Tuesday, June 22, 2010

வவுனியாவில் எம் தமிழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு ????

முன்னாள் போராளிகளுக்கு என்ன செய்கிறது இலங்கை அரசு? கருணா அம்மான் நிறைய நிலங்களையும், தோட்டங்களையும் வாங்கி போட்டிருக்கிறான். அவற்றில் முன்னாள் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகிறான். தமிழன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆங்கிலேயரால் கடத்திச்செல்லப்பட்ட காலத்தில், அங்கே போய் ரத்தத்தை பிழிந்து காடுகளை பதப்படுத்தி தோட்டமாக்கி அன்றைய ஆங்கிலேயர்களுக்கு உற்பத்தி பின்னிலமாக ஆக்கி வைத்தான். அன்றே சுதந்திரமாக இருந்த ஈழத்தமிழர்கள் இன்று போரில் தோற்றபின், அடிமைகளாக, கொத்தடிமைகளாக, ஆக்கப்பட்டு, உண்ண உணவு கூட கொடுக்கப்படாத நிலையில், கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். இப்போது இதைச்செயபவன் ஆங்கிலேயன் அல்ல. சிங்களன் அல்ல. ஆனால் முன்னாள் போர்ப்படை தளபதியாக இருந்து இந்நாள் அமைச்சராக இருக்கும் கருணா அம்மன் இதை செய்கிறான். இன்று பட்டினியில் வேலை செய்யும் அந்த முன்னாள் போராளிகள், எலும்பும்,தோலுமாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களை சென்று பார்த்த அவர்களது மனைவிமார்கள் இந்த கோரக்காட்சிகளை கூறக்கேட்கும்போது நெஞ்செல்லாம் வெடிப்பது போல் உள்ளது.
அடுத்து வவுனியாவில் உள்ள ஈழத்தமிழ் பெண்கள் நிலைமை மிக மோசமாக ஆகி வருகிறது. அங்கே இருக்கும் சிங்கள ராணுவ காடையர்கள் எங்கள் தமிழ் பெண்களை சூறையாடுவதை வழமையாக கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவு வவுனியாவில் உள்ள தமிழ் பெண்களில் பலரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். வவுனியா தமிழ் பெண்களின் நிலைமை யாராவது தலையிட்டு தடுக்கவேண்டும் என்ற நிலைமைக்கு சென்றுள்ளது. வெளி நாட்டிலிருந்து அங்கு செல்லும் பணக்கார தமிழர்கள் ஏதாவது உதவி செய்ய செல்கிறோம் எனக்கோரி செல்பவர்கள் சிலர்கூட, இதே போல தமிழ் பெண்களை சூறை யாடுவதை தங்களது ஆண் ஆதிக்க வெறியாக காட்டி வருகிறார்கள் என்ற செய்தி வெட்கத்தக்க செய்தியாக இருக்கிறது. தமிழ் ஆண்களே, புலம்பெயர்ந்த ஆண்களே, நீங்கள்தான் அன்றே ஓடிப்போய் உங்களது தமிழ் பற்றை காட்டி விட்டீர்களே. இப்போது என் அங்கே சென்று எங்கள் பெண்களின் இயலாமையை சுரண்ட எண்ணுகிறீர்கள்? உங்களுக்கு உங்கள் அக்காள், தங்கச்சி, தாய் ஆகியோர் இல்லையா? இப்படியும் கூட கேட்கத்தோன்றுகிறது.
இவையெல்லாவற்றையும் விட கொடூரமான வேலையை அரசு சார நிறுவனம் என்ற பெயரில் சில தமிழர்கள் செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில அரசு சார நிறுவங்கள் குழந்தைகள் பாதுகாப்பு அகங்களை நடத்துகிறோம் என்கின்றனர். மகிழ்ச்சி என்று சொன்னால், அதிலும் தங்கள் நிதி திரட்டும் வேலையை காட்டுகிறார்கள். வடக்கே இருக்கும் குடும்பக்களுக்கு அவரவர் குழந்தைகளை அனுப்ப, இந்த நிறுவனகள் மறுக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நீங்கள் முதலில் மீள் குடியேற்றத்தில் சரியாக அமருங்கள். உங்களை நிலைப்படுத்திகொல்லுங்கள். அதுவரை உங்கள் குழந்தைகள் எங்கள் இல்லத்தில் இருக்கட்டும் எனகூறிவிடுகின்றனர். அதன் மூலம் பெற்றோரையும், குழந்தைகளையும் பிரித்தே வைத்து விடுகின்றனர். தாய்மாரை தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். சிங்களனின் கொடுமை போதாது என்று இது வேறா என்பதாக எம்மக்கள் அடித்துக்கொள்கிராரகள். ஏற்கனவே சிங்களவன் வந்து குடியமர்த்தப்படுகிறான். தமிழன் தனது நிலத்தை இழக்கிறான். குடியிருப்பை இழக்கிறான். சிங்கள ராணுவம் வடக்கை ஆக்கிரமித்து கொண்டு உள்ளான். அதில் புத்த சிலையை நிறுவுகிறான். அரச மரத்தை நடுகிறான். தமிழ் கடவுள் முருகன் கோவிலை அத்துமீறி பயன்படுத்துகிறான். தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்திற்காக குடியிருப்பு கட்டுகிறான். இத்தனையும் காணாது என முன்னாள் போராளிகளை கருணா நடத்தும் விதமும், வவுனியாவில் தமிழ் பெண்கள் நடத்தப்படும் விதமும், சேவை நிறுவனகள் தமிழ் குழந்தைகளை பிடித்து வைத்து கொண்டு, அவர்கள் பெயரை சொல்லி வெளிநாட்டு நிதி திரட்டும் விதமும், கேள்விப்படும்போது நெஞ்சை உருக்குகிறது. இந்த கொடுமைகளை தமிழர்களே செய்யாதீர்கள். செய்தீர்கள் என்றால் உங்கள் பெயரும் துரோக பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். இதுமட்டும் நிச்சயம். என் என்றால் அனைத்தையும் உலகத்தமிழர்கள் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். நினைவில் வையுங்கள்.

No comments:

Post a Comment