Saturday, January 2, 2010

சந்திரசேகரன் மரணம்

கொழும்பு, ஜன. 2
சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்காற்றியவராவார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த சந்திரசேகரன், முதன் முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.
இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான ஈ.பி.ஆர்.எல்.எஃப்.தலைவர் பத்மநாபாவின் முன் முயற்சியுடன் தோற்றுவித்து, முகுந்தன் தலைமையிலான புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவளித்தார் என்ற வகையில் இவர் சில காலம் சிறையும் சென்றார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், ராஜபக்சே அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார். மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளியுலகிற்கும் கொண்டு சென்றது

No comments:

Post a Comment