Tuesday, June 22, 2010

இன்னொருவர் அம்பலமாகிறார்

அக்னி சுப்பிரமணியம் என்பவர் பற்றி இப்பொது ஒரு செய்தி இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஆச்சர்யமாக இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் மீது பொதுவாக நம்பிக்கை இல்லை.அக்னி சுப்பிரமணியம் பற்றி ஏற்கனவே எச்சரித்தோம். இதுபோல நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நமது தமிழர்கள், குறிப்பாக எங்களுடன் களப்பணிகளுக்கு வரும் தமிழ் நாட்டு தமிழர்கள் பலரும் இது போன்ற செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. அல்லது அதற்காக அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. இந்த அக்னி ஏற்கனவே ஈரோட்டில் என்னை மக்கள் சிவில் உரிமை கழக மாநாட்டில் முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். அல்லது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அப்போதே நான் அதாவது அவரை சந்திப்பதற்கு முன்பே நான் அவர் இப்படிப்பட்டவர் என்று கேள்விப்பட்டேன். அதனால் அவரிடமே வினவினேன். உங்களை பற்றி நான் நல்ல முறையில் கேள்விப்படவில்லையே?இதுவரை நாம் சந்தித்த்டது இல்லை.இப்போது பார்த்து விடீர்கள். இனி நம்பலாம் இல்லையா?-என அவர் கேட்டார். பார்த்ததனால் எப்படி நம்ப முடியும்?-நான் கேட்டேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர் சொன்னார். நான் என்.ஜி.ஒ. எனக்கு அது பற்றி நல்ல அபிப்ராயம் இல்லையே? உடனே அவர் சொன்னார்:- நான் ஹென்றி வளர்ப்பு. நான் சொன்னேன், அவர் வளர்ப்பு என்றால் நான் தவறாகத்தான் நினைப்பேன். நான் அகதிகளுக்கு உதவி செய்கிறேன். நான் நெடுமாறன் ஆகியோருடன் வேலை செய்கிறேன். நான் கேட்டேன் ஆனால், யாருக்கும் உங்களை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லையோ? அவர் திணறினார். பிறகு அவர் சொன்னார். நான் நண்பர்களிடம் பணம் சேர்த்தது அகதிகளுக்கு துணிமணி வாங்கி கொடுக்கிறேன். அப்படி யாரும் செய்வது கடினமாயிற்றே? இப்படி இருந்தது முதல் சந்திப்பு.
அதற்கு பிறகு அவர் சென்னை வந்தார். நான் சென்னை வந்துவிட்டேன் என்றார். சரி. அவரது வரத்து தலைமை உத்தரவு போலும் என எண்ணினேன். பிறகு ஈழத்தமிழர் பேரணிகளில் முனனால் தலைவர்களுடன் வந்தார். அதற்கு முன்பே சேது திட்டத்தை எதிர்த்தது போராடும் எங்கள் தோழர்களை தெற்கே சென்று பார்த்து பேசி இருக்கிறார். அவருக்கு அவ்வளவு அதிகமாக விவரம் தெரியாது. பின் எப்படி எல்லாவற்றிலும் இணைகிறார் என்ற ஐயம் இருந்தது பிறகு பெங்களூரில் நடந்த முஸ்லிம் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தமிழ்நாட்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார் என கேள்விபட்டேன். என் போன்ற தோழர்கள் இப்படி எல்லா இடங்களிலும் போய் கலந்து கொள்வது வேறு விஷயம். இவர் அப்படி ஆளும் இல்லை. அவ்வளவு விவரமும் இல்லை. வன்னி போர் நேரத்தில் டெலோ தலைவர்களுடன் பத்திரிகையாளர் கூட்டத்தை இவரே கூட்டினார். எனக்கு சந்தேகம் கூடியது. சிவாஜிலிங்கம் அதில் சிக்கிகொண்டவர் என்பது பிறகு தெரிந்தது. முதலில் எல்லா புலி அல்லாத எம்.பி.களையும் ரா பயன்படுத்த விரும்புகிறது என்பதாகத்தான் நான் சந்தேகப்பட்டேன். அதை நான் பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் சொல்லிவிட்டேன். இந்த ஆள்
இந்திய உள்நாட்டு உளவுத்துறை ஆள் என்று தான் நான் எண்ணினேன். பிறகு ஒரு ஹூண்டாய் காருடன் வந்தார். நண்பர்கள் அதில் ஏறி சென்றனர். நானும் எச்சரித்தேன். பிறகு வணங்காமன் கப்பல் வந்தது. தடுக்கப்பட்டது. அதற்குள் வெப்சைட் நடத்தினார். அதன்மூலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பழகினார். அவர்களும் நம்பி கப்பல் பற்றிய செய்திகளை இவருக்கு தந்தனர். அதைவைத்து சென்னையிலுள்ள ஊடகங்களை செல்வாக்கு செலுத்தினார். இந்த அளவுக்கு விவரமான ஆளாகவும் தெரிய வில்லை. அவருக்கு யாரோ அத்தனை ஆலோசனையையும் கொடுப்பதாக தெரிந்தது. இப்போது கலைஞருக்கு பார்வதி எழுஅம்மாவால் தப்பட்டதாக சொன்ன கடிதம் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. தமிழ் நாட்டில் ஒரு தவறான பழக்கம் உள்ளது. ஒருவரை அவரது பேச்சு, மற்றும் எழுத்தை மட்டும் வைத்து முற்ப்போக்கு எனவும், புரட்சியாளர் என்றும் முடிவு செய்கிறார்கள். அவரது செயல் என்பதை கணிப்பதே இல்லை. இதே தவறு புலம் பெயர்ந்த தமிழரில் சாதாரண மக்களிடம் உள்ளது. இயக்கத்துக்காரார்கள் மட்டுமே ஒவ்வொருவரையும் பரிசீலித்து கணிக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் தமிழனின் கோளாறு. ஒவ்வொருவரையும் பேச்சை வைத்து பார்க்காதீர்கள்.

No comments:

Post a Comment