Tuesday, April 13, 2010
கல்விக்கூடத்தில் எதிரொலிக்கும் மாவோயிசம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 6ம் நாள் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் 76 வீரர்கள் மட்டுமே இறந்து போனதாக, மத்திய சிறப்பு காவல்படை சார்பாக அரசு அறிவித்தது. அதன் பிறகு அது பற்றிய பல்வேறு விவாதங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில காட்சி ஊடகங்களில் அதிகமான அளவு, அரசு தரப்பு தாக்குதல்கள் உள்நோக்கம் கொண்டவை என்பதாக சொல்லப்பட்டு வருகின்றன. அதாவது பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், மலைகளிலும், காடுகளிலும் கிடைக்கின்ற கனிம வளங்களை கொள்ளையடித்துச் செல் வதற்கு வருகின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்க்கிறது என்பது அத்தகைய உள்நோக்கத்தின் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. அப்படிச் சூழலில் பாரம்பரியமாக தாங்கள் காத்து வரும் கனிமவளங்களை, அந்நிய னுக்கு கொள்ளை போக அனுமதிக்க தயாராக இல்லாத தன்மைதான் மோதலை ஏற்படுத்தியுள்ளது என அவை சித்தரிக்கின்றன. கட்டாயமான இடம் பெயர்தலை விரும்பாத பழங்குடி மக்களும், அவர்களுடைய நலனுக்காக ஆயுதம் தூக்கி உள்ள மாவோயிஸ்ட்டுகளும் இந்தப் போரில் அங்கம் வகிப்பதாக அவை கூறுகின்றன. பரபரப்புக்காகவும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், கருத்துச் சொல்வதன் மூலம் அத்தகைய ஊடகங்கள் வணிகம் செய்கிறார்கள் என்று கூட நாம் எண்ணிப்பார்க்கலாம். ஆனால் நாட்டுப்பற்று கொண்ட, அறிவாளி பிரிவினரான அதிலும் முன்னோடிப் பாத்திரத்தை வகிக்கின்ற, மாணவச் சமூகம் இதுபற்றி விவாதித்தால், கவனமாக கவனிக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நாட்டுப் பற்றை இழந்து, தனி மனித லாபத்திற்காக ஊழலில் ஈடுபடலாம். ஆனால் இந்த நாடு எதிர்காலத்தை வளரும் இளைய சமுதாயத்திடம், குறிப்பாக மாணவச் சமுதாயத்திடம் ஒப்படைத்திருக்கிறது. அப்படிப்பட்ட மாணவ சமூகத்திற்குள், இந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட்டு தாக்குதல் விவாதிக்கப்படும் போது, அல்லது சச்சரவாக மாறும்போது, அதிக கவனத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது.இந்தியாவிலுள்ள கல்விச்சாலைகளில் அதிலும் உயர்கல்விச் சாலைகளில், அதிகளவில் முன்னேறிய பல்கலைக்கழகமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மதிக்கப்படுகிறது. இதுவும் மற்றவை போல சுயாட்சித் தன்மை கொண்டதாக, உயர்ந்த கல்வியாளர்களின் வழிகாட்டலில் நடத்தப்படும் பல்கலைக்கழகம். அதில் கடந்த வெள்ளிக்கிழமை, அய்சா என்ற அகில இந்திய மாணவர் கழகமும், டி.எஸ்.யூ. என்ற டெல்லி மாணவர் கழகமும் நடத்திய, மக்கள் மீதானப் போர் என்ற பெயரில் ஒரு மன்றத்தை தொடங்கினார்கள். அதில் சத்தீஸ்கர் விவகாரம் விவாதிக்கப்பட்டது. அதைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்திய தேசிய மாணவர் சங்கமும், பா.ஜ.க. தலைமையிலான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தும் சேர்ந்து, கருத்தரங்கு நடத்தியவர்களை தாக்கி இருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணத் தையும் அவர்கள் சொல்கிறார்கள். அதாவது மாவோயிசத்தை ஆதரித்து, சத்தீஸ்கரில் அரசப்படை வீரர்கள் கொல்லப்பட்டதை வரவேற்று கருத்தரங்கு நடத்தியதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் கருத்தரங்கு நடத்திய மாணவரமைப்புகள் அதை மறுத்தன. மக்கள் மீது அரசப்படை போர் நடத்துவதாகவும், அதை எதிர்த்துத்தான் தாங்கள் கருத்தரங்கு நடத்துவதாகவும் அவர்கள் கூறினார்கள். மறுநாளே நக்சல் எதிர்ப்பு மன்றம் என்பதாக காங்கிரஸ், பா.ஜ.க. மாணவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி விட்டார்கள். அவர்களுடன் இட ஒதுக்கீட்டை மறுக்கும் மாணவர் அமைப்பான, சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பும் சேர்ந்து கொண்டது. நேற்று இந்த நக்சல் எதிர்ப்பு மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள், நிர்வாக அனுமதியின்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்பது அவர்களது கோரிக்கை. அதில் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பங்கள் பிரதிபலித்தன. கடந்த 40 ஆண்டுகளாக ஜே.என்.யூ. மாணவர் பேரவை, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாக மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அது அங்கீகரிக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர் பேரவை சட்ட திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைசியாக நடந்த மாணவர் தேர்தல் 2007ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு லிங்டாக்குழு பரிந்துரைகளின் படி, உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் மாணவர் பேரவைத் தேர்தல் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் கல்விச்சாலைகளின் வரலாற்றிலேயே, பணமோ, ஆள்பலமோ இல்லாமல் ஜனநாயக ரீதியாக நடந்து வந்த தேர்தல்,ஜே.என்.யூ. மாணவர் பேரவை தேர்தல் மட்டுமே. அதற்கும் வேட்டு வைத்து விட்டது புதிய குழுவின் பரிந்துரை.இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சிகரமான மார்க்சிய லெனினிய கட்சியின் வழிகாட்டலில் செயல்பட்டு வரும் அய்சா என்ற மாணவர் அமைப்பு, ஜே.என்.யூ. மாணவர் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது. 1990ம் ஆண்டில் ஆகஸ்ட் 9ம் நாள் அலகாபாத்தில் தோன்றிய இந்த மாணவர் அமைப்பு, ஜே.என்.யூ. என்ற முன்னேறிய அறிவாளித் தளத்தில் தொடர்ந்து மாணவர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. 1994 மற்றும் 1995 ஆண்டுகளில் இந்த அய்சாவின் பிரபல முன்னோடியான சந்திரசேகர், ஜே.என்.யூ. மாணவர் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பண்ணை ஆதிக்கவாதிகள் உதவியுடன் லாலு கட்சி எம்.பி. 1997ம் ஆண்டு பீகாரில் சிவான் பகுதியில் சுட்டுக் கொன்றார். அது டெல்லியிலுள்ள ஜே.என்.யூ.வில் எதிரொலித்தது. 16 மாநிலங்களில் வேலை செய்தாலும் அய்சா அமைப்பு, ஜே.என்.யூ. வில் தான் பிரபலமாக இருக்கிறது. 2006ம் ஆண்டு அய்சாவைச் சேர்ந்த, ஒரு அமெரிக்க குடிமகனான டெய்லர் வாக்கர் வில்லியம்ஸ், ஜே.என்.யூ. மாணவர் பேரவையில் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். 2007ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நந்திகிராம் வன்முறையின் எதிரொலியாக, சி.பி.எம்மின் மாணவர மைப்பான எஸ்.எஃப்.ஐ. தோற்கடிக்கப் பட்டு, ஜே.என்.யூ. மாணவர் பேரவையில் 4 முக்கிய இடங்களையும் அய்சா கைப்பற்றி யது. இத்தகைய தொடர் வெற்றிகளை புரட்சிகரமானவர்கள் சங்கம் எப்படி பெறலாம் என்ற ஆதங்கத்தில்தான், அரசாங்கத்தின் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தடைகள் இரண்டு ஆண்டுகளாக, ஜே.என்.யூ.வின் மாணவர் பேரவையை செயல்பட விடாமல் செய்துள்ளது. ஜனநாயக முறையில் நம்பிக்கை உள்ளவர்களாக அறிவித்துக் கொள்ளும் ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இணைந்து, பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயக இயங்குதலுக்கு தடையாக இருப்பது எதனால்? சென்ற வாரம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் சுனில் மாண்டிவால் என்பவர், மாவோயிஸ்ட் தலைவர் கோபாத் காண்டியு டன் தொடர்பு கொண்டிருந்தார் என்று காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் இலக்கியங்களை படித்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. ஜே.என்.யூ. ஆசிரியர் சமூகமும், 40 ஆண்டுகளாக நடந்து வந்த மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து கிறது. 1960ன் கடைசியில் உருவான நக்சல்பாரி விவசாய ஆயுதப் போராட்டம், இந்திய நாடெங்கும் இருக்கும் உயர்கல்விச் சாலைகளில், மாவோ சிந்தனையை நோக்கி பல மாணவர்களை அணி திரட்டியது. அடக்கு முறை எங்கெல்லாம் இருக்குமோ, அங்கெல் லாம் எதிர்ப்பு இருக்கும் என்ற மாசே துங்கின் மேற்கோள் இங்கே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கல்வியறிவு கிடைக்கப் பெறாத, வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாடும் பழங்குடி மக்களை விரட்டுவதற்காக, அவர்கள் மீது அரசப் படைகளை ஒரு புறம் ஏவிக் கொண்டே, அதன் எதிரொலியாக ஜனநாயக குரல் எழுப்பும் மாணவ சமூகத்தை எதிர்ப்பதற்கும் இந்தியாவை ஆளும் கட்சிகள் தயாராகி வருவது ஆரோக்கியமாகத் தெரியவில்லை.
Monday, April 12, 2010
மாநகரப் போக்குவரத்து மக்களை மதிக்கிறதா?
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சமீப ஆண்டுகளில் அதிகமான அளவில் புதிய வாகனங்களை இறக்கி யுள்ளது. அதற்காக பலகோடி ரூபாய்களை அரசு பணத்தை ஒதுக்கியுள்ளது. புதிய பேருந்துகள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் குளிர் சாதன வசதிகள் கொண்ட பேருந்துகளும், மாநிலமெங்கும் பயணமாகின்றன. இவை யெல்லாம் ஆட்சியாளர்கள் சாதனைகளாக எடுத்துரைத்தாலும், பொதுமக்களும் அனுபவித்து வரும் மகிழ்ச்சியான பயணங்களை காண முடிகிறது. சென்னை மாநகரத்தில் பயணிக்கும் பேருந்துகளில், பல வகைகள் இருக்கின் றன. அதாவது ஒரே வழித்தடத்தில், பல தரங்களில் பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் விட்டுள்ளது. அதில் சாதாரண கட்டணம் கொண்ட பேருந்துகள் உண்டு. ஆனால் அவை அதிகமாக பயணிகளின் பார்வைகளில் படுவதில்லை. அதைப் போல விரைவு வண்டிகள் என்ற பெயரில், சாதாரண கட்டணத்தை விட சற்று அதிகமாக வசூலிக்கும் பேருந்து களும் பயணமாகின்றன. இந்த இரண்டு வகை பேருந்துகளுக்குள், பொது மக்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. அதனால் அன்றாட கூலிகளாக வருகின்ற பொதுமக்கள், குறைவான காசை கையிலெடுத்துக் கொண்டு பணிக்கு வருகின்ற ஆண்களும், பெண்களும் முதல்வகை என எண்ணிக்கொண்டு, இரண்டாவது வகை பேருந்தில் ஏற நேரிட்டால், நடத்துனருடன் பயணச்சீட்டு தொகைக்காக சண்டை போட்டுக் கொள்ளும் சூழல் எழுகிறது. ஏதோ அந்த குறிப்பிட்ட விரைவு பேருந்துகளில் நடத்துனர்களாக பணியாற்றக் கூடிய தொழிலாளர்கள் தான், தாங்கள் பணிக்குச் செல்லும் பேருந்துகளில், பயணச்சீட்டு விலையை கூட்டி வசூலிக்கிறார்கள் என்பது போல, நமது பயணிகள் குறை பட்டுக் கொள்கிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் தாண்டி டீலக்ஸ் என்ற தாழ்தள பேருந்து என அழைக்கப்படும் பேருந்துகள், ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிகமான அளவு அனுப்பப்படுகின்றன. இது போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளர்கள் செய்கின்ற தவறா அல்லது போக்குவரத்துக் கழகத்தின் தலைமை நிர்வாகமே, தங்களது நுகர்வோரின் நிலைமை தெரியாமல் விடுகின்ற பிழையா என்பது நமக்குத் தெரியவில்லை. இதை தெளிவுபடுத்த வேண்டியதும், சரிசெய்ய வேண்டியதும் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகத்தார் கைகளில் இருக்கிறது. இந்த டீலக்ஸ் பேருந்துகளில், புதிய வகை இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த புதிய இருக்கைகளை, அதிக அளவில் இணைப்பதற்காக, நெருக்கமாக நிறுவியிருக்கிறார்கள். அப்படி நெருக்கமாக நிறுவப்பட்டுள்ள இருக்கைகளுக்குள், பொதுவாக பயணிகள் அமர முடியாது. அமர்ந்தாலும் உடனடியாக எழ முடியாது. இத்தகைய இருக்கைகளில் சம்மந்தப்பட்ட அமைச்சரும், மேலதிகாரிகளும் அமர்ந்து பார்த்தால் மட்டும் தான், அதன் கடி னத்தை அவர்கள் உணர முடியும். அதற்கும் மேலாக பேருந்தின் பின் சக் கரம் இருக்கின்ற இடத்திற்கு மேலே அமர்த்தப்படும் இருக்கை, உயரமான ஒரு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் இருக்கையில் அமருவதற்கு பயணிகள் அச்சப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட டீலக்ஸ் பேருந்துகள் அதிகமான எண்ணிக்கையில், ஒவ்வொரு வழித்தடத்திலும் விடப்படுகின்றன. இத்தகைய பேருந்துகளுக்கு ஒவ்வொரு பயணச்சீட்டிற்கும், கூடுதலான அளவு காசு வாங்கப்படுகிறது. இது சாதார ணமாக அன்றாடம் அதிகாலையில் தொடங்கி பயணம் செய்து வரும், அத்துக் கூலிகளுக்கோ, ஏறமுடியாத பேருந்துகளாக ஆகிவிட்டன. இத்தகைய நெருக்கடியை போக்குவரத்துக் கழகம், ஏழை, எளிய மக்கள் மீது சுமத்தும் பொருளாதார சுமை என்பதாக உணருமா என்பது நமக்குத் தெரியவில்லை. சென்னையில் உள்ள மக்கள் தொகையில் 60 விழுக்காடு பேர், பேருந்து களிலும், நடைமேடைகளில் நடந்தும் பயணம் செய்பவர்கள். மக்களின் வரிப்பணத்தை வாங்குகின்ற அரசாங்கம், பொதுச்சேவைக்காக என்று ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகளை, பெருவாரியான பயனாளிகளுக்கு, எளிதாகப் பயன்படும்படி செலுத்த வேண்டாமா? தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தனது இணையதளத்தில், பேருந்துகளில் பயணிகள் வரிசையில் நின்று ஏறவேண்டும் என்று முதல் முழக்கங்களிலேயே குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்த, பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நின்று கொண்டு, பொதுமக்களை வரிசைப் படுத்தி பேருந்துகளில் ஏறுவதற்கு ஒழுங்குப்படுத்தி வந்தமுறை நினைவுக்குவருகிறது ஆனால் அப்படிப்பட்ட ஊழியர்கள் இப்போது பார்க்க முடியவில்லை. பேருந்துகளில் பின்புறம் வழியாக ஏறவேண்டும் என்றும், முன்புறம் வழியாக இறங்க வேண்டும் என்றும் ஒரு முறையும் கூட நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல, இத்தகைய ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு விதிகள், பயணிகளுக்கு பயனுள்ள அளவு பயன்படுத்தப்படாமல் எங்கேயோ சென்று விட்டது. அத்தகைய ஒழுங்குமுறைகள் அமலாகுமானால், பேருந்துகளில் நெருக்கடிகளை ஒழுங்குப்படுத்த உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமின்றி முன்புற வழியாக ஏறிக்கொண்டு, பயணிகள் பின்புறத்திலிருக்கும் நடத்துனர்களுக்கு, பயணச்சீட்டிற்கான சில்லரையையோ, நோட்டையோ கொடுத்து விடுவதும், அது கைமாறி, கைமாறி பின்னால் இருக்கும் நடத்துனரிடம் செல்வதும், திரும்பி பயணச்சீட்டும், சில்லரையும் திரும்புவதும் என்ற ஒரு சிக்கலான பயிற்சி, பேருந்திற்குள் ஒவ்வொரு நாளும் நடந்து வருவதை தவிர்க்கலாம். அத்தகைய பயிற்சியில் ஈடுபடும் காசு கொடுத்து அனுப்புபவர், தனது கையில் பயணச்சீட்டும், மீதக்காசும் வந்துச் சேரும் வரை பதட்டமாக இருக்க வேண்டிய நிலைமையையும் தவிர்க்கலாம். இதில் சிலருக்கு சில நேரங்களில் பயணச்சீட்டுகள் கைக்குக் கிடைத்தாலும், சில்லரைக் காசு திரும்பி வராமலேயே போய்விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பதட்டமான பணியை, பணிக்குச் செல்லும் பயணிகள் பேருந்துக்குள் நடத்தியாக வேண்டுமா? முன்பெல்லாம் நடத்துனர்கள் பேருந்தில் முன்னேயும், பின்னேயும் நடந்து சென்று சீட்டுக் கேட்டு, கொடுப் பார்கள் என்ற பழக்கம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் பல பேருந்து களிலும், நடத்துனர்கள் தங்களது இருக்கையை விட்டு எழுவதற்கே மிகவும் கடினப்படுகிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கின்ற நேரத்திலும், கூட்டமே பேருந்துக்குள் இல்லாத நேரத்திலும், இத்தகைய நடத்துனர்கள் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு, பயணிகளிடம் ரிலே முறையில் காசை வாங்கிப் போடுபவர்களாக மாறியிருக்கிறார்கள். இத்தகைய மாற்றம் கணிசமான பேருந்துகளில் இருப்பது கவலையளிக்கிறது. இன்னமும் சில பேருந்துகளில் நடத்துனர்கள் நடந்துச்சென்று சீட்டுக் கொடுக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் இருக்கிறது. போக்கு வரத்துக் கழகத்தின் தலைமையிலிருந்து இதற்கான வழிகாட்டும் நெறிகள் கொடுக்கப்பட்டால் நல்லது. தொழிற்சங்கங்கள் தங்களது தொழிலாளியின் பண்பை உயர்த்த, பொதுமக்களுடன் இனிமையான பழக்கத்தை மேற்கொள்ள கற்றுக்கொடுக்காத இன்றைய சூழலில், போக்குவரத்துக் கழக நிர்வாகம் தான் இதைச் செய்ய வேண்டும். கடந்த வாரம் இதேபோல பயணச்சீட்டு பரிசோதனை ஆய்வாளர்கள், ஒரு பேருந்தை மடக்கி நிறுத்தி கீழே இறங்கிய பெண் பயணியிடம், சீட்டை கேட்கிறார்கள். அவரது இருக்கைக்கு வந்து சீட்டுக் கொடுக்காத நடத்துனர், பேருந்தின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டிருந்ததைக் கூறி, அந்த பயணி பதிலளிக்கிறார். சீட்டுசோதனையாளர்கள் இதுபற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இத்தகைய போக்குகளை அடிப்படையில் களைய, நடத்துனர்களை நடக்கச் சொல்லுங்கள் என்பதாக நிர்வாகத்திடம் கேட்க வேண்டியுள்ளது. அதிகக் கட்டணத்தை வசூலிக்கும் டீலக்ஸ் பேருந்துகள், அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று, எழுத்து பூர்வமாக இல்லாமல், வாய் மூலம் கட்டளைகளை நிர்வாகம் அனுப்புகிறது. இது பேருந்தின் மீது மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் மீது, பயணிகளுக்கு இருக்கும் மரியாதையைக் குறைத்து விடும்.சட்டமன்றம் நடந்து வரும் இன்றைய வேளையிலாவது, மேற்கண்ட குறைகள் பேசப்பட்டு, தீர்க்கப்படுமா என்பது பயனாளிகளின் கேள்வி.
Sunday, April 11, 2010
அதிகப்படியான அதிகாரம் ராஜபக்சேயை என்ன செய்யும்?
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்-2010 முடிவுகள் வெளிவந்துவிட்டன. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, அதிகமான இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையி லான ஐக்கிய தேசிய கட்சி, குறைவான இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, அதைவிட குறைவான அளவே வெற்றி பெற்று, தங்கள் கூட்டணியிலுள்ள பிரபல ஜனத விமுக்தி பெரமுணா என்ற கட்சியின் எண்ணிக்கை யை, நாடாளுமன்றத்தில் மிகவும் குறைத்து விட்டது. ஜே.வி.பி.யின் சரிவு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாக பதிவாகியுள்ளது. அதே போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறைவான அளவில் வாக்குப்பதிவு நடந்தும் கூட, அதிலும் தமிழ் தேசிய கூட்டணி அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தத்தில் அதிபர் தேர்தல் முடிவைப் போலவே, நாடாளுமன்ற தேர்தல் முடிவு களும், மகிந்த ராஜபக்சேயின் அதிகாரத்திற்கு அதிகமான அளவில் அணிகலன்களை ஏற்படுத்தியுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்கும், ஏப்ரல் மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாச மில்லாமல், பெரும்பான்மை மக்களின் பெருத்த ஆதரவு பெற்றவர் மகிந்த ராஜபக்சே தான் என்பதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன், மகிந்தாவிற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளார். அமெரிக்கா வோ, தனது முன்னாள் இலங்கை தூதரும், இந்நாள் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சருமான ராபர்ட் பிளேக் மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. அதில் அதிபர் ராஜபக்சேயின் நிர்வாகம் தமிழர்களை போய் எட்ட வேண்டும் என்பது முக்கியமானது என்றும், எதிர் கால நம்பிக்கையும், வாய்ப்பு களும் கிடைக்கின்ற வாழ்க்கை தங்களுக்கு கிட்டும் என தமிழர்கள் உணர வேண்டி யது கட்டாயத் தேவை என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? ஒரு தேர்தல் மட்டுமல்ல, இரண்டு நாடு தழுவிய தேர்தல்களை நடத்திக் காட்டி அதன் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளை பெற்றதாக ஒரு பதிவையும் உலகுக்குக் காட்டி, தேர்தல் முறையிலான நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையிலே வலுவான மக்களாட்சியை நடத்துவதாக மகிந்தா இதன் மூலம் நிரூபித்திருப்பதால், இத்தகைய அணுகுமுறைகள் உலக நாடுகளிலிருந்து வருகின்றன. உண்மையில் மேற்கண்ட வாழ்த்துகளுக்கோ, பாராட்டுக்களுக்கோ, எதிர்பார்ப்புகளுக்கோ உரித்தான ஒரு ஆட்சி தான் மகிந்தா தலைமையில் நடக்கிறதா? என்பதை நிதானமாக பரிசீலிக்க வேண்டும். நிச்சயமாக தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி எண்ணிப் பார்க்கவில்லை. தங்கள் வரலாற்றி லேயே இந்த அளவுக்கு தமிழின அழிப்பு நடத்திய ஆட்சியைக் கண்டதில்லை என்பது தான் அதனது தீர்ப்பு. தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை எந்த விதத்திலும் ஏற்காத, எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காத, அதற்காக குரல் கொடுப்பவர்களை எத்தகையவர் களானாலும் கழுத்தை நெறிக்க தயங்காத ஒரு சிங்களப் பேரினவாத ஆட்சிதான் மகிந்தாவின் ஆட்சி என்பதில், எள்ளளவும் உலகத்தமிழர்களுக்கு சந்தேகமில்லை.
அப்படியானால் இன்று குறிப்பிட்ட உலக நாடுகள், மகிந்தாவை மட்டுமின்றி அவரது நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அங்கீகரிக்கக் கூடிய, ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை ஏன் வந்தது. உலகம் முழுவதும் தேர்தல் மூலம் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற ஆட்சி முறைதான், நாகரீக உலகத்தின் ஜனநாயக பாதையில் முன்னேறிய அணுகு முறை என்ற கருத்து நிலவிக் கொண்டிரு க்கிறது. இந்த கருத்துருவாக்கம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றா? அல்லது உண்மையிலேயே தேர்தல் வழியிலான நாடாளுமன்ற ஜனநாயக பாதை நாகரீகமான முன்னேறிய ஒரு முறையா? அல்லது முன்னேறியதாக இருந்த, நாகரீகமாக செயல்பட்டு வந்த அத்தகைய முறையையும், முறை கேடாக அதிகாரத்தை பயன்படுத் துவோர் இப்போது விபத்துக்குள்ளாக்கி விட்டார் களா?
குஜராத் மாநிலத்தில் 3000 முஸ்லிம் சிறுபான்மையினரை படுகொலை செய்து, இன அழிப்பு நடவடிக்கையை தலைமை தாங்கியதாக, நரேந்திர மோடி குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் மாநில சட்ட மன்றத் திற்கான தேர்தல் வந்தபோது, அவரே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றார். அப்படியானால் சிறுபான்மை மக்கள் மீது இன அழிப்பு வன்முறையை அல்லது போரை நடத்திய தலைவர்களை, பெரும்பான்மை மக்கள் இனவெறி உணர்வு கொண்டு ஆதரிக்கிறார்களா? இதுதான் குஜராத்தின் மற்றும் இலங்கையின் பாடம் என்பதாக கற்றுக் கொள்ளப்போகிறோமா?
அப்படியானால் மதச்சிறுபான்மை, தேசிய சிறுபான்மை ஆகியோர் பாதிக்கப்படும் ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில், அவர்களுக்கும் சேர்த்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவது எந்த முறையில் சாத்தியம்? மேற்கூறப்பட்ட தேர்தல் முறையிலான மக்கள் பிரதிநிதி களை தேர்வு செய்து, அப்படிப்பட்ட சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது என்பது போல, மேற்கண்ட இரு உதாரணங்களும் சாட்சியம் கூறுகின்றனர். கூட்டமைப்பு என்ற ஒரு அரசு கட்டமைப்பில், சிறுபான்மை யினருக்கு உரிய பாதுகாப்பு இருக்கும் என்று கூறலாமா? ஒற்றை யாட்சி முறைதான் இலங்கைக்கு சிறந்தது என்று அறிவித்த மகிந்தா, அதற்கு உட்பட்டு செயல்பட, மேற்கண்ட தேர்தல்களை பயன்படுத்தியுள் ளார். மியான்மர் நாட்டில் நடந்து வரும் ராணுவ ஆட்சியாளர்களும், திடீரென நாடாளு மன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டை செய்ய ஒப்புக்கொண்டார்கள். அதே சமயம் வலுவான எதிர்கட்சியான தேசிய ஜனநாயகத்திற்கான லீக் என்ற சூ கி யூவின் கட்சியை நிற்கவிடாமல் தடங்கல் செய்தார்கள். அந்த கட்சியும் தேர்தலை புறக்கணித்தது. இதன் மூலம் ராணுவ ஆட்சியாளர் தேர்தல் பாதையில் வெற்றி பெற்றால் அது ஏற்கக் கூடியாதா? மேற்கண்ட மூன்று விதமான சோத னைகளும் தெற்காசிய வட்டாரத்தில், மறு பரீசிலனை யைக் கோருகின்றன.
சர்வாதிகாரமும், ஏதேச்சதிகாரமும், இன்றைய காலகட்டத்தில் புதிய முகங் களோடு பரிணமிக்கின்றன என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அதாவது தேர்தல் முறையில், மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக் கும் முறையிலேயே, தங்களது சர்வாதிகார, ஏதேச்சதிகார கும்பல் மூலம் அதிக அதிகாரங்களை கைப்பற்ற முடியும் என்ப தாக இந்த சோதனைகள் காட்டுகின்றன. இத்தகைய சர்வாதிகாரிகளுக்கு, தங்களது எதிரிகளான சிறுபான்மை இனம் மட்டுமே பகையாளிகள் அல்ல. தங்களது இனஅழிப்பு போரிலே பங்கு கொண்டாலும், அதிகார பகிர்வில் தங்களுடன் போட்டி போடவந்த
சொந்த இனத்தவரையும் எதிரியாகவே கருதுகிறார்கள். அதுதான் சரத்பொன் சேகா விசயத்தில், மகிந்தா காட்டிய அணுகுமுறை.
அந்தக்காலத்தில் ஆட்சியாளர்களைப் பற்றி கூறும்போது, அவர்கள் கேரட்டும், குச்சியும் என்ற கொள்கையை பின்பற்று பவர்கள் என்று கூறுவார்கள். அதாவது குதிரை வண்டியை ஓட்டுவதற்காக, குதிரைக்கு முன்னால் கேரட்டைக் கட்டி, அதைக் காட்டியே ஓட விடுவதும், கையில் குச்சியுடன் அவ்வப்போது அடித்து ஓட விடுவதும், மக்களிடம் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற தந்திரம் என்பதே அதற்குப் பொருள். ஆனால் இப்போது நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, ஆட்சியாளர் களுக்கு கேரட் தேவையில்லை. குச்சி மட்டும் போதும். மிரட்டியே அனைத்தையும் முடித்துக் காட்ட திறமை இருக்கிறது. உதாரணமாக தனது ஆட்சிகாலத்தில் 13வது சட்டத்திருத்தம் பற்றி பேசியே, பிராந்திய கவுன்சில்களுக்கு அதிகாரம் என்ற இனிப்பு பண்டத்தை காட்டியே, செயல்படுத்தாமல் மகிந்தாவால் நீடிக்க முடிந்தது. அனைத்து நாட்டு அளவில் போர்க் குற்றங்கள் பற்றி கடுமையாக குற்றம் சாட்டி வந்தபோதும், உள்ளூர் மக்களின் வாக்குகளை பெறுகின்ற தந்திரத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே மகிந்தா இலங்கையின் நிர்வாக அதிபர் கட்டமைப்பை தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கிறார். இன்னமும் 11 ஆண்டுகள் அவரது ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்தே தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாதா என்ற பலவீன மான குரலும், உலகத்திலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது. எந்த முறையில் இத்தகைய புதிய முகமூடியை கிழித்தெறிய முடியும் என்கிற சிந்தனையும் உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகி வருகிறது. சிறுபான்மை இனத்திற்கு விடுதலை என்பது கருவி ஏந்தி மட்டும் தான் காணப்பட வேண்டுமா? வேறு ஜனநாயக வழி முறைகள் உருவாக்கப்பட முடியுமா? இதுதான் இன்று தமிழர்கள் மத்தியில் உள்ள கேள்வி.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்கும், ஏப்ரல் மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாச மில்லாமல், பெரும்பான்மை மக்களின் பெருத்த ஆதரவு பெற்றவர் மகிந்த ராஜபக்சே தான் என்பதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன், மகிந்தாவிற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளார். அமெரிக்கா வோ, தனது முன்னாள் இலங்கை தூதரும், இந்நாள் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சருமான ராபர்ட் பிளேக் மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. அதில் அதிபர் ராஜபக்சேயின் நிர்வாகம் தமிழர்களை போய் எட்ட வேண்டும் என்பது முக்கியமானது என்றும், எதிர் கால நம்பிக்கையும், வாய்ப்பு களும் கிடைக்கின்ற வாழ்க்கை தங்களுக்கு கிட்டும் என தமிழர்கள் உணர வேண்டி யது கட்டாயத் தேவை என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? ஒரு தேர்தல் மட்டுமல்ல, இரண்டு நாடு தழுவிய தேர்தல்களை நடத்திக் காட்டி அதன் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளை பெற்றதாக ஒரு பதிவையும் உலகுக்குக் காட்டி, தேர்தல் முறையிலான நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையிலே வலுவான மக்களாட்சியை நடத்துவதாக மகிந்தா இதன் மூலம் நிரூபித்திருப்பதால், இத்தகைய அணுகுமுறைகள் உலக நாடுகளிலிருந்து வருகின்றன. உண்மையில் மேற்கண்ட வாழ்த்துகளுக்கோ, பாராட்டுக்களுக்கோ, எதிர்பார்ப்புகளுக்கோ உரித்தான ஒரு ஆட்சி தான் மகிந்தா தலைமையில் நடக்கிறதா? என்பதை நிதானமாக பரிசீலிக்க வேண்டும். நிச்சயமாக தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி எண்ணிப் பார்க்கவில்லை. தங்கள் வரலாற்றி லேயே இந்த அளவுக்கு தமிழின அழிப்பு நடத்திய ஆட்சியைக் கண்டதில்லை என்பது தான் அதனது தீர்ப்பு. தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை எந்த விதத்திலும் ஏற்காத, எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காத, அதற்காக குரல் கொடுப்பவர்களை எத்தகையவர் களானாலும் கழுத்தை நெறிக்க தயங்காத ஒரு சிங்களப் பேரினவாத ஆட்சிதான் மகிந்தாவின் ஆட்சி என்பதில், எள்ளளவும் உலகத்தமிழர்களுக்கு சந்தேகமில்லை.
அப்படியானால் இன்று குறிப்பிட்ட உலக நாடுகள், மகிந்தாவை மட்டுமின்றி அவரது நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அங்கீகரிக்கக் கூடிய, ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை ஏன் வந்தது. உலகம் முழுவதும் தேர்தல் மூலம் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற ஆட்சி முறைதான், நாகரீக உலகத்தின் ஜனநாயக பாதையில் முன்னேறிய அணுகு முறை என்ற கருத்து நிலவிக் கொண்டிரு க்கிறது. இந்த கருத்துருவாக்கம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றா? அல்லது உண்மையிலேயே தேர்தல் வழியிலான நாடாளுமன்ற ஜனநாயக பாதை நாகரீகமான முன்னேறிய ஒரு முறையா? அல்லது முன்னேறியதாக இருந்த, நாகரீகமாக செயல்பட்டு வந்த அத்தகைய முறையையும், முறை கேடாக அதிகாரத்தை பயன்படுத் துவோர் இப்போது விபத்துக்குள்ளாக்கி விட்டார் களா?
குஜராத் மாநிலத்தில் 3000 முஸ்லிம் சிறுபான்மையினரை படுகொலை செய்து, இன அழிப்பு நடவடிக்கையை தலைமை தாங்கியதாக, நரேந்திர மோடி குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் மாநில சட்ட மன்றத் திற்கான தேர்தல் வந்தபோது, அவரே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றார். அப்படியானால் சிறுபான்மை மக்கள் மீது இன அழிப்பு வன்முறையை அல்லது போரை நடத்திய தலைவர்களை, பெரும்பான்மை மக்கள் இனவெறி உணர்வு கொண்டு ஆதரிக்கிறார்களா? இதுதான் குஜராத்தின் மற்றும் இலங்கையின் பாடம் என்பதாக கற்றுக் கொள்ளப்போகிறோமா?
அப்படியானால் மதச்சிறுபான்மை, தேசிய சிறுபான்மை ஆகியோர் பாதிக்கப்படும் ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில், அவர்களுக்கும் சேர்த்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவது எந்த முறையில் சாத்தியம்? மேற்கூறப்பட்ட தேர்தல் முறையிலான மக்கள் பிரதிநிதி களை தேர்வு செய்து, அப்படிப்பட்ட சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது என்பது போல, மேற்கண்ட இரு உதாரணங்களும் சாட்சியம் கூறுகின்றனர். கூட்டமைப்பு என்ற ஒரு அரசு கட்டமைப்பில், சிறுபான்மை யினருக்கு உரிய பாதுகாப்பு இருக்கும் என்று கூறலாமா? ஒற்றை யாட்சி முறைதான் இலங்கைக்கு சிறந்தது என்று அறிவித்த மகிந்தா, அதற்கு உட்பட்டு செயல்பட, மேற்கண்ட தேர்தல்களை பயன்படுத்தியுள் ளார். மியான்மர் நாட்டில் நடந்து வரும் ராணுவ ஆட்சியாளர்களும், திடீரென நாடாளு மன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டை செய்ய ஒப்புக்கொண்டார்கள். அதே சமயம் வலுவான எதிர்கட்சியான தேசிய ஜனநாயகத்திற்கான லீக் என்ற சூ கி யூவின் கட்சியை நிற்கவிடாமல் தடங்கல் செய்தார்கள். அந்த கட்சியும் தேர்தலை புறக்கணித்தது. இதன் மூலம் ராணுவ ஆட்சியாளர் தேர்தல் பாதையில் வெற்றி பெற்றால் அது ஏற்கக் கூடியாதா? மேற்கண்ட மூன்று விதமான சோத னைகளும் தெற்காசிய வட்டாரத்தில், மறு பரீசிலனை யைக் கோருகின்றன.
சர்வாதிகாரமும், ஏதேச்சதிகாரமும், இன்றைய காலகட்டத்தில் புதிய முகங் களோடு பரிணமிக்கின்றன என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அதாவது தேர்தல் முறையில், மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக் கும் முறையிலேயே, தங்களது சர்வாதிகார, ஏதேச்சதிகார கும்பல் மூலம் அதிக அதிகாரங்களை கைப்பற்ற முடியும் என்ப தாக இந்த சோதனைகள் காட்டுகின்றன. இத்தகைய சர்வாதிகாரிகளுக்கு, தங்களது எதிரிகளான சிறுபான்மை இனம் மட்டுமே பகையாளிகள் அல்ல. தங்களது இனஅழிப்பு போரிலே பங்கு கொண்டாலும், அதிகார பகிர்வில் தங்களுடன் போட்டி போடவந்த
சொந்த இனத்தவரையும் எதிரியாகவே கருதுகிறார்கள். அதுதான் சரத்பொன் சேகா விசயத்தில், மகிந்தா காட்டிய அணுகுமுறை.
அந்தக்காலத்தில் ஆட்சியாளர்களைப் பற்றி கூறும்போது, அவர்கள் கேரட்டும், குச்சியும் என்ற கொள்கையை பின்பற்று பவர்கள் என்று கூறுவார்கள். அதாவது குதிரை வண்டியை ஓட்டுவதற்காக, குதிரைக்கு முன்னால் கேரட்டைக் கட்டி, அதைக் காட்டியே ஓட விடுவதும், கையில் குச்சியுடன் அவ்வப்போது அடித்து ஓட விடுவதும், மக்களிடம் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற தந்திரம் என்பதே அதற்குப் பொருள். ஆனால் இப்போது நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, ஆட்சியாளர் களுக்கு கேரட் தேவையில்லை. குச்சி மட்டும் போதும். மிரட்டியே அனைத்தையும் முடித்துக் காட்ட திறமை இருக்கிறது. உதாரணமாக தனது ஆட்சிகாலத்தில் 13வது சட்டத்திருத்தம் பற்றி பேசியே, பிராந்திய கவுன்சில்களுக்கு அதிகாரம் என்ற இனிப்பு பண்டத்தை காட்டியே, செயல்படுத்தாமல் மகிந்தாவால் நீடிக்க முடிந்தது. அனைத்து நாட்டு அளவில் போர்க் குற்றங்கள் பற்றி கடுமையாக குற்றம் சாட்டி வந்தபோதும், உள்ளூர் மக்களின் வாக்குகளை பெறுகின்ற தந்திரத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே மகிந்தா இலங்கையின் நிர்வாக அதிபர் கட்டமைப்பை தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கிறார். இன்னமும் 11 ஆண்டுகள் அவரது ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்தே தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாதா என்ற பலவீன மான குரலும், உலகத்திலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது. எந்த முறையில் இத்தகைய புதிய முகமூடியை கிழித்தெறிய முடியும் என்கிற சிந்தனையும் உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகி வருகிறது. சிறுபான்மை இனத்திற்கு விடுதலை என்பது கருவி ஏந்தி மட்டும் தான் காணப்பட வேண்டுமா? வேறு ஜனநாயக வழி முறைகள் உருவாக்கப்பட முடியுமா? இதுதான் இன்று தமிழர்கள் மத்தியில் உள்ள கேள்வி.
Saturday, April 10, 2010
ராஜினாமா செய்வது பொறுப்பேற்கும் அணுகுமுறையா?
மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பொறுப்பேற்று, ராஜினாமா செய்கிறேன் என்று தலைமை அமைச்சரிடம் கூறினாராம். தலைமை அமைச்சர் அதை நிராகரித்தாராம். சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பா.ஜ.க. கூறியுள் ளது. இது வெளிவந்திருக்கும் செய்தி. இதே போல வெளிவந்திருக்கின்ற பல்வேறு செய்திகள் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 77 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சத்திஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி.யான விஷ்வரஞ்சன், தங்கள் மாநிலக் காவல்துறைக்கும், துணை ராணுவத்திற்கும் எந்தவொரு தவறான புரிதலும் இல்லை என்று கூறுகிறார். அதே சமயம் பாதுகாப்பு படைகளால் அந்த இடம் பற்றி தவறாக புரியப்பட்டு விட்டது என்பதாக அவர் கூறுகிறார். தாக்குதல் நேரத்தில் துணை ராணுவப் படையினர் தூங்கிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி தவறானது என்றும் அவர் கூறுகிறார். ராணுவத்தினருடைய பிணங்கள் சிதறிக் கிடக்கும் தன்மையிலிருந்தே அது தெரிகிறது என்கிறார் அவர். தாக்குதலில் தப்பி உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 5 விழுக்காடு தான் என்றும் தெரிவிக்கிறார். வெளிப்படை யான மைதானத்தில், ராணுவத்தினர் மறைவதற்கான இடமில்லை என்பதையும் டி.ஜி.பி.யே கூறுகிறார். உளவுத்துறை மூலம் அண்டை மாநிலங்களிலிருந்து அதிகமான அளவில் கொரில்லா போராளிகள் உள்ளே வந்துள்ளதாக செய்தி வந்தது என்கிறார் அவர். 500 மாவோயிஸ்ட்டுகள் ஏப்ரல் 4ந் தேதி முதல் மார்ச் 8ந் தேதி வரை மாநிலத்திற்குள் வந்திருப்பதாக 4 முறை தங்களுக்கு செய்தி வந்தது என்கிறார் அந்த டி.ஜி.பி. அப்படியானால் கவனக்குறைவாக இருந்த துணை ராணுவப்படையின் வழிகாட்டும் தலைமையான உள்துறைதான் தவறு செய்ததா? அதனால் உள்துறை அமைச்சர் ராஜினாமா நியாயம்தானா? தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் மோகனரங்கன், வேலூர் மாவட்டம் தொக்கியத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அனந்தமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூவரும் கொல்லப்பட்ட துணை ராணுவப் படையின் வீரர்கள். இதைக்கண்டு தமிழகமே அஞ்சலி செலுத்துகிறது.
இந்திய நாட்டின் ராணுவத்திற்கு, தாய்நாட்டைப் பாதுகாக்க வாருங்கள் என்பதாக நாட்டுப்பற்றை முன்நிறுத்தி ஆள் எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பயன்படுத்தி, கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்ற விளம்பரங் களைச் செய்து ஆள் எடுக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. அதற்காகத்தான் ஆட்சியாளர்கள் இந்த நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்பது புரியவில்லை. வேலையில்லாப் பட்டாளம் ஒன்று இருந்தால்தான், காவல் துறைக்கும், ராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் மைதானங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு, மோதிக்கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்கிறார்களா? நடந்த துயரச் சம்பவத்தை ஆய்வு செய்ய, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னாள் தலைவரை நியமித்திருக்கிறார்கள்.
மத்திய சிறப்பு பாதுகாப்புப் படை முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன என்று தண்டேவாடாவில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை படம் எடுத்து ஒரு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடுவதற்காக போர்முனைக்கு அனுப்பப் படும் மத்திய சிறப்பு காவல்படையினர் காய்ந்த வயிறுகளுடன், போதுமான குடிதண்ணீர் இல்லாமல், மருத்துவ வசதியில்லாமல் அனுப்பப்படுகிறார்கள் என்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இத்த னை அவலச் சூழலுக்கும் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் ராஜினாமா செய்கிறேன் என்கிறாரா? போதுமான உணவின்றி தாங்கள் ரோந்து சுற்ற அனுப்பப்படுவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்திய ராணுவத்திற்கு உலர்பழங்களை போர் முனைக்குச் செல்லும்போது கொடுக்கிறார்கள் என்றும், தங்களை வெறும் வயிற்றுடனும், உலர்ந்த தொண்டையுடனும் அனுப்பி விடுகிறார்கள் என்றும் அந்த மத்திய துணை ராணுவப் படையினர் முறையிடுகிறார்கள். காடுகள் அடர்ந்த அந்தப் பகுதியில் மலேரியா தாக்குதல் அதிகமாக இருக்கிறது என்றும், அதனால் பலர் நோய்வாய்ப்படுகிறோம் என்றும், சிலர் தொடர்ந்து நோய் விடுப்பு போட வேண்டியிருக்கிறது என்றும், அதற்கேற்ற மருத்துவ உதவி இல்லை என்றும் அவர்கள் முறையிடுகிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பு எடுத்துதான் ப.சிதம்பரம் ராஜினாமா செய்தாரா? சில நேரங்களில் தாங்கள் அழுக்கு நீரை குடிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது என்று அந்த துணை ராணுவப் படையினர் கூறியிருக்கிறார்கள். அந்த வட்டாரத்தில் முறையான மருந்து கடைகளில் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். காடுகளும், மலைகளும் சூழ்ந்து இருக்கும் அந்த வட்டாரத்தில், இப்படித்தான் எந்த ஒரு வசதியும் இல்லாமல் ஆதிவாசிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையை இதன் மூலமாவது இவர்கள் புரிந்து கொள்கிறார்களா? பாம்புகளும், நச்சுப் பூச்சிகளும் நிறைந்திருப்பதாக அரசப் படையினர் அஞ்சுகிறார்கள். அவற்றின் மத்தியில் தான் அங்கே போராடும் மக்களும், அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் போராளிகளும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இந்த நாடு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இரவு நேரங்களில் எது கடிக்கும் என்றே தெரியாது என்பதாக துணை ராணுவத்தினர் புலம்புகிறார்கள். ரோந்து செல்லும்போது மட்டுமல்ல, முகாம்களிலும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் அந்த அரசப்படை வீரர்களின் குமுறலாக இருக்கிறது. பாம்புக்கடிக்கும், பூச்சிக்கடிக்கும் கூட மருந்து இல்லாமல் சாகத்தான் வேண்டும் என்பது அவர்களது பரிதவிப்பு. சிறப்பாக செயல்பட்டால் கூட, தட்டிக் கொடுக்க யாரும் இல்லை என அரசப்படைகள் வருத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடு என்ற பெயரில் தொடர்ந்து தங்கள் மீது சித்திரவதைச் செய்யப்படுகிறது என்பதும் கூட அவர்களது புலம்பல். போர் அறைகூவலை, அரசியல்வாதிகள் அறிவித்து விடலாம், ஆனால் களத்திற்குச் செல்லும் அரசப்படைக்குத்தான் அதன் இன்னல் புரியும் என்கிறார்கள் அவர்கள். பேசித் தீர்க்கவேண்டிய ஒரு காரியத்தை, தங்களை அனுப்பி மோதித் தீர்க்கப்பார்க்கிறார்களே என அந்த அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு களை கோழைகள் என்று முத்திரைக்குத்திய பிறகுதான் இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதும் கூட அங்கே கணக்கிடப்படலாம். அரசப்படை வீரர்களின் மன உறுதி கெடுவது என்பது, எத்தகையப் போரிலும் வெற்றியை ஈட்டித்தராது. இத்தகைய அவலச்சூழ்நிலையை ஏற்படுத்தி யதற்காக ராஜினாமா செய்வது என்றால், அது ஒரு அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அமைச்சரவையே செய்ய வேண்டிய ராஜினாமா அல்லவா?
தாக்குதலுக்குள்ளான மத்திய சிறப்பு காவல்படையின் 62வது பட்டாலியன் பற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, அது காடுகளுக்குள் போர் புரிவதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளாத வீரர்கள் கொண்டது என்று கூறினாராம். இதற்காக மட்டுமே பாதுகாப்பு அமைச்சரும், ராஜினாமா செய்ய வேண்டாமா? தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில், மாவோ யிஸ்ட்டுகளால் 3 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன என்று பட்டியலிடு கிறார்கள். முதலில் மார்ச் 1ம் நாள், பிறகு மார்ச் 10ம் நாள், இப்போது ஏப்ரல் 6ம் நாள் என்பதாக அதே பகுதியில், துணை ராணுவம் தாக்கப்பட்டுள்ளது. அந்த சிந்தல்நார் முகாம் வீரர்கள் காடுகளுக்குள் தேடுதல் நடத்திவிட்டு, வெளிப்படையான வெளிக்கு வரும்போது, தாக்கப்பட்டுள் ளார்கள். 1000 போராளிகள் வரை மாவோயிஸ்ட்டுகள், அந்த தாக்குதலுக்காக பயன்படுத்தி யிருக்கிறார்கள். வி வடிவில் கொரில்லாப் படைகளை வரிசையாக நிறுத்திக் கொண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். சிறிய எந்திர துப்பாக்கிகளை அதிகமாக மாவோயிஸ்ட் டுகள் பயன்படுத்தியிருக் கிறார்கள். மரங்களில் அவற்றை வைத்துக் கொண்டு, கிளைகளில் போராளிகள் அமர்ந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி யிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கி வீரர் கொல்லப்பட்டால், அடுத்த வீரர் மரத்தில் ஏறி சுடத்தொடங்குகிறார்கள். இப்படியாக அந்த தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது. இத்தனை சூழலுக்கும் சேர்த்து, அமைச்சர் பொறுப்பு ஏற்கிறாரா?
அரியலூரில் ரயில் விபத்து. அழகேசா! நீ ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்று தி.மு.க. அன்றைக்கு ரயில்வே துணை அமைச்சர் ஓ.வி.அழகேச னைப் பார்த்து கேள்வி கேட்டது. இப்போது சிதம்பரத்தைப் பார்த்து அப்படிக் கேள்வி கேட்க எந்தக் கட்சியும் இல்லை. அதனால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ராஜினாமா என்பது பொறுப் பேற்கும் தன்மை கொண்டதா? அல்லது நழுவி ஓடும் தன்மைத்ததா? இப்படி கேள்வி நமக்கும் எழுகிறது.
இந்திய நாட்டின் ராணுவத்திற்கு, தாய்நாட்டைப் பாதுகாக்க வாருங்கள் என்பதாக நாட்டுப்பற்றை முன்நிறுத்தி ஆள் எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பயன்படுத்தி, கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்ற விளம்பரங் களைச் செய்து ஆள் எடுக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. அதற்காகத்தான் ஆட்சியாளர்கள் இந்த நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்பது புரியவில்லை. வேலையில்லாப் பட்டாளம் ஒன்று இருந்தால்தான், காவல் துறைக்கும், ராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் மைதானங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு, மோதிக்கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்கிறார்களா? நடந்த துயரச் சம்பவத்தை ஆய்வு செய்ய, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னாள் தலைவரை நியமித்திருக்கிறார்கள்.
மத்திய சிறப்பு பாதுகாப்புப் படை முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன என்று தண்டேவாடாவில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை படம் எடுத்து ஒரு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடுவதற்காக போர்முனைக்கு அனுப்பப் படும் மத்திய சிறப்பு காவல்படையினர் காய்ந்த வயிறுகளுடன், போதுமான குடிதண்ணீர் இல்லாமல், மருத்துவ வசதியில்லாமல் அனுப்பப்படுகிறார்கள் என்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இத்த னை அவலச் சூழலுக்கும் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் ராஜினாமா செய்கிறேன் என்கிறாரா? போதுமான உணவின்றி தாங்கள் ரோந்து சுற்ற அனுப்பப்படுவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்திய ராணுவத்திற்கு உலர்பழங்களை போர் முனைக்குச் செல்லும்போது கொடுக்கிறார்கள் என்றும், தங்களை வெறும் வயிற்றுடனும், உலர்ந்த தொண்டையுடனும் அனுப்பி விடுகிறார்கள் என்றும் அந்த மத்திய துணை ராணுவப் படையினர் முறையிடுகிறார்கள். காடுகள் அடர்ந்த அந்தப் பகுதியில் மலேரியா தாக்குதல் அதிகமாக இருக்கிறது என்றும், அதனால் பலர் நோய்வாய்ப்படுகிறோம் என்றும், சிலர் தொடர்ந்து நோய் விடுப்பு போட வேண்டியிருக்கிறது என்றும், அதற்கேற்ற மருத்துவ உதவி இல்லை என்றும் அவர்கள் முறையிடுகிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பு எடுத்துதான் ப.சிதம்பரம் ராஜினாமா செய்தாரா? சில நேரங்களில் தாங்கள் அழுக்கு நீரை குடிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது என்று அந்த துணை ராணுவப் படையினர் கூறியிருக்கிறார்கள். அந்த வட்டாரத்தில் முறையான மருந்து கடைகளில் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். காடுகளும், மலைகளும் சூழ்ந்து இருக்கும் அந்த வட்டாரத்தில், இப்படித்தான் எந்த ஒரு வசதியும் இல்லாமல் ஆதிவாசிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையை இதன் மூலமாவது இவர்கள் புரிந்து கொள்கிறார்களா? பாம்புகளும், நச்சுப் பூச்சிகளும் நிறைந்திருப்பதாக அரசப் படையினர் அஞ்சுகிறார்கள். அவற்றின் மத்தியில் தான் அங்கே போராடும் மக்களும், அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் போராளிகளும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இந்த நாடு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இரவு நேரங்களில் எது கடிக்கும் என்றே தெரியாது என்பதாக துணை ராணுவத்தினர் புலம்புகிறார்கள். ரோந்து செல்லும்போது மட்டுமல்ல, முகாம்களிலும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் அந்த அரசப்படை வீரர்களின் குமுறலாக இருக்கிறது. பாம்புக்கடிக்கும், பூச்சிக்கடிக்கும் கூட மருந்து இல்லாமல் சாகத்தான் வேண்டும் என்பது அவர்களது பரிதவிப்பு. சிறப்பாக செயல்பட்டால் கூட, தட்டிக் கொடுக்க யாரும் இல்லை என அரசப்படைகள் வருத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடு என்ற பெயரில் தொடர்ந்து தங்கள் மீது சித்திரவதைச் செய்யப்படுகிறது என்பதும் கூட அவர்களது புலம்பல். போர் அறைகூவலை, அரசியல்வாதிகள் அறிவித்து விடலாம், ஆனால் களத்திற்குச் செல்லும் அரசப்படைக்குத்தான் அதன் இன்னல் புரியும் என்கிறார்கள் அவர்கள். பேசித் தீர்க்கவேண்டிய ஒரு காரியத்தை, தங்களை அனுப்பி மோதித் தீர்க்கப்பார்க்கிறார்களே என அந்த அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு களை கோழைகள் என்று முத்திரைக்குத்திய பிறகுதான் இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதும் கூட அங்கே கணக்கிடப்படலாம். அரசப்படை வீரர்களின் மன உறுதி கெடுவது என்பது, எத்தகையப் போரிலும் வெற்றியை ஈட்டித்தராது. இத்தகைய அவலச்சூழ்நிலையை ஏற்படுத்தி யதற்காக ராஜினாமா செய்வது என்றால், அது ஒரு அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அமைச்சரவையே செய்ய வேண்டிய ராஜினாமா அல்லவா?
தாக்குதலுக்குள்ளான மத்திய சிறப்பு காவல்படையின் 62வது பட்டாலியன் பற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, அது காடுகளுக்குள் போர் புரிவதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளாத வீரர்கள் கொண்டது என்று கூறினாராம். இதற்காக மட்டுமே பாதுகாப்பு அமைச்சரும், ராஜினாமா செய்ய வேண்டாமா? தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில், மாவோ யிஸ்ட்டுகளால் 3 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன என்று பட்டியலிடு கிறார்கள். முதலில் மார்ச் 1ம் நாள், பிறகு மார்ச் 10ம் நாள், இப்போது ஏப்ரல் 6ம் நாள் என்பதாக அதே பகுதியில், துணை ராணுவம் தாக்கப்பட்டுள்ளது. அந்த சிந்தல்நார் முகாம் வீரர்கள் காடுகளுக்குள் தேடுதல் நடத்திவிட்டு, வெளிப்படையான வெளிக்கு வரும்போது, தாக்கப்பட்டுள் ளார்கள். 1000 போராளிகள் வரை மாவோயிஸ்ட்டுகள், அந்த தாக்குதலுக்காக பயன்படுத்தி யிருக்கிறார்கள். வி வடிவில் கொரில்லாப் படைகளை வரிசையாக நிறுத்திக் கொண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். சிறிய எந்திர துப்பாக்கிகளை அதிகமாக மாவோயிஸ்ட் டுகள் பயன்படுத்தியிருக் கிறார்கள். மரங்களில் அவற்றை வைத்துக் கொண்டு, கிளைகளில் போராளிகள் அமர்ந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி யிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கி வீரர் கொல்லப்பட்டால், அடுத்த வீரர் மரத்தில் ஏறி சுடத்தொடங்குகிறார்கள். இப்படியாக அந்த தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது. இத்தனை சூழலுக்கும் சேர்த்து, அமைச்சர் பொறுப்பு ஏற்கிறாரா?
அரியலூரில் ரயில் விபத்து. அழகேசா! நீ ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்று தி.மு.க. அன்றைக்கு ரயில்வே துணை அமைச்சர் ஓ.வி.அழகேச னைப் பார்த்து கேள்வி கேட்டது. இப்போது சிதம்பரத்தைப் பார்த்து அப்படிக் கேள்வி கேட்க எந்தக் கட்சியும் இல்லை. அதனால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ராஜினாமா என்பது பொறுப் பேற்கும் தன்மை கொண்டதா? அல்லது நழுவி ஓடும் தன்மைத்ததா? இப்படி கேள்வி நமக்கும் எழுகிறது.
Friday, April 9, 2010
போர் என்றால் நிறுத்தம் உண்டல்லவா?
சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில் நடந்த அந்த தாக்குதலில், அரசப்படை பெரும் உயிரிழப்பை சந்தித்தது. தாக்குதல் பற்றியும், படைவீரர்களின் இறப்பைப் பற்றியும் நாடே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, உள்துறை அமைச்சர், நாம் ஒரு போரில் இருக்கிறோம் என்று அறிவித்தார். அரசாங்கத்தின் மீது மாவோயிஸ்டுகளால் ஒரு போர் திணிக்கப் பட்டுள்ளது என்பது அவரது விளக்கம். அதே சமயம் இந்திய அரசின் விமானப்படையை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாய மில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அப்படி ஒரு தேவையையும் மீண்டும் பரிசீலிப்போம் என்பதாக கூறியிருந்தார். அரசாங்கம் விமானப் படையை இறக்க வேண்டும் என்ற முடிவை எடுக்குமானால், தாங்கள் அதற்கு தயாராக இருப்பதாக விமானப் படை தலைமை தளபதி பி.வி.நாயக் கூறினார். நாம் ஒரு போரில் இருக்கிறோம் என்பதாக உள்துறை அமைச்சர் கூறிய கூற்றை, சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டுள் ளன.
போர் என்பது இரண்டு அரசாங்கங்களுக்கு மத்தியில், அதிலும் இரண்டு படைகளுக்கு மத்தியில் நடக்கின்ற ஒரு அரசியல் மோதல். மாவேயிஸ்டுகளுடன் இந்திய அரசாங்கத் திற்கு இருக்கின்ற முரண்பாட்டை, யாரையும் விட இந்தியாவின் உள்துறை அமைச்சர்தான் ஒப்பீட்டளவில் சரியாக மதிப்பீடு செய்ய முடியும். அப்படி அவர் செய்த மதிப்பீட்டில் தான், போரில் இருக்கிறோம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இரண்டு அரசாங்கங்கள், இரண்டு படைகள் ஆகியவை இங்கே அங்கீகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரசாங்கமும், இன்னொன்றை அனுமதிக்கத் தயாராய் இல்லை என்பதை யும், ஒவ்வொரு படையும் அந்தப் பகுதியில் பிறிதொன்றை இயங்க விடத் தயாராய் இல்லை என்பதும் நடந்து வரும் மோதல்கள் மூலம் தெளிவு படுத்தப்படுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் ஆயுத மோதல் அல்ல. அப்படியானால் ஐ.நா. போன்ற உலக பொது அமைப்புகள் தலையிட முடியும். இந்திய அரசாங்கத்திற் கும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் நடந்து வரும் மோதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் விசயத்தில், ஐ.நா. போன்ற பொது அமைப்பு கள் தலையிடலாம். ஆனால் மாவோயிஸ்டு களுக்கும், மத்திய அரசுக்கும் நடக்கும் மோதலில் வெளியார் நேரடியாக எப்படி தலையிட முடியும்? இது உள்நாட்டிற்குள் நடக்கின்ற ஒரு பிரச்சினை. இன்னமும் சொல்லப்போனால் இது ஒரு உள்நாட்டுப் புரட்சி சம்பந்தப்பட்ட விவகாரம். அதாவது தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளும், அவர்களை ஆதரிக்கும் மக்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அதே போல இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட துணை ராணுவப் படையினரும், அதன் தலைமை யான மத்திய அரசும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். இப்படி இரண்டு உள்நாட்டு சக்திகள் மத்தியில், போர் நடக்குமானால் அது முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
போர் ஒன்று ஒரே நாட்டில் வாழும் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்பு களுக்குள், நடைபெறும் போது, அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதைத்தான் சமாதானம் விரும்பும் இந்த நாட்டு மக்கள் விரும்புவார்கள். அதற்கு போர் நிறுத்தம் என்பது கட்டாயத் தேவையாக இருக்கிறது. போர் என்று வந்தாலே, நிறுத்தம் என்று ஒன்று வரத்தானே செய்ய வேண்டும்? மேற்கண்ட கருத்தை எதிரொலிக்கும் நிலையில், ஆங்கில ஏடு ஒன்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர், எழுத்து மூலம் ஒரு மாவோயிஸ்ட் தலைவரிடம் கேள்வி கேட்டு பதிலையும் பெற்றிருக்கிறார். அந்த மாவோயிஸ்ட் தலைவருக்கு பெயர் ஆசாத். ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள். அப்படிப்பட்ட பெயர் வைத்துக் கொண்டுள்ள அந்தத் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்)யின் மத்திய குழுவின் பேச்சாளர் என்பதாகத் தெரிகிறது. அவரது பதில்களில் அரசாங்கத்துடன் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு மாவோயிஸ்டுகள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி யுள்ளது.
உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு களை, வன்முறையை விட்டுவிடும் படி கோரினாரே தவிர, அரசாங்கத்துடன் போர் நிறுத்ததிற்கு வாருங்கள் என அழைக்க வில்லை என்பது ஆசாத்தின் குற்றச்சாட்டு. அதற்கு அவர் காட்டுகின்ற உதாரணமும் வித்தியாசமாக இருக்கிறது. அதாவது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன், மத்திய அரசாங்கம் ஒரு போர் நிறுத்தத்தை செய்து அதன் பிறகு பேச்சு வார்த்தையை இப்போது நடத்தி வருவது போல, தங்களை அழைக்கவில்லை என்பது அவரது வாதம்.
வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து, சிதம்பரம் கூறுவது பொருத்தமற்றது என்கிறார் அவர். ஒரே நேரத்தில் இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தத்தை அறிவித்து, இருபுறமும் இருக்கின்ற பகை உணர்வை போக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசாத் கூறியிருக்கிறார். அடுத்த கட்டமாக பேச்சு வார்த்தைக்கு செல்வதாக, உகந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இரண்டு புறத்திலும் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு விருப்பம் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் என ஆசாத் கூறியுள்ளார். சட்டப்பூர்வமான சமாதான நடைமுறைகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் பட்சத்தில், மாவோயிஸ்ட் கட்சியின் மீது அறிவிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அவர் அதில் வைத்துள்ளார். தங்கள் மீதான தடையை நீக்காமல், தாங்கள் எப்படி சட்டப்பூர்வமான போராட்டங் களையும், கூட்டங்களையும் தங்கள் பெயரிலேயே நடத்த முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.
அப்படிப்பட்ட வெளிப்படையான போராட்டங்களை தங்கள் பெயரில் செயல் பட்டால், தாங்கள் தடை செய்யப்பட்ட ஒரு கட்சியால் வழிகாட்டப்படும் சட்ட விரோதமான செயல்பாட்டுக்காரர்கள் என்று முத்திரைக்குத்தப்படமாட்டோமா? என ஒரு கேள்வியையும் கேட்கிறார். சிறையில் இருந்து சில தலைவர்களை விடுதலை செய்தால் தான் பேச்சு வார்த்தையும் நடத்தப்படமுடியும் என்றும் கூறுகிறார். இல்லாவிட்டால் முழு கட்சியும் சட்டவிரோதமானது என்பதால், யாருமே பேச்சு வார்த்தையில் ஈடுபடமுடியாது என விளக்குகிறார். தலைமறைவாக இருக்கும் தங்கள் தலைவர்களில், யாரையும் பேச்சு வார்த்தையின் பொருட்டு, வெளியே கொண்டு வரமுடியாது என்று ஆசாத் கூறியுள்ளார்.
பேச்சு வார்த்தைக்கு வருவது என்பது, தொடர்ந்து இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு சிறிது தளர்வான சூழலை ஏற்படுத்த உதவும் என்றும் ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஆசாத் குறிப்பிட்டுள்ள நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற புரட்சிகரமான அரசாங்கத்தையும், புரட்சிகர ராணுவத்தையும் கையில் வைத்திருக்கும் அமைப்பின் தலைவர்கள் மத்திய அரசுடன் பேசி வருகிறார்கள். கடந்த மார்ச் 21ம் நாள் அவர்கள் தங்களுடைய நாகாலாந்து குடியரசு தினத்தின் 30வது ஆண்டுவிழாவை அந்த புரட்சிகர இயக்கத் தலைவர்கள் நடத்தினார்கள். அதே பெயரில் உள்ள இரண்டு அமைப்புகள் நாகாலாந்தில் செயல்படுகின்றன. இரண்டுமே டெல்லியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. நாகாலாந்தின் பிரதமர் என தங்கள் அமைப்பின் தலைவரை, இரண்டு அமைப்புகளும் அறிவித்துள்ளன. 30வது ஆண்டு விழாவில் இரண்டு பிரதமர்களும் உரையாற்றி உள்ளனர். இப்படியாக நாம் அறியப்படும் இந்தியாவிற்குள்ளேயே, நாகாலாந்து ஆயுதம் தாங்கியப் புரட்சியாளர்களுடன், போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தை நடத்த, மத்திய அரசால் முடிகிறது என்பது நமக்கு விளங்குகிறது. அப்படியானால் ஏன் அதே போர் நிறுத்தத்தை, மாவோயிஸ்டுகளுடனும் அறிவித்து, அதே போல பேச்சு வார்த்தையை மத்திய அரசு நடத்தக் கூடாது என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
போர் என்பது இரண்டு அரசாங்கங்களுக்கு மத்தியில், அதிலும் இரண்டு படைகளுக்கு மத்தியில் நடக்கின்ற ஒரு அரசியல் மோதல். மாவேயிஸ்டுகளுடன் இந்திய அரசாங்கத் திற்கு இருக்கின்ற முரண்பாட்டை, யாரையும் விட இந்தியாவின் உள்துறை அமைச்சர்தான் ஒப்பீட்டளவில் சரியாக மதிப்பீடு செய்ய முடியும். அப்படி அவர் செய்த மதிப்பீட்டில் தான், போரில் இருக்கிறோம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இரண்டு அரசாங்கங்கள், இரண்டு படைகள் ஆகியவை இங்கே அங்கீகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரசாங்கமும், இன்னொன்றை அனுமதிக்கத் தயாராய் இல்லை என்பதை யும், ஒவ்வொரு படையும் அந்தப் பகுதியில் பிறிதொன்றை இயங்க விடத் தயாராய் இல்லை என்பதும் நடந்து வரும் மோதல்கள் மூலம் தெளிவு படுத்தப்படுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் ஆயுத மோதல் அல்ல. அப்படியானால் ஐ.நா. போன்ற உலக பொது அமைப்புகள் தலையிட முடியும். இந்திய அரசாங்கத்திற் கும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் நடந்து வரும் மோதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் விசயத்தில், ஐ.நா. போன்ற பொது அமைப்பு கள் தலையிடலாம். ஆனால் மாவோயிஸ்டு களுக்கும், மத்திய அரசுக்கும் நடக்கும் மோதலில் வெளியார் நேரடியாக எப்படி தலையிட முடியும்? இது உள்நாட்டிற்குள் நடக்கின்ற ஒரு பிரச்சினை. இன்னமும் சொல்லப்போனால் இது ஒரு உள்நாட்டுப் புரட்சி சம்பந்தப்பட்ட விவகாரம். அதாவது தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளும், அவர்களை ஆதரிக்கும் மக்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அதே போல இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட துணை ராணுவப் படையினரும், அதன் தலைமை யான மத்திய அரசும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். இப்படி இரண்டு உள்நாட்டு சக்திகள் மத்தியில், போர் நடக்குமானால் அது முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
போர் ஒன்று ஒரே நாட்டில் வாழும் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்பு களுக்குள், நடைபெறும் போது, அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதைத்தான் சமாதானம் விரும்பும் இந்த நாட்டு மக்கள் விரும்புவார்கள். அதற்கு போர் நிறுத்தம் என்பது கட்டாயத் தேவையாக இருக்கிறது. போர் என்று வந்தாலே, நிறுத்தம் என்று ஒன்று வரத்தானே செய்ய வேண்டும்? மேற்கண்ட கருத்தை எதிரொலிக்கும் நிலையில், ஆங்கில ஏடு ஒன்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர், எழுத்து மூலம் ஒரு மாவோயிஸ்ட் தலைவரிடம் கேள்வி கேட்டு பதிலையும் பெற்றிருக்கிறார். அந்த மாவோயிஸ்ட் தலைவருக்கு பெயர் ஆசாத். ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள். அப்படிப்பட்ட பெயர் வைத்துக் கொண்டுள்ள அந்தத் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்)யின் மத்திய குழுவின் பேச்சாளர் என்பதாகத் தெரிகிறது. அவரது பதில்களில் அரசாங்கத்துடன் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு மாவோயிஸ்டுகள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி யுள்ளது.
உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு களை, வன்முறையை விட்டுவிடும் படி கோரினாரே தவிர, அரசாங்கத்துடன் போர் நிறுத்ததிற்கு வாருங்கள் என அழைக்க வில்லை என்பது ஆசாத்தின் குற்றச்சாட்டு. அதற்கு அவர் காட்டுகின்ற உதாரணமும் வித்தியாசமாக இருக்கிறது. அதாவது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன், மத்திய அரசாங்கம் ஒரு போர் நிறுத்தத்தை செய்து அதன் பிறகு பேச்சு வார்த்தையை இப்போது நடத்தி வருவது போல, தங்களை அழைக்கவில்லை என்பது அவரது வாதம்.
வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து, சிதம்பரம் கூறுவது பொருத்தமற்றது என்கிறார் அவர். ஒரே நேரத்தில் இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தத்தை அறிவித்து, இருபுறமும் இருக்கின்ற பகை உணர்வை போக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசாத் கூறியிருக்கிறார். அடுத்த கட்டமாக பேச்சு வார்த்தைக்கு செல்வதாக, உகந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இரண்டு புறத்திலும் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு விருப்பம் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் என ஆசாத் கூறியுள்ளார். சட்டப்பூர்வமான சமாதான நடைமுறைகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் பட்சத்தில், மாவோயிஸ்ட் கட்சியின் மீது அறிவிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அவர் அதில் வைத்துள்ளார். தங்கள் மீதான தடையை நீக்காமல், தாங்கள் எப்படி சட்டப்பூர்வமான போராட்டங் களையும், கூட்டங்களையும் தங்கள் பெயரிலேயே நடத்த முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.
அப்படிப்பட்ட வெளிப்படையான போராட்டங்களை தங்கள் பெயரில் செயல் பட்டால், தாங்கள் தடை செய்யப்பட்ட ஒரு கட்சியால் வழிகாட்டப்படும் சட்ட விரோதமான செயல்பாட்டுக்காரர்கள் என்று முத்திரைக்குத்தப்படமாட்டோமா? என ஒரு கேள்வியையும் கேட்கிறார். சிறையில் இருந்து சில தலைவர்களை விடுதலை செய்தால் தான் பேச்சு வார்த்தையும் நடத்தப்படமுடியும் என்றும் கூறுகிறார். இல்லாவிட்டால் முழு கட்சியும் சட்டவிரோதமானது என்பதால், யாருமே பேச்சு வார்த்தையில் ஈடுபடமுடியாது என விளக்குகிறார். தலைமறைவாக இருக்கும் தங்கள் தலைவர்களில், யாரையும் பேச்சு வார்த்தையின் பொருட்டு, வெளியே கொண்டு வரமுடியாது என்று ஆசாத் கூறியுள்ளார்.
பேச்சு வார்த்தைக்கு வருவது என்பது, தொடர்ந்து இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு சிறிது தளர்வான சூழலை ஏற்படுத்த உதவும் என்றும் ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஆசாத் குறிப்பிட்டுள்ள நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற புரட்சிகரமான அரசாங்கத்தையும், புரட்சிகர ராணுவத்தையும் கையில் வைத்திருக்கும் அமைப்பின் தலைவர்கள் மத்திய அரசுடன் பேசி வருகிறார்கள். கடந்த மார்ச் 21ம் நாள் அவர்கள் தங்களுடைய நாகாலாந்து குடியரசு தினத்தின் 30வது ஆண்டுவிழாவை அந்த புரட்சிகர இயக்கத் தலைவர்கள் நடத்தினார்கள். அதே பெயரில் உள்ள இரண்டு அமைப்புகள் நாகாலாந்தில் செயல்படுகின்றன. இரண்டுமே டெல்லியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. நாகாலாந்தின் பிரதமர் என தங்கள் அமைப்பின் தலைவரை, இரண்டு அமைப்புகளும் அறிவித்துள்ளன. 30வது ஆண்டு விழாவில் இரண்டு பிரதமர்களும் உரையாற்றி உள்ளனர். இப்படியாக நாம் அறியப்படும் இந்தியாவிற்குள்ளேயே, நாகாலாந்து ஆயுதம் தாங்கியப் புரட்சியாளர்களுடன், போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தை நடத்த, மத்திய அரசால் முடிகிறது என்பது நமக்கு விளங்குகிறது. அப்படியானால் ஏன் அதே போர் நிறுத்தத்தை, மாவோயிஸ்டுகளுடனும் அறிவித்து, அதே போல பேச்சு வார்த்தையை மத்திய அரசு நடத்தக் கூடாது என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
Thursday, April 8, 2010
அரசால் அலட்சியப்படுத்தப்பட்டது யார்?
இந்திய அரசின் துணை ராணுவமான மத்திய சிறப்பு காவல்படை வீரர்கள் 75 பேருக்கு மேல், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மரணமடைந்தார்கள் என்ற செய்தி, இந்திய துணைக் கண்டத்தையே நிலை குலைய வைத்தது. உடனடியாக கருத்து சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று முதலில் கூறினார். பிறகு மாவோயிஸ்ட்கள் பற்றி நாம் இதுவரை அலட்சியமாக இருந்தது தவறு என்று கூறியிருக்கிறார். மத்திய அரசு அலட்சியமாகயிருந்திருக்கிறது என்பது அமைச்சரின் வாக்குமூலம். ஆனால் எந்த விஷயத்தில், யாரைப் பற்றி அரசு அலட்சியமாக இருந்தது என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வி. மாவோயிஸ்ட்கள் பற்றி அலட்சியமாக இருந்து விட்டோம் என்பது உள்துறை அமைச்சரின் கூற்று. ஆனால் கடந்த ஓராண்டாக, புதிய மத்திய அரசாங்கத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த பிறகு, புதிதாக உள்துறை அமைச்சகப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து, மாவோயிஸ்ட்கள் பற்றி கண்டித்தும், எச்சரித்தும், இறங்கிப் பேசியும், பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், வன்முறையைக் கைவிடச்சொல்லியும், ப.சிதம்பரம் அறிக்கைகள் கொடுத்து வருகிறார். இவ்வாறு தனது அமைச்சகப் பணிகளில் முக்கிய பகுதியை, ஓராண்டு முழுக்க நக்சலைட்டுகளைப் பற்றிய செய்திகளை சேகரிப்பதும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விவாதங்களை செய்து வந்ததும், அதையொட்டி அறிக்கைகளை வெளியிட்டதும் அலட்சியப்படுத்திய முறைகள் என்பது நமக்கு இப்போது தான் புரிகிறது. அதேசமயம் பலவீனமான திட்டமிடுதலை, அரசுதரப்பு வைத்திருந்ததினால் தான், மாவோயிஸ்ட்களின் இத்தனை பெரிய தாக்குதல் நடத்தப்பட முடிந்தது என்று சில ஊடகங்கள் விளக்கமளித்துள்ளன.
மேற்கண்ட தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள, தண்டேவாடா என்ற பகுதி. இந்த பகுதி காடுகளையும், மலைகளையும் கொண்ட பகுதி. மத்திய சிறப்பு காவல்படையினர் தங்களது புதிய தலைமையாக வந்திறங்கிய டி.ஐ.ஜி.யின் கட்டளைக்கு பணிந்து, வட்டாரத்திலிருக்கும் காவல்துறைக்கே அறிவிக்காமல் அங்கே இறங்கி முகாமிட்டு, தேடுதல் பணியை தொடங்கியிருக்கிறார்கள் என்பதாக செய்திகள் வருகின்றன. அதேசமயம் துணை ராணுவப் படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையும், மாவோயிஸ்ட்கள் முகர்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் இப்போது கூறுகிறார்கள். ஒரு மலைமுகட்டில் இருந்து தங்களுடைய தாக்குதலை மாவோயிஸ்ட்கள் தொடுத்தார்கள் என்பதாகவும் விளக்குகிறார்கள். அந்த மலைப்பகுதிக்குள் மாட்டிக் கொண்ட சி.ஆர்.பி.எப்., தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்த மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு முன்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை என்பது விளங்குகிறது. தப்பிச் செல்வதற்கான பகுதிகளைக் கூட கண்ணிவெடிகள் மூலமாக, புரட்சியாளர்கள் தகர்த்து விட்டார்கள் என்பதாக கூறுகிறார்கள். இது உளவுத்துறையின் தோல்வியா? பயிற்சி முறையின் தோல்வியா? தயாரிப்புத் திட்டத்தின் தோல்வியா? இதுபோன்ற கேள்விகளை ஆட்சியாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பதட்டத்தின் காரணமாக, நிலைகுலைந்த நிலையில், விமானப்படை மூலம் மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி மீண்டும் பரிசீலிக்கப் போகிறோம் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் மீது ஒரு போர் திணிக்கப்பட்டுள்ளது என்பதாகவும் விளக்குகிறார். ஜனநாயகத்தை பாதுகாக்க தற்போதைக்கு நமது நரம்புகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகவும் அவர் விளக்குகிறார்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்பை சிரமேற்றுள்ள ஒரு மத்திய அமைச்சரால் முடிகிறது. அதேசமயம் போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் விநியோகம் செய்கின்ற நபர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக வருகின்ற செய்திகளும், அவரை நிலைகுலையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர், தங்கள் மீது ஒரு போர் திணிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பது எதற்கான அடித்தளம் என்று தெரியவில்லை.
குறிப்பிட்ட சத்திஸ்கர் மாநிலம், இந்தியாவின் இதய பகுதியான மலைவாழ் மக்கள் அதாவது பழங்குடி மக்கள் வாழக் கூடிய, கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்பதும், அதனாலேயே அந்த பகுதியின் மீது போர் தொடுத்து, கனிம வளங்களை பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியது நினைவுக்கு வருகிறது.
சத்திஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி.யாக இருக்கும் விஷ்வ ரஞ்சன் என்ற அதிகாரியிடம் ஊடகவியலாளர்கள், பல சந்திப்புகளில் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். சாதாரணமான இந்திய குடிமக்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அந்த சாதாரண இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் தான், இந்த டி.ஜி.பி.யின் தலைமையிலான காவலர்களும், இவர்களால் இயக்கப்படும் கூலிப்படையான சல்வா ஜுடும் என்ற கும்பலும், சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டியிருக்கிறது. சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அப்பாவி கிராமத்தவர்கள் மீது நடத்தி வரும் சூறையாடல், பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலைகள் ஆகியவற்றிற்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவழிக்க இந்த மேலதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. சல்வா ஜுடும் மட்டுமல்ல, உயர்காவல் அதிகாரியே கூட, மேற்கண்ட தண்டேவாடா மாவட்டத்தில் பாலியல் வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார் என்ற செய்தியும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் டி.ஜி.பி.யால் எடுக்கப்படவில்லை என்ற விவரமும் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படிப்பட்ட மேலதிகாரிகளின் கீழ் பணிபுரியும் காவலர்கள், எந்தவகை மனஉறுதியை பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது கேட்கப்பட வேண்டும். மக்கள் மீது அநீதிகள் நடத்தப்படும் போதெல்லாம், காவல்துறையின் அத்துமீறல்கள் அரங்கேறும் போதெல்லாம், மேலிருந்து உத்தரவு வந்தது என்று கூறத்தான் அந்த காவலர்களுக்குத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு காவல் உயர் அதிகாரியின் தலைமையில் தான் அங்கே சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அட்டூழியங்கள் அப்பாவி ஆதிவாசிகள் மீது நடத்தப்படுகிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்ட காந்தியவாதி ஹிமன்சு குமாரின் ஆசிரமம் உடைக்கப்பட்டது. அதை எதிர்த்த அவரது பாதயாத்திரை தடுக்கப்பட்டது. நியாயம் கேட்க வந்த மேதாபட்கர் தலைமையிலான பெண்கள் குழு மீது, அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. இவையெல்லாமே தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அப்பாவி ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வந்த ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட இடர்கள். இதுபற்றி ப.சிதம்பரத்திற்கு எதுவுமே தெரியவில்லையா? அங்கே சல்வா ஜுடும் நடத்திய வன்கொடுமைகள் பற்றி, நடத்தப்படயிருந்த பொதுவிசாரணையில், கலந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்த ப.சிதம்பரம், கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது எதனால்?
சல்வா ஜுடும் என்ற கூலிப்படையுடன் மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இணைந்து செயல்படுவதை பி.யூ.சி.எல். அம்பலப்படுத்தி வருகிறதே? சத்திஸ்கர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜ.க. அரசு அத்தகைய வன்முறைக்கு காவடி தூக்கி வருகிறதே? இவையெல்லாம் அந்த அரசியல் அமைப்புகளை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? தெரியாவிட்டாலும், சத்திஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான காங்கிரஸ்காரர் அஜித் ஜோகி, சல்வா ஜுடும் பற்றி கடுமையாக கண்டித்து வருகிறாரே? அந்த கண்டிப்பு மத்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து எதிரொலிக்கவில்லையே? அதன் காரணம் என்ன?
பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்திய கனிமவள செல்வத்தை கொள்ளையடிக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு, எப்படி தட்டிக்கேட்க முடியும்? மாவோயிஸ்ட்கள் பெயரைச் சொல்லி, கனிம வளங்களை பாரம்பரியமாக காத்து வருகின்ற அப்பாவி ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதைத் தவிர வேறெதை அவர்கள் செய்யப் போகிறார்கள்? அதனால் சிதம்பரமும், மத்திய அரசும் அலட்சியப்படுத்தியது மாவோயிஸ்ட்களை அல்ல. இந்திய மக்களைத் தான்.
மேற்கண்ட தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள, தண்டேவாடா என்ற பகுதி. இந்த பகுதி காடுகளையும், மலைகளையும் கொண்ட பகுதி. மத்திய சிறப்பு காவல்படையினர் தங்களது புதிய தலைமையாக வந்திறங்கிய டி.ஐ.ஜி.யின் கட்டளைக்கு பணிந்து, வட்டாரத்திலிருக்கும் காவல்துறைக்கே அறிவிக்காமல் அங்கே இறங்கி முகாமிட்டு, தேடுதல் பணியை தொடங்கியிருக்கிறார்கள் என்பதாக செய்திகள் வருகின்றன. அதேசமயம் துணை ராணுவப் படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையும், மாவோயிஸ்ட்கள் முகர்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் இப்போது கூறுகிறார்கள். ஒரு மலைமுகட்டில் இருந்து தங்களுடைய தாக்குதலை மாவோயிஸ்ட்கள் தொடுத்தார்கள் என்பதாகவும் விளக்குகிறார்கள். அந்த மலைப்பகுதிக்குள் மாட்டிக் கொண்ட சி.ஆர்.பி.எப்., தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்த மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு முன்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை என்பது விளங்குகிறது. தப்பிச் செல்வதற்கான பகுதிகளைக் கூட கண்ணிவெடிகள் மூலமாக, புரட்சியாளர்கள் தகர்த்து விட்டார்கள் என்பதாக கூறுகிறார்கள். இது உளவுத்துறையின் தோல்வியா? பயிற்சி முறையின் தோல்வியா? தயாரிப்புத் திட்டத்தின் தோல்வியா? இதுபோன்ற கேள்விகளை ஆட்சியாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பதட்டத்தின் காரணமாக, நிலைகுலைந்த நிலையில், விமானப்படை மூலம் மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி மீண்டும் பரிசீலிக்கப் போகிறோம் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் மீது ஒரு போர் திணிக்கப்பட்டுள்ளது என்பதாகவும் விளக்குகிறார். ஜனநாயகத்தை பாதுகாக்க தற்போதைக்கு நமது நரம்புகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகவும் அவர் விளக்குகிறார்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்பை சிரமேற்றுள்ள ஒரு மத்திய அமைச்சரால் முடிகிறது. அதேசமயம் போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் விநியோகம் செய்கின்ற நபர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக வருகின்ற செய்திகளும், அவரை நிலைகுலையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர், தங்கள் மீது ஒரு போர் திணிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பது எதற்கான அடித்தளம் என்று தெரியவில்லை.
குறிப்பிட்ட சத்திஸ்கர் மாநிலம், இந்தியாவின் இதய பகுதியான மலைவாழ் மக்கள் அதாவது பழங்குடி மக்கள் வாழக் கூடிய, கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்பதும், அதனாலேயே அந்த பகுதியின் மீது போர் தொடுத்து, கனிம வளங்களை பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியது நினைவுக்கு வருகிறது.
சத்திஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி.யாக இருக்கும் விஷ்வ ரஞ்சன் என்ற அதிகாரியிடம் ஊடகவியலாளர்கள், பல சந்திப்புகளில் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். சாதாரணமான இந்திய குடிமக்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அந்த சாதாரண இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் தான், இந்த டி.ஜி.பி.யின் தலைமையிலான காவலர்களும், இவர்களால் இயக்கப்படும் கூலிப்படையான சல்வா ஜுடும் என்ற கும்பலும், சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டியிருக்கிறது. சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அப்பாவி கிராமத்தவர்கள் மீது நடத்தி வரும் சூறையாடல், பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலைகள் ஆகியவற்றிற்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவழிக்க இந்த மேலதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. சல்வா ஜுடும் மட்டுமல்ல, உயர்காவல் அதிகாரியே கூட, மேற்கண்ட தண்டேவாடா மாவட்டத்தில் பாலியல் வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார் என்ற செய்தியும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் டி.ஜி.பி.யால் எடுக்கப்படவில்லை என்ற விவரமும் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படிப்பட்ட மேலதிகாரிகளின் கீழ் பணிபுரியும் காவலர்கள், எந்தவகை மனஉறுதியை பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது கேட்கப்பட வேண்டும். மக்கள் மீது அநீதிகள் நடத்தப்படும் போதெல்லாம், காவல்துறையின் அத்துமீறல்கள் அரங்கேறும் போதெல்லாம், மேலிருந்து உத்தரவு வந்தது என்று கூறத்தான் அந்த காவலர்களுக்குத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு காவல் உயர் அதிகாரியின் தலைமையில் தான் அங்கே சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அட்டூழியங்கள் அப்பாவி ஆதிவாசிகள் மீது நடத்தப்படுகிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்ட காந்தியவாதி ஹிமன்சு குமாரின் ஆசிரமம் உடைக்கப்பட்டது. அதை எதிர்த்த அவரது பாதயாத்திரை தடுக்கப்பட்டது. நியாயம் கேட்க வந்த மேதாபட்கர் தலைமையிலான பெண்கள் குழு மீது, அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. இவையெல்லாமே தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அப்பாவி ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வந்த ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட இடர்கள். இதுபற்றி ப.சிதம்பரத்திற்கு எதுவுமே தெரியவில்லையா? அங்கே சல்வா ஜுடும் நடத்திய வன்கொடுமைகள் பற்றி, நடத்தப்படயிருந்த பொதுவிசாரணையில், கலந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்த ப.சிதம்பரம், கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது எதனால்?
சல்வா ஜுடும் என்ற கூலிப்படையுடன் மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இணைந்து செயல்படுவதை பி.யூ.சி.எல். அம்பலப்படுத்தி வருகிறதே? சத்திஸ்கர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜ.க. அரசு அத்தகைய வன்முறைக்கு காவடி தூக்கி வருகிறதே? இவையெல்லாம் அந்த அரசியல் அமைப்புகளை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? தெரியாவிட்டாலும், சத்திஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான காங்கிரஸ்காரர் அஜித் ஜோகி, சல்வா ஜுடும் பற்றி கடுமையாக கண்டித்து வருகிறாரே? அந்த கண்டிப்பு மத்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து எதிரொலிக்கவில்லையே? அதன் காரணம் என்ன?
பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்திய கனிமவள செல்வத்தை கொள்ளையடிக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு, எப்படி தட்டிக்கேட்க முடியும்? மாவோயிஸ்ட்கள் பெயரைச் சொல்லி, கனிம வளங்களை பாரம்பரியமாக காத்து வருகின்ற அப்பாவி ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதைத் தவிர வேறெதை அவர்கள் செய்யப் போகிறார்கள்? அதனால் சிதம்பரமும், மத்திய அரசும் அலட்சியப்படுத்தியது மாவோயிஸ்ட்களை அல்ல. இந்திய மக்களைத் தான்.
Wednesday, April 7, 2010
சரணடைந்த புலிகளை சுட்டவர்கள், உலகம் முன் மண்டியிடுவார்களா?
இலங்கைத் தீவு தேர்தலை எதிர்கொண் டிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரை நடத்திய ராஜபக்சே அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் பட்டியலிடப் படுகின்றன. ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும், இந்திய வம்சாவழி தமிழர்களான மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் தமிழின உணர்வு மேலொங்கும் நிலையை, வன்னிப் போர் ஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமின்றி இந்த மூன்று பிரிவு தமிழர்களின் ரத்த உறவுகள், உலகெங்கும் பரவிக்கிடக்கி றார்கள். அவர்கள் நடந்து முடிந்த வன்னிப் போர் பற்றி, கடுமையான கண்டனத்தை ராஜபக்சே அரசாங் கத்தின் மீது கொண்டிருக்கி றார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்த போரை நடத்துகிறோம் என்று சொல்லி சிங்கள பெரும்பான்மை மக்களை, போருக்கு எதிராக குரல் எழுப்பவிடாமல், ராஜபக்சே அர சாங்கம் தந்திரமாக இதுவரை தடுக்க முடிந்தது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரை நடத்திய ராஜபக்சே அரசாங்கம், நாட்டை இன ரீதியாக நிரந்தரமான பிளவுக்கு இட்டுச் செல்கிறது என்று நாட்டுப்பற்று உள்ள சிங்கள மக்கள் அப்போதே எண்ணினார்கள். அவர்களது எண்ணிக்கை பெரும்பான்மை சிங்களர்களை தாக்கம் செலுத்தவில்லை.
ஆனாலும் வன்னிப்போரில் சிங்கள ராணுவம் கொடூரமான கொலைகளை செய்தது என்ற செய்தி மெல்ல, மெல்ல வெளியானது. நிராயுதபாணியான அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்ற செய்திகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தன. இது பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே பெற்றிருந்த செல்வாக்கை சிறிது, சிறிதாக குறைத்தது. படக்காட்சிகளும், காணொளி களும், ராணுவத்தின் அட்டூழியங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தின. இதுவே உலக சமூகத்தின் உணர்வுகளை தட்டி எழுப்பியது போலவே, சிங்கள ஜனநாயக சக்திகள் மத்தியிலும், ராஜபக்சே ராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய பொன்சேகா, அரசாங்கத்திற்கு எதிராக அப்ரூவரானார். அதுவும் அரசாங்கத்தை தலைமை தாங்கிய ராஜபக்சேயிக்கு எதிராகவே, அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்படிப்பட்ட பொன்சேகா கொடுத்த ஒரு செய்தி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது.
வன்னிப்போரின் உச்சக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகளாக இருந்த ஆண்களையும், பெண்களையும் ராஜபக்சே குடும்பத்தினர் கொடுத்த கட்டளையின் கீழ், வட்டார ராணுவத் தளபதிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியை, அன்றைக்கு ராணுவத்திற்கு தலைமையேற்றிருந்த சரத்பொன்சேகா கூறினார். அதையே மகிந்தா அரசாங்கம் மாபெரும் துரோகம் என்பதாக பொன்சேகாவுக்கு எதிராக குற்றம் சாட்டியது. போரின் இறுதிக்கட்டத்தில் முக்கியமான புலிப்படை தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் என்ற முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சரணடையப் போகிறார்கள் என்ற செய்தியை தனக்கு அரசாங்கம் கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறினார்.
அதே சமயம் சரணடைவு பற்றி விடுதலைப் புலி தலைவர்களுக்கும், நார்வே நாட்டு அரசாங்கத்திற்கும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுக்கும், மகிந்தாவின் தம்பியும், நியமன நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபரின் ஆலேசகருமான பசில் ராஜபக்சேவிற்கும் இடையில் மட்டும்தான் பரிமாற்றம் இருந்தது என்பதை அப்போது அவர் தெரிவித்தார். சரணடைந்த புலிப்படை தலைவர்களை, உலக போர் விதிகளுக்கு எதிராக, போர் குற்றம் புரிந்த நிலையில், சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது என்ற அந்தக் கொடிய வன்செயலை பின் னால் தான் தெரிந்து கொண்டேன் என்பதாக பொன் சேகா கூறினார்.
பொன்சேகாவின் கூற்றுப்படி மேற்படி சரணடைதல் என்ற செய்தியை பசில் ராஜபக்சே, மகிந்தாவின் இன்னொரு தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிற்கு தெரிவித்திருக் கிறார். கோத்தபாய ராஜபக்சே அந்த செய்தியை, ராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக இருக்கும் பிரிகேடியர் சாவேந்திர சில்வா என்ற கொடியவனுக்கு கூறியிருக் கிறார். கூறியது மட்டுமல்லாமல் சரணடையக் கூடிய முயற்சிகளில் எந்தவொரு விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் அனுமதிக்க கூடாது என்றும், அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்றும், கோத்தபாய ராஜபக்சே, பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிடம் கட்டளை யிட்டுள்ளார். மேற்கண்ட செய்தியை தாமதமாகப் பெற்ற நிலையில், அதிபர் தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக போட்டி யிடும் போது, சரத்பொன்சேகா ஊடகங் களுக்கு வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட நிகழ்வு உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் நடந்ததில்லை. ஏனென்றால் உலகப் போருக்குப் பிறகு, ஜெனீவா ஒப்பந்தம் என்ற போர் விதிகள் பற்றிய ஒரு ஒப்பந்தம் நாடுகளுக்குள் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஆயுதம் தாங்கிய இரண்டு படைகள் போரில் ஈடுபடும் போது, யாராவது ஆயுதங்களை கீழேப் போட்டு விட்டு, சரணடைவு என்பதாக வருவார் களானால் அவர்களை எந்தத் துன்புறுத்தலும் செய்யாமல், அனுமதிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. போரில் சரணடைந்த வீரர்களை, போர்க் கைதிகள் என்பதாக எந்த ஒரு அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போர்க் கைதிகளை சுயமரியாதை யுடன், அனைத்துவித உதவிகளும் செய்து நடத்த வேண்டும். மேற்கண்ட விதிகள் ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த ஒரு செய்தி.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாக ராஜபக்சே அரசாங்கம் அறிவித்து இருந்தது. அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மீதும், வாஷிங்டனில் பென்டகன் என்ற அமெரிக்க ராணுவ தலைமையகம் மீதும், கடுமையான விமானத் தாக்குதலை அல்கொய்தாவினர் நடத்திய பிற்பாடு, உலகம் எங்கிலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பரப்புரையை, திட்ட மிடுதலை, ஒருங்கிணைப்பை அமெரிக்க அரசாங்கம் செய்தது. அப்படிப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு போரை தானும் நடத்துவதாக மகிந்தா அரசாங்கம் அறிவித்த போது, மேற்கத்திய நாடுகள் அதை நம்பி இனவாத போரின் சாராம்சத்தை உணராமல் இருந்தனர். அதே சமயம் ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த அண்டை நாட்டு அரசாங்கங்கள், அதையே காரண மாக்கி ராஜபக்சேயின் இனவாத போருக்கு உதவிகள் செய்தனர். அதனாலேயே அந்த இனவாத போர், தமிழின அழிப்பு போராக மாறியது.
வன்னிப்போர் முடிவுக்கு பிறகு, பொன்சேகா சாட்சியம் கொடுத்தப் பிற்பாடு உலக சமூகத்திற்கு மேலே குறிப்பிட்ட போர்க்குற்றம் அம்பலத்திற்கு வந்தது. குறிப்பாக சரணடைந்த புலிப்படை போராளி களை சுட்டுக் கொன்ற கோழைத்தனமான, ராஜபக்சே குடும்பத்தின் அத்துமீறல் வெளியே தெரிந்தது. அதுதான் உலக அரங்கில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மத்தியில் இன்றைக்கு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியா நாடுகளின் அரசாங்கங்களை, ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கணக்குப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க வைத்துள்ளது.
மே 17ந் தேதி நள்ளிரவில் நடந்த அந்த சரணடைவில், விடுதலைப் புலிகளின் அரசியல் அணி தலைவரான பாலசிங்கம் நடேசன், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைமையான சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் விடுதலைப்புலியின் மூத்த தளபதியான ரமேஷ் ஆகியோர் முக்கியமாக தலைமை வகித்தனர். அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட அரசத்தலைவரின் சகோதரர் களின் கொடூரச்செயல் இப்போது பயங்கர வாதி யார் என்பதை உலக அரங்கில் தோலுரித்துக் காட்டியுள்ளது.
பயங்கரவாதிகள் என்று முத்திரையால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை, பல நாட்டு அரசாங்கங்கள் தனிமைப்படுத்த முடிந்தது. அதே சமயம் பகிரங்கமாக, உலக நாடுகளுக்கும், ஐ.நா.சபைத் தலைவர் களுக்கும் அறிவித்துவிட்டு அவர்கள் மூலம் சரணடைந்த புலிப்படைத்தலைவர்களை படுகொலை செய்ததன் மூலம், உண்மையான பயங்கரவாதி என்பதாக ராஜபக்சே அரசாங்கம் இந்த உலகத்தின் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. ஆகவே புலிப்படைத்தலைவர்களின் குறிப்பிட்ட சரணடைவு என்பது ஒரு அரசியல் போராட்டத்தின் வீச்சை, தொடங்க வைப்பதற்கு காரணமாக ஆகியுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் மரணத்திற்கு தயாராக இறங்குவது போலவே, சரணடைவு என்ற அரசியல் நிகழ்ச்சியின் மூலம், உலக அரங்கில் எதிரியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடிந்திருக்கிறது என்பதுதான் விடுதலைப்புலிகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது. இதைக் கணக்கில் கொண்டு, ராஜபக்சே கூட்டத்திற்கு எதிராக தங்களது வாக்குகளை, இலங்கை மக்கள் பதிவு செய்வார்களா என்று உலகம் கேட்கிறது.
ஆனாலும் வன்னிப்போரில் சிங்கள ராணுவம் கொடூரமான கொலைகளை செய்தது என்ற செய்தி மெல்ல, மெல்ல வெளியானது. நிராயுதபாணியான அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்ற செய்திகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தன. இது பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே பெற்றிருந்த செல்வாக்கை சிறிது, சிறிதாக குறைத்தது. படக்காட்சிகளும், காணொளி களும், ராணுவத்தின் அட்டூழியங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தின. இதுவே உலக சமூகத்தின் உணர்வுகளை தட்டி எழுப்பியது போலவே, சிங்கள ஜனநாயக சக்திகள் மத்தியிலும், ராஜபக்சே ராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய பொன்சேகா, அரசாங்கத்திற்கு எதிராக அப்ரூவரானார். அதுவும் அரசாங்கத்தை தலைமை தாங்கிய ராஜபக்சேயிக்கு எதிராகவே, அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்படிப்பட்ட பொன்சேகா கொடுத்த ஒரு செய்தி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது.
வன்னிப்போரின் உச்சக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகளாக இருந்த ஆண்களையும், பெண்களையும் ராஜபக்சே குடும்பத்தினர் கொடுத்த கட்டளையின் கீழ், வட்டார ராணுவத் தளபதிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியை, அன்றைக்கு ராணுவத்திற்கு தலைமையேற்றிருந்த சரத்பொன்சேகா கூறினார். அதையே மகிந்தா அரசாங்கம் மாபெரும் துரோகம் என்பதாக பொன்சேகாவுக்கு எதிராக குற்றம் சாட்டியது. போரின் இறுதிக்கட்டத்தில் முக்கியமான புலிப்படை தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் என்ற முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சரணடையப் போகிறார்கள் என்ற செய்தியை தனக்கு அரசாங்கம் கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறினார்.
அதே சமயம் சரணடைவு பற்றி விடுதலைப் புலி தலைவர்களுக்கும், நார்வே நாட்டு அரசாங்கத்திற்கும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுக்கும், மகிந்தாவின் தம்பியும், நியமன நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபரின் ஆலேசகருமான பசில் ராஜபக்சேவிற்கும் இடையில் மட்டும்தான் பரிமாற்றம் இருந்தது என்பதை அப்போது அவர் தெரிவித்தார். சரணடைந்த புலிப்படை தலைவர்களை, உலக போர் விதிகளுக்கு எதிராக, போர் குற்றம் புரிந்த நிலையில், சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது என்ற அந்தக் கொடிய வன்செயலை பின் னால் தான் தெரிந்து கொண்டேன் என்பதாக பொன் சேகா கூறினார்.
பொன்சேகாவின் கூற்றுப்படி மேற்படி சரணடைதல் என்ற செய்தியை பசில் ராஜபக்சே, மகிந்தாவின் இன்னொரு தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிற்கு தெரிவித்திருக் கிறார். கோத்தபாய ராஜபக்சே அந்த செய்தியை, ராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக இருக்கும் பிரிகேடியர் சாவேந்திர சில்வா என்ற கொடியவனுக்கு கூறியிருக் கிறார். கூறியது மட்டுமல்லாமல் சரணடையக் கூடிய முயற்சிகளில் எந்தவொரு விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் அனுமதிக்க கூடாது என்றும், அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்றும், கோத்தபாய ராஜபக்சே, பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிடம் கட்டளை யிட்டுள்ளார். மேற்கண்ட செய்தியை தாமதமாகப் பெற்ற நிலையில், அதிபர் தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக போட்டி யிடும் போது, சரத்பொன்சேகா ஊடகங் களுக்கு வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட நிகழ்வு உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் நடந்ததில்லை. ஏனென்றால் உலகப் போருக்குப் பிறகு, ஜெனீவா ஒப்பந்தம் என்ற போர் விதிகள் பற்றிய ஒரு ஒப்பந்தம் நாடுகளுக்குள் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஆயுதம் தாங்கிய இரண்டு படைகள் போரில் ஈடுபடும் போது, யாராவது ஆயுதங்களை கீழேப் போட்டு விட்டு, சரணடைவு என்பதாக வருவார் களானால் அவர்களை எந்தத் துன்புறுத்தலும் செய்யாமல், அனுமதிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. போரில் சரணடைந்த வீரர்களை, போர்க் கைதிகள் என்பதாக எந்த ஒரு அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போர்க் கைதிகளை சுயமரியாதை யுடன், அனைத்துவித உதவிகளும் செய்து நடத்த வேண்டும். மேற்கண்ட விதிகள் ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த ஒரு செய்தி.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாக ராஜபக்சே அரசாங்கம் அறிவித்து இருந்தது. அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மீதும், வாஷிங்டனில் பென்டகன் என்ற அமெரிக்க ராணுவ தலைமையகம் மீதும், கடுமையான விமானத் தாக்குதலை அல்கொய்தாவினர் நடத்திய பிற்பாடு, உலகம் எங்கிலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பரப்புரையை, திட்ட மிடுதலை, ஒருங்கிணைப்பை அமெரிக்க அரசாங்கம் செய்தது. அப்படிப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு போரை தானும் நடத்துவதாக மகிந்தா அரசாங்கம் அறிவித்த போது, மேற்கத்திய நாடுகள் அதை நம்பி இனவாத போரின் சாராம்சத்தை உணராமல் இருந்தனர். அதே சமயம் ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த அண்டை நாட்டு அரசாங்கங்கள், அதையே காரண மாக்கி ராஜபக்சேயின் இனவாத போருக்கு உதவிகள் செய்தனர். அதனாலேயே அந்த இனவாத போர், தமிழின அழிப்பு போராக மாறியது.
வன்னிப்போர் முடிவுக்கு பிறகு, பொன்சேகா சாட்சியம் கொடுத்தப் பிற்பாடு உலக சமூகத்திற்கு மேலே குறிப்பிட்ட போர்க்குற்றம் அம்பலத்திற்கு வந்தது. குறிப்பாக சரணடைந்த புலிப்படை போராளி களை சுட்டுக் கொன்ற கோழைத்தனமான, ராஜபக்சே குடும்பத்தின் அத்துமீறல் வெளியே தெரிந்தது. அதுதான் உலக அரங்கில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மத்தியில் இன்றைக்கு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியா நாடுகளின் அரசாங்கங்களை, ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கணக்குப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க வைத்துள்ளது.
மே 17ந் தேதி நள்ளிரவில் நடந்த அந்த சரணடைவில், விடுதலைப் புலிகளின் அரசியல் அணி தலைவரான பாலசிங்கம் நடேசன், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைமையான சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் விடுதலைப்புலியின் மூத்த தளபதியான ரமேஷ் ஆகியோர் முக்கியமாக தலைமை வகித்தனர். அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட அரசத்தலைவரின் சகோதரர் களின் கொடூரச்செயல் இப்போது பயங்கர வாதி யார் என்பதை உலக அரங்கில் தோலுரித்துக் காட்டியுள்ளது.
பயங்கரவாதிகள் என்று முத்திரையால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை, பல நாட்டு அரசாங்கங்கள் தனிமைப்படுத்த முடிந்தது. அதே சமயம் பகிரங்கமாக, உலக நாடுகளுக்கும், ஐ.நா.சபைத் தலைவர் களுக்கும் அறிவித்துவிட்டு அவர்கள் மூலம் சரணடைந்த புலிப்படைத்தலைவர்களை படுகொலை செய்ததன் மூலம், உண்மையான பயங்கரவாதி என்பதாக ராஜபக்சே அரசாங்கம் இந்த உலகத்தின் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. ஆகவே புலிப்படைத்தலைவர்களின் குறிப்பிட்ட சரணடைவு என்பது ஒரு அரசியல் போராட்டத்தின் வீச்சை, தொடங்க வைப்பதற்கு காரணமாக ஆகியுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் மரணத்திற்கு தயாராக இறங்குவது போலவே, சரணடைவு என்ற அரசியல் நிகழ்ச்சியின் மூலம், உலக அரங்கில் எதிரியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடிந்திருக்கிறது என்பதுதான் விடுதலைப்புலிகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது. இதைக் கணக்கில் கொண்டு, ராஜபக்சே கூட்டத்திற்கு எதிராக தங்களது வாக்குகளை, இலங்கை மக்கள் பதிவு செய்வார்களா என்று உலகம் கேட்கிறது.
Subscribe to:
Posts (Atom)
