Tuesday, March 22, 2011

கொளத்தூர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியா?

சிறிய தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் நிறுவிடலாம் என்று, ஆயிரம் விளக்கில் நிற்க முடியாத சூழலில் ஸ்டாலின் சிந்தித்தார்.ஆயிரம் விளக்கு தொகுதியில் பல ஏழை மக்களை அவர்களது குடிசைகளில் இருந்தும், அவர்களது அடுக்கு மாடி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் இருந்தும் விரட்டியடித்த ச.ம.உ ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிலைமை வந்துள்ளது. அதனால்தான் அவர் சிறிய தொகுதி ஒன்றை டேஹ்ர்வு செய்து அதில் எப்படியாவது செலவழித்து நின்று விடலாம் என்று எண்ணி நிற்கிறார். ஆனால் அவரது அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்த்தது அதிமுக அறிவித்த வேட்பாளரது பெயர்தான். அதாவது சைதை துரைசாமி என்ற பெயர் ஸ்டாலினை நிலை குலையச்செய்துள்ளது.

சைதையாரும் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கி விட்டார். அவர் சிறப்பாக தனது பக்கத்து வாதத்தை எடுத்து வைக்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே பகுசன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ் ஸ்ட்ரோன்க் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டு எல்லோர் வீடுகளுக்கும் போய் தனது யானை சின்னத்தை கொடுத்திவிட்டார். இந்த நிலையில் ஸ்டாலின் இறக்கிறார் என்பது அவருக்கும் அதிர்ச்சி.இப்போது சைதை துரைசாமி எவரு சேர்ந்துகொண்டார். எப்படியும் கொளத்தூர் தொகுதி பதட்டம் ஆகிவிடும். நமக்கு முத்துகுமாரின் சடலம் அவரது வீட்டருகே வைக்கப்பட்ட இடமும், அதற்கு மூன்று நாட்கள் தமிழின உணவாளர்கள் கூடியது அந்த இடம்தான் என்பதும், அதனால் அங்கு போர்குற்றம் புரிந்தவர்களின் வாரிசுகளுக்கு என்ன வரவேற்ப்பு கொடுப்பது சரி என்ற எண்ணமும் உருவாகாமல் இல்லை.

2 comments:

ராஜேஷ், திருச்சி said...

கற்பனை சூப்பர் , ரைட்டு அடுத்து??

சைதை துரை ,சைதையில் வெயிட்டு கொளத்தூரில் வேகாது. மேலும் அவர் பல காலம் அ தி மு க வில் இருந்து ஒதுங்கி விட்டார்.. அவுருக்கே ஆச்சரியமாக தான் இந்த வேட்பாளர் தேர்வு :)

ரவி said...

இவ்வளவு மொக்கையான நீங்கள் பதிமூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் வீணடித்துவிட்டீர்கள். இப்படி மொக்கை போட்டே பொழப்பை ஓட்டியிருக்கலாம்.

Post a Comment