Monday, April 25, 2011

முத்துலட்சுமிக்கு உண்மையில் விடுதலை.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறை பொய் வழக்குகள் போட்டு தனது வெறியை ஆற்றிக்கொண்டது. அவர் சிறையில் முடக்கப்பட்டார். வீரப்பன் மறைவுக்கு பிறகும், அவரது பெயரை வைத்து மாணவி முத்துலட்சுமி சமூக, அரசியல் பயன்களை மேற்கொல்வாரோ என்று அஞ்சி நடுங்கிய ஆளும்வர்க்கம் அவரை சிறையில் போடுவதன் மூலம் மனித உரிமைகளை கொலை செய்தது.

ஆனால் வழக்கறிஞர்களது வாதங்களும், நீதியரசர்களின் துலாக்கோலும் முத்துலட்சுமியை கர்நாடகா ஆரசு போட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்தது. அதை ஆத்திரமடைந்த கர்நாடக காவல்துறை, தனது மனித உரிமை மீறலின் கூட்டாளியான தமிழக காவல்துறையிடம் கூறி நீ வந்து பிடி என்றது. இதேபோன்ற பொய் வழக்குகளை அதாவது வீரப்பன் மீது போடப்பட்ட னைத்து குற்றவியல் வழக்குகளையும், முத்துலட்சுமி மீதும் மனைவி என்ற காரணத்தால் போட்டு மீண்டும் சிறையில் தள்ளலாம் என்பது இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் உள்ள அவா.

அந்த முறையில் தமிழக காவல்துறை வரை கைது செய்ய, அதைவைத்து கர்நாடக காவலர்கள் அவரை பெங்களூர் சிறையிலேயே அடைத்துவிட்டனர்.இன்று கோபி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த கர்நாடக காவலதுறை மற்றும் தமிழக காவல்துறை முன்னால், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் பாப்பா மோகன் வாதிட்டார். கோபி நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு சிறை தேவை இல்லை என்று கூறி, அவரை வழக்குக்கு மே மாதம் வரும்படி பணித்து விடுதலை செய்தது. பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்ததால், அந்த கோபி நீதிமன்ற உத்தரவை பெங்களூர் சிறையில் காட்டி பிறகுதான் விடுதலை செய்யமுடியும். ஆகவே அவர் நாளை [ 26 ஆம் நாள் ] கலை பெங்களூர் சிறையிலிருந்து காலை ஒன்பது மணி சுமாருக்கு விடுதலை ஆகிறார்.

No comments:

Post a Comment