Thursday, July 22, 2010

அங்கொரு கருணா, இங்கொரு...?

இதுதான் போராடும் எல்லா
இனங்களுக்கும் உள்ள நிலையா?
யூலை படுகொலை என்றவர்
அழைத்தார். கருப்பு யூலை
என்றும் அழைக்கிறார்.
சிறுபான்மை தமிழனை
ஆதிக்க சிங்களவன் வன்முறை
செய்து படுகொலை நடத்திய
கொடூர நாளை அப்படி குறித்தனர்.
அங்கே விடுதலை விழுதுகள்
எழுந்தன. சரணடைவு தத்துவம்
வீழ்ந்தது. ஆயுதம்தான் இனி என
தமிழ் இளைஞர் தன்நிலை உணர்ந்தனர்.
அந்த சிந்தனையை யூலை
இருபத்திமூன்று பதிவு செய்தது.
இங்கே
தாமிரபரணி படுகொலைகள் இதே
நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்டன.
மாஞ்சோலை தொழிலாளர்
மலையக தமிழரின் வாரிசுகள்
இங்கே திருநெல்வேலியில்
ஆதிக்க சக்திகளின் ஆயுத
காட்டாட்சிக்கு பலி ஆகினர்.
பதினேழு தோழர்கள்
பச்சிளங்குழந்தை உட்பட
ஈவிரக்கமின்றி அடித்து
தூக்கி, ஆற்றில் போட்டு
ஆபடியே அமுக்கி கொன்று
குவித்த அரசுதான் இப்போதும்
இங்கே அரியணை சுகத்தில்...
தமிழன் எங்கே இருந்தாலும்,
அவனுக்கு எதிராய் ஆலவட்டமிடும்
பருந்து கூட்டம், ஆளுகையில்....
அங்கொரு கருணா, அதனால்
தோல்வி என்றால், இங்கொரு.......

No comments:

Post a Comment