Thursday, July 22, 2010

கோபம் கொள்ளல் ஆகாது பாப்பா.

கோபத்தை கட்டுப்படுத்தவா?
அது எப்படி? சமாளிக்கத்தான்
முடியும். எதிராளி புண்படுத்தினால்,
கோபம் வருவது இயற்கைதான்.
புண்பட்ட நெஞ்சம் புயலாக மாறும்.
புயலாக மாறினால், கோபமாய்
வெடிக்கும். வெடிப்பதால் வெற்றி
கிட்டுமா? வெடிப்பதால் நரம்பு
தளரும். நம் உடல் உடையும்.
புண்படுத்தியது திருந்துமா?
நீ புண்படுத்தினாய் என்பதிலும்,
உன் செயல் புண்படுத்தியது
என்பதிலும், எத்தனை வேற்றுமை?.
தண்ணீர் குடி உடனே. வெடிப்பது
உடன் அடங்கும். இது புதிய குறுந்தகடின்
அறிவுரை. அது என்ன குறுந்தகடு?.
வேகமா? விவேகமா? என்ற ஒரு
புது தகடு. சிந்தித்து பேச சொல்லும்
ஒரு தகடு. கோபம் அதிகமானால்,
உச்ச கட்டம் போகும்போது,
உணர்ச்சிகளே வெளிப்படும்.
அறிவார்ந்த பதில் அறுந்து போகும்.
ஆத்திரமாக அதுவே மாறும்.
அதுவா சிறந்தது?
சிந்தித்து பேச இடைவெளி வேண்டாமா?
அதற்காக தண்ணீர் குடி. இது கலாசேத்ரா
கொடுக்கும் குறுந்தகடு.
புண்படுத்த நான் எண்ணவில்லை.
புண்படுத்தியதும் எனக்கு தெரியவில்லை.
ஆனால் வெடிகளை சுமக்கும்
கழுதை நான்.

No comments:

Post a Comment