Saturday, January 2, 2010

சரணடைந்த விடுதலைப் புலிகளை

கொழும்பு, ஜன. 2கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், விடுதலைப் புலிகளையும் படுகொலை செய்த இலங்கை ராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர்ஒருவர் வெளியிட்டுள்ளார்< இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப் புலிகளை படுகொலை செய்த இலங்கை ராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற் கொண்டவர்களாகும் என தெரிவிக்கப் படுகின்றது. பின்வரும் ராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதானபடுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை ரெஜிமென்ட்டின் ஆணைய அதிகாரி கர்ணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பட்டாலியன் ஆணைய அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பட்டாலியன் ஆணைய அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.சிறப்பு படையின் கால்ஃப் கம்பெனியின் ஆணைய அதிகாரி கேப்டன் சமிந்த குணசேகரா,ரோமியோ கம்பெனியை சேர்ந்த கேப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கம்பனியைசேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கம்பெனியை சேர்ந்த கேப்டன் லசந்தாரத்னசேகரா.மேற்கூறப்பட்டவற்றில் கால்ஃப் மற்றும் ரோமியோ கம்பெனிகள் 1 ஆவது சிறப்பு படைபற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோணஞண் ணீ;மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவதுசிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா 59 ஆவது படையணியின் ஆணைய அதிகாரிமேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிமேஜர் ஜெனரல் கமால் குணரட்னா53 ஆவது படையணியின்ஆணைய அதிகாரிகர்ணல் ரவிப்பிரியா எட்டாவது நடவடிக்கை படையணியின் ஆணைய அதிகாரிஅரசு தரப்பில் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்கள்:அரச தலைவர் மகிந்த ராஜபக்சேஅரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்காபாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேசிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அரசு ராஜபக்சேவெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா ஆகியோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment