Sunday, January 2, 2011

பா.ஜ.க.மீது பாயும் முரசொலி

. முரசொலியில் கடந்த திங்கள் அன்று, சின்னகுத்தூசி மூலம் ஒரு கட்டுரையை கருணாநிதி எழுத வைத்துள்ளார். அதில், நீரா ராடியாவிற்கு பா.ஜ.க.அரசின் ரகசியங்களை அன்று அமைச்சராக இருந்த அனந்தகுமார் முன்கூட்டியே வழங்கியது உண்டா? இல்லையா? என்பது முதல் கேள்வி. டில்லியில் பா.ஜ.க.அரசு நீரா ராடியாவிற்கு வசந்த் குஞ்ச பகுதியில் நிலம் ஒதுக்கியதா? இல்லையா? அந்த நிலத்தில் நீரா ராடியாவின் அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அத்வானி கலந்து கொண்டு பாராட்டினாரா? இல்லையா? பா.ஜ.க. ஆட்சியில் நீரா ராடியா ஓல கோடி ரூபாயை சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தினாரா? இல்லையா? நீரா ராடியா சுவிஸ் வங்கியில் போட்ட கருப்பு பணத்தில் பல பா.ஜ.க. தலைவர்களின் பணமும் உண்டா? இல்லையா?அனந்தகுமாருடன் மட்டுமின்றி பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவரான நித்தின் கட்காரிக்கும், நீரா ராடியாவிற்கும் வர்த்தக தொடர்பு இருக்கிறது என்பது உண்மையா? இல்லையா? --இப்படியாக கருணாநிதி சார்பாக கே.பி.சுந்தராம்பாள் போல முரசொலி பாடத்தொடங்கிவிட்டது. அப்படீனா நீரா ராடியா கூட சேர்ந்த எல்லோரும் வர்த்தக உறவும், சுவிஸ் வங்கி கருப்பு பணமும் வைத்திருப்பார்கள் என்று முரசொலி ஒப்புக்கொள்கிறதா? என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

No comments:

Post a Comment