரை தொடர்ந்தார். மிதவாத நாகா தலைவர் சிலுஆவோ தலைமையில் வந்தவர்கள், இந்திய அரசுடன் பேசி தீர்க்க முதன்மை கொடுத்தார்கள். அதனால் 1963ம் ஆண்டு ஜனவரி முதல் நாளே, தனி நாகாலாந்து மாநிலம் உருவானது. அதன் முதல் முதலமைச்சராக சிலுஆவோ பொறுப் பேற்றார். ஆனாலும் நாகா தேசிய கவுன்சில் பெயரில் சில தலைவர்கள் ஆயுதப் போராட்ட நடவடிக் கையை தொடர்ந்தார்கள். அன்றைய கிழக்கு பாகிஸ் தானுக்கும், சீனாவிற்கும் சென்று, கொரில்லா போராட்ட பயிற்சிகள் எடுத்து, ஆயுதங்களையும், தோட்டாக்களையும் பெற்று வந்து தாக்கு தல்கள் நடத்தினார்கள். 1976ம் ஆண்டு இந்திய அரசுடன், நாகர்கள் போர் நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரி புராவுக்கு ஆளுநராக இருந்த எல்.பி.சிங் முயற் சியில், சில்லாங் சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை நிராகரித்த
ஐசக் ஸ்வு மற்றும் துயிங்கலன் முய்வா ஆகி யோர் பிசோ தலைமை யிலான நாகா தேசிய கவுன்சிலில் இருந்து வெளியே வந்து புதிய நாகா புரட்சிகர குழுவை உருவாக்கினார்கள். 1980ம் ஆண்டு அது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்று பெயர் பெற்றது. ஆயுதப் போராட் டத்தை அது தொடர்ந்து நடத்தியது. அந்த அமைப்பு இரண்டாக உடைந்து, அதில் ஒன்றை கப்லாங் தலைமையேற்றார்.
ஐசக்கும், முய்வாவும் 1995ம் ஆண்டு பாரீஸ் நகரிலும், பிறகு நியூயார்க் நகரிலும், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். 1997ம் ஆண்டு பிப்ரவரியில் சூரிச் நகரில் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2002ம் ஆண்டில் டோக்கியோவில் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவ்வாறு 9 ஆண்டுகளாக ஒரு தீர்வு வேண்டி, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கள் எழுப்பி வரும், சுதந்திரமான தனி இறையாண்மை கொண்ட அரசு என்ற கோரிக்கையை கைவிடுவதோ, அல்லது இந்தியாவிற்கு உட்பட்டு, பெரிய அளவில் சுயாட்சி கொண்ட நாகா மாநிலத்தை உருவாக்குவது என்பதோ, பேச்சு வார்த்தை நிறை வில் காணப்படும். மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பலப் பகுதிகளை, நாகாலாந் துடன் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். 50க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய ஆதி வாசி இனங்கள் அங்கே வாழ்கின்றனர். அங்கு வாழும் மைத்தி இன மக்கள் இந்துக்களாகவும், அனைத்து மலைவாழ் பழங்குடியினர் கிறித்துவர் களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நிலப்பிரச்சினையில் மோதல்களையும் கொண் டிருக்கிறார்கள். அந்த இடைவெளியில்தான் இதுவரை இந்திய அரசு தனது அதிகாரத்தை நிலைக்க வைத்துக் கொண் டிருக்கிறது.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுவாகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவர் களாகவும், தங்களுக்கென ஒரு தலைமறைவு அர
சாங்கத்தை நடத்திக் கொண் டிருப்பவர்களாகவும், ஆயுதம் தாங்கிய படை யணியையும், போது மான தளவாடங்களையும் வைத்திருப்பவர் களாகவும், 60 ஆண்டு போராட்ட வரலாற்று அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருக்கின்ற நாகா புரட்சியாளர்களுடன், இந்திய அரசு ஒரு மரியாதைக்குரிய தீர்வை எட்டுமா என்பதே எதிர் காலத்தை நோக்கி நிற்கும் கேள்வி.
Monday, February 15, 2010
எண்ணெய்க்கான போர், இன அழிப்பானதா?
இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 4வது ஈழப்போர், சென்ற ஆண்டு மே 3ம் வாரம் முடிவுற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்தப் போரில் 40,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஐ.நா.சபையே உறுதி செய்துள்ளது. போரை நடத்தியவர்கள் சிங்கள பேரினவாத அரசு சக்திகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவி செய்த 7 வெளிநாடுகளின் அரசுகளும் என்பதாகவும், பல நேரங்களில் பல சக்திகள் கூறியுள்ளன. இந்தியா, பாகிஸ் தான், சீனா ஆகிய நாட்டின் அரசுகள் தங்களுக்கு போரில் வெல்ல உதவி செய்ததாக, இலங்கை ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் கூறி யுள்ளனர். அதில் குறிப்பாக இந்தியாவும், சீனாவும் எதற்காக தமிழருக்கெதிரான இனவாதப் போரில், தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி, பதில் கிடைக்காமலேயே நின்று கொண்டிருக்கிறது.
மேற்கண்ட அண்டை நாடுகளின் அரசுகள், ஆயுதங்களை அளிப்பதும், ராணுவ ஆலோசனைகள் கொடுப்பதும், நேரடியாக களத்தில் இறங்குவதும், உளவுப் பணி மூலம் உதவுவதும் என அந்த இனவாதப் போரில் அங்கம் வகித் தார்கள். அதில் பாகிஸ்தான் தனது விமானிகளை அனுப்பி, அவர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் விமானங்களை, போர்ப் பகுதியில் இயக்கினர். சீன அரசு அதிகமான அளவில் ஆயுதங்களை, இலங்கை அரசுக்கு போர் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்திய அரசு தனது உளவு செயற்கைக் கோள்கள் மூலமும், தான் அனுப்பிய ரேடார்கள் மூலமும், போராளிகள் பற்றிய நடமாட்டச் செய்திகளை, போர் நடத்திய பேரினவாத சக்திகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இந்த அளவுக்கு நியாயமற்ற போர் என்ற உண்மை தெரிந்திருந்தும், எதற்காக பேரார்வத்துடன் அண்டை நாட்டு அர சாங்கங்கள், ஒரு இனவாதப் போரில் ஈடுபட்டார்கள்? இன அழிப்பு என்ற அளவுக்கு அந்தப் போர் இட்டுச் சென் றாலும், இந்த அண்டை நாட்டு அரசர் கள் ஏன் பின்வாங்கவில்லை? அந்த அளவுக்கு இந்த அண்டை நாட்டு அர சாங்கங்களுக்கு ஈழப்போரிலே என்ன ஈடுபாடு?
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக, இந்திய அரசு இந்த இன அழிப்புப் போரில் ஈடுபட்டது என்று சொல்வாருமுண்டு. ஆனால் வேறுசில கேள்விகள் எழுகின்றன. ராஜிவ் காந்தி பொறுப்பிலிருந்த போது, கொழும்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில், ஒரு சிங்கள சிப்பாய் அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்க முயற்சித்த சதி, அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கள ராணுவ வீரன் மீது, இந்திய அரசோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையோ, அல்லது சோனியா காந்தி குடும்பமோ எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்? அதேபோல ஒரு நிகழ்ச்சிக்காக, ஒரு நாட்டின் அரசு முழுவதும் ஈடுபட்டு, ஒரு இன அழிப்பை நடத்துவதற்கு துணியுமா? அப்படியானால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே? அது என்ன?
ஒவ்வொரு நாட்டின் அரசும், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஏதாவது ஒரு வகையில், பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதில் நல்ல வழி அல்லது கெட்ட வழி என்ற வேறுபாட்டிற்கே இடமில்லாமல், எல்லா அரசுகளும் நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டிற்குள் மக்கள் மத்தியில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக வெளி யிலிருந்து, ஏதாவது வகையில் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது. வளராத நாடுகள் அதை அன்னிய நாடுகளிலிருந்து கடனாகப் பெறுகின்றனர். வளர்ந்த நாடுகள் அடுத்த கட்டமாக, தங்களது சுரண்டலை நாடு தாண்டி நடத்துவதற்கு, தருணம் பார்த்து அலைகின்றனர். இதில் 2வது வகை சிந்தனை இந்திய அரசையும், சீன அரசையும் பீடித்துள் ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டு எண்ணைய் வளங்களை, கைப்பற்ற அனுமதிக்கின்ற இந்த நாடுகள், தங்கள் பங்குக்கு தங்களை விட சிறிய நாடுகளிடம் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு முயற்சி இலங்கைத் தீவில் உள்ள எண்ணெய் வளங்களின் மீது பாய்ச்சப்பட்டது.
புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையோ இந்திய அரசுக்கு மேலோங்கியிருக்க நியாயமில்லை. மாறாக இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடிய எண்ணெய் வளங்களின் மீது இந்திய அரசுக்கு ஒரு கண் உண்டு.
இலங்கையில் தமிழர்களின் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணமான மன்னாரிலும், கிழக்கு மாகாணமான திரிகோணமலையிலும், கடற்கரை ஓரத்தில் எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை இந்த அரசுகள் முகர்ந்து பார்த்து விட்டன. திரிகோணமலை துறைமுகப் பகுதியில், சீனகுடா என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை தேக்கி வைக்கலாம். இந்தியாவின் இந்திய ஆயில் கம்பெனி நிறுவனம், இந்த இடத்தில் தனது தலைமையகத்தை வைத்துள்ளது. அதில் தேக்கி வைக்கும் பெட்ரோலையும், டீசலையும், 200க்கு மேற்பட்ட பங்குகள் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வியாபாரம் செய்து வருகிறது. இதேபோல மன்னார் மாவட்டத்தில் எண்ணெய் வளம் அதிகம் கிடைக்கிறது. அங்கு கடற்கரையோரம் கடலுக்கு உள்ளே, 100 ஏக்கர் பகுதியை, இந்திய அரசு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக வாங்கி வைத்துள்ளது. ஓ.என்.ஜி.சி. என்ற எண்ணெய், இயற்கை வாயு கமிஷன், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கையான துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஒன்று. உயரமான மலைப்பகுதிகளை அருகிலேயே கொண்ட இந்த உட் துறைமுகம், போர் காலங்களிலும் கப்பல்களை உள்ளே ஒளித்து வைக்க வாய்ப்பான ஓர் இடம். அதனருகே உள்ள உவர் மலையில், இலங்கை ராணுவத் தளம் உள்ளது. அதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, கப்பல் படை அனுப்பப்படும். யாழ்ப்பாண கப்பல் சேவையும், ராணுவத்திற்கு வேண்டிய சேவைகளும், இந்த தளத்திலிருந்து கொண்டு செல்லப்படும். ஆகவே உட்துறைமுக வீதியில், மீன்வளம் அதிகமாக கிடைத் தாலும், அதி உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில், மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. துறைமுகம் அருகே யுள்ள மாவாலை என்ற இடத்தில் ஒரு சிமெண்ட் ஆலை இருக்கிறது. அதில் இப்போது சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் அதை அடுத்துள்ள புல்மோட்டை என்ற இடத்தில் இலுமினேட் என்ற உயர் ரக தாதுப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. அங்கே வெளிநாட்டுக் கப்பல்களை மண் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளது.
2003ம் ஆண்டு மே 12ம் நாள் வெளியான செய்திப்படி, இந்தியாவின் ஐ.ஓ.சி., சிலோன் பெட்ரோலியம் கார்ப் ரேஷனுக்கு சொந்தமான, திரிகோணமலை குளப்பண்ணையை குத்தகையாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டது. அதற்காக ஐ.ஓ.சி. ரூ.200 கோடியை கொடுத்தது. 2002 செப்டம்பர் முதல், 2003 ஆகஸ்ட் வரை 0.48 மில்லியன் டன் விநியோகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக இலங்கை ஐ.ஓ.சி.க்கு 10 ஆண்டுகளுக்கு வணிகத்திற்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிலவும் 35% வரியை குறைத்து 15% என்று பெறுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான கருவிகள் கொணர, சுங்கவரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக்க இந்திய அரசு, அந்த வட்டாரத்தில் அல்லது அருகே உள்ள பகுதிகளில், எந்தவொரு ஆயுதம் தாங்கிய சட்டவிரோத குழுக்களுடைய நடமாட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது.
அதேசமயம் சீன அரசு மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் வாயு கிணறுகளை தோண்ட திட்டமிட்டது. இந்தியாவின் நடமாட்டத்தை சமன் படுத்த, மகிந்தா அரசு சீனாவிற்கு அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தது. அந்த பகுதியை 8 பிரிவுகளாகப் பிரித்து, இந்தியாவிற்கு ஒன்றும், சீனாவிற்கு ஒன்றும், மீதி 6 பிரிவுகளை அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது என 2007ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் இலங்கை அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்குள் சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அந்த பகுதியில் இறங்கியது. இவ்வாறாக இந்த இரு அரசுகளும் தங்களுக்கான எண்ணெய் வயல்களை கைப்பற்ற, மகிந்தாவின் இனவாதப் போருக்கு உதவ வேண்டிய கட்டாயம் எழுந்தது. தந்திரமாக இந்த இரு அரசுகளுக்கும் எண்ணெய் வளத்தை தாரை வார்த்து, அவர்களை தான் நடத்திய இனவாதப் போரில் இலங்கை அரசு ஈடுபடுத்தியது. அதன் மூலம் தனது தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தியது. அதேசமயம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவையும் இலங்கை அரசு, எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க அழைத்தது. அதனால் தான் எண்ணெய்க்கான இந்தப் போர், ஒரு இன அழிப்பு வேலையை செய்து, சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி விட்டது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பேரரசு, தனது மேலாதிக்க மனோபாவத்துடனும், விரிவாக்க செயல் திட்டத்துடனும், தெற்காசியா எங்கும் அதிகாரம் செய்வதற்கான தன்மைகொண்டது என்பதனால், 2000தின் பத்தாண்டுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டவும், இந்த இனஅழிப்பு போர் அதற்கு உதவிகரமாக இருந்து விட்டது. என்பதையும் நாம் மறக்க முடியாது. தன்நாட்டிற்கு உள்ளேயே, தேசிய இனங்களின் உரிமையை அடக்கும் ஒரு அரசிடம், நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
மேற்கண்ட அண்டை நாடுகளின் அரசுகள், ஆயுதங்களை அளிப்பதும், ராணுவ ஆலோசனைகள் கொடுப்பதும், நேரடியாக களத்தில் இறங்குவதும், உளவுப் பணி மூலம் உதவுவதும் என அந்த இனவாதப் போரில் அங்கம் வகித் தார்கள். அதில் பாகிஸ்தான் தனது விமானிகளை அனுப்பி, அவர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் விமானங்களை, போர்ப் பகுதியில் இயக்கினர். சீன அரசு அதிகமான அளவில் ஆயுதங்களை, இலங்கை அரசுக்கு போர் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்திய அரசு தனது உளவு செயற்கைக் கோள்கள் மூலமும், தான் அனுப்பிய ரேடார்கள் மூலமும், போராளிகள் பற்றிய நடமாட்டச் செய்திகளை, போர் நடத்திய பேரினவாத சக்திகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இந்த அளவுக்கு நியாயமற்ற போர் என்ற உண்மை தெரிந்திருந்தும், எதற்காக பேரார்வத்துடன் அண்டை நாட்டு அர சாங்கங்கள், ஒரு இனவாதப் போரில் ஈடுபட்டார்கள்? இன அழிப்பு என்ற அளவுக்கு அந்தப் போர் இட்டுச் சென் றாலும், இந்த அண்டை நாட்டு அரசர் கள் ஏன் பின்வாங்கவில்லை? அந்த அளவுக்கு இந்த அண்டை நாட்டு அர சாங்கங்களுக்கு ஈழப்போரிலே என்ன ஈடுபாடு?
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக, இந்திய அரசு இந்த இன அழிப்புப் போரில் ஈடுபட்டது என்று சொல்வாருமுண்டு. ஆனால் வேறுசில கேள்விகள் எழுகின்றன. ராஜிவ் காந்தி பொறுப்பிலிருந்த போது, கொழும்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில், ஒரு சிங்கள சிப்பாய் அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்க முயற்சித்த சதி, அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கள ராணுவ வீரன் மீது, இந்திய அரசோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையோ, அல்லது சோனியா காந்தி குடும்பமோ எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்? அதேபோல ஒரு நிகழ்ச்சிக்காக, ஒரு நாட்டின் அரசு முழுவதும் ஈடுபட்டு, ஒரு இன அழிப்பை நடத்துவதற்கு துணியுமா? அப்படியானால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே? அது என்ன?
ஒவ்வொரு நாட்டின் அரசும், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஏதாவது ஒரு வகையில், பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதில் நல்ல வழி அல்லது கெட்ட வழி என்ற வேறுபாட்டிற்கே இடமில்லாமல், எல்லா அரசுகளும் நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டிற்குள் மக்கள் மத்தியில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக வெளி யிலிருந்து, ஏதாவது வகையில் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது. வளராத நாடுகள் அதை அன்னிய நாடுகளிலிருந்து கடனாகப் பெறுகின்றனர். வளர்ந்த நாடுகள் அடுத்த கட்டமாக, தங்களது சுரண்டலை நாடு தாண்டி நடத்துவதற்கு, தருணம் பார்த்து அலைகின்றனர். இதில் 2வது வகை சிந்தனை இந்திய அரசையும், சீன அரசையும் பீடித்துள் ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டு எண்ணைய் வளங்களை, கைப்பற்ற அனுமதிக்கின்ற இந்த நாடுகள், தங்கள் பங்குக்கு தங்களை விட சிறிய நாடுகளிடம் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு முயற்சி இலங்கைத் தீவில் உள்ள எண்ணெய் வளங்களின் மீது பாய்ச்சப்பட்டது.
புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையோ இந்திய அரசுக்கு மேலோங்கியிருக்க நியாயமில்லை. மாறாக இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடிய எண்ணெய் வளங்களின் மீது இந்திய அரசுக்கு ஒரு கண் உண்டு.
இலங்கையில் தமிழர்களின் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணமான மன்னாரிலும், கிழக்கு மாகாணமான திரிகோணமலையிலும், கடற்கரை ஓரத்தில் எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை இந்த அரசுகள் முகர்ந்து பார்த்து விட்டன. திரிகோணமலை துறைமுகப் பகுதியில், சீனகுடா என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை தேக்கி வைக்கலாம். இந்தியாவின் இந்திய ஆயில் கம்பெனி நிறுவனம், இந்த இடத்தில் தனது தலைமையகத்தை வைத்துள்ளது. அதில் தேக்கி வைக்கும் பெட்ரோலையும், டீசலையும், 200க்கு மேற்பட்ட பங்குகள் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வியாபாரம் செய்து வருகிறது. இதேபோல மன்னார் மாவட்டத்தில் எண்ணெய் வளம் அதிகம் கிடைக்கிறது. அங்கு கடற்கரையோரம் கடலுக்கு உள்ளே, 100 ஏக்கர் பகுதியை, இந்திய அரசு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக வாங்கி வைத்துள்ளது. ஓ.என்.ஜி.சி. என்ற எண்ணெய், இயற்கை வாயு கமிஷன், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கையான துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஒன்று. உயரமான மலைப்பகுதிகளை அருகிலேயே கொண்ட இந்த உட் துறைமுகம், போர் காலங்களிலும் கப்பல்களை உள்ளே ஒளித்து வைக்க வாய்ப்பான ஓர் இடம். அதனருகே உள்ள உவர் மலையில், இலங்கை ராணுவத் தளம் உள்ளது. அதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, கப்பல் படை அனுப்பப்படும். யாழ்ப்பாண கப்பல் சேவையும், ராணுவத்திற்கு வேண்டிய சேவைகளும், இந்த தளத்திலிருந்து கொண்டு செல்லப்படும். ஆகவே உட்துறைமுக வீதியில், மீன்வளம் அதிகமாக கிடைத் தாலும், அதி உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில், மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. துறைமுகம் அருகே யுள்ள மாவாலை என்ற இடத்தில் ஒரு சிமெண்ட் ஆலை இருக்கிறது. அதில் இப்போது சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் அதை அடுத்துள்ள புல்மோட்டை என்ற இடத்தில் இலுமினேட் என்ற உயர் ரக தாதுப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. அங்கே வெளிநாட்டுக் கப்பல்களை மண் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளது.
2003ம் ஆண்டு மே 12ம் நாள் வெளியான செய்திப்படி, இந்தியாவின் ஐ.ஓ.சி., சிலோன் பெட்ரோலியம் கார்ப் ரேஷனுக்கு சொந்தமான, திரிகோணமலை குளப்பண்ணையை குத்தகையாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டது. அதற்காக ஐ.ஓ.சி. ரூ.200 கோடியை கொடுத்தது. 2002 செப்டம்பர் முதல், 2003 ஆகஸ்ட் வரை 0.48 மில்லியன் டன் விநியோகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக இலங்கை ஐ.ஓ.சி.க்கு 10 ஆண்டுகளுக்கு வணிகத்திற்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிலவும் 35% வரியை குறைத்து 15% என்று பெறுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான கருவிகள் கொணர, சுங்கவரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக்க இந்திய அரசு, அந்த வட்டாரத்தில் அல்லது அருகே உள்ள பகுதிகளில், எந்தவொரு ஆயுதம் தாங்கிய சட்டவிரோத குழுக்களுடைய நடமாட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது.
அதேசமயம் சீன அரசு மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் வாயு கிணறுகளை தோண்ட திட்டமிட்டது. இந்தியாவின் நடமாட்டத்தை சமன் படுத்த, மகிந்தா அரசு சீனாவிற்கு அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தது. அந்த பகுதியை 8 பிரிவுகளாகப் பிரித்து, இந்தியாவிற்கு ஒன்றும், சீனாவிற்கு ஒன்றும், மீதி 6 பிரிவுகளை அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது என 2007ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் இலங்கை அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்குள் சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அந்த பகுதியில் இறங்கியது. இவ்வாறாக இந்த இரு அரசுகளும் தங்களுக்கான எண்ணெய் வயல்களை கைப்பற்ற, மகிந்தாவின் இனவாதப் போருக்கு உதவ வேண்டிய கட்டாயம் எழுந்தது. தந்திரமாக இந்த இரு அரசுகளுக்கும் எண்ணெய் வளத்தை தாரை வார்த்து, அவர்களை தான் நடத்திய இனவாதப் போரில் இலங்கை அரசு ஈடுபடுத்தியது. அதன் மூலம் தனது தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தியது. அதேசமயம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவையும் இலங்கை அரசு, எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க அழைத்தது. அதனால் தான் எண்ணெய்க்கான இந்தப் போர், ஒரு இன அழிப்பு வேலையை செய்து, சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி விட்டது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பேரரசு, தனது மேலாதிக்க மனோபாவத்துடனும், விரிவாக்க செயல் திட்டத்துடனும், தெற்காசியா எங்கும் அதிகாரம் செய்வதற்கான தன்மைகொண்டது என்பதனால், 2000தின் பத்தாண்டுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டவும், இந்த இனஅழிப்பு போர் அதற்கு உதவிகரமாக இருந்து விட்டது. என்பதையும் நாம் மறக்க முடியாது. தன்நாட்டிற்கு உள்ளேயே, தேசிய இனங்களின் உரிமையை அடக்கும் ஒரு அரசிடம், நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
Sunday, February 14, 2010
காதலர் தினம் என்றால் என்ன?
இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். கையில் தாலியை வைத் துக்கொண்டு சிலர் இந்துத்துவாவாதிகள், யாராவது இளைஞர்களாக இருக்கும் ஆண்களும், பெண்களும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தாலே, அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அந்த தாலியைக் கட்டச்சொல்லலாம் என்று அலைகிறார்கள். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று அறிந்ததனால், காவல்துறை அதிகாரிகள் காதலர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வன்முறை சக்தி களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். மதவாத சக்திகள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட் டங்களும், போராட்டங்களும், மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாடு என்று இந்த தினத்தை வர்ணிக்கிறது. மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாட்டில் ஒரு அங்கமான, ஆங்கில நாட்காட்டி கூறும் தேதியைக் குறிப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் அறிவித்துக்கொள்கிறார்கள். மேற்கத்திய பண்பாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, பேண்ட், சட்டையை போட்டுக் கொண்டு, பல மதவாத சக்திகளும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட போராட் டங்களின் மூலம் அவர்கள் இந்தியாவின் நாட்டுப்பற்று உணர்வை வளர்க்க முடியும் என்றால், மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கும்.
இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.
காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;
அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.
குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.
உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.
இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.
காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;
அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.
குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.
உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.
Subscribe to:
Posts (Atom)
